டிஎபி எம்பியின் உறவினர் கடத்தப்பட்டார்

டிஎபி நாடாளுமன்ற உறுப்பினர் எலிஸ் லாவ் கியோங் யிஎங்கின் உறவினர் லாவ் ஜுங் ஹியன் நேற்றிரவு சாபா, செம்போர்னா கடற்பகுதியிலிருந்து கடத்தப்பட்ட நான்கு மலேசியர்களில் ஒருவராவார். பாதிக்கப்பட்டவர்களில் இருவர், வோங் டெக் பெங் மற்றும் வோங் டெக் சீ ஆகியோரும் லவ்வின் உறவினர்களாவர். அவர்கள் சிபுவை சேர்ந்தவர்கள். நான்காவது…

அமானா சரவாக்கில் 13 இடங்களில் களமிறங்கும்

எதிர்வரும்  சரவாக்  சட்டமன்ற  தேர்தலில்  13  தொகுதிகளில்  போட்டியிடப்போவதாக  அமானா  அறிவித்துள்ளது. இதன்  தொடர்பில்  பக்கத்தான்  ஹராபான்  பங்காளிக்  கட்சிகளுடன்  கலந்துபேசி  முடிவெடுத்து  விட்டதாக  அமானா   துணைத்  தலைவர்  சலாஹுடின்  ஆயுப்    தெரிவித்தார். “13 இடங்களிலும்  போட்டியிடுவதற்கான  ஏற்பாடுகளைச்  செய்யத்  தொடங்கி  விட்டோம்.  வேட்பாளர்களும்  அடையாளம்  காணப்பட்டு  விட்டனர்.…

கூட்டம் குறைந்திருந்தது பாஸின் பலத்தை உணர்த்தவில்லையா? கேட்கிறார் துவான் இப்ராகிம்

முந்தைய  பேரணிகளுடன்  ஒப்பிடும்போது  நேற்றைய  ஜிஎஸ்டி(பொருள், சேவை  வரி)- எதிர்ப்புப்  பேரணியில்  கூட்டம்  குறைவு  என்பது  பாஸின்  பலத்தைக்  காண்பிப்பதாக  அக்கட்சி  கூறியது. “கூட்டத்தினர்  எண்ணிக்கை  என்று  பார்த்தால்  அது (பேரணி)  தோல்விதான். பாஸும்  அதில்  இணைந்திருந்தால்  கூட்டம்  இன்னும்  பெரிதாக  இருந்திருக்கும்”, என  பாஸ்  துணைத்  தலைவர் …

‘மகாதிர் நஜிப்பைப் பதவியிலிருந்து அகற்ற நினைப்பது சரி, ஆனால் அதற்கான…

அம்னோ   மூத்த  தலைவர்  தெங்கு  ரசாலி  ஹம்சா,  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்கைப்  பதவியிலிருந்து  அகற்றும்  முன்னாள்  பிரதமர்  டாக்டர்  மகாதிர்  முகம்மட்டின்  திட்டத்தை   எதிர்க்கவில்லை. ஆனால்,  அது  அரசமைப்புக்கு  ஏற்புடையதல்ல  என்றாரவர். “மகாதிரின்  விருப்பத்தை  நான்  எதிர்க்கவில்லை.  ஆனால்,  அது  நடவாது.  ஏனென்றால்,  அரசமைப்பு  அதற்கு  இடம்தராது”,…

‘திரெங்கானு அம்னோவில் நெருக்கடி’, முன்னாள் எம்பி

திரெங்கானு  மந்திரி  புசார்  அஹ்மட்  ரசிப்  அப்துல்  ரஹ்மான் எந்த  நேரத்திலும்   பதவியிலிருந்து  தூக்கப்படலாம்  என  முன்னாள்  மந்திரி  புசார்  அஹ்மட்  சைட்  கூறிக்  கொண்டிருக்கிறார். திரெங்கானு  சுல்தான்   மிசான்  சைனல்  அபிடினைச்  சந்தித்து  மந்திரி  புசாரை  அகற்றுமாறு  அவரைக்  கேட்டுக்கொள்ள  வேண்டும்  என்று  பிரதமர்  நஜிப்  அப்துல் …

