1எம்டிபி கடன் அரசாங்கக் கடன் அல்ல, நஜிப் கூறுகிறார்

  1எம்டிபிக்கு குவிந்துள்ள கடன்கள் அரசாங்கக் கடன்களாகக் கருதப்படவில்லை என்று பிரதமர் நஜிப் கூறியுள்ளார். "1எம்டிபியின் கடன்களும் அவை சார்ந்த செயல்திட்டங்களும் மத்திய அரசாங்கத்தின் கடன்களாக வகைப்படுத்தப்படவில்லை. "ஆகையால், 1எம்டிபியின் கடன்களும் அவை சம்பந்தப்பட்ட செயல்திட்டங்களும் அரசாங்கத்தின் கடன்களுக்கு முக்கிய கூறுகளாக அமையவில்லை", என்றார் நிதி அமைச்சருமான நஜிப்.…

பிரிம் தொகையை அதிகரித்துவிட்டு பெட்ரோல் விலையை உயர்த்தும் கேலிக்கூத்து: குவான்…

பெட்ரோல்  விலையில்   15 சென்  உயர்த்தப்பட்டதையும்   சமையல்   எண்ணெய்   உதவித்தொகை   பகுதி   மீட்டுக்கொள்ளப்பட்டிருப்பதையும்   டிஏபி   தலைமைச்   செயலாளர்   லிம்   குவான்   எங்   கண்டித்தார். இது,  கடந்த   வாரம்   2017  பட்ஜெட்டைத்   தாக்கல்   செய்தபோது    பிரிம்  உதவித்   தொகையில்  ரிம200  உயர்த்தப்படும்   எனப்   பிரதமர்   நஜிப்  அப்துல்   அறிவித்ததைக்  “கேலி …

நஜிப்: மலேசியாவில் சீனாவின் முதலீடுகள் மேலும் விரிவடையும்

மலேசியாவுக்கும்   சீனாவுக்குமிடையில்   வர்த்தக   உறவுகள்   தொடர்ந்து   வலுப்பெற்று   வருவதாகவும்   மலேசியாவில்   சீன   முதலீடு   மேலும்   விரிவடையும்   என்றும்   பிரதமர்   நஜிப்   அப்துல்  ரசாக்   கூறுகிறார். கடந்த   ஆண்டில்  சீனா   யுஎஸ்$2  பில்லியனை  மலேசியாவில்   முதலீடு   செய்தது    என்றும்   கடந்த   ஐந்தாண்டுகளைக்    கணக்கில்    எடுத்துக்  கொண்டால்    அதன்   முதலீடுகள்   மேலும்  …

அம்னோ இளைஞர்கள் சிலாங்கூர் செயலகக் கட்டிடத்தின்மீது வாளிகளை விட்டெறிந்தனர்

சிலாங்கூர்   மாநிலத்தில்   நீர்  விநியோகத்    தடைக்கு   எதிர்ப்புத்   தெரிவித்த   ஒரு  குழு   காலி  வாளிகளை   சிலாங்கூர்  செயலகக்  கட்டிடத்தின்   மூடப்பட்ட     வாயில்   கதவுகளின்மீது   விட்டெறிந்தது. அம்னோ  இளைஞர்   பகுதி   செயல்குழு   உறுப்பினர்   அர்மண்ட்  அழா  அபு  ஹனிபா  தலைமையில்  150-பேரடங்கிய   அக்கூட்டம்  செயலகக்  கட்டிடத்தின்முன்   ஆர்ப்பாட்டம்  செய்ததுடன்   அதன்  …

என்எப்சி வழக்கில் ரபிஸிக்கு எதிராகவும் மலேசியாகினிக்கு சாதகமாகவும் நீதிமன்றம் தீர்ப்பு

