மத்திய அரசு அண்மையில் அறிவித்த வீட்டிலிருந்து பணிபுரியும் நடைமுறையைத் தொடர்ந்து, பினாங்கு மாநில அரசு ஊழியர்களுக்கும் இந்த முறையைச் செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை மாநில அரசு ஆராயும் என்று முதல்வர் சாவ் கோன் இயோவ் தெரிவித்துள்ளார். மேற்காசிய மோதலால் ஏற்பட்டுள்ள உலகளாவிய எரிசக்தி நெருக்கடியின் தாக்கம் குறித்து, பிரதமர் அன்வர்…
பார்டி பிரிபூமி பெர்சத்து மலேசியாவுக்கு ஆர்ஓஎஸ் அங்கீகாரம்
சங்கப் பதிவகம் (ஆர்ஓஎஸ்) பார்டி பிரிபூமி பெர்சத்து மலேசியாவுக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளது. அப்புதிய கட்சி “பிபிபிஎம்” என்று விளங்கும் எனத் துணைப் பிரதமர் ஜாஹிட் ஹமிடி கூறினார். “பிபிபிஎம்- முக்குக் கொள்கை அளவில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. அதிகாரப்பூர்வ ஒப்புதலைப் பெற அது அதன் அவைத்தலவர், கட்சித் தலைவர் ஆகியோரின் …
சேவியர்: ஐஜிபி மலேசியத் தமிழர்களை விடுதலைப் புலிகளுடன் முடிச்சுப்போடுவது கண்டிக்கத்…
மலேசியத் தமிழர்களை விடுதலைப்புலிகளுடன் தொடர்பு படுத்திப் போலீஸ் படைத்தலைவர் காலிட் அபு பாக்கார் அறிக்கை விட்டிருப்பது வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டியது. தக்க ஆதாரம் இருந்திருந்தால் அப்படிப்பட்டவர்களைக் கைது செய்து நீண்ட நாட்களுக்கு முன்பே நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அப்படி நிருபிக்கத் தவறி விட்டு, இப்பொழுது நொண்டிச் சாக்கு…
இராமதாசு மறைவு, தமிழ்ப்பள்ளிகளுக்கு ஓர் இழப்பாகும்!
சா அலாம், ஐக்கோம் தமிழ்பள்ளியின் ஆசிரியர் இராமதாசு நேற்று காலமானார். அவர் கடந்த சில தினங்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். இராசாக் தமிழ்ப்பள்ளியில் ஒரு துடிப்புமிக்க ஆசிரியராக பணியாற்றிய அவர், எப்பொழுதுமே மாணவர்களின் புறப்பாட நடவடிக்கைகளில் மிகுந்த ஆர்வம் காட்டுபவர். அவருடைய புன்னகை ததும்பும் முகமும், ஆர்வத்துடன் உரையாடும்…
நஸ்ரி: ஒதுக்கீடு குறைக்கப்பட்டதால் ஹோட்டல் வரி அவசியமாகிறது
தங்கும் விடுதிகளுக்குச் சுற்றுப்பயணச் சேவைக் கட்டணம் விதிக்கும் பரிந்துரை அவசியமான ஒன்றுதான் என்று கூறிய சுற்றுலா, பண்பாட்டு அமைச்சர் நஸ்ரி அப்துல் அசீஸ், மலேசியாவை விளம்பரப்படுத்துவதற்குப் பணம் தேவைப்படுவதாகக் குறிப்பிட்டார். எண்ணெய், எரிவாயு மூலம் அரசாங்கத்துக்குக் கிடைத்த வருமானம் குறைந்ததால் அமைச்சின் விளம்பரப் பட்ஜெட்டுக்கான ஒதுக்கீடும் குறைந்து விட்டது …
பிகேஆர் இளைஞர்கள்: ‘வரலாற்றுச் சிறப்புமிக்கக் கைகுலுக்கு’ ஒற்றுமைக்கு வழிகோலட்டும்
பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிமும் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட்டும் கைகுலுக்கிக் கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு கட்சியில் ஒற்றுமைக்கு வழிவகுக்க வேண்டும், அதனால் ஒற்றுமையின்மை ஏற்பட்டு விடக் கூடாது என்பதே பிகேஆர் இளைஞர்களின் விருப்பமாகும். இதனைத் தெரிவித்த கட்சியின் இளைஞர் துணைத் தலைவர் டாக்டர் …
பிகேஆர்- முன்னாள் படைவீரர் கலந்துரையாடலை போலீஸ் தடுப்பதாக ரபிசி முறையீடு
