அஹ்மாட் ஆவாங்கும் பாஸ் தலைவர் போட்டியில் குதிக்கிறார்

பாஸ்  தலைவர்  பதவிக்கு, முன்னாள்  உதவித்  தலைவர்   அஹ்மாட்  ஆவாங்,  நடப்புத்  தலைவர் அப்துல்  ஹாடி  ஆவாங்கை  எதிர்த்து   போட்டியிடுவார். கட்சியை வலுப்பத்தவே  போட்டியில்  குதிப்பதாக  அந்த  மூத்த  தலைவர்  கூறினார். “இது ஜனநாயகத்தைக்  கடைப்பிடிக்கும்  கட்சி. நாங்கள்  கட்சியை  வலுப்படுத்த  விரும்புகிறோம்”, என்றாரவர். அஹ்மட் ஆவாங்,  இன்று …

பாலியல் தொந்திரவு கொடுத்ததாக மஇகா தலைவர்மீது குற்றச்சாட்டு

மஇகா  தொகுதித் தலைவர் ஒருவர்  ஜோகூர்,  கோத்தா  திங்கியில்  உள்ள  அவரது  மருத்துவகத்தில்  பணியாளர்  ஒருவரிடம்  தகாத  முறையில்  நடந்துகொண்டதாகக்  குற்றம்  சாட்டப்பட்டுள்ளது. பல்  மருத்துவரான  அவருக்கு  எதிராக  போலீஸ்  புகார்  ஒன்று  செய்யப்பட்டிருப்பதை  கோத்தா  திங்கி  போலீஸ் தலைவர்  ரஹ்மாட்  ஒத்மான்  உறுதிப்படுத்தினார். “அவ்விவகாரம்  பற்றி  புகார் …

ஊராட்சி மன்றங்களுக்கு ஜிஎஸ்டி விலக்களிக்குமாறு சிலாங்கூர் கோரிக்கை விடுக்கும்

சிலாங்கூர்  அரசு  அம்மாநிலத்திலுள்ள  12  ஊராட்சி  மன்றங்களுக்கும் அவை  வழங்கும்  சேவைகளுக்கு ஜிஎஸ்டி-யிருந்து  விலக்களிக்குமாறு புத்ரா  ஜெயாவைக்  கேட்டுக்கொள்ளும். இன்று  மாநில ஆட்சிக்குழுவில்  அது  பற்றி விவாதிக்கப்பட்டதாகவும் ஜிஎஸ்டி  விலக்களிக்குமாறு  நிதி  அமைச்சிடம்  கோரிக்கை  விடுப்பதென  முடிவு  செய்யப்பட்டதாகவும் மந்திரி  புசார்  அஸ்மின்  அலி  கூறினார். இப்போதைக்கு  ஜிஎஸ்டி-யை …

பெக்கானில் நஜிப்பை எதிர்த்துப் போட்டியிடத் தயாரா? மகாதிருக்கு நஸ்ரி சவால்

பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்கைக்  கவிழ்ப்பதற்கான  முயற்சிகளைக்  கைவிட்டு  பொதுத்  தேர்தலில்  அவரை  எதிர்த்துப்  போட்டியிடும்  துணிச்சல்   டாக்டர்  மகாதிர்  முகம்மட்டுக்கு  உண்டா  என்று  வினவுகிறார் சுற்றுலா, பண்பாட்டு  அமைச்சர் நஸ்ரி  அப்துல்  அசீஸ். “மகாதிருக்குள்ள  ஆதரவு  எனக்குத்  தெரியாது. ஆனால், தமக்கு  இன்னமும்  செல்வாக்கு  இருக்கிறது  என்று …

