இந்த விபத்தில் மூன்று பேர் கொண்ட ஒரு குடும்பம் சம்பந்தப்பட்டிருந்தது, அதில் இரண்டு வயது குழந்தை சிறு காயங்களுடன் தப்பித்தது. சபாக் பெர்னம், சுங்கை பாஞ்சாங், கம்போங் பெலியா 2-இல் (Kampung Belia 2) கார் ஒன்று நிலைதடுமாறி சாலைத் தடுப்பில் மோதி கவிழ்ந்தது. சிலாங்கூர் தீயணைப்பு மற்றும்…
யுஎஸ்$375 மில்லியன் அன்பளிப்பு என்பதை ‘நம்ப முடியவில்லை’ என்கிறார் துணை…
சவூதி இளவரசர் ஒருவர் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கிடம் யுஎஸ்$375 மில்லியனை அன்பளிப்பாகக் கொடுத்தார் என்பது உண்மைதானா என்பதை முதலில் சரிபார்த்துக் கொள்ள வேண்டும் என்று விவசாயம், விவசாயம் சார்ந்த தொழில் துணை அமைச்சர் தாஜுடின் அப்துல் ரஹ்மான் கூறினார். “அது உண்மையா, பொய்யா என்பது தெரியவில்லை. “இது …
நாமின் கணக்கைச் சரிபார்க்க வருகிறீர்களா? ஒங்குக்கு சரவணன் சவால்
‘நாம்’ அறவாரியம் குறித்து குற்றஞ்சாட்டும் செர்டாங் டிஏபி எம்பி ஒங் கியான் மிங் நாமுக்கு வரவேண்டும் அதன் கணக்குகளைச் சரிபார்க்க வேண்டும். எல்லாம் ஒழுங்காக நடப்பது அப்போது தெரிந்து விடும் என்று இளைஞர், விளையாட்டுத் துறை துணை அமைச்சர் எம்.சரவணன் கூறினார். அவரது தலைமையில் செயல்படும் மஇகா- தொடர்புடைய …
மலேசிய அரவாணிக்கு அனைத்துலக விருது
அரவாணிகளின் உரிமைகளுக்காக போராடும் நிஷா ஆயுப்புக்கு 2016 அனைத்துலக வீரப் பெண்மணி விருது வழங்கப்பட்டுள்ளது. நேற்று அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனில் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரியால் வழங்கப்பட்ட அவ்விருதைப் பெற்றுக்கொள்ள உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் வந்திருந்த 14 பேரில் நிஷாவும் ஒருவர். அவ்விருது, அமைதிக்காகவும் நீதிக்காகவும் மனித …
ஸெட்டியைச் சந்தித்ததாக பொய் சொன்னேனா? புவாட்டைச் சாடினார் முகைதின்
முன்னாள் துணைப் பிரதமரான முகைதின் யாசின், தாம் பேங்க் நெகாரா கவர்னர் ஸெட்டி அக்தார் அசீசைச் சந்தித்ததாகக் கூறியது பொய்யென்று அம்னோ உச்சமன்ற உறுப்பினர் முகம்மட் புவாட் ஸர்காஷி வருணித்திருப்பதை மறுத்தார். தாம் ஸெட்டியை சந்தித்ததும் அச்சந்திப்பில் அவர் 1மலேசியா மேம்பாட்டு நிறுவனம்(1எம்டிபி) பற்றிப் பல தகவல்களைத் தெரிவித்ததும் …
“Mr X” குறியீட்டு வங்கிக் கணக்கிலிருந்து பிரதமர் செய்ததாக கூறப்படும்…
பிரதமர் நஜிப்புக்குச் சொந்தமானது என்று கூறப்படும் அம்பேங் வங்கிக் கணக்கிலிருந்து மில்லியன்கணக்கான ரிங்கிட்கள் நகைகள், விடுமுறைகள், கார்கள் மற்றும் அரசியல் பரப்புரைகளுக்காகச் செலவிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியா ஒலிபரப்பு நிலையம் (எபிசி) வெளியிட்ட அறிக்கையில் அம்பேங்கில் "Mr X" என்ற குறியீட்டுப் பெயரில் வைக்கப்பட்டுள்ள வங்கிக் கணக்கிலிருந்து…
யுஎஸ்$375 மில்லியன் அன்பளிப்பு, விருப்பம்போல் பயன்படுத்திக் கொள்ளலாம்: நஜிப்புக்கு சவூதி…
