கெடா, பெர்லிசில் இரண்டு நாள்களுக்குப் பள்ளிகள் மூடப்படும்

கல்வி  அமைச்சு  நாளை  தொடங்கி  கெடாவிலும்  பெர்லிசிலும்  எல்லாப்  பள்ளிகளையும்  மூடும்படி  உத்தரவிட்டுள்ளது. கடும்  வெப்பத்தின்  காரணமாக  பள்ளிகள்  மூடப்படுவதாக  அமைச்சர்  மஹாட்சிர்  காலிட்  முகநூலில்  கூறினார். கெடாவிலும்  பெர்லிசிலும்  வெய்யில்  கடுமையாக  உள்ளதால்  மாணவர்களின்  நலன்  கருதி  பள்ளிகள்  மூடப்படுகின்றன.

மணவிலக்குக்குப் பிந்திய ரிம30 மில்லியன் அன்பளிப்பு போதாது. ரிம100மி. வேண்டும்:…

தம்  முன்னாள்  கணவர்  மஹமுட்  பெகிர்  தயிப்,  மணவிலக்குக்குப்  பிந்திய  அன்பளிப்பாக  ரிம30  மில்லியன்  கொடுக்க  வேண்டும்  என  கோலாலும்பூர்  ஷியாரியா  உயர்  நீதிமன்றம் அளித்த  தீர்ப்பை  எதிர்த்து ஷானாஸ் ஏ. மஜிட்  மேல்முறையீடு  செய்துள்ளார். அதற்கான  மனுவை  ஷியாரியா   உயர்  நீதிமன்றத்தில்  இன்று  அவர்  சமர்ப்பித்தார். ரிம30மில்லியன் …

பயங்கரவாதிபோல் நடத்தப்பட்டேன்: ரிதுவான் டீ குமுறல்

இனம்,  சமய  விவகாரங்கள்  குறித்து  சினமூட்டும்  வகையில்  கருத்துத்  தெரிவித்து  சர்ச்சையில்  சிக்கிக்கொள்ளும்  பேராசிரியர்  முகம்மட்  ரிதுவான்  டீ  அப்துல்லா,  சிங்கப்பூருக்குள்  செல்ல  அனுமதி  மறுக்கப்பட்டுத்  திருப்பி  அனுப்பப்பட்டார். அந்த  அனுபவத்தை  இன்று  சினார்  ஹரியானில்  தமது  பத்தியில்  நினைவுகூர்ந்த  அவர், திருப்பி  அனுப்பியதற்கான  காரணத்தைக்  கூட  சிங்கை …

ரிம100மில்லியன் ஊழலின் சூத்திரதாரி இளைஞர், விளையாட்டு அமைச்சைச் சேர்ந்தவர்

ரிம100மில்லியன்  ஊழல்  தொடர்பில்  கைதான  மூத்த  அரசாங்க  அதிகாரி  தம்  அமைச்சைச்  சேர்ந்தவர்தான்  என்பதை  கைரி ஜமாலுடின்  உறுதிப்படுத்தினார். அவர்மீது  விசாரணை  நடந்து  வருவதைச்  சில  வாரங்களுக்கு  முன்பு  மலேசிய  ஊழல்தடுப்பு  ஆணையம்(எம்ஏசிசி)  தம்மிடம்  தெரிவித்ததாக  இளைஞர்,  விளையாட்டு  அமைச்சர்  கூறினார். அரசாங்கப்  பணக்  கையாடல்  தொடர்பில் ஒன்பது …

கியூபா சென்று வரலாறு படைத்தார் ஒபாமா

அமெரிக்க  அதிபர்  பராக்  ஒபாமா  நேற்று  கியூபா  சென்றதன்வழி  அமெரிக்க- கியூபா  உறவில்  ஒரு  புதிய  அத்தியாயத்தைத்  தோற்றுவித்துள்ளார். அவரே  88 ஆண்டுகளில்  கியூபா  சென்ற  முதல்  அமெரிக்க  அதிபராக  திகழ்கிறார். 1959-இல்  கியூபா  புரட்சி  அத்தீவை  ஆட்சி  செய்து  கொண்டிருந்த  அமெரிக்க- ஆதரவு  அரசாங்கத்தைக்  கவிழ்த்ததை  அடுத்து …