முக்ரிஸ் பிரதமர் ஆகும்வரை மகாதிரின் கொலைப்படலம் தொடரும்

டாக்டர்  மகாதிருக்கு அவரின்  மகன்  முக்ரிஸ் பிரதமர் ஆக  வேண்டும். அதற்கு  இடையூறாக  உள்ள  பிரதமர்களை  அவர்  “ஒழித்துக்கட்டுவார்”  என்கிறார்  அரசியல்  ஆய்வாளர்  வொங்  சின்  ஹுவாட். அது  அவருக்குப்  பிடித்தமான  விளையாட்டு. உயிருள்ளவரை  அதை  விட  மாட்டார்  என்று  வொங்  மலேசியாகினியிடம்  தெரிவித்தார். “மகாதிர்  அவரின்  மகன்…

விமானப் பயணத்துக்கு இடையூறாக இருந்த ஜெர்மானியருக்கு சிறை

கடந்த  சனிக்கிழமை  ஸ்ரீலங்காவுக்குப்  பறந்து  கொண்டிருந்த  மலேசிய  விமான  நிறுவனத்தின்   விமானப்  பயணம்  தடைப்பட  காரணமாக  இருந்த  ஜெர்மன்  நாட்டு  வணிகர்  டயட்மார்  ரோஸ்,54, என்பாருக்கு  ஒரு-மாதச்  சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. விமானப்  பயணத்தில்  கடைப்பிடிக்க  வேண்டிய  ஒழுங்கு  விதிகளைப்  பின்பற்றாமல்  விமானப்  பணியாளர்  ஒருவருக்கு  ஆபத்தை  உண்டுபண்ணும் …

கற்பழிப்பு மிரட்டல் குறித்த விசாரணைக்கு மைசாராவின் உதவியை நாடுகிறது போலீஸ்

போலீஸ்  காவலில்  இருந்தபோது போலீஸ்  அதிகாரி  ஒருவர்  தம்மைக் கற்பழிக்கப்  போவதாக மிரட்டினார்  எனக்  குற்றஞ்சாட்டியுள்ள  ஜிஎஸ்டி- எதிர்ப்பாளர்  மைசாரா  அமிரா  முகம்மட்  அஸ்மாடி,  விசாரணையை  விரைவுபடுத்த  கோலாலும்பூர்  மாவட்ட  போலீஸ் தலைமையகத்துக்கு  வருமாறு  கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறார். மே 1 பேரணியில்  கலந்துகொண்டதற்காகக்  கைது செய்யப்பட்டு  டாங் வாங்கி  மாவட்ட …

அமைச்சரவை மாற்றமா? அப்படி எதுவுமில்லை: பிரதமர் அலுவலகம் மறுப்பு

அமைச்சரவை  மாற்றம்  நிகழப்போவதாகக்  கூறப்படுவதையும்  அதன்  தொடர்பில்  சமூக  வலைத்தளங்கலில்  வலம்  வரும்  பெயர்ப் பட்டியலையும் பிரதமர்  அலுவலகம்(பிஎம்ஓ)  மறுத்துள்ளது. அப்பெயர்ப் பட்டியல்  ஐந்து  அமைச்சர்கள்  பதவி  இழப்பார்கள்  என்பதைக்  காண்பித்தது. “அமைச்சரவை  மாற்றம் நிகழப்போவதாகக்  கூறப்படுவதை  பிஎம்ஓ  மறுக்கிறது”  என  அந்த  அலுவலகம்  இன்று  பிற்பகல்  டிவிட்டரில் …

அம்னோ தலைவர்: பிரதமரை ஆதரிக்கிறோம் ஆனால் அவர் 1எம்டிபி-யைச் சீர்படுத்த…

அம்னோ  தலைவர்  ஒருவர்,  கட்சியின் உச்ச மன்றம் நேற்றைய  கூட்டத்தில்  1மலேசியா  மேம்பாட்டு  நிறுவனம்  குறித்தும் தாபோங்  ஹாஜி 1எம்டிபி-இடம்  நிலம்  வாங்கியதன்  தொடர்பிலும்  தன் கவலையை  வெளிப்படுத்தியது  எனக்  கூறினார். “நாங்கள்  பிரதமரை  ஆதரிக்கிறோம்.  அதே நேரத்தில்  அவர்  1எம்டிபி  பிரச்னைகளுக்குத்  தீர்வு  காண  வேண்டும்  என்றும்…

