நேற்றிரவு லாஹாட் டத்து, லெம்பா மக்சினாவில் ஏற்பட்ட நீர் பெருக்கத்தைத் தொடர்ந்து மூன்று பேர் நீரில் மூழ்கி இறந்தனர், மேலும் மூவரைக் காணவில்லை. பாதிக்கப்பட்டவர்கள், 25 மற்றும் 58 வயதுடையவர்கள், மலையேற்றத்திற்காக அந்தப் பகுதிக்குள் நுழைந்த 17 பேர் கொண்ட குழுவைச் சேர்ந்தவர்கள் என்று வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.…
முகைதின்: தலைவர்கள் இனவாதம் பேசி ‘ஹீரோக்கள்’ ஆகப் பார்க்கிறார்கள்
அம்னோ துணைத் தலைவர் முகைதின் யாசின், இன உணர்வுகளை உசுப்பி விடுவதற்காக நிகழ்வுகள் நடத்தப்படுவது பற்றிக் கவலை தெரிவித்தார். இப்படிப்பட்ட நிகழ்வுகளை ஏற்பாடு செய்கின்றவர்கள் குறுகிய அரசியல் நோக்கம் கொண்டவர்கள் என்பதுடன் அவர்களின் செய்கை சமுதாயத்தில் அச்சத்தை உண்டு பண்ணுகிறது என்றும் அவர் சொன்னார். யார், எவர் என்பதை…
WSJ: 1எம்டிபி-இலிருந்து ஐபிஐசி-க்கு அனுப்பப்பட்ட இன்னொரு யுஎஸ்$1 பில்லியனையும் காணோம்
1எம்டிபி நிறுவனம் அபு டாபியில் உள்ள இண்டர்நேசனல் பெட்ரோலியம் இன்வெஸ்ட்மெண்ட் நிறுவனத்துக்கு(ஐபிஐசி)ச் செலுத்திய இன்னுமொரு யுஎஸ்$1 பில்லியனும் காணாமல் போயிருப்பதாக வால் ஸ்திரிட் ஜர்னல் (WSJ) கூறியுள்ளது. “எம்டிபி அபு டாபி நிறுவனமான ஐபிஐசிக்கு அனுப்பியதாகக் கூறும் $993 மில்லியன் எங்கே என (அபு டாபி) அதிகாரிகள் விசாரணை …
பெர்சே பேரணிக்குப் பிள்ளையை அழைத்து வந்தது பற்றி எம்பி-இடம் விசாரணை
சிலாங்கூர் மந்திரி புசார் அஸ்மின் அலி அவரின் பிள்ளையை பெர்சே 4 பேரணிக்கு அழைத்து வந்தது தொடர்பில் போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். இன்று டாங் வாங்கி போலீஸ் தலைமையகம் சென்ற அவரிடம் மஞ்சள்நிற டி-சட்டை அணிந்து பேரணியில் கலந்து கொண்டது பற்றியும் மே மாதம் பெர்மாத்தாங் பாவில் …
ஹாடி: பாஸ் ‘துரோகமிழைத்த’ கட்சியுடன் ஒத்துழைக்காது
இஸ்லாத்துக்குத் துரோகமிழைத்த கட்சியுடன் ஒத்துழைக்க இயலாது என்று கூறிய பாஸ் தலைவர் அப்துல் ஹாடி ஆவாங், அவர்கள் “துரோகிகள்”, “எதிரிகளை விடவும் மோசமானவர்கள்” என்றார். பாஸ் முக நூல் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்த காணொளி ஒன்றில் ஹாடி இவ்வாறு கூறினார். அவர் பெயரைக் குறிப்பிடாவிட்டாலும் பார்டி அமானா நெகராவைக் …
நஜிப்பின் சொத்துகளை முடக்கிவைக்க அனினா நீதிமன்றத்தில் மனு தாக்கல்
லங்காவி அம்னோ மகளிர் உறுப்பினர் அனினா சாடுடின் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் சொத்துகளை முடக்கிவைக்கக் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அனினா, பிரதமரின் சொந்தக் கணக்கில் செலுத்தப்பட்ட யுஎஸ்700 மில்லியன் தொடர்பில் நஜிப் மீதும் கட்சியின்மீதும் வழக்கு தொடுத்ததை அடுத்து அம்னோ அவரது உறுப்பியத்தை இரத்துச் …
நஜிப்: பேரணியில் நிகழ்ந்த இனத்தை இழிவுபடுத்தும் செயல்கள் விசாரிக்கப்படும்
