மத்திய அரசு அண்மையில் அறிவித்த வீட்டிலிருந்து பணிபுரியும் நடைமுறையைத் தொடர்ந்து, பினாங்கு மாநில அரசு ஊழியர்களுக்கும் இந்த முறையைச் செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை மாநில அரசு ஆராயும் என்று முதல்வர் சாவ் கோன் இயோவ் தெரிவித்துள்ளார். மேற்காசிய மோதலால் ஏற்பட்டுள்ள உலகளாவிய எரிசக்தி நெருக்கடியின் தாக்கம் குறித்து, பிரதமர் அன்வர்…
எம்பி பதவிக்கு முழுக்குப் போடுகிறார் தெங்கு ரசாலி
மலேசியாவில் மிக நீண்ட காலம் எம்பியாக இருந்து வருபவர் தெங்கு ரசாலி. குவா மூசாங் எம்பி ஆன அவர், இதுவே தம் கடைசி தவணை என்கிறார். உத்துசான் மலேசியாவிடம் பேசிய கிளந்தான் இளவரசர் மக்கள் செல்வாக்கு நிறைய இருந்தாலும் பொறுப்பை மற்றவர்களிடம் ஒப்படைக்க வேண்டிய தருணம் வந்து விட்டதாகக் …
பிரான்சில் கூட்டத்தின்மீது லாரி தாக்குதல்: 80பேருக்குமேல் பலி
பிரான்ஸின் நீஸ் நகரில் மக்கள் பேஸ்டில் நாளைக் கொண்டாடிக் கொண்டிருந்தபோது வேகமாக ஓடிவந்த ஒரு லாரி வெறித்தனமாக கூட்டத்தில் மோதியதில் 80 பேருக்குமேல் கொல்லப்பட்டதாகவும் மேலும் பலர் காயமுற்றதாகவும் கூறப்படுகிறது. பயங்கரவாத -எதிர்ப்பு அதிகாரிகள் அத்தாக்குதல்மீது விசாரணை நடத்தி வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்தன. லாரியில் ஆயுதங்களும் கையெறி …
பிலிப்பீன்ஸ் செல்லும் கப்பல்களுக்கு இராணுவப் பாதுகாப்பு: இந்தோனேசியா பரிந்துரை
அண்மைய மாதங்களாக பிலிப்பீன்ஸ் இஸ்லாமிய தீவிரவாதிகளால் கடலோடிகள் பலர் கடத்தப்பட்டிருப்பதைக் கருத்தில் கொண்டு பிலிப்பீன்சுக்கு ஆபத்து நிரம்பிய வழிகளில் பயணம் செய்யும் கப்பல்களுக்கு இரணுவப் பாதுகாப்பு வழங்கலாம் என இந்தோனேசிய தற்காப்பு அமைச்சர் ரியாமிசார்ட் ரியாசூடு பரிந்துரைத்துள்ளதாக வியட்நாம் செய்தி நிறுவனம் (விஎன்ஏ) தெரிவித்துள்ளது. இந்தோனேசியாவிலிருந்து புறப்பட்டுச் செல்லும் …
உண்மையான எதிரி யார் என்பதை துவான் இப்ராகிம் முதலில் அடையாளம்…
எதிரணியினரிடையே போர் ஒய்வு தேவை என்று பாஸ் துணைத் தலைவர் விடுத்த அழைப்பு காலம்தாழ்த்தி வந்திருந்தாலும் அது வரவேற்கத்தக்கதே என்று கூறிய பாஸின் கடும் வைரியான பார்டி அமனா நெகாரா முதலில் அக்கட்சி அதன் உண்மையான எதிரி யார் என்பதை அடையாளம் காண வேண்டும் என்று கூறிற்று. அண்மையில் …
தொழிலாளர் தற்கொலைக்கு முயற்சி: தோட்ட நிறுவனம் சம்பளத்தைக் கொடுக்க முன்வந்தது
கடந்த வாரம் தோட்ட நிறுவனமொன்று அந்நிய தொழிலாளர் ஒருவர் தற்கொலை செய்துகொள்ள முயன்றதை அடுத்து அவருக்குரிய சம்பளத்தைக் கொடுக்க ஒப்புக்கொண்டது. “இன்னமும் கொடுக்கப்படாமலிருக்கும் சம்பளத்தையும் மன உளைச்சலை ஏற்படுத்தியதற்காக ஒரு இழப்பீட்டையும் வழங்க ஒப்புக்கொண்டார்கள்”, என பிஎஸ்எம் துணைத் தலைவர் எம்.சரஸ்வதி கூறினார். பிஎஸ்எம் சம்பளப் பாக்கி பற்றியும் …
சரவாக் ரிப்போர்ட் 1எம்டிபி தணிக்கை அறிக்கையை முழுமையாக வெளியிட்டது
