புவா: பல பில்லியன் டாலர் மோசடியை மூடிமறைத்த அருள் கந்தாமீது…

1எம்டிபி- ஐபிஐசி- ஆபார் சம்பந்தப்பட்ட  பல பில்லியன்  டாலர்  விவகாரத்தை  மூடிமறைத்ததற்காக  1எம்டிபி  தலைவர்  அருள்  கந்தா கந்தசாமிமீது  விசாரணை  நடத்த  வேண்டும்  என்று  டிஏபி  எம்பி  டோனி  புவா  கூறியுள்ளார். மொத்தம்  யுஎஸ்$3.51 பில்லியன்  பிரிட்டிஷ்  வெர்ஜின்  தீவுகளில்  பதிவுசெய்யப்பட்ட  ஆபார்  இன்வெஸ்ட்மெண்ட்  பிஜேஎஸ்(ஆபார்  பிவிஐ)-க்கு  மாற்றிவிடப்பட்டது …

இந்து சங்கம்: ஜாகீர் சொற்பொழிவு விவகாரத்தில் சமரசம் செய்து கொள்ளப்பட்டது…

முஸ்லிம்  ஆன்மிகப்  பேச்சாளர்  டாக்டர்  ஜாகீர்  நாயக்கின்    சொற்பொழிவுக்கு  முதலில்  அனுமதி  மறுக்கப்பட்டு  பின்னர்  அதில்  சமரசம்  காணப்பட்டதாக  துணைப்  பிரதமர்  அஹ்மட்  ஜாஹிட்  ஹமிடி  கூறியிருப்பது  எப்படி  என்று  கேள்வி  எழுப்பும்  மலேசிய  இந்து  சங்கத்  தலைவர்  மோகன்  ஷான்,  மஇகா-வும்  அதற்கு  இணக்கம்  தெரிவித்ததா  என்று …

கால்பந்து பற்றி விவாதிக்க தயாரா? கைரிக்குச் சவால் விடுகிறார் துங்கு…

ஜோகூர்  பட்டத்திளவரசர்  துங்கு  இஸ்மாயில்  சுல்தான்  இப்ராகிம்,  தேசிய  கால்பந்தாட்டக்கார்கள்  பற்றித்  தம்முடன்  விவாதமிட வருமாறு  இளைஞர்,  விளையாட்டுத்  துறை  அமைச்சர்  கைரி  ஜமாலுடினுக்குச்  சவால்  விடுத்திருக்கிறார். நேற்றிரவு  தம்  முகநூல்  பக்கத்தில்  பதிவிட்டிருந்த  பட்டத்திளவரசர்  கால்பந்தாட்ட  வீரர்கள்  பற்றிச்  சொல்லப்படும்  பொய்களைக்  கேட்டுக்கேட்டு  சலிப்படைந்து  போனதாகக்  கூறினார்.…

ரஹ்மான் டஹ்லான் குவான் எங் மோதல் ஏப்ரல் 19 இல்

அமைச்சர்  ரஹ்மான்  டஹ்லானுக்கும்  பினாங்கு  முதல்வர்  லிம்  குவான்  எங்குக்குமிடையில்   ஏப்ரல்  19 இல் டிவி 3-இன் ஏற்பாட்டில்  நடைபெறவிருக்கும்  விவாதத்துக்கு  டிஏபி  தயாராக உள்ளது. இதனைத்  தெரிவித்த  டிஏபி-இன் அந்தோனி  லோக்,  தேதியை  அப்துல்  ரஹ்மானின்  தனிச்  செயலாளரே  முன்மொழிந்ததாகக்  கூறினார். டிஏபி-இன் ஒரே  நிபந்தனை  விவாதம் …

ஸகீர் மிகச்சிறந்த மனிதர், குறுக்கிடாதீர், ஷகிடான் கூறுகிறார்

  இஸ்லாமிய சமய போதகர் டாக்டர் ஸகீர் நாயிக்கை குறைகூறும் மஇகா மற்றும் இதர இந்திய அரசு சார்பற்ற அமைப்புகள் இஸ்லாமிய சமயம் சம்பந்தப்பட்ட விவகாரங்களில் குறுக்கிட்டிருக்கக்கூடாது என்று அம்னோ அமைச்சர் ஒருவர் இன்று கூறினார். ஸகீர் ஒரு "மிகச்சிறந்த மனிதர். அவர் சமய ஒப்புமை செய்வதில் ஆழ்ந்த…

