KKB இடைத்தேர்தல் | குவாலா குபு பஹாரு இடைத்தேர்தலில் பெர்சத்து வெற்றி பெற்றால் பெரிகத்தான் நேஷனல் வேட்பாளர் கைருல் அஸ்ஹாரி சவுத் சிலாங்கூர் அரசாங்கத்திற்கு தனது கூட்டணியை மாற்றமாட்டார் என்று நம்புகிறார். அக்கட்சியின் துணைத் தலைவர் அஹ்மத் பைசல் அசுமு, வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டால் முகாம்களை மாற்றமாட்டோம் என்று உறுதியளிக்கும்…
பாஸ் எம்பி: இன அடிப்படையிலான பேரணிகள் வேண்டாம்
பல இனங்கள் வாழும் மலேசியா போன்ற நாட்டில் இன அடிப்படையில் பேரணி நடத்துவது ஏற்கத்தக்கதல்ல என்கிறார் பாஸ் எம்பி மாபுஸ் ஒமார். “அது (பேரணி நடத்துவது) அவர்களின் உரிமை. ஆனால், மலேசியா ஒரு இனத்துக்குத்தான் உரியது என்ற எண்ணம் கூடாது. “அது முடிவில் இனங்களுக்கிடையில் பதற்றத்தை உருவாக்கும்” என்றாரவர்.…
பிகேஆர்: புதிய எதிரணிக் கூட்டணிக்கு பாஸ் கட்சி வேண்டும்
புதிதாக அமைக்கப்படும் எதிரணிக் கூட்டணியில் பாஸ் கட்சியும் இடம்பெற்றிருப்பதையே பிகேஆர் விரும்புகிறது. “ஆம். தலைவர் (டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில் தெளிவாக, தெள்ளத் தெளிவாகவே இதைத் தெரிவித்துள்ளார்”, என சிலாங்கூர் மந்திரி புசார் அஸ்மின் அலி இன்று ராவாங்கில் கூறினார். பாஸ் புதிய கூட்டணியில் இடம்பெறுவதை ஒப்புக்கொள்ள …
தியன் சுவா: செஞ்சட்டையினர் பேரணி நடத்த அனுமதியுங்கள்
பிகேஆர் உதவித் தலைவர் தியன் சுவா செஞ்சட்டையினர் செப்டெம்பர் 16 இல் நடத்தத் திட்டமிட்டிருந்த பேரணியை போலீசார் தடை செய்திருப்பது தமக்கு ஏமாற்றமளிப்பதாகக் கூறினார். அமைதியாக ஒன்றுகூடுதல் சட்டத்திற்கு ஏற்ப போலீசார் நடந்துகொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார். தாம் செஞ்சட்டையினரின் சினமூட்டும் பேச்சுகளால் எரிச்சலடைந்திருந்தாலும், சமுதாயம் இது…
ஆறு மாதங்கள் காத்திருந்த பின்னர் பதவி துறந்தார் 1எம்டிபி ஆலோசகர்
அரசு நிறுவன விவகாரங்கள் குறித்து தமக்கு விளக்கம் அளிக்குமாறு ஆறு மாதங்களுக்கு மேலாக கேட்டுக்கொண்டும் அது பற்றிய எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் 1எம்டிபியின் முன்னாள் ஆலோசகர் பதவியை விட்டு விலகிக் கொண்டார். "நான் 1எம்டிபி ஆலோசனைக் குழுவின் உறுப்பினராக ஜனவரி 25, 2015 இல் நியமிக்கப்பட்டேன்", என்று அப்துல்…
பெர்சே 4 எதிர்ப்பு செஞ்சட்டையினர் மலாய்க்காரர்களை பிரதிநிதிக்கவில்லை, முஸ்லிம் குழு…
பெர்சே 4 பேரணிக்கு எதிர்ப்பேரணி நடத்தத் திட்டமிட்டிருக்கும் செஞ்சட்டை அணிந்திருக்கும் கூட்டத்தினர் மலாய் முஸ்லிம்களின் கருத்தைப் பிரதிநிதிக்கவில்லை என்று முஸ்லிம் தொழிலியர்கள் குழு கூறுகிறது. இனப் போராட்டத்தைத் தூண்டும் எந்த ஒரு நடவடிக்கையையும் உடனடியாக கையாளப்பட வேண்டும். இந்த நிலையற்ற நேரத்தில் அமைதியையும் கட்டுப்பாடையும் நிலைநிறுத்த போலீசார்…