நெகிரியில் மசீசவுக்கு நிலம் ‘இலவசமாகவே’ கிடைக்கிறது

நெகிரி  செம்பிலானில்  அரசாங்க  நிலமொன்று  சதுர அடி  2சென்  என்ற  விலையில் மசீச-வுடன்  தொடர்புள்ள  ஒரு  நிறுவனத்துக்கு  விற்கப்பட்டிருப்பதாக டிஏபி-இன்  சிரம்பான்  எம்பி  அந்தோனி  லொக்  தெரிவித்தார். மலாய்க்காரர்களுக்காக  ஒதுக்கப்பட்ட  அந்த  9.83 ஹெக்டர் நிலத்தை  ரிம24.853-க்கு  விற்பதற்கு  மாநில  அரசு 2001-இல்  ஒப்புதல்  அளித்தது  என்றாரவர். “அதாவது…

சிஎம் பதவி தவணைக் காலம்: அம்னோ தீர்மானத்துக்கு டிஏபி பிரதிநிதி…

பினாங்கில் முதலமைச்சர்  பதவி  இரண்டு  தவணைகளுக்கு  மட்டுமே என்று வரையறுக்கும் தீர்மானம்  கொண்டுவரும்  எதிரணி திட்டத்தை  டிஏபி  பிரதிநிதி  ஒருவர்  ஆதரிக்கிறார். 2008-இலிருந்து  முதலமைச்சராக  இருக்கும்  லிம்  குவான்  எங்குக்கு  இது  இரண்டாவது  தவணையாகும். இரண்டாவது தவணை  முடியும்போது  அவர்  பதவியிலிருந்து விலக  வேண்டும்  என  அம்னோ  விரும்புகிறது.…

தியோ பெங் ஹோக்கின் இறப்புக்கு எம்ஏசிசி ரிம600,000 இழப்பீடு கொடுக்கும்

ஆறாண்டுக்கால  இழுபறிப்  போராட்டத்துக்குப்  பின்னர்  அரசாங்கம்  காலஞ்சென்ற  தியோ பெங்  ஹொக்-கின்  குடும்பத்துக்கு  ரிம600,000 இழப்பீட்டுத்  தொகை  வழங்க  ஒப்புக்கொண்டிருக்கிறது. இரு  தரப்பும் கோலாலும்பூர்  உயர்  நீதிமன்றத்தில்  இந்த  சமரசத்துக்கு  உடன்பட்டதாக கூலாய்  எம்பி  தியோ  நை சிங்  தெரிவித்தார். “முறையீட்டு  நீதிமன்றம்  தியோவின்  இறப்புக்கு  எம்ஏசிசி  தான் …

நஜிப் பிரதமராக நீடிக்க ஹாடி அதரவு

பாஸ்  தலைவர் அப்துல் ஹாடி அவாங். எதிரணியின்  நிலைப்பாட்டிலிருந்து  விலகி,  நஜிப்  அப்துல்  ரசாக்  பிரதமராக  தொடர்வதற்கு  ஆதரவு  தெரிவித்துக்  கொண்டிருக்கிறார். “அவர் அழுத்தங்களால் துவண்டுவிடக்கூடாது. பிரச்னைகளைத் தீர்க்க அவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும்”. “அவர் பதவி விலகக் கூடாது. அவரது பதவிக்  காலத்தை முடிக்க  இடமளிக்க வேண்டும்”,…

சிதறியது டிஎச் கண்ணாடிக் கதவு: காட்டுத் தீயாய்ப் பரவியது வதந்தி

பெர்லிஸ், கங்காரில்  தாபோங்  ஹாஜி   கிளை  அலுவலகத்தின்  கண்ணாடிக்  கதவு  சிதறியதுதான்  தாமதம்  பல்வகை  ஊகங்கள்  சமூக  வலைத்தளங்களில்  பரவின. ஆத்திரம்  கொண்ட சந்தாதாரர்கள்தான்  கல்லெறிந்து  கண்னாடிக்  கதவை  உடைத்திருப்பார்கள்  என்று  பலரும்  கருத்துத்  தெரிவித்திருந்தனர். உடைந்த கண்ணாடிக்  கதவின்  நிழற்படம் டிவிட்டரில்  பதிவிடப்பட்டிருந்தது. அதனடியில் ஹாபிஸ்  அஷ்ரப்…

