பெரும்பான்மை கூடும் வாய்ப்பிருந்தாலும் தேர்தல் தொகுதி திருத்தி அமைக்கப்படுவதை புவா…

தேர்தல்     ஆணையம்   தேர்தல்   தொகுதிகளைத்   திருத்தி   அமைப்பது   தமக்குச்   சாதகமாக   அமையும்   என்றாலும்    பெட்டாலிங்     ஜெயா   உத்தாரா   எம்பி   டோனி  அதை     விரும்பவில்லை. அப்படித்   திருத்தி   அமைக்கப்படும்    வேளையில்   புவாவின்   தொகுதி    டமான்சாரா  எனப்   பெயர்மாற்றம்  செய்யப்பட்டு     அதன் வாக்காளர்    எண்ணிக்கையும்   இப்போதைய   85, 401-இலிருந்து  150,439  ஆக  …

கூட்டணி அமைப்பதைவிட பிஎன்னை எதிர்ப்பதில் ஒத்துழைப்பதே முக்கியம்

அடுத்த   பொதுத்   தேர்தலில்    பாரிசான்   நேசனலைத்     கோற்கடிப்பதற்கு   எதிர்க்கட்சிகள்   அனைத்தும்    ஒரே  கூட்டணியில்   இருந்துதான்    செயல்பட   வேண்டும்    என்ற  அவசியமில்லை . கட்சிகள்  ஒன்று   சேர்வதைவிட   ஒத்துழைப்பது     அவசியம்    என     டிஏபி  தேசிய  பிரச்சாரப்   பிரிவு      உதவித்    தலைவர்     சைரில்    கீர்  ஜோஹாரி    கூறியதாக     சினார்  ஹரியான்     தெரிவித்தது.…

கெராக்கான் 14வது பொதுத் தேர்தல் வேட்பாளர்களில் 90விழுக்காட்டினரை அடையாளம் கண்டுள்ளது

கெராக்கான்     14வது   பொதுத்   தேர்தலில்   அதற்கு   ஒதுக்கப்படும்   45   நாடாளுமன்ற,  சட்டமன்றத்   தொகுதிகளுக்கான   வேட்பாளர்களில்   90  விழுக்காட்டினரை   அடையாளம்   கண்டுவிட்டது. இதனைத்   தெரிவித்த    அதன்    தலைவர்   மா   சியு  கியோங்,   எஞ்சிய   10  விழுக்காட்டு  வேட்பாளர்களும்   மாத  இறுதிக்குள்   முடிவு   செய்யப்படுவார்கள்    என்றார். “தேர்தல்   எப்போது  என்று   தெரியாவிட்டாலும்  …

பெர்சே-இன் ஐந்தாவது பேரணி நவம்பர் 19-இல்

தேர்தல்    சீரமைப்புக்காக    போராடும்    பெர்சே   கூட்டமைப்பு   அதன்   ஐந்தாவது   பேரணி    நவம்பர்    19-இல்   நடத்தப்படும்    என    அறிவித்துள்ளது. இம்முறை   பேரணி   "Satukan Tenaga, Malaysia Baru!(ஆற்றைலை  ஒன்றிணைப்போம்,  புத்தம்புது  மலேசியா)’   என்ற  கருப்பொருளைக்    கொண்டிருக்கும். பேரணிக்கு  முன்னதாக  அக்டோபர்  முதல்  நாள்   தொடங்கி      பெர்சே  வாகனங்களின்   தொகுதி  ஒன்று   …

அமெரிக்க வழக்குரைஞர்: ஆப்கானிஸ்தானில் அரசியல் கைதிகள் அன்வாரைவிட நன்றாக நடத்தப்படுகிறார்கள்

மலேசியாவைவிட   ஆப்கானிஸ்தானில்   அரசியல்   கைதிகளைச்   சந்திப்பது  எளிது   என்கிறார்   அமெரிக்க   வழக்குரைஞர்   கிம்பர்லி   மோட்லி. அன்வார்  இப்ராகிமின்    வழக்குரைஞர்  குழுவில்    ஒருவராக   புதிதாக  இணைந்துள்ள    மோட்லி,   ஆப்கானிஸ்தானில்   தாம்   தம்   கட்சிக்காரரைச்   சந்திப்பதற்கு   அனுமதி   மறுக்கப்பட்டிருக்காது     என்றார். “மலேசியா    அழகான    நாடு.  நான்  அன்வாரைச்   சந்திக்க    அனுமதி    மறுக்கப்பட்டது  …