இந்தப் பாம்புக்கு மூன்றாவது கடி கிடைக்காது, ஸாகிட்

  ஒரு குறிப்பிட்ட அம்னோ முன்னாள் உறுப்பினர் இன்னும் கட்சி விவகாரங்களில் தலையிட்டுக் கொண்டிருக்கிறார். அவரை புறக்கணிக்குமாறு அம்னோவின் துணைத் தலைவர் அஹமட் ஸாகிட் ஹமிடி சிலாங்கூர் மாநில அம்னோ உறுப்பினர்களை கேட்டுக் கொண்டார். அவர் அந்த முன்னாள் உறுப்பினரின் பெயரைக் குறிப்பிடவில்லை. ஆனால், அவர் மாகாதிர் முகமட்டைதான்…

ஈக்காத்தான்: நஜிப் பதவி விலக வேண்டியதில்லை

பிரதமர்  நஜிப்  அப்துல் ரசாக்குக்கு  நாட்டை  வழிநடத்த  வலுவான  அதிகாரம்  கொடுக்கப்பட்டிருக்கிறது  என்பதால்  அவர்  பதவி  விலக  வேண்டிய  தேவையில்லை  என்கிறார்  பார்டி  ஈக்காத்தான்  பங்சா  மலேசியா  தலைவர்  அப்துல்  காடிர்  ஷேக்  பாட்சிர். பாஸ்  கட்சியுடன்  புதிய  அரசியல்  கூட்டணி  அமைத்துக்  கொண்டிருக்கும்  அப்துல்  காடிர்,  நஜிப்பின் …

மகாதிர் மலேசியாவைக் காக்க அல்ல, அழிக்க விரும்புகிறார்

முன்னாள்  பிரதமர்  டாக்டர்  மகாதிர்  முகம்மட்  மலேசியாவைப்  பாதுகாக்க  நினைக்கவில்லை  மாறாக  அழிக்க  விரும்புகிறார்  எனத்  தொடர்பு, பல்லூடக  அமைச்சர்  சாலே  சைட் கெருவாக்  கூறினார். வெள்ளிக்கிழமை  மகாதிர்  அம்னோ  உறுப்பினர்களுக்கு  எழுதிய  திறந்த  மடல்மீது  கருத்துரைத்த  சாலே,  முன்னாள்  பிரதமர்  ஆளும்  கட்சியை  முனைப்பாக  இருக்கிறார்  என்றார்.…

செய்தியாளர்களுக்கு வீட்டைச் சுற்றிக் காண்பித்தார் சிஎம்

ஒரு  பங்களா  வாங்கியதன்  தொடர்பில்  சர்ச்சைக்கு  இலக்காகியிருக்கும்  பினாங்கு  முதலமைச்சர்  லிம்  குவான்  எங்  கேள்விக்குரிய  வீட்டை    செய்தியாளர்களுக்குக்  காண்பித்தார். இன்று  கொம்டாரில்  நடந்த  செய்தியாளர்  கூட்டத்தில்  எப்போது  செய்தியாளர்களுக்கு  வீட்டைக்  காண்பிக்கப்  போகிறார்  என்று  வினவப்பட்டது. அதற்கு  லிம் “இப்போதே”  என்று  பதிலளித்து  செய்தியாளர்களை ஜாலான்  பின்ஹோர்னில் …

