இந்த ஆண்டு எதிர்பார்க்கப்படும் ஜொகூர் மாநிலத் தேர்தலில், பக்காத்தான் ஹராப்பான் தனித்துப் போட்டியிட விரும்புவதாக வெளியான செய்தியை ஜொகூர் மாநில பிகேஆர் தலைவர் டாக்டர் ஜாலிகா முஸ்தபா நிராகரித்துள்ளார். தனது முகநூல் பதிவில் இது குறித்து கருத்து தெரிவித்த ஜாலிகா, இந்தத் தகவல்கள் உண்மையற்றவை, ஊக அடிப்படையிலானவை மற்றும்…
பஹாங்கில் 10% முஸ்லிம் அல்லாத வேட்பாளர்கள், பாஸ் கூறுகிறது
எதிர்வரும் 14-வது பொதுத் தேர்தலில், பாஸ் கட்சியின் சார்பில், 10% முஸ்லிமல்லாத வேட்பாளர்களை நாடாளுமன்ற இடங்களில் போட்டியிட வைக்க உள்ளதாக, பஹாங் பாஸ் ஆணையர் ரொஸ்லி அப்துல் ஜபார் கூறினார். வேட்பாளர்கள் பாஸ் ஆதரவாளர்கள் சங்கத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்படுவர் என்று அவர் தெரிவித்தார். "அதேசமயம், சட்டமன்ற வேட்பாளர் தேர்வு, சூழ்நிலையைப்…
சிலாங்கூர் பாஸிலிருந்து இரண்டாம் அலை கட்சித்தாவலா? மறுக்கிறார் உதவித் தலைவர்
சிலாங்கூரில் பாஸ் கட்சியின் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் பலர் விரைவில் கட்சி தாவுவார்கள் என்று கூறப்படுவதை அக்கட்சித் தலைவர் ஒருவர் மறுத்தார். அவை “வெறும் வதந்திகள்” என பாஸ் உதவித் தலைவரும் சிலாங்கூர் ஆட்சிக்குழு உறுப்பினருமான இஸ்கண்டர் சமட் கூறினார். மாநில பாஸின் தேர்தல் ஏற்பாடுகளைக் குலைப்பதற்காகவே அப்படிப்பட்ட வதந்திகள் …
பெல்டா நாடகம் போதும், நடவடிக்கை தேவை: எம்பி வலியுறுத்து
பெல்டா ஊழல்களை வைத்து நாடகமாடுவதை நிறுத்திக்கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு பிகேஆர் எம்பி ஒருவர் வலுறுத்தினார். “பெல்டா ஊழல்களை அடுத்தடுத்து வெளிப்படுத்தி நாடகமாடுவதை நிறுத்திக்கொண்டு அதற்குப் பொறுப்பானவர்கள்மீது உறுதியான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்”, என லெம்பா பந்தாய் எம்பி நுருல் இஸ்சா அன்வார் கூறினார். “அம்னோவின் கைகளில் …
பெர்சத்து : வசதிக்குட்பட்ட வீடுகள் – இளைஞர்கள் பிஎன்-னைத் தண்டிப்பார்கள்
வாங்கும் வசதிக்குட்பட்ட வீடுகளை, இளைஞர்களுக்கு ஏற்பாடு செய்யத் தவறிய பிஎன் அரசாங்கத்தை, எதிர்வரும் பொதுத்தேர்தலில் இளைஞர்கள் தண்டிப்பர் என பிபிபிஎம் இளைஞர் தலைவர் சைட் சட்டிஃ சைட் அப்துல் ரஹ்மான் கூறியுள்ளார். அக்குற்றச்சாட்டுகளுக்கு ஆதரவாக, 1மலேசிய மக்கள் வீடு திட்டத்தின் (பிரிமா) விளம்பரங்களில் ‘வசதிக்குட்பட்ட வீடு’ என விளம்பரப்படுத்திய…
போலீஸ் காவலில் 16-வது இறப்பு: சுஹாகாம் விசாரணை
மலேசிய மனித உரிமை ஆணையம் (சுஹாகாம்), ஜி.கணேஷ்வரன் இறப்பு தொடர்பில் ஒன்பது போலீஸ் அதிகாரிகளையும் ஒரு தடுப்புக்காவல் கைதியையும் விசாரித்துள்ளது. செவ்வாய்க்கிழமை கணேஷ்வரன் குடும்பத்தாரையும் தெங்கு அம்புவான் மருத்துவமனை மருத்துவமனை அதிகாரியையும் அது விசாரிக்கும் என சுஹாகாம் ஆணையர் ஜெரால்ட் ஜோசப் கூறினார். நேற்று அவரைத் தொடர்பு கொண்டபோது, …
