தென் பிலிப்பீன்ஸ் நில நடுக்கத்தில் நால்வர் பலி

நேற்று   பின்னேரம்   பிலிப்பீன்சின்   மிண்டானாவ்   தீவைத்   தாக்கிய    நில   நடுக்கத்தில்   நால்வர்   உயிரிழந்தனர்   100க்கு   மேற்பட்டோர்    காயமடைந்தனர். கட்டிடங்கள்   சில    சேதமடைந்ததாகவும்    பல    இடங்களில்    மின்  விநியோகம்    தடைப்பட்டதாகவும்   அதிகாரிகள்    தெரிவித்தனர். அந்நிலநடுக்கம்  சூரிகாவ்   நகருக்கு   13கிலோ   மீட்டர்  தொலைவில்   10கிலோ   மீட்டர்    ஆழத்தில்   மையம்     கொண்டிருந்ததாக     யுஎஸ்  …

‘கிள்ளான் தடுப்புக் காவல் மரணம் ஒரு கொலை என வகைப்படுத்தப்பட…

தடுப்புக்   காவலில்   இருந்தபோது   உயிரிழந்த   எஸ்.பாலமுருகன்     குடும்பத்தாரின்    வழக்குரைஞர்கள்   அந்த   இறப்பு   மீதான விசாரணை   விரைவாகவும்   சுதந்திரமாகவும்  நடைபெற   அது      ஒரு  கொலையாக      வகைப்படுத்தப்பட   வேண்டும்    என்கிறார்கள். பாலமுருகன்   வட   கிள்ளான்   போலீஸ்   நிலையத்தில்   இறந்து   நான்கு   நாள்கள்   கடந்து   விட்டன.  அதன்    தொடர்பில்    இதுவரை    ஒரு   போலீஸ்காரர்கூட  …

மூத்த அமைச்சர் விலகலா? அது குறும்புப் பேச்சு- முஸ்டபா சாடல்

மூத்த    அமைச்சர்    ஒருவர்    பதவி    விலகுவதாக   உலவும்    வதந்திக்குப்  பொதுமக்கள்    செவிசாய்க்கக்  கூடாது     என   அனைத்துலக  வாணிக,  தொழில்   அமைச்சர்   முஸ்டபா   முகம்மட்   வலியுறுத்தினார். “தேர்தல்   நெருங்க   நெருங்க   இப்படிப்பட்ட    அதிகபிரசங்கித்தனங்கள்   அதிகமாகும்.   சமூக   வலைத்தளங்களில்   பரப்பிவிடப்படும்    இப்படிப்பட்ட     செய்திகளை   மலேசியர்கள்   நம்பிவிடக்  கூடாது”,  என்று   நேற்றிரவு   கோட்டா  …

நஜிப்: மேன்டரின் மொழியைக் கற்றுக்கொள்ளுங்கள்

  மலேசியர்கள் பல மொழிகளில் தேர்ச்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும். சீனமொழியான மேன்டரினைக் கற்றுக்கொள்ள வேண்டியதின் அவசியத்தை பிரதமர் நஜிப் வலியுறுத்தினார். சீனா இன்று உலகளவில் ஒரு பொருளாதார வல்லரசாக உருவெடுத்துள்ளது. மேன்டரின் மொழியைக் கற்றுக்கொள்வது அந்நாட்டினுடனான நமது உறவை வலுப்படுத்தும் என்று நேற்று கூச்சிங்கில் எஸ்ஜேகே(சீ) சங்…

ஸைட் இப்ராகிம்: சொந்தக் கருத்துகள் கூறுவதை நான் நிறுத்த வேண்டியுள்ளது

  மகாதிர் முகமட்தான் எதிரணியின் நடப்பில் தலைவர் என்று கூறியதற்காக கடுமையாகக் கடிந்துரைக்கப்பட்டதைத் தொடர்ந்து தாம் இனிமேல் தமது சொந்தக் கருத்துகள் தெரிவிப்பதை நிறுத்திகொள்ள வேண்டியுள்ளது என்று முன்னாள் சட்ட அமைச்சர் ஸைட் இப்ராகிம் ஏளனத் தொனியுடன் தமது பதிலை டிவிட் செய்துள்ளார். மகாதிர் எதிரணியின் நடப்பில் தலைவர்…

