"கிழக்கு நாடுகளுடன் நெருக்கமான உறவை மேற்கொள்வதற்கான சாத்தியக்கூறுகளை மாநில அரசு தற்போது ஆராய்ந்து வருவதாக மூத்த மாநில அமைச்சர் அப்துல் கரீம் ரஹ்மான் ஹம்சா கூறுகிறார்." மேற்கு நாடுகளையும் அமெரிக்காவையும் சார்ந்திருப்பதை மாநில அரசு மறுபரிசீலனை செய்து வரும் நிலையில், வழக்கமாக அமெரிக்காவில் நடைபெறும் சரவாக் சுற்றுலா நடவடிக்கை…
‘சீனா பாபி’ என்று அழைப்பதில் என்ன தவறு? சீனர்கள் பன்றிதானே…
சுங்கை புசார் அம்னோ தொகுதித் தலைவர் ஜமால் முகம்மட் யூனுஸ் சீனர்களை ‘சீனா பாபி’(சீனப் பன்றி) என்று அழைப்பது அவர்களை அவமதிப்பதாகாது என்கிறார் . அதற்கு உணவின் அடிப்படையில் விளக்கமும் கொடுத்தார்.. பன்றி என்பது மலாய்க்காரர்களுக்குத்தான் ஆகாது. பன்றி சாப்பிடுவது இஸ்லாத்தில் தடுக்கப்பட்டிருக்கிறது. “சீனர்களுக்கு அதில் என்ன பிரச்னை.…
ஐஜிபி: பேரணியில் நிகழ்ந்த இன இகழ்வுகளுக்கு வருந்துகிறேன்; புகார்கள் விசாரிக்கப்படும்
போலீஸ் படைத் தலைவர் காலிட் அபு பக்கார், நேற்றைய சிகப்புச் சட்டைப் பேரணியில் இனத்தை இழிவுபடுத்தும் செயல்கள் நிகழ்ந்ததற்காக வருத்தம் தெரிவித்தார். பெட்டாலிங் ஸ்திரிட்டில் கலைந்து செல்லுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டும் கலைந்து செல்லாமல் போலீஸ் அதிகாரிகளின்மீது போத்தல்களை விட்டெறிந்த ஆர்ப்பாட்டக்காரர்களையும் அவர் கடிந்து கொண்டார். “பேரணிக்கு முன்பே எச்சரித்திருந்தேன்,…
பேரணி ஏற்பாட்டாளர்களுக்குச் சுத்திகரிப்புக்கு ‘பில்’ அனுப்பப்படும்
நேற்றைய சிகப்புச் சட்டைப் பேரணிக்கு ஏற்பாடு செய்தவர்களுக்குச் சுத்திகரிப்புக் கட்டணச் சீட்டு அனுப்பப்படும் என நகர்ப்புற நல்வாழ்வு, வீடமைப்பு, ஊராட்சி அமைச்சர் அப்துல் ரஹ்மான் டஹ்லான் கூறினார். “ஆலாம் பிலோராவிடம் செலவுத் தொகையைத் தெரிவிக்குமாறு கேட்டிருக்கிறேன். அவர்கள் கணக்கை இறுதி செய்து கொண்டிருக்கிறார்கள். கட்டணச் சீட்டு ஆர்ப்பாட்டத்தின் ஏற்பாட்டாளர்களுக்கு …
மலாய்க்காரர் மானம் காக்க இனவாத சுலோகங்கள்தான் கிடைத்தனவா அம்னோவுக்கு?
