ஏழைகள் மற்றும் சிறுபான்மையினருக்கான நீதியை அரசாங்கம் ஒருபோதும் விட்டுக்கொடுக்காது, எந்தவொரு இனக்குழு மக்களையும் ஒடுக்குவதை பொறுத்துக்கொள்ளாது என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் கூறினார். "சமீபத்தில் மூன்று இந்திய ஆண்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தை, ஒரு விசுவாசியாக, நான் ஏற்றுக்கொள்வது அல்லது மன்னிப்பது கடினம்" என்று அவர் இன்று மலேசிய…
நீதி, நியாயம், சமதர்மம் ஆகியவை வழி அமைதியை வளர்த்து சுபிட்சத்தை…
-சிலாங்கூர் மாநில மந்திரி புசார் காலிட் பின் இப்ராஹிம், நவம்பர் 1, 2013. வணக்கம். இவ்வினிய வேளையில் எல்லா மலேசியர்களுக்கும், குறிப்பாக இந்துக்களுக்கு, எனது தீபாவளி வாழ்த்துகளைக் கூறுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். மலேசிய இந்துக்களுக்கு தீபாவளி முக்கியப் பண்டிகையாகும். அறிவு, செழிப்பு, கல்வி, நீதி, தர்மம்,…
மூன்று இல்லாமைகளை அகற்றுவோம்; அமோகமாகத் தீபத்திருநாளை கொண்டாடுவோம்
-டாக்டர் சேவியர் ஜெயக்குமார், சிலாங்கூர் சட்டமன்ற உறுப்பினர், அக்டோபர் 30, 2013. அன்பான மலேசியர்கள் அனைவருக்கும் என் இனிய தீபாவளி வாழ்த்துகளைக் கூறிக்கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன். நமது இதிகாசங்கள் நமக்கு உணர்த்த முற்படும் அற்புதங்களுக்கு அளவே இல்லை. ஆனால் அவ்வப்போது வாழ்ந்த நம் முன்னோர்களும், நாமும் இதிகாசங்களில் உள்ளவைகளை புரிந்து…
கம்போங் ஹாக்கா: கைது செய்யப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டனர்
இன்று காலை மணி 11.30 லிருந்து நெகிரி செம்பிலான், மன்தின் ஹாக்கா கிராம மக்களின் வீடுகள் நில மேம்பாட்டாளரால் இடித்துத்தள்ளப்படுவதைத் தடுத்து நிறுத்தும் முயற்சியில் ஈடுபட்ட பிஎஸ்எம் தலைமைச் செயலாளர் எஸ். அருள்செல்வன், சுவாராம் செயல்முறை இயக்குனர் ஏ. நளினி ஆகியோருடன் டிஎபி நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களும்…
சீனப்பள்ளிகளுக்கு 2.25 மில்லியன்! மக்கள் பணத்தில் மக்களுக்கே லஞ்சமா?
-டாக்டர் சேவியர் ஜெயக்குமார், அக்டோபர் 31, 2013. மலேசியாவை முன்னேறிய நாடுகளின் பட்டியலில் சேர்க்கப் பாடுபடுவதாகக் கூறும் பிரதமர் நஜிப் மற்றும் அவரின் அமைச்சரவையிடமும் அதற்கான அணுகு முறைகள் அறவே இல்லை என்பதனை உணர்த்துகிறது கெடா சுங்கை லீமாவ் இடைத்தேர்தலில் அங்குள்ள சீனப்பள்ளிகளுக்கு 2.25 மில்லியன் நிதி ஒதுக்கீடு…
அன்வார்: என்றும் ஜிஎஸ்டி-க்கு எதிர்ப்புத் தெரிவித்ததில்லை
பொருள், சேவை வரி(ஜிஎஸ்டி)யைக் கொள்கை அளவில் என்றும் எதிர்த்ததில்லை என்று மாற்றரசுக் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் கூறினார். இன்னும் சொல்லப்போனால், அந்த வரி பயனான ஒன்று, வெளிப்படையான ஒன்று என்றே எப்போதும் கூறி வந்திருப்பதாக அவர் சொன்னார். ஆனால், அதை அரசாங்கத்தின் பற்றாக்குறை நிலையைக் குறைத்து, ஊழலை…
கம்போங் ஹாக்காவை இடித்துத்தள்ளிய அரசாங்கம் பிஎஸ்எம் அருள்செல்வனை கைது செய்தது
