எம்டியுசி ஹரப்பானுக்கு ஆதரவு

மலேசிய    தொழிற்சங்கக்  காங்கிரஸ்(எம்டியுசி) ,  நாளை  14வது   பொதுத்  தேர்தலில்    நாட்டில்   உள்ள   14-மில்லியன்   தொழிலாளர்களும்    பக்கத்தான்   ஹரப்பானுக்கே    வாக்களிக்க     வேண்டும்     எனக்  கேட்டுக்கொண்டிருக்கிறது. அப்படிச்  செய்வது  தொழிலாளர்கள்   நாட்டின்   பொருளாதாரத்துக்கு   ஆணிவேர்   என்பதையும்     அவர்களை   “என்றென்றும்   புறக்கணிக்கக்  கூடாது”  என்பதையும்  வலியுறுத்தும்   செய்தியாக   அமையும்   என  எம்டியுசி  …

மகாதிருக்கும் பிள்ளைகளுக்கும் 488 நிறுவனங்கள் உள்ளன: முன்னாள் பெர்சத்து உறுப்பினர்…

டாக்டர்  மகாதிரும்   அவரின்  பிள்ளைகளான   கொக்சானி,  மரினா,  மிர்சான்,  முக்ரிஸ்  ஆகியோரும்   488  நிறுவனங்களுக்கு   உரிமையாளர்களாம். முன்னாள்  பெர்சத்து   உறுப்பினரான   அனினா  சாஆடுடின்   கூறுகிறார். அவை  பற்றிய   விவரங்களை   மலேசிய   நிறுவனங்கள்   ஆணைய(சிசிஎம்)த்தில்   பெறலாம்   என்றவர்  ஓர்    அறிக்கையில்    கூறினார். “மொக்சானியுடன்   லங்காவி  சிசிஎம்  அலுவலகம்   செல்ல   நான்  …

தேசியக்  கடன்  சுமையை  யார்  சுமப்பது?, சீலதாஸ்

  நம்  சமுதாயத்தின்  மீது  சரமாரியாக  இழிவுப்படுத்தும்  சொற்களை  விடுத்தபோது  மனம்  குமுறி  நின்றோம்.  கேட்பார்  யாரும்  இல்லையா  என்று  ஏக்கம்  நம்மை  வருத்தியது.  அதிகார  பலத்தை  வெளிப்படுத்தத்  தயங்காதவர்கள் – கண்களை  மூடிக்கொண்டிருந்த  காளைபோல்  நடந்துகொண்டார்கள்.  அப்படிப்பட்ட  தரத்தைக்  கொண்டவர்கள்  இனிமேல்  அவ்வாறு  நடந்து  கொள்ளமாட்டார்கள் என்பதற்கான …

அன்வார் செய்தி: நாடு நலம் பெற மகாதிருக்கு உதவுங்கள்

  நாட்டை நல்ல நிலைமைக்கு கொண்டுவர பக்கத்தான் ஹரப்பான் தலைவர் மகாதிரின் முயற்சிகளுக்கு மலேசியர்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என்று பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிம் நேற்றிரவு வெளியிட்டுள்ள ஒரு செய்தியில் கேட்டுக் கொண்டுள்ளார். செராஸ் மறுவாழ்வு மையத்தில் சிகிட்சை பெற்று வரும் அன்வார், 14 ஆவது…

கேமரன் மலை பி.எஸ்.எம். வேட்பாளர் சுரேஸ் குமாரின் 10 அம்ச…

சுரேஸ் குமார், 42, கேமரன் மலை நாடாளுமன்ற தொகுதியின், மலேசிய சோசலிசக் கட்சி (பி.எஸ்.எம்.) வேட்பாளர். கேமரன் மலை, தானா ராத்தாவில் பிறந்து, அங்கேயே வாழ்ந்து வருகிறார். அமைதியானவர், ஆனால் கொண்ட கொள்கையில் இறுக்கமானவர், கடந்த 14 ஆண்டுகளாக, பல போராட்டாங்களுக்கு இடையே, சற்றும் சளைக்காமல் கேமரன் வாழ்…

நஜிப்: ஹரப்பான் கூட்டங்களில் மலாய்க்காரர்கள் இல்லை, வெறும் டிஎபி ஆதரவாளர்கள்தான்

  மலாய் சுனாமி என்பதெல்லாம் இல்லை என்று பராமரிப்பு பிரதமர் நஜிப் ரசாக் கூறினார். நாடு தழுவிய அளவில் நடைபெற்ற பக்கத்தான் ஹரப்பான் கூட்டங்களில் பங்கேற்றவர்கள் எல்லாம் டிஎபி ஆதரவாளர்கள் மட்டுமே என்று அவர் மேலும் கூறினார். நகர்புறங்களில் நடக்கும் எதிரணியினரின் செராமாவில் கலந்துகொள்பவர்கள் மலாய்க்காரர்கள் அல்லர். பெரும்பாலானோர்…

