அமைச்சர்: விலை குறைவாக உள்ள கடைகளில் வாங்குவீர்

விலைவாசி  உயர்வுடன்  போராடும்  பயனீட்டாளர்கள்  கடைகளைத்  தேர்ந்தெடுத்து  பொருள்   வாங்க  வேண்டும்  எனப்  பிரதமர்துறை  அமைச்சர்  நன்சி  ஷுக்ரி  வலியுறுத்தியுள்ளார்.  எல்லாக்  கடைகளும்  விலைகளை  உயர்த்தவில்லை.  அந்த  வகையில்  பொருள்கள்  வாங்குவோர்  விலைகளை  ஒப்பிட்டுப்  பார்க்க  வேண்டும்  என்றவர்  அறிவுறுத்தினார்.  “அண்மையில்  கூச்சிங்கில்  தேநீர்  அருந்தினோம். நாங்கள்  ஆறு …

அன்வார் முன்கூட்டியே தேர்தல் பரப்புரையா? போலீஸ் விசாரிக்கும்

காஜாங்  இடைத்  தேர்தலுக்கான  பரப்புரையை  அன்வார்  இப்ராகிம்  முன்கூட்டியே  செய்யத்  தொடங்கி  விட்டார்  என்று  கூறப்படுவதை  போலீஸ்  விசாரிக்கும்..  கடந்த  வாரம்  பல  கூட்டங்களை  நடத்திய  அன்வார்  அமைதிப்  பேரணிச்  சட்டம்  2012-இன்கீழ் விசாரிக்கப்படுவார்  என  பெரித்தா  ஹரியான்  அறிவித்துள்ளது. அச்சட்டத்தின்படி  கூட்டங்களைக்  கூட்டுவதற்குமுன்  10  நாள்களுக்கு  முன்னதாகவே …

ஆளுநர் ஆனாலும்கூட தாயிப் தப்பிக்க முடியாது

சரவாக்  முதலமைச்சர்  அப்துல்  தாயிப்  முகம்மட்  மாநில  ஆளுநராக  நியமிக்கப்பட்டா;ல்  அவர்மீது  எந்தச்  சட்ட  நடவடிக்கையும்  எடுக்க  முடியாது  என்பது  சரியல்ல  என்கிறார்  அரசமைப்புச்  சட்ட  வல்லுனர்  அப்துல்  அசீஸ்  பாரி.  ஒன்பது  மலாய்  ஆட்சியாளர்களும்கூட  நீதிமன்ற  நடவடிக்கைகளின்ன்றும்  விலக்களிப்பட்டவர்கள்தான். ஆனாலும்,  கூட்டரசு  அரசமைப்பின்  182-வது  பகுதியின்கீழ்  ஒரு …

அந்தக் கண்டனக் கூட்டத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்காதது பொறுப்பற்ற செயல்

கடந்த  வாரம்,  ஆர்ப்பாட்டக்காரர்கள்  சிலர்,  கோழிகளைப்   பலிகொடுத்து  அவற்றின்  இரத்தத்தை  அரசியல்வாதிகள்  சிலருடையை  உருவப்படங்களைக்  கொண்டிருந்த  பதாதைகள்மீது  தெளித்த  சம்பவத்துக்கு  எதிராக  அதிகாரிகள்  நடவடிக்கை  எடுக்காததை  மலேசிய  வழக்குரைஞர்  மன்றம்  கண்டித்துள்ளது. பொது  ஒழுங்குக்கு  மிரட்டலை  ஏற்படுத்திய  ஒரு  சம்பவத்தை  அதிகாரிகள்  கண்டுகொள்ளாமல்  இருப்பதாக  அம்மன்றத்தின்  தலைவர்  கிறிஸ்டர் …