மகாதிர் புத்ரா ஜெயா மசூதியில் இருந்தார்
அமெரிக்க அதிபர் டொனல்ட் டிரம்ப்பிற்கு எதிராக, பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக இன்று புத்ரா ஜெயாவில் நடத்தப்பட்ட பேரணியில் முன்னாள் பிரதமர் மாகதிர் முகமட் கலந்து கொண்டார். மகாதிர் பிற்பகல் மணி 1.00 அளவில் அங்கு வந்து சேர்ந்தார். அவரது கார் வந்து நின்றதும் பலர் அவரை வரவேற்றனர்.…
ஹாடி புத்ரா ஜெயா பேரணிக்கு வரவில்லை
புத்ரா ஜெயா பாலஸ்தீன ஆதரவு பேணியில் பாஸ் கட்சியின் தலைவர் அப்துல் ஹாடி அவாங் காணப்படவில்லை. அவரது உருவப்படம் பிரதமர் நஜிப்பின் படத்தோடு சேர்த்து மேடைக்குப் பின்னால் முதன்மையான நிலையில் காட்சியளித்தது.. ஆனால், ஹாடி அவரது மாரங், திரங்கானு தொகுதியில் வெள்ளிக்கிழமை தொழுகையில் சமய உரையாற்றிக் கொண்டிருந்தார்.…
நஜிப்: நமது உடல்கள் துண்டுதுண்டாக வெட்டப்பட்டாலும், நாம் சிறிதும் அசைய…
"நமது உடல்கள் துண்டுதுண்டாக வெட்டப்பட்டாலும்" பாலஸ்தீனத்தைத் தற்காக்கும் முயற்சிகளிலிருந்து நாம் பின்வாங்கப் போவதில்லை என்று பிரதமர் நஜிப் புத்ரா ஜெயா மசூதியில் இன்று நடைபெற்ற "பாலஸ்தீனத்தைத் தற்காப்போம்" பேரணியில் கூறினார். "நாம் பின்வாங்க மாட்டோம். என்ன நடந்தாலும் சரி, நாம் பின்வாங்க மாட்டோம். "முப்தி அவரது விளக்க…
நஜிப்: ‘நல்ல நண்பர்’ டிரம்ப்புக்காக இஸ்லாத்தின் புனிதத்தன்மையைத் தியாகம் செய்ய…
அமெரிக்க அதிபர் டொனல்ட் டிரம்புடனான தமது இணைப்புகளைப் பேணுவதற்காக இஸ்லாத்தின் புனித்தன்மையைத் தியாகம் செய்ய மாட்டேன் என்று பிரதமர் நஜிப் ரசாக் சூளுரைத்தார். "ஆம், நான் வெள்ளைமாளிகைக்கு வரவேற்கப்பட்டேன். ஆம், டொனல்ட் டிரம்ப் எனது நல்ல நண்பர்தான். "ஆனால் கோட்பாட்டின்படி, நான் இஸ்லாத்தின் புனிதத்தன்மையைத் தியாகம் செய்ய…
நஜிப்: பெல்டா விவகாரத்தில் மோசடி நிகழ்ந்திருந்ததால் நடவடிக்கை
கோலாலும்பூர், ஜாலான் செமராக்கில் பெல்டாவுக்குச் சொந்தமான நில உரிமை மாற்றிவிடப்பட்டது தொடர்பாக புலனாய்வு செய்யுமாறு பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் அதிகாரிகளைப் பணித்துள்ளார். “அதிகாரிகள் உடனடியாக விரிவான விசாரணையை மேற்கொள்ள வேண்டும். கவனக்குறைவு அல்லது தவறு நிகழ்ந்திருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்”, என்றவர் டிவிட்டரில் தெரிவித்திருந்தார். “பெல்டாவையும் குடியேற்றக்காரர்களையும் பாதுகாக்க …
எம்பி: எம்ஏஎச்பி-யை ‘மீட்டெடுக்கவே’ விமான நிலைய வரி அதிகரிப்பு
கோலாலும்பூர் அனைத்துலக விமான நிலையம்2 (கேஎல்ஐஏ2)-இல் பயணிகள் சேவைக் கட்டணம்(பிஎஸ்சி) கூட்டப்படுவது விமான நிலையத்தை நிர்வகித்துவரும் மலேசிய ஏர்போர்ட்ஸ் ஹோல்டிங்ஸ் பெர்ஹாட்(எம்ஏஎச்பி)டை மீட்டெடுக்கத்தான். இவ்வாறு கூறும் பெட்டாலிங் ஜெயா உத்தாரா எம்பி டோனி புவா, “மிகப் பெரியதும் நவீன வசதிகளைக் கொண்டதுமான” கேஎல்ஐஏ2-இன் பராமரிப்புச் செலவுகள் அதிகம் என்பதால் …