ஜிஎஸ்டி-ஏதிர்ப்புப் பேரணியில் கலந்து கொண்டவர் தடுப்புக் காவலில்

ஜிஎஸ்டி- எதிர்ப்புப்  பேரணியில்  கலந்துகொண்ட  முகம்மட்  ஸப்ரான்  முகம்மட்  ஸுக்டி  தேச  நிந்தனைச்  சட்டம்  பிரிவு 4(1)(C)இன்கீழ்  விசாரணைக்காக  தடுத்து  வைக்கப்பட்டிருக்கிறார். நேற்று  கோலாலும்பூரில்    பிற்பகல்  மணி  சுமார்  3.30-க்கு  பொருள்,  சேவை  வரியை  எதிர்த்து  நடைபெற்ற  பேரணியில் கலந்து  கொண்ட  ஸப்ரான்  போலீஸ்  கார்  ஒன்றில்  பிரதமர் …

மகாதீர்: ஜிஎஸ்டியை அமல்படுத்த வேண்டாம் என்று நஜிப்பை கேட்டுக்கொண்டேன், அவர்…

  இன்று சுட்டெரிக்கும் வெப்பத்தையும் பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கான மக்கள் கூடியிருந்த பொருள்கள் மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) எதிர்ப்பு கூட்டத்திற்கு திடீரென்று வருகையளித்த முன்னாள் பிரதமர் மகாதீர், ஜிஎஸ்டி வரியை அமல்படுத்த வேண்டாம் என்று தாமே பிரதமர் நஜிப்பை கேட்டுக்கொண்டதாகவும், ஆனால் நஜிப் அதற்கு இணங்காமல் அவரது திட்டத்தை…

“செடிக்” இந்தியர்களுக்கான மாரா அமைப்பாக மாற்றப்பட வேண்டும்

-மு. குலசேகரன், ஏப்ரல் 2, 2016. மாரா பூமிபுத்ராக்களுக்கென 1ஆம் தேதி மார்ச் 1966ல் புறநகர் வட்டார மேம்பாடு அமைச்சின் கீழ் ஆரம்பிக்கப்பட்டு இன்று 10 லட்சம் பூமிபுத்ரா வணிகர்களை உருவாக்கியுள்ளது .மேலும் அதன் வழி 12 லட்சம் பட்டதாரி மாணவர்கள்  உருவாக்கப்பட்டிருக்கிறார்கள். இவற்றை எல்லாம் மலாய்க்காரர்களையும் பிற…

எட்மண்ட் போன் ஆசியான் மனித உரிமைகள் அமைப்பில் மலேசியப் பிரதிநிதி

  எட்மண்ட் போன் தாய் சூன் ஆசியான் மனித உரிமைகள் அமைப்பில் 2016-2018 தவணைக்கான மலேசியாவின் புதிய பிரதிநிதியாக நியமிக்கப்பட்டிருப்பதாக மலேசிய அரசாங்கம் இன்று அறிவித்தது. இந்த அமைப்பில் மலேசியாவின் முதல் பிரதிநிதியாக இருந்தவர் ஷாப்பி அப்துல்ல. இவர் 2010 ஆம் ஆண்டிலிருந்து 2015 ஆம் ஆண்டு வரையில்…

டிஏபி மகஜர் தொடர்பில் அலி திஞ்சுமீது போலீஸ் விசாரணை

நேற்று  டிஏபி  அலுவலகம்  சென்று  ஒரு  மகஜர்  வழங்கிய  அலி  திஞ்சுமீதும்  அவரின்  சிவப்புச்  சட்டை  இயக்கத்தின்மீதும்,  ஜாரிங்கான்  மலாயு  மலேசியா(ஜேஎம்எம்)மீதும்   போலீஸ்  விசாரணை  செய்யும். அலி  திஞ்சு,  இயற்பெயர்  முகம்மட்  அலி   பஹாரோம்,  தன்  பரிவாரங்களுடன்  கூட்டமாக   டிஏபி  தலைமைச்   செயலாளர்  லிம்  குவான்  எங்  ரிம2.8…

