கோலா குபு பாரு மாநில இடைத்தேர்தலுக்கான இரண்டு ஆரம்ப வாக்குப்பதிவு மையங்கள் இன்று காலை 8 மணிக்கு மலேசியன் ராணுவ போலீஸ் கல்லூரி மற்றும் ராணுவ சிக்னல்ஸ் ரெஜிமென்ட்டின் 4 வது காலாட்படை பிரிவின் பல்நோக்கு அரங்குகளில் ஒரே நேரத்தில் திறக்கப்பட்டன. ஆரம்பகால வாக்களிப்பு செயல்முறை 625 போலீஸ்…
ஐஜிபி: என்எஸ்டி கடத்தப்பட்ட அதிகாரிக்கு ஆபத்தை உண்டுபண்ணப் பார்க்கிறது
சாபாவின் பூலாவ் மாபுளில் கடத்தப்பட்ட போலீஸ் அதிகாரியை விடுவிக்க பிணைப்பணம் கோரப்பட்டிருப்பதாக செய்தி வெளியிட்டதன்வழி ஆங்கில நாளேடான நியு ஸ்ரேய்ட்ஸ் டைம்ஸ், அவரை அபாயத்துக்கு உள்ளாக்கி இருக்கிறது என போலீஸ் படைத் தலைவர் காலிட் அபு பக்கார் சாடியுள்ளார். அச்செய்தியைத் தள்ளுபடி செய்த காலிட், மக்கள் “வதந்திகளை நம்பக் …
காலிட்டின் தலைவிதியை கட்சி நிர்ணயிக்கும்
கட்சியின் தலைமைத்துவப் பொறுப்பில் எவரும் "நிரந்தரமாக" இருப்பாரா என்பதை கட்சிதான் முடிவு செய்யும், எந்த தனிப்பட்டவரும் அல்ல என்று பிகேஆர் கட்சியின் நடப்பியல் தலைவர் அன்வார் இப்ராகிம் இன்று காலிட் இப்ராகிம் தமது மந்திரி புசார் பதவின் இரண்டாவது தவணை முடிவடையும் தொடர்ந்து இருக்கப் போவதாக கூறியிருந்தது…
காலிட் : அடுத்த தேர்தல்வரை நானே மந்திரி புசார்
காலிட் இப்ராகிம் அடுத்த பொதுத் தேர்தல்வரை தாமே சிலாங்கூரின் மந்திரி புசார் என்பதை மீண்டும் வலியுறுத்தியுள்ளார். ஆனால், ஹரி ராயாவுக்குப் பின் அவர் இருக்க மாட்டார் என்று ஒரு செய்தி உலா வந்துகொண்டிருக்கிறது. இன்று செய்தியாளர் கூட்டமொன்றில் பேசிய காலிட், கடந்த பொதுத் தேர்தல் வெற்றிக்குப் பின்னர் மக்களுக்கு …
ஐஜிபி: சஞ்சீவன் போலீசைக் களங்கப்படுத்துகிறாரே தவிர, ஆதாரம் காண்பிப்பதில்லை
குற்றச்செயல் கண்காணிப்பு என்ஜிஓ-வான மைவாட்ச்-இன் தலைவர் ஆர்.ஸ்ரீசஞ்சீவன், போலீஸ் அதிகாரிகளின் தவறான நடத்தைகள் பற்றிக் குற்றம் சொல்கிறாரே தவிர ஆதாரங்களைக் கொடுப்பதில்லை என்கிறார் இன்ஸ்பெக்டர்-ஜெனரல் அப் போலீஸ் காலிட் அபு பக்கார். அவரைச் சந்திக்க அதிகாரிகளை அனுப்பி வைத்தபோது சஞ்சீவன் ஒத்துழைக்க மறுத்தார் என்றும் காலிட் கூறினார்.இதன் விளைவாக, …
ரபிஸி: தீபக்கின் கடனில் அமைச்சருக்கு சம்பந்தம் உண்டு என்பதற்குக் கடிதமே…