மகாதிர்: ‘உங்கள் எதிரி எங்களுக்கும் எதிரிதான்’ என்று அமெரிக்காவிடம் கூறியதை…
பக்கத்தான் ஹரபான் தலைவர் டாக்டர் மகாதிர் முகம்மட், அரசாங்கம் அமெரிக்க அதிபர் டோனல்ட் ட்ரம்புக்கு எதிராக கடைப்பிடிக்கும் நிலைப்பாடு அர்த்தமுள்ளதாக இருத்தல் வேண்டும் என வலியுறுத்தினார். .அதில், செப்டம்பரில் அமெரிக்காவுக்கு அதிகாரப்பூர்வ வருகை மேற்கொண்டபோது பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் ட்ரம்புக்கு அளித்த வாக்குறுதியை மீட்டுக்கொள்வதும் அடங்கும் என்றாரவர்.…
‘ஜெருசலத்தைக் காப்பாற்றுவோம்’ பேரணியில் பிகேஆர், அமனா பிரதிநிதிகள் பங்கேற்க வேண்டும்,…
நாளை புத்ரா ஜெயாவிலுள்ள புத்ரா மசூதியில் நடைபெறவிருக்கும் "ஜெருசலத்தைக் காப்பாற்றுவோம்" ஒற்றுமைப் பேரணியில் பிகேஆர் மற்றும் அமனா ஆகியவற்றின் பிரதிநிதிகள் பங்கேற்பார்கள் என்று துணைப் பிரதமர் அஹமட் ஸாகிட் ஹமிடி இன்று வலியுறுத்திக் கூறினார். ஆனால், அவரது அறிக்கை அமனாவின் உதவித் தலைவர் முஜாஹிட் யுசோப் ராவாவின் அறிக்கைக்கு…
ஜெருசலம் பாலஸ்தீனத்தின் தலைநகராக அங்கீகரிக்கப்பட வேண்டும், அன்வார் கோரிக்கை
ஜெருசலம் பாலஸ்தீனத்தின் தலைநகரகமாக அங்கீகரிக்கப்பட வேண்டும். அதற்கு மலேசியா ஆதரவு அளிக்க வேண்டும் என்று கூறுகிறார் மலேசிய் எதிரணியின் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிம். அன்வாரின் வேண்டுகோள் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் ஜெருசலத்தை இஸ்ரேலின் தலைநகரமாக அங்கீகரித்துள்ளதற்கு பதிலடியாகும். டிரம்ப்பின் இறுமாப்பான முடிவை நீதியை நேசிக்கும்…
ஜொகூர் பெட்ரோல் நிலையத்தில் கொலை, அறுவர் தடுத்து வைக்கப்பட்டனர்
கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜேபி பெட்ரோல் நிலையத்தில் நடந்த கொலை மீதான விசாரணையில் உதவுவதற்காக அறுவரைத் தடுப்புக் காவலில் வைக்க ஜோகூர் பாரு மஜிஸ்டிரேட் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. 20 வயதிலிருக்கும் 5 ஆண்களையும் 19 வயதான ஒரு பெண்ணையும் ஏழு நாட்களுக்கு தடுப்புக் காவலில் வைக்க போலீஸ்…
செம்ப்ரோங்கில் இராணுவ முகாம் கட்டப்படுகிறதே: ஹிஷாமுக்கு டிஏபி பதிலடி
இராணுவத்தினர் வாக்குகள் பிஎன்னுக்குச் சாதகமாக இருக்கும் என்றால் தமது தொகுதியான செம்ரோங்கிலும் ஒரு இராணுவ முகாமைக் கட்டப்போவதாக தற்காப்பு அமைச்சர் ஹிஷாமுடின் உசேன் கிண்டலடித்ததற்குப் பதிலடியாக ‘ஜோகூரில் அதுதானே ஐயா நடக்கிறது’ என்கிறது டிஏபி. தமது தொகுதியில் இராணுவ முகாம் கட்டப்படுகிறதா என்பதை யார் வேண்டுமானாலும் வந்து பார்த்துக்கொள்ளலாம் …
சாலே: மகாதிர் மூராட்மீது ஆத்திரப்படுவது தவறு
டாக்டர் மகாதிர் முகம்மட் பேங்க் நெகாராவின் அன்னிய செலாவணி இழப்பு ரிம31.5 பில்லியன் என்று தெரிவித்த அவ்வங்கியின் உதவி கவர்னர் அப்துல் மூராட் காலிட்மீது ஆத்திரப்படுவது முறையல்ல என்கிறார் தொடர்பு, பல்லூடக அமைச்சர் சாலே சைட் கெருவாக். ஆத்திரப்படுவதாக இருந்தால் முன்னாள் பிரதமர் டிஏபி ஆலோசகர் லிம் கிட் …