ரோஸ்மா என்ன, அமைச்சரவைக் கூட்டத்துக்கா தலைமை தாங்கினார்?

பிரதமரின்  துணைவியார்  ரோஸ்மா  மன்சூர்  அமைச்சரவைக்  கூட்டத்துக்குத்  தலைமை  தாங்கியது உண்டா? மாட்சிமை  தங்கிய  பேரரசருக்கு  ஆலோசனைகள்  சொன்னதுண்டா? பிரதமரின் உதவியாளர்   ரிசால்  மன்சூரை  மலேசியாகினி  தொடர்பு  கொண்டபோது   இப்படிக் கேள்விக்  கணைகளைத்  தொடுத்தார். ரோஸ்மா தாமே  பிரதமர்  என்பதுபோல்  நடந்து  கொள்கிறார் என்று  முன்னாள்  பிரதமர்  டாக்டர் …

மகாதிர்: ரோஸ்மா அவர்தான் பிரதமர் என்பது போல் நடந்து கொள்கிறார்

  டாக்டர் மகாதிர் மீண்டும் பிரதமர் நஜிப்பின் துணைவியார் ரோஸ்மா மன்சூர் மீது குறிவைக்கிறார். ரோஸ்மாவை பற்றி தாம் பல புகார்களைப் பெற்றுள்ளதாக கூறிய மகாதிர், அவற்றுள் ஒன்று அவர்தான் பிரதமர் என்பது போல் நடந்துகொள்வதாகும் என்றார். அவரை பற்றி புகார் கூறியவர்கள் மலாய்க்காரர்களும் அம்னோ உறுப்பினர்களும் மட்டுமல்ல,…

கெடாவில் வெள்ளிக்கிழமை தொழுகைக்குச் செல்லாதவர்களுக்குச் சிறை

கெடாவில்  வெள்ளிக்கிழமை  தொழுகையை  மூன்று  வாரங்களுக்குத்  தொடர்ந்து  தவிர்க்கும்  முஸ்லிம்கள்  2014ஆம்  ஆண்டு  ஷியாரியா  சட்டத்தின்படி  தண்டிக்கப்படுவர். வெள்ளிக்கிழமை  தொழுகையைத்  தவிர்ப்பவர்கள்  பற்றி  பொதுமக்கள்  கெடா  இஸ்லாமிய  மேம்பாட்டுத்  துறையிடம்  புகார்  செய்யலாம். குற்றவாளிகளுக்கு மூன்று  மாதச்  சிறையும்  ரிம1,000வரை  அபராதமும்  விதிக்கப்படலாம். ஜூன் முதல்  நாளிலிருந்து  அச்சட்டம் …

1எம்டிபி-இன் நடப்பு, முன்னாள் தலைவர்கள் பிஏசி விசாரணைக்கு அழைக்கப்படுவர்

நாடாளுமன்றப்  பொதுக்  கணக்குக்குழு(பிஏசி)  1மலேசியா  மேம்பாட்டு  நிறுவனம்(1எம்டிபி) மீதான  புலனாய்வை  மே  19-இல்  தொடங்கும். அதில்  முதலில்  சாட்சியம்  அளிக்க  கருவூல  தலைமைச்  செயலாளர்  இர்வான்  சிரிகார்  அப்துல்லாவும் பொருளாதாரத்  திட்டமிடல்  பிரிவு(இபியு)  தலைமை  இயக்குனர்  ரஹ்மாட்  பீவி  அப்துல்லாவும்  வருவார்கள்  என பிஏசி தலைவர்  நூர்  ஜஸ்லான் …

