மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் ஹங் மூய் லீ, இத்தகைய பொம்மைகள் இரவு சந்தைகளிலும் இணையதளங்களிலும் வெளிப்படையாக விற்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார். பினாங்கு மாநில நிர்வாகக் குழு (Exco) உறுப்பினர் ஹங் மூய் லியே (வலது), புகார்களை உறுதிப்படுத்துவதற்காகத் தனது குழுவினர் அந்த பொம்மைகளின் மாதிரிகளை வாங்கியுள்ளதாகத் தெரிவித்தார். பாதுகாப்பு அபாயங்கள்…
ஆடம்பர வாழ்க்கை வாழ்கிறார்களா அரசாங்க அதிகாரிகள்: உடனடியாக புகார் செய்வீர்
அரசாங்க அதிகாரிகள் வரவுக்கு மீறிய வாழ்க்கை வாழ்வதைக் காணும் பொதுமக்கள் அது குறித்து உடனடியாக புகார் செய்ய வேண்டுமென்று மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி), வலியுறுத்தியது. “அவர்கள் வருமானத்தை மீறிய ஆடம்பர வாழ்க்கை வாழ்வது எப்படி என்பதை எம்ஏசிசி முடிவு செய்யும். அவர்களின் சொத்துகள் சட்டப்பூர்வமாக பெறப்பட்டவைதானா …
நூர் ஜஸ்லான் : யூ.என்.எச்.சி.ஆர். திட்டத்தினால், ‘ஆவிகளாக’ அலையும் வெளிநாட்டவர்கள்
அகதிகளுக்கான ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் (யூ.என்.எச்.சி.ஆர்.) சலுகைத் திட்டங்களைத் தவறாகப் பயன்படுத்தி, நாட்டில் பல வெளிநாட்டினர் ‘ஆவிகளாக’ திரிவதைத் தடுக்க மலேசியா நோக்கம் கொண்டுள்ளது என உள்துறைத் துணை அமைச்சர் நூர் ஜஸ்லான் முகமட் கூறினார். அகதிகளும் புலம்பெயர்ந்த பலரும், தங்கள் சொந்த நாட்டின் அடையாளங்களை அழித்துவிட்டு,…
குவான் எங் : அருள் கந்தா கூறியதைப் பாஸ் புரிந்துகொண்டதா?
1எம்டிபி ‘கடன் தீர்வுத் திட்டங்கள்’ குறித்து அருள் கந்தா கந்தசாமி அளித்த விளக்கம், பாஸ் மத்திய செயலவையினருக்கு உண்மையில் விளங்கியதா என்பது தனக்கு ஆச்சரியமாக உள்ளது என லிம் குவான் எங் கூறியுள்ளார். 1எம்டிபி தொடர்பான ஜசெக-வின், குறிப்பாக, பெட்டாலிங் ஜெயா உத்தாரா எம்பி டோனி புவாவின் பல கேள்விகளுக்கு, அருள் கந்தா இன்னும்…
உலகம் உன்னை திருடன் என்கிறது, நீ புன்னகை செய்கிறாய்: அவமானம்…
அவமான உணர்வு என்பதெல்லாம் பெரும்பாலான நமது அரசாங்க அதிகாரிகளிடம் இப்போதெல்லாம் கிடையாது என்று முன்னாள் பிரதமர் மகாதிர் வருத்தப்பட்டுக் கொண்டார். அவர் யாருடைய பெயரையும் குறிப்பிடவில்லை. பேராசையால் ஆட்கொள்ளப்பட்ட இவர்கள் நன்னெறிகளை அடகுவைத்து விட்டனர் என்று அவர்களை மகாதிர் இடித்துரைத்தார். இந்தப் பேர்வழிகள் குற்றச்சாட்டுகள் மற்றம் அவர்களது…
1எம்டிபி குறித்து ஹராபானுக்கும் விளக்கமளியுங்களேன்
1எம்டிபி “சீரமைப்புத் திட்டங்கள்” குறித்து அருள் கண்ட கந்தசாமி தங்களுக்கும் விளக்கமளிக்க வேண்டும் என்று பக்கத்தான் ஹராபான் நாடாளுமன்ற உறுப்பினர்கள் விரும்புகின்றனர். நேற்று 1எம்டிபி தலைவரும் அதன் தலைமை செயல் அதிகாரியுமான அருள், பாஸ் மத்திய செயலவையுடன் வட்டமேசை கலந்துரையாடல் ஒன்றை நடத்தியிருப்பதை அடுத்து ஹராபான் இந்த வேண்டுகோளை …
மதமாற்றத் தடை நீங்கலாக, எல்ஆர்ஏ சட்டத்துக்குத் திருத்தம் கொண்டு வருவதில்…