அன்வார் நல்லாவுக்கு எதிரான வழக்கில் தானே வழக்காடுவார்

முன்னாள்  எதிரணித்  தலைவர்  அன்வார்  இப்ராகிம்,  மலேசிய  ஐக்கிய  இந்தியர்  கட்சித்  தலைவர்  எஸ்.நல்லகருப்பனுக்கு  எதிராக  தொடுத்துள்ள  ரிம100மில்லியன்  அவதூறு  வழக்கை  தாமே  நடத்த  முடிவு  செய்துள்ளார். அவ்வழக்கு  வெள்ளிக்கிழமை விசாரணைக்கு  வருவதாக  அன்வாரின்  முன்னாள்  வழக்குரைஞர்  லத்தீபா  கோயா  தெரிவித்தார். வழக்குரைஞருடன்  கலந்துபேச  அன்வாருக்குப்  போதுமான  நேரம் …

குவான் எங் அவரின் வீட்டைச் செய்தியாளர்களுக்குக் காண்பிப்பது நல்லது

பினாங்கு  முதல்வர்  லிம்  குவான்  எங்,  ஜாலான்  பின்ஹோர்னில்  உள்ள  அவரது  வீட்டைச்  செய்தியாளர்களுக்குத்  திறந்து  காண்பிக்க  வேண்டும்.  அப்போதுதான்  அவர்கள்  அதை  முன்னாள்  சிலாங்கூர்  மந்திரி  புசார்  முகம்மட்  கீர்  தோயோவின்  வீட்டோடு  ஒப்பிட்டுப்  பார்க்க  முடியும். இன்று  பினாங்கில்  டிஏபி-இன்  50ஆம்  ஆண்டு  விழாவில்   உரை …

அஸலினாவின் கூற்று குறித்து எம்ஏசிசி கருத்துரைக்க விரும்பவில்லை

மலேசிய  ஊழல்தடுப்பு  ஆணைய(எம்ஏசிசி)த்தின்  விசாரணை  அறிக்கை  எஸ்ஆர்சி  இண்டர்நேசனல்  விவகாரத்தில்  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்  ஊழல்   எதுவும்  செய்யவில்லை  என்று  காண்பிப்பதாக  அரசாங்கம்  கூறியுள்ள  வேளையில்  எம்ஏசிசி-இன்  உயர்  அதிகாரி  ஒருவர்  அதை  உறுதிப்படுத்த  மறுத்தார். “அந்த  விவகாரத்தில்  நான்  கருத்துரைக்க  விரும்பவில்லை”, என  எம்ஏசிசி  விசாரணை  …

மகாதிர் அம்னோ விவகாரங்களில் தலையிடக் கூடாது, அன்வார் மூசா

அம்னோ-வைவிட்டு  விலகிய  முன்னாள்  பிரதமர்  டாக்டர்  மகாதிர்  முகம்மட்,  அம்னோ  உறுப்பினர்களை  நடப்புப்  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்குக்கு  எதிராக  நம்பிக்கை-இல்லாத்  தீர்மானம்  கொண்டுவரச்  சொல்வது  சரியல்ல  என்று  அம்னோ  தகவல்  தலைவர்  அனுவார்  மூசா கூறினார். “மகாதிரை  அம்னோ விவகாரங்களில்  தலையிட  வேண்டாம்  என்று  கேட்டுக்கொள்கிறோம். அவர் …

‘ஐஎஸ் தீவிரவாதத்தை வீழ்த்த ஜனநாயகம் ஒன்றே வழி’

ஜனநாயகத்தின்  வழிதான் ஐஎஸ்ஸை  வீழ்த்தி   மத்திய  கிழக்கில்  அமைதியை  நிலைநாட்ட  முடியும்  என  முன்னாள்  எகிப்திய  எம்பி  அப்துல் மவ்குட்  டார்டரி  கூறினார். சர்வாதிகார  ஆட்சிகளும்  பயங்கரவாதமும்  ஒன்று  மற்றொன்றை  வாழவைத்துக்  கொண்டிருப்பதாக  அவர்  சொன்னார். சர்வாதிகாரம்  நிலவும்போது  மக்கள்  அதை  எதிர்க்க  வன்முறையை  நாடுகிறாரகள். ஆனால், வன்முறை …

