மத்திய அரசு அண்மையில் அறிவித்த வீட்டிலிருந்து பணிபுரியும் நடைமுறையைத் தொடர்ந்து, பினாங்கு மாநில அரசு ஊழியர்களுக்கும் இந்த முறையைச் செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை மாநில அரசு ஆராயும் என்று முதல்வர் சாவ் கோன் இயோவ் தெரிவித்துள்ளார். மேற்காசிய மோதலால் ஏற்பட்டுள்ள உலகளாவிய எரிசக்தி நெருக்கடியின் தாக்கம் குறித்து, பிரதமர் அன்வர்…
அஸ்மின் குவான் எங்கைச் சந்தித்து திடீர் தேர்தல் குறித்து விவாதிப்பார்
பிகேஆர் துணைத் தலைவர் அஸ்மின் அலி இன்று பிற்பகல் பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங்கைச் சந்திக்கிறார். அச்சந்திப்பின்போது பினாங்கில் திடீர் தேர்தல் நடத்துவது தொடர்பில் பிகேஆரின் நிலைப்பாட்டை அஸ்மின் லிம்முக்குத் தெரியப்படுத்துவார் என்று அறியப்படுகிறது. அஸ்மினுடன் பிகேஆர் தேர்தல் இயக்குனர்கள் சைபுடின் நசுத்தியோன், உதவித் தலைவர் நூருல் …
அம்னோவைப் பின்பற்றி கட்சித் தேர்தலைத் தாமதப்படுத்தாதீர்: டிஏபிக்கு அறிவுறுத்து
லிம் குவான் எங் தொடர்ந்து தலைமைச் செயலாளராக இருக்க வேண்டும் என்பதற்காக டிஏபி கட்சித் தேர்தலைத் தாமதப்படுத்தக் கூடாது என இளைஞர் அமைப்பான சேலஞ்சர் கூறியது. கட்சித் தேர்தல்களைத் தள்ளிவைக்க முடிவெடுக்கப்பட்டிருப்பதாக டிஏபி நேற்று அறிவித்தது “ஏமாற்றமளிப்பதாக” அந்த அமைப்பின் தலைவர் சைட் சாதிக் சைட் அப்துல் ரஹ்மான் …
பிகேஆர் கூட்டத்தில் குவான் எங்: திடீர் தேர்தல் குறித்து விளக்குவார்?
பினாங்கில் திடீர் தேர்தல் நடத்துவது பற்றி முதலமைச்சர் லிம் குவான் எங் பிகேஆர் தலைவர்களுக்கு இன்று விளக்கமளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிகேஆர் அதன் அரசியல் பிரிவுக் கூட்டத்தை இன்று அதன் பெட்டாலிங் ஜெயா தலைமையகத்தில் நடத்தவுள்ளது. அதில் லிம்மும் கலந்து கொள்வார் என்று தெரிகிறது. லிம் கூட்டத்தில் கலந்து…
கோலாலம்பூர் – சிங்கப்பூர் அதிவேக ரயில் சேவைமீது புரிந்துணர்வு குறிப்பு…
கோலாலம்பூருக்கும் சிங்கப்பூருக்குமிடையில் அதிவேக ரயில் சேவை அமைக்கும் கடப்பாட்டை வலியுறுத்தி மலேசிய அரசாங்கமும் சிங்கப்பூர் அரசாங்கமும் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இன்று கையெழுத்திட்டன. பிரதமர்துறை அமைச்சர் அப்துல் ரஹ்மான் டஹ்லானும் சிங்கப்பூர் போக்குவரத்து மற்றும் உள்கட்டமைப்புத் துறை ஒருங்கிணைப்பு அமைச்சர் கா பூன் வானும் பிரதமர் நஜிப் அப்துல் …
போலீஸ் காவலில் சித்திரவதை செய்யப்பட்டதாக சஞ்சீவன் முறையீடு
குற்றச்செயல் தடுப்புச் சட்ட(பொகா)த்தின்கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசிய குற்றச்செயல் கண்காணிப்பு அமைப்பான மைவாட்ச்-இன் தலைவர் ஆர்.ஸ்ரீசஞ்சீவன், போலீஸ் காவலில் சித்திரவதைக்கு ஆளானதாகக் கூறிக் கொள்கிறார். அது பற்றி போலீசுக்குத் தெரியாது என்று கூறிய கோலாலும்பூர் போலீஸ் தலைவர் அமர் சிங் அதன் தொடர்பில் சஞ்சீவன் போலீசில் புகார் செய்தால் …