இரகசிய தகவல்களை அம்பலப்படுத்தும் சரவாக் ரிப்போர்ட், 1எம்டிபி மீதான தலைமைக் கணக்காய்வாளர் அறிக்கையை முழுமையாக வெளியிட்டிருக்கிறது. அந்தத் தணிக்கை அறிக்கை அதிகாரத்துவ இரகசிய சட்ட (ஓஎஸ்ஏ)த்தால் பாதுகாக்கப்படும் ஓர் ஆவணமாகும். “தகவல் அளித்தோர்மீது நடவடிக்கை எடுக்கப்படுவதைத் தவிர்க்க நாங்கள் அறிக்கை முழுவதையும் திரும்பவும் தட்டச்சு செய்தோம். அப்படிச் செய்ததால் …
‘அழுக்குப்பிடித்த’ இந்துக்கள் என்று கூறும் போதனா வில்லைகளை உருவாக்கிய விரிவுரையாளர்…
யுனிவர்சிடி டெக்னோலோஜி மலேசியா (யுடிஎம்)வில், இஸ்லாமிய மற்றும் ஆசிய நாகரிகம் மீதான பாடத் திட்டத்துக்காக ( தித்தாஸ்) இந்துக்களையும் சீக்கியர்களையும் இழிவுபடுத்தும் வகையில் பாடம் போதிக்கும் பட வில்லைகளைத் தயாரித்திருந்த விரிவுரையாளர் பணி நீக்கம் செய்யப்பட்டார். உயர்க் கல்வி அமைச்சர் இட்ரிஸ் ஜுசோ இதைத் தெரிவித்தார். ஒரு சர்ச்சை …
டிஐ-எம்: 1எம்டிபி தணிக்கை அறிக்கைமீதான இரகசியக் காப்பை அகற்ற இதுவே…
1எம்டிபி மீதான தலைமைக் கணக்காய்வாளரின் அறிக்கையின் சில பகுதிகள் என்று கூறிக்கொண்டு சரவாக் ரிப்போர்ட் சிலவற்றை வெளியிட்டிருப்பதால் அந்தத் தணிக்கை அறிக்கையின் இரகசியக் காப்புத் தன்மையை அகற்றுவதற்கு இதுவே நல்ல தருணம் என ட்ரேன்பேரன்சி இண்டர்நேசனல் மலேசியா(டிஐ-எம்) நம்புகிறது. அந்த அறிக்கை இன்னும் இரகசியமாக வைக்கப்பட்டிருப்பதுதான் புரியாத புதிராக …
ஆலயங்கள்மீதான தாக்குதல்கள் தொடர்கின்றன; இம்முறை பேராக்கிலும் கெடாவிலும்
கடந்த இரண்டு மாதங்களில் பினாங்கில் நான்கு ஆலயங்கள் சேதப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில் இப்போது மேலும் இரண்டில்- கெடா, மாஹாங்கிலும் பேராக், செலாமாவிலும்- சிலைகள் உடைத்து சேதப்படுத்தப்பட்டுள்ளன. மாஹாங் ஸ்ரீ மகாமுத்துமாரியம்மன் ஆலையத்தில் ஒரு விக்கிரகம் அதன் இருப்பிடத்திலிருந்து பெயர்த்தெடுக்கப்பட்டு உடைக்கப்பட்டிருப்பதாக ஆலய அதிகாரி த ஸ்டார் நாளேட்டிடம் தெரிவித்தார். அதற்கு …
ஆலயங்கள் சேதப்படுத்தப்படும் சம்பவங்கள்மீதான விசாரணையை போலீஸ் துரிதப்படுத்த வேண்டும்
கடந்த இரண்டு மாதங்களில் நான்கு ஆலயங்கள் சேதப்படுத்தப்பட்டிருப்பதை அடுத்து போலீஸ் அதன் விசாரணையைத் துரிதப்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. ஆலய உடைப்புச் சம்பவங்களை விசாரணை செய்வதற்கு பினாங்கு போலீஸ் துணைத் தலைவர் ஏ. தெய்வீகன் தலைமையில் சிறப்புப் பணிக் குழு அமைக்கப்பட்டிருப்பதைப் பாராட்டிய இந்து சங்கத் தலைவர் ஆர்.எஸ்.…
தென் சீனக் கடல் தீர்ப்பினால் ‘சச்சரவு மேலும் மோசமடையும்’- சீனத்…
தென் சீனக் கடலில் சீனா உரிமை கொண்டாடுவதை நிராகரிக்கும் அனைத்துலக நீதிமன்றத்தின் தீர்ப்பால் “சச்சரவு மேலும் மோசமடையலாம், மோதல்களும் நிகழலாம்” என அமெரிக்காவுக்கான சீனத் தூதர் எச்சரித்துள்ளார். வாஷிங்டனில் ஒரு கருத்தரங்கில் பேசிய சீனத் தூதர் சூய் தியான்கை , சீனாவைப் பொருத்தவரை பிரச்னைகளைச் சம்பந்தப்பட்ட தரப்புகளுடன் பேசித் …
மலேசியாகினிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க விரும்பும் சாலே-க்கு செய்தியாளர் கழகம்…
தொடர்பு, பல்லூடக அமைச்சர் சாலே சைட் கெருவாக் மலேசியாகினிக்கு ஏதிராக நடவடிக்கை எடுக்கப்போவதாகக் கூறியுள்ளதற்கு மலேசிய செய்தியாளர் கழகம் (ஐஓஜே) எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. சர்ச்சைக்குரிய முஸ்லிம் பிரச்சாரகரான ஜாகிர் நாய்க் குறித்து வெளியிட்ட செய்திகளுக்காக மலேசியாகினிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்போவதாக சாலே திங்கள்கிழமையன்று கூறி இருந்தார். “உணர்வுகளைச் சீண்டிவிடும் …
பயங்கரவாத-எதிர்ப்புத் தலைவருக்கு ஐஎஸ் கொலை மிரட்டல்
மலேசியாவில் பயங்கரவாத- எதிர்ப்புப் படையின் தலைவரான ஆயுப் கானுக்கு இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பான ஐஎஸ் கொலை மிரட்டல் விடுத்துள்ளது. புக்கிட் அமானிலிருந்த ஆயுப் கானை தொலைபேசியில் தொடர்புகொண்டு ஐஎஸ் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த முகம்மட் வாண்டி முகம்மட் ஜெடி கொலை மிரட்டலை விடுத்தார் என த ஸ்டார் ஆன்லைன் …
ஏர் ஏசியா 100 ஏர் பஸ் விமானங்களை வாங்குகிறது
ஐரோப்பிய விமானத் தயாரிப்பு நிறுவனமான ஏர் பஸ் நிறுவனத்திடமிருந்து மலேசியாவின் பட்ஜெட் விமான நிறுவனமான ஏர் ஏசியா 100 ஏ321நியோ ரக விமானங்களை வாங்குகிறது. இந்த வகை விமானங்களில் 240 பயணிகள் பயணம் செய்யலாம். ஏ321நியோ ரக விமானங்கள் ஆசியாவின் மிகப் பெரிய சிக்கன விமான நிறுவனமான ஏர் …
கடை உடைக்கப்படுவதைத் தடுக்க மந்திரி புசாரிடம் மகஜர்
கோலா சிலாங்கூர் ஜாலான் சுங்கை பூலோவில் உள்ள தன் கடை உடைக்கப்படுவதைத் தடுக்கும் கடைசி முயற்சியாக ஜெய் ஸ்ரீ ராஜூ சிலாங்கூர் மந்திரி புசார் முகம்மட் அஸ்மின் அலி-இடம் மகஜர் ஒன்றைக் கொடுத்துள்ளார். “நீண்ட காலமாகவே கோலா சிலாங்கூர் மாவட்ட மன்ற(எம்டிகேஎஸ்)த்தின் அனுமதியுடன் கடை வைத்திருக்கிறேன். இந்தக் கடைக்கு …
மகாதிர் தலைமையில் புதிய கட்சி?
பிரதமர் பதவியிலிருந்து விலகிப் பத்தாண்டுகளுக்குமேல் ஆகும் நிலையில் டாக்டர் மகாதிர் முகம்மட் அவரின் இப்போதைய எதிரியான பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கை எதிர்க்க தீவிர அரசியலுக்குத் திரும்பக்கூடும் எனத் தெரிகிறது. மருத்துவராக இருந்து அரசியலுக்கு வந்த டாக்டர் மகாதிர், தமது 91வது அகவையில் அம்னோவின் முன்னாள் உறுப்பினர்களைக் கொண்டு …
மக்கள் ஆதரவைத் திரும்பப் பெற ஹராபான் உறுதி
பக்கத்தான் ஹராபான் அதன் பலவீனங்களைச் சரிசெய்து இழந்த ஆதரவைத் திரும்பப் பெற முடியும் என்பதில் உறுதியாக இருப்பதாய் அக்கூட்டணித் தலைவர் டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில் கூறினார். இன்று பக்கத்தான் தலைவர் மன்றக் கூட்டத்துக்குத் தலைமையேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வான் அசிசா, தேர்தல்களில் மும்முனைப் போட்டி …
முகைதின்: உண்மையில், துரோகி யார்?