சமரசப் பேச்சுக்களில் சாபா, சரவாக்கையும் சேர்த்துக் கொள்க

தேசிய  சமரசம்,  தேசிய  இணக்கம்  காணும்  பேச்சுக்களில்  சாபா.  சரவாக்  ஆகியவற்றையும்  சேர்த்துக்  கொண்டால்தான்  பேச்சுக்கள்  அர்த்தமுள்ளதாக  இருக்கும்  என  சாபாவின்  மாநில  சீரமைப்புக்  கட்சி (ஸ்டார்) கூறியுள்ளது.  சமய  உரிமைகளுக்கும்  இன  நல்லிணக்கத்துக்கும்  மிரட்டலாக  இருக்கும்  விவகாரங்கள்  குறித்து  இருதரப்பு  விவாதம்  நடத்தப்பட  வேண்டும்  என்று  பிகேஆர் …

வேதமூர்த்தியின் பதவி துறப்பில் ஒரு குழப்பம்!

  பிரதமர் துறை அமைச்சர் பி. வேதமூர்த்தி இன்று பின்னேரத்தில் தமது பதவி விலகல் கடிதத்தை பிரதமரிடம் நேரடியாக அளித்ததாக முன்பு கூறப்பட்டது. ஆனால், இப்போது வேதமூர்த்தி அவரது பதவி விலகல் கடிதத்தை இன்று மாலை மணி 5.05க்கு கொடுத்ததாக பெர்சத்துவான் ஹிண்ட்ராப் மலேசியாவின் (பிஎச்எம்) செயலாளர் பி.…

முன்கூட்டியே பரப்புரை செய்யக்கூடாது: அன்வாருக்கு எச்சரிக்கை

தேர்தல்  ஆணைய(இசி)த்  தலைவர்  அப்துல்  அசீஸ்  முகம்மட் யூசுப்,  காஜாங்  இடைத்  தேர்தலில்  அனுமதிக்கப்பட்ட  காலத்துக்கு  முன்னாலேயே  பரப்புரை  செய்தால்  நடவடிக்கை  எடுக்கப்படும்  என  பிகேஆர்  நடப்பில்  தலைவர்  அன்வார்  இப்ராகிமை  எச்சரித்துள்ளார். “பரப்புரையை வேட்புமனு  தாக்கல்  செய்யும் நாளான  மார்ச்  11-க்குப்  பிறகுதான்  தொடங்க  வேண்டும்.  மார்ச் …

அன்வார்: ஆர்டிஎம்-மை, டிவி 3-யை, உத்துசானைப் பார்ப்பதே இல்லையா?

காஜாங்  இடைத்  தேர்தலுக்கு  தாம்,  முன்கூட்டியே  தேர்தல்  பரப்புரையைத்  தொடங்கி  விட்டதாகக்  கூறப்படுபடுவது  ஆதாரமற்ற  குற்றச்சாட்டு  என   பிகேஆரின்  வேட்பாளரான  அன்வார்  இப்ராகிம்  மறுத்துள்ளார்.  அன்வார் கடந்த  வாரம்  காஜாங்கில்  செராமா  நடத்தித்  தேர்தல்  பரப்புரையில்  ஈடுபட்டதாக  பிகேஆர்  விளம்பரப்  பிரிவின்  முன்னாள்  தலைவரும்  இப்போது  பெர்காசா  உறுப்பினருமான …

ஜாஹிட் பெர்காசா-வின் புரவலர்போல் பேசக்கூடாது

அஹமட்  ஜாஹிட்  ஹமிடி  உள்துறை  அமைச்சர்  பதவிக்கு  ஏற்ப  நடந்துகொள்ள  வேண்டும்  என  பாஸ்  உதவித்  தலைவர்  மாபுஸ்  ஒமார்  கேட்டுக் கொண்டிருக்கிறார்.  “அவர்  உள்துறை  அமைச்சர்போல்  பேச  வேண்டும்.  பெர்காசா  அல்லது  தீவிரவாதப்  போக்குக்கொண்ட  இனவாத  என்ஜிஓ-களின்  புரவலர்போன்று  நடந்து  கொள்ளக்கூடாது”,  என்றவர்  செய்தியாளர்களிடம்  கூறினார்.  போலீசுக்குப் …

