இந்த விபத்தில் மூன்று பேர் கொண்ட ஒரு குடும்பம் சம்பந்தப்பட்டிருந்தது, அதில் இரண்டு வயது குழந்தை சிறு காயங்களுடன் தப்பித்தது. சபாக் பெர்னம், சுங்கை பாஞ்சாங், கம்போங் பெலியா 2-இல் (Kampung Belia 2) கார் ஒன்று நிலைதடுமாறி சாலைத் தடுப்பில் மோதி கவிழ்ந்தது. சிலாங்கூர் தீயணைப்பு மற்றும்…
சிந்தனைக்குழு: நஜிப் 1எம்டிபி-யை ஆட்டுவித்தாரா என்பதைக் கண்டறிய வேண்டும்
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் திரைமறைவில் 1எம்டிபிமீது ஆதிக்கம் செலுத்தினாரா என்பதை அதிகாரிகள் கண்டறிய வேண்டும் எனச் சிந்தனைக்குழு ஒன்று கேட்டுக்கொண்டிருக்கிறது, “ஆலோசனை வாரியத்தின் தலைவர் என்ற முறையில் பிரதமர் ஆதிக்கம் செலுத்தினாரா என்பதை ஆராய வேண்டும். “தவறினால் நடந்துள்ள விசாரணை முழுமையானது ஆகாது”, என ஜனநாயகம் மற்றும் …
ஓஎஸ்ஏ-இன்கீழ் குற்றஞ்சாட்டப்பட்டார் ரபிஸி
பாண்டான் எம்பி ரபிஸி ரம்லிமீது கோலாலும்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் அதிகாரத்துவ இரகசியச் சட்ட(ஒஎஸ்ஏ)த்தின்கீழ் இரண்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. பிகேஆர் உதவித் தலைவரும் தலைமைச் செயலாளருமான ரபிஸி ஓஎஸ்ஏ-இன்கீழ் இரகசியம் என்று வகைப்படுத்தப்பட்ட ஆவணம் ஒன்றை வெளிப்படுத்தியதாகவும் கைவசம் வைத்திருந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது. நாடாளுமன்ற வளாகத்தில் மார்ச் 24-இல் அவர் …
நஜிப் போன்ற நண்பர் ஒபாமாவுக்குத் தேவையில்லை என்கிறது வாஷிங்டன் போஸ்ட்
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கைச் சூழ்ந்துள்ள பல்வேறு ஊழல்களைச் சுட்டிக்காட்டும் வாஷிங்டன் போஸ்ட் அவரைவிட்டு ஒபாமா நிர்வாகம் விலகி இருப்பதே நல்லது என நினைக்கிறது. ரிம2.6 பில்லியன் ‘நன்கொடை’ விவகாரத்தில் நஜிப் குற்றம் எதுவும் புரியவில்லை என மலேசியாவின் சட்டத்துறைத் தலைவர் கூறி இருந்தாலும் நஜிப்பால் உருவாக்கப்பட்ட 1எம்டிபியில் …
பண்டிகார்: ரபிஸியின் கைது பற்றி போலீஸ் எனக்குத் தெரியப்படுத்தி இருக்க…
பிகேஆர் நாடாளுமன்ற உறுப்பினர் ரபிஸி ரம்லியை நாடாளுமன்றத்துக்கு வெளியில் ஒஎஸ்ஏ-இன்கீழ் வாரண்டி இன்றியே கைது செய்யும் அதிகாரம் போலீசுக்கு உண்டு என்பதை மக்களவைத் தலைவர் பண்டிகார் அமின் மூலியா ஒப்புக்கொண்டார். ஆனாலும், போலீசார் கைது குறித்து முன்கூட்டியே தமக்குத் தெரிவித்திருக்கலாம், அப்படிச் செய்திருந்தால் அதைத் தாம் மக்களவைக்குத் தெரியப்படுத்துவதற்கு …
பிஏசி: 1எம்டிபி-இன் குறைகளுக்கு அதன் முன்னாள் தலைவரே பொறுப்பேற்க வேண்டும்
1எம்டிபியின் கோளாறுகளுக்கு அரசாங்கத்துக்குச் சொந்தமான அந்நிறுவனத்தின் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரி ஷாரோல் அஸ்ரால் ஹல்மியும் நிர்வாகத்தில் இருந்த மற்றவர்களும்தான் பொறுப்பு என்பது பொதுக் கணக்குக் குழுவின் முடிவாகும். “அந்த வகையில் சட்ட அமலாக்கத் தரப்பு ஷாரோல்மீதும் மற்ற நிர்வாகிகள்மீதும் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறோம்”, என …