தேசிய பத்திரிகையாளர் தினத்துக்கு ஊடகவியலாளர்கள் வரவேற்பு

மலேசியா   தேசிய  பத்திரிகையாளர் தினம்  ஒன்றைக்  கொண்டிருக்க    வேண்டும்   என்று  தொடர்பு, பல்லூடக   அமைச்சர்    சாலே சைட் குருவாக் முன்மொழிந்திருப்பதை   ஊடகவியலாளர்கள்   வரவேற்கின்றனர். மலேசிய   தேசிய   செய்தி நிறுவனமான   பெர்னாமாவின்   பொது   மேலாளர்  சுல்கிப்ளி சாலே,   அது    நடைமுறை   சாத்தியமான,      காலத்திற்கு   ஏற்ற  பரிந்துரை   என்று அவர் சொன்னார்.…

இராமசாமி: சுப்ராதான் தைப்பூசத்தில் அரசியலைக் கலக்கிறார்

மஇகா    தலைவர்    டாக்டர்   எம்.சுப்ரமணியம்தான்    சமயத்தில்   அரசியலைக்  கலப்பதாக   பினாங்கு   துணை  முதலமைச்சர்  II பி.இராமசாமி    சாடியுள்ளார். ஆன்மிகம்    பேசும்    சுப்ரமணியம்   அதைப்  பின்பற்றவில்லை    என்று  இராமசாமி  விளாசினார். “இந்தியர்களைக்   கைவிட்டு    வெளிநாட்டவரான    செட்டியார்களை   ஆதரிக்கும்   அவர்   எந்த     ஆன்மிகத்தைப்   பற்றிப்   பேசுகிறார்?”,  என   இராமசாமி   வினவினார். “உண்மையான  …

குவான் எங் தைப்பூசத்தில் பேசியது சினமூட்டும் பேச்சு: மஇகா தலைவர்…

பினாங்கு   தைப்பூசத்   திருவிழாவில்   பினாங்கு   முதலமைச்சர்  லிம்   குவான்   எங்   ஆற்றிய   உரை     உணர்ச்சியைத்   தூண்டுவதாக    இருந்தது     என   மஇகா   தலைவர்    சாடினார். நேற்று   பினாங்கு    தண்ணீர்மலை   கோயிலுக்குச்    சென்றபோது   அவரது   உரையைக்   கேட்க   நேரிட்டது   என  சுப்ரமணியம்    கூறினார். “நான்  பினாங்கு   தண்ணீர்மலை   கோயில்    வளாகத்தினுள்   நுழைந்ததும்  …

ஜைட்: பார்டி கித்தா, ‘நான் செய்த ஒரே தவறு’

முன்னாள்   சட்ட   அமைச்சர்   ஜைட்  இப்ராகிம்,  பார்டி   செஜாத்ராஆன்   இன்சான்   தானா  ஆயர்(கித்தா)      அமைத்ததுதான்   தான்    செய்த   தவறு,  அதுவும்    ஒரே   தவறு    என்பதை    ஒப்புக்கொள்கிறார். நிதியியல்      இணையத்தளமான    iMoney-க்கு    நேர்காணல்    வழங்கிய   அவரிடம் , பிகேஆரிலிருந்து   விலகியதும்   அவர்   பார்டி   கித்தா   அமைக்க   முடிவெடுத்தது   குறித்து   வினவப்பட்டது.…