நாளை இரவு மணி 10க்கு நஜிப் டிவி 3 வழியாகவும்,…

  பராமரிப்பு பிரதமர் நஜிப் ரசாக் நாளை டிவி 3 இல் நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார். அது நேரடி ஒளிபரப்பு செய்யப்படும். இத்தகவலை பிஎன் தலைமைச் செயலாளர் தெங்கு அட்னான் தெங்கு மன்சூர் அறிவித்தார். இந்த டிவி 3 நேரடி ஒளிபரப்பு இரவு மணி 10 க்கு தொடங்கும்.…

‘கடிதத்தில் பிஎன்னை ஆதரிப்பதாகச் சொன்னேனா?’: குழம்புகிறார் சைட் ஹமிட்

முன்னாள்    அமைச்சர்      சைட்   ஹமிட்   அல்பார்   மலேசியர்களுக்கு   எழுதிய  திறந்த   மடல்    பிஎன்னுக்கு    ஆதரவு   தெரிவிக்கும்  கடிதமாக    அர்த்தப்படுத்திக்   கொள்ளப்பட்டிருப்பது   கண்டு   குழம்பிப்  போயுள்ளார். “நான்   தெளிவாகக்  கூறியிருக்கிறேன்   ஆக்கப்பூர்வமான   மாற்றத்தை,  ஜனநாயகத்தை,  சுதந்திரமாக    நடக்கும்   தேர்தல்களை    ஆதரிப்பதாக.  ஆனால்,   பிஎன்னை   ஆதரிப்பதாகக்   கூறவில்லை”,  என   அவர்  இன்று  …

ஜிஇ14: அனைத்துலக தேர்தல் கண்காணிப்பாளர்கள் இன்று வருகை

மே  9 -இல்   நடைபெறும்  14வது   பொதுத்  தேர்தலைக்  கண்காணிக்க    9  நாடுகளின்   கண்காணிப்பாளர்கள்   இன்று   தொடங்கி   வருகை   புரியத்    தொடங்குவார்கள். முதலாவது   கண்காணிப்புக்  குழு   மாலத்   தீவிலிருந்து   வந்தது.  மாலத்  தீவு  தேர்தல்    ஆணையத்    தலைவர்   அஹமட்  ஷரிப்    தலைமையில்    இன்று  காலை  மணி   7.20க்கு    கோலாலும்பூர்  …

சிகாமாட் பெல்டா மக்களுக்கு ரிம1மில்லியன் மறுநடவு ஊக்குவிப்புத் தொகை: சுப்ரா…

ஜோகூர்   பெல்டா     பாலோங்   திமோர்  டுவா,   பெல்டா   பாலோங்   திமோர்  தீகாவில்   265  குடியிருப்பாளர்கள்  இன்று   தொடங்கி   மறுநடவு   ஊக்குவிப்பாக    ஆளுக்கு  ரிம4,000     பெறுவார்கள். சிகாமாட்   நாடாளுமன்ற   வேட்பாளரும்   பராமரிப்பு   சுகாதார   அமைச்சருமான   டாக்டர்  எஸ்.சுப்ரமணியம்   நேற்றிரவு    இதனை    அறிவித்தார். பராமரிப்புப்  பிரதமர்   நஜிப்   அப்துல்   ரசாக்கின்   ஒப்புதலுடன்  …

மகாதிர்: கிராமப்புற மக்களைக் கவர்வதற்கு வேறு வழி

பக்கத்தான்    ஹரப்பான்   1எம்டிபியை  மையப்படுத்தியே    அதன்   தேர்தல்  பரப்புரைகளைச்   செய்து    வருகிறது.  நகர்ப்புறங்களில்   அதன்   ஆதரவைத்   தக்க   வைத்துக்கொள்ள    அவ்விவகாரம்  உதவியும்   வருகிறது.  ஆனால்,  கிராமப்புறங்களில்    அது   பலிக்காது. 1எம்டிபி  விவகாரம்  குறித்து    கிராமப்புற   மக்களிடம்   பேசுவது    எந்தத்    தாக்கத்தையும்   ஏற்படுத்தாது. உலகின்   மிகப்  பெரிய   ஊழல்   என்று  …

மைக்கல் ஜெயக்குமார் தேவராஜ்: தனவான்களுக்கு மத்தியில் ஒரே ஒரு கனவான்!