அறுவர் பலியான ஹெலிகாப்டர் விபத்துக்கு விமானியின் கவனக்குறைவே காரணம்

அம்னோ  எம்பி    ஜமாலுடின்   ஜர்ஜிசும்    மேலும்  ஐவரும்  ஹெலிகாப்டர்  விபத்தில்    பலியானதற்கு    அதன்   விமானியே   காரணம்    என்று   அந்த   விபத்து    தொடர்பான   இறுதி   அறிக்கை  கூறியது. கடந்த    ஆண்டில்  பகாங்,   முவாட்ஸாம்  ஷா-வில்   கால்பந்து   திடலொன்றில்  ஹெலிகாப்டரை    அவசரமாக    தரைஇறக்கிய    கேப்டன்   கிளிப்பர்ட்  போர்னியர்,  அளவுக்கதிகமாக   எண்ணெய்  ஒழுகியதையும் …

திருமணச் சட்டத் திருத்த முன்வரைவை ஒப்புக்கொண்டோமா? மறுக்கிறது அனைத்து சமய…

1976  சட்டச்   சீரமைப்பு (திருமணம்,  மணவிலக்கு) சட்டத்துக்கு   அரசாங்கம்    கொண்டு  வரவுள்ள   திருத்தங்களுக்கு    ஒப்புதல்  கொடுத்திருப்பதாகக்   கூறப்படுவதை     மலேசிய   பெளத்தம்,   கிறிஸ்துவம்,    இந்து    சமயம்,    சீக்கிய  சமயம்  ,  தாவோயிச  ஆலோசனை   மன்றம் (எம்சிசிபிசிஎச்எஸ்டி)    மறுத்துள்ளது. அச்சட்ட  முன்வரைவு    நாளைய   அமைச்சரவைக்   கூட்டத்தில்   தாக்கல்    செய்யப்படும்    என்றும்   உத்தேச …

1எம்டிபிமீதான இரகசியக் காப்பை அகற்றக் கோரும் அஸ்மினின் மனு அக்டோபர்…

1972    அதிகாரத்துவ     இரகசியச்   சட்ட(ஓஎஸ்ஏ)த்தின்கீழ்      பாதுகாக்கப்படும்   1எம்டிபி    மீதான   தலைமைக்  கணக்காய்வாளர்    அறிக்கையை    வெளியிட    அனுமதியளிக்க    வேண்டும்  என    சிலாங்கூர்   மந்திரி  புசார்   அஸ்மின்   அலி    தாக்கல்   செய்த   மனு    அக்டோபர்  26-இல்   விசாரணைக்கு    வரும். மனுவை  விசாரணை   செய்வதற்கான    நாளை   உயர்  நீதிமன்ற   துணை  பதிவாளர்   நோராஸ்லின்   …

‘டபள்யுஎஸ்ஜே பேசாமல் 14வது பொதுத் தேர்தலில் வேட்பாளர்களைக் களமிறக்கலாம்’, அமைச்சர்…

 அமெரிக்க   நாளேடான   வால்  ஸ்திரிட்  ஜர்னல் (டபள்யுஎஸ்ஜே)    பேசாமல்     மலேசியாவின்    அடுத்த   பொதுத்   தேர்தலில்    போட்டியிட    வேட்பாளர்களின்    பட்டியல்   ஒன்றை   வெளியிடலாம்  என்று  கிண்டல்  செய்கிறார்     தொடர்பு,    பல்லூடக   அமைச்சர்   சாலே   சைட்  கெருவாக். அந்த   அளவுக்கு   டபள்யுஎஸ்ஜே  மலேசிய    அரசியல்    விவகாரங்களில்   அக்கறை   கொண்டிருக்கிறது   என்றாரவர். “அது …