தடுப்புக்காவல் மரணம்: சம்பந்தப்பட்ட அதிகாரியை இடைநீக்கம் செய்ய சுவாராம் கோரிக்கை

மலேசிய   மனித   உரிமைக்  கழகமான   சுவாராம்,     தடுப்புக்  காவலில்   அடிக்கடி   உயிரிழப்பு   நேர்வதை    எண்ணி  வருத்தமுறுகிறது. இதை    இன்று   ஓர்     அறிக்கையில்    தெரிவித்த   அக்கழகம்,   புதன்கிழமை   வட  கிள்ளான்   போலீஸ்    தலைமையகத்தில்    மரணமடைந்த   எஸ்.பாலமுருகனின்   வழக்கில்   சம்பந்தப்பட்ட   விசாரணை  அதிகாரி(ஐஓ)யை    பதவி  இடைநீக்கம்   செய்ய   வேண்டும்   என்றது. “தடுப்புக் …

மகாதிர்: முகைதின் பாராட்டியது நஜிப்பின் அம்னோவை அல்ல

மலேசியாவின்    மேம்பாட்டுக்கு    அம்னோவும்   பிஎன்னும்தான்   காரணம்    என்று   பார்டி   பிரிபூமி  பெர்சத்து    மலேசியா (பெர்சத்து)  தலைவர்   முகைதின்   யாசின்   பாராட்டியதும்    பிரதமர்   நஜிப்    அப்துல்   ரசாக்கின்  துதிபாடிகள்   துள்ளிக்  குதித்தார்கள்   என   டாக்டர்   மகாதிர்    மகாதிர்   முகம்மட்    கூறினார். ஆனால்,    முகைதின்   பாராட்டியது   அன்றையை   அம்னோ/பிஎன்னை.  இவர்களோ   இப்போதைய   …

ஹமிடி: தைப்பூசத் திருவிழா சுற்றுப்பயண வளர்ச்சித்திட்டத்தின் ஒரு பொருளாக ஊக்குவிக்கப்பட…

  துணைப் பிரதமர் அஹமட் ஸாகிட் ஹமிடி இன்று பத்துமலையில் தைப்பூசத் திருவிழாவில் கலந்துகொண்டு பேசுகையில் அதிகமான சுற்றுலாப் பயணிகளைக் கவர்வதற்கு, குறிப்பாக இந்தியச் சுற்றுப்பயணிகளையும் உலகம் முழுவதிலுமுள்ள இந்து சமயத்தைப் பின்பற்றுபவர்களையும், இந்நாட்டில் கொண்டாடப்படும் தைப்பூசத் திருவிழா ஒரு சுற்றுப்பயணத் திட்டத்தின் பொருளாக ஊக்குவிக்கப்பட வேண்டும் என்று…

தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த பாலமுருகன் மரணம்: இஎஐசி விசாரிக்கும்

  நேற்று காலையில் தடுப்புக்காவல் சிறையில் மரணமடைந்ததாகக் கூறப்படும் எஸ். பாலமுருகன் மரணம் குறித்து இஎஐசி (Enforcement Agency Integrity Commission)என்ற நிறுவனம் விசாரணை மேற்கொள்ளும். "இச்சம்பவத்தை இஎஐசி கடுமையானதாகக் கருதுகிறது. ஆகவே, இந்த விசாரணை வெளிப்படையாக, சுயேட்சையாக மற்றும் சார்பற்ற முறையில் நடத்தப்படும்", என்று இஎஐசி தலைவர்…

இஸ்லாமிய அரசியல் அதிகாரத்தை பலவீனப்படுத்தியவர் மகாதிர், பழிபோடுகிறார் ஹாடி

  இஸ்லாமிய அரசியல் அதிகாரம் பலவீனமானதற்கு முன்னாள் பிரதமர் மகாதிர் மீது பழிபோடுகிறார் பாஸ் கட்சியின் தலைவர் அப்துல் ஹாடி அவாங். நாட்டில் 65 விழுக்காட்டினர் முஸ்லிம்களாக இருந்தும் இது நடந்திருக்கிறது. "இஸ்லாமிய அரசியல் அதிகாரம் மிகப் பலவீனமாக இருக்கிறது. இதற்கு காரணம் டாக்டர் மகாதிர் முகமட். அவர்…