நெகிரி செம்பிலான், மன்திங் கம்போங் ஹாக்கா இடித்துத்தள்ளப்படுவதை தடுக்க முயன்ற பிஎஸ்எம் தலைமைச் செயலாளர் எஸ். அருள்செல்வன் மீண்டும் கைது செய்யப்பட்டார். இடித்துத்தள்ளுவதற்கு வசதியாக இன்று காலை மணி 11.30 அளவில் அந்த இடத்தை போலீஸ் சுற்றிவளைத்திருந்தனர். அப்போது போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்த பிஎஸ்எம் தலைமைச் செயலாளர் எஸ்.…
பெர்தாம் வெள்ளம்: பல ஆண்டுகளாகவே எச்சரிக்கப்பட்டு வந்தது
கேமரன் மலையில் சுல்தான் அபு பக்கார் அணைக்கட்டை ஆராய்ந்து வந்துள்ள ஆராய்ச்சியாளர்கள் பத்தாண்டுகளுக்கு முன்பிருந்தே அங்கு வெள்ளம் ஏற்படும் அபாயம் இருப்பது பற்றி எச்சரித்து வந்துள்ளனர். 1997-இல், மலாயாப் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், கேமரன் மலையில் காடுகள் பெருமளவு அழிக்கப்படுவது அணைக்கட்டின் வெள்ளத்தடுப்பு ஏற்பாடுகளைச் சீர்குலைத்து வருவதாக எச்சரித்தனர். மூன்றாண்டுகளுக்கு…
கெராக்கானும் டிஏபி போலவே மலாய்க்காரர்களுக்குக் குழி பறிக்கிறது
கெராக்கானும் டிஏபியைப் போன்றதுதான் என்று வருணித்த மலாய் வலச்சாரி அமைப்பான பெர்காசா, உள்ளுக்குள் சீன-இனவாதத்தை வைத்துக்கொண்டு வெளிவேடம் போடும் அக்கட்சி, மலேசியாவில் மலாய்க்காரர் மேலாதிக்கத்தையும் அரசியல் அதிகாரத்தையும் தகர்க்கும் இரகசிய திட்டத்தைக் கொண்டிருப்பதாக சாடியது. “மலாய்க்காரர்கள் முட்டாள்கள் அல்லர்”, என பெர்காசாவின் தகவல் தலைவர் ருஸ்லான் காசிம் கூறியதாக…
அரசுதொடர்பு நிறுவனத் தலைவர்களுக்கு கொளுத்த சம்பளம் தேவையா? டிவிட்டரில் கைரியும்…
டிஏபி எம்பி ஒங் கியான் மிங், தேவைக்கு அதிகமாகவே அரசுத்தொடர்பு நிறுவனங்களை அமைப்பதும் அவற்றின் தலைவர்களுக்கு கொளுத்த சம்பளம் கொடுக்கப்படுவதும் அவசியம்தானா என்று நேற்று கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு டிவிட்டரில் பதிலளித்த இளைஞர், விளையாட்டுத்துறை அமைச்சர் கைரி ஜமாலுடின்(இடம்), உயர்திறன் படைத்தவர்களை அரசுத்துறைகளுக்குக் கவர்ந்திழுக்க வேண்டியிருக்கிறது என்று…
சீனப் பள்ளிகளுக்கு ரிம2 மில்லியன்: முகைதின் ஒதுக்கீடு
திங்கள்கிழமை சுங்கை லிமாவ் இடைத் தேர்தலுக்கு முன்னதாக சீனச் சமூகத்தினரின் ஆதரவைப் பெறும் முயற்சிகளை பிஎன் தொடர்கிறது. இன்று துணைப் பிரதமர் முகைதின் யாசின், சுங்கை லிமாவ் சீனக் கல்வி நிதிக்கு ரிம200,000 வழங்கப்படும் என்றார். . சுங்கை கிரிங் பிஎன் நடவடிக்கை மையத்தில், பெரும்பாலும் சீனர்களைக் கொண்ட…
எல்லாக் குற்றங்களுக்கும் வெளிநாட்டுத் தொழிலாளர்கள்மீது பழி போடக் கூடாது
நாட்டில் நடக்கும் எல்லாக் குற்றங்களுக்குமே வெளிநாட்டவர்தான் காரணம் என்று ஒட்டுமொத்தமாக அவர்கள்மீது பழி போடக்கூடாது என்கிறார் உள்துறை அமைச்சர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி. கடும் குற்றங்களில் 10-இலிருந்து 15 விழுக்காடுவரைதான் வெளிநாட்டவர்களால் செய்யப்படுகின்றன என்றும் பெரும்பாலான குற்றங்களைப் புரிபவர்கள் மலேசியர்தான் என்றும் அஹ்மட் ஜாஹிட், இன்று மக்களவையில் கூறினார்.