  எட்டு சொத்துகளுக்கு கடன் பெறுவதற்கு அராசாங்க நிதியை நெம்புகோள்களாக என்எப்சி பயன்படுத்தியது என்று பாண்டான் நாடாளுமன்ற உறுப்பினர் ரபிஸி கூறியிருந்ததற்கு எதிராக அவர் மீது என்எப்சி நிறுவனம் தொடுத்திருந்த அவதூறு வழக்கில் இன்று கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் ரபிஸிக்கு எதிராக தீர்ப்பளித்தது. ஆனால், ரபிஸியின் அறிக்கையை செய்தியாக வெளியிட்டிருந்ததற்காக…

எரிபொருள் விலை இன்று நள்ளிரவிலிருந்து 15 சென் உயர்கிறது

  எரிபொருள் விற்பனை நிலையங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் விலை இன்று நல்ளிரவிலிருந்து ஒரு லீட்டருக்கு 15 சென் உயர்வு காண்கிறது. இது இவ்வாண்டின் மிக அதிகமான விலை உயர்வாகும். ரோன்95 ஒரு லீட்டர் ரிம1.95க்கும், ரோன்97 ஒரு லீட்டர் ரிம2.30க்கும், டீசல் ஒரு லீட்டர் ரிம2.00க்கும்…

கடந்தகால, இக்காலத் தலைவர்கள் ஓஎஸ்ஏ-க்குக் கட்டுப்பட்டவர்களே- ஜாஹிட் ஹமிடி

நாட்டின்   தலைவர்கள்- அரசாங்கத்தில்  உள்ள   இப்போதைய   தலைவர்களும்   சரி,   அரசாங்கத்தில்   இருந்துவிட்டு   விலகிச்   சென்றவர்களாக   இருந்தாலும்   சரி,   பணி  ஓய்வு  பெற்றவர்ளாக  இருந்தாலும்   சரி-   அனைவரும்   1972   அதிகாரத்துவ   இரகசிய   சட்டத்துக்குக்  கட்டுப்பட்டவர்களே   என்கிறார்   துணைப்   பிரதமர்   அஹமட்  ஜாஹிட்   ஹமிடி. ஏனென்றால்,   அவர்கள்   எல்லாருமே   அரசாங்க  இரகசியங்களைக் …

மலேசியாவில் 290,437 சிறார்கள் நாடற்றவர்கள்

மலேசியாவில்   18வயதுக்குக்   குறைந்த  290,437  சிறார்கள்   நாடற்றவர்கள்    எனத்   துணைப்   பிரதமரும்   உள்துறை   அமைச்சருமான   அஹமட்  ஜாஹிட்  ஹமிடி  கூறுகிறார். மலேசியாவில்   நாடற்றவர்களாக   உள்ள   சிறார்  எண்ணிக்கை   குறித்து   என்.சுரேந்திரன் (பிகேஆர்- பாடாங்   செராய்)   வினவியதற்கு    ஜாஹிட்   இவ்வாறு  பதிலளித்தார். “மலேசியாவில்   பிறந்த   ஒரு  வயதுக்கும்  18வயதுக்கும்  இடைப்பட்ட  …

எல்ஆர்டி, மொனோரயில் 15 நிமிடம் தாமதமானால் கட்டணத்தொகையைத் திரும்பப் பெறலாம்

எல்ஆர்டி  அல்லது  மொனோ  இரயில்  வண்டிகள்   15  நிமிடம்   தாமதமாக   வந்தால்  பயனர்கள்  அவர்களின்   கட்டணத்  தொகையைத்  திரும்பப்  பெறலாம்   எனப்  பிரதமர்துறை   அமைச்சர்   நன்சி   சுக்ரி  இன்று   மக்களவையில்   அறிவித்தார். அல்லது    பயனர்கள்   ஒரு  பற்றுச்சீட்டைப்  பெற்று   அதை  மறுநாள்  பயணத்துக்குப்   பயன்படுத்திக்  கொள்ளலாம். “இக்கொள்கை  ஆண்டு …