ரபிஸி ரம்லி ஒரு ஆவணத்தைக் காண்பித்து அது, பேங்க் ரக்யாட்டின் நிர்வாகத்தில் உள்நாட்டு வணிக, கூட்டுறவு, பயனீட்டாளர் விவகார அமைச்சர் ஹசான் மலேக் தலையிட்டிருப்பதற்கான சான்று எனக் கூறியுள்ளார். அந்த வங்கி, கம்பள வியாபாரியான தீபக் ஜெய்கிஷனுக்குச் சிறப்புச் சலுகை காட்ட அதுதான் காரணம் என்றும் பிகேஆர் வியூக …
அம்னோவில் சேராதீர்: காலிட்டுக்கு ஜைட் அறிவுரை
சர்ச்சையில் சிக்கிக் கொண்டிருக்கும் சிலாங்கூர் மந்திரி புசார் காலிட் இப்ராகிமுக்கு முன்னாள் அமைச்சர் ஜைட் இப்ராகிம் அறிவுரை ஒன்றை முன்வைத்துள்ளார். என்ன நடந்தாலும், அம்னோவில் மட்டும் சேராதீர்கள் என்பதுதான் அது. அது காலிட்டின் புகழுக்குக் களங்கமாக அமையும், அவரது எதிர்காலமும் இருண்டுபோகும் என்றவர் எச்சரித்தார். “காலிட் அம்னோவில் சேர்ந்தால் …
மாட் சாபு: எம்பி மாற்றத்தில் பிரச்னை ஏதுமில்லை
பாஸ் துணைத் தலைவர் முகம்மட் சாபு சிலாங்கூர் அரசின் தலைமைத்துவதில் மாற்றம் செய்யப்படுவதை வரவேற்பதுபோல் தெரிகிறது. தலைமையில் மாற்றங்கள் நிகழ்வது ஒன்றும் புதிதல்லவே என்கிறார் அவர். “தலைவர் மாற்றப்பட்டால் என்ன, அது ஒரு பிரச்னையே அல்ல. திரெங்கானுவில் நடக்கவில்லையா. அப்போது ஊடகங்கள் அதைப் பெரிதுபடுத்தவில்லையே”, என நேற்று கப்பாலா …
‘யூதர்கள் தயாரிக்கும் சிகரெட்டுகளைப் புகைப்பவர்கள் இஸ்ரேலுக்கு உதவுகிறார்கள்’
யூதர் நிறுவனங்கள் தயாரிக்கும் சிகரெட்டுகளைப் புகைக்கும் முஸ்லிம்கள் பாலஸ்தீன மக்கள் கொல்லப்படுவதற்கு உடந்தையாக இருக்கிறார்கள் என பினாங்கு பயனீட்டாளர் பாதுகாப்புச் சங்கம் கூறுகிறது. அதன் தலைவர் கொரிஸ் அடான், அந் நிறுவனங்கள், அவற்றின் ஆதாயத்தில் 10 விழுக்காட்டை இஸ்ரேலுக்குக் கொடுத்து அதன் முஸ்லிம் அண்டை நாடுகளுடன் போரிட உதவுகின்றன …
எம்டியுசி வாரத்தில் ஐந்து-நாள் வேலை கோருகிறது
தனியார்துறையில் உற்பத்தி திறணை அதிகரிக்கும் பொருட்டு வாரத்தில் ஐந்து-நாள் வேலை முறையை கட்டாயமாக்குமாறு மலேசிய தொழிற்சங்க காங்கிரஸ் அரசாங்கத்தை வேண்டிக்கொண்டுள்ளது. அவ்வாறு செய்வது அரசாங்க இலாகாவின் வேலை நாட்களுடன் சுமுகமான நடைமுறைகளைப் பின்பற்ற உதவியாக இருக்கும் அந்த அமைப்பின் துணைத் தலைமைச் செயலாளர் எ.பாலசுப்ரமணியம் பெர்னாமாவிடம் கூறினார்.