ஜோகூர் எம்பி-யை மாற்ற நினைப்பது ‘வீண் முயற்சி’
ஜொகூர் மந்திரி புசார் காலிட் நோர்டினை மாற்றும் எந்தவொரு முயற்சியும் வெற்றிபெறாது என ஜோகூர் அம்னோ இளைஞர் தலைவர் ஹஹாஸ்ரின் ஹஷிம் கூறினார். “ஜோகூர் எம்பி-யை மாற்றும் முயற்சி வீணான முயற்சி என்பதை ஜோகூர் அம்னோ இளைஞர் பிரிவு வலியுறுத்த விரும்புகிறது”, என ஹஹாஸ்ரின் இன்று ஓர் அறிக்கையில் …
1எம்டிபிமீதான ஏஜி-இன் அறிக்கை இன்னமும் ஓஎஸ்ஏ-க்கு உட்பட்டதுதான் -பண்டிகார்
1எம்டிபி மீதான தலைமைக் கணக்காய்வாளர்(ஏஜி) அறிக்கையை நடப்பு நாடாளூமன்றக் கூட்டத்தில் தாக்கல் செய்யவியலாது என மக்களவைத் தலைவர் பண்டிகார் அமின் மூலியா கூறினார் ஏனென்றால், அதற்குப் போடப்பட்ட இரகசிய காப்புப் பூட்டு இன்னும் அகற்றப்படவில்லை. “அறிக்கைக்கான இரகசிய காப்பு விதிகள் இன்னும் அகற்றப்படவில்லை என்பதைத் தலைமைக் கணக்காய்வாளரே என்னிடம் …
எம்பி: அஸலினா சொல்வது தவறு, ரபிஸி கைது நாடாளுமன்ற விதிகளை…
செவ்வாய்க்கிழமை பாண்டான் எம்பி ரபிஸி ரம்லி கைது செய்யப்பட்டது நாடாளுமன்ற விதிகளை மீறும் ஒரு செயல் என்று எதிரணி எம்பி ஒருவர் கூறினார். அந்த வகையில் சட்டப்படியாகவே அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார் என்று பிரதமர்துறை அமைச்சர் அஸலினா ஒஸ்மான் கூறியிருப்பது தவறு என்கிறார் பாடாங் செராய் எம்பி என்.…
ரஃபிஸியை விடுவிக்கப் போலீஸிடம் மக்களவைத் தலைவர் கோரிக்கை விட வேண்டும்,…
நேற்று நாடாளுமன்ற கட்டட முன்வாயிலில் பாண்டான் நாடாளுமன்ற உறுப்பினர் ரஃபிஸி ரமலி போலீசாரால் கைது செய்யப்பட்டதை ஏற்றுக்கொள்ள முடியாது என்பதோடு அது வன்முறையான செயலாகும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் மு. குலசேகரன் இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் கூறுகிறார். போலீசாரின் அந்நடவடிக்கை நாடளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்திற்குள் வரவும்…
பிரதமர்: ரிம4 பில்லியன் கடன் பற்றிய விவரங்களை இப்போதைக்கு வெளியிட…
பணி ஓய்வு நிதி நிறுவனம் (KWAP) எஸ்ஆர்சி இண்டர்நேசனலுக்குக் கொடுத்த ரிம4பில்லியன் கடன் குறித்த விவரங்களை 1எம்டிபி-யால் இப்போதைக்கு வெளியிட இயலாது எனப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கூறினார். “1எம்டிபி-இன் வழக்கமான நடைமுறை என்னவென்றால் , முதலில் சொல்லப்படும் தகவல் உண்மையானதா, சரியானதா என்பதை ஆராய்ந்து அதன்பின்னரே விவரங்களைப் …
ரபிஸி நாடாளுமன்ற எல்லைக்குள் கைது செய்யப்பட்டாரா? அவைத் தலைவர் ஆராய்கிறார்
பிகேஆர்- பாண்டான் எம்பி ரபிஸி ரம்லியை நாடாளுமன்ற நுழைவாயிலில் கைது செய்ததன் மூலம் இன்ஸ்பெக்டர்- ஜெனரல் அப் போலீஸ்(ஐஜிபி) காலிட் அபு பக்கார் நாடாளுமன்ற நிலை ஆணையை மீறினாரா என்பதை மக்களவைத் தலைவர் பண்டிகார் அமின் மூலியாவால் உறுதியாக சொல்ல இயலவில்லை. ஏனென்றால் ரபிஸி கைது செய்யப்பட்ட இடம்,…