புத்ரா ஜெயா, இவ்வாரத்திலேயே சட்டத் திருத்த (திருமணம், மணவிலக்கு)ச் சட்டத்துக்குத் திருத்தம் கொண்டு வருவதில் முனைப்புக் காட்டுகிறது. கொண்டுவரப்படவுள்ள திருத்தத்தில் குழந்தைகளை ஒருதலைப்பட்சமாக மதமாற்றம் செய்வதற்குத் தடைவிதிக்கும் பகுதி இருக்காது. திருத்தப்பட்ட சட்டமுன்வரைவை இன்று மக்களவையில் தாக்கல் செய்த பிரதமர்துறை அமைச்சர் அஸலினா ஒத்மான் அதன் இரண்டாவது, மூன்றாவது …
பிரதமர்: இசிஆர்எல் பெரும் மாற்றத்தைக் கொண்டுவரும்
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், கிழக்குக் கரை இரயில் தொடர்பு (இசிஆர்எல்) திட்டதுக்காக சீன வங்கி ஒன்றிடமிருந்து எளிய நிபந்தனைகளில் ரிம55 பில்லியன் கடன்பெறும் அரசாங்கத்தின் முடிவைத் தற்காத்துப் பேசினார். அத்திட்டத்தை சைனா கம்முனிகேஷன்ஸ் கொன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனி(சிசிசிசி)-யிடம் கொடுத்ததற்காகவும் அரசாங்கம் குறை கூறப்பட்டது. அத்திட்டத்தை சிசிசிசி-யிடம்தான் கொடுக்க வேண்டும், …
‘என்னிடம் ஊழல் இல்லை’- ஜாஹிட் அறிவிப்பு
டாக்டர் மகாதிர் முகம்மட் அவரது சொத்துகள் குறித்து கேள்வி எழுப்பியுள்ள வேளையில் துணைப் பிரதமர் அஹமட் ஜாஹிட் ஹமிடி தம்மிட ஊழல் இல்லை என்று பிரகடனம் செய்துள்ளார். உள்துறை அமைச்சருமான அவர் தம் அமைச்சிலும் ஊழல் என்பது கிடையாது என்றார். “என்னிடமும் உள்துறை அமைச்சிலும் அதன்கீழ் உள்ள அத்தனை …
நஜிப் 181 தடவை அரசாங்க ஜெட் விமானத்தில் பறந்துள்ளார்
2014க்கும் 2016க்குமிடையே, பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் மொத்தம் 181 தடவை அரசாங்க ஜெட் விமானத்தைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். நாடாளுமன்றத்தில் ஒரு கேள்விக்குப் பிரதமர்துறை அமைச்சர் அஸலினா ஒத்மான் எழுத்து வடிவில் வழங்கிய பதிலில் இத்தகவல் இடம்பெற்றிருந்தது. பிரதமருக்கு அடுத்து பேரரசசர் 89 தடவை அந்த அரசாங்க விமானத்தைப் …
ஒருதலைப்பட்ச மதமாற்ற சட்டத் திருத்தம் கைவிடப்பட்டதைப் பாஸ் பாராட்டுகிறது
ஒருதலைப்பட்ச மதமாற்றத்தைத் தடுப்பதற்காக சட்டத் திருத்தம் (திருமண மற்றும் மண விலக்கு) சட்டம் 1976 க்கு கொண்டுவரப்பட்ட திருத்தம் கைவிடப்பட்டத்திற்கு பாஸ் கட்சி பாராட்டு தெரிவித்துள்ளது. இது கைவிடப்பட்டதை நாங்கள் வரவேற்கிறோம், ஏனென்றால் இதில் சம்பந்தப்பட்டுள்ள கொள்கைகள் தேசிய பாட்வா மன்றத்திற்கு முரண்பட்டதாக இருக்கின்றன என்று பாஸ்…
இயக்குனர்: ‘டிஏபி 165’ காட்சி படத்தில் இருக்காது, நான் டிஏபி-எதிர்ப்பாளர்…
தொடர்பு, பல்லூடக அமைச்சர் சாலே சைட் கெருவாக்கின் வேண்டுகோளை ஏற்று “The Malay Regiment.” படத்திலிருந்து டிஏபி-யை இழிவுபடுத்துவதாகக் கூறப்படும் காட்சி அகற்றப்படும். அப்படத்தின் இயக்குனர் ஜுரே லத்திப் ரோஸ்லி இதைத் தெரிவித்தார். “அமைச்சரின் கருத்து கவனத்தில் கொள்ளப்படும்”, என்றவர் மலேசியாகினியிடம் தெரிவித்தார். படத்தில் ஒரு காட்சியில் “டிஏபி165” …