2.6பில்லியன் ரிங்கிட் கொடை வழங்கியவர் சவுதியின் அல்-வாலிட் அல்ல
அனைத்துலக வாணிக, தொழில் துணை அமைச்சர் அஹமட் மஸ்லான், இரண்டாண்டுகளுக்குமுன் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கிடம் ரிம2.6 பில்லியன் நன்கொடை வழங்கியது சவுதி அராபிய இளவரசர் அல்-வாலிட் தலால் அல்ல என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளார். பத்திரிகைகள், குறிப்பாக இணையச் செய்தித் தளமான ஃப்ரி மலேசியா டுடே-யும் மை டைம்சும் தாம் …
பெர்சே அலுவலகத்துக்கு வெளியில் பெயர்ப் பலகை
கோலாலும்பூர் மாநகர் மன்ற அதிகாரிகள் அதன் அலுவலகத்தைக் கண்டுபிடிக்க முடியாமல் திணறிப் போனார்கள் என்பதை அறிந்து பெர்சே, பெட்டாலிங் ஜெயாவில் உள்ள அதன் அலுவலகத்துக்கு வெளியில் பெர்சே என்று பெரிய எழுத்துகளில் எழுதப்பட்ட பெயர்ப் பலகையை வைத்துள்ளது. இந்த ப் பெயர்ப் பலகையை முகநூலில் பதிவேற்றம் செய்த பெர்சே தலைவர் மரியா சின் …
பெர்சே 4 பேரணி: தியான் சுவாவுக்கு அழைப்பாணை
பெர்சே 4 பேரணி தொடர்பில் பிகேஆர் உதவித் தலைவர் தியான் சுவாவும் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருக்கிறார். “பெர்சே 4 பேரணி விசாரணைக்கு உதவ இன்று பிற்பகல் மணி 3க்கு டாங் வாங்கி போலீஸ் நிலையத்துக்கு வருமாறு கூறும் செய்தி போலீசிடமிருந்து வந்துள்ளது”, என சுவா டிவிட் செய்திருந்தார். விசாரணை அதிகாரி …
செப்டம்பர் 16 பேரணிக்கு போலீஸ் தடை
சிவப்புச் சட்டைகள் செப்டம்பர் 16-இல் நடத்தத் திட்டமிட்டிருக்கும் பேரணிக்கு பாதுகாப்புக் காரணங்களை முன்னிட்டு தடை விதிக்கப்பட்டிருப்பதாக போலீஸ் படைத் துணைத் தலைவர் நூர் ரஷிட் இப்ராகிம் கூறியதாய் பெர்னாமா அறிவித்துள்ளது. அப்பேரணி ஏற்பாடு செய்யப்பட்டதே ஆகஸ்ட் 29-30 பெர்சே 4 பேரணிக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதற்காகத்தான் என்றும் கூறப்படுகிறது. மற்றவற்றோடு …
பிரதமர்மீது நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு குறித்து கருத்துரைக்க பண்டிகார் மறுப்பு
மக்களவைத் தலைவர் பண்டிகார் அமின் மூலியா, பிரதமர் நஜிப்மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானம் குறித்து இப்போதைக்கு எந்த முடிவும் எடுக்க மாட்டார். முதலில் தம்மிடம் தாக்கல் செய்யப்பட வேண்டும் அதன் பின்னரே அதன்மீது முடிவெடுக்கப்படும் என்றாரவர். ஆசியான் அனைத்து நாடாளுமன்றப் பேரவைக் கூட்டத்தில் கலந்துகொண்டிருக்கும் பண்டிகாரிடம் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு …
காணாமல்போன டிபிபி 1எம்டிபி விசாரணையில் சம்பந்தப்பட்டவரல்ல
காணாமல்போன சட்டத்துறை அலுவலக வழக்குரைஞர் அந்தோனி கெவின் மொராய்ஸ், 1எம்டிபி மீதான விசாரணையில் எந்த வகையிலும் சம்பந்தப்பட்டவர் அல்லர் என்பதைச் சட்டத்துறைத் தலைவர் முகம்மட் அபாண்டி இன்று தெளிவுபடுத்தினார். “திரு மொராய்ஸ் (இடம்) காணாமல்போனதை போலீஸ் விசாரணை செய்து வருவதால் அது பற்றி வதந்திகளைப் பரப்ப வேண்டாம்”, என்றவர் …
