அரசு அமைச்சகங்கள், முகமைகள், சட்டப்பூர்வ அமைப்புகள் மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களின் (GLC) ஊழியர்கள் ஏப்ரல் 15 முதல் வீட்டிலிருந்தே வேலை செய்ய அனுமதிக்கப்படுவார்கள். "அமைச்சகங்கள், முகமைகள், சட்டப்பூர்வ அமைப்புகள் மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களில் (GLCs) பணிபுரியும் குறிப்பிட்ட பிரிவினருக்கான 'வீட்டிலிருந்தே பணிபுரியும்' (WFH) ஏற்பாட்டை ஏப்ரல்…
சுப்ரா: ஸக்கீரின் சமயச்சொற்பொழிவு பிரிவினைச் சக்திகளை தூண்டிவிடுகிறது, ஒற்றுமையைக் கெடுக்கிறது
இஸ்லாமிய சமயச்சொற்பொழிவாளர் ஸக்கீர் நாய்க்கை மலேசியாவுக்கு ஒரு "தவிர்க்கக்கூடிய குழப்பம்" என்று வர்ணித்ததோடு அவர் நாட்டின் ஒற்றுமையை கீழறுக்கூடும் என்று சுகாதார அமைச்சர் டாக்டர் எஸ். சுப்ரமணியம் எச்சரித்தார். "மலேசியாவின் இஸ்லாமிய அடித்தளம் அல்லது அதன் பலசமய தேசிய நயம் ஸக்கீர் நாய்க்கின் சமய போதனையால் நிச்சயமாக…
மக்ரிப் தொழுகைக்காக கடை மூடுதல் முஸ்லிம் அல்லாதவர்களைப் பாதிக்காது என்கிறார்…
மக்ரிப் தொழுகைக்காக சிறிது நேரத்திற்கு வியாபாரத்தை மூடக் கோரும் விதி முஸ்லிம்களுக்கு மட்டுமே என்று கிளந்தான் ஆட்சிக்குழு உறுப்பினர் அப்துல் ஃபாட்டா முகமட் கூறுகிறார். இதை அனைவரும் புரிந்து கொண்டுள்ளனர், சாலோர் சட்டமன்ற உறுப்பினர் ஹுசாம் மூசாவைத் தவிர என்று அப்துல் ஃபாட்டா இன்று தொடர்பு கொண்ட…
மக்ரிப் தொழுகையின்போது கடைகளை மூட வேண்டும் என்ற விதி பசார்…
மக்ரிப் தொழுகைக்காக வியாபார நடவடிக்கைகளை நிறுத்தி வைக்க வேண்டும் என்ற சட்டவிதி பசார் மாலம் வியாபாரிகளுக்கு மட்டுமே பொருந்தும் மற்ற கடைக்காரர்கள் அதைப் பின்பற்ற வேண்டியதில்லை என்று கிளந்தான் அரசாங்கம் விளக்கமளித்துளது. கிளந்தானில் பசார் மால ம் வியாபாரிகள் அத்தனை பேரும் முஸ்லிம்கள் என்று ஊராட்சிக்குப் பொறுப்பாக …
எக்ஸ்கோ: 2008-இலிருந்து சிலாங்கூருக்கு கூட்டரசு நிதி இல்லை
ஊராட்சி அமைப்புகளின் நிர்வாகத்தில் உள்ள பிஎன் தோற்றுப்போன நாடாளுமன்ற தொகுதிகளில் மேற்கொள்ளப்படும் அரசாங்கத் திட்டங்களை நிறுத்தி வைக்க ஊராட்சி, நகர்ப்புற நல்வாழ்வு அமைச்சு எடுத்துள்ள முடிவு சிலாங்கூரில் பெரிய தாக்கத்தை உண்டு பண்ணாது. ஏனென்றால், அம்மாநிலம் 2008-இலிருந்து கூட்டரசு நிதி என்று எதையும் பெற்றதில்லை என சிலாங்கூரில் ஊராட்சிக்குப் …
பிபிஆர்: சட்டப்படி சரியான முகவரிதான் கொடுக்கப்பட்டுள்ளது
பார்டி பேபாஸ் ரசுவா (பிபிஆர்), அக்கட்சியின் தலைமையகத்துக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் முகவரி பொய்யானது என்று சங்கப் பதிவக தலைமைச் செயலாளர் முகம்மட் ரசின் அப்துல்லா கூறியதாக சொல்லப்படுவதை மறுத்துள்ளது. கட்சித் தலைமையக முகவரி என்று பதிவான இடத்தில் ஓடுகளையும் பதிகல்களையும் விற்பனை செய்யும் கடை செயல்பட்டு வருவதாக ரசின் கூறியதாகவும் …
பாகாங் அரசுக்கு எதிராக 100 விவசாயிகள் குந்தியிருப்புப் போராட்டம்