இன்றிரவு கோலாலும்புரில் பணி ஓய்வு பெற்ற முன்னாள் படைவீரர்களுடன் நடைபெறவிருந்த கலந்துரையாடலுக்கு போலீஸ் தடை விதித்திருப்பதாக பிகேஆர் உதவித் தலைவர் ரபிசி ரம்லி கூறினார். அனாலும் அந்த சித்தியாவங்சா கூட்டம் தடையை மீறி நடைபெறும் என்று கூறிய ரபிசி, முன்னாள் படைவீரர்கள் அதில் கலந்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.…
மரியா சின் : பெர்சே பேரணி நவம்பரில்
தூய்மையான, நியாயமான தேர்தல்களுக்காக போராடும் கூட்டமைப்பு (பெர்சே) 5வது பெர்சே பேரணி நவம்பர் மாதம் நடைபெறும் என அறிவித்துள்ளது. பேரணி எந்த நாளில் நடைபெறும் என்பதை அது தெரிவிக்கவில்லை. பேரணி நாளை அறிவிக்க செப்டம்பர் 14-இல் செய்தியாளர் கூட்டம் கூட்டப்படும் என பெர்சே தலைவர் மரியா சின் அப்துல்லா …
பேங்க் ரக்யாட் தலைவர், எம்டிமீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு
இன்று கோலாலும்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில், பேங்க் ரக்யாட் தலைவர் அப்துல் அசீஸ் சைனல்மீதும் நிர்வாக இயக்குனர் (எம்டி) முஸ்தபா அப்துல் ரசாக்மீதும் ரிம15 மில்லியன் மோசடிக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. இருவருமே குற்றத்தை மறுத்தனர். பெர்னாமாவின் கூற்றுப்படி தேசிய பிரமுகர் ஒருவர் பற்றி நூல் வெளியிடுவதற்காக ஒதுக்கப்பட்ட நிதியில் மோசடி …
மலாய்க்காரர் பகுதிகளை பெர்சத்துவுக்கு விட்டுக்கொடுக்க அமனா தயார்
மலாய்க்காரர்கள் அதிகம் வாழும் பகுதிகளில் பாஸையும் அம்னோவையும் எதிர்த்துப் போட்டியிட அப்பகுதிகளைப் புதிதாக அமைக்கப்பட்டிருக்கும் பார்டி பெர்சத்து மலேசியா (பெர்சத்து)வுக்கு விட்டுக்கொடுக்க பார்டி அமனா நெகரா (அமனா) தயாராகவுள்ளது. 14வது பொதுத் தேர்தலுக்காக தேர்தல் உடன்பாடு ஒன்று செய்து கொள்ளப்படுமானால் இதுவே அமனாவின் நிலைப்பாடாக இருக்கும் என அக்கட்சியின் …
மகாதிர்- அன்வார் சந்திப்பால் பிகேஅர் உறுப்பினர்கள் அக்கட்சியிலிருந்து வெளியேறுவர்
பிகேஅர் உறுப்பினர்கள் டாக்டர் மகாதிர் முகம்மட்- அன்வார் இப்ராகிம் சந்திப்பால் அதிருப்தி அடைந்து கட்சியிலிருந்து வெளியேறுவார்கள் என்கிறார் உள்துறை துணை அமைச்சர் நூர் ஜஸ்லான் முகம்மட். “மகாதிர் அன்வாரைச் சந்தித்தார். எதற்கு? அவர் பிகேஆரின் ஆதரவை நாடுகிறார். ஆனால் அவர், 20 ஆண்டுகளுக்குமுன் அன்வாருக்குக் கெடுதல் செய்ததால்தான் பலர் …
‘ஆமைச் சின்னம் உடைக்கப்பட்டதுபோல் லங்காவி-இன் கழுகுச் சின்னம் உடைபடக் கூடாது’
திரெங்கானு மசீச, அம்மாநிலத்தில் பாஸ் கட்சி ஆட்சிக்கு வந்தபோது கோலா திரெங்கானுவில் ஆமைச் சின்னத்தை உடைத்தெறிந்ததுபோல் லங்காவியின் அடையாளச் சின்னமான கழுகுச் சிலையும் உடைபடுவதற்கு இடமளிக்கக் கூடாது என வலியுறுத்தியது. “1999-இல் பாஸ் திரெங்கானுவில் ஆட்சிக்கு வந்தபோது, அப்போது பாஸ் மந்திரி புசார் அப்துல் ஹாடி ஆவாங் தலைமையில் …
ஸ்ரீலங்கா தூதர் தாக்கப்பட்டதற்கு அரசாங்கம் வருத்தம்