வழக்குரைஞர் தொழில் சட்டத்தின் உத்தேச திருத்தங்களில் தலையிட்டுக் குழப்பாதீர்: அஸலினா…
1976 வழக்குரைஞர் தொழில் சட்ட(எல்பிஏ)த்துக்கான உத்தேச திருத்தங்களைப் பிரதமர்துறை அமைச்சர் அஸலினா ஒத்மான் சைட் தற்காத்துப் பேசினார். அத்திருத்தங்கள் மலேசிய வழக்குரைஞர் மன்றத்தின் சுதந்திரத்துக்குக் குழிபறிக்கும் எனப் பலராலும் குறைகூறப்பட்டிருக்கிறது. “வழக்குரைஞர் மன்றத்தில் தலையிடும் நோக்கத்தில்தான் அரசாங்கம் எல்பிஏக்கு உத்தேச திருத்தங்களைக் கொண்டு வருகிறது என்று பல தரப்பினரும் …
அலுவல் பயணம் மேற்கொண்டு புத்ரா ஜெயா வந்தார் சிங்கை பிரதமர்
சிங்கப்பூர் பிரதமர் லீ ஹிசியான் லூங் உத்தேச கோலாலும்பூர்- சிங்கப்பூர் அதிவேக ரயில் (எச்எஸ்ஆர்) மீது புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்படும் நிகழ்வில் கலந்துகொள்ள ஒரு-நாள் அலுவல் பயணம் மேற்கொண்டு இன்று மலேசியாவின் நிர்வாகத் தலைநகரான புத்ரா ஜெயாவுக்கு வந்து சேர்ந்தார். பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், பிற்பகல் மணி …
காடிர் ஜாசின்: மகாதிர் கட்சியால் ஒன்றும் செய்ய முடியாது என்றால்…
டாக்டர் மகாதிர் முகம்மட் விரைவில் அமைக்கப்போகும் கட்சியால் எதுவும் ஆகாது என்று அதை ஒதுக்கித் தள்ளிய அம்னோ அதன்மீது தொடர்ந்து தாக்குதல் நடத்துவது ஏன் என்று மூத்த செய்தியாளர் ஏ.காடிர் ஜாசின் கேள்வி எழுப்பினார். “அம்னோ/பிஎன் தலைவர்களும் அவர்களுக்குத் துதி பாடுவோரும் மகாதிர் அண்மையில் அறிவித்த புதிய கட்சி …
பேங்க் நெகாராவின் வீட்டுக் கடன் கொள்கைகளில் தளர்வு தேவை- சிலாங்கூர்…
சிலாங்கூர் மந்திரி புசார் அஸ்மின் அலி, பேங்க் நெகாரா அதன் கடுமையான வீட்டுக் கடன் கொள்கைகளை மறுமதிப்பீடு செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். சிலாங்கூர்கூ திட்டத்தில் வீடுகள் கிடைக்கப் பெற்றோர் அவற்றுக்கு வங்கிக் கடன் பெற முடியவில்லை என மாநில அரசிடம் புகார் செய்திருப்பதை அடுத்து பிகேஆர் …
புதிய வாகன நிறுத்தக் கட்டணத்துக்கு பக்கத்தான் ஹராபான் எம்பிகள் எதிர்ப்பு
கூட்டரசுப் பிரதேச பக்கத்தான் ஹராபான் எம்பிகள் கோலாலும்பூரின் வர்த்தக மையப் பகுதியில் வாகன நிறுத்தக் க்ட்டணங்கள் உயர்த்தப்பட்டிருப்பதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பதற்கு கோலாலும்பூர் மேயர் முகம்மட் அமின் நோர்டின் அப்துல் அசிசை இன்று சந்தித்தனர். செராஸ் எம்பி டான் கொக் வாய், வாகன நிறுத்துமிடங்களை நிர்வகிக்கும் பொறுப்பு கூட்டரசுப் பிரதேச …
அஸ்மின்: புதிய கட்சிக்கு வரவேற்பு ஆனால், அதன் கொள்கைகளைப் பொறுத்தே…
புதிய கட்சிகள் உருவாகும்போது அவற்றை வரவேற்க வேண்டும் அதுதான் ஜனநாயக மரபு என்கிறார் பிகேஆர் துணைத் தலைவர் அஸ்மின் அலி. முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் புதிய கட்சி ஒன்றை அமைக்கப்போவதாக அறிவித்திருப்பது குறித்து எதிர்வினை ஆற்றியபோது சிலாங்கூர் மந்திரி புசார் இவ்வாறு கூறினார். ஆனால், அப்…