1எம்டிபி மீதான தலைமைக் கணக்காய்வாளர் அறிக்கையில் உள்ளதை வெளியில் கசியவிட்டவர்களை அமைச்சர்கள் நம்பிக்கை துரோகிகள் என்று முத்திரை குத்தியிருப்பது பற்றிக் கருத்துரைத்த பதவிநீக்கம் செய்யப்பட்ட முன்னாள் துணைப் பிரதமர் முகைதின் யாசின் உண்மையிலேயே யார் துரோகிகள் எனத் தம் முன்னாள் சகாக்களிடம் திருப்பிக் கேட்டிருக்கிறார். 1எம்டிபி-இல் நிகழ்ந்துள்ள முறைகேடுகளை …
‘மனிதத்தன்மையற்ற’ நூர் ஜஸ்லான்- அன்வார் வழக்குரைஞர் சாடல்
சிறைக்கைதிகள் அவர்களின் குடும்பத்தாரை நேருக்கு நேர் சந்திப்பதற்கு அனுமதி மறுக்கப்படுவதில் தவறில்லை என்று உள்துறை துணை அமைச்சர் நூர் ஜஸ்லான் முகமட் கூறியதில் “பரிவில்லை, மனிதாபிமானம் இல்லை” என பாடாங் செராய் எம்பி என்.சுரேந்திரன் சாடினார். “கைதிகளுக்குச் சுதந்திரம் இல்லை” என்பதால் அவர்கள் தங்கள் குடும்பத்தாரைத் தொட்டுப்பேசக்கூடாது என்று …
1எம்டிபி தணிக்கை அறிக்கை தொடர்பில் கொடுத்த வாக்குறுதியை மறந்தாரா, நஜிப்?-…
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் ஒராண்டுக்கு முன்பு 1எம்டிபி மீதான தலைமைக் கணக்காய்வாளரின் அறிக்கை வரும்வரை பொறுமையுடன் இருக்குமாறு கூறியதை மறந்து விட்டாரா என்று வினவுகிறார் முன்னாள் அம்னோ துணைத் தலைவர் முகைதின் யாசின். அந்த அறிக்கை வெளியிடப்படும் என்று நினைத்துக் கொண்டிருக்கையில் அதன் சில பகுதிகள் அதிகாரத்துவ …
‘என்னிடம் ஆடம்பரக் கார்களா?’- மறுக்கிறார் சுரைடா
தம்மிடம் ஒன்பது ஆடம்பரக் கார்கள் இருப்பதாகக் கூறப்படுவதை வன்மையாக மறுக்கும் பிகேஆர் மகளிர் தலைவர் சுரைடா கமருடின் அது தீய நோக்கில் கூறப்படும் பொய்யான குற்றச்சாட்டு என்று சாடினார். தாம் பயன்படுத்தும் கார்களில் ஒன்று ஒரு “சீன தவக்கே”-யுடையது அல்லது தனியார் நிறுவனம் ஒன்றுக்குச் சொந்தமானது என்று சொல்லப்படுவதும் …
ஐஜிபி: கோயில் சிலைகள் உடைக்கப்படுவதை விசாரிக்க சிறப்புக் குழு
பினாங்கில் தொடரச்சியாக இந்துக் கோயில் சிலைகள் உடைக்கப்படுவதை விசாரிக்க ஒரு சிறப்புக் குழு அமைக்கப்பட்டிருப்பதாக போலீஸ் படைத் தலைவர் காலிட் அபு பாக்கார் கூறினார். அக்குழுவில் புக்கிட் அமான் போலீஸ் தலைமையகம் மற்றும் மாநில போலீஸ் அதிகாரிகள் இடம்பெற்றிருக்கின்றனர். அவர்கள் இவ்விவகாரம் குறித்து தமக்கு நேரடியாகத் தகவல்…
தண்டிக்கப்பட வேண்டியவர்கள் டோல் நிறுவனங்கள் ; சாலைப் பயனர்கள் அல்ல
அரசாங்கம் அவசரத் தடங்களைப் பயன்படுத்தும் சாலைப் பயனர்களைத் தண்டிப்பதற்குப் பதிலாக நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கத் தவறிய சாலைப் பராமரிப்பு நிறுவனங்களைத்தான் தண்டிக்க வேண்டும் என்கிறார் பாஸ் துணைத் தலைவர் துவான் இப்ராகிம் துவான் மான். அவசரத் தடங்கள் அவசர வேளைகளில் பயன்படுத்துவதற்காக மட்டுமே என்பதை ஒப்புக்கொண்ட துவான் …


