மத்திய கிழக்கு மோதல்கள் காரணமாக ஏற்பட்டுள்ள விலைவாசி உயர்வை மக்கள் எதிர்கொள்ள உதவும் வகையில், சரவாக் அரசு புதிய நிவாரணத் தொகுப்பை வழங்கவுள்ளதாக கபுங்கன் பார்ட்டி சரவாக் (GPS) பொதுச் செயலாளர் அலெக்சாண்டர் நந்தா லிங்கி தெரிவித்துள்ளார். நேற்று நடைபெற்ற தனது ஹரி ராயா ஐடில்பித்ரி திறந்த இல்ல உபசரிப்பில் சரவாக் பிரீமியர் அபாங் ஜொஹாரி ஓபெங் இத்திட்டத்தை அறிவித்ததாக…
ஜூலை 29 ரபிஸி ரம்லிமீது முடிவெடுக்கும் நாளாகும்
பெட்டாலிங் ஜெயா செஷன்ஸ் நீதிமன்றம், அம்னோ உறுப்பினர்களை வேண்டுமென்றே பழித்துரைத்தார் என்று குற்றஞ்சாட்டப்பட்டிருக்கும் பிகேஆர் உதவித் தலைவர் ரபிஸி ரம்லியை எதிர்வாதம் செய்ய அழைப்பதா என்பதை ஜூலை 29-இல் முடிவு செய்யும். அவ்விவகாரம் தொடர்பில் அரசுத்தரப்பின் வாதத் தொகுப்பைச் செவிமடுத்த நீதிபதி அஸ்வரிண்டா அவ்வண்டி பாண்டான் எம்பி-யும் பிகேஆர்…
கச்சா எண்ணெய் விலை குறைந்திருக்கும்போது எரிபொருள் விலை ஏன் உயர…
பெட்ரோல் விலை குறைந்திருக்க வேண்டும், உயர்ந்திருக்கக்கூடாது என்று எதிரணி எம்பிகள் கூறுகின்றனர். ஜூன் மாத இறுதியில் சுத்திகரிக்கப்படாத எண்ணெய் விலை குறைந்தது. பீப்பாய்க்கு யுஎஸ்$66-இலிருந்து நேற்று அதன் விலை யுஎஸ்$62 ஆகக் குறைந்திருந்தது. அந்நிலையில் ரோன்95-இன் விலை லிட்டருக்கு 10 சென் உயர்ந்து ரிம2.15 ஆகி இருக்கக் கூடாது …
நஜிப்: ஃபிட்ச் தரமதிப்பீடு நம் நிதியியல் திறத்தைக் காண்பிக்கிறது
மலேசியாவின் எதிர்கால வாய்ப்பு எதிர்மறை நிலையிலிருந்து திடநிலைக்கு வந்திருப்பதாகக் கூறும் ஃபிட்ச் நிறுவனத்தின் மதிப்பீடு அரசாங்கத்தின் நிதியியல் நிர்வாகத் திறத்தைக் காண்பிக்கிறது எனப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கூறினார். “புறத்தே பல நிச்சயமற்ற நிலவரங்கள் நிலவினாலும் அண்மையில் அறிவிக்கப்பட்ட அம்மதிப்பீடு நம் அரசாங்கத்தின் நிதியியல் நிர்வாகத்தையும் பொருளாதாரக் …
‘ஜுஸ்டோவின் கைது 1எம்டிபி மீதுள்ள கவனத்தைத் திசைதிருப்பும் தந்திரம்’
பெட்ரோசவூதி இண்டர்நேசனல் நிறுவன(பிஎஸ்ஐ) நிர்வாகி சேவியர் ஜுஸ்டோ கைது செய்யப்பட்ட சம்பவம் 1எம்டிபி-இலிருந்து மக்களின் கவனத்தைத் திருப்புவதற்குப் பயன்படுத்திக் கொள்ளப்பட்டிருக்கிறது என்கிறார் மூத்த செய்தியாளர் ஒருவர். அம்னோவுக்கு அது நல்ல செய்தி, ஆனால் 1எம்டிபி கடன்களாலும் மற்ற காரணங்களாலும் பாதிக்கப்பட்ட மலேசியப் பொருளாதாரத்தில் அது தாக்கத்தை ஏற்படுத்தாது என ஏ.காடிர் …
