பிரதிநிதிகளை நீக்கிய பினாங்கு அரசுக்கு எதிராக பாஸ் வழக்கு தொடுக்கும்

ஊராட்சி  மன்றங்களிலிருந்த  தனது  பிரதிநிதிகளைப்  பணிநீக்கம்  செய்த  டிஏபி-ஆல்  வழிநடத்தப்படும்  பினாங்கு  அரசுக்கெதிராக  பாஸ்  சட்ட  நடவடிக்கை  எடுக்கும். பணிநீக்கம்  செய்யப்பட்ட  பிரதிநிதிகளின்  உரிமைகளைப்  பாதுகாக்கவும் அவர்களின்  கொளரவத்தை  நிலைநிறுத்தவும்  கோரி  கடிதம்  எழுதுமாறு  பாஸ்  அதன்  வழக்குரைஞர்களைப்  பணித்திருப்பதாக அக்கட்சியின்  மாநில  ஆணையர்  பவுஸி  முகம்மட்  யூசுப் …

கிட் சியாங்: நஜிப் தம் பெயருக்கு ஏற்பட்டுள்ள களங்கத்தைப் போக்கிக்…

டிஏபி  பெருந்  தலைவர்  லிம்  கிட்  சியாங், முற்போக்கு  நாடாளுமன்ற  உறுப்பினர்களின்  கூட்டத்தில்  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்  அவசியம்  கலந்துகொள்ள  வேண்டும்  என  அழைப்பு  விடுத்துள்ளார். வால் ஸ்திரிட்  ஜர்னல்  சாட்டியுள்ள  குற்றச்சாட்டுகளை  விலக்கித்   தம் பெயருக்கு ஏற்பட்டுள்ள  களங்கத்தைப்  போக்கிக்  கொள்ள  நஜிப்புக்கு  அது  ஒரு …

WSJ செய்தி கணக்காய்வுத் துறை அறிக்கையிலிருந்து எடுக்கப்பட்டதல்ல

அண்மைய  வால் ஸ்திரிட்  ஜர்னல் (WSJ)  செய்திகள்  தனது  இடைக்கால கணக்காய்வு  அறிக்கையை  அடிப்படையாகக்  கொண்டவை  அல்ல  என்று  தேசிய  கணக்காய்வுத்  துறை கூறியுள்ளது. “WSJ செய்திக்கும் 1எம்டிபி  இடைக்கால கணக்காய்வு  அறிக்கைக்கும்  தொடர்பில்லை. தேசிய  கணக்காய்வுத்  துறையிலிருந்து  WSJ-க்கு  எந்தவொரு  செய்தியும்  சென்றதில்லை”, என  அத்துறையின்  ஆய்வுப் …

ஜொகூர் டிஎபி கூட்டத்தில் குண்டர்கள் தாக்குதல்

  ஜொகூர், மாசாய்யிலுள்ள ஒரு கோப்பிக் கடையில் நடந்த ஒரு டிஎபி நிகழ்ச்சியில் குண்டர்கள் புகுந்து தாக்குதல் நடத்தி டிஎபி மூத்த தலைவர் லிம் கிட் சியாங்கை பேச விடாமல் தடுக்க முயன்றனர். நிகழ்ச்சி பிற்பகல் மணி 2.00 க்கு தொடங்கிய சிறிது நேரத்தில் 50 பேர் அடங்கிய…

‘1எம்டிபி பற்றி விவாதிக்க நாடாளுமன்றச் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டுவீர்’-எம்பி கோரிக்கை

நாடாளுமன்றம்   சிறப்புக்  கூட்டத்தை  நடத்தி  1எம்டிபி ஊழல்  பற்றி  விவாதிக்க  வேண்டும்  என்கிறார்  கிள்ளான்  எம்பி  சார்ல்ஸ்  சந்தியாகு. மற்ற  அரசாங்க  அமைப்புகளின்மீது  நம்பிக்கை  குறைந்து  வரும்  வேளையில்,  மக்களவைத்  தலைவர்  பண்டிகார்  அமின்  மூலியா  விரும்புவதுபோல்,  நாடாளுமன்றம்  சுயேச்சையாக இயங்குவதை  நிறுவ இதுவே  தருணமாகும்  என்றாரவர். “மலேசியர்களுக்கு …

