ஈரான் தூதர் வலியுல்லா முகமதி நஸ்ராபாதி அளித்த தகவலின்படி, ஹார்முஸ் நீரிணையில் சிக்கியுள்ள எஞ்சிய ஆறு மலேசியக் கப்பல்களும் அந்த நீர்வழியை கடக்க படிப்படியாக அனுமதிக்கப்படும். "ஈரான் அந்தக் கப்பல்களை ஒவ்வொன்றாக கடந்து செல்ல அனுமதிப்போம்," என்று இன்று இங்கு நடைபெற்ற 'கோலாலம்பூர்-அங்காரா உரையாடல் 2026' நிகழ்வின் ஒரு…
துவான் இப்ராகிம்: சட்டம் 355 திருத்தங்கள், பெர்சத்துவுக்குச் சம்மதமே
1965 ஷியாரியா நீதிமன்ற (குற்றவியல் நீதி) ச் சட்டத்துக்குத் திருத்தங்கள் கொண்டுவரப்படுவதை பார்டி பிரிபூமி பெர்சத்து மலேசியா(பெர்சத்து) ஏற்பதாக பாஸ் துணைத் தலைவர் துவான் இப்ராகிம் துவான் மான் கூறினார். இரு கட்சிகளும் அண்மையில் அவ்விவகாரம் குறித்து விவாதித்ததாகவும் பெர்சத்து தலைவர் முகைதின் யாசின் அதற்கு இணக்கம் தெரிவித்தார் …
1எம்டிபிமீதான நஸ்ரி-மகாதிர் விவாதத்துக்கும் அரசாங்கத்துக்கும் சம்பந்தமில்லை
சுற்றுலா, பண்பாட்டு அமைச்சர் நஸ்ரி அப்துல் அசிசுக்கும் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட்டுக்குமிடையில் திட்டமிடப்பட்டுள்ள விவாதத்துக்கும் அரசாங்கத்துக்கும் “சம்பந்தமில்லை” என இரண்டாவது நிதி அமைச்சர் ஜொஹாரி அப்துல் கனி இன்று கூறினார். நிதி அமைச்சின்கீழ் உள்ள 1மலேசியா மேம்பாட்டு நிறுவன விவகாரங்கள் குறித்து அவ்விருவரும் விவாதமிடுவதை அவர் …
கிளந்தான் நாடாளுமன்ற தொகுதிகளை விட்டுக் கொடுக்க மாட்டோம், பிகேஆர் கூறுகிறது
கிளந்தானில் பிகேஆர் போட்டியிட்ட நாடாளுமன்ற தொகுதிகளை விட்டுக் கொடுக்க மாட்டோம் என்று கிளந்தான் பிகேஆர் கூறுகிறது. பிகேஆர் போட்டியிட்ட அத்தொகுதிகளை அதனிடம் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று பாஸ் கேட்டுக் கொண்டுயுள்ளது. அடுத்து வரவிருக்கும் பொதுத் தேர்தலில் பாஸ் கட்சி கடந்த பொதுத் தேர்தலில் போட்டியிட்ட தொகுதிகளில்…
பிரதமர்: வட கொரிய நெருக்கடியை எதிர்நோக்குவதில் மலேசியர்கள் ஒன்றுபட்டிருக்க வேண்டும்
எதிரணி உள்பட எல்லாத் தரப்பினரும் வட கொரிய நெருக்கடிக்குத் தீர்வு காணும் அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு ஒன்றுபட்ட ஆதரவை வழங்க வேண்டும் என்று பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கேட்டுக்கொண்டிருக்கிறார். வெளி அச்சுருத்தலை எதிர்நோக்கும்போது மக்கள் வெளிப்படுத்தும் ஒற்றுமையை வைத்துத்தான் ஒரு நாட்டின் வலிமை கணிக்கப்படுகிறது. “பிரச்னைகளை அல்லது மருட்டலை …
பாதிரியாரை விரைவில் கண்டுபிடிப்பீர்: நஜிப்புக்கு உலக தேவாலய மன்றம் கோரிக்கை
ஜினிவாவில் அமைந்துள்ள உலக தேவாலய மன்றம், கடத்தப்பட்ட பாதிரியார் ரேய்மண்ட் கோ-வைக் கண்டுபிடிக்க விரைந்து செயல்பட வேண்டுமாய் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கைக் கேட்டுக்கொண்டிருக்கிறது. புதன்கிழமை அம்மன்றத்தின் பொதுச் செயலர் ஒலாவ் பிக்ஸே ட்வைட் எழுதிய திறந்த மடலில் அக்கடத்தல் சம்பவம் மிகுந்த “கவலையைக் கொடுத்திருப்பதாக”வும் அது சிறுபான்மை …