சிலாங்கூரின் மூன்று நகரங்களில் இலவச பேருந்து சேவை
சிலாங்கூர் அரசு, அம்மாநிலத்தின் மூன்று நகரங்களில்- ஷா ஆலம், கிள்ளான், சுபாங் ஜெயா ஆகியவற்றில்- இலவச பேருந்து சேவையைத் தொடக்கியுள்ளது. “இலவச பேருந்து சேவை வழங்கும் முதல் மாநிலம் சிலாங்கூர்தான்”,என சிலாங்கூர் ஆட்சிக்குழு உறுப்பினர் தெங் சாங் கிம், ஷா ஆலமில் அச்சேவையைத் தொடக்கிவைத்தபோது கூறினார். காலை 6மணிக்குத் …
புதிய இஸ்லாமியக் கட்சி உண்மையிலேயே முற்போக்கான கட்சியாக இருத்தல் வேண்டும்
பாஸ் கட்சியிலிருந்து பிரிந்து செல்ல நினைப்போர் புதிய கட்சி அமைத்தால் அக்கட்சி முஸ்லிம்களையும் முஸ்லிம்- அல்லாதாரையும் உறுப்பினர்களைக் கொண்டிருக்க வேண்டும் என முன்னாள் பாஸ் கட்சித் தலைவரின் மகன் கூறுகிறார். 1989-இலிருந்து 2002வரை பாஸ் கட்சித் தலைவராக இருந்த காலஞ்சென்ற பாட்சில் நூரின் புதல்வரான ஃபாஇஸ் பாட்சில், பாஸ் …
நள்ளிரவிலிருந்து ரோன்95 விலை 10 சென் உயர்கிறது
உலகளவில் கச்சா எண்ணெய் விலை கடந்த ஜூன் 10 லிருந்து வீட்சி கண்டு வரும் வேளையில் இன்று நள்ளிரவிலிருந்து பெட்ரோல் நிலையங்களில் ரோன்95 விலை ஒரு லிட்டருக்கு 10 சென் உயர்வு காண்கிறது. ரோன்97 இன் விலை ஒரு லிட்டருக்கு 20 சென் உயர்கிறது. டீசல் விலையில் மாற்றம்…
ஆர்ஓஎஸ்-ஸின் பைபிள் கழகச் சோதனை ஒத்திவைப்பு
சங்கப் பதிவகம் (ஆர்ஓஎஸ்), இன்று மலேசிய பைபிள் கழக(பிஎஸ்எம்)த்துக்கு மேற்கொள்ளவிருந்த வருகையை ஒத்தித்துள்ளது. வருகை ஒத்திவைக்கப்பட்டதற்கான காரணத்தை அது தெரிவிக்கவில்லை. ஆர்ஓஎஸ் நடவடிக்கை ஒத்திவைக்கப்பட்ட செய்தி இன்று காலை தொலைபேசிவழி தெரிவிக்கப்பட்டதாக பிஎஸ்எம் செயலாளர் ரெவரெண்ட் மெத்தியு கே. புன்னூஸ் கூறினார். ஆர்ஓஎஸ் இன்று பிஎஸ்எம்-மைச் சோதனையிட வருவதாக …
‘பெட்ரியோட்’ எண்பட்டை விற்பனை ஆதாயத்தில் சிறு பகுதி மட்டுமே ஜேபிஜே-க்கு
யயாசான் பெட்ரியோட் நெகாரா மலேசியா(ஒய்பிஎன்) விற்பனை செய்யும் கார்களுக்கான எண்பட்டைகளின் வழி கிடைக்கும் ஆதாயத்திலிருந்து ரிம1 மில்லியன் மட்டும் சாலைப் போக்குவரத்துத் துறை(ஜேபிஜே)க்கு வழங்கப்படும். அந்த விற்பனை மூலமாக ஒய்பிஎன்-னுக்கு ரிம10 மில்லியனுக்குமேல் ஆதாயம் கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ரிம1மில்லியன் என்பது அதில் சிறு பகுதிதான். “ஜேபிஜே-க்கு ரிம1மில்லியன் …