சவூதி அராபிய இளவரசர் ஒருவர் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கிடம் யுஎஸ் $375 மில்லியனைக் கொடுத்து விருப்பம்போல் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று கூறியிருக்கிறார். இளவரசர் சவுட் அப்துல் அசீஸ் மஜிட் எழுதியதாகக் கூறப்படும் கடிதம் ஒன்று இதைத் தெரிவிக்கிறது. 2011, நவம்பர் 1 எனத் தேதியிடப்பட்ட அக்கடிதம், அப்பணத்தை…
நஜிப்பின் வழக்குரைஞர் ஆஸ்திரேலிய ஆவணப்படத்தைப் பார்க்கவில்லையாம்
‘ ஆஸ்திரேலிய ஆவணப் படம் குறித்து கருத்துரைக்குமாறு கேட்டதற்குப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் வழக்குரைஞர்களில் ஒருவரான முகம்மட் ஹபாரிசாம் ஹருன் கருத்துரைக்க மறுத்தார். “அதை நான் இன்னும் பார்க்கவில்லை, அதனால் கருத்துரைப்பதற்கில்லை”, என்றார். அவருடைய சகாவான எம்.ரேஸா ஹசான் -இவரும் நஜிப்பின் வழக்குரைஞர்தான்- படம் பார்க்கும்போதே தூங்கி …
ஏஜிமீது தீர்மானம் கொண்டு வந்த வழக்குரைஞர்கள்மீது தேச நிந்தனைச் சட்டத்தின்கீழ்…
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்மீது வழக்குத் தொடுக்க மறுத்த சட்டத்துறைத் தலைவர் முகம்மட் அபாண்டி அலியின் நிலை குறித்து விவாதிக்க தீர்மானம் கொண்டுவந்த வழக்குரைஞர்கள் தேச நிந்தனைச் சட்டத்தின்கீழ் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருக்கிறார்கள். மலேசிய வழக்குரைஞர் மன்ற ஆண்டுக் கூட்டத்தில் அத்தீர்மானத்தை முன்மொழிந்த மூன்று வழக்குரைஞர்களில் ஒருவரான பிரான்சிஸ் பெரெரா …
அடினான் நிலத்தைக் குறைந்த விலைக்கு விற்றது ஏன்? டிஏபி பிரதிநிதி…
டிஏபி பாடுங்கான் சட்டமன்ற உறுப்பினர் வொங் கிங் வை, சரவாக் முதலமைச்சர் அடினான் சாடெம் அரசாங்க நிலத்தை விற்றது தொடர்பாக கேள்வி எழுப்பியுள்ளார். அடினான் முதலமைச்சராக பதவியேற்ற ஒன்பது மாதங்களுக்குப் பின்னர் கடந்த ஆண்டு ஜனவரி 9-இல் அந்த நில விற்பனை நடந்துள்ளது. பாலிங்கானில் 6,765 ஏக்கர் பரப்புள்ள …
டெக்சி ஓட்டுனர்களின் மறியலை போலீஸ் முறியடித்தது
பயணங்களைப் பகிர்ந்துகொள்ளும் சேவைக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை எடுக்காமலிருப்பதை ஆட்சேபித்து சுமார் 300 டெக்சி ஓட்டுனர்கள் மேற்கொண்ட மறியல் போராட்டம் போலீசாரின் அதிரடி நடவடிக்கையால் விரைவிலேயே முடிவுக்கு வந்தது. ஆர்ப்பாட்டக்காரர்களில் மூவர் கைது செய்யப்பட்டனர். ஆர்ப்பாட்டக்காரர்கள் நண்பகல் 12 மணிக்குள் கலைந்து செல்ல வேண்டும் என்று போலீசார் கெடு …
வழக்கை உயர் நீதிமன்றம் கொண்டு செல்ல சமூக ஆர்வலர்கள் விரும்புகிறார்கள்
சமூக ஆர்வலர்களான முகமட் மூசாவும் ஆதம் அட்லியும் அவர்களின் வழக்கை உயர் நீதிமன்றத்துக்கு மாற்றச் சொல்லி மனு செய்திருக்கிறார்கள். அவர்களின் மனு ஏப்ரல் 15-இல் விசாரணைக்கு வருகிறது. கடந்த ஆண்டு பிப்ரவரி 28-இல் #KitaLawan தெரு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டதற்காக அவர்கள்மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. வழக்கு மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் …