வேதமூர்த்தி தமது பதவி விலகல் கடிதத்தை பிரதமரிடம் கொடுத்தார்

பெர்சாத்துவான் ஹிண்ட்ராப் மலேசியா (பிஎச்எம்) தலைவர் பி. வேதமூர்த்தி தமது துணை அமைச்சர் மற்றும் செனட் உறுப்பினர் பதவிகளை இன்று ராஜினாமா செய்து விட்டதாக சின் சியு டெய்லி செய்தி கூறுகிறது. அந்த டெய்லியின் கூற்றுப்படி, வேதமூர்த்தி அவரது ராஜினாமா கடிதத்தை பிரதமர் நஜிப்பிடம் நேரடியாக இன்று பின்னேரத்தில்…

சரவாக் எஸ்ஏஎம்எம் தாயிப் ஆளுநர் ஆவதை எதிர்க்கும்

அப்துல்  தாயிப்  மஹ்மூட்  சரவாக்  முதலமைச்சர்  பதவியிலிருந்து  விலகியதும்  மாநில  ஆளுநர்  ஆவதைத்  தடுக்கப்போவதாக  சொலிடேரிடி  அனாக்  மூடா  மலேசியா(எஸ்ஏஎம்எம்)-வின்  சரவாக்  கிளை   எச்சரித்துள்ளது. தாயிப்புக்கு  எதிராக  ஊழல்,  அதிகார  அத்துமீறல்  போன்ற  குற்றச்சாட்டுகள்   இருப்பதாகக்  குறிப்பிட்ட  சரவாக்  எஸ்ஏஎம்எம்  ஒருங்கிணைப்பாளர்  அஸான்  அக்மா,  அவர்  ஆளுநராக  நியமிக்கப்பட்டால் …

அன்வார்: காலிட்டும் அஸ்மினும் சில்லறைச் சண்டையை நிறுத்த வேண்டும்

சிலாங்கூர்  மாநில  மேம்பாட்டுக் கழகத்தின் (பிகேஎன்எஸ்)  ஒப்பந்த  ஊழியர்கள்  பணி  நிறுத்தம்  செய்யப்பட்டது  தொடர்பில்  மந்திரி  புசார்  அப்துல்  காலிட்  இப்ராகிமும்  பிகேஆர்  துணைத்  தலைவர்  அஸ்மின்  அலியும்  சச்சரவிட்டுக்  கொள்வதை  நிறுத்த  வேண்டும்  என்று  எதிரணித்  தலைவர்  அன்வார்  இப்ராகிம் வலியுறுத்தியுள்ளார். மாநில  அரசு  அந்த  ஊழியர்களைப் …

பத்து பெரிங்கி கடல்கரை இப்போதைக்கு மூடப்படாது

பினாங்கு  அரசு,  இப்போதைக்கு  பத்து  பெரிங்கி  கடல்கரையை  மூடாது. அப்பகுதியில் காணப்படும்  ஈ கோலி  பெக்டீரியா  அளவு  குறித்த   சுற்றுச்சூழல்  துறையின்  அறிக்கைக்காக  அது  காத்திருக்கிறது.  அறிக்கை  கிடைத்த  பின்னர்  அது  முடிவெடுக்கும்.  பெக்டீரியாவின்  அளவு  அபாயம்  விளைவிக்கும்  வகையில்  இருக்குமானால்  கடல்கரை  மூடப்படும்  என   மாநில  ஆட்சிக்குழுவில் …

தாயிப்புக்குப் பின் ஆவாங் தெங்கா சிஎம் ஆவாரா?