1எம்டிபி கணக்காய்வர்களுக்கு எதிரான புகார் என்னவாயிற்று? புவா கேள்வி
1எம்டிபி கணக்காய்வாளர்களான கேபிஎம்ஜி-க்கும் டூலிட்டல் மலேசியாவுக்கும் எதிராக தாம் செய்த புகார்கள்மீதான நடவடிக்கைகள் “ஆமை வேகத்தில்” நகர்கின்றன என்று குற்றஞ்சாட்டிய டிஏபி எம்பி டோனி புவா, அது ஏன் என்று மலேசிய கணக்காளர் கழகத் தலைவர் முகம்மட் பயிஸ் முகம்மட் அஸி விளக்க வேண்டுமெனக் கேட்டுக் கொண்டார். இவ்விவகாரம் …
காலிட்: புதிய கூட்டணியால் எதிரணியின் பிரச்னைகள் தீராது
முன்னாள் சிலாங்கூர் மந்திரி புசார் காலிட் இப்ராகிம் எதிரணியினர் எதிர்நோக்கும் பிரச்னைகளுக்குப் புதிய கூட்டணி ஒரு தீர்வாக அமையும் என்று நம்பவில்லை. அதில் இணையும் கட்சிகளுக்கு அரசாங்கத்தில் சில தரப்புகளை ஒழித்துக்கட்டுவதைத் தவிர வேறு தெளிவான கொள்கைகள் கிடையாது என்றாரவர். “இதன் மூலமாக அவர்கள் தங்களின் பிரச்னைகளுக்குத் தீர்வு …
எஸ்எம்இ: வருமானம் குறைந்துள்ள வேளையில் ஜிஎஸ்டியால் மேலும் பாதிப்பு
பொருள், சேவை வரி(ஜிஎஸ்டி) அமலாக்கம் செய்யப்பட்டதிலிருந்து சிறிய, நடுத்தரத் தொழில்களின் (எஸ்எம்இ) வருமானம் குறைந்தது 20 விழுக்காடு வீழ்ச்சி அடைந்துள்ளது. இந்த வீழ்ச்சிக்குப் பல காரணங்கள் இருந்தாலும் ஜிஎஸ்டி நிலைமையை மேலும் மோசமாக்கியுள்ளது என மலேசிய எஸ்எம்இ சங்கத் தலைவர் மைக்கல் காங் கூறினார். “ரிங்கிட் மாற்று விகிதம் …
டிஎபி இஸ்லாத்தை தாக்கினால், அமனா அதற்கு பாடம் சொல்லிக் கொடுக்குமாம்
இஸ்லாத்திற்கு டிஎபி ஒரு மிரட்டலாக உருவெடுத்தால், அமனா அதற்கு பாடம் சொல்லிக் கொடுக்கும் என்று அமனா உதவித் தலைவர் ஹசானுடின் முகமட் யூனுஸ் கூறினார். உண்மையாகவே பாடம் சொல்லிக் கொடுக்கப்படும் என்று கூறிய அவர், இஸ்லாம் பற்றி டிஎபி தவறு இழைத்திருந்தால் அது பாடம் கற்றுக்கொள்வதற்கு தயாராக…
மகாதிரின் புதிய கட்சி, ஹரப்பான் விவாதிக்கவிருக்கிறது
முன்னாள் பிரதமர் அறிவித்துள்ள புதிய கட்சி பற்றி விவாதிக்க பக்கத்தான் ஹரப்பான் தலைமத்துவ மன்றம் ஒரு கூட்டம் நடத்தவிருப்பதாக டிஎபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் கூறினார். ஒரு ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் ஒரு கட்சியை அமைக்கலாம். ஆனால், நாம் அக்கட்சியின் நோக்கத்தை கவனிக்க…
கபீர் ஹார்பி என்றால் கொல்ல வேண்டும் என்பதில்லையாம், அம்னோ இளைஞர்…
பகாங் முப்தி அப்துல் ரஹ்மான ஓஸ்மான் கபீர் ஹார்பி என்ற சொற்களைப் பயன்படுத்திய போது முஸ்லிம் அல்லாதவர்களைக் கொல்லலாம் என்ற அர்த்ததுடன் கூறவில்லையாம். இந்த விளக்கத்தை இப்போது அளித்தவர் அம்னோ இளைஞர் செயற்குழு உறுப்பினர் பாதுல் பாரி மாட் ஜாயா. முஸ்லிம் அல்லாதவர்களை கொல்வது அனுமதிக்கப்படுகிறது என்ற…