துப்பாக்கிக்காரன் அலோர் ஸ்டார் சிறைச்சாலையை நோக்கி 10 தடவை சுட்டான்

நேற்றிரவு   மணி  10.30  அளவில், துப்பாக்கிக்காரன்  ஒருவன்  அலோர்  ஸ்டார்  சிறைச்சாலையை  நோக்கி  10  தடவை  சுட்டிருக்கிறான். சிறை  வார்டன்  முகம்மட்  பிட்ரி  அப்துல்  ஸமான்,31,  காவல்  அறையில்  தான்  மட்டுமே  கடமையில்  இருந்ததாகவும்  அப்போது  இருவர்   மோட்டார்  சைக்கிளில்  வந்ததாகவும்  தெரிவித்தார். “அவர்களில்  ஒருவன்  மோட்டார்  சைக்கிளைவிட்டு …

1எம்டிபி விசாரணைக்காக அமெரிக்க நீதித்துறை அதிகாரிகள் மலேசியா வருகை

அமெரிக்க  நீதித்துறை  அதிகாரிகள்  1எம்டிபி  விசாரணை  தொடர்பில்  தனிப்பட்ட  சிலரைச்  சந்திப்பதற்கு   மலேசியா  வந்திருக்கிறார்களாம்.  பெயர்  குறிப்பிடப்படாத  வட்டாரங்களை  மேற்கோள்காட்டி  ராய்ட்டர்ஸ்  செய்தி  இவ்வாறு  அறிவித்துள்ளது. செய்தியை  உறுதிப்படுத்திக்கொள்ள  மலேசியாகினி  அமெரிக்க  நீதித்துறையைத்  தொடர்பு  கொண்டுள்ளது. 1எம்டிபி  ஊழல்  குறித்து  சுவிட்சர்லாந்து,  பிரிட்டன்,  அமெரிக்கா,  லக்ஸ்ம்பர்க்,  சிங்கப்பூர்,  ஹாங்காங் …

இசைக் கச்சேரியில் டாக்டர் மகாதிர்

பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்கைப்  பதவியிலிருந்து  அகற்றுவதை  முதன்மை  நோக்கமாகக்  கொண்டு   செயல்பட்டுவரும்  முன்னாள்  பிரதமர்   டாக்டர்  மகாதிர்  முகம்மட்  நேற்றிரவு  அதற்கு  இடைவேளை  விட்டு  புகழ்பெற்ற  பியானோ  கலைஞர்  ரிச்சர்ட்  கிளேடெர்மனின்  பியானோ  கச்சேரிக்குச்  சென்றிருந்தார். இஸ்தானா  புடாயாவில்  நடைபெற்ற  இசை  நிகழ்ச்சிக்குச்  சென்றிருந்த   மகாதிருடன்  அவரின் …

நள்ளிரவிலிருந்து எரிபொருள் விலை ஏற்றம் காண்கிறது

    இன்று நள்ளிரவிலிருந்து எரிபொருள் ரோன் 95 மற்றும் ரோன் 97 ஒரு லீட்டருக்கு 10 சென் விலை ஏற்றம் காண்கிறது. இதனால் ரோன்95 ஒரு லீட்டருக்கு ரிம1.70க்கும், ரோன்97 ஒரு லீட்டருக்கு ரிம2.05க்கும் விற்கப்படும். டீசல் விலை 20 சென் அதிகரிக்கிறது. ஒரு லீட்டர் டீசல்…