நாளிதழ் வெளியிடுவதற்கான அனுமதி ஒரு சலுகைதான், உரிமையல்ல, ஒரே மலேசியா…
மலேசியாகினி இணையதள உரிமையாளர் எம்கினி டோட்கோம் செண். பெர்ஹாட்டின் நாளிதழ் வெளியிடுவதற்கான அனுமதி கோரிக்கை மீதான மேல்முறையீட்டு நீதிமன்ற விசாரணையில் வெளியிடுதலுக்கான அனுமதி ஒரு சலுகையே தவிர அது ஓர் உரிமையல்ல என்று அரசாங்கத் தரப்பு இன்று மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் கூறியது. நாளிதழ் வெளியிடுவதற்கு எம்கினி டோட்கோம் செய்திருந்த…
பிரசுர உரிமம் என்பது சலுகைதானே தவிர, உரிமை அல்ல: அரசுதரப்பில்…
மலேசியாகினி இணையத்தள உரிமையாளரான எம்கினி டோட்காம் சென்.பெர்ஹாட் பிரசுர உரிமத்துக்காக செய்த விண்ணப்பத்தை எதிர்க்கும் அரசாங்கம், பிரசுர உரிமம் என்பது சலுகைதானே தவிர, உரிமை அல்ல என்ற வாதத்தை முறையீட்டு நீதிமன்றத்தில் முன்வைத்தது. பேச்சுரிமை மீதான அரசமைப்பின் பிரிவு 10-இன்படி பிரசுர உரிமம் வழங்கப்படுவது ஓர் உரிமை என்று…
கவுன்சிலருக்கு நல்ல இடம் ஒதுக்கிக் கொடுக்கப்பட்டது: பிஸ்ஸா ஹட் விளக்கம்
பெட்டாலிங் ஜெயா கவுன்சிலர் அந்தோனி தனஞ்செயனுக்கு இடமில்லை என மிட் வேலி பிஸ்ஸா ஹட் உணவகம் தடைசெய்யவில்லை, மாறாக அவர் அமர்வதற்கு “வசதியான, விசாலமான” இடம் ஒதுக்கிக் கொடுக்கப்பட்டது என அந்த உணவகம் விளக்கமளித்துள்ளது. நேற்று “தொடர்பாடலில் ஏற்பட்ட தவறு” என்று குறிப்பிட்டு அதற்காக மன்னிப்பு கேட்டுக்கொண்ட அந்த…
பிரதமரே, உங்கள் வாழ்க்கை முறையை கொஞ்சம் மாற்றிக்கொள்ளுங்கள்!