அஸலினா: ஆதாரமில்லை அதனால் ஓஎஸ்ஏ மீறலுக்காக நடவடிக்கை எடுக்கப்படவில்லை
அரசாங்க அதிகாரிகள்மீது அதிகாரத்துவ இரகசியச் சட்ட(ஓஎஸ்ஏ) த்தை மீறியதாக இதுவரை நடவடிக்கை எடுக்கப்பட்டதில்லை எனப் பிரதமர்துறை அமைச்சர் அஸலினா ஒஸ்மான் கூறினார். “புகார்கள் இருந்தாலும்கூட எந்தவொரு அரசாங்க அதிகாரிக்கு எதிராகவும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதில்லை. ஏனென்றால் (சட்டத்தை மீறியதற்கு) சான்றுகள் இல்லை”, என நாடாளுமன்றத்தில் எழுத்துவழி அளித்த பதிலில் …
ரபிஸி கைது செய்யப்பட்டதற்கு இசாம் கண்டனம்
இரகசிய காப்புச் சட்டத்தின்(ஒஎஸ்ஏ)கீழ் பிகேஆர் தலைமைச் செயலாளர் ரபிஸி ரம்லி கைது செய்யப்பட்டதைப் “பிற்போக்கான செயல்” என முன்னாள் செனட்டர் முகம்மட் இசாம் முகம்மட் நோர் வருணித்திருக்கிறார். “ரபிஸியையோ வேறு எவரையுமோ ஓஎஸ்ஏ-இன்கீழ்க் கைது செய்வது தவறு. அது பிற்போக்கான செயலாகும்”, என இசாம் முகநூலில் குறிப்பிட்டிருந்தார். “தேசிய …
பிகேஆர் தலைமைச் செயலாளர் ரஃபிஸி ரமலி கைது செய்யப்பட்டார்
இன்று மாலை நாடாளுமன்ற கட்டடத்தின் வாயிற்கதவுக்கு வெளியில் பிகேஆர் தலைமைச் செயலாளர் ரஃபிஸி ரமலி போலீசாரால் கைது செய்யப்பட்டார். ரஃபிஸி கைது செய்யப்பட்டதை போலீஸ் படைத் தலைவர் காலிட் அபு பாகார் உறுதிப்படுத்தினார். அரசு இரகசியத்தை வெளியிட்டதற்காக ரஃபிஸி அதிகாரத்துவ இரகசியச் சட்டம் (ஒஎஸ்எ) செக்சன் 8 இன்…
1எம்டிபி மீதான பிஏசி அறிக்கை தயார்; வியாழக்கிழமை தாக்கல் செய்யப்படும்
பொதுக் கணக்குக்குழு (பிஏசி) 1எம்டிபிமீதான அதன் அறிக்கையைத் தயாரித்து விட்டது. அடுத்த இரண்டு நாள்களில் அறிக்கை அச்சடிக்கப்பட்டு வியாழனன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று பிஏசி உறுப்பினரும் பெட்டாலிங் ஜெயா உத்தாரா எம்பி-யுமான டோனி புவா கூறினார். ஆனால், 1எம்டிபி மீதான தலைமைக் கணக்காய்வாளர் அறிக்கை எப்போது தயாராகும் …
அம்னோ தோற்பதால் மாரா அழிந்து விடாது
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கூறியிருப்பதுபோல், அம்னோ தோற்றுப்போனால் மஜ்லிஸ் அமானா ரக்யாட் (மாரா) ஒன்றும் அழிந்து விடாது. அது, பூமிபுத்ரா சமூகத்தின் நலனைக் கட்டிக்காக்கும் அதன் இலக்கைத் தொடர்ந்து நிறைவேற்றி வருமே தவிர இப்போது உள்ளதுபோல் மேட்டுக்குடி சார்ந்த ஒருசில பூமிபுத்ராக்களை மட்டும் வளப்படுத்திக் கொண்டிருக்காது என்று …
மிட்வேலி உணவகத்தில் கேஸ் வெடிப்பு: எண்மர் காயம்
மிட்வேலி பேரங்காடியில் உணவகம் ஒன்றில் நிகழ்ந்த எரிவாயு வெடிப்பில் எண்மர் காயமடைந்ததாக தீயணைப்பு, மீட்புத்துறை தெரிவித்தது. அச்சம்பவம் காலை மணி 9.45 அளவில் நிகழ்ந்ததாக பந்தாய் தீயணைப்பு, மீட்புத்துறையின் பேச்சாளர் தெரிவித்தார். தொடக்கநிலை ஆய்வுகள் எரிவாயு கசிவினால் வெடிப்பு நிகழ்ந்திருக்கலாம் என்பதைக் காண்பிக்கின்றன. அச்சம்பவத்தில் இருவருக்கு தீக்காயங்களும், மற்றவர்களுக்கு…