ஞாயிற்றுக்கிழமை கேஎல் அனைத்துலக விமான நிலையத்தில், ஆர்ப்பாட்டக்காரர்கள் சிலரால் ஸ்ரீலங்கா தூதர் இப்ராகிம் அன்சார் தாக்கப்பட்டதற்கு மலேசிய அரசாங்கம் வருத்தம் தெரிவித்தது. அத்தாக்குதலில் தூதருக்குச் சொற்ப காயங்கள் ஏற்பட்டதாக வெளியுறவு அமைச்சு வெளியிட்ட அறிக்கை கூறிற்று. “மலேசிய அரசாங்கம் மேதகு தூதர் இப்ராகிம் அன்சாரிடம் வருத்தம் தெரிவிக்கிறது. மலேசிய …
‘மகாதிர் -அன்வார் சந்திப்பு நல்லதொரு தொடக்கம்’
பிகேஆர் துணைத் தலைவர் அஸ்மின் அலி, ஜன்ம பகைவர்களாக விளங்கிய டாக்டர் மகாதிர் முகம்மட்டும் அன்வார் இப்ராகிமும் சந்தித்துக் கொண்டது 14வது பொதுத் தேர்தலை எதிர்கொள்ள நல்லதொரு தொடக்கம் என வருணித்துள்ளார். அச்சந்திப்பு 14வது பொதுத் தேர்தலுக்கு ஆயத்தமாகும் வகையில் மக்களை ஒன்றுபடுத்தவும் கட்சிகளை வலுப்படுத்தவும் உதவும் என்றவர் …
தமிழர் கண்டனக் கூட்டம்: உண்மை நிலவரம் புரியவில்லை ஐஜிபிக்கு
போலீஸ் படைத் தலைவர்(ஐஜிபி) காலிட் அபு பக்கார் உண்மை புரியாமல் பேசுகிறார். அண்மையில் கோலாலும்பூரில் தமிழர் அமைப்புகள் நடத்திய ஆர்ப்பாட்டம் குறித்துக் கருத்துரைத்த ஐஜிபி, அது தமிழீழ விடுதலைப் புலி(எல்டிடிஈ)களுக்கு ஆதரவளிப்போரால் ஏற்பாடு செய்யப்பட்டது என்று கூறியிருந்ததில் சிறிதும் உண்மையில்லை என பினாங்கின் இரண்டாம்நிலை துணை முதலமைச்சரும் பிறை …
பசுபதிக்கு முழுமையான ஆதரவு – தமிழ் அறவாரியம் தலைவர் அறிவிப்பு
மலேசியாவில் ஆமைகளாக இருக்கும் தமிழ்ப்பள்ளிகளை யானைகளாக்குவோம். அப்பள்ளிகளில் பயில்கின்ற மாணவர்களின் மேம்பாட்டையும் வளர்ச்சியையும் இமயத்தின் உச்சிக்கு மேல் உயர்த்துவோம் என்ற வாய்வீச்சுகள் இந்நாட்டில் ஏராளம் என்பதை நாம் அறிவோம். ஆனால், தமிழ்ப்பள்ளிகள் மற்றும் அப்பள்ளிகளின் மாணவர்கள், ஆசிரியர்கள், அப்பள்ளிகளை நிருவாகம் செய்யும் ஆளுநர் வாரிய உறுப்பினர்கள் ஆகிய…
‘அமைச்சர்களுடன் நடனமாடும்’ ஏஜி பதவி விலக நெருக்குதல்
சட்டத்துறைத் தலைவர் (ஏஜி) முகம்மட் அபாண்டி அலி, கடந்த வாரம் தேசிய நாள் கொண்டாட்டத்தின்போது அமைச்சர்களுடன் நடனமாடுவதைக் காண்பிக்கும் காணொளி தொடர்பில் பதவி விலக வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஏஜி ஆளும் கட்சித் தலைவர்களுடன் நெருங்கிப் பழகுவது அவரின் நடுவுநிலையைச் சந்தேகப்பட வைக்கிறது என அவரைக் குறைகூறுவோர் …
சுரேந்திரன் காஜாங் சிறையில் ஒரு நாள் தங்கியிருக்கத் தயார்
காஜாங் சிறை நிலவரத்தைத் தெரிந்துகொள்ள ஒரு நாள் அதில் தங்கியிருக்க வருமாறு உள்துறை துணை அமைச்சர் விடுத்த ‘அழைப்பை’ பாடாங் செறாய் எம்பி என். சுரேந்திரன் ஏற்றுக்கொண்டிருக்கிறார். “இந்த வாய்ப்பை அளித்த அமைச்சருக்கு பொதுநலனைக் கருத்தில் கொண்டு நன்றி தெரிவிக்கிறேன். “உள்துறை துணை அமைச்சர் என்ற …
பாஸ்: பொருளாதார நெருக்கடி நிலவும் நேரத்தில் துகு வனப் பூங்கா…
தேசிய நினைவுச் சின்ன(துகு நெகரா)த்தைச் சுற்றியுள்ள 66ஏக்கர் நிலப்பரப்பை ரிம650 மில்லியன் செலவில் பச்சைப் பசுஞ் சோலையாக மாற்றும் அரசாங்கத் திட்டம் தேவையற்றது எனக் குறைகூறப்பட்டிருக்கிறது. நாடும் மக்களும் பொருளாதார நெருக்கடியில் சிக்கிக் கொண்டிருப்பதாக பாஸ் கூட்டரசுப் பிரதேச இளைஞர் பகுதித் தலைவர் கைரில் நிஜாம் கைருடின் கூறினார்.…
இராஜபக்சே, நாட்டைவிட்டு வெளியேறு!; போர்க்குற்ற விசாரணை உடனே தொடங்கப்பட வேண்டும்!!