எம்ஏசிசி விசாரணையில் ஜோகூர் அரண்மனை குறுக்கிடாது
ஜோகூர் மாநிலத்தில் மலேசிய ஊழல்தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) மேற்கொண்டுள்ள எந்தவொரு விசாரணையிலும் அரண்மனை தலையீடு இருக்காது என்கிறார் ஜோகூர் ஆட்சியாளர் சுல்தான் இப்ராகிம் இஸ்கண்டார். “இப்படிப்பட்ட விவகாரங்களில் அரண்மனை குறுக்கிடுவதுமில்லை, யாரையும் பாதுகாப்பதுமில்லை”, என சுல்தான் இப்ராகிம் கூறியதாக த ஸ்டார் அறிவித்துள்ளது. ஜோகூரில் எம்ஏசிசி செய்துவரும் விசாரணைகள் …
அமனா: எக்ஸ்கோவை பிடித்தது சரி, ‘காட்பாதரை’ யும் விட்டுவிடக் கூடாது
ஊழல் புரிந்ததற்காக ஜோகூர் ஆட்சிக்குழு உறுப்பினர் அப்துல் லத்திப் பாண்டியைக் கைது செய்த அதிகாரிகளைப் பாராட்டிய பார்டி அமனா நெகரா(அமனா), அடுத்து அவரின் ‘காட்பாதரையும்’ விட்டுவிடக்கூடாது, அவருக்கும் அவ்விவகாரத்தில் தொடர்பு இருக்கலாம் என்று கூறியது. குறிப்பாக, ஜோகூர் மந்திரி புசார் காலிட் நோர்டின் ஆட்சியில்தான் அது நடந்துள்ளது என்பதால் …
தியன் சுவா சட்ட நடவடிக்கைகள் முடியும் வரையில் எம்பியாக இருப்பார்,…
பத்து நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் தியன் சுவா அவர் குற்றவாளி என அளிக்கப்பட்ட தீர்ப்பு சம்பந்தமான வழக்கு முடிவடையும் வரையில் தொடர்ந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியாக இருப்பார். ஒரு போலீஸ் அதிகாரியை அவமதித்ததற்காக தியன் சுவாவுக்கு பெட்டாலிங் ஜெயா செசன்ஸ் நீதிமன்றம் இன்று ரிம3,000 அபராதம் விதித்தது. இது…
தமிழ் உணர்வாளர் பொன்முகம் காலமானார்
மஇகாவில் தொடங்கி ஜனநாயகச் செயல் கட்சி வரையில் சென்று பொதுத் தேர்தலில் சுங்கை சிப்புட் நாடாளுமன்றத்தில் தொகுதியில் போட்டியிட்டவரும், தமிழ்ப்பற்று மிகுந்தவருமான வழக்குரைஞர் பொன்முகம் நேற்று தனது 78 ஆவது வயதில் காலமானார். நேற்று காலையில் அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால் பல்கலைக்கழக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு…
ஐநா பணியாளர்களான மலேசியர் இருவர் வட கொரியாவிலிருந்து வெளியேறினர்
வட கொரியாவின் பயணத் தடையைத் தொடர்ந்து அங்கு சிக்கிக்கொண்ட 11 மலேசியர்களில் ஐநா பணியாளர்களான இருவர், அந்நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி கூறுகிறது. அவ்விருவரும் ஐநாவின் உலக உணவுத் திட்டப் பணியாளர்கள். செவ்வாய்க்கிழமை வட கொரியா மலேசியர்களுக்குத் தடை விதிப்பை அறிவித்ததை அடுத்து பிரதமர் நஜிப் அப்துல்…
குவான் எங்: இப்போது ஒன்றுபட்டிருப்பது முக்கியம், அரசாங்கம் செய்தது சரியா,…
வட கொரிய “பிணை” நெருக்கடியைக் கையாள்வதில் அனைத்துத் தரப்பினரும் ஒன்றுபட்டுச் செயல்பட வேண்டும் என பினாங்கு முதல்வர் லிம் குவான் எங் கேட்டுக்கொண்டார். பியோங்யாங்கில் பாரிதவிக்கும் 11 மலேசியர்களும் “விரைவில் நாடு திரும்புவார்கள்” என்று எதிர்பார்ப்பதாக லிம் குறிப்பிட்டார். “இப்போது நாம் அனைவரும் ஒன்றுபட்டிருக்க வேண்டும். அவர்கள் திரும்பிய…