அரசாங்கம் பாதுகாப்புக்கும் மற்ற இனங்களுக்கும் மிரட்டல் விடுக்கப்படுவதை,, மிரட்டல் விடுப்பவர்கள் சிகப்புச் சட்டை ஆர்ப்பாட்டக்காரர்களாக இருந்தாலும்கூட பார்த்துக் கொண்டிருக்காது எனப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் எச்சரித்துள்ளார். “அதனால்தான் தடைவிதிக்கப்பட்ட பகுதிக்குள் (பெட்டாலிங் ஸ்திரிட்) நுழைய முயன்ற கூட்டத்தை அதிகாரிகள் கலைத்தனர், அதற்காக தண்ணீர் பீரங்கிகளையும் பயன்படுத்த வேண்டியதாயிற்று.…
பெர்சே கருத்தரங்கில் சிவப்புச் சட்டையினர் கலாட்டா
இன்று பாயான் பாருவில் நடைபெற்ற பெர்சே கருத்தரங்கில் சிவப்பு சட்டையினர் நுழைந்ததின் விளைவாக கருத்தரங்கு சுமார் 30 நிமிடங்களுக்குத் தடைபட்டது. அந்த கருத்தரங்கு தொடங்கிய சுமார் ஒரு மணி நேரத்திற்குப் பின்னர் பாயான் பாரு அம்னோ தகவல் பிரிவு தலைவர் ரிட்ஷ்வான் பாக்கார் மற்றும் அம்னோ இளைஞர்…
புதிய கூட்டணி அமைக்க எதிரணியினருக்கு பிகேஆர் அழைப்பு
பிகேஆர் தலைவர் வான் அசிசா வான் இஸ்மாயில், ஒரு புதிய கூட்டணி அமைப்பது பற்றி விவாதிக்க மற்ற எதிரணித் தலைவர்கள் மூவரை அடுத்த செவ்வாய்க்கிழமை வட்டமேசை பேச்சுகளுக்கு அழைத்திருக்கிறார். “ஒரு எதிரணித் தலைவர் என்ற முறையில் மற்ற எதிரணித் தலைவர்களுடன் கூடிப் பேசுவதற்கான முயற்சிகளை முன்னெடுத்திருக்கிறேன். “இறை அருளால்,…
‘சீனா பாபி’ என்று அழைப்பதில் என்ன தவறு? சீனர்கள் பன்றிதானே…
சுங்கை புசார் அம்னோ தொகுதித் தலைவர் ஜமால் முகம்மட் யூனுஸ் சீனர்களை ‘சீனா பாபி’(சீனப் பன்றி) என்று அழைப்பது அவர்களை அவமதிப்பதாகாது என்கிறார் . அதற்கு உணவின் அடிப்படையில் விளக்கமும் கொடுத்தார்.. பன்றி என்பது மலாய்க்காரர்களுக்குத்தான் ஆகாது. பன்றி சாப்பிடுவது இஸ்லாத்தில் தடுக்கப்பட்டிருக்கிறது. “சீனர்களுக்கு அதில் என்ன பிரச்னை.…
ஐஜிபி: பேரணியில் நிகழ்ந்த இன இகழ்வுகளுக்கு வருந்துகிறேன்; புகார்கள் விசாரிக்கப்படும்
போலீஸ் படைத் தலைவர் காலிட் அபு பக்கார், நேற்றைய சிகப்புச் சட்டைப் பேரணியில் இனத்தை இழிவுபடுத்தும் செயல்கள் நிகழ்ந்ததற்காக வருத்தம் தெரிவித்தார். பெட்டாலிங் ஸ்திரிட்டில் கலைந்து செல்லுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டும் கலைந்து செல்லாமல் போலீஸ் அதிகாரிகளின்மீது போத்தல்களை விட்டெறிந்த ஆர்ப்பாட்டக்காரர்களையும் அவர் கடிந்து கொண்டார். “பேரணிக்கு முன்பே எச்சரித்திருந்தேன்,…
பேரணி ஏற்பாட்டாளர்களுக்குச் சுத்திகரிப்புக்கு ‘பில்’ அனுப்பப்படும்
நேற்றைய சிகப்புச் சட்டைப் பேரணிக்கு ஏற்பாடு செய்தவர்களுக்குச் சுத்திகரிப்புக் கட்டணச் சீட்டு அனுப்பப்படும் என நகர்ப்புற நல்வாழ்வு, வீடமைப்பு, ஊராட்சி அமைச்சர் அப்துல் ரஹ்மான் டஹ்லான் கூறினார். “ஆலாம் பிலோராவிடம் செலவுத் தொகையைத் தெரிவிக்குமாறு கேட்டிருக்கிறேன். அவர்கள் கணக்கை இறுதி செய்து கொண்டிருக்கிறார்கள். கட்டணச் சீட்டு ஆர்ப்பாட்டத்தின் ஏற்பாட்டாளர்களுக்கு …
மலாய்க்காரர் மானம் காக்க இனவாத சுலோகங்கள்தான் கிடைத்தனவா அம்னோவுக்கு?