சிலாங்கூர் மந்திரி புசார் அஸ்மின் அலி, நேற்று கோலாலும்பூரில் நடந்த சிகப்புச் சட்டைப் பேரணியை நினைத்து வெட்கப்படுகிறார். “சிகப்புச் சட்டை அணிந்த மலாய்க்காரர்கள்- ஆண்களும், பெண்களும்- இனவாத சுலோகங்கள் முழக்கமிடுவதையும் வெறுப்புணர்வை வெளிப்படுத்துவதையும் கண்டு என்னுள் ஏற்பட்ட வெட்கக்கேட்டையும் அருவறுப்பையும் வருணிக்க வார்த்தைகள் இல்லை. “இதுதான் மலாய்க்காரர் மானத்தை …
மொராய்ஸ் கொலை ஒரு மிரட்டும் நடவடிக்கை: ஏஜி அலுவலகம் சாடல்
அரசாங்க வழக்குரைஞர் கெவின் அந்தோனி மொராய்ஸ் கொலை போன்ற மிரட்டல் நடவடிக்கைகளைக் கண்டு அஞ்சவில்லை எனச் சட்டத்துறைத் தலைவர் (ஏஜி) அலுவலகம் கூறியது. “அதன் அதிகாரிகளுக்கு எதிரான இப்படிப்பட்ட கோழைத்தனமான, மிரட்டல் நடவடிக்கைகளைக் கண்டு ஏஜி அலுவலகம் அச்சம் கொள்ளாது”, என அது நேற்றிரவு ஓர் அறிக்கையில் கூறிற்று.…
பெட்டாலிங் தெரு அமைதி கண்டது; வன்செயல் விசாரிக்கப்பட வேண்டும், நஜிப்…
இரவு மணி 7.05: கோத்தா கினபாலு - பெட்டாலிங் தெருவில் நடந்த வன்செயல் குறித்து விசாரிக்குமாறு போலீசாரை பிரதமர் நஜிப் கேட்டுக்கொண்டார். "(இது) நடந்திருக்கக்கூடாது. அனைவரும் உத்தரவுக்கு ஏற்ப நடந்து கொண்டிருக்க வேண்டும்", பிரதமர் நஜிப் டிவிட்டர் செய்தார். இதனிடையே, மணி 6.50 அளவில் ஜமால் முகமட்…
பேரணியில் 300,000 பேர் கூடினராம்: ஏற்பாட்டாளர்கள் கூறுகின்றனர்
திரெங்கானுவைச் சேர்ந்த கெராக்கான் கபாங்கித்தான் ரக்யாட் தலைவர் ரசாலி இட்ரிஸ் பேரணி மிகப் பெரிய வெற்றி என்று அறிவித்தார். 300,000 பேர் திரண்டு வந்திருக்கிறார்கள் என்று கூறிய அவர், அவர்கள் பெர்சே 4-இல் நஜிப், பாஸ் தலைவர் அப்துல் ஹாடி ஆவாங்கின் படத்தைக் காலில் போட்டு மிதித்ததற்கு எதிர்ப்புக் …
சிகப்புச் சட்டையினர் ஊர்வலம் சென்றபோது லோ யாட் மூடப்பட்டது
இன்று பிற்பகல் மணி 3.30க்கு சிகப்புச் சட்டைப் பேரணியைச் சேர்ந்த ஒரு குழு பாடாங் மெர்போக் செல்லும் வழியில் ஜாலான் புக்கிட் பிந்தாங் வழியாகச் சென்றபோது லோ யாட் பிளாசா அதன் தலைவாசலை மூடியது. வாடிக்கையாளர்களின் பாதுகாப்பு கருதி அது மூடப்பட்டதாக அந்த விற்பனை மையத்தின் பொதுத் …
கான்கிரிட் நிரப்பப்பட்ட எண்ணெய் பீப்பாயில் இருந்தது மொராய்ஸின் சடலம்தான்: போலீஸ்…
சுபாங் ஜெயா அருகே காங்கிரிட்டால் நிரப்பப்பட்ட ஒரு எண்ணெய் பீப்பாயில் இருந்தது காணாமல்போன அரசாங்க வழக்குரைஞர். அந்தோனி கெவின் மொராய்ஸின் சடலம்தான் என்பதை போலீஸ் உறுதிப்படுத்தியது. புக்கிட் அமான் குற்றவியல் புலனாய்வு இயக்குனர் முகம்மட் சாலே அதை உறுதிப்படுத்தினார். “அந்த எண்ணெய்ப் பீப்பாய் ஆற்றில் கிடந்தது. “உடலை எடுப்பதற்காக …
கான்கிரிட் நிரப்பப்பட்ட எண்ணெய் பீப்பாயில் மொராய்ஸின் சடலம்
செப்டம்பர் 4-இலிருந்து காணாமல்போய் தேடப்பட்டு வந்த சட்டத்துறை தலைவர் அலுவலக அதிகாரி அந்தோனி கெவின் மொராய்ஸின் சடலம் சுபாங் ஜெயா அருகே இன்று காலை கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிகிறது. காங்கிரிட்டால் நிரப்பப்பட்ட ஒரு எண்ணெய் பீப்பாயில் அது இருந்தது. சுங்கை கிளாங்-கை ஒட்டியுள்ள யுஎஸ்ஜே வீடமைப்புப் பகுதியான பெர்சியாரான் சுபாங் …
மெர்டேகா மையம்: இன உறவுகள் மோசமடைந்துள்ளன
நாடு மலேசிய தினத்தைக் கொண்டாடும் வேளையில் இன உறவுகள் மோசமடைந்திருப்பது கவலை அளிப்பதாக மெர்டேகா மையத்தின் திட்ட இயக்குனர் இப்ராகிம் சுபியான் கூறினார். அம்மையம் பிப்ரவரி 14 தொடங்கி ஜூன் 8வரை நடத்திய ஆய்வு ஒன்றைத் தாக்கல் செய்து பேசிய இப்ராகிம், நாட்டில் அவநம்பிக்கை பெருகியிருக்கிறது என்றார். அது …