பாரு: முஸ்லிம்களுக்கு‘சபலம்’ ஏற்படாமல் பார்த்துக்கொள்வது முஸ்லிம்-அல்லாதாரின் வேலையல்ல
சரவாக் பிகேஆர் தலைவர் பாரு பியான், முஸ்லிம்கள் மீது “மரியாதை” கொண்டு முஸ்லில் -அல்லாதார் உடைகள் அணிவதில் ஒழுங்கு விதிகளைக் கடைப்பிடிக்க வேண்டும் எனக் கூறிய பேரா முப்தி ஹருஸ்ஸானி ஜக்கரியாவைக் குறைகூறினார். முஸ்லிம்- அல்லாதார் பொது இடங்களில் தங்கள் உடலை மூடி மறைக்காதிருந்தால், வெளியில் தெரியும் தொடை …
புவா: பிஏசி-இல் என்னை எதிர்க்க 8பேர் இருக்கையில் பயமேன்?
1எம்டிபி மீது தாம் கூறும் “அற்பமான குற்றச்சாட்டுகளை” உண்மையல்ல என்று மறுப்பதற்கு எட்டு பிஎன் எம்பிகள் பொதுக் கணக்குக் குழுவில் இருக்கையில் அக்குழுவின்மீது பிஎன் தலைவர்களுக்கு “நம்பிக்கை இல்லாமல் போனது” என் என்று அக்குழுவில் ஒருவரான டோனி புவாவுக்குப் புரியவில்லை. அக்குழுவில் அவர் இருக்கக்கூடாது என்று மேலும் பல …
உடல்நலம் குன்றிய அன்வாரை வீட்டுக்காவலில் வைக்க வழக்குரைஞர்கள் முயற்சி
அன்வார் இப்ராகிமைச் சிறையிலிருந்து அகற்றி வீட்டுக்காவலில் வைக்க வேண்டும் என அவரின் வழக்குரைஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அவ்வாறு செய்தால் அவருக்கு வழக்கமான மருத்துவ சிகிச்சை கிடைப்பதற்கு வசதியாக இருக்கும் என்றவர்கள் சொன்னார்கள். அன்வாருக்கு முறையான மருத்துவ கவனிப்பு கிடைக்காததால் அவரது உடல்நிலை விரைவாக மோசமடைந்து வருகிறது என வழக்குரைஞர்கள் …
தீபாவளி விடுமுறையை மாற்றுவதா? இந்து சங்கம் கண்டனம்
திரெங்கானு கல்வி அமைச்சு, நோன்புப் பெருநாள் விடுமுறை நீட்டிப்பதற்குத் தீபாவளி விடுமுறையைப் பயன்படுத்திக் கொண்டிருப்பதற்கு மலேசிய இந்து சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. மற்றவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காத போக்கு வளர்ந்து வருவதற்கு திரெங்கானு கல்வித் துறையின் சுற்றறிக்கை ஓர் எடுத்துக்காட்டு என இந்து சங்கத் தலைவர் ஆர்.எஸ், மோகன் ஷான் …
ஹாடி: குரைக்கும் நாய்கள் குரைக்கட்டும், ஹுடுட்டை விடேன்