புரோட்டோன் தலைவர் பதவியிலிருந்து விலகினார் மகாதிர்

முன்னாள்  பிரதமர் டாக்டர்  மகாதிர்  முகம்மட்  புரோட்டோன்  ஹொல்டிங்ஸ்  தலைவர்  பதவியிலிருந்து  விலகினார். இச்செய்தி  மகாதிரின்  வலைப்பக்கத்தில்  வெளியிடப்பட்டிருந்த  ஊடக  அறிக்கை  இதைத்  தெரிவித்தது.     அவரது  பதவிவிலகல்  கடிதம்  டிஆர்பி-ஹைகோம்  பெர்ஹாட்  நிர்வாக  இயக்குனர்  சைட்  பைசல்  அல்பாருக்கு  நேற்றே  அனுப்பப்பட்டு  விட்டதாகவும் அது  கூறிற்று. இதுபோக,  மகாதிர் …

தமிழ்ப்பள்ளிகள் இடமாற்றம் நடக்குமா அல்லது வெறும் கண்துடைபப்பா?

-பெ. ரமேஷ், ஹிண்ட்ராஃப் மக்கள் பேரியக்கம், தலைமைச் சபை உறுப்பினர், 31. 3. 2016.  மலேசிய நாடாளுமன்றத்தில் இன்று கல்வி அமைச்சர் மஹாட்சிர் காலிட் எழுத்து பூர்வமாக அளித்துள்ள பதிலில் தேசியப்பள்ளிகளுக்கு வழி விடும் வகையில் தாய்மொழிப்பள்ளிகளை மூடும் எத்தகையப் பரிந்துரைகளையும் அரசு கொண்டிருக்கவில்லை என்றும், மேலும் கல்வி…

போலீஸ்: மாணவனை யாரும் மிரட்டவில்லை; அவன் சொந்தமாகவே நாக்கை வெட்டிக்…

மார்ச்  24-இல்  தன்  நாக்கு  நுனியைத்  துண்டித்துக்  கொண்ட  இரண்டாம் ஆண்டு  மாணவன்  யாருடைய  மிரட்டலுக்கும்  அஞ்சி  அவ்வாறு  செய்யவில்லை என  சிலாங்கூர்  போலீஸ்  தலைவர்  அப்துல்  சமா  மாட்  கூறினார். அம்மாணவன்  கூர்மையான  ஒரு  பொருளை  வைத்து  விளையாடிக்  கொண்டிருந்தபோது தன்  நாக்கை  அவனே  வெட்டிக்கொண்டான்  என்பது …

பெண்களுக்குக் கைப்பைகள் பிடிக்கும்: ரோஸ்மாவைத் தற்காத்துப் பேசுகிறார் துணை அமைச்சர்

வசதி  இருந்தால்  கைப்பைகள்,  நகைகள்  வைத்திருப்பதில்  தவறில்லை  என்கிறார்  விவசாயம்,  விவசாயம்  சார்ந்த  தொழில்  துணை  அமைச்சர் தாஜுடின்  அப்துல்  ரஹ்மான். அந்த  அம்னோ  உச்சமன்ற  உறுப்பினர்  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்கின்  துணைவியார்  ரோஸ்மாவைத்  தற்காத்துப்  பேசும்போது இவ்வாறு  கூறினார். “ஒன்றிரண்டு  பைகள்  வைத்துக்கொள்ளலாம்,  ஏன்  கூடாது?…

சரவாக் சட்டமன்றம் ஏப்ரல் 11-இல் கலைக்கப்படும்

சரவாக்  சட்டமன்றம்  ஏப்ரல்  11-இல்  கலைக்கப்படுமென  முதலமைச்சர்  அடினான்  சடேம்  அறிவித்தார். சட்டமன்றக்  கலைப்பை  அடுத்து  தேர்தல்  ஆணையம்  சட்டமன்றத்  தேர்தலுக்கான  வேட்பாளர்  நியமன  நாளையும்  வாக்களிப்பு  நாளையும்  அறிவிக்கும். 33 ஆண்டுகள்  பதவியிலிருந்த  அப்துல்  தயிப்  மஹமட்  பணி  ஓய்வு  பெற்றதை  அடுத்து  முதலமைச்சரான  அடினான்  பிஎன்னுக்குத் …