அம்னோ எம்பி: பேங்க் நெகாரா குழப்பத்தைத் தெளிவுபடுத்த வேண்டும்

பிரதமர்  நஜிப் அப்துல் ரசாக்  பணக் கையாடல்  செய்தார்  என்ற  குற்றச்சாட்டை  அரசாங்கம்  மறுத்திருப்பது  பாராட்டுக்குரியது  என்று  கூறிய  அம்னோ  எம்பி  ஒருவர்,  அதைவிட  இவ்விவகாரத்தில்  மத்திய வங்கியும்  எம்பேங்கும்  நிலைமையைத்  தெளிவுபடுத்துவதுதான்  முக்கியம்  என்றார். “பிரதமர்  அலுவலகம், 1எம்டிபி, ஆகியவையும் குற்றச்சாட்டுகளுடன்  தொடர்புள்ள  பல  நிறுவனங்களும்  மறுப்புத் …

அம்பிகா: அரசியலா? நன்றி. வேண்டவே வேண்டாம்

வழக்குரைஞர்  மன்ற  முன்னாள்  தலைவர்  அம்பிகா  ஸ்ரீநிவாசன், டிஏபி-இல்  சேருமாறு  தமக்கு  அழைப்பு  விடுத்த  தேசிய  இலக்கியவாதி  ஏ. சமட்  சைட்டுக்கு  நன்றி  தெரிவித்தார். ஆனால்,  அரசியல்  தமக்குரிய  பாதை  அல்ல  என்றவர்  மறுதலித்தார். “இந்நாட்டில்  அரசியல்  ஈடுபட  அவருக்குள்ள  துணிச்சல்  எனக்கு  இல்லை. “பாக்  சமட்டுக்கும்  டிஏபி-க்கும் …

சித்தி ஆயிஷா: வலைபதிவாளராக இருந்து மிக இளம்வயதில் செனட்டரானவர்

2008 ஆகஸ்டில் புத்தம்புது  பட்டதாரியான  சித்தி  ஆயிஷா  ஷேக்  இஸ்மாயில்  வேலையில்லாதவராக  வலைப்பதிவு  எழுதுவதில்  நேரத்தைக்  கழித்துக்  கொண்டிருந்தார். அவரது  வலைப்பதிவு  நாட்டமே இன்று  அவரை  ஒரு  செனட்டராக்கியுள்ளது. இரண்டு  வாரங்களுக்குமுன்  அவர்  பினாங்கைப்  பிரதிநிதிக்கும்  செனட்டராக  பதவி  ஏற்றபோது  அவருக்கு  வயது  30. செனட்டராவதற்கு குறைந்தபட்ச  வயது …

அம்பிகா டிஏபி-இல் சேர்வதை விரும்புகிறார் பாக் சமட்

டிஏபி  கட்சியில்  சேர்ந்துள்ள  தேசிய  இலக்கியவாதி  ஏ.சமட்  சைட், பெர்சே 2.0-இல்  தம்முடன்  இணைத்  தலைவராக  இருந்த  அம்பிகா  ஸ்ரீநிவாசனும்   மாணவர்  தலைவர்  ஆடம்  அட்லி  அப்துல்  ஹாலிமும் அரசியலில்  சிறப்பாக  செயல்பட  முடியும்  என்று  நினைக்கிறார். “அவர்(அம்பிகா)  வருவதை  வரவேற்கிறேன். அவர்  திறமையானவர், அறிவாளி. அவர்  டிஏபி-இல்…

WSJ: எங்கள் செய்தி உண்மையானது, அரசாங்க விசாரணை அறிக்கையை நஜிப்பும்…

வால்  ஸ்திரிட்  ஜர்னல்(WSJ), பிரதமர்  பண  மோசடி  செய்ததாகக்  குற்றஞ்சாட்டி வெளியிட்ட  செய்தியைத்  தற்காத்துள்ளது.  அது  அரசாங்கப்  புலனாய்வு  அறிக்கையை  அடிப்படையாகக்  கொண்டது  என்றும்  அந்த  அறிக்கையை  நஜிப்  அப்துல்  ரசாக்கும்  பார்த்திருக்கிறார்  என்றும்  அது  தெரிவித்தது. WSJ-இல்  நேற்று வெளியான  செய்தியில்  1எம்டிபி-இன்  பணம்  யுஎஸ்$700 மில்லியன் …

நஜிப் WSJ-க்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பார்

பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக், 1எம்டிபி-இன்  பணம்  யுஎஸ்$700 மில்லியன்  அவருடைய  தனிப்பட்ட  வங்கிக்  கணக்குக்கு  மாற்றிவிடப்பட்டதாகக்  கூறிய  வால் ஸ்திரிட்  ஜர்னலுக்கு (WSJ)  எதிராக  சட்ட  நடவடிக்கை  எடுப்பார்  எனத்  தெரிகிறது. சட்ட  நடவடிக்கை  எடுக்கப்படும்  என்பதை  நஜிப்பின் அரசியல்  செயலாளர்  முகம்மட் கைருன்  ஆசே  உறுதிப்படுத்தியதாக …

‘என்னைப் பற்றிக் கவலை வேண்டாம்’-ஆதரவாளர்களுக்கு அன்வார் அறிவுறுத்து

சிறையில்  உள்ள  பிகேஆர்  நடப்பில்  தலைவர்  அன்வார்  இப்ராகிம்  தம்  ஆதரவாளர்கள்  தம்மைப்  பற்றிக்  கவலைப்படுவதை  விரும்பவில்லை. “உங்களுக்கு  நன்றி.  ஆனால்,  என்னைப்  பற்றிக்  கவலைப்படாதீர்கள். இன்ஷாஅல்லா, நான்  நன்றாக  இருக்கிறேன். ரமலான்  மாதக்  கடமைகளைச்  செய்வதில்  கவனம்  செலுத்துமாறு  நண்பர்களைக்  கேட்டுக்கொள்கிறேன். “நிறைய  தொழுங்கள். விலைவாசி  உயர்வை, …

பணக் கையாடல் குற்றச்சாட்டை எம்ஏசிசி விசாரிக்கும்

சுமார் யுஎஸ்$700 மில்லியன்   பிரதமர் நஜிப்  அப்துல்  ரசாக்  கணக்குக்கு  மாற்றிவிடப்பட்டிருப்பதாகக்  கூறப்படுவது  பற்றி  மலேசிய  ஊழல்-தடுப்பு  ஆணையம்(எம்ஏசிசி)  விசாரிக்கும். “அந்த  விவகாரத்தைக்  கவனிப்போம். அதில் ஊழல்  நடந்திருப்பதாக  தெரிந்தால்  விசாரணை  செய்வோம்”, என  எம்ஏசிசி   பேச்சாளர்  ரொஹாய்ஜாட்  யாக்கூப்  வால் ஸ்திரிட்  ஜர்னலிடம்  தெரிவித்தார்.

குவான் எங் ‘இனவாத மூதாட்டிக்கு’ரிம500ஆயிரம் கொடுக்க நீதிமன்றம் உத்தரவு

பினாங்கு எதிரணித்  தலைவர் டத்தோ ஜஹாரா ஹமிட், தம்மை “இனவாத பாட்டி” என அழைத்ததற்காக  முதலமைச்சர்  லிம் குவான் எங் மீது தொடுத்த அவதூறு வழக்கில் வெற்றி பெற்றார். லிம்  இழப்பீடாக ரிம500,000-மும்  வழக்கு தொகையான ரிம40,000-மும்  கொடுக்க வேண்டும் என நீதி ஆணையர் நோர்டின் ஹசான்  தீர்ப்பளித்தார்.…

WSJ செய்தி ஒரு அரசியல் சூழ்ச்சி- பிரதமர் அலுவலகம்

வால் ஸ்திரிட்  ஜர்னல் (WSJ)செய்தியை  நஜிப்  அப்துல் ரசாக்குக்கு  எதிரான   “அரசியல்  சூழ்ச்சி”-இன்  தொடர்ச்சி  எனப்  பிரதமர்  அலுவலம்(பிஎம்ஓ)  வருணித்தது. உலகளாவிய  சவால்களுக்கு  எதிராக  மலேசியப்  பொருளாதாரத்தை  வெற்றிகரமாக  அவர்  வழிநடத்திச்  சென்று  கொண்டிருந்தாலும்  தனிப்பட்ட  சிலர்,  நம் பொருளாதாரத்தின்மீதுள்ள  நம்பிக்கைக்குக்  குழிபறிக்கவும்  அரசாங்கத்தின்  பெயரைக்  கெடுப்பதற்கும்  ஜனநாயக …

WSJமீது பாய்ந்தார் அமைச்சர்

நகர்ப்புற  நல்வாழ்வு,  வீடமைப்பு,  ஊராட்சி  அமைச்சர்  அப்துல்  ரஹ்மான்  டஹ்லான், 1எம்டிபி- இலிருந்து  கிட்டத்தட்ட  யுஎஸ்$700 மில்லியன் பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்கின்  வங்கிக் கணக்குக்கு மாற்றிவிடப்பட்டிருப்பதாக  செய்தி  வெளியிட்ட வால்  ஸ்திரிட்  ஜர்னல்  ஆசியா(WSJA)-வைக்  கடிந்து  கொண்டார். அனைத்துலக  அளவில்  பேர்பெற்ற  செய்தித்தாளான  அது  தனக்கு  அத்தகவல் …

பணக் கையாடல் விவகாரத்தில் பிரதமர் பதவி விலகக் கோரிக்கை

பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்  பணக்  கையாடல்  செய்துள்ளதாகக்  கூறும்  பரபரப்பான  குற்றச்சாட்டுகள்மீது  விசாரணை  முடியும்வரை  அவரை  விடுப்பில்  செல்ல  அமைச்சரவை  வலியுறுத்த  வேண்டும்  எனப்  பொதுக்  கணக்குக்  குழு  உறுப்பினர்  டோனி  புவா கேட்டுக்  கொண்டார். “இது  கண்ணியமான ஒரு  வேண்டுகோள்தான். மற்ற  மக்களாட்சி  நாடுகள்  என்றால் …

நஜிப் எங்கள் பணத்தை எடுத்துக்கொள்ளவில்லை: 1எம்டிபி வலியுறுத்து

1எம்டிபி-யிலிருந்து  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்கின்  கணக்கிற்கு  பணம்  மாற்றம்  செய்யப்பட்டதில்லை  என  அந்நிறுவனம்  இன்று  ஓர் அறிக்கையில்  வலியுறுத்தியது. 1எம்டிபி-இலிருந்து  கிட்டத்தட்ட  யுஎஸ்$700 மில்லியன் நஜிப்பின்  தனிப்பட்ட வங்கிக்  கணக்குக்குச்  சென்றுள்ளதாக  வால் ஸ்திரிட்  ஜர்னல்  வெளியிட்டிருக்கும்  செய்திக்கு எதிர்வினையாக  நிதி  அமைச்சுக்குச்  சொந்தமான  அந்த  நிறுவனம்…

WSJ:1எம்டிபி பணம் பிரதமர் கணக்குக்குச் சென்றுள்ளது தெரிய வந்துள்ளது

வால்  ஸ்திரிட்  ஜர்னல்(WSJ) மற்றுமொரு  பரபரப்பான  செய்தியை  இன்று  வெளியிட்டிருக்கிறது. கிட்டத்தட்ட  யுஎஸ்$700 மில்லியன் பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்கின்  கணக்கில்  வரவு வைக்கப்பட்டிருப்பதை  மலேசிய  புலனாய்வு  அதிகாரிகள்  கண்டுபிடித்திருப்பதாக  அச்செய்தி கூறிற்று. அரசாங்கப்  புலனாய்வு  ஆவணங்களை  வைத்து WSJ  இவ்வாறு கூறியது. அந்த  ஆவணங்கள்  முதன்முறையாக  நஜிப்புக்கும் …

ஹிஷாம்: அமைச்சரவை மாற்றம் பற்றி பிரதமரைத்தான் கேட்க வேண்டும்

தற்காப்பு  அமைச்சர்  ஹிஷாமுடின்  உசேனிடம்  விரைவில்  அமைச்சரவை  மாற்றம்  ஏற்படுமா  என்று  கேட்கப்பட்டதற்குத்  திட்டவட்டமாக  எதுவும்  சொல்ல  மறுத்து  பிரதமர்  நஜிப் அப்துல்  ரசாக்குக்கு  மட்டுமே  அது  வெளிச்சம்  என்றார். “பிரதமர்தான்  அமைச்சரவையைத்  தீர்மானிக்கிறார். நீங்கள்  இப்போது  பேசிக்  கொண்டிருப்பது  பிரதமரிடம்  அல்ல. “அமைச்சரவை  மாற்றி  அமைக்கப்படுமா அல்லது …

நஸ்ரியும் இளவரசரும் சமாதானம் ஆனார்கள்

சுற்றுலா, பண்பாட்டு  அமைச்சர்  நஸ்ரி  அப்துல்  அசீஸ், ஜோகூர்  பட்டத்திளவரசர்  துங்கு  இஸ்மாயில்  சுல்தான்  இப்ராகிம்  முன்வைத்த  சமாதானக்  கோரிக்கையை  ஏற்றுக்கொண்டார். அமைச்சர், செவ்வாய்க்கிழமை  31-வயதை எட்டிய  இளவசரருக்குப்  பிறந்த  நாள்  வாழ்த்தையும்  தெரிவித்துக்கொண்டார். “அவரைப்  போலவே  நானும்  மனதில்  பட்டதைச்  சொன்னேன். வருத்தப்படும்படியாக  எதுவும்  சொல்லியிருந்தால் மன்னிப்பு …

ஸ்வேன்ஸ்டன் ஸ்திரிட் சொத்து வாங்கியதில் மாரா ரிம53 மில்லியனைப் பறிகொடுத்தது

மாரா இங்க்  மெல்பர்ன், ஸ்வேன்ஸ்டன்  ஸ்திரிட்டில்  மாணவர்கள்  தங்குவதற்காக  ஒரு  அடுக்ககம்  வாங்கியதில்  நிகழ்ந்துள்ள  மோசடியில்   மாரா ஆஸ்திரேலிய $18.3 மில்லியனை (ரிம52.7 மில்லியன்)   இழந்தது  என்கிறார் பாண்டான்  எம்பி  ரபிஸி ரம்லி. மாரா  இங்கி-கிடமிருந்து  இரகசியமாகக்  கிடைக்கப்பெற்ற  ஆவணங்கள்   அந்நிறுவனம்  அச்சொத்தை  ஆ$41.8 மில்லியனுக்கு(ரிம120.5 மில்லியனுக்கு)  வாங்கியதாகக் …

அம்னோ-பாஸ் கூட்டணி உருவாகும்: முன்னாள் அமைச்சர் ஆருடம்

பாஸ்-அம்னோ கட்சிகளுக்கிடையில்  நிலவும்  பகையும்  போட்டியும்  நாடறிந்ததுதான். கட்சிப்பகையால் குடும்ப  உறுப்பினர்களும்  தங்களுக்குள்  சண்டையிட்டுக்  கொண்டார்கள். குடும்பத்தைவிட்டுப்  பிரிந்தும்  சென்றார்கள். காலஞ்சென்ற  பாஸ்  ஆன்மிகத்  தலைவர்  நிக்  அப்துல்  அசீஸ்  நிக்  மாட்,  அம்னோவுக்கு  வாக்களிப்பவர்கள்  நரகத்துக்குத்தான்  செல்வார்கள்  என்றுகூட  சொன்னதுண்டு. இதெல்லாம்  பழைய  கதை. இப்போது  நிலமை …