சிலாங்கூர் மந்திரி புசார் அஸ்மின் அலி, நேற்று கோலாலும்பூரில் நடந்த சிகப்புச் சட்டைப் பேரணியை நினைத்து வெட்கப்படுகிறார். “சிகப்புச் சட்டை அணிந்த மலாய்க்காரர்கள்- ஆண்களும், பெண்களும்- இனவாத சுலோகங்கள் முழக்கமிடுவதையும் வெறுப்புணர்வை வெளிப்படுத்துவதையும் கண்டு என்னுள் ஏற்பட்ட வெட்கக்கேட்டையும் அருவறுப்பையும் வருணிக்க வார்த்தைகள் இல்லை. “இதுதான் மலாய்க்காரர் மானத்தை …
மொராய்ஸ் கொலை ஒரு மிரட்டும் நடவடிக்கை: ஏஜி அலுவலகம் சாடல்
அரசாங்க வழக்குரைஞர் கெவின் அந்தோனி மொராய்ஸ் கொலை போன்ற மிரட்டல் நடவடிக்கைகளைக் கண்டு அஞ்சவில்லை எனச் சட்டத்துறைத் தலைவர் (ஏஜி) அலுவலகம் கூறியது. “அதன் அதிகாரிகளுக்கு எதிரான இப்படிப்பட்ட கோழைத்தனமான, மிரட்டல் நடவடிக்கைகளைக் கண்டு ஏஜி அலுவலகம் அச்சம் கொள்ளாது”, என அது நேற்றிரவு ஓர் அறிக்கையில் கூறிற்று.…
பெட்டாலிங் தெரு அமைதி கண்டது; வன்செயல் விசாரிக்கப்பட வேண்டும், நஜிப்…
இரவு மணி 7.05: கோத்தா கினபாலு - பெட்டாலிங் தெருவில் நடந்த வன்செயல் குறித்து விசாரிக்குமாறு போலீசாரை பிரதமர் நஜிப் கேட்டுக்கொண்டார். "(இது) நடந்திருக்கக்கூடாது. அனைவரும் உத்தரவுக்கு ஏற்ப நடந்து கொண்டிருக்க வேண்டும்", பிரதமர் நஜிப் டிவிட்டர் செய்தார். இதனிடையே, மணி 6.50 அளவில் ஜமால் முகமட்…
பேரணியில் 300,000 பேர் கூடினராம்: ஏற்பாட்டாளர்கள் கூறுகின்றனர்
திரெங்கானுவைச் சேர்ந்த கெராக்கான் கபாங்கித்தான் ரக்யாட் தலைவர் ரசாலி இட்ரிஸ் பேரணி மிகப் பெரிய வெற்றி என்று அறிவித்தார். 300,000 பேர் திரண்டு வந்திருக்கிறார்கள் என்று கூறிய அவர், அவர்கள் பெர்சே 4-இல் நஜிப், பாஸ் தலைவர் அப்துல் ஹாடி ஆவாங்கின் படத்தைக் காலில் போட்டு மிதித்ததற்கு எதிர்ப்புக் …
சிகப்புச் சட்டையினர் ஊர்வலம் சென்றபோது லோ யாட் மூடப்பட்டது
இன்று பிற்பகல் மணி 3.30க்கு சிகப்புச் சட்டைப் பேரணியைச் சேர்ந்த ஒரு குழு பாடாங் மெர்போக் செல்லும் வழியில் ஜாலான் புக்கிட் பிந்தாங் வழியாகச் சென்றபோது லோ யாட் பிளாசா அதன் தலைவாசலை மூடியது. வாடிக்கையாளர்களின் பாதுகாப்பு கருதி அது மூடப்பட்டதாக அந்த விற்பனை மையத்தின் பொதுத் …
கான்கிரிட் நிரப்பப்பட்ட எண்ணெய் பீப்பாயில் இருந்தது மொராய்ஸின் சடலம்தான்: போலீஸ்…
சுபாங் ஜெயா அருகே காங்கிரிட்டால் நிரப்பப்பட்ட ஒரு எண்ணெய் பீப்பாயில் இருந்தது காணாமல்போன அரசாங்க வழக்குரைஞர். அந்தோனி கெவின் மொராய்ஸின் சடலம்தான் என்பதை போலீஸ் உறுதிப்படுத்தியது. புக்கிட் அமான் குற்றவியல் புலனாய்வு இயக்குனர் முகம்மட் சாலே அதை உறுதிப்படுத்தினார். “அந்த எண்ணெய்ப் பீப்பாய் ஆற்றில் கிடந்தது. “உடலை எடுப்பதற்காக …
கான்கிரிட் நிரப்பப்பட்ட எண்ணெய் பீப்பாயில் மொராய்ஸின் சடலம்
