ஸுரைடா: ‘ராவாங் திட்டம்’ என்பது அம்னோவின் கட்டுக் கதை

சிலாங்கூர்  மந்திரி  புசார்  அஸ்மின் அலியைப்  பதவியிலிருந்து  வெளியேற்ற ‘லங்கா  ராவாங்’  என்ற  பெயரில்    ஒரு  திட்டம்  உருவாக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுவதை  பிகேஆர்  மகளிர்  தலைவி  ஸுரைடா  கமருடின்  நிராகரித்தார். முன்னாள்  அம்னோ  உச்சமன்ற  உறுப்பினர்  சைபுடின்  அப்துல்லாவை  பிகேஆர்  தன்  பக்கம்  இழுத்துக்  கொண்டதை  அடுத்து  இப்படிப்பட்ட  வதந்தி …

அன்வாரின் உடல்நலன் பற்றி அறிய சுஹாகாம் சிறைக்கு வருகை

அன்வார்  இப்ராகிமின்  உடல்நலன்  பற்றிப் புகார்களைப்  பெற்றதைத்  தொடர்ந்து  மனித  உரிமைகள்  ஆணையம்(சுஹாகாம்) சிறைக்குச்  சென்று  அவரைச்  சந்தித்தது. அக்டோபர்  2-இல் Otai Reformasi என்ஜிஓ  கொடுத்த  மகஜரை  அடுத்து  கடந்த  செவ்வாய்க்கிழமை  சுங்கை  பூலோ  சிறைச்சாலை  சென்று  அன்வாரைக்  கண்டதாக  சுஹாகாம்  ஓர்  அறிக்கையில்  கூறியது. சுங்கை …

கட்சியைக் காப்பாற்ற நஜிப் பதவி விலக வேண்டும் என நெகிரியில்…

2016 பட்ஜெட்டைத்  தாக்கல்  செய்ததற்காக  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்  ஒரு  புறம்  பாராட்டப்படும்  வேளையில்  நெகிரி  செம்பிலானில்  13  அம்னோ  தொகுதிகள்  அவர்  கட்சித்  தலைவர்  பதவியிலிருந்து  வெளியேற  வேண்டுமெனக்  கோரிக்கை  விடுத்துள்ளன. அவர்களுக்குத்  தலைமை  ஏற்றுள்ள தாமான்  டிகேகே தொகுதித்  தலைவர்  கமருல்  அஸ்மான்  ஹபிபுர் …

அஸ்மின்: பட்ஜெட் பொருளாதார வளர்ச்சிக்கு உதவாது

பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்  நேற்று  தாக்கல்  செய்த பட்ஜெட் 2016,  பொருளாதார  வளர்ச்சியைத்  தூண்டிவிடாது  உண்மையில்  அதை  மந்தப்படுத்தி விடும்  என்று  சிலாங்கூர்  மந்திரி  புசார்   அஸ்மின்  அலி  கூறினார். “பட்ஜெட்  2016  மிகுந்த  ஏமாற்றத்தைத்  தருகிறது.  அது  பொருளாதார  வளர்ச்சிக்கு  மிகவும்  தேவைப்படும்  உந்து  சக்தியைக் …

பிரதமர் பட்ஜெட் உரையை முடித்தவுடன் எழுந்த கேள்வி “ரிம2.6 பில்லியன்…

  நிதி அமைச்சர் நஜிப் ரசாக் 2016 ஆம் ஆண்டுக்காண பட்ஜெட் உரையை 90 நிமிடங்களுக்கு நிகழத்தி முடித்தவுடன், நாடாளுமன்ற எதிரணி உறுப்பினர்கள் ஒன்றாக அட்டையைப் பிடித்துக் கொண்டு எழுந்து நின்றனர். அந்த அட்டையில் "ரிம2.6 பில்லியன் எங்கே?" என்று எழுதப்பட்டிருந்தது. இதனால் அவையில் குழப்ப நிலை ஏற்பட்டது.…

சீனச் சுற்றுப்பயணிகள் எண்ணிக்கை குறைந்ததற்குக் குடிநுழைவுத் துறை காரணமல்ல

சீனச்  சுற்றுப்பயணிகள்  மலேசியாவுக்கு  வருகை  புரிய  தயக்கம்  காட்டுவதற்கு  விசாவைக்  காரணம்  காட்டி  குடிநுழைவுத்  துறைமீது  பழி  போடுவது  நியாயமல்ல  என  உள்துறை  துணை  அமைச்சர்  நூர்  ஜஸ்லான்  கூறினார். விசா  ஒரு  பிரச்னையே  அல்ல  என்று  கூறிய  அதற்கு  வேறு  காரணங்கள்  உள்ளன   என்றார். “விசா  கட்டணம் …