வரம்பற்ற அதிகாரம் படைத்தவரா ஏஜி? நீதிமன்றம் தீர்மானிக்கட்டுமே

சட்ட  விவகார  அமைச்சர்  நன்சி  ஷுக்ரி,  சட்டத்துறைத்  தலைவர் (ஏஜி) அபாண்டி  அலியிடம்  அவரது  அதிகாரம்  வரம்பற்றதா  என்பதைத்  தீர்மானிக்கும்  பொறுப்பை  நீதிமன்றங்களிடம் விட்டுவிடுமாறு  ஆலோசனை கூற  வேண்டும்  என்கிறார்  டிஏபி  எம்பி  ஒருவர். “இந்த விவகாரத்தை  நீதிமன்றங்களிடம்  விட்டுவிட  வேண்டும்  என   ஏஜிக்கு  ஆலோசனை  கூறத்  தயாரா …

WSJ:நஜிப்பிடமிருந்து யுஎஸ்7 மில்லியன் பெற்றதை நசிர் ஒப்புக்கொண்டார்

சிஐஎம்பி  தலைவர்  நசிர்  அப்துல்  ரசாக்  அவரின் சகோதரர்  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்கிடமிருந்து  யுஎஸ் 7 மில்லியன்  பெற்றுக்கொண்டதை  ஒப்புக்கொண்டிருக்கிறார். வால்  ஸ்திரிட்  ஜர்னலுக்கு  வழங்கிய  அறிக்கை  ஒன்றில்  அதை  ஒப்புக்கொண்ட  நசிர்,  பணம்  ஆளும்  கட்சி  அரசியல்வாதிகளுக்கு   அவர்களின்  தலைவர்  உத்தரவுப்படி  பிரித்துக்  கொடுக்கப்பட்டது  என்றார்.…

நஜிப் விடுமுறைக்கும் பொருள்கள் நகைகள் வாங்கவும் ரிம60 மில்லியன் செலவிட்டாராம்:…

பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்  ஆடம்பரப்  பொருள்கள்  வாங்குவதற்கு  மில்லியன்  கணக்கில்  செலவிட்டிருப்பதாக  செய்திகள்  கூறுகின்றன. விடுமுறை  கழிப்பதற்கும்  பொருள்கள்,  நகைகள்  வாங்குவதற்கும்  நஜிப்  யுஎஸ்15 மில்லியன்  செலவிட்டிருப்பதாக  வால்  ஸ்திரிட்  ஜர்னல்  கூறியது. அமெரிக்கா,  மலேசியா,  இத்தாலி  ஆகிய நாடுகளிலும்  மற்ற  இடங்களிலுமுள்ள   கடைகளில்  அவை  வாங்கப்பட்டனவாம்.

அருள் கந்தா: கடமை முடிந்தது, விரைவில் 1எம்டிபி-இலிருந்து விலகுவேன்

அருள் கந்தா  கந்தசாமி  1எம்டிபி  நிறுவனத்தின்  தலைமைப்  பொறுப்பை  ஏற்று  ஓராண்டுக்  காலம்  ஆகும்  வேளையில்  வந்த  வேலை  முடிந்து  விட்டதாக  நினைக்கிறார். அருள்  கந்தா  2015  ஜனவரியில்  1எம்டிபி-இல்  சேர்ந்தார். சேர்ந்த  சில  மாதங்களிலேயே  அந்நிறுவனத்தில்  நிதி  முறைகேடுகள்  நிகழ்ந்திருப்பதாகக்  குறைக்கூறல்களை  எதிர்நோக்க  வேண்டியதாயிற்று. அதன்  தொடர்பில் …