பத்துமலைக் கடைகளை மலாய்க்காரர்கள் ஆக்கிரமித்துக்கொள்ளவில்லை, கோயில் அறங்காவலர் கூறுகிறார்

  பத்துமலை வளாகத்திலுள்ள கடைகளை மலாய்க்காரர்கள் எடுத்துக்கொண்டுள்ளனர் என்ற குற்றச்சாட்டுகளை கோயில் அறங்காவலர் என். சிவகுமார் மறுத்தார். "நாங்கள் யாரையும் தடுத்துநிறுத்துவதில்லை, அதனால்தான் நாம் 1மலேசியா என்கிறோம்", என்று சிவகுமார் மலேசியாகினிக்கு அளித்த நேர்காணலில் கூறினார். "அமைக்கப்பட்ட 350 கடைகளில் 70 விழுக்காடு கடைகள் இந்தியர்களுக்கு சொந்தம்", என்றாரவர்.…

அனுவார்: மாரா தணிக்கைக் குழு விசாரணைக்குச் செல்ல வேண்டும் என்பது…

மாரா    தலைவர்   பொறுப்பிலிருந்து    தற்காலிகமாக    நீக்கப்பட்டுள்ள  அனுவார்   மூசா,    இன்று   மாரா   கணக்குத்   தணிக்கைக்  குழுவிடம்   வாக்குமூலம்   அளிக்க  வேண்டும்   என்பது    தமக்குத்   தெரியாது    என்றார். “எனக்குத்   தெரியாது. என்னை  அழைக்கவுமில்லை,    தெரிவிக்கவுமில்லை.  மாராவிடம்தான்    நீங்கள்   கேட்க   வேண்டும்”,  என்றார். அனுவார்  இன்று     மாரா   கணக்குத்   தணிக்கைக்  குழுவின்  …

ஐஜிபி: செல்வா போலீசுடன் ஒத்துழைப்பார்

பாலியல்  குற்றங்களுக்காகவும்   வேறு   பல    குற்றங்களுக்காகவும்  கனடாவில் 24 ஆண்டுகள் சிறைத் தண்டனை   அனுபவித்து  விட்டு     மலேசியா    திரும்பிய    எஸ்.  செல்வகுமார்  குறித்து   பொதுமக்கள்   கவலை   கொள்ள   வேண்டியதில்லை  என  இன்ஸ்பெக்டர்- ஜெனரல்   அப்   போலீஸ்   காலிட்   அபு  பக்கார்    கூறினார். செல்வா   போகுமிடங்கள்   குறித்து   தகவல்   தெரிவித்து  …

செல்வகுமாருக்கு சரவாக்கும் தடை விதித்தது

சாபாவைப்   பின்பற்றி    சரவாக்கும்  பாலியல்    குற்றவாளி   எஸ். செல்வகுமாருக்குத்   தடை     விதித்துள்ளாது. செல்வகுமார்   அம்மாநிலத்துக்குள்   நுழைய   முயன்றால்   தடுக்குமாறு   மாநில  அதிகாரிகள்   உத்தரவிட்டிருப்பதாக    மாநில  குடிநுழைவுத்  துறை   இயக்குனர்  கென்   லெபன்   கூறினார். செல்வகுமாரை    மாநிலத்துக்குள்   அனுமதிக்கக்   கூடாது   என்று   சரவாக்கில்    பலரும்   வலியுறுத்தி   வந்துள்ளனர். பாலியல்  குற்றங்களுக்காகவும்  …