மலாக்காவில் ஜாகீர் சொற்பொழிவுக்கு அனுமதி, ஆனால் தலைப்பில் மாற்றம்

மலாக்காவில் நடைபெறவிருந்து  பின் சர்ச்சைக்குரிய தலைப்பு காரணமாக ரத்துசெய்யப்பட்ட இஸ்லாமிய  ஆன்மிக  பேச்சாளர்  ஜாகீர் நாயக்கின் சொற்பொழிவுக்கு   மீண்டும் அனுமதி  அளிக்கப்பட்டுள்ளது. இதனை துணைப்பிரதமரும் உள்துறை அமைச்சருமான ஜாஹிட்  ஹமிடி தெரிவித்தார். இதற்குமுன்  அந்நிகழ்வின்  தலைப்பு  குறித்து   இந்துக்களிடமிருந்து  மட்டுமல்லாமல்  முஸ்லிம்   தலைவர்களிடமிருந்தும்  புகார்கள்  வந்ததால் அது இரத்துச் …

நஜிப்- எதிர்ப்புக்குழு நடத்திய கருத்துக்கணிப்பில் 89 விழுக்காட்டு மாணவர்களுக்கு நஜிப்பைப்…

பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்கை  எதிர்க்கும்  குழு  ஒன்று  பல்கலைக்கழக  மாணவரிடையே  நடத்திய  கருத்துக்கணிப்பில்  89  விழுக்காட்டினர்  பிரதமரைப்  பிடிக்கவில்லை  என்று  கூறினார்கள்.. சேலெஞ்சர்  என்ற  பெயரைக்  கொண்ட  அக்குழு  5,006  மாணவர்களிடம்  கருத்துக்கணிப்பை  நடத்தியது. அவர்களில்  4,460  பேர்  நஜிப்பை  நேர்மையான  தலைவராக  நினைக்கவில்லை. 304 பேர் …

ஹுலு கிளாங்கில் மூவரை போலீசார் சுட்டுக் கொன்றனர்

இன்று  அதிகாலை  ஹுலு  கிளாங்கில்  கைவிடப்பட்ட  ஒரு  கட்டிடத்தில்   பதுங்கியிருந்த  கொள்ளையர்கள்  என்று  சந்தேகிக்கப்படும்  அறுவர்மீது  அவர்கள்  எதிர்பாராத  நேரத்தில்  தாக்குதல்  நடத்திய  போலீசார்  அவர்களில்    மூவரைச்  சுட்டுக்  கொன்றனர். கொள்ளையர்கள்  ஹைலேண்ட்  டவர்ஸ்  கட்டிடத்தின்  முதல்  மாடியில் பதுங்கியிருப்பதாக  தகவல்   கிடைத்ததும்  காலை  மணி  ஐந்துக்கு  போலீசார் …

ஜாகீரின் மகன் சொற்பொழிவுக்கு பினாங்கில் அனுமதி

சர்ச்சைக்குரிய  இஸ்லாமிய  ஆன்மிகப்  பேச்சாளர்  ஜாகீர்  நாயக்கின்  மகன்  பினாங்கில்  சொற்பொழிவாற்ற  அனுமதி  வழங்கப்பட்டுள்ளது.  பினாங்கு  துணை  முதலமைச்சர் I  முகம்மட்  ரஷிட்  ஹஸ்னோன்  இதைத்  தெரிவித்தார். ஜாகீரின்  மகன்  பாரிக்  நாயக்,  “இஸ்லாம்  பற்றிய  தப்பெண்ணங்கள்”  என்ற  தலைப்பில்  வெள்ளிக்கிழமை  இரவு  பென்யாயாங்  சமூக  மண்டபத்தில்  உரையாற்றுவார்.…