வீடமைப்பு ஊழல்: ஜோகூர் எக்ஸ்கோ கைது
வீடமைப்பு, நில ஊழல் தொடர்பில் ஜோகூர் ஆட்சிமன்ற உறுப்பினர் அப்துல் லத்திப் பாண்டி இன்று கைது செய்யப்பட்டார். ஜோகூர் பாருவில் உள்ள மலேசிய ஊழல்தடுப்பு ஆணைய(எம்ஏசிசி) அலுவலகத்துக்கு விசாரணைக்காக சென்றபோது அவர் கைது செய்யப்பட்டதாக ஸ்டார் ஆன்லைன் கூறிற்று. அவர் கைதானதை இன்று பெட்டாலிங் ஜெயாவில் த ஸ்டார்…
ரிம12,000 வருமானம் பெறுவோர்கூட பிரிம் தொகைக்கு விண்ணப்பம் செய்தனர்
இவ்வாண்டு பந்துவான் ரக்யாட் 1மலேசியா(பிரிம்) உதவிக்கு விண்ணப்பம் செய்திருந்த 600,000 பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. ஏனென்றால் அவர்கள் வருமானம் ரிம4,000-த்துக்கும் அதிகமாகும். மாதம் ரிம8,000-இலிருந்து ரிம12,000 வரை வருமானம் பெறுவோர்கூட உதவி கேட்டு மனுச் செய்திருந்தார்கள் என நிதி அமைச்சர் II ஜொஹாரி அப்துல் கனி இன்று தெரிவித்தார்.…
புத்ரா ஜெயா: வட கொரியர் கொலை மீதான விசாரணை முடிய…
வட கொரிய அதிபர் கிம் ஜொங் நாம் கொலை விவகாரம் சட்டென்று முடிவுக்கு வரப் போவதில்லை அதற்கு “நாம் எதிர்பார்ப்பதைவிட நீண்ட காலமாகும்” என மலேசியா எச்சரித்துள்ளாது. விசாரணை முடிந்த பிறகுதான் அனைத்துலக நடவடிக்கை பற்றி ஆலோசிக்க முடியும் என்று பியோங்யாங்கின் நட்புநாடான சீனா கூறியிருப்பதுதான் இதற்குக் காரணமாகும்.…
வட கொரியாவுடனான ராஜதந்திர நெருக்கடியைப் பயன்படுத்தி அரசியல் இலாபம் தேடாதீர்,…
அரசியல் இலாபத்திற்காக மலேசியா மற்றும் வட கொரியாவுக்கு இடையிலான சச்சரவைப் பயன்படுத்தக்கூடாது என்று பெர்சத்துவின் தலைவர் முகைதின் யாசின் கூறுகிறார். தங்களுடைய சொந்த அரசியல் திட்டங்களுக்காக இந்த ராஜதந்திர சச்சரவை அனைத்து அரசியல் கட்சிகளும் பயன்படுத்தமாட்டார்கள் என்று தாம் நம்புவதாக முகைதின் இன்று பெட்டாலிங் ஜெயாவில் ஒரு…
பிரதமர்: வட கொரியாவில் மலேசியர்கள் காவலில் வைக்கப்படவில்லை
வட கொரியாவில் உள்ள 11 மலேசியர்களும் தடுத்து வைக்கப்படவில்லை என்பதை பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் வலியுறுத்தியுள்ளார். “அவர்கள் அவர்களின் அன்றாட வாழ்க்கையை மேற்கொள்ள எந்தத் தடையுமில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் தடுத்து வைக்கப்படவில்லை. “அவர்கள் (வீட்டைவிட்டு) வெளியில் சென்று வழக்கமான காரியங்களில் ஈடுபட முடிகிறது. “ஆக, அவர்களின்…
பாதிரியார் கடத்தல் விவகாரம் அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டது
பாதிரியார் ரேய்மண்ட் கோ கடத்தப்பட்ட விவகாரம் அரசாங்கத்தின் கவனத்தில் இருக்கவே செய்கிறது. இதைத் தெரிவித்த மசீச துணைத் தலைவர் வீ கா சியோங், அவரின் குடும்பத்தாரைச் சந்திக்க அரசாங்கம் ஓர் அமைச்சரை அனுப்பியது என்றார். “அமைச்சரவை அவர் காணாமல்போனது குறித்து விவாதித்ததுடன் பிரதமர்துறை அமைச்சர் ஜோசப் குருப் பாதிரியாரின்…
நஜிப்: 2020 தூரநோக்கு தோல்வி அடையவில்லை…ஆனால்