பிடிபிடிஎன்னிடம் கடன் வாங்கியவர்களில் 753,000 பேர் சல்லிக்காசுகூட திருப்பிச் செலுத்தவில்லை

தேசிய   உயர்க் கல்விக்  கடனுதவி    நிறுவன(பிடிபிடிஎன்)த்திடம்    கடன்  வாங்கியவர்களில்   753,058   பேர்   கடனைப்  பெற்றதோடு   சரி,   வாங்கிய   கடனில்   ஒரு   காசைக்கூட   திருப்பிக்  கொடுத்ததில்லை.  இதனால்   ரிம5.191 பில்லியன்   வராக்  கடனாக     உள்ளது    என    உயர்க்  கல்வி   அமைச்சர்   இட்ரிஸ்   ஜூசோ   இன்று  மக்களவையில்    தெரிவித்தார். “முன்னாள்    மாணவர்களிடமிருந்து   …

ஒரு மில்லியன் சிலாங்கூர் மக்களுக்கு இலவச மருத்துவ உதவி: அஸ்மின்

சிலாங்கூர்   மாநில    அரசு,    குறைந்த   வருமானம்   பெறும்  பி40  தரப்பினருக்கு  இலவச  மருத்துவ   உதவி   அறிமுகப்படுத்தப்படும்    என  அதன்  2017  பட்ஜெட்டில்    அறிவித்துள்ளது.  இதன்வழி   அம்மாநிலத்தில்   10  ஆண்டுகளுக்குமேல்   வசித்துவரும்    சுமார்   1 மில்லியன்  பேர்  பயனடைவார்கள். அத்தரப்பினர்   உயர்ந்து  வரும்   மருத்துவச்  செலவுகளைச்  சமாளிக்க  முடியாமல்   தவிப்பதால் …

துவான் இப்ராகிம்: போலீசார் விசாரிக்க வேண்டியது 1எம்டிபி-யை, ஹுஸ்னியை அல்ல

போலீசார்   1எம்டிபி   ஊழலைத்தான்   விசாரிக்க    வேண்டுமே   தவிர   அஹமட்  ஹுஸ்னி   ஹனாட்ஸ்லா   போன்ற   முன்னாள்   அமைச்சர்களை   அல்ல   என்று   பாஸ்   துணைத்   தலைவர்   துவான்   இப்ராகிம்   துவான்  மான்   கூறினார். “ஹூஸ்னியை  விசாரிப்பதில்   நேரத்தையும்   சக்தியையும்  விரயமடிக்க   வேண்டாம்    என்று  பாஸ்   போலீசுக்குக்  கூறிக்கொள்ள   விரும்புகிறது. “அதற்குப்   பதில், …

அஸலினா: நஜிப் வருமான வரி செலுத்தத் தவறுவதில்லை

பிரதமர்   நஜிப்   அப்துல்  ரசாக்  உரிய   நேரத்தில்   வருமான   வரியைச்   செலுத்தி   விடுவதாக    பிரதமர்துறை   அமைச்சர்    அஸலினா  ஒத்மான்   சைட்  இன்று   நாடாளுமன்றத்தில்   தெரிவித்தார். அமெரிக்க   அதிபர்   பராக்   ஒபாமாவும்   முன்னாள்   பிரிட்டிஷ்  பிரதமர்   டேவிட்   சேமரனும்    செய்ததுபோல்   நஜிப்பும்   அவரின்   துணைவியார்   ரோஸ்மா   மன்சூரும்   அவர்கள்  செலுத்திய  …

அமைச்சர்: ஹாடியின் ஹூடுட் மசோதாவை விவாதிக்க நேரம் போதாது

பாஸ் கட்சியின் தலைவர் அப்துல் ஹாடி அவாங்கின் தனிப்பட்ட உறுப்பினர் ஹுடுட் மசோதாவை தற்போதைய நாடாளுமன்ற அமர்வில் விவாதிக்கப்படும் சாத்தியம் மிகக் குறைவாகவே இருக்கிறது. பட்ஜெட் 2017 விவாதிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்ட பின்னர் இரண்டு அல்லது மூன்று மசோதாக்களுக்கு மட்டுமே நேரம் இருக்கிறது. வழக்கமாக, அரசாங்க மசோதாக்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது.…