1எம்டிபி குறித்து ஆஸி வங்கி அதிகாரியிடம் விசாரணை
ஆஸ்திரேலிய நாடாளுமன்ற விசாரணைக் குழு அந்நாட்டு வங்கி அதிகாரி ஒருவரிடம் அவருடைய வங்கிக்கு 1எம்டிபி ஊழலுடன் தொடர்புண்டா எனத் துருவித் துருவி விசாரித்துள்ளது.. யுஎஸ்$1பில்லியனுக்குமேல் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் AmBank வங்கிக்கணக்குக்கு மாற்றிவிடப்பட்டது பற்றி அறிவாரா என்று ANZ Bank துணைத் தலைவர் கிரேஹேம் ஹோட்ஜசிடம் வினவப்பட்டது.…
கேஜெ: வெளிநாட்டில் கணக்கு வைத்துக்கொள்வது குற்றமல்ல
பலர் தொழில் காரணங்களுக்காக வெளிநாட்டு வங்கிகளில் கணக்கு வைத்துக் கொண்டிருக்கலாம் அதைக் குற்றமென்று சொல்ல முடியாது என இளைஞர், விளையாட்டு அமைச்சர் கைரி ஜமாலுடின் கூறினார். “நிறைய தகவல்கள் கசிந்துள்ளன. முழுவதும் இன்னும் தெரியவில்லை. மெஸ்ஸியின் பெயர்கூட உள்ளது. “இதனாலேயே (கணக்கு வைத்திருப்பதால்) ஒருவர் குற்றவாளி ஆகிவிட மாட்டார்.…
‘பனாமா பேப்பர்ஸ்’மீது உலக நாடுகளின் கவனம்
உலகம் முழுவதும் அரசியல் பெரும்புள்ளிகள், பிரபலங்கள், பெரும் பணக்காரர்கள் பலர் தங்கள் கணக்கில் வராத சொத்துக்களை பனாமா நாட்டில் எவ்வளவு பதுக்கி வைத்து எப்படி எல்லாம் வரி ஏய்ப்பு செய்துள்ளார்கள் என்ற தகவல் கசிந்துள்ளது. இதுதான் 'பனாமா பேப்பர்ஸ்'. பனாமா பேப்பர்ஸ் அம்பலப்படுத்தியுள்ள பிரபலங்களின் பட்டியலில் ரஷ்ய அதிபர்…
இணையச் சேவை எல்லா இடங்களிலும் கிடைக்க வேண்டும், அதற்குத்தான் முக்கியத்துவம்
இணையச் சேவையில் வேகத்தைவிட அது நாடு முழுக்கக் கிடைக்க வேண்டும் என்பதற்கே அரசாங்கம் முன்னுரிமை கொடுப்பதாக தொடர்பு, பல்லூடக அமைச்சர் சாலே சைட் கெருவாக் கூறினார். “ஆசியான் நாடுகள் இணையச் சேவையின் வேகத்தில் கவனம் செலுத்தி வரும் வேளையில் மலேசியா அது பரவலாகக் கிடைக்க வேண்டும் என்பதற்குத்தான் முன்னுரிமை …
மகாதிர்: தேர்தல் முறைப்படி நடந்தால் பிஎன் தோற்றுப்போகும்
அடுத்த பொதுத் தேர்தல் முறைப்படி நடத்தப்படுமானால் பிரதமர் அப்துல் ரசாக் தலைமையிலான ஆளும் கட்சி தோற்றுப்போகலாம் என முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் கூறினார். “தேர்தல் நியாயமாக, வாக்குப் பெட்டிகளில் தில்லுமுல்லு போன்றவை இல்லாமல் நடத்தப்பட்டால் பிஎன் தோற்கும் என்றே நினைக்கிறேன்”, என மகாதிர் கூறியதாக சிங்கப்பூரின் …
நஜிப் பதவி விலக இளைஞர்கள் கோரிக்கை
பணம் பில்லியன் கணக்கில் அவருடைய கணக்கில் மாற்றிவிடப்பட்டதாக செய்திகள் வந்து கொண்டிருப்பதால் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் பதவி விலகுவதே நல்லது என இளைஞர் அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன. “நேர்மையையும் பொறுப்புடைமையையும் காட்டும் வகையில் நஜிப் பதவி விலக வேண்டும் என விரும்புகிறோம்”, என அவ்விளைஞர்கள் ஓர் அறிக்கையில் …