மே 23இல், கேமரன் மலையில் காய்கறி பயிர் செய்யும் 100 பேர், பாகாங் அரசு தங்களுக்கு நிரந்தர நிலாப் பட்டாக்கள் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து குவாந்தானில், விஸ்மா ஸ்ரீபாகாங்கில் குந்தியிருப்புப் போராட்டம் நடத்துவர். “வெற்று வாக்குறுதிகளில் எங்களுக்கு அக்கறை இல்லை. பத்தாண்டுகளாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம், …
இந்தோனேசிய முஸ்லிம் வேட்பாளர் ஜாக்கர்த்தா தேர்தலில் வெற்றி பெற்றார்
ஜாக்கர்த்தா கவர்னர் பதவிக்கான தேர்தலில் முன்னாள் இந்தோனேசிய கல்வி அமைச்சர் எனியஸ் பாஸ்விடான் 58 விழுக்காடு வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார் என்று அதிகாரப்பூர்வமற்ற கணிப்பு கூறுகிறாது. அவருக்கு எதிராகப் போட்டியிட்ட பாஸுக்கி டிஜாஹாஜா பூர்ணமா, அவரது சீன செல்லப் பெயர் "அஹோக்", 42 விழுக்காடு வாக்குகளைப்…
தொழிலாளர்களின் உரிமைகளை வலியுறுத்தும் மே தினப் பேரணிக்கு திட்டமிடப்பட்டுள்ளது
மே தினம் உலகத் தொழிலாளர்களின் உரிமைகளைப் பறைசாற்றும் நாள். எதிர்வரும் மே தினத்தன்று கோலாலம்பூரிலுள்ள கேடிஎம்பி தலைமையகத்திலிருந்து புக்கிட் பிந்தாங்கிற்கு மே தின பேரணி நடத்துவதற்கு பல அரசுசார்பற்ற அமைப்புகள் திட்டமிட்டுள்ளன. திட்டமிடப்பட்டுள்ள இப்பேரணியின் கருப்பொருள் "ஆள்குறைப்பு தொழிலாளர்களைத் துன்பத்தில் ஆழ்த்துகிறது: தொழிலாளர்கள் ஆள்குறைப்பு (இன்சூரன்ஸ்) திட்டம்…
பினாங்கில் மூன்று விளிம்புநிலை தொகுதிகளுக்கு பெர்சத்து குறி
பார்டி பிரிபூமி பெர்சத்து மலேசியா(பெர்சத்து), பினாங்கில் கப்பலா பத்தாஸ், தாசெக் குளுகோர், பாலேக் பூலாவ் ஆகிய மூன்று நாடாளுமன்றத் தொகுதிகள்மீது கண் வைத்துள்ளது. அத்தொகுதிகள் இப்போது அம்னோ வசமுள்ளன. ஆனால், அத்தொகுதிகளில் அம்னோ வலுவாக இல்லை என்று கூறிய பினாங்கு பெர்சத்து தலைவர் மர்சுகி யஹயா, அத் தொகுதிகளில் …
பரிசோதனை செய்யப்பட்ட 23,583 மாணவர்களில் 825 பேர் போதைப் பொருள்…
இவ்வாண்டின் முதல் காலாண்டில் இடைநிலைப் பள்ளி மாணவர்கள் 23,583 பேரிடம் சோதனை செய்ததில் அவர்களில் 825 பேர் போதைப் பொருள் உட்கொள்வது தெரிய வந்ததாக உள்துறை துணை அமைச்சர் நூர் ஜஸ்லான் முகம்மட் கூறினார். அவர்களில் சிலர் போதைப்பொருள்களை விற்பனை செய்தும் வருகிறார்கள். “அவர்களைப் பிடிப்போம். பள்ளீகளில் போதைப்பொருள் …
பெர்சத்து நிறுவன உறுப்பினர் விலகல்
பார்டி பிரிபூமி பெர்சத்து மலேசியா (பெர்சத்து) கட்சியை நிறுவியர்களில் ஒருவர் இன்று அதிலிருந்து விலகுவதாக அறிவித்தார். கமருல்சமான் ஹபிபுர் ரஹ்மான் பெர்சத்து உச்சமன்ற உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் மற்ற பதவிகளிலிருந்தும் விலகிக்கொண்டிருக்கிறார். “நெகிரி செம்பிலான் தொடர்புக்குழுத் தலைவர் பொறுப்பு எனக்கு வேண்டாம். மத்திய நிலையில் ஏற்பாட்டுக்குழுச் செயலாளர் பதவியிலிருந்தும் விலகிக் …