பார்டி அமானா நெகாராவின் தொடக்கவிழாவில் ஒரே மஞ்சள் மயம்
பார்டி அமானா நெகராவின் தொடக்கவிழா இன்று ஷா ஆலம் ஐடிசிசி மாநாட்டு மையத்தில் நடைபெற்றது. அவ்விழாவுக்கு வந்த கட்சி உறுப்பினர்களும் ஆதரவாளர்களும் மஞ்சள் நிற ஆடை அணிந்திருந்ததால் மாநாட்டு மையமே மஞ்சள் மயமாகக் காட்சியளித்தது. அவர்கள் நெகரா கூ, ஜாலோர் கெமிலாங் போன்ற பாடல்களையும் கட்சிப் பாடல்களையும் பாடித் …
எதற்கு என்று தெரியாமலே கமலநாதன்கள் 220 சிவப்பு டி-சட்டைகளுக்கு ஏற்பாதரவு…
இன்று நடைபெறும் சிவப்புச் சட்டை பேரணிக்கு 220 சிவப்பு டி-சட்டைகளுக்கு உலுசிலாங்கூர் நாடாளுமன்ற உறுப்பினர் பி. கமலநாதன் சேவை மையம் ஏற்பாதரவு அளித்த விவகாரம் அதனால் பயன் பெற்ற ஒருவர் அவரது முகநூல் வழியாக நன்றி தெரிவித்துக் கொண்டு மற்றவர்களையும் அச்சேவை மையத்திற்குச் சென்று டி-சட்டையைப் பெற்றுக்கொள்ளுமாறு…
தெங்கு ரசாலி: எல்லாம் மலாய்க்காரர்கள் மயம், மிரட்டல் எங்கிருந்து வருகிறது?
சிவப்புச் சட்டை பேரணியின் நோக்கம் குறித்து தாம் குழப்பமுற்றுள்ளதாக அம்னோவின் தலைவர்களில் ஒருவரான தெங்கு ரசாலி இன்று இன்ஸ்டிடியூட் இன்டெக்கிரிட்டி மலேசியாவில் நடைபெற்ற ஒரு கலந்துரையாடலில் கூறினார். "உங்களுக்கு அரசாங்கம் இருக்கிறது. அதற்கு தலைமை ஏற்றிருப்பவர் ஒரு மலாய்க்காரர்; பினாங்கு மாநில அரசு ஒன்றைத் தவிர, மாநில…
சுஹாகாம்: அமைதியாக ஒன்றுகூடுதல் ஓர் உரிமை, ஆனால் சட்டம் பின்பற்றப்பட…
அமைதியாக ஒன்றுகூடும் சுதந்திரம் ஒவ்வொரு மலேசிய குடிமகனுக்கும்/குடிமகளுக்கும் உண்டு. ஆனால், அந்த உரிமையைப் பயன்படுத்தும் போது அது சட்டத்தில் கூறப்பட்டுள்ளதற்கு ஏற்றவாறு செய்யப்பட வேண்டும் என்று மலேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் ஹஸ்மி அஹம் கூறினார். ஆகவே, நாளை (செப்டெம்பர் 16) நடைபெற திட்டமிடப்பட்டுள்ள ஹிம்புனான்…
ஜிபிஎம்: நாட்டை மீண்டும் நிருமானிக்க வாரீர்
என்றுமே ஒரு சுதந்திரமான, தன்னாட்சி உரிமையுடைய, ஜனநாயாக கோட்பாட்டின்படி தோற்றுவிக்கப்பட்ட, அதன் மக்களிடையே அமைதியை, நல்லிணக்கதை நிலைநிறுத்திய நாடாக மலேசிய திகழும் என்ற மலேசிய தந்தை துங்கு அப்துல் ரஹ்மானின் இலட்சியத்தால் உந்தப்பட்ட நாம் உயர்ந்த இலட்சியங்கள், நம்பிக்கை மற்றும் பேரார்வம் ஆகியவற்றோடு செப்டெம்பர் 16, 1963 இல்…
முகைதின் யாசின்: பேரணி மலாய்க்காரர்களைப் பாதுகாப்பதற்கு சிறந்த வழியல்ல
அம்னோ துணைத் தலைவர் முகைதின் யாசின் நாளை நடைபெறவிருக்கும் சிவப்புச் சட்டை பேரணிக்கு எதிர்ப்பு தெரிவித்தார். அப்பேரணி எதிர்மறையான தோற்றத்தை அளித்துள்ளது என்றாரவர். மலாய்க்காரர்களின் கௌரவத்தைத் தற்காக்க வேறு நல்ல வழிகள் இருக்கின்றன என்று அவர் மேலும் கூறினார். மலேசிய தினத்தை நேசம் மற்றும் ஒற்றுமை ஆகியவற்றை…
அலி திஞ்சு: 20,000 முன்னாள் இராணுவ வீரர்கள் நாளை செயலில்…
நாளை நடைபெற திட்டமிடப்பட்டிருக்கும் சிவப்புச் சட்டை பேரணியின் போது "டிஎபி சீனர்கள்" ஏதாவது தொந்தரவு கொடுக்காமல் இருப்பதை உறுதி செய்வதற்காக 20,000 முன்னாள் இராணுவ வீரர்கள் அங்கு இருப்பார்கள். இன்றிரவிலிருந்து ஆயிரக்கணக்கான முன்னாள் இராணுவ வீரர்கள் கோலாலம்பூரில் இன்னும் அறிவிக்கப்படாத இடங்களில் கூடத் தொடங்குவர் என்று மலேசிய…
தனேந்திரா, இந்தியர்களை அடகு வைக்காதீர்!