பாஸ்: இஸ்ரேலுடனான வாணிகத்தை நிறுத்துங்கள்
பாலஸ்தீனத்திற்கு எதிராக இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்களை நிறுத்துவதற்கு அழுத்தம் கொடுக்கும் நோக்கத்தோடு மலேசியா அந்நாட்டுடன் கொண்டிருக்கும் கோடிக்கணக்கான ரிங்கிட் மதிப்புள்ள வாணிகத்தை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று பாஸ் இளைஞர் பிரிவு அரசாங்கத்தை கேட்டுக் கொண்டுள்ளது. கூட்டரசு பிரதேச பாஸ் இளைஞர் பிரிவு துணத் தலைவர்…
மகாதிர் நஜிப்பைக் குறைகூறுவது தவறு என்கிறார் அம்னோ எம்பி
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் ஒரு வலுவான தலைவர் அல்லர் என்று முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் குறிப்பிட்டிருப்பதை அம்னோ எம்பி நவாவி அஹ்மட் மறுக்கிறார். நஜிப், வலுவான தலைவராக இருந்தால் பசிபிக் வட்டார பங்காளித்துவ ஒப்பந்தத்தை (டிபிபிஏ) நிராகரித்திருப்பார் என்றும் அந்நிய நெருக்குதலுக்கு வளைந்து கொடுத்திருக்க …
பாஸ்: தீபக்கின் கடன் ரிம215 மில்லியன்
கம்பள வியாபாரி தீபக் ஜெய்கிஷன் பேங்க் ரக்யாட்டுக்குக் கொடுக்க வேண்டிய கடன் எல்லாரும் நினைப்பதுபோல் ரிம32 மில்லியன் அல்ல, அவருக்கு மேலும் இரு கடன்கள் உள்ளன, அவற்றையும் சேர்த்தால் மொத்த கடன் ரிம215 மில்லியனைத் தாண்டும். இவ்வாறு தெரிவித்த பாஸ் தகவல் பிரிவுத் தலைவர் மாபுஸ் ஒமார், மூன்று …
சுரேந்திரன்: எஸ்ஐடிஎப் ஏற்கனவே இந்தியர்களை ஏமாற்றிய ஒன்றுதான்
நாடற்ற இந்தியர்கள், இந்திய சமூகம் மீதான சிறப்பு அமலாக்கப் பணிக்குழு (எஸ்ஐடிஎப்)வில் பதிந்துகொள்ளுமாறு மஇகா துணைத் தலைவர் டாக்டர் எஸ்.சுப்ரமணியம் கேட்டுக்கொண்டிருப்பதை எதிரணி எம்பி ஒருவர் சாடியுள்ளார். மலேசிய அடையாள அட்டை(மைகாட்) இல்லாதிருக்கும் இந்தியர்களுக்கு மைகாட் கிடைப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்யும் பொறுப்பு ஏற்கனவே இக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டதையும் அது அதைச் …
கட்சியில் சேர காலிட்டை அழைக்கவில்லை: பாஸ் மறுப்பு
சனிக்கிழமை நடந்த சந்திப்பின்போது சிலாங்கூர் மந்திரி புசார் அப்துல் காலிட் இப்ராகிமைத் தன்னுடன் சேர்ந்துகொள்ளுமாறு அழைத்ததாகக் கூறப்படுவதை பாஸ் மறுக்கிறது. நோன்பு மாதம் என்பதால் பாஸ் தலைவர் அப்துல் ஹாடி ஆவாங்கும் தாமும் மந்திரி புசாரைப் பார்க்கப்போனதாக அக்கட்சியின் தலைமைச் செயலாளர் முஸ்தபா அலி கூறினார். “நோன்பு மாதம் …
இஸ்கண்டர் திட்டத்தை எதிர்க்கும் மகாதிருக்கு பாஸ் ஆதரவு
முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் இஸ்கண்டர் மலேசியா திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதைத் தொடர வேண்டும் என்று வலியுறுத்திய பாஸ், அவ்விவகாரத்தில் அவரை முழுக்க முழுக்க ஆதரிப்பதாகக் கூறியது. இஸ்கண்டர் திட்டம் சிங்கப்பூர் அதன் இறையாண்மையை விரிவுபடுத்துவதற்கான ஒரு முகப்பு என்று கூறும் மகாதிர் அதை மட்டும் ஆதாரங்களுடன் நிரூபிப்பாரானால்…
பயங்கரவாதிகளுக்கும் கடத்தல்காரர்களுக்கும் புகலிடமா சாபா?
சாபா, கடத்தல்கார்களுக்கும் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பளிக்கும் புகலிடமாக மாறியுள்ளாதா எனக் கேள்வி எழுப்புகிறார் சாபா ஸ்டார் கட்சித் தலைவரும் பிங்கோர் சட்டமன்ற உறுப்பினருமான ஜெப்ரி கிட்டிங்கான். எல்லைப்பகுதியில் கட்டுப்பாடு இல்லாதிருப்பதாலும் மலேசிய அடையாள அட்டைகள் அள்ளிக்கொடுக்கப்பட்டிருப்பதாலும் சாபாவின் பாதுகாப்பு மோசமடைந்துள்ளது. இதனால் சாபா “பயங்கரவாதிகளுக்கும், தீவிரவாதிகளுக்கும், கடத்தல்காரர்களுக்கும் புகலிடமாக” மாறியுள்ளது …