அஸ்மின்: என்னை வெளியேற்ற ராவாங் திட்டமா? அப்படி எதுவும் கிடையாது

சிலாங்கூர்  மந்திரி  புசார்  அஸ்மின்  அலி,  தமக்குப்  பதிலாக அண்மையில்  பிகேஆரில்  இணைந்த  சைபுடின்  அப்துல்லாவை    “ராவாங்  திட்ட”த்தின்வழி  மந்திரி  புசாராக்க  முயற்சிகள்  நடப்பதாகக்  கூறப்படுவதை  மறுத்தார். Babab.net என்னும்  வலைப்பதிவு  ராவாங்  திட்டம்  அஸ்மினைப்  பதவியிலிருந்து  அகற்றும்  நோக்கம் கொண்டது  எனக்  கூறியிருந்தது. “அதென்ன  ராவாங் திட்டம்?…

கிட் சியாங்: 1எம்டிபிக்கு அடுத்த பலி மகாதிரா?

முன்னாள்  பிரதமர் மகாதிர்  முகம்மட்டே  1எம்டிபி-இன்  அடுத்த  “பலி” என்று டிஏபி  நாடாளுமன்றத்  தலைவர்  லிம்  கிட்  சியாங்  ஆருடம்  கூறியுள்ளார். “1எம்டிபி  அரக்கனுக்கு இப்போது  பலியாகியிருப்பது  நான். அதைத்  தடுத்து  நிறுத்தாவிட்டால்  மகாதிர்  உள்பட  பலர்  பலியாவார்கள்”, என  லிம்  அறிக்கை  ஒன்றில்  கூறினார். கடந்த  ஆண்டு …

கிட் சியாங் இடைநீக்கத்தை எதிர்த்து எதிரணி முறையீடு

கேளாங்  பாத்தா  எம்பி  லிம்  கிட்  சியாங்  இடைநீக்கம்  செய்யப்பட்டதை  மீள்ஆய்வு  செய்ய  வேண்டும்  என்று  கேட்டுக்கொள்ளும்  தீர்மானத்தை  எதிரணி  நாடாளுமன்றத்தில்  தாக்கல்  செய்யும். இடைநீக்கம்  செய்யப்பட்டதில்  சரியான  நடைமுறைகள்  பின்பற்றப்பட்டனவா  என்பதை  ஆராய  அத்தீர்மானம்  கொண்டுவரப்படுவதாக  பூச்சோங்  எம்பி  கோபிந்த்  சிங்  டியோ  கூறினார். “எங்களைப் பொறுத்தவரை …

கிட் சியாங் ஆறு மாத இடைநீக்கம்

லிம் கிட் சியாங் (டிஏபி- கேளாங் பாத்தா) மக்களவைத்  தலைவர் பண்டிகார் அமின் மூலியாவை  அவமதித்து  விட்டார்  என்று  அவருக்கு  எதிராக  தீர்மானம்  கொண்டுவரப்பட்டு  6 மாதங்களுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். அத்தீர்மானத்தை  பிஎன்  எம்பிகள்  107  பேர்  ஆதரித்தனர்.  எதிரணியினர்  77 பேர்  எதிர்த்தனர். அதன் பின்னர் லிம் …

ரசாலி: பிரதமரை வெளியேற்ற நினைக்கும் பிஎன் எம்பிகள் பட்ஜெட்டுக்கு எதிராக…

பிரதமர்  நஜிப்  அப்துல் ரசாக்கை  வெளியேற்றுவது  அவசியம்  என்று  பிஎன்  எம்பிகள்  நினைத்தால்  2016  பட்ஜெட்டுக்கு  எதிராக  வாக்களிக்கும்  உரிமை  அவர்களுக்கு  உண்டு  என்கிறார்  அம்னோ  மூத்த  தலைவர்  தெங்கு  ரசாலி  ஹம்சா. “வழக்கப்படி பார்த்தால்  பட்ஜெட்டுக்கு  எதிர்ப்பாக  அவர்கள்  வாக்களிக்க  மாட்டார்கள்தான். “ஆனால், எதிர்ப்பு  பிரதமருக்குத்தான்  பட்ஜெட்டுக்கு …

கல்வி அமைச்சிடம் புகைமூட்டத்துக்கு எதிராக உருப்படியான திட்டம் இல்லை

கல்வி  அமைச்சர்  மகாட்சிர்  காலிட்,  “எதிர்பாராத  நிகழ்வுகளைச்  சமாளிக்கும்”  திட்டங்களைக்  கொண்டிருப்பதாகக்  கூறினாலும் அமைச்சு  அவ்வப்போதைய  நிலவரங்களுக்கு  ஏற்ப  செயல்படுதைத்தான்  வழக்கமாகக்  கொண்டிருக்கிறது  என்று  பினாங்கு  அரசு  குறைகூறியது. “ஏ பிளான், பி  பிளான்,  சி  பிளான்  என்று  எஸ்பிஎம்  வரை  அமலாக்குவதற்குத்  திட்டங்களைக்  கொண்டிருப்பதாக  அமைச்சர்  கூறுகிறார்.…