ஹுஸ்னி விசாரணைக்காக நாளை புக்கிட் அமானுக்கு அழைக்கப்பட்டுள்ளார்

  நாடாளுமன்ற மக்கள் அவையில் ஆற்றிய உரை குறித்து விசாரிப்பதற்காக முன்னாள் நிதி அமைச்சர் II அஹமட் ஹுஸ்னி புக்கிட் அமானுக்கு நாளை அழைக்கப்பட்டிருக்கிறார். நாளை பிற்பகல் மணி 2.30க்கு விசாரிக்கப்படுவதற்காக புக்கிட் அமானுக்கு அழைக்கப்பட்டிருக்கிறார் என்று ஹுஸ்னியின் உதவியாளர் மலேசியாகினியிடம் தெரிவித்தார். ஹுஸ்னி அமைச்சரவையிலிருந்து கடந்த ஜூலையில்…

கைரி: பெர்சே பேரணியைத் தடுத்து நிறுத்துவதற்கு சாலைகளை மூடுங்கள்

  பெர்சே 5 பேரணி நடப்பதைத் தடுத்து நிறுத்துவதற்கு அப்பேரணி செல்வதற்காக தேர்வு செய்யப்பட்டிருக்கும் சாலைகள் அனைத்தையும் மூடிவிடும்படி போலீஸ் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. பேரணி நடை தொடங்குவதற்கு முன்னர் ஆதரவாளர்கள் ஒன்றுகூடும் இடங்கள் அடையாளம் காணப்பட்டுவிட்டன. அவ்விடங்களிலிருந்து டாத்தாரான் மெர்தேக்காவுக்கு அணிவகுத்து நடப்பவர்களை போலீசார் தடைசெய்ய முடியும் என்று இளஞர்…

மரியா கைது செய்யப்பட்டதில் தொல்லை கொடுத்தல், அச்சுறுத்தல் ஆதிக்கம்

சபாவில் சமீபத்தில் பெர்சே இயக்கத்திற்கும் அதன் ஆதரவாளர்களுக்கும் தொல்ல கொடுத்து அச்சுறுத்தி வந்ததாக போலீசார் மீது டிஎபி நாடாளும்னற தலைவர் லிம் கிட் சியாங் குற்றம் சுமத்தியுள்ளார். கோத்தா மருடுவில் துண்டுப் பிரசுரங்களை விநியோகம் செய்ததற்காக பெர்சே தலைவர் மரியா சின் அப்துல்லா கைது செய்யப்பட்டது கடுமையாக கண்டிக்கப்பட…

அனைவருக்கும் சமமான உரிமைகள், உறுதிப்படுத்துகிறார் ஸாகிட்

  ஒற்றுமைக்கு மலேசியா ஒரு முன்மாதிரி ஏனென்றால் அனைத்து இனங்களுக்கும் அரசமைப்புச் சட்டத்தில் வரையறுத்து ஒப்புக்கொண்டுள்ளபடி அது நியாயமான மற்றும் சமமான உரிமைகளை உறுதிப்படுத்துகிறது என்று துணைப் பிரதமர் அஹமட் ஸாகிட் ஹமிடி கூறுகிறார். ஆகவே, நாட்டிலுள்ள சிறுபான்மை இனத்தவர்கள் தங்களுடைய சமயங்கள் மற்றும் பாரம்பரியங்கள் ஆகியவற்றை பின்பற்றுவது…