எத்தனை எதிர்ப்பு வந்தாலும் ஹுடுட் சட்டத்துக்காகக் குரல் கொடுப்பதை நிறுத்தப்போவதில்லை என்று சூளுரைத்துள்ளார் பாஸ் தலைவர் அப்துல் ஹாடி ஆவாங். முஸ்லிம்கள் அவர்கள் டிஏபி-இல் இருந்தாலும் பாஸ், அம்னோ அல்லது வேறு எந்த அரசியல் கட்சியில் இருந்தாலும் அச்சட்டத்தை ஆதரிக்க வேண்டும். அது அவர்களின் கடமை என்றாரவர். “மக்களுக்கு …
மசீச தலைமைச் செயலாளர்: பிடிஎன்னைக் கலைக்க வேண்டியதில்லை
தேசிய குடிமையியல் பிரிவு(பிடிஎன்) இனவாதம் பேசுவதை நியாப்படுத்தி வந்தாலும் அதைக் கலைக்க வேண்டிய அவசியமில்லை என்கிறார் மசீச தலைமைச் செயலாளர் ஒங் கா சுவான். ஆனால், அதன் பாடத் திட்டத்தைத்தான் மாற்றி அமைக்க வேண்டும் என்றாரவர். அதன் நடப்புப் பாடத்திட்டம் பயிற்சியாளர்களுக்குப் பயனளிப்பதாக இல்லை. அது அவர்களைக் குறுகிய-…
புவா: மாரா, 1எம்டிபி, டிஎச் ஆகியவை ‘குறைந்தவிலையில்’ சொத்து வாங்கியதாகக்…
மாரா, 1மலேசியா மேம்பாட்டு நிறுவனம்(1எம்டிபி), தாபோங் ஹாஜி(டிஎச்) ஆகிய மூன்றுமே சொத்துகள் வாங்கியதைப் பற்றிக் குறிப்பிடும்போது அவற்றைக் குறைந்த விலைக்கு வாங்கியதாக தம்பட்டம் அடித்துக் கொள்கின்றன. குறைந்த விலை என்று அவர்கள் கூறிக்கொள்வது “பொய்”, “பித்தலாட்டம்” என்கிறார் பெட்டாலிங் ஜெயா உத்தாரா எம்பி டோனி புவா. “ஜிஎல்சி நிர்வாகிகளைக் …
அம்னோ தேர்தல் தள்ளிப் போடப்பட்டதற்கு அரசியல் நெருக்கடியே காரணம், 1எம்டிபி…
அம்னோ தலைமைச் செயலாளர் தெங்கு அட்னான் தெங்கு மன்சூர், கட்சித் தேர்தல்கள் தள்ளி வைக்கப்பட்டுள்ளதற்கு “அரசியல் நெருக்கடி”தான் காரணம் என்று வலியுறுத்தினார். 1எம்டிபி-க்கும் அதற்கும் தொடர்பில்லையாம். இன்று தெங்கு அட்னானைச் சந்தித்த செய்தியாளர்கள், 1எம்டிபி பிரச்னைக்குத் தீர்வுகாண கூடுதல் கால அவகாசம் தேவைப்படுவதால்தான் கட்சித் தேர்தல்கள் தள்ளிவைக்கப்பட்டனவா என்று …
பாஸிலிருந்து ஒரு புதிய கட்சி: சாத்தியம் உண்டா?
ஒரு புதிய அரசியல் கட்சியை அமைப்பதே சிரமம். அதிலும் ஒரு கட்சியிலிருந்து பிரிந்து சென்று இன்னொரு கட்சியை அமைப்பது இன்னும் சிரமமானது. மலேசியாவில் பிரிந்து சென்ற கட்சிகள் அரசியல் சிதைவுகளாகிப் போன கதை நிறைய உண்டு, தெங்கு ரசாலி ஹம்சாவின் செமாங்காட் 46 எட்டாண்டுகள்தான் தாக்குப் பிடித்தது. அதன்பின்னர் …
ஜுரைடா: காலிட் தம்மை விற்பதென முடிவு செய்துவிட்டாரா?