நஜிப் உயர் பண்புகள் குறித்து பேசுவதைக் கேட்க வேடிக்கையாக உள்ளது:…
மலேசியர்கள் உயர் பண்பாளர்களாக திகழ வேண்டும் அப்போதுதான் உலகம் மலேசியாவை மதிக்கும் என்று பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கூறுவதைக் கேட்கும்போது சிரிப்புத்தான் வருகிறது என்கிறார் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட். 1எம்டிபி மோசடியைச் சுட்டிக்காட்டிய அவர், நஜிப் நல்ல தலைவராக இருந்து வழிகாட்டத் தவறிவிட்டார் என்றும் …
‘மலாய்க்காரர்களைப் பிளவுபடுத்தியது நீங்களே’- மகாதிருக்கு பாஸ் பதிலடி
பாஸ்தான் மலாய்க்காரர்களைப் பிளவுபடுத்தியது என்று கூறும் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் அவ்வாறு குற்றம் சாட்டுவதற்கு முன்பு தம்மை ஒருமுறை கண்ணாடியில் பார்த்துக் கொள்வது நல்லது என பாஸ் உதவித் தலைவர் இட்ரிஸ் அஹமட் சாடினார். மகாதிர் பிரதமராக இருந்த 22-ஆண்டுக் காலத்தில் மலாய் சமூகத்தைப் பிளவு …
சித்தி காசிம்: இந்தியர்கள் இங்கு நாடற்றவர்களாக இருக்கையில், ஸக்கீருக்கு ஏன்…
சமயப் போதகர் ஸக்கீருக்கு நிரந்தர தங்கும் தகுதி (பிஆர்) வழங்கியதற்காக வழக்குரைஞர் சித்தி காசிம் அரசாங்கத்தைச் சாடியுள்ளார். பல்லாண்டுகளாக இந்நாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கும் 300,000 இந்தியர்களுக்கு குடியுரிமை வழங்கப்படவில்லை என்று அவர் ஃபிரி மலேசியாவிடம் கூறினார். அந்த 300,000 இந்தியர்களுக்கு பிஆர் தகுதி மட்டுமே இருக்கிறது. அப்படி…
எஸ்ஆர்சி தொடர்புடைய நிதியிலிருந்து பணம் பெற்ற 17 பேர் யார்?,…
1எம்டிபியின் முன்னாள் துணை நிறுவனமான எஸ்ஆர்சியிடமிருந்து பணம் பெற்றதாகக் கூறப்படும் அந்த 17 பேரும் யார் என்று பிகேஆர் உதவித் தலைவர் ரஃபிஸி கேள்வி எழுப்பியுள்ளார். சட்டத்துறை தலைவர் முகமட் அப்பாண்டி அலி வெளியிட்ட பிதமர் நஜிப் தவறு ஏதும் செய்யவில்லை என்று கூறும் ஆவணத்தின் அடிப்படையில்…
ஸக்கீருக்கு எதிரான இண்டர்போல் சிவப்பு நோட்டீஸ், அவசரப்படப் போவதில்லை என்று…
இஸ்லாமிய சமயப் போதகர் ஸக்கீருக்கு எதிராக இண்டர்போல் சிவப்பு நோட்டீஸ் வெளியிடுவது பற்றி இந்தியா ஆலோசித்து வருவது பற்றி கருத்துரைத்த மலேசிய போலீஸ் படைத் தலைவர் காலிட் அபு பாகார், "நாங்கள் அவசரப்படப் போவதில்லை, அது நடக்கும் வரையில் நாங்கள் காத்திருப்போம்", என்றார். ஸக்கீர் அவரது பேச்சின்…
‘ஆர்ஓஎஸ் ஆவணத்தின்படி இஸாம்தான் நியு ஜெனரேசன் கட்சித் தலைவர்’
சங்கப் பதிவக(ஆர்ஓஎஸ்) த்தின் அதிகாரப்பூர்வ ஆவணங்களின்படி இஸாம் முகம்மட் நூர்தான் நியு ஜெனரேசன் கட்சியின் அங்கீகரிக்கப்பட்ட தலைவர் என்கிறார் அக்கட்சியின் தலைமைச் செயலாளர் எஸ்.கோபி கிருஷ்ணன். இஸாம் கட்சித் தலைவர் என்று அறிவிக்கப்பட்டதற்கு தலைவர் ஜி.குமார் அம்மானும் கட்சி உறுப்பினர் சிலரும் நேற்று கண்டனம் தெரிவித்ததை அடுத்து கோபி …
‘திரிசங்கு சொர்க்க நிலையில் தத்தளிக்கும் மருத்துவப் பட்டதாரிகள்’