  மலேசியா இன்று உலகளவில் பெருமளவில் பேசப்படும் நாடாகத் திகழ்கிறது. நாட்டு மக்களின் வறுமையை ஒழித்துக்கட்டியதற்காக அது பேசப்படவில்லை. பாலர்பள்ளியிலிருந்து பல்கலைகழகம் வரையில் இலவசக் கல்வி வழங்கப்படுவதற்காக அது பேசப்படவில்லை. அதன் தலைவர்கள் ஊழலற்ற உத்தமர்கள் என்பதற்காக அது பேசப்படவில்லை. மாறாக, மலேசியா உலக நாடுகளிலேயே ஒரு முதன்மையான…

ஜொகூர், பெக்கான் நெனாஸ் தடுப்புக் காவல் முகாமில், ஆள் கடத்தலுக்குப்…

இரண்டு நாட்களுக்கு முன்னர், ஜொகூர், கோத்தா திங்கி, தஞ்சோங் கெமோக் (Tanjung Gemuk) நீர்ப்பரப்பில் பிடிபட்ட 131 இலங்கை அகதிகள், ஜொகூர் பெக்கான் நெனாஸ் (Pekan Nenas) தடுப்புக் காவல் முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். ஒரு 3 மாதக் குழந்தை உட்பட, 98 ஆண்கள், 24 பெண்கள் (6…

ஹரப்பான் தலைவர்கள் பத்து சுயேட்சை வேட்பாளர் பிரபாகரனுக்கு ஆதரவு தெரிவித்தனர்

  பத்து, கோலாலம்பூர் - ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் இன்று தாமான் டத்தோ செனுவில் கூடி பக்கத்தான் ஹரப்பானுக்கு ஆதரவு தெரிவித்தனர். சுயேட்சை வேட்பாளர் பி. பிரபாகரனுக்கு ஆதரவு தெரிவிக்க ஹரப்பானின் உயர்மட்ட தலைவர்கள் அங்கு கூடினர். பத்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தியன் சுவாவின் வேட்பாளர் நியமனம்…

119 நாடாளுமன்ற இருக்கைகள் கிடைக்கும் என்று கிட் சியாங் நம்புகிறார்

புதன்கிழமை நடைபெறும் பொதுத் தேர்தலில் பக்கத்தான் ஹரப்பான் 119 நாடாளுமன்ற இருக்கைகளை கைப்பற்றும் என்று லிம் கிட் சியாங் நம்புகிறார். எங்களுடைய இலக்கு 120 நாடாளுமன்ற இருக்கைகளாக இருந்தது. ஆனால் நாம் பத்து நாடாளுமன்ற இருக்கையை இழந்து விட்டோம் என்று ஜோகூர், சினாய் விமான நிலயத்தில் சீனமொழி ஊடகங்களுக்கு…

மகாதிர்: நஜிப் நாட்டிலிருந்து வெளியேறினால், இன்டர்போல் உதவியுடன் அவரைப் பிடிப்போம்

  14 ஆவது பொதுத் தேர்தலில் பிஎன் தோற்கடிக்கப்படும் நிலையில் நஜிப்பும் அவரது குடும்பமும் நாட்டை விட்டு ஓடி விட்டால், அவர்களைக் கண்டுபிடிக்க பதிய அரசாங்கம் இதர நாடுகளின் உதவியை, இன்ட்ர்போல் உட்பட, நாடும் என்று ஹரப்பான் தலைவர் மகாதிர் கூறினார். "சட்டத்தின் ஆளுமையில் எனக்கு நம்பிக்கை உண்டு.…

மகாதிர் பிரதமராக இருந்த போது மொக்ஸானி பில்லியன்கள் பெற்றார், நஜிப்…

  பிரிம் உதவித் தொகை பற்றி மகாதிரின் மகன் மொக்ஸானி தெரிவித்திருந்த கருத்துக்காக பராமரிப்பு பிரதமர் நஜிப் அவரை கடுமையாகச் சாடினார். அவருக்கு பிரிம் நிதி உதவி ஒரு பெரிதாக இருக்காது, ஏனென்றால் அவரது தகப்பனார் பிரதமராக இருக்கையில் பல பில்லியன்கள் மதிப்புடைய பெட்ரோனாஸ் குத்தகைகளைப் பெற்றிருக்கிறார் என்று…