செப்டம்பர் 4-இலிருந்து காணாமல்போய் தேடப்பட்டு வந்த சட்டத்துறை தலைவர் அலுவலக அதிகாரி அந்தோனி கெவின் மொராய்ஸின் சடலம் சுபாங் ஜெயா அருகே இன்று காலை கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிகிறது. காங்கிரிட்டால் நிரப்பப்பட்ட ஒரு எண்ணெய் பீப்பாயில் அது இருந்தது. சுங்கை கிளாங்-கை ஒட்டியுள்ள யுஎஸ்ஜே வீடமைப்புப் பகுதியான பெர்சியாரான் சுபாங் …
மெர்டேகா மையம்: இன உறவுகள் மோசமடைந்துள்ளன
நாடு மலேசிய தினத்தைக் கொண்டாடும் வேளையில் இன உறவுகள் மோசமடைந்திருப்பது கவலை அளிப்பதாக மெர்டேகா மையத்தின் திட்ட இயக்குனர் இப்ராகிம் சுபியான் கூறினார். அம்மையம் பிப்ரவரி 14 தொடங்கி ஜூன் 8வரை நடத்திய ஆய்வு ஒன்றைத் தாக்கல் செய்து பேசிய இப்ராகிம், நாட்டில் அவநம்பிக்கை பெருகியிருக்கிறது என்றார். அது …
பார்டி அமானா நெகாராவின் தொடக்கவிழாவில் ஒரே மஞ்சள் மயம்
பார்டி அமானா நெகராவின் தொடக்கவிழா இன்று ஷா ஆலம் ஐடிசிசி மாநாட்டு மையத்தில் நடைபெற்றது. அவ்விழாவுக்கு வந்த கட்சி உறுப்பினர்களும் ஆதரவாளர்களும் மஞ்சள் நிற ஆடை அணிந்திருந்ததால் மாநாட்டு மையமே மஞ்சள் மயமாகக் காட்சியளித்தது. அவர்கள் நெகரா கூ, ஜாலோர் கெமிலாங் போன்ற பாடல்களையும் கட்சிப் பாடல்களையும் பாடித் …
எதற்கு என்று தெரியாமலே கமலநாதன்கள் 220 சிவப்பு டி-சட்டைகளுக்கு ஏற்பாதரவு…
இன்று நடைபெறும் சிவப்புச் சட்டை பேரணிக்கு 220 சிவப்பு டி-சட்டைகளுக்கு உலுசிலாங்கூர் நாடாளுமன்ற உறுப்பினர் பி. கமலநாதன் சேவை மையம் ஏற்பாதரவு அளித்த விவகாரம் அதனால் பயன் பெற்ற ஒருவர் அவரது முகநூல் வழியாக நன்றி தெரிவித்துக் கொண்டு மற்றவர்களையும் அச்சேவை மையத்திற்குச் சென்று டி-சட்டையைப் பெற்றுக்கொள்ளுமாறு…
தெங்கு ரசாலி: எல்லாம் மலாய்க்காரர்கள் மயம், மிரட்டல் எங்கிருந்து வருகிறது?
சிவப்புச் சட்டை பேரணியின் நோக்கம் குறித்து தாம் குழப்பமுற்றுள்ளதாக அம்னோவின் தலைவர்களில் ஒருவரான தெங்கு ரசாலி இன்று இன்ஸ்டிடியூட் இன்டெக்கிரிட்டி மலேசியாவில் நடைபெற்ற ஒரு கலந்துரையாடலில் கூறினார். "உங்களுக்கு அரசாங்கம் இருக்கிறது. அதற்கு தலைமை ஏற்றிருப்பவர் ஒரு மலாய்க்காரர்; பினாங்கு மாநில அரசு ஒன்றைத் தவிர, மாநில…
சுஹாகாம்: அமைதியாக ஒன்றுகூடுதல் ஓர் உரிமை, ஆனால் சட்டம் பின்பற்றப்பட…
அமைதியாக ஒன்றுகூடும் சுதந்திரம் ஒவ்வொரு மலேசிய குடிமகனுக்கும்/குடிமகளுக்கும் உண்டு. ஆனால், அந்த உரிமையைப் பயன்படுத்தும் போது அது சட்டத்தில் கூறப்பட்டுள்ளதற்கு ஏற்றவாறு செய்யப்பட வேண்டும் என்று மலேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் ஹஸ்மி அஹம் கூறினார். ஆகவே, நாளை (செப்டெம்பர் 16) நடைபெற திட்டமிடப்பட்டுள்ள ஹிம்புனான்…