ஐஜிபி: மலேசிய தினத்தில் ஐஎஸ் மிரட்டலைச் சமாளிக்க போலீஸ் தயார்

மலேசிய   தினமான  செப்டம்பர்  16-இல்  ஐஎஸ்   மிரட்டல்    எதுவும்   எழுமானால்   அதைச்   சமாளிக்க   போலீஸ்    ஆயத்தமாக   உள்ளதாக   இன்ஸ்பெக்டர்- ஜெனரல்  அப்  போலீஸ்   காலிட்   அபு   பக்கார்   இன்று  உறுதியளித்தார். “இஸ்லாமிய   தீவிரவாதிகளோ    அல்லது   வேறு   எவருமோ    மலேசிய   தினக்   கொண்டாட்டங்களுக்கு  மிரட்டலாக  இருந்தால்  அந்த  மிரட்டலைச்   சமாளிக்க   நாங்கள் …

அஸ்மின்: தேர்தல் முன்கூட்டி நடத்தப்பட்டாலும் நேரடிப் போட்டிக்கு ஏற்பாடு செய்துகொள்ள…

அரசியல்     அரங்கில்   புதிய   வரவாக    பார்டி    பிரிபூமி  பெர்சத்து  மலேசியா  வந்திருந்தாலும்    பொதுத்   தேர்தல்   முன்கூட்டியே     நடத்தப்பட்டாலும்    அடுத்த   பொதுத்  தேர்தலில்  எல்லாத்    தொகுதிகளிலும்   நேரடிப்   போட்டிதான்   என்பதில்   உறுதியாக  இருக்கிறார்    பிகேஆர்   துணைத்   தலைவர்     அஸ்மின்   அலி. “நான்  எப்போதுமே  ஒரு   நன்னம்பிக்கையாளன்”,  என்றாரவர். நாட்டில்  மாற்றத்தைக்  …

ரியோ பாரா ஒலிம்பிக்ஸில் மலேசியா இரண்டு தங்கப் பதக்கங்கள் பெற்று…

பிரேசிலின்  ரியோவில்  நடைபெறும்   மாற்றுத்திறனாளிகளுக்கான    பாரா ஒலிம்பிக்ஸ்   போட்டியில்   மலேசியா    இரண்டு    தங்கப்    பதக்கம்   வென்று   சாதனை    படைத்தது. முகம்மட்   ரிட்சுவான்    முகம்மட்   புஸி   100மீட்டர்   நிகழ்விலும்  முகம்மட்  ஸியாட்   ஸுல்பிக்ளி   ஆண்களுக்கான  குண்டு  எறிதல்   நிகழ்விலும்   இன்று   தங்கம்   வென்றனர். பாரா  ஒலிம்பிக்ஸில்   மலேசியா   இதற்கு  முன்னரும்   …

கெடாவிலும் அம்னோ தொகுதித் தலைவர்கள் விலகுவார்கள்- முக்ரிஸ்

ஜோகூரில்   நேற்று   அடிநிலை   தலைவர்கள்  இருவர்  கட்சியிலிருந்து   வெளியேறியதுபோல்    மேலும்    பல    தலைவர்கள்  விலகுவார்கள்   என  எதிர்பார்க்கப்படுகிறது. கெடாவில்     “தொகுதித்    தலைவர்கள்  பலர் ”  வெளியேறுவது   குறித்து   ஆலோசித்துக்   கொண்டிருப்பதாக  தம்மிடம்  தெரிவித்திருப்பதாக     அம்மாநில    முன்னாள்   மந்திரி  புசார்   முக்ரிஸ்   மகாதிர்   கூறினார். “(தொகுதி)  ஆண்டுக்  கூட்டங்களின்போது    அறிவிப்புச்   …

அம்னோவிலிருந்து வெளியேறிய மூத்த தலைவர் ‘மனவெறுப்படைந்த டாக்சி ஓட்டுனர்’: நஸ்ரி…

அம்னோவிலிருந்து    வெளியேறிய   உறுப்பினர்களைச்  சிறுமைப்படுத்திய     உச்சமன்ற   உறுப்பினர்    முகம்மட்  நஸ்ரி   அப்துல் அசீஸ்,     அவர்களில்   ஒருவரை  “மனவெறுப்படைந்த   டெக்சி   ஓட்டுனர்”  எனக்  கிண்டல்   செய்தார். நேற்று  கேலாங்  பாத்தா   அம்னோ    நிரந்தர    அவைத்   தலைவர்   பஹாரோம்    அப்துல்  கனியும்    கூலாய்    அம்னோ    துணைத்   தலைவர்     டோஸ்ரின்  ஜர்வந்தியும்   தத்தம்   …