தகிக்கும் வெய்யில்; வெளிப்புற நடவடிக்கைகளைக் குறைத்துக் கொள்வீர்

அனல்  காற்றுக்கு  போலீஸ் பயிற்சியாளர்  ஒருவர்  பலியானதை  அடுத்து  மக்கள்  வெளிப்புற  நடவடிக்கைகளைக்  குறைத்துக்  கொள்ள  வேண்டும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. . இம்மாதத்  தொடக்கத்திலிருந்து  தகிக்கும்  வெய்யிலால்  நான்கு  பேர்  பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்  என்றும்  ஒருவர்  உயிர்  இழந்தார்  என்றும்  சுகாதார  அமைச்சு  கூறியது. புதன்கிழமை, ஜோகூரில்  போலீஸ்  பயிற்சியாளர்  அசிசான் …

ரஷ்யாவில் 61 பேருடன் விமானம் விழுந்து நொறுங்கியது

தெற்கு  ரஷ்யாவில்  பயணிகள்  விமானமொன்று  விழுந்து  நொறுங்கியதில்  அதிலிருந்த  55 பயணிகளும்  ஆறு  பணியாளர்களும்  கொல்லப்பட்டிருக்கலாம்  என  நம்பப்படுகிறது. டுபாயிலிருந்து  வந்த  அவ்விமானம்  ரோஸ்டோவ்  விமான  நிலையத்தில்  தரை  இறங்க  முயன்று  முதல்  முயற்சியில்  தோல்வி  கண்ட  பின்னர்  மறுபடியும்  முயன்றபோது  தரையில்  மோதியது  என  ரஷ்ய  அவசரகால …

சிவப்புச் சட்டையினர் மகாதிர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம்

சுமார்  500 ஆர்ப்பாட்டக்காரர்கள், சுங்கை  புசார்  அம்னோ  தலைவர்  ஜ்மால்  முகம்மட்  யூனுஸ்  தலைமையில்  கொளுத்தும்  வெய்யிலையையும்  பொருட்படுத்தாமல்  புத்ரா  ஜெயாவில்  முன்னாள்  பிரதமர்  டாக்டர்  மகாதிர்  முகம்மட்டுக்கு  எதிராக  ஆர்ப்பட்டத்தில்  ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டக்காரர்களில்  பெரும்பாலோர்  சிவப்புச்  சட்டை  அணிந்து  கைகளில்  மகாதிரைக்  குறைகூறும்  பதாதைகள்  ஏந்தியிருந்தனர். பதாதைகளில் …

பிரதமருக்கு எதிராக நம்பிக்கை-இல்லாத் தீர்மானம் கொண்டு வருவீர்: மகாதிர்

அம்னோ  உறுப்பினர்கள் பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்கை  வெளியேற்ற  தமக்கு  உதவ  வேண்டும்  என முன்னாள்  பிரதமர்  டாக்டர்  மகாதிர்  முகம்மட்  கேட்டுக்கொண்டிருக்கிறார். அவர்களுக்கு  எழுதிய  திறந்த  மடல்  ஒன்றில்  அவர்  இந்த  வேண்டுகோளை  விடுத்தார். “கட்சியையும்  நாட்டையும்  பாதுகாக்க  எனக்கு  உதவ  வேண்டும்  என்று  கட்சியின்  உண்மையான …