ஜாகீரை ‘சைத்தான்’ என்று சொன்னதற்கு ராமசாமி வருத்தம் ஆனாலும் கண்டனக்…

முஸ்லிம்  ஆன்மிகப்  பேச்சாளர்  டாக்டர்  ஜாகீர்  நாயக்கை  “சைத்தான்”  என்று  சொன்னதற்காக  டிஏபி  தலைவர்  பி.இராமசாமி  வருத்தம்  தெரிவித்திருந்த  போதிலும்  அவருக்கு  எதிரான  கண்டனங்கள்  நிற்பதாக  தெரியவில்லை. “நான் பயன்படுத்திய  ‘சைத்தான்’  என்ற  சொல்  மலேசிய  முஸ்லிம்களிடையே  ஆத்திரத்தையும்  அதிருப்தியையும்  ஏற்படுத்தியிருப்பது கண்டு  வருந்துகிறேன். “இஸ்லாத்துக்கு  எதிராகவோ  இந்நாட்டு …

சனிக்கிழமை கோலாலம்பூரில் நடைபெறவிருந்த ஸாகீர் பிரச்சாரம் ரத்து செய்யப்பட்டது

  இஸ்லாமியச் சமயச் சொற்பொழிவாளர் டாக்டர் ஸாகிர் நாய்க் எதிர்வரும் சனிக்கிழமை புக்கிட் ஜாலில், தேசிய ஹோக்கி அரங்கத்தில் உரையாற்றுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் படைத் தலைவர் காலிட் அபு பக்கார் மலேசியாகினியிடம் கூறினார். இதற்கு அடுத்து மலாக்காவில் நடபெறவிருந்த இது போன்ற…

இசி வியாழக்கிழமை சரவாக் தேர்தல் பற்றி விவாதிக்கும்

இன்று  சரவாக்  சட்டமன்றம்  கலைக்கப்பட்டதை  அடுத்து  தேர்தல்  ஆணையம் (இசி)  சரவாக்  மாநிலத்  தேர்தல்  பற்றி  விவாதிப்பதற்காக  வியாழக்கிழமை  சிறப்புக்  கூட்டமொன்றை  நடத்துகிறது. அதில்  வேட்பாளர் நியமன  நாள்,  வாக்களிப்பு  நாள்  தேர்தலை  நடத்துவதற்கான  ஏற்பாடுகள்  பற்றியெல்லாம்  முடிவெடுக்கப்படும்  என  இசி  செயலாளர்  அப்துல்  கனி  சாலே  கூறினார். …

ரயானி ஏர் விமானச் சேவை மூன்று மாதங்களுக்குத் தற்காலிகமாக நிறுத்தி…

இன்று  தொடங்கி  மூன்று  மாதங்களுக்கு ரயானி  ஏர்  விமானச்  சேவை  தற்காலிகமாக  நிறுத்திவைக்கப்படுவதாக  சிவில்  விமானப்  போக்குவரத்துத்  துறை  தலைமை  இயக்குனர்  அஸாருடின்  அப்துல்  ரஹ்மான்  கூறினார். மே  17-இல்  ஒரு  விசாரணை  நடத்தப்படும்  என்றும்  அதில்  ரயானி  ஏர்  விளக்கமளிக்கலாம்  என்றும் அவர்  சொன்னார். தொடங்கப்பட்டு  நான்கே …

மகாதிருக்கு எதிராக நான்கு விசாரணை அறிக்கைகள்

போலீசார்  முன்னாள்  பிரதமர்  டாக்டர்  மகாதிர்  முகம்மட்டுக்கு  எதிராக  நான்கு  விசாரணை  அறிக்கைகளைத்  தயாரித்து  வருவதாக  இன்ஸ்பெக்டர்-ஜெனரல்  அப்  போலீஸ்  காலிட்  அபு  பக்கார்  இன்று  தெரிவித்தார். விசாரணை  அறிக்கைகள்  வெளிநாடுகள்  தலையிட  வேண்டும்  என்று  மகாதிர்  கேட்டுக்கொண்டாரே  அது  தொடர்பானவையா  என்று  வினவியதற்கு  அவர்  நேரடியான  பதிலை …