இஸ்மாயில் சாப்ரி: மகாதிரின் படகை முதலில் மூழ்கடிப்போம்

  முன்னாள் பிரதமர் மகாதிர் முகமட் அம்னோவின் படகை மூழ்கடிக்க முனைவதால், அவர் அப்படிச் செய்வதற்கு முன்பதாக நாம் அவரது படகை அழித்து தண்ணீரிலிருந்து அகற்ற வேண்டும் என்று அம்னோவின் உச்சமன்ற உறுப்பினர் கட்சியின் உறுப்பினர்களிடம் கூறியதாக பெர்னாமா செய்தி கூறுகிறது. மகாதிர் நாட்டிற்கு பெரும் மேம்பாடுகளைம் கொண்டு…

எதிர் முகாமுடன் இணக்கம் காணப்பட்டிருப்பதால் பினாங்கில் டிஏபி இடங்களைக் கைப்பற்ற…

மஇகா,   சர்ச்சைகளுக்குத்  தீர்வு  காணப்பட்டு   எதிர்முகாமில்  இருந்தோர்  மீண்டும்  கட்சியில்    இணைந்து  கொண்டிருப்பதால்   பினாங்கில்   டிஏபி  வசமுள்ள   பிறை,  பாகான்   டாலாம்  தொகுதிகளைத்   திரும்பக்  கைப்பற்ற  முடியும்  என   நம்புகிறது. அவ்விரு  தொகுதிகளிலும்   வெற்றிபெற   மஇகா  வாக்காளர்களுடன்   அணுக்கமான   உறவுகளை  வளர்த்துக்  கொள்ளவும்     கட்சி   உறுப்பினரிடையே   ஒற்றுமையை   வலுப்படுத்தவும் …

மார்ச்சில் 14வது பொதுத் தேர்தல்?

14வது  பொதுத்   தேர்தல்  அடுத்த   ஆண்டு   மார்ச்  மாதம்   நடத்தப்படலாம்  என  புளும்பெர்க்   செய்தி  ஒன்று  கூறுகிறது. அது  இரண்டு   அம்னோ    தலைவர்களை   மேற்கோள்   காட்டி   அவ்வாறு  கூறியது.  அவர்களின்  பெயர்களை   அது   தெரிவிக்கவில்லை. “மார்ச்சில்   நடத்தலாம்   என்று  பேசப்பட்டிருக்கிறது........ஏன்  கூடாது?   எதிரணி   ஒன்றாக  இல்லை..   நாங்கள்  தேர்தலுக்குத்  …

கேஎல்ஐஏ-இல் ஸ்ரீலங்கா தூதர் தாக்கப்பட்டது தொடர்பில் இருவர்மீது குற்றச்சாட்டு

மலேசியாவுக்கான   ஸ்ரீலங்கா   தூதர்    இப்ராகிம்   சாஹிப்பைத்   தாக்கியதாக  இன்று  சிப்பாங்  செஷன்ஸ்  நீதிமன்றத்தில்   இருவர்மீது   குற்றம்   சாட்டப்பட்டது. தமிழில்  வாசிக்கப்பட்ட   குற்றச்சாட்டை   ஒரு  வியாபாரியான   ஏ.கலைமுகிலனும்  டெக்சி   ஓட்டுனரான   வி.பாலமுருகனும்  மறுத்தனர். செப்டம்பர்  4  ஞாயிற்றுக்கிழமை ,  பிற்பகல்  மணி   3க்கு   சிப்பாங்கில்  உள்ள  கோலாலும்பூர்   அனைத்துலக   விமான …