சட்டவிரோத சிகரெட்டுகளினால் புகையிலை நிறுவனம் தொழிற்சாலையை மூடுகிறது

சிகரெட்  தயாரிப்பு  நிறுவனமான  பிரிட்டிஷ் அமெரிக்கன்  டொபேக்கோ  பெட்டாலிங்  ஜெயாவில்  உள்ள  அதன்  தொழிற்சாலையை  மூடவுள்ளது. அதன்  உற்பத்தி  படிப்படியாகக்  குறைக்கப்பட்டு  2017 இரண்டாம்  பாதி  ஆண்டில்  உற்பத்தி  முற்றாக  நிறுத்தப்படும்  என அந்நிறுவனம்  புர்சா  மலேசியாவுக்கு  நேற்று  தெரியப்படுத்தியது. கள்ள  சிகரெட்டுகளின்  வரத்து  பெருகி  இருப்பது  இம்முடிவுக்கு …

‘சந்தை விலையைவிட குறைந்த விலைக்கு’ வீடு வாங்கிய சிஎம் லிம்மீது…

பினாங்கு  முதலமைச்சர்  லிம்  குவான்  எங்,  தாம்  முன்பு  வாடகைக்குக்  குடியிருந்த  வீட்டை  மிகக்  குறைந்த  விலைக்கு  வாங்கியதாகக் கூறப்படுவது  தொடர்பில்  போலீசில்  புகார்  செய்யப்பட்டுள்ளது. மலேசிய  சமூக  ஊடகங்களைக்  கண்காணிக்கும்  எறும்புக்குழுவின்  தலைவர்  ஸபாருடின்  அப்துல்  ரகிம்  டாங்  வாங்கி  போலீஸ்  தலைமையகத்தில்  இன்று  புகாரைச்  செய்தார்.…

அம்னோவுக்கும் அன்வார் விள்ம்பரப் பலகை விவகாரத்துக்கும் தொடர்பில்லை

அம்னோவுக்கும்  சிலாங்கூர்  என்ஜிஓ-கள்  கூட்டமைப்பின்  தலைவர்  ஜமால்  முகம்மட்  யூனுஸ்   “அன்வாரை  விடுதலை செய்”  விளம்பரப்  பலகையை  எரிக்க  விரும்புவதற்கும்  தொடர்பில்லை  என்கிறார்  அம்னோ  தகவல்  தலைவர்  அனுவார்  மூசா. ஜமால் சுங்கை  புசார்  அம்னோ  தொகுதித்  தலைவர்தான்  என்றாலும்  இந்த  விவகாரத்தில்  கட்சிப்  பிரதிநிதியாக  அவர்  செயல்படவில்லை …

முகைதின்: நான் நாஜிப்புக்கு எதிராக சதி செய்வதாக அஸலினா கூறியது…

பிரதமர்துறை   அமைச்சர்   அஸலினா  ஒத்மான்  சைட்,  அம்னோ  துணைத்  தலைவர்  பதவியிலிருந்து  இடைநீக்கம்  செய்யப்பட்ட  முகைதின்  யாசின்  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்குக்கு  எதிராக  சதி  செய்தார்  என்று  கூறியது  பெரும்  பாவமாகும். பிரதமருக்கு  எதிரான  சதித்  திட்டத்தை  மறுத்த  முகைதின்தான்  இவ்வாறு  கூறினார். அதேவேளை  நாட்டு  நிலவரம் …

கெஜாரா புள்ளிக்குறைப்பு முறை மே மாதம் செயல்படத் தொடங்கும்

தானியங்கு  அமலாக்க  முறை (ஏஇஎஸ்)யும்  கெஜாரா  புள்ளிக்குறைப்பு  முறையும்  ஒன்றிணைந்த  தானியங்கு  விழிப்புணர்வு பாதுகாப்பு  முறை (ஆவாஸ்) மே  மாதம்  அமலுக்கு வருகிறது. அதன்  பொருட்டு  சாலைப்  போக்குவரத்துத்  துறை  சட்டம்  திருந்தப்படும்  என  போக்குவரத்து  துணை  அமைச்சர்  அப்  அசீஸ்  கப்ராவி  கூறினார். “ஏப்ரலில்  நாடாளுமன்றத்தில்  (சட்டத் …