1எம்டிபி நிதி அறிக்கையில் திருத்தம் செய்யவில்லை

அரசின்  முதலீட்டு  நிறுவனமான  1எம்டிபி, 2014ஆம்   ஆண்டுக்கான  அதன்  நிதி  அறிக்கையில்  திருத்தங்கள்  எதையும்  செய்யவில்லை  என  நிதி  அமைச்சு  கூறியது. 1எம்டிபி,  தணிக்கை  செய்யப்பட்ட  அதன்  நிதி  அறிக்கையைத்  திருத்தி  இருந்ததா  என்று  வினவிய  டோனி  புவா(டிஏபி- பெட்டாலிங்  ஜெயா  உத்தாரா)வுக்கு  கொடுத்த  எழுத்துப்பூர்வமான  பதிலில்  நிதி …

ஜாஹிட்: பட்ஜெட்டுக்கு எதிராக வாக்களிக்கப் போகிறார்களா? யார் அவர்கள்?

பட்ஜெட்  தாக்கல்  செய்யப்படும்போது  அதற்கெதிராக வாக்களிப்பார்கள்  என்று  கூறப்படும்  ஐந்து  பிஎன்  எம்பிகளுக்கு  எதிராக  என்ன  நடவடிக்கை  எடுக்கப்படும்  என்று  துணைப்  பிரதமர்  அஹமட்  ஜாஜிட்  ஹமிடியிடம்  ஒரு  செய்தியாளர்  வினவினார். அதற்கு  அஹ்மட்  ஜாஹிட், “யார்  அவர்கள்?”, என  எதிர்க்  கேள்வி  போட்டார். முன்னாள்  துணைப்  பிரதமர் …

எரிபொருள் உதவித் தொகையை நீக்கிய மலேசியாவுக்குப் பாராட்டு

கடந்த  ஆண்டில்  மலேசியா  எரிபொருள் உதவித்  தொகையை  அகற்றியதை  ஐநா மேம்பாட்டுத்  திட்ட (யுன்டிபி)  நிர்வாகி  ஹெலன்  கிளார்க்  பாராட்டினார். எரிபொருள் உதவித்  தொகைகள்  அகற்றப்பட  வேண்டும்  என்ற  அனைத்துலக  பண  நிறுவனத்தின்(ஐஎம்எப்)  கோரிக்கையை  யுன்டிபி  ஏற்கிறது என்றும் அவர்  சொன்னார். “எல்லா  நாடுகளிலும்  படிம  எரிபொருளுக்கு  உதவித் …

காட்டுத் தீ மேலும் ஒரு மாதம் நீடிக்கும்: இந்தோனேசியா எச்சரிக்கை

இந்தோனேசியாவின்  சுமத்ராவிலும்  போர்னியோவிலும்  தோட்டங்களிலும்  காடுகளிலும் கடந்த மூன்று  மாதங்களாக  பற்றி  எரியும்  தீ  நவம்பர்  இறுதிவரை  தொடரலாம்  என  இந்தோனேசிய  அதிகாரி ஒருவர்  எச்சரித்தார். தென்கிழக்காசியாவின்  பல  பகுதிகளைப்  புகைமூட்டத்தில்  மூழ்கடித்த  நெருப்பை  அணைக்க  நிலத்திலும்  ஆகாயத்திலும்  மேற்கொள்ளப்பட்ட  முயற்சிகள்  எதுவும்  பலன்  தரவில்லை. “நவம்பரில்  மழை…

1எம்டிபிமீது ‘ஊடக விசாரணை’ வேண்டாம்

பிரதமர்  நஜிப்  அப்துல் ரசாக், 1எம்டிபிமீதான  விசாரணைகள் தடையின்றி  நடப்பதற்கு  இடமளிக்க வேண்டுமே  தவிர  ஊடகங்களில்  அதன்மீது  விசாரணை  நடத்துவது  தேவையற்றது  எனக்  கூறினார். அவ்விவகாரம்மீது  சுயேச்சை  விசாரணைகள்  நடைபெற்று  வருவதாகவும்  தாமே  சில  விசாரணைகளுக்கு  உத்தரவிட்டிருப்பதாகவும்  அவர்  சொன்னார். “ஊடகங்களில்  விசாரணை  நடத்திக்  கொண்டிருக்காமல் இந்த விசாரணைகளின் …