பெர்சே: இசி-யின் ‘10 கடுங் குற்றங்கள்’ ; மலேசியர்கள் வாக்குச்சீட்டுகளால்…

தேர்தல்   ஆணைய(இசி)த்தின்    நடத்தை     ‘இதுவரை  சுத்தமாகவும்,  சுதந்திரமாகவும்  நியாயமாகவும்’   இல்லை  என்கிறது    தேர்தல்   கண்காணிப்பு   அமைப்பான   பெர்சே. இசியின்  10  “கடுங்  குற்றங்களை”ப்   பட்டியலிட்ட   பெர்சே   இடைக்காலத்     தலைவர்   ஷாருல்   அமான்   முகம்மட்  சாஆரி,    தேர்தல்   முறையின்   நேர்மையையே    விட்டுக்கொடுக்க    முனையும்   இசியின்   திருகுதாளங்களை   முறியடிக்க    எல்லா   வாக்காளர்களும்   …

நூர் ஜஸ்லான்: உள்துறை அமைச்சு காணொளிகளையும் பொய்ச் செய்திகளையும் கண்காணிக்கிறது

உள்துறை      அமைச்சு    காணொளிகளும்   பொய்ச்  செய்திகளும்   2018  பொய்ச்  செய்தித்    தடுப்புச்   சட்டத்தை   மீறாதிருப்பதை   உறுதிப்படுத்த   அவற்றைத்    தொடர்ந்து   கண்காணித்து   வருகிறது. பொய்ச்   செய்திகள்  மக்கள்  மத்தியில்   செல்வாக்கு  பெற்றுவிடாமல்    தடுப்பதற்காக   அவ்வாறு   செய்யப்படுகிறது    என்று   பரமரிப்பு   உள்துறை  துணை  அமைச்சர்    நூர்   ஜஸ்லான்   முகம்மட்   கூறினார். “எடுத்துக்காட்டுக்கு, …

தேர்தலில் பிஎன் பெரிய வெற்றி பெறும்: நஜிப் நம்பிக்கை

14வது  பொதுத்  தேர்தலில்   வாக்களிப்புக்கு   இன்னும்   மூன்று    நாள்  இருக்கும்   வேளையில்  பாரிசான்   நேசனல்   மிகப்   பெரிய    வெற்றி   பெறப்போகிறது    என்று    நஜிப்   அப்துல்   ரசாக்   நேற்றிரவு   கூறினார். நாட்டைச்   சுற்றி   வந்ததிலிருந்தும்   ஆங்காங்கே    அம்னோ    தலைவர்கள்   அளித்த   விளக்கங்களிலிருந்தும்   இந்த  முடிவுக்கு   வந்திருப்பதாக   பராமரிப்பு    அரசாங்கத்தின்   பிரதமர்  …

தோக் குருவின் கல்லறைக்குச் செல்லவிடாமல் மகாதிர் தடுக்கப்பட்டார்

  கிளந்தான் முன்னாள் மந்திரி பெசார் காலஞ்சென்ற தோக் குரு நிக் அசிஸ் நிக் மாட்டின் கல்லறைக்கு சென்று மரியாதை தெரிவிக்கவிருந்த மகாதிரை அங்கு போகவிடாமல் கல்லறக்குச் செல்லும் கதவைப் பூட்டிதோடு ஒரு லோரியையும் அங்கு நிறுத்தி வைத்தார் தோக் குருவின் மகன் நிக் அட்லி. மகாதிரின் வருகையில்…

மகாதிர்: ஹரப்பான் சுலபமாக வெற்றி பெறும்

  நாடு தழுவிய அளவில் தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டிருந்த பக்கத்தான் ஹரப்பன் தலைவர் மகாதிர், எதிர்க்கட்சிகளின் கூட்டணி பாரிசான் நேசனலை வீழ்த்துவதில் வெற்றி பெறும் என்றும் புத்ரா ஜெயாவைக் கைப்பற்றும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார். "எனது கணிப்பு நாங்கள் சுலபமாக வெற்றி பெறுவோம்", என்று நேற்று புத்ரா ஜெயாவில்…

ரயிஸ், டைம், ரபிடா அம்னோவிலிருந்து நீக்கப்பட்டனர்

  அம்னோவின் மூத்த தலைவர்களும் முன்னாள் அமைச்சர்களுமான ரயிஸ் யாத்திம், டைம் ஸைநுடின் மற்றும் ரபிடா அசிஸ் ஆகியோர் அம்னோவிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். அம்னோ உறுப்பியத்திலிருந்து அவர்களை நீக்கும் உத்தரவுக்கான கடிதத்தை நேற்று வெளியிட்டதை அம்னோவின் தலைமைச் செயலாளர் தெங்கு அட்னான் தெங்கு மன்சூர் உறுதிப்படுத்தினார். 14 ஆவது பொதுத்…