எம்ஏசிசி அதிகாரி கைது செய்யப்பட்டதற்கும் குவான் எங் வழக்குக்கும் தொடர்பில்லை

மலேசிய  ஊழல்-தடுப்பு  ஆணையம் (எம்ஏசிசி),  அதன்  அதிகாரி  ஒருவர்  அண்மையில்  கைது  செய்யப்பட்டதற்கும்  பினாங்கு  முதலமைச்சர்  லிம்  குவான்  எங்மீதான  விசாரணைக்கும்  தொடர்பிருப்பதாகக்  கூறப்படுவதை  மறுத்துள்ளது. அந்த  அதிகாரி  ஆணையத்தின் விசாரணைக்குட்பட்ட  போலீஸ்  அதிகாரி  ஒருவரிடமிருந்து  பாதுகாப்புப்  பணமாக  ரிம20,000  பெற்றார்  என்ற  சந்தேகத்தின்பேரில்  கைது  செய்யப்பட்டிருக்கிறார்  என…

மகாதிர்: அன்வாருக்கு வயதாகிவிட்டது, பிரதமராக முடியாது

சிறையிலிருக்கும்  முன்னாள்  எதிரணித்  தலைவர் அன்வார்  இப்ராகிமுக்கு  வயதாகி  விட்டது  என்பதால்  அவரால்  பிரதமராக  முடியாது  என்கிறார்  முன்னாள்  பிரதமர்  டாக்டர்  மகாதிர்  முகம்மட். “அவருக்கு  வயதாகி  விட்டது  என்று  நினைக்கிறேன்”  என  தி  ஆஸ்திரேலியன்  பத்திரிகைக்கு  வழங்கிய  நேர்காணலில்  மகாதிர்  கூறினார்.  ஆனால், உண்மையில்  அன்வாருக்கு  வயது …

மலாக்காவில் ஜாகீர் நாயக்கின் நிகழ்வை இரத்துச் செய்ய போலீஸ் உத்தரவு

மலாக்காவில்  சர்ச்சைக்குரிய  முஸ்லிம்  பிரச்சாரகர்  டாக்டர்  ஜாகீர்  நாயக்  கலந்துகொள்ளவிருந்த  கருத்தரங்கம்  ஒன்றை  இரத்துச்  செய்யுமாறு  போலீஸ்  உத்தரவிட்டுள்ளது. ஏப்ரல்  17-இல்,  மலாக்காவில்  மலேசிய  தொழில்நுட்பப்  பல்கலைக்கழக  வளாகத்தில்  அக்கருத்தரங்கம்   நடைபெறுவதாக  இருந்தது. அதனை  இரத்துச்  செய்யுமாறு  கூறுவதற்கு  அந்நிகழ்வின்  ஏற்பாட்டாளர்கள்  புக்கிட்  அமானுக்கு  அழைக்கப்பட்டிருக்கிறார்கள்  எனப்  போலீஸ் …

ஜாகிருக்குத் தங்கும் வசதிக்கும் உணவுக்கும் மட்டுமே திரெங்கானு ஏற்பாடு செய்துள்ளது

திரெங்கானு  அரசு.  முஸ்லிம்  பிரச்சாரகரான  டாக்டர்  ஜாகிர்  நாயக்  அம்மாநிலத்தில்  தங்கி  இருக்கையில்  அவருக்குத்  தங்கும்  வசதி,  உணவு  ஆகியவற்றை  மட்டுமே  ஏற்பாடு  செய்து  கொடுக்கிறது  மற்ற  செலவுகளை  இஸ்லாமிய  ஆராய்ச்சி  அறநிறுவனத்தின்  மூலமாக அவரே  கவனித்துக்  கொள்கிறார்  என  மந்திரி  புசார்  அஹமட்  ரஸிப்  அப்துல்  ரஹ்மான் …

எத்தனை தமிழ்ப்பள்ளிகள் எங்கே, எப்போது இடமாற்றம் காண்கின்றன?