1எம்டிபி-இல் அருள் கந்தாவின் பணிக்காலம் நீட்டிக்கப்பட்டது
அருள் கண்ட கந்தசாமி 1எம்டிபி தலைவராகவும் தலைமை செயல் அதிகாரியுமாக தொடர்ந்து இருப்பார் என்பதை ஒரு வட்டாரம் உறுதிப்படுத்தியுள்ளது. பணிக்காலத்தை நீட்டிப்பது தொடர்பில் அவருடன் நடத்தப்பட்ட பேச்சுகள் முடிவுக்கு வந்திருப்பதாக அது கூறியது. ஆனால், பணிக்காலம் எதுவரை நீட்டிக்கப்பட்டது என்பதை அவ்வட்டாரத்தால் உறுதிப்படுத்த முடியவில்லை. 2015 ஜனவரியில் அரசாங்கத்தின் …
வாங் கெலியான் சம்பவத்தை மூடிமறைத்த அதிகாரிகள்மீது குற்றம்சாட்டப்பட வேண்டும்- எம்பி
கடத்திவரப்பட்டவர்களைத் தற்காலிகமாக தங்க வைப்பதற்கான இடமாக செயல்பட்டு வந்த வாங் கெலியான் முகாம் குறித்து 2016-இலும் இவ்வாண்டிலும் ஒவ்வொரு நாடாளுமன்றக் கூட்டத்திலும் உள்துறை அமைச்சர் அஹமட் ஜாஹிட் ஹமிடியிடன் கேள்வி கேட்டு வந்திருப்பதாகக் கூறுகிறார் கிள்ளான் டிஏபி எம்பி சார்ல்ஸ் சந்தியாகு. இது குறித்து அஹ்மட் ஜாஹிட்டிடமிருந்து திருப்தி …
சிவராசா, சந்தியாகோ: சுபாங் ஜெயா சீபீல்ட் தோட்ட மஹா மாரியம்மன்…
சீபீல்ட் தோட்ட மஹா மாரியம்மன் ஆலய நடவடிக்கை குழு என்ற ஓர் அரசுசாரா இயக்கம், சுபாங் ஜெயா யூஎஸ்ஏ 25ல் உள்ள ஆலயத்தின் இடம் மாற்றம் குறித்து அதன் கவலையைத் தெரிவித்துள்ளது என்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆர். சிவராசா மற்றும் சார்ல்ஸ் சந்தியாகு வெளியிட்ட அறிக்கையில் கூறுகின்றனர்.…
வூட்லண்ட்ஸ் சோதனைச் சாவடி விபத்தில் 26பேருக்குக் காயம்
இன்று காலை சிங்கப்பூர் வூட்லன்ஸ் சோதனைச் சாவடிக்கு அருகில் நான்கு வாகனங்கள் சம்பந்தப்பட்ட ஒரு விபத்தில் 20க்கு மேற்பட்டோர் காயமடைந்ததாக த ஸ்ரேய்ட்ஸ் டைம்ஸ் கூறியது. காலை 6 மணி அளவில் நிகழ்ந்த அவ்விபத்தில் இரண்டு லாரிகள், ஒரு பேருந்து, ஒரு கார் ஆகியவை ஒன்றோடொன்று மோதிக் கொண்டன.…
‘நிறைய ஊழல்கள்’ நிகழ்வதாகக் கூறி அதற்கான ஆதாரங்களை எம்ஏசிசி-இடம் ஒப்படைத்தார்…
தொலைக்காட்சிப் பிரபலம் அஸ்வான் அலி ஒரு தலைவர் “நிறைய ஊழல்கள் செய்து செல்வச் செழிப்பில் மிதப்பதாக”க் குற்றஞ்சாட்டி அதற்கான ஆதாரங்களை எம்ஏசிசி-இடம் கொடுத்திருக்கிறார். ஊழல் தலைவரின் பெயரை அவர் குறிப்பிடவில்லை. ஆனால், அவரின் இன்ஸ்டாகிராமைப் பார்க்கும்போது அவர் கொடுத்த ஆவணங்கள் அவரின் அண்ணன் சிலாங்கூர் மந்திரி புசார் அஸ்மின் …
ஜேபி பெட்ரோல் நிலையக் கொலை: இருவர் கைது
திங்கள்கிழமை இரவு ஜோகூர் தாமான் பெலாங்கியில் பெட்ரோல் நிலையம் ஒன்றில் 44வயது நிரம்பிய டான் ஏய்க் சாயைக் கொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் நான்கு பேரில் இருவரை போலீஸ் கைது செய்துள்ளது. சில வட்டாரங்களை மேற்கோள்காட்டி இச்செய்தியை வெளியிட்டிருக்கும் உத்துசான் மலேசியா, சந்தேகப் பேர்வழிகளின் காரை விரட்டிச் சென்று போலீசார் …