அமனா: பூலாவ் பத்து பூத்தே வழக்கை வைத்து தேர்தல் பிரச்சாரம்…

அரசாங்கம்  பூலாவ்  பத்து   பூத்தே   உரிமையாளர்   குறித்து    அனைத்துலக    நீதிமன்றம் (ஐசிஜே)   அளித்த   தீர்ப்பை    மாற்றுவதற்காக    முயற்சி  மேற்கொண்டிருப்பது   சரி,  ஆனால்   அதைத்   தேர்தல்   பிரச்சாரத்துக்குப்   பயன்படுத்திக்  கொள்ளக்கூடாது   என்கிறது   பார்டி   அமனா   நெகரா(அமனா). “பூலாவ்   பத்து   பூத்தே   மீது   உரிமை   கொண்டாடுவதைத்   தேர்தல்  பரப்புரையாக்கி    அதன்  மூலமாக …

ஊழல் தொடர்பில் இந்தோனேசிய அதிகாரி மலேசியாவில் கைது

இந்தோனேசிய   ஊழல்   ஒழிப்பு  ஆணையம் (கேபிகே),     இந்தோனேசிய   தூதரக    அதிகாரி   ஒருவரை    கைது   செய்துள்ளது. நேற்று   கோலாலும்பூரில்  உள்ள   அவரது   அலுவலகத்தில்   கைது    செய்யப்பட்ட    அவ்வதிகாரி    குற்றச்சாட்டை     எதிர்நோக்க   விரைவில்   ஜாகார்த்தா   கொண்டு   செல்லப்படுவார்    என   கேபிகே    பொது உறவுப்   பிரிவுத்  தலைவர்   ஃபெப்ரி   தியான்ஷா   இன்று   கூறினார்.…

ஊழல் விவகாரங்களை விசாரிக்க ஆர்சிஐ: பெர்காசா ஆதரவு

நாட்டில்   ஊழல்  விவகாரங்களை   விசாரணை    செய்ய    அரச  விசாரணை   ஆணையம்   அமைக்கப்பட    வேண்டும்    என்று   கூறப்படுவதை    மலாய்க்காரர்  உரிமைக்காக    போராடும்   பெர்காசா   வரவேற்கிறது. பூமிபுத்ரா  மலேசியா  பைனான்ஸ் (பிஎம்எப்),  1எம்டிபி,  எஸ்ஆர்சி  இண்டர்நேசனல்,     சட்டத்துக்குப்  புறம்பாக    மரங்களை   வெட்டுதல்,   அரசாங்கத்  துறைகள்,   அரசுதொடர்பு    நிறுவனங்கள்  முதலியவற்றில்    ஊழல்கள்   குறித்து  …

பாலியல் குற்றவாளி செல்வகுமார் மலேசியா திரும்பினார்

பாலியல்  குற்றங்களுக்காகவும்   வேறு   பல    குற்றங்களுக்காகவும்  கனடாவில் 24 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்த  செல்வகுமார்    சுப்பையா    இன்று  காலை   7.30க்கு   கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம்   வந்தடைந்தார். 56வயது   நிரம்பிய    அவரை   கனடா   போலீஸ்   அதிகாரிகள்  அழைத்து   வந்ததாக    செல்வா  குடும்பத்துக்கு   நெருக்கமான   ஒருவர்    தெரிவித்ததாக   ஃப்ரி  …

முப்தி செய்தி தொடர்பில் மன்னிப்பு கேட்க பிஎச்-சுக்கும் என்எஸ்டிக்கும் 48மணி…

பினாங்கு   முதல்வர்   லிம்  குவான்   எங்,  பெரித்தா   ஹரியானுக்கும்   நியு   ஸ்ரேய்ட்ஸ்   டைம்சுக்கும்   அவை   மாநில   முப்தி   நியமனம்   தொடர்பில்   வெளியிட்ட   செய்திகளை    மீட்டுக்கொண்டு   மன்னிப்பு    கேட்க   48மணி  நேர   அவகாசம்   கொடுத்திருக்கிறார். பினாங்கு    பாஸ்    இளைஞர்    தலைவர்    அப்னான்   ஹமிமியை   மேற்கோள்காட்டி      அந்நாளேடுகள்   வெளியிட்ட    செய்திகள்   முப்தியின்  …