டாக்டர் மகாதீரின் புதிய கட்சி பதிவுக்கு அரசாங்கம் தடையாக இருக்கக்…
முன்னாள் மலேசியப் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமது தனது முன்னாள் அம்னோ சகாக்களுடன் சேர்ந்து புதிய கட்சி அமைப்பதற்குத் தடையாக எவ்வகையிலும் மலேசிய அரசாங்கம் இருக்கக்கூடாது என்றார் கிள்ளான் ஸ்ரீஅண்டாலாஸ் சட்டமன்ற உறுப்பினரும், கெஅடிலான் தேசிய உதவித் தலைவருமான டாக்டர் சேவியர் ஜெயக்குமார் மலேசியா ஒரு …
முகைதின்: எதிரணி போர் ஓய்வைக் கடைப்பிடித்து பிஎன்னுக்கு எதிராக ஒன்றுபட…
எதிரணியினர் தங்களுக்குள் அடித்துக் கொள்வதை நிறுத்தி அடுத்த பொதுத் தேர்தலை எதிர்கொள்ள ஒன்றுபட வேண்டும் என்பதை அம்னோவிலிருந்து நீக்கப்பட்ட அதன் துணைத் தலைவர் முகைதின் யாசின் ஒப்புக்கொள்கிறார். ஹராபான், பாஸ் ஆகியவையும் மற்ற தரப்பினரும் அடுத்த பொதுத் தேர்தலுக்காக ஒரு கூட்டு எதிரணியை அமைப்பது குறித்து ஒன்றுகூடி விவாதிக்க …
பிசுபிசுத்துப்போன துருக்கிய இராணுவப் புரட்சி
துருக்கியில் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றும் இராணுவத்தின் முயற்சி படுதோல்வியில் முடிந்தது. ஆயிரக்கணக்கான மக்கள் அதிபர் எர்டோகனுக்கு ஆதரவாக தெருக்களில் கூடி புரட்சியை முறியடித்தனர். கடலோரமாக விடுமுறையைக் கழித்துக் கொண்டிருந்த எர்டோகன் இன்று அதிகாலை இஸ்தான்புல் திரும்பினார். அவர் விமான நிலையத்தில் ஆதரவாளர்களுடன் இருப்பதைத் தொலைக்காட்சிச் செய்திகளில் காண முடிந்தது.…
அரசாங்கத்தை மாற்ற நினைத்தால் அமைதியான வழிகளில் அதைச் செய்ய வேண்டும்:…
தோல்வியில் முடிந்த துருக்கியின் இராணுவப் புரட்சி மலேசியர்களுக்கு அதிர்ச்சி அளித்திருப்பதாகக் குறிப்பிட்ட பக்கத்தான் ஹராபான், துருக்கியர்கள் அரசாங்கத்தை மாற்ற விரும்பினால் அமைதி வழிகளில்தான் அதைச் செய்ய வேண்டும் என்று கூறியது. “துருக்கியில் இராணுவம் வலுக்கட்டாயமாக அரசாங்கத்தை மாற்றும் முயற்சியில் ஈடுபட்டது ஜனநாயக முறைகளை அப்பட்டமாக மீறும் ஒரு செயல் …
பிஎஸ்எம்: முன்னாள் சர்வாதிகாரியுடன் கூட்டணி இல்லை
முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகமட் அறிவித்திருக்கும் பெரும் கூட்டணியில் மலேசிய சோசலிசக் கட்சி (பிஎஸ்எம்) இணையாது. பிஎஸ்எம் குடிமக்கள் பிரகடனத்தை எதிர்க்கிறது. அதனுடன் முன்னாள் சர்வாதிகாரி வழிநடத்தும் எந்த கூட்டணியையும் எதிர்க்கிறது என்று பிஎஸ்எம்மின் தலைமைச் செயலாளர் எ. சிவராஜன் மலேசியாகினியிடம் கூறினார். மகாதிர் அறிவித்திருக்கும்…
புதிய கட்சியை வழிநடத்தும் வலிமை மகாதிருக்கு இல்லை
முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் அரசியலிலிருந்து ஓய்வு பெற்று நீண்ட காலமாகிறது என்பதால் விரைவில் அமையவுள்ள புதிய அரசியல் கட்சியை வழிநடத்தும் வலிமை அவருக்கு இல்லை என்கிறார் அம்னோ உச்சமன்ற உறுப்பினர் இஸ்மாயில் சப்ரி. அம்னோ மூத்த தலைவர் தெங்கு ரசாலி போன்றோ பிகேஆர் நடப்பில் தலைவர் …