அமைச்சர்: படத்திலிருந்து ‘டிஏபியை இழிவுபடுத்தும் காட்சி’ நீக்கப்பட வேண்டும்
மலாய் ரெஜிமெண்ட் படத் தயாரிப்பாளர்கள் அப்படத்தில் டிஏபியை இழிவுபடுத்துவதுபோல் அமைந்துள்ள ஒரு காட்சியை நீக்க வேண்டும் என்று தொடர்பு, பல்லூடக அமைச்சர் சாலே சைட் கெருவாக் கேட்டுக்கொண்டிருக்கிறார். மலேசியாகினியிடம் பேசிய சாலே, யுடியூப்பில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள அப்படத்தின் முன்னோட்டத்தில் ஒரு காட்சியில் “டிஏபி165” என்ற எண்பட்டைக் கொண்ட ஒரு …
ஒருதலைப்பட்ச மதமாற்றத்தைத் தடுக்கும் புதுச் சட்டம் கைவிடப்பட்டது
பெற்றோர் இருவரில் ஒருவர், மற்றவரின் இணக்கமின்றி குழந்தையை மதம் மாற்றுவதைத் தடுப்பதற்காகக் கொண்டுவரப்படவிருந்த சட்டத் திருத்தத்தை புத்ரா ஜெயா மீட்டுக்கொண்டிருக்கிறது. சட்டத் திருத்த (திருமணம் மற்றும் மணவிலக்கு)ச் சட்டம் 1976-க்குக் கொண்டுவரப்படும் திருத்தத்திலிருந்து பகுதி 88ஏ நீக்கப்படுவதாக நடப்பில் சட்ட அமைச்சர் அஸலினா ஒத்மான் கூறினார். பகுதி 88ஏ …
சட்டவிரோத பாக்சைட் எடுக்கும் நடவடிக்கை: 11வது ஆள் கைது
மலேசிய ஊழல்தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி), சட்டவிரோதமாக பாக்சைட் எடுப்போருக்குத் தகவல் அளித்தார் என்று குற்றஞ்சாட்டி பகாங் நில, சுரங்க அலுவலகத்தின் பணியாளர் ஒருவரை இன்று தடுத்து வைத்தது. எம்ஏசிசி அதன் அலுவலகத்தில் வைத்து அந்த 33-வயது ஆடவரைக் கைது செய்தது. “சட்டவிரோத பாக்சைட் எடுப்போருக்கு புக்கிட் கோ-வில் நடைபெறும் …
முக்ரிஸ்: அம்னோமீது கொண்ட அன்பு சட்டமன்றக் கலைப்பைத் தடுத்தது
முக்ரிஸ் மகாதிர் அம்னோ மற்றும் பிஎன்மீது அளவற்ற பாசமும் நேசமும் கொண்டிருந்தார். அதுதான் அவர் கெடா சட்டமன்றத்தைக் கலைக்காமல் மந்திரி புசார் பதவியிலிருந்து விலகியதற்குக் காரணமாகும். அன்று மட்டும் சட்டமன்றத்தைக் கலைத்திருந்தால் அதனை அடுத்து நடைபெற்றிருக்கும் தேர்தலில் பிஎன் கெடா மாநிலத்தைப் பறிகொடுத்திருக்கும் என்றே முக்ரிஸ் கருதுகிறார். “நான் …
நீதிபதிகளின் பதவிக் காலம் நீட்டிப்பு: வழக்குரைஞர்கள் மன்றம் அதன் நிலைப்பாட்டில்…
மலேசிய தலைமை நீதிபதி ரவுஸ் ஷரீப் மற்றும் மேல்முறையீட்டு நீதிமன்ற தலைவர் சுல்கிப்ளி அஹமட் மகினுடின் ஆகியோரின் பதவிக் காலம் நீட்டிக்கப்பட்டது அரசமைப்புச் சட்டத்திர்கு முரணானது என்ற அதன் நிலைப்பாட்டில் மலேசிய வழக்குரைஞர்கள் மன்றம் (பார்) உறுதியாக இருக்கிறது. பெடரல் அரசமைப்புச் சட்டத்தில் நீதிபதிகளின் நியமனம் குறித்த…
சிலாங்கூரில் ஆட்சியைக் கைப்பற்ற ஷா அலாம்தான் சாவி
சிலாங்கூர் மாநில ஆட்சியின் அதிகார மையம் ஷா அலாம். அதனால்தான் ஷா அலாம் அம்னோ தொகுதியின் பேராளர் கூட்டத்தை இன்று அவர் தொடங்கி வைக்க முடிவு எடுத்தது ஓர் அரசியல் செய்தி அனுப்புவதை நோக்கமாகக் கொண்டது என்று நஜிப் கூறுகிறார். "ஷா அலாம் சிலாங்கூர் நிருவாகத்தின் மையம்.…
மலாக்கா பிஎன் சட்டமன்ற தேர்தல் வேட்பாளர்கள் அனைவரும் புதுமுகங்கள்