தூரநோக்கு 2020 தோல்வி அடையவில்லை என்று பிரதமர் நஜிப் நாடாளுமன்றத்தில் கூறினார். "நாம் தோல்வி அடையவில்லை என்பது உண்மை, ஆனால் அதில் பலவீனங்கள் பல இருக்கின்றன என்பதை நாம் ஒப்புக்கொள்ள வேண்டும்", என்று அவர் நாடாளுமன்றத்தில் கூறினார். தூரநோக்கு 2020ஐ உருவாக்கியவர் முன்னாள் பிரதமர் மகாதிர் முகமட்.…
பிரதமர்: ‘பிணையாளிகளை’ விடுவிக்க வேண்டியுள்ளது, அதனால் மலேசியா உறவுகளைத் துண்டிக்காது
வட கொரியாவிலிருந்து வெளியேறத் தடை விதிக்கப்பட்ட மலேசியர்களை விடுவிக்க வேண்டியிருப்பதால் மலேசியா அந்நாட்டுடன் உறவுகளைத் துண்டித்துக் கொள்ளாது எனப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கூறினார். “நாம் அவர்களுடன் நட்புகொண்டுள்ள ஒரு நாடு.......அந்த உறவை வைத்திருக்க வேண்டும், அதுதான் பேச்சு நடத்துவதற்கு வகை செய்யும்”, என நஜிப் நாடாளுமன்றத்தில்…
சிறு வணிகர்கள் பிரிம் உதவி பெற வங்கிக் கணக்கைக் காட்ட…
மலேசிய நிறுவன ஆணைய(எஸ்எஸ்எம்)த்தில் பதிவுபெற்று சிறு வணிகத்தில் ஈடுபடுவோர் பந்துவான் ரக்யாட் மலேசியா (பிரிம்) உதவித் தொகைக்குச் செய்து கொள்ளும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுவதாகக் கூறப்படுவதை நிதி அமைச்சர் II ஜோஹாரி அப்துல் கனி மறுத்தார். “சிலர் அவர்களின் பிரிம் மனுக்கள் நிராகரிக்கப்பட்டதாகக் குறைப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவை நிராகரிக்கப்படவில்லை, அவர்களிடமிருந்து…
வட கொரிய தூதரக அதிகாரிகள், பணியாளர்கள் மலேசியாவிலிருந்து வெளியேறத் தடை
வட கொரிய தூதரக அதிகாரிகளும் பணியாளர்களும் மலேசியாவிலிருந்து வெளியேறத் தடை விதிக்கப்பட்டிருப்பதாக துணைப் பிரதமர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி அறிவித்துள்ளார். பியோங்யாங் வட கொரியாவில் உள்ள மலேசியர்கள் அந்நாட்டை விட்டு வெளியேறத் தற்காலிகத் தடை விதித்ததை அடுத்து மலேசியாவும் பதிலுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டியதாயிற்று என்றவர் விளக்கினார். வட …
மலேசியாவில் சீனாவின் திட்டங்களில் உள்ளூர் மக்களுக்கு வேலை இல்லையா? மறுக்கிறார்…
மலேசியாவில் சீனாவின் உதவியுடன் மேற்கொள்ளப்படும் திட்டங்களில் உள்ளூர் மக்கள் வேலைக்கு அமர்த்தப்பட மாட்டார்கள் என்று கூறப்படுவதை அனைத்துலக வாணிக, தொழில் துணை அமைச்சர் சுவா டீ யோங் மறுத்தார். மலேசிய- சீன குவாந்தான் தொழில் பூங்காவில் அலையன்ஸ் ஸ்டீல் (ம) சென்.பெர்ஹாட் தொடங்கியுள்ள எஃகு ஆலையை அவர் சுட்டிக்காட்டினார்.…
பியோங்யாங்கில் மலேசிய தூதரகப் பணியாளர்கள் ஆவணங்களைத் தீயிட்டுக் கொளுத்தினர்
நேற்று தொடங்கி, பியோங்யாங்கில் உள்ள மலேசியத் தூதரகத்தில் பணியாளர்கள் ஆவணங்களை எரிப்பதையும் அவர்களின் பயணப் பெட்டிகளை வாகனங்களில் ஏற்றுவதையும் காண முடிந்ததாக சைனா செண்ட்ரல் தொலைக்காட்சி (சிசிடிவி) அறிவித்தது. இன்று காலை தூதரக வளாகத்தில் பறந்து கொண்டிருந்த மலேசிய, ஆசியான் கொடிகள் இறக்கப்பட்டதாகவும் சிசிடிவி செய்தி கூறிற்று. மலேசியா …