சிலாங்கூரின் முன்னாள் மந்திரி புசார் காலிட் இப்ராகிம், மீண்டும் மந்திரி புசார் ஆவதற்குத் தயார் என்று அறிவித்திருப்பதை அவரின் முன்னாள் பிகேஆர் சகா ஒருவர் எள்ளி நகையாடியுள்ளார். “அவர் பிகேஆரிலிருந்து நீக்கப்பட்டு சுயேச்சை சட்டமன்ற உறுப்பினராகவும் எம்பி-ஆகவும் உள்ளார். எந்தவொரு அரசியல் கட்சியிலும் இல்லாத ஒருவர் எப்படி மந்திரி …
பள்ளிவாசல்கள் கட்டி 1எம்டிபியின் பாவங்களைக் கழுவிட முடியாது: பிரதமருக்கு அறிவுறுத்து
1எம்டிபி கம்போங் பாருயில் பள்ளிவாசல் கட்ட உதவியுள்ளது, இருந்தும் அதைக் குறைகூறுகிறார்களே என்று அங்கலாய்த்துக்கொண்ட பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கை பாஸ் எம்பி ஒருவர் இடித்துரைத்திருக்கிறார். பிரதமரின் கூற்று, 1எம்டிபி சில நன்மைகளைச் செய்துள்ளது அதனால் அது செய்த தவறுகளை விட்டுவிடுங்கள் என்று கேட்டுக்கொள்வதுபோல இருக்கிறது என பொக்கோக் …
அமைச்சரவையில் விரைவில் மாற்றங்கள் வரலாம்
பிரதமர் நஜிப் ரசாக் அமைச்சரவையில் மாற்றங்கள் விரைவில் செய்யப்படலாம் என்று இன்று கோடிகாட்டினார். பல அமைச்சர்கள் இதனை முன்பு மறுத்துள்ளனர். அமைச்சரவை மாற்றங்கள் குறித்த ஊகங்கள் பற்றி வினவிய போது, அவர் அதனை மறுக்கவில்லை. ஆனால், பொறுமை காக்குமாறு கேட்டுக்கொண்டார்.. இன்று கோலாலம்பூரில் நடந்த அம்னோ உச்சமன்ற…
பெர்காசா: மாரா மோசடி குரங்குகளைத் தண்டிக்க வேண்டும்
மெல்பர்னில் மாரா அதிக விலைகொடுத்து சொத்து வாங்கியதாகக் கூறப்படுவது குறித்து பெர்காசா மலேசிய ஊழல்-தடுப்பு ஆணையத்திடம்(எம்ஏசிசி) புகார் செய்துள்ளது. பூமிபுத்ராக்களின் உரிமைகள் மருட்டலுக்கு இலக்காகும்போது அதைப் பார்த்துக் கொண்டிருக்க முடியாது என்று பெர்காசா தலைவர் அஸ்ருல் அக்மால் ஸஹாருடின் கூறினார். அக்குற்றச்சாட்டு பொய்யென்று தெரிய வந்தால் அதைப் பரப்பியவர்கள்மீது …
விளையாட்டு வீராங்கனையின் உடையைக் குறைகூறியவர்களுக்கு சுல்தான் கண்டனம்
தேசிய ஜிம்னாஸ்டிக் போட்டியாளர் ஃபாரா என் ஹாடி சீ விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கங்கள் வென்று மலேசியாவுக்குப் பெருமை சேர்த்தவர்களில் ஒருவராவார். ஆனால், சிலருக்கு அவர் பெற்ற வெற்றி பெரிதாகத் தெரியவில்லை. அவர் அணிந்திருந்த உடைகள்தான் அவர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. அரைகுறையாக உடை அணிந்திருந்தார் என அவர்கள் குறை …