பெர்சே சாபா தலைவர்மீது பேரணிச் சட்டத்தை மீறியதாகக் குற்றச்சாட்டு

அமைதிப் பேரணிச்  சட்ட(பிஏஏ)த்தை  மீறியதாக பெர்சே  சாபாவின்  உதவித்  தலைவர்  ஜைன்னி  லாசிம்பாங்  கோட்டா  கினாபாலு  மெஜிஸ்திரேட்  நீதிமன்றத்தில்  இன்று நிறுத்தப்பட்டார். அவர்மீது  ஆகஸ்ட் 29,30-இல் நடைபெற்ற  பெர்சே 4 பேரணி  பற்றி  10-நாள்களுக்கு  முன்னதாகவே  தெரியப்படுத்தத்  தவறிவிட்டதாக குற்றம்  சுமத்தப்பட்டது. மேல்முறையீட்டு  நீதிமன்றம்,  பிஏஏ-இன்படி  10-நாள்களுக்கு  முன்பே …

மகாதிர்: ஆட்சியாளர்கள் வெறும் ரப்பர் முத்திரைகள் அல்ல

முன்னாள்  பிரதமர்  டாக்டர்  மகாதிர்  முகம்மட்  ஆட்சியாளர்கள்  வெறும்  இரப்பர்  முத்திரைகள்  அல்ல  என்றும்  அவர்களுக்கு  நிர்வாகப்  பொறுப்புகளும்  உண்டு  என்றும்  கூறினார். ஆட்சியாளர்கள்   அதிகாரப்  பகிர்வுக்  கோட்பாட்டுக்குக்  கட்டுப்பட்டவர்கள்  என்று  துணைப்  பிரதமர்  அஹமட்  ஜாஹிட்  ஹமிட்  நினைவுறுத்தியிருப்பதற்கு  எதிர்வினையாக  மகாதிர்  இவ்வாறு  கூறினார். “ஆகோங்கும்  மற்ற …

புவாவை நீக்கும் அதிகாரம் பிஏசி-க்கு இல்லை

பொதுக் கணக்குக்குழுவின்  புதிய  தலைவர்   ஹ்சான்  அரிப்பின்  அக்குழுவுக்கு  டிஏபி  எம்பி  டோனி  புவாவை  நீக்கும்  அதிகாரம்  கிடையாது  என்றார். “பிஏசிக்கு அந்த உரிமை  இல்லை”, என  நாடாளுமன்ற  வளாகத்தில்  செய்தியாளர்களிடம்  அவர்  இதனைத்  தெரிவித்தார். இதற்குமுன்  ஹசான்,  1எம்டிபி  பற்றி  புவா  தொடர்ந்து  குறை  சொல்லி  வருவதால் …

நம்பிக்கையில்லா தீர்மானம் இப்போதைக்கு இல்லை

நடப்பு  நாடாளுமன்றக்  கூட்டம்,  பிரதமர்  நஜிப்  அப்துல் ரசாக்குக்கு  எதிராக  எதிரணித்  தலைவர்  டாக்டர்  வான் அசிசா  வான்  இஸ்மாயில்  கொண்டுவரும்  நம்பிக்கையில்லா  தீர்மானத்தை  ஏற்று  விவாதம் நடத்துவது சந்தேகமே. ஏனென்றால், அப்படிப்பட்ட  தீர்மானம்   நாடாளுமன்றக்  கூட்டம்  தொடங்குவதற்கு  14  நாள்களுக்கு  முன்னரே  சமர்ப்பிக்கப்பட்டிருக்க  வேண்டும்  என  மக்களவைத் …

பிகேஆர்: தோற்றுப்போன கொள்கையைத் தூக்கி எறிவீர்

கார் விலைகளைக்  குறைக்கும்  புத்ரா  ஜெயாவின்  கொள்கை,  விலைகள்  உயர்ந்ததால்  தோற்றுப் போனதால்  அதைத்  தூக்கி  எறிய  வேண்டும்  என்று பிகேஆர்  இளைஞர்  தலைவர்  நிக்   நஸ்மி  நிக்  மாட்  கூறினார். பிஎன்  அதன்  2013  தேர்தல்  அறிக்கையில்  காரின்  விலைகள்  20-இலிருந்து 30  விழுக்காடுவரை  குறைக்கப்படும்  என …

புதிய பிஏசி தலைவர் 1எம்டிபி பற்றி விசாரிக்கப் போகிறாரா, டோனி…

பொதுக்  கணக்குக்  குழு (பிஏசி)  வின் புதிய  தலைவர்  ஹசான்  அரிப்பின் 1எம்டிபி-இன்  பின்னணியில்  உள்ள  உண்மைகளைக்  கண்டறிவதில்  உண்மையில்  கடப்பாடு  கொண்டிருக்கிறாரா  என  டிஏபி  பெருந்  தலைவர்  லிம்  கிட் சியாங்  கேள்வி  எழுப்பியுள்ளார். பிஏசி-இல்  டோனி  புவா-வின்  நிலை  பற்றி  அக்குழுவின்  அடுத்த  கூட்டத்தில்  விவாதிக்கப்படும் …