தமிழ்ப்பள்ளிகள் இடமாற்றம் காணும் நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட வேண்டும்
கடந்த மார்ச் 25ஆம் தேதி மலேசியாகினி வெளியிட்டிருந்த செய்தியில் 2012 ஆம் ஆண்டு நிதி ஒதுக்கீட்டின் கீழ் 18 தமிழ்ப்பள்ளிகளைத் துரித முன்னேற்றம் கண்டுவரும் இந்தியர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளுக்கு இடமாற்றம் செய்யும் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக பிரதமர் துறையின் கீழ் செயல்படும்' தமிழ்ப்பள்ளிகளின் எதிர்காலச் செயல் திட்டக்குழு’ ஒருங்கிணைப்பாளர்…
நிறுவனச் சீரமைப்புக்கான போராட்டம் தொடர வேண்டும் என்கிறார் அன்வார்
நாட்டின் நன்மைக்காக பிரதமரை மாற்றுவது மட்டும் போதாது, நிறுவனச் சீரமைப்புகளிலும் மக்கள் கவனம் செலுத்த வேண்டும் என முன்னாள் எதிரணித் தலைவரும் நடப்பில் பிகேஆர் தலைவருமான அன்வார் இப்ராகிம் விரும்புகிறார். இன்று நீதிமன்றத்திலிருந்து காவலர்கள் அன்வாரைச் சிறைக்கு அழைத்துச் சென்றபோது அவரிடம் நஜிப் அப்துல் ரசாக்கைப் பிரதமர் பதவியிலிருந்து …
முன்பு சட்டமன்ற எதிரணித் தலைவர் இப்போது சுயேச்சை உறுப்பினர்
மலாக்கா சட்டமன்றத்தின் முன்னாள் எதிரணித் தலைவர் கோ லியோங் சான் இப்போது சுயேச்சை உறுப்பினர் என சட்டமன்றத் தலைவர் ஒஸ்மான் முகம்மட் தெரிவித்தார். டுயோங் தொகுதி சட்டமன்ற உறுப்பினரான கோ முன்பு ஒரு டிஏபி பிரதிநிதி. இப்போது இல்லை. கட்சியை இழித்துரைத்ததற்காக அவர் ஒராண்டுக் காலம் இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்.…
கு லி நம்பிக்கை-இல்லாத் தீர்மானம் கொண்டு வருவதாக சொல்லவில்லை, அது…
தெங்கு ரசாலி ஹம்சா பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்மீது நம்பிக்கை- இல்லாத் தீர்மானம் கொண்டு வரப்போவதாகத் தெரிவித்தார் என டாக்டர் மகாதிர் கதைகட்டிக் கொண்டிருப்பதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. “அப்படிப்பட்ட செய்தி எதையும் நான் கேள்விப்படவில்லை. என் நண்பர்களோ, மற்ற பிஎன், அம்னோ எம்பிகளோ அதைப் பற்றிக் குறிப்பிட்டதே இல்லை. “அப்படி …
மகாதிரா, நஜிப்பா-புரோட்டோன் ஊழியர்களும் அதனுடன் தொடர்புள்ள நிறுவனங்களும் முடிவு செய்ய…
டாக்டர் மகாதிரும் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கும் முட்டி மோதிக் கொண்டிருக்கும் வேளையில் அவர்களின் போராட்டத்தில், ஏற்கனவே தட்டுத் தடுமாறி நடைபோடும் தேசிய கார் தயாரிப்பு நிறுவனமான புரோட்டோன் பலியாகி விடுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. முன்னாள் பிரதமரால் உருவாக்கப்பட்டது புரோட்டோன். இன்னும் அவர்தான் அதற்குத் தலைவராக இருக்கிறார்.…
நாடாளுமன்றத்துக்கு 340கி.மீ. நடந்தே வந்த பாக்சைட்-எதிர்ப்பாளர்கள்
பகாங், பெர்செராவிலிருந்து பாக்சைட்- எதிர்ப்பாளர்கள் 30பேர் அம்மாநிலத்தில் தூய்மைக்கேட்டுக்கு எதிர்ப்புக்குத் தெரிவிக்க 17-நாள் 340 கிலோ மீட்டர் நடந்தே வந்து இன்று நாடாளுமன்றம் சேர்ந்தனர். #red2green group என்ற பெயரைக் கொண்ட அக்குழுவினர் தூய்மைக்கேடு அறவே இல்லை என்பதை உறுதிப்படுத்த ஒரு வழிமுறை காணப்படும்வரை பாக்சைட் எடுப்பதற்கான இடைநிறுத்தத்தை …