அடுத்து வரும் 14 ஆவது பொதுத் தேர்தலில், மலாக்கா சட்டமன்ற தேர்தலுக்கான அனைத்து பாரிசான் நேசனல் வேட்பாளர்களும் புதுமுகங்களாக இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய சட்டமன்ற உறுப்பினர்களில் பலர் அடுத்த பொதுத் தேர்தலில் தங்களுடைய இருக்கைகளைத் தற்காத்துக் கொள்ள விருப்பமற்றவர்களாக இருக்கிறார். இதன் அடிப்படையில் இந்த முடிவு…
“தலைமை நீதிபதியாக நான் நியமிக்கப்பட்டது முன்னோடி இல்லாதது, ஆனால் அரசமைப்புச்…
புதிதாக-மறுபடியும் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள முகமட் ரவுஸ் ஷாரிப் தமது மறுநியமனம் "முன்னோடி இல்லாதது", ஆனால் அது அரசமைப்புச் சட்டப்பூர்வமானது என்று கூறிக்கொண்டார். "ஆம். எங்களைப் பொறுத்தவரையில் (எங்கள் நியமனங்கள் அரசமைப்புச் சட்டப்பூர்வமானது) ... ஆனால் நிச்சயமாக, இது முன்னோடி இல்லாதது", என்று அவர் புத்ராஜெயாவில் ஒரு செய்தியாளர்…
வேலையிழப்பு காப்பீட்டுத் திட்ட மசோதாவை அமைச்சரவை ஒத்திவைத்தது
வேலையிழப்பு காப்பீட்டுத் திட்டம் 2017 (இ.ஐ.எஸ்.) மசோதா விவாதத்தை அமைச்சரவை நேற்று ஒத்தி வைத்தது. பங்குதாரர்களின் நலனையும் கருத்தில்கொள்ள வேண்டியுள்ளது என, நேற்று அமைச்சரவைக் கூடியபோது, சில அமைச்சர்கள் கவலை தெரிவித்ததாக ஆதாரங்கள் கூறுகின்றன. இ.ஐ.எஸ். மசோதாவின் இரண்டாம் வாசிப்பு, அக்டோபர் நாடாளுமன்ற அமர்வுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதை இரண்டாம்…
கட்கோ நிலம் எங்களுடையது- தாமரை ஹோல்டிங்ஸ்
கம்போங் கட்கோ பிரச்னையில் குடியிருப்பாளர்கள் முன்வைத்துள்ள பல கோரிக்கைகளுக்குத் தாமரை ஹோல்டிங்ஸ் பதலளித்துள்ளது. நேற்று மலேசியாகினியுடனான நேர்காணலில், தாமரை ஹோல்டிங்ஸ் சர்ச்சைக்குரிய நிலம் தன்னுடையது என்று அழுத்தமாக வலியுறுத்தியது. “நிலத்தின் சொந்தக்காரரே திருடுகிறார் என்றால் எப்படி?”, என லோட்டஸ் குழும தலைமை நடவடிக்கை அதிகாரி இராமலிங்கம் வினவினார். லோட்டஸ் …
பிகேஆரின் ஸ்ரீமூடா தொகுதிக்குக் குறி வைக்கிறது பிஎஸ்எம்
பார்டி சோசியலிஸ் மலேசியாவின் வேட்பாளர்களில் ஒருவர் என்று கருதப்படும் அப்துல் ரசாக் இஸ்மாயில், சிலாங்கூர் ஸ்ரீமூடா சட்டமன்றத் தொகுதியில் களமிறங்க ஆர்வம் கொண்டிருக்கிறார். ஸ்ரீமூடா பல்முனைப் போட்டிக்குரிய தொகுதியாக விளங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்துல் ரசாக் பல்முனை போட்டியைக் கண்டு கலங்கவில்லை. அங்கு முன்னாள் பக்கத்தான் ஹராபான் சகாக்களை …
முகம்மட் ரவுஸ் தலைமை நீதிபதியாக பதவியேற்றார்
நேற்றிரவு முகம்மட் ரவுஸ் ஷரிப் நாட்டின் தலைமை நீதிபதியாக பதவி உறுதிமொழி எடுத்துக் கொண்டார். கோலாலும்பூர், இஸ்தானா நெகாராவில், பேரரசர் சுல்தான் ஐந்தாம் முகம்மட்டிடமிருந்து பதவி ஆவணங்களை அவர் பெற்றுக்கொண்டார். பதவியேற்பு நிகழ்வுக்குப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், பிரதமர்துறை அமைச்சர் அஸலினா ஒத்மான் சைட், முறையீட்டு நீதிமன்ற …