எல்ஆர்டி பயணிகள் தண்டவாளம் வழியாக நடந்தே சென்றார்கள் அடுத்த நிலையத்துக்கு

இன்று  காலை  எல்ஆர்டி    சேவையில்   தடை   ஏற்பட்டதால்   நூற்றுக்கணக்கான  பயணிகள்   கோம்பாக்- புத்ரா  ஹைட்ஸ்  நிலையங்களுக்கிடையில்   நடந்தே  செல்ல   வேண்டிய  நிலை  உருவானது. தண்டவாளங்கள்மீது   நடந்து  சென்றதைப்   பலர்  படங்களுடன்   சமுக  வலைத்தளங்களில்  பதிவு   செய்திருந்தனர். காலை  10  மணிக்குப்  பெய்த  கனமழையை  அடுத்து   அப்பகுதியில்   எல்ஆர்டி   சேவை  …

பெர்சத்து அதிகாரப்பூர்வமாக பதிவானது

பார்டி  பிரிபூமி   பெர்சத்து   மலேசியா(பெர்சத்து)  ஓர்   அரசியல்  கட்சியாக   அதிகாரப்பூர்வமாக  பதிவு  பெற்றுள்ளது. அதற்கான   அங்கீகாரத்தைச்    சங்கப்   பதிவகம் (ஆர்ஓஎஸ்)   இன்று  வழங்கியது. கட்சியின்   தலைவர்,  அவைத்   தலைவரின்  பொறுப்புகள்  குறித்து   விளக்கம்  பெற்றதை  அடுத்து   ஆர்ஓஎஸ்   அதற்குப்   பச்சைக்  கொடி   காட்டியது. முன்னாள்  துணைப்  பிரதமர்   முகைதின்  …

மகாதிர்: கிட் சியாங்குடன் இணைந்து செயல்படும்போது அன்வாருடன் முடியாதா?

முன்னாள்   பிரதமர்   டாக்டர்  மகாதிர்   முகம்மட்,  டிஏபி   பெருந்  தலைவர்   லிம்  கிட்  சியாங்குடன்   சேர்ந்து   பணியாற்றும்   தம்மால்     தம்முடைய  முன்னாள்    எதிரியான   அன்வார்  இப்ராகிமுடன்  ஒத்துழைப்பதில்   எந்தப்  பிரச்னையும்   இருக்காது    என்றுதான்  நினைக்கிறார். அன்வாரைச்   சந்தித்தபோது    புதிதாக   அமைக்கப்பட்டிருக்கும்    பார்டி   பிரிபூமி   பெர்சத்து  மலேசியாவுடன்   ஒத்துழைப்பது   குறித்து …

நிறுவன நிர்வாக இயக்குனர் விசாரணை முடிந்து விடுவிக்கப்பட்டார்

நூல்  வெளியீட்டு  நிறுவனத்தின்   நிர்வாக   இயக்குனர்  ஒருவர்,   மலேசிய  ஊழல்தடுப்பு    ஆணைய(எம்ஏசிசி)த்தின்    12-நாள்   தடுப்புக்  காவலில்   இருந்த   பின்னர்  இன்று  விடுவிக்கப்பட்டார். தடுப்புக்காவலை  நீட்டிக்குமாறு     எம்ஏசிசி     கேட்டுக்கொள்ளாததால்   மெஜிஸ்திரேட்   நிக்   இஸ்ஃபானி   தஸ்னிம்    வான்   அப்துல்    ரஹ்மான்  அந்த  40-வயது    ஆடவரை    விடுவித்தார். ரிம15 மில்லியன்  நூல்  வெளியிடும்  …

நஜிப்: ஒபாமாவுடன் இனிதே உரையாடினேன்

லாவோசில்,   ஆசியான்  உச்சநிலை  மாநாட்டில்  கலந்துகொண்டிருக்கும்    பிரதமர்  நஜிப்   அப்துல்   ரசாக்கும்    அமெரிக்க    அதிபர்   பராக்  ஒபாமாவும்  நேற்றிரவு    விருந்து  நிகழ்வு  ஒன்றில்   சந்தித்துக்  கொண்டனர். மாநாட்டுக்குத்    தம்   துணைவியாருடன்     சென்றுள்ள   பிரதமர்,    ஒபாமாவுடன்  “இனிமையாக  உரையாடியதாக”   முகநூலில்  குறிப்பிட்டிருந்தார்.  ஒபாமாவுடன்  இருப்பதைக்  காண்பிக்கும்     நிழல்படமொன்றையும்    அவர்  பதிவிட்டிருந்தார்.…