மகாதீர்: ஆட்சியாளர்கள் நஜிப்பை வெளியேற்ற அழுத்தம் கொடுக்க வேண்டும்
நேற்று மக்கள் காங்கிரஸில் உரையாற்றிய முன்னாள் பிரதமர் முகமட் மகாதீர் ஆட்சியாளர்கள் மக்களின் வேண்டுகோளுக்கு செவி சாய்த்தும் பிரதமர் நஜிப் ரசாக் பதவி துறக்க வேண்டும் என்ற வலியுறுத்தலில் தலையீடும் செய்வார்கள் என்று நம்பிக்கை தெரிவித்தார். மக்கள் தெரிவித்த ஆட்சேபத்தைத் தொடர்ந்து மலேயன் யூனியன் பிரிட்டீஷ் கவர்னர்-ஜெனரல்…
‘குர்ஆனை எரித்தார்கள்’ என்று கூறிய மஷிடா குற்றம் புரிந்தார் என்பதற்கு…
2014-இல் அம்னோ மகளிர் தலைவர் ஒருவர் சீனர்கள் குர் ஆனைத் தீயிட்டு கொளுத்தினர் என்று கூறியதை ஒரு குற்றமாகக் கருத ஆதாரங்கள் ஏதுமில்லை என்று சட்டத்துறைத் தலைவர் அலுவலகம் முடிவுக்கு வந்ததாக சட்ட அமைச்சர் நன்சி ஷிக்ரி கூறினார். “விசாரணை அறிக்கையை ஏஜி அலுவலகம் நன்கு ஆராய்ந்து பார்த்தது.…
அச்சமின்றி கையொப்பமிடுங்கள்
பின் விளைவுகள் பற்றிய அச்சம் ஏதுமின்றி மக்கள் குடிமக்கள் பிரகடனத்தில் கையொப்பமிட வேண்டும் என்று முன்னாள் பிரதமர் மகாதீர் முகமட் மலேசியர்களைக் கேட்டுக்கொண்டார். உண்மையான மக்கள் இயக்கத்திற்கான தேவை இப்போது இருக்கிறது. குடிமக்கள் பிரகடனத்திற்கு இப்போது தேவைப்படுவது தைரியமிக்க மக்களை ஒன்றுகூட்டி அதில் கையொப்பமிடுவதுதான் என்றாரவர். மக்கள்…
மக்கள் காங்கிரஸ்: மலாய்க்காரர்களே, நஜிப்பைக் கண்டு பயப்படுங்கள்
ஸைட் இப்ராகிம், முன்னாள் சட்டத்துறை அமைச்சர், பிரதமர் நஜிப் ரசாக்கை பதவியிலிருந்து அகற்றுவதற்கு மக்கள் முன்னாள் பிரதமர் மகாதீர் முகமட்டுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்று கடந்த மாதம் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார். அவ்வேண்டுகோளைத் தொடர்ந்து இம்மாதம் (மார்ச் 4 இல்) ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களும்,…
ரபிஸி திங்கள்கிழமை இரகசிய ஆவணங்களை வெளியிடுவார்
பிகேஆர் உதவித் தலைவர் ரபிஸி ரம்லி, இரகசிய காப்புச் சட்ட(ஓஎஸ்ஏ)த்தால் பாதுகாக்கப்படும் ஆவணங்கள் சிலவற்றைத் திங்கள்கிழமை வெளியிடுவார். அப்படி வெளியிடுவது அதிகாரிகளுடன் நேரடியாக மோதிக்கொள்வதற்கு ஒப்பாகலாம். அதற்காக ஈராண்டுச் சிறையும் விதிக்கப்படலாம். ஆயிரக்கணக்கான முன்னாள் படைவீரர்களுக்கு அவர்களின் பணிக்கொடை (gratuity) கிடைக்காமலிருப்பதற்கு 1எம்டிபி-தான் காரணம் என்று கூறும் ரபிஸி, …
நாளைய மக்கள் காங்கிரஸ் கூட்டத்தில் இறுதியாக மகாதிர் பேசுவார்
நாளை பிற்பகல் 12.30க்கு ஷா ஆலம் மாநாட்டு மையத்தில் நடைபெறும் 2016 மக்கள் காங்கிரஸ் கூட்டத்திடம் அதிகமாகவே எதிர்பார்க்கப்படுகிறது. 1எம்டிபி விவகாரம் குறித்து சுயேச்சை விசாரணை நடத்தப்பட வேண்டும், பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து நடத்தப்படும் அக்கூட்டத்தை ஏற்பாடு செய்திருப்பவர் …