மைகாட் இல்லாத இந்தியர்கள் பணிக்குழுவில் பதிந்துகொள்ளலாம்
மலேசிய அடையாள அட்டை(மைகாட்) இல்லாதிருக்கும் இந்தியர்கள், இந்தியர் சமூகம் மீதான சிறப்பு அமலாக்கப் பணிக்குழு (எஸ்ஐடிஎப்)வில் தங்களைப் பதிந்துகொள்ள வேண்டும் என அக்குழுத் தலைவர் டாக்டர் எஸ்.சுப்ரமணியம் கேட்டுக்கொண்டுள்ளார். 1957-க்கு முன்னதாக மலேசியா வந்தவர்களும் 1957-க்குப் பிறகு மலேசியாவில் பிறந்தவர்களும் மைகாட் இல்லாதிருப்பதற்குக் காரணம் ஏதுமில்லை என மஇகா …
அம்பிகா தீவிரவாதத்தை ஈர்க்கக்கூடும், உத்துசான் உளறுகிறது
இனவாதத்தை எதிர்ப்பதற்காக சமீபத்தில் அம்பிகா அறிவித்த புதிய அரசு சார்பற்ற அமைப்பு அநோக்கத்திற்கு மாறாக இனவாதத்தை ஈர்க்கக்கூடும் என்று அம்னோவுக்கு சொந்தமான உத்துசான் மலேசியா உளறிக்கொட்டியுள்ளது. "அவருக்கு (அம்பிகாவுக்கு) எதிரான மலேசிய மக்களின் சினம், குறிப்பாக முஸ்லிம்களுக்கிடையில் பல்வேறு பிரச்சனைகளில், இன்னும் அடங்காமல் இருக்கிறது", என்று அந்நாளிதழின்…
நஜிப் சாபா சென்ற வேளையில் மாபுள் தீவில் துப்பாக்கிச் சூட்டுச்…
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் நேற்றிரவு கோத்தா கினாபாலுவில் கால் பதித்த வேளையில் செம்பூர்னாவில் துப்பாக்கிச் சண்டை நிகழ்ந்திருக்கிறது. அச்சம்பவத்தில் போலீஸ்காரர் ஒருவர் கொல்லப்பட்டதாகவும் இன்னொருவர் கடத்தப்பட்டதாகவும் சாபா வட்டாரமொன்று தெரிவித்தது. நேற்றிரவு சுமார் 11.30 மணி அளவில், பிலிப்பினோக்கள் என்று நம்பப்படும் எண்மர் இராணுவ சீருடையில் செம்பூர்னாவுக்கு …
செம்பூர்னா துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் நஜிப்பை அவமதிக்கும் செயலாகும்
நேற்றிரவு செம்பூர்னாவில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் மலேசியப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்குக்கு மதிப்போ, மரியாதையோ இல்லை என்பதைக் காண்பிப்பதாக பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங் கூறினார். “பிரதமர் சாபாவில் கால்வைத்த வேளையில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள் என்றால், அவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள்? “அவர்கள் …
கோபிந் சிங்: காலணியை வீசிய ஆசிரியர் மீது சட்ட நடவடிக்கை…
நெகிரி செம்பிலான் மாநிலத்தில் ஒரு தொடக்கப்பள்ளி மாணவி மீது தமது காலணியை வீசி அம்மாணவிக்கு காயம் விளைவித்தாக கூறப்படும் ஆசிரியர் மீது அரசாங்கம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் கோபிந்த் சிங் அரசாங்கத்தை கேட்டுக் கொண்டுள்ளார். சம்பந்தப்பட்ட அந்த ஆசிரியை நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு…
போலீஸ் அதிகாரி மீது பாலியல் குற்றம் சாட்டிய சஞ்சீவன் விசாரிக்கப்படுகிறார்
குற்ற எதிர்ப்பு அரசு சார்பற்ற அமைப்பான மைவாச் (MyWatch) தலைவர் ஆர். சஞ்சீவன் பெயரிடப்படாத ஒரு மூத்த போலீஸ் அதிகாரியின் (ஆட்சியாளரிடமிருந்து சிறப்புமிக்க பட்டமும் பெற்றுள்ளவர்) மீது சாட்டிய பாலியல் விவகாரம் குறித்த குற்றச்சாட்டிற்காக போலீசாரால் தாம் விசாரிக்கப்படுவதாக கூறுகிறார். போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரல் அலுவலகம் (ஒழுங்கு…
அம்பிகா, சாமாட் தலைமையில் நாட்டை புணரமைக்க நெகாரா-கு மக்கள் இயக்கம்
இன மற்றும் இனவாத சர்ச்சைகள் மலேசிய பல்லின மக்களுக்கிடையில் இதுவரையில் நிலவிய வந்த அமைதி மற்றும் நல்லிணக்கம் ஆகியவற்றுக்கு பெரும் மிரட்டலை உருவாக்கி வரும் இக்காலகட்டத்தில் மக்களுக்கு நம்பிக்கையை ஊட்டி, ஆளுமை அளித்து நாட்டை புணரமைக்கும் நோக்கத்தைக் கொண்ட ஒரு மக்கள் இயக்கம் பெர்சேயின் முன்னாள் கூட்டு…