-மு. குலசேகரன், செப்டெம்பர் 15, 2015. ரிம300 மில்லியன் நிதியைப் பெற்று 20 லட்சம் மில்லியன் இந்தியர்களின் வாக்குகளை பாரிசானுக்கு அடகுவைக்க நினைப்பது முட்டாள்தனமாகும். 2008இல் இருந்தே இந்தியர்களின் போக்கு பாரிசானுக்கு எதிராகவே மாறிக்கொண்டு வருகின்றது என்பதை தனேந்திரன் அறிந்திருந்தும் அறியாமல் இருப்பது ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும்…
பேரணி அராஜகத்துக்கு இட்டுச் செல்லலாம், எஸ்யுபிபி கவலை
நாளை கோலாலும்பூரில் நடத்தத் திட்டமிடப்பட்டிருக்கும் பேரணியைக் கடுமையாகக் கண்டிக்கும் எஸ்யுபிபி அது போன்ற செயல்கள் மலேசியாவை அராஜக பாதைக்கு இட்டுச் சென்று விடலாம் என்று கூறியது. “ஆர்ப்பாட்டங்கள் எதிர்- ஆர்ப்பாட்டங்கள் என்னும் அண்மைக்கால போக்கு, அவை ‘மஞ்சள் சட்டை அணிந்திருந்தாலும்’ ‘சிகப்புச் சட்டை அணிந்திருந்தாலும்’, மலேசிய வாழ்க்கைமுறைக்கு ஏற்றதல்ல.…
எதிரணித் தலைவர்களின் கொடும்பாவி எரிப்புக்கு பாஸ் கண்டனம்
கடந்த ஞாயிற்றுக்கிழமை கிளந்தான், கோத்தா பாருவில் எதிரணித் தலைவர்களின் கொடும்பாவிகள் எரிக்கப்பட்ட செயலை பாஸ் கண்டித்தது. “இது காட்டுமிராண்டித்தனமான செயல் என்பதுடன் மலேசியக் கலாச்சாரத்துக்கு ஏற்புடையதுமல்ல”, என பாஸ் தலைமைச் செயலாளர் தாகியுடின் ஹசான் கூறினார். சமுதாயத்தில் பதற்றத்தையும் வெறுப்பையும் ஊட்டும் செயல்களுடன் பாஸ் ஒருபோதும் ஒத்துப்போவதில்லை என்றாரவர்.…
‘அன்வாருக்கு முறையான மருத்துவ சிகிச்சை தேவை’
சிறையில் உள்ள பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிமுக்கு அவசர அறுவை சிகிச்சை தேவைப்படுவதாக அவரின் குடும்பத்தினர் கருதுகின்றனர். ஆனால், சுகாதார அமைச்சின் கருத்து வேறு விதமாக இருக்கிறது. தேவையான சிகிச்சை அன்வாருக்கு அளிக்கப்படாவிட்டால் அவரது குடும்பத்தார் சுகாதார அமைச்சின் டாக்டர் ஜெயேந்திரன் சின்னதுரைக்கு எதிராக மலேசிய மருத்துவ …
அல் ஜசீரா அல்டான்துன்யா ஆவணப் படத்தைத் தற்காத்துப் பேசுகிறது
அல் ஜசீரா அதன் செய்தியாளர் மேரி என் ஜோலி படைத்த ‘Murder in Malaysia’(மலேசியாவில் கொலை) ஆவணப் படத்தில் எந்தக் குறையும் காணவில்லை. மங்கோலிய பெண்ணான அல்டான்துன்யா ஷரீபுவின் கொலையை ஆராயும் அந்த ஆவணப் படத்தைத் தயாரித்ததில் எந்த உள்நோக்கமும் கிடையாது என அத்தொலைக்காட்சி நிலையப் பேச்சாளர் ஒருவர் …