மருத்துவப் பட்டதாரிகள், மருத்துவமனைகளில் வேலைக்கு அமர்த்தப்படுவது குறித்து பொதுச் சேவை ஆணையம் இதுவரை எந்த அறிவிப்பும் செய்யாமலிருப்பதால் திரிசங்கு சொர்க்க நிலையில் விடப்பட்டதுபோல் தத்தளிக்கிறார்கள் என கூலாய் எம்பி தியொ நை மிங் கூறினார். நேற்று அறிவித்திருக்க வேண்டும். ஆனால், திடீரென்று தள்ளிப்போட்டு விட்டார்கள் என்றாரவர். “மருத்துவப் பட்டதாரிகளில் …
ஜாஹிட்: ஸாகிர் நாய்க் நிரந்தர வசிப்பிடத் தகுதி கொண்டவர்
இஸ்லாமிய சமய போதகர் டாக்டர் ஸாஹிர் நாய்க் நிரந்தர வசிப்பிடத் தகுதி வைத்துள்ளார். இதனைத் துணைப் பிரதமர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி இன்று புத்ரா ஜெயாவில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். “அவர் மலேசிய நிரந்தர வசிப்பிடத் தகுதி வைத்திருக்கிறார் என்பதை உறுதிப்படுத்த விரும்புகிறேன். ஆனால் அவர் மலேசியக் குடிமகன் அல்ல.…
ஹாடியின் மகன் பாஸ் இளைஞர் தலைவராக போட்டியின்றித் தேர்வு
பாஸ் கட்சித் தலைவர் அப்துல் ஹாடி ஆவாங்கின் மகன் முகம்மட் காலில் அப்துல் ஹாடி பாஸ் இளைஞர் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். காலஞ்சென்ற பாஸ் ஆன்மிகத் தலைவர் நிக் அப்துல் அசிஸின் மகன் நிக் முகம்மட் அப்டு நிக் அப்துல் அசிஸின் இடத்துக்கு காலில் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். அதுவும் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டார். …
மக்ரிப் தொழுகைக்காக கடைகளை அடைக்கும் கருத்தை ஆதரித்தாவர்தான் ஹுஸாம்
இப்போது பார்டி அமனா நெகாரா (அமனா) உதவித் தலைவராகவுள்ள ஹுஸாம் மூசா முன்பு கிளந்தான் ஆட்சிக்குழுவில் இருந்தபோது மக்ரிப் (சூரிய அஸ்தமனத்துக்குப் பிந்திய) தொழுகைக்காக கடைகளை அடைக்கலாம் என்ற கருத்தை ஆதரித்தவர்தான் என கிளந்தான் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் அப்துல் பாத்தா மஹ்மூட் கூறினார். மக்ரிப் தொழுகைக்காக கடைகள் …
மகாதிர்: பாஸ்தான் மலாய்க்காரர்கள் மற்றும் முஸ்லிம்களைப் பிளவுபடுத்தி வைத்துள்ளது
நாட்டில் மலாய்க்காரர்கள் மற்றும் முஸ்லிம்களிடையே சீர்படுத்த முடியாத அளவுக்குப் பிளவை ஏற்படுத்தியது இஸ்லாமிய கட்சியான பாஸ்தான். அக்கட்சி தேர்தலில் தனித்துப் போட்டியிட்டால் அதற்கு வாக்குகள் கிடைக்காது. இவ்வாறு முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் நேற்றிரவு அவரது வலைப்பதிவில் கூறியிருந்தார். எதிர்க்கட்சிகளுடன் ஒத்துழைப்பதில்லை என்றும் வெல்ல முடியாத இடங்களிலும் …
அரசாங்கம் வழங்கும் உரம் தரமற்றது – விவசாயிகள் குமுறல்!
ஈப்போ, சிமோர், கந்தானைச் சேர்ந்த விவசாயிகள் சுமார் 20 பேர் நேற்று காலை (17.04.2017), கிந்தா விவசாய இலாகா அலுவலகத்தின் முன் மறியலில் ஈடுபட்டனர். 2014 முதல், கிந்தா விவசாய இலாகாவினால் மானியமாக வழங்கப்படும் உரம் , தங்களின் விவசாயத்திற்கு ஏற்புடையதாக இல்லை என அவர்கள் குற்றம் சாட்டினர்.…