போலீஸ் மூன்று முன்னாள் அமைச்சர்களிடமிருந்து வாக்குமூலம் பதிவு செய்யப் போகிறது

  அரசாங்க இரகசியங்களை சமீபத்தில் வெளிப்படுத்தியதாக கூறப்படும் மூன்று முன்னாள் அமைச்சர்களிடமிருந்து வாக்குமூலம் பதிவு செய்யப்படும் என்று ஐஜிபி காலிட் அபு பாக்கார் கூறுகிறார். "நாங்கள் இவ்விவகாரம் குறித்து விசாரணை மேற்கொள்ள   நடவடிக்கை  எடுத்துள்ளோம். சம்பந்தப்பட்டவர்கள் ஒவ்வொருவரும் அவர்களின் வாக்குமூலத்தை பதிவு செய்வதற்காக இன்னும் இரண்டொரு தினங்களில்…

“இரத்தத்தில் அமிழ்த்துவேன்” என்று ஜமால் கூறியதும் வெறும் சொற்கள்தானா?, ஐஜிபி…

  சுங்கை பெசார் அம்னோ தொகுதி தலைவர் ஜமால் முகமட் யுனுஸ் "இரத்தத்தில் அமிழ்த்துவேன்" என்று கூறியிருந்த கருத்துக்காக அவர் போலீஸ்  விசாரணைக்கு உட்படுத்தப்படுவாரா அல்லது ஒன்றுமில்லை என்று விட்டுவிடப்படுவாரா என்று போலீஸ் படைத் தலைவர் காலிட் அபு பாக்கார் கேட்கப்பட்டுள்ளார். "இரத்தத்தில் அமிழ்த்துவேன்" என்று ஜமால் கூறியிருந்த…

மரியா சின் சாபாவில் கைது செய்யப்பட்டு, பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்

பெர்சே தலைவர் மரியா சின் அப்துல்லா துண்டுப் பிரசுரங்களை லாங்கூன், கோத்தா மருடுவில் விநியோகம் செய்ததற்காக இன்று போலீசாரால் கைது செய்யப்பட்டார் என்று பெர்சே அதிகாரி ஒருவர் டிவிட்டர் செய்துள்ளார். விசாரிக்கப்படுவதற்காக கோத்தா மருடு மாவட்ட போலீஸ் தலைமையகத்திற்கு அவர் கொண்டுவரப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார். பெர்சே துண்டுப்…

அரசாங்க இரகசியங்களை வெளிப்படுத்தியதாக முகைதின் மீது போலீஸ் புகார்

  1எம்டிபி சம்பந்தப்பட்ட "அரசாங்க இரகசியங்களை" வெளிப்படுத்தியதாக முன்னாள் துணைப் பிரதமர் முகைதின் யாசின் மீது போலீஸ் புகார் செய்யப்பட்டுள்ளது. ஜாரிங்கான் மெலாயு மலேசியா (ஜேஎம்எம்) தலைவர் அஸ்வான்டின் ஹம்சா செய்துள்ள புகாரில் முகைதின் யாசின் இரண்டு சம்பவங்களில் - இவ்வாரம் நாடாளுமன்றத்தில் மற்றும் இம்மாத தொடக்கத்தில் ஒரு…

1எம்டிபி விவகாரம்: சுவிஸ் ஏஜி உதவி கோரியிருப்பதை அபாண்டி உறுதிப்படுத்தினார்

சுவிட்ஸர்லாந்து சட்டத்துறை தலைவர் (ஒஎஜி) பண மோசடி மற்றும் நாணயச் சலவை ஆகியவற்றில் 1எம்டிபி சம்பந்தப்பட்டிருப்பதாகக் கூறப்படும் விவகாரத்தில் பரஸ்பர சட்ட உதவி திட்டத்தின் கீழ் மலேசிய சட்டத்துறை அலுவலகத்திடம் உதவி கோரியிருப்பதை மலேசிய அட்டர்னி ஜெனரல் முகம்மட் அபாண்டி அலி உறுதிப்படுத்தினார். மலேசிய எஜியிடமிருந்து சுவிஸ் எஜி…