-வி.சம்புலிங்கம், தலைமைச் சபை உறுப்பினர், ஹிண்ட்ராப் மக்கள் பேரியக்கம், ஏப்ரல் 4, 2016   குறைவான மாணவர் சேர்க்கையால் நலிந்து வரும் தமிழ்ப்பள்ளிகளின் இடமாற்றம் குறித்து ஹிண்ட்ராப் மக்கள் பேரியக்கம் எழுப்பிய கேள்விகளுக்கு 9 ஏப்ரல் 2016 தமிழ் மலர் நாளிதழில் மலேசிய தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாட்டு திட்டக் குழு ஒருங்கிணைப்பாளர்…

ரபிஸி: நான் செய்தது சரியே அதற்காகத்தான் சிறை செல்லவும் துணிந்தேன்

அதிகாரத்துவ  இரகசிய  சட்டத்துக்கு (ஓஎஸ்ஏ)  உட்பட்ட ஆவணங்களை  அம்பலப்படுத்தியற்காக  சிறைத் தண்டனை  விதிக்கப்படலாம்,  நாடாளுமன்ற  உறுப்பினர்  பதவியை  இழக்கலாம்  என்று  கூறப்பட்டாலும்   அரசாங்க  ஊழலை  எதிர்க்கும்  போராட்டத்தில்  தாம்  செய்ததுதான்  சரி  என்று  பிடிவாதம்  பிடிக்கிறார்  பிகேஆர்  தலைமைச்  செயலாளர்  ரபிஸி  ரம்லி. “இதை  நான்  சொல்லித்தான்  ஆக …

ரயானி விமானச் சேவை தற்காலிக நிறுத்தம்

மலேசியாவின்  ஷியாரியா  விமான  நிறுவனம்  ரயானி  ஏர்,  விமானிகள்  வேலைநிறுத்தம்  காரணமாக    அதன்  பயணச்  சேவையை  அடுத்த  அறிவிப்புவரை  இரத்துச்  செய்துள்ளது. “இடைஞ்சல்களுக்கு  வருந்துகிறோம்”, என  அந்த  விமான  நிறிவனத்தின்  முகநூல்  பக்கத்தில்  வருத்தம்  தெரிவிக்கப்பட்டிருந்தது. மூன்று  மாதங்களுக்குமுன்  தொடங்கப்பட்டது  ரயானி  ஏர்  சென். பெர்ஹாட். வெள்ளிக்கிழமையிலிருந்து  அதன் …

கருவூலத் தலைவர்: 1எம்டிபி ஆலோசனை வாரியம் கூட்டம் நடத்தியதே இல்லை

1எம்டிபி  ஆலோசனை  வாரிய  உறுப்பினர்கள்  கூடிப்  பேசியதே  இல்லை.  எனக்  கருவூலத்  தலைமைச்  செயலாளர்  இர்வான்  சிரிகார்  பொதுக்  கணக்குக்  குழுவிடம்  கூறியுள்ளார். 1எம்டிபி  மீதான  பொதுக்  கணக்குக்  குழுவின்  விசாரணை  குறிப்பேடு(Hansard)  இதனைத்  தெரிவிக்கிறது. 1எம்டிபி  ஆலோசனை  வாரியத்தின்  உறுப்பினர்களில்  ஒருவரான  இர்வான், அந்நிறுவனத்தின்  இயக்குனர்  வாரியத்துக்கு …

நஜிப்பை அகற்ற வெளிநாட்டு உதவியை நாடுகிறாரா மகாதிர்?

என்ன  வேடிக்கை  பாருங்கள், பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்கைப்  பதவியிலிருந்து   வெளியேற்ற   உலக  நாடுகளின்  உதவியை  நாடுகிறாராம்  டாக்டர்  மகாதிர்  முகம்மட்.  தி  ஆஸ்திரேலியன்  டுடே  கூறுகிறது. தமது  நீண்டகால  ஆட்சியில்  வெளிநாட்டுத்  தலையீடுகளைக்  கடுமையாகக்   கண்டித்து  வந்தவர்  டாக்டர்  மகாதிர்.  தீவிர  தேசியவாதியான  அந்த  முன்னாள்  பிரத்மர்தான் …