பிரதமரை அவருடைய வாழ்க்கை முறையை மாற்றிகொள்ளுமாறு கேட்டுக்கொள்வது உலக நடப்புக்கு முரணானதோ, நியாயமற்றதோ அல்ல. பக்கத்தான் மாநில அரசாங்கத் தலைவர்கள் மக்களின் வரிப் பணத்தைக் கொண்டு ஆடம்பர வாழ்க்கை வாழவில்லை என்று பாஸ் இளஞர் பிரிவு தலைவர் ஒருவர் கூறுகிறார். பிரதமரின் அதிகாரத்துவ இல்லத்திற்கான மின்சாரக் கட்டணம் ரிம2.5…
எம்பி: மாடுவெட்டுதல் கல்வியின் ஒரு பகுதியாகும்
பள்ளிக்கூடங்களில் மாடுவெட்டுதல் என்பது முஸ்லிம் மாணவர்களின் கல்வியில் ஒரு பகுதியாகும் என பிஎன் எம்பி ஒருவர் கூறினார். அது இஸ்லாமியக் கல்வியில் ஒரு பகுதியாகும் என ஷாபுடின் யாஹ்யா (பிஎன் -தாசெக் குளுகோர்) நாடாளுமன்றத்தில் பட்ஜெட் விவாதத்தின்போது கூறினார். “அது மாடுகளை எப்படி முறைப்படி வெட்டுவது என்பதை விளக்கும்…
தொழில் செய்வதற்கு ஏற்ற நாடுகளின் தரவரிசைப் பட்டியலில் மலேசியாவுக்கு உயர்ந்த…
உலகப் பொருளகம், உலகின் 189 நாடுகளை ஆராய்ந்து தொழில்செய்வதற்கு ஏற்ற நாடுகள் என வரிசைப்படுத்தி வெளியிட்டிருக்கும் பட்டியலில் மலேசியா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா போன்ற வளர்ந்த பொருளாதாரங்களையும் முந்திக்கொண்டு 6-வது இடத்தைப் பிடித்துள்ளது. இதன்வழி சிங்கப்பூர், ஹாங்காங், நியு சிலாந்து ஆகிய நாடுகளின் வரிசையில் மலேசியாவும் இடம்பெறுகிறது என அனைத்துலக…
இட்ரிஸ் ஜாலா: பிரதமர்துறைக்கு மிகப் பெரிய நிதி ஒதுக்கீடு நியாயமானதே
அரசாங்கக் கொள்கைகளை வகுப்பதும் செயல்படுத்துவதும் பிரதமர் துறை(பிஎம்டி)தான் என்பதால் அதற்கு பட்ஜெட்டில் பெரும் நிதி ஒதுக்கப்படுகிறது. பிரதமர் துறையில் உள்ள பல்வேறு பிரிவுகளும் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குப் பொறுப்பாக உள்ளன என பிரதமர்துறை அமைச்சர் இட்ரிஸ் ஜாலா கூறியதாக உத்துசான் மலேசியா அறிவித்துள்ளது. “உதாரணத்துக்கு நாட்டின் முதலீட்டுச் செலவினம்…
செவிவழி கேட்டதை வைத்து மகாதிர் ‘பண அரசியல்’ எனக் கூறி…
அம்னோவில் பண அரசியல் இன்னமும் பரவலாக இருக்கிறது என டாக்டர் மகாதிர் கூறியிருப்பது பற்றிக் கருத்துரைத்த பிரதமர் துறை அமைச்சர் ஷஹிடான் காசிம், யாரோ சொன்னதைக் கேட்டு மகாதிர் அவ்வாறு சொல்லி இருக்கலாம் என்றார். “கையூட்டு கொடுப்பது கடினமான காரியம். 75,000 உறுப்பினர்களுக்குக் கையூட்டு கொடுக்க வேண்டியிருக்கும். யாரால்…
முகிரிஸ் பல்டி அடித்ததைத் தொடர்ந்து கெராக்கான் தேர்தல் பரப்புரைக்கு உதவும்
சுங்கை லிமாவ் இடைத் தேர்தலில். கெராக்கான் இளைஞர் பகுதி மதில்மேல் பூனை போல் இருக்கும் வாக்காளர்களைக் கவர்ந்திழுக்க கெடா மந்திரி புசாருக்கு உதவும். சுமார் 100 கெராக்கான் இளைஞர்கள், சுங்கை லிமாவ் சென்று, அங்கு“எந்தத் தரப்பிற்கு ஆதரவளிப்பது என்று முடிவெடுக்காதிருக்கும் வாக்காளர்களைக் கவரும்” நடவடிக்கையில் ஈடுபடுவார்கள் என கெராக்கான்…
மலேசியா நாடாளுமன்றம் பிரிட்டீஷ் காமன்ஸ் அவையைவிட மேலானது, காசிம்
பிரிட்டீஷ் காமன்ஸ் அவையைவிட மலேசிய நாடாளுமன்றம் மேலானது ஏனென்றால் "சொரசொரப்பற்ற விவாதங்கள்" நடத்தப்படுவதற்கான வசதிகள் தரப்பட்டுள்ளன என்று பிரதமர் துறை அமைச்சர் ஷகிடான் காசிம் கூறினார். நாடாளுமன்ற விவகாரங்களுக்கு பொறுப்பான ஷகிடான் நாடாளுமன்றத்தில் கேள்வி நேரத்தில் இதனைக் கூறினார். பிரிட்டீஷ் நாடாளுமன்றத்தில் "மேஜைகள் கூட இல்லை", என்றாரவர். "அவர்களது…
சீனர்களுக்கு உதவப் போவதாக முக்ரீஸ