முகைதினும் ஷாபியும் அம்னோ அரசியல் பிரிவுக் கூட்டத்தில் கலந்து கொள்வர்
அம்னோ துணைத் தலைவர் முகைதின் யாசின், இன்று கட்சித் தலைவர் நஜிப் அப்துல் ரசாக் தலைமையில் நடைபெறும் அம்னோ அரசியல் பிரிவுக் கூட்டத்தில் கலந்துகொள்வார். புதன்கிழமை நடைபெறும் அம்னோ உச்சமன்றக் கூட்டத்துக்கு முன்னதாக இக்கூட்டம் நடைபெறுகிறது. கடந்த ஜூலை 28-இல், துணைப் பிரதமர் பதவியிலிருந்து முகைதின் அகற்றப்பட்ட பின்னர் …
ராயர்: ஐஜிபி அரசியல்வாதி போல் நடந்துகொள்ளக் கூடாது
தேசியத் தலைவர்களின் படங்களை போட்டு மிதித்ததைவிட மிக அருவருப்பான செயல்களில் ஈடுபட்ட அம்னோ மற்றும் அம்னோ சார்ந்த என்ஜிஒ-களுக்கு எதிராக கிரிமினல் வழக்கு தொடரப்பட வேண்டும் என்று டிஎபி செரி டெலிமா சட்டமன்ற உறுப்பினர் ஆர்எஸ்என் ராயர் கூறினார். பினாங்கு மாநில முதலமைச்சர் லிம் குவாங் எங்கின் அலுவலகத்திற்கு…
அஸலினா, அம்பிகாவை தேசப்பற்று அற்றவர் என்கிறார்
ஓர் அவசர நாடாளுமன்ற கூட்டம் கூட்டப்பட வேண்டுமென்பதை கோருவருதற்கு ஆதரவு திரட்ட அம்பிகா ஓன்லைன் தொடர்பை ஏற்படுத்தியுள்ளார். அதனைச் செய்ததற்காக அவரை "தேசப்பற்று இல்லாதவர்" என்று நாடாளுமன்ற விவகாரத்திற்கான அமைச்சர் அஸலினா ஓத்மான் சாடியுள்ளார். நாடாளுமன்றம் கவனம் செலுத்த வேண்டிய அளவிலான முக்கியமான பிரச்சனைகள் இல்லாதிருக்கையில் நாடாளுமன்றத்தின்…
வான் அசிஸா: நஜிப் மீதான விமர்சனம் குறித்து விவாதிக்க நாடாளுமன்ற…
கடந்த வாரம் அனைத்துலக ஊழல் எதிர்ப்பு மாநாட்டில் பிரதமர் நஜிப் பற்றி கூறப்பட்ட விமர்சனங்கள் குறித்து விவாதம் நடத்த நாடாளுமன்றத்தின் அவசரக் கூட்டம் கூட்டப்பட வேண்டும் என்று கூறுகிறார். நஜிப்பின் தனிப்பட்ட வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்ட 'நன்கொடை' என்று கூறப்படும் அமெரிக்க $700 மில்லியன் (ரிம2.6 பில்லியன்)…
அரசாங்கம் பதவி துறப்பதை “மக்கள் சக்தி” முடிவு செய்ய முடியாது,…
பிரதமரை தவிர வேறு எவருக்கும், மக்கள் உட்பட, அரசாங்கத்தை எப்போது கலைக்க வேண்டும் என்று கூறும் அதிகாரம் கிடையாது என்று தொடர்பு மற்றும் பல்லூடக அமைச்சர் சாலே சைட் கெருவாக் கூறுகிறார். பிரிட்டீஷ் நாடாளுமன்ற முறை ஆட்சியில், புதிய தேர்தல் எப்போது நடத்துவது என்பதை பிரதமர் மட்டுமே…
தெங்கு அட்னான்: ஐஎசிசி மாநாட்டில் அரசாங்கத்தைக் குறைகூறியவர்கள் பீடிக்கப்பட்டவர்கள்
புத்ரா ஜெயாவில் நடைபெற்ற 16 ஆவது அனைத்துலக ஊழல் எதிர்ப்பு மாநாட்டில் (ஐஎசிசி) அரசாங்கத்தைக் குறைகூறியவர்களை மூன்றாம் தரப்பினரால் பீடிக்கப்பட்டவர்கள் என்று கூட்டரசுப் பிரதேச அமைச்சர் தெங்கு அட்னான் தெங்கு மன்சூர் இன்று சாடினார். மூன்றாம் தரப்பினர் யார் என்று கூறாமல், அவர்களின் அரசாங்கத்திற்கு எதிரான பரப்புரைகளால்…