சரவாக்  முதலமைச்சர்  அப்துல்  தாயிப்  மஹ்முட்    இம்மாத  இறுதியில்  பணி ஓய்வு  பெறும்போது  இப்போது  பிபிபி  கட்சியின்  உதவித்  தலைவராகவுள்ள  ஆவாங்  தெங்கா  அலி  ஹசன்  முதலமைச்சராகலாம்  என்று  கூறப்படுகிறது.  “சரவாக்கியர்  ஒருவர்தான்  சர்வாக்குக்குத்  தலைமை  தாங்க  வேண்டும்”  என்று  தாயிப்  கூறி  இருப்பதிலிருந்து  அப்படித்தான்  நினைக்கத்  தோன்றுகிறது.…

வேதமூர்த்தி துணை அமைச்சர், செனட்டர் பதவிகளை துறக்கிறார்

பெசாத்துவான் ஹிண்ட்ராப் மலேசியாவின் தலைவரும் பிரதமர்துறையில் துணை அமைச்சராகவும் பதவி வகிக்கும் பி. வேதமூர்த்தி தமது பதவிகளை துறக்க விருப்பதாக அந்த அமைப்பின் தேசிய ஆலோசகர் என். கணேசன் கூறுகிறார். பெப்ரவரி 10 ஆம் தேதி வேதமூர்த்தி தமது விலகவிருக்கிறார்.  பிரதமர் நஜிப் இந்தியர்களுக்கு இழைத்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க…

ஜாஹிட்: தெரேசாவை அறைந்தால் வெகுமதி என்பது ஒரு மிரட்டல் அல்ல

சிபூத்தே  எம்பி  தெரேசா  கொக்கை  கன்னத்தில்  அறைவோருக்கு  ரொக்கப்  பணம்  வெகுமதியாக  வழங்கப்படும்  என்று  முஸ்லிம்  என்ஜிஓ  ஒன்று  அறிவித்தது  ஒரு  மிரட்டல்  அல்ல  என்கிறார்  உள்துறை  அமைச்சர்  அஹமட்  ஜாஹிட்  ஹமிடி.  “அது  ஒரு  மிரட்டல்  அல்ல  என்பதால்  அதில்  விசாரிப்பதற்கு  ஏதுமில்லை”,  என  அம்னோ  உதவித் …

புக்கிட் தெங்கா போலீஸ் நிலையத்தில் வீசப்பட்டது சக்திவாய்ந்த பட்டாசு

இன்று  காலை  அடையாளம்  தெரியாத  நபர்கள்  வீசி  எறிந்த   ‘மெர்சுன்  போலா(சக்திவாய்ந்த  பட்டாசு)’வால்  புக்கிட்  மெர்தாஜாம்  புக்கிட்  தெங்கா  போலீஸ்  நிலையத்தின்  நுழைவாயிலும்  காவல்  கூண்டும்  சேதமடைந்தன.  அச்சம்பவம்   அதிகாலை  மணி  4.50-க்கு  நிகழ்ந்ததாக  பினாங்கு  சிஐடி  துணைத்  தலைவர்  ஏசிபி   நாசிர்  சாலே  கூறினார்.  அப்போது  நான்கு …

கன்னத்தில் அறைந்தால் காசு என்ற அறிவிப்பு குறித்து பிரதமர் பேசாமலிருப்பது…

சிபூத்தே  எம்பி  தெரேசா  கொக்கை  கன்னத்தில்  அறைவோருக்கு  ஒரு  என்ஜிஓ  ரொக்க  வெகுமதி  கொடுக்க  முன்வந்திருக்கும்  செயலுக்கு  எதிராக  போலீஸ்  நடவடிக்கை  எடுக்க  வேண்டும்  என  சரவாக்  டிஏபி வலியுறுத்தியுள்ளது. “ஒரு  குற்றச்செயல்  நடப்பதற்கு  வெகுமதி  கொடுக்கும்  செயல்  மலேசியாவில்  இதற்குமுன்  நடந்ததில்லை”,  என  சரவாக்  டிஏபி  தலைவர் …