- சிவராஜன் ஆறுமுகம், பொதுச் செயலாளர், மலேசிய சோசலிசக் கட்சி இலங்கையின் முன்னாள் அதிபர், போர்க் குற்றவாளி இராஜபக்சேயை எதிர்த்து தக்க நடவடிக்கை எடுக்க முடியாத மலேசிய அரசை மலேசிய சோசலிசக் கட்சி கண்டிக்கிறது. புத்ரா உலக வாணிப மையத்தில் (PWTC) செப்டம்பர் 1 முதல் 4ஆம் தேதி வரையில், ஆசியப்…
லங்காவி கழுகுச் சின்னம் உடைக்கப்படும்? கெடா அரசு பாட்வா மன்றத்தின்…
லங்காவின் கழுகுச் சதுக்கத்தில் உள்ள புகழ்பெற்ற கழுகுச் சின்னத்தை உடைக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுமானால் கெடா அரசு மாநில பாட்வா மன்றத்துடன் ஆலோசனை கலக்கும் எனறு கெடா துணை முப்தி ஷேக் மார்வாஸி ஜியாவுடின் கூறினார். அக்கழுகுச் சிலை “ஹராம்” என்றும் அதை உடைத்தெறிய வேண்டும் என்றும் …
பிஎன் 45 இடங்களை இழக்கும் சாத்தியம் உள்ளது- முகைதின்
வாக்காளர்களில் ஒரு சிறிய எண்ணிக்கையினர் ஆளும் கட்சிக்கு எதிராக திரும்பினால் பிஎன்னிடமிருந்து 45 நாடாளுமன்ற இடங்களைக் எதிரணி கைப்பற்ற முடியும் என்கிறார் முன்னாள் துணைப் பிரதமர் முகைதின் யாசின். பிஎன் 67 இடங்களை எதிரணியிடம் இழக்கும் சாத்தியம் இருப்பதாக அவர் நினைக்கிறார். “இவற்றில் பெரும்பாலானவை அம்னோ வைத்துள்ள இடங்களாகும்”, …
அமெரிக்காவுடன் பரஸ்பரம் சட்ட உதவி நாடப்படுவதாகக் கூறப்படுவதை ஐஜிபி மறுக்கிறார்
மலேசிய போலீஸ் 1எம்டிபி வெளிநாட்டில் உள்ள சாட்சிகளைச் சந்திப்பதற்கு அமெரிக்க உதவியை நாடுவதாகக் கூறப்படுவதை இன்ஸ்பெக்டர்- ஜெனரல் அப் போலீஸ் காலிட் அபு பக்கார் மறுத்தார். இதன் தொடர்பில் நேற்று ஊடகங்களில் தவறான செய்திகள் வெளிவந்திருப்பதாக காலிட் கூறினார். “அது பொய், அப்படி நான் சொல்லவில்லை.......வெளிநாடுகளில் விசாரணை செய்வதாக …
இஸ்மாயில் சப்ரி: பினாங்கை ஆளும் அதிகாரத்தை மீண்டும் பிஎன்னுக்கே தாருங்கள்
பினாங்கு வாக்காளர்கள், டிஏபி அதன் எட்டாண்டுக்கால ஆட்சியில் எழுந்த பல பிரச்னைகளுக்குத் தீர்வுகாணவில்லை என்பதால் பினாங்கை ஆளும் அதிகாரத்தை மீண்டும் பிஎன்னுக்கே தர வேண்டும் . டிஏபி அதன் தேர்தல் அறிக்கையில் கூறிய வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிவிட்டது என்று அம்னோ உச்சமன்ற உறுப்பினர் இஸ்மாயில் சப்ரி யாக்கூப் கூறினார்.…