ஹமிடி: நஜிப்புக்கு எதிராக அடிமட்ட அம்னோ உறுப்பினர்கள் தூண்டிவிடப்பட்டுள்ளனர்
எதிரணியினர் அம்னோ தலைவர் நஜிப்புக்கு எதிராக அம்னோ அடிமட்ட உறுப்பினர்களை திருப்பி விட்டுள்ளனர் என்று அம்னோ உதவித் தலைவர் அஹமட் ஸாகிட் ஹமிடி கூறுகிறார். எதிரணியினரின் விஷத்தை அருந்தி விட்ட அடிமட்ட அம்னோ உறுப்பினருக்கு நஜிப்பை அவ்வளவாகப் பிடிக்கவில்லை என்று பாசிர் சாலாக் அம்னோ தொகுதி ஆண்டுப் பொதுக்கூட்டத்தில்…
நாஸிர்: மலேசியாவுக்கு எல்லாமே இறக்கம்தான்
கடந்த சில மாதங்களாக, நாடு அரசியல் நெருக்கடியில் சிக்கிக் கொண்டிருக்கையில் ரிங்கிட் தொடர்ந்து வீழ்ச்சி கண்டு வருகிறது. புகைமூட்டம் திரும்பி வந்துள்ளது, மலேசிய கால்பந்து குழு 10-0 அடிவாங்கியுள்ள வேளையில், பிரதமர் நஜிப்பும் அவரின் ரிம2.6 பில்லியன் நன்கொடை விவகாரமும் அனைத்துலக ஊழல்-எதிர்ப்பு மாநாட்டில் கலந்து கொண்டுள்ள…
பெர்சே தலைவர், எம்பி மற்றும் இருவர் மீது குற்றம் சாட்டப்படும்
பெர்சே 4 இன் தலைவர் மரியா சின் அப்துல்லா மற்றும் பிகேஆர் நாடாளுமன்ற உறுப்பினர் சிம் ஸெ சின் ஆகிய இருவரும் மார்ச் 28 இல் நடைபெற்ற கித்தா லவான் பேரணியின் சம்பந்தமாக அடுத்த வாரம் அமைதியான ஒன்றுகூடுதல் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்படுவர். பெர்சே அலுவலக…
“பெர்சே சுயேட்சையானதா?”, தேர்தல் ஆணையத் தலைவர் கேட்கிறார்
எதிர்வரும் சரவாக் மாநில தேர்தலில் தேர்தல் ஆணையம் பெர்சேயுடன் ஒத்துழைக்கத் தயாராக இருக்கிறது. ஆனால், அதற்கு ஒரு நிபந்தனை உண்டு: அந்த அமைப்பு சுயேட்சையானதாக இருக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தின் தலைவர் அப்துல் அசிஸ் முகமட் யூசூப் இன்று கூறினார். "அது சுயேட்சையானதாக இருக்க வேண்டும்.…
ரபீடா: போலீஸ் பேரணியில் பங்கேற்றவர்களை விசாரித்து நேரத்தை வீணாக்கக்கூடாது
பெர்சே 4 பேரணியில் கலந்து கொண்டவர்களை கேள்விகள் கேட்டு நேரத்தை வீணடிப்பதை அதிகாரத்தினர் நிறுத்த வேண்டும் என்று முன்னாள் அனைத்துலக வாணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் ரபீடா அசிஸ் கூறினார். அதற்கு மாறாக, மக்கள் அப்பேரணியில் கலந்துகொள்வதற்கு காரணமாக இருந்த பிரச்சனைகளைத் தீர்ப்பதில் அவர்கள் கவனம் செலுத்த…
பிரான்ஸ்: ரீயூனியனில் காணப்பட்டவை எம்எச்370சின் சிதைந்த பாகங்கள்தான்
இந்திய பெருங்கடலிலுள்ள ரீயுனியன் தீவில் கரைசேர்ந்திருந்த ஒரு விமானத்தின் சிதைந்த பகுதி சேதமடைந்த மலேசிய ஏர்லைன்ஸ்சின் ஒரு பாகம்தான் என்று விதிமுறைகள்படி அடையாளம் காணப்பட்டுள்ளது என்று நேற்று பாரிஸில் குற்றவியல் அரசு வழக்குரைஞர் கூறினார். ரியூனியன் தீவில் ஜூலை 29, 2015 காணப்பட்ட அந்த விமானத்தின் சிதைந்த பாகம்…