பினாங்கில் போலீஸ் நிலையம் குண்டுவெடிப்பில் சேதமடைந்தது

பினாங்கு  புக்கிட்  தெங்கா  போலீஸ்  நிலையத்தில்  நிகழ்ந்த   குண்டுவெடிப்பில்  அதன்  முன்பகுதி  சேதமடைந்தது.  அதிகாலை  மணி  4.50  அளவில்  இச்சம்பவம்  நிகழ்ந்ததாக  உத்துசான்  மலேசியா  அறிவித்துள்ளது.  இச்சம்பவம்  தொடர்பில்  பினாங்கு  போலீஸ்  தலைவர் அப்துல்  ரஹிம்  ஹனாபி  செய்தியாளர்  கூட்டமொன்றை  நடத்துவார்  என  எதிர்பார்க்கப்படுகிறது.  குண்டுவெடித்ததில்  யாரும்  காயமடைந்தார்களா …

தாயிப் பதவி விலகுவதை எதிர்த்து அவரின் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம்

சரவாக்   முதலமைச்சர்   அப்துல்  தாயிப்  மஹ்முட்,  பிபிபி  உச்சமன்றக்  கூட்டத்தில்  அவரது  பதவி  விலகல்  பற்றி  அறிவிப்பார்  என்று  எதிர்பார்க்கப்படும்  வேளையில்  அவரின்  ஆதரவாளர்கள்  அந்நடவடிக்கையை  எதிர்த்து  ஆர்ப்பாட்டம்  செய்தனர்.   பிபிபி-யுடன்  தொடர்புள்ள  அங்காத்தான்  வாரிசான்  அனாக்  சரவாக்  அமைப்பைச்  சேர்ந்த  சுமார்  100 பேர்  பெட்ரா …

சுல்தான் கருணையால் தூக்குத்தண்டனை கைதி தலை தப்பியது

சந்திரன்  பாஸ்கரனுக்கு  இன்று  தூக்குத்தண்டனை  நிறைவேற்றப்பட  விருந்தது.  ஆனால்,  கடைசி  நேரத்தில் ஜோகூர்  சுல்தான்  தலையிட்டதால்  அவருக்குத்  தண்டனை  ஒத்தி   வைக்கப்பட்டது. தண்டனை  ஒத்திவைக்கப்பட்ட  செய்தி  நேற்றிரவுதான்  தங்களுக்குத்  தெரிய  வந்ததாக  அவரின்  சகோதரர்  தாமோதரன்  கூறினார்.  “கடைசி  நேரத்தில்   கிடைத்த  செய்தியால்  எங்கள்  குடும்பமே  மிகுந்த   மகிழ்ச்சி …

பாலியல் உறவுமீதான ஆய்வைச் செய்தது நீலாயில் உள்ள ஒரு மருத்துவ…

நீலாய்  தொடக்கநிலைப்  பள்ளி  ஒன்றில்  பாலியல்  உறவுமீதான  ஆய்வைச்  செய்தது  அங்குள்ள  ஒரு  மருத்துவ  நிலையம்  என்று  நெகிரி  செம்பிலான்  கல்வித் துறை  கூறியது. அது  அந்த  ஆய்வை  நடத்தியது  தங்களுக்குத்  தெரியாது  என்று  மாநிலக்  கல்வி  இயக்குனர்   கல்சோம்  காலிட்  கூறியதாக  த  ஸ்டார்  அறிவித்துள்ளது.  “எங்களுக்கும் …

உயிருக்கு மிரட்டல் என தெரேசா கொக் போலீஸில் புகார்

சில  முஸ்லிம்  என்ஜிஓ-கள்  கோழிகளை  வெட்டி  அவற்றின்  இரத்தத்தைத்  தம்  உருவப்படம்  பொறிக்கப்பட்ட   பதாதை  மீது  பூசியதை  அடுத்து  தம்   பாதுகாப்புக்கு  மிரட்டல்  ஏற்பட்டிருப்பதாக  டிஏபி-இன்  சிபூத்தே  எம்பி  தெரேசா கொக்  போலீசிடம்   புகார்  செய்துள்ளார்.  தம்  மீது  ஆத்திரம்  உண்டாகும்படி  பேசியதுடன்  தம்  கன்னத்தில்  அறைவோருக்கு  ரிம500 …