நஜிப்புக்கு எதிராக சதியா?: நஸ்ரி மறுப்பு

சுற்றுலா  அமைச்சர்  நஸ்ரி  அப்துல்  அசீஸ்,  மிலானின்  துணைப்  பிரதமர்  முகைதின்  யாசினைச்  சந்தித்து  பிரதமர்  நஜிப்பைக்  கவிழ்க்கத்  திட்டமிட்டார்  என்று  கூறப்படுவதை  மறுத்தார். தாம்  இருக்கும்  இடத்தை  நஜிப்  அறிவார்  என்று  நஸ்ரி  தெரிவித்தார். ஏனென்றால், தமது  துபாய், மிலான்  பயணங்களுக்கு  ஒப்புதல் அளித்ததே  அமைச்சரவைதான்  என்றாரரவர்.…

நிலம் வாங்கியது நல்லது என்றால் நஜிப் ஏன் அதை விற்கச்…

நிலம் வாங்கியது நல்லது  என்றால் நஜிப்  ஏன்  அதை விற்கச்  சொன்னார்? தாபோங்  ஹாஜி  நிலம்  வாங்கியது  நல்ல  விசயமென்றால்  பிரதமர்  நஜிப்  அப்துல் ரசாக்  அதைத்  தற்காத்துப்  பேசியிருக்க வேண்டும்  என்கிறார்  மூத்த  செய்தியாளர்  ஏ.காடிர்  ஜாசின். நஜிப்பைத்  தொடர்ந்து  குறைசொல்லி  வருபவரான  காடிர்,  பிரதமர்  தாபோங் …

அம்னோ தொகுதித் தலைவர்கள் நஜிப்பைப் பதவி விலகக் கோருவர்?

இன்று  நடைபெறும்  அம்னோ  கூட்டத்தில், தொகுதித்  தலைவர்கள்,   பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்கிடம்  பதவி  விலகுமாறு  “நயமாக”க்  கேட்டுக்கொள்வார்கள்  என முன்னாள்  தகவல்  அமைச்சர்  சைனுடின்  மைடின்  கூறியுள்ளார். “நஜிப்புக்கு  மக்களின்  குறிப்பாக  அம்னோ  உறுப்பினர்களின்  ஆதரவு  இல்லை  என்ற  முடிவுக்கு  அவர்கள்  வந்திருப்பதாக  எனக்குத்  தகவல்  கிடைத்துள்ளது.…

KWAP அசலைவிட 30 மடங்கு அதிக விலையில் TRX நிலத்தை…

தாபோங்  ஹாஜி, 1மலேசியா  மேம்பாட்டு  நிறுவன(1எம்டிபி)த்திடமிருந்து  அதிக விலைக்கு  நிலம்  வாங்கிய  விவகாரம் சர்ச்சையை  உண்டாக்கியுள்ள  வேளையில்  பணி ஓய்வு  நிதி  நிறுவனமும்  அதே  இடத்தில்  நிலம் வாங்கப் போவதாக  தகவல் வெளியாகியுள்ளது. பணி ஓய்வு  நிதி  நிறுவனம் ( KWAP) துன் ரசாக்  இணைப்பு  மையத்தில் ஒரு…

ஜிஎஸ்டி வருமானம் பயன்படுத்தப்படும் விதத்தை அரசு விளக்கும்

பொருள், சேவை  வரி  மூலம்  கிடைக்கும்  கூடுதல்  வருமானம்  எப்படிப் பயன்படுத்தப்படுகிறது  என்பதை  அரசாங்கம்  விளக்கும். இன்று  காலை  பிரதமர்  துறை  பணியாளர்களின்  கூட்டத்தில்  உரையாற்றியபோது  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்  இந்த    வாக்குறுதியை  வழங்கினார். அந்த  வரியால்  உருவான மிகப்  பெரிய  சர்ச்சையை அடுத்து பொதுமக்களின்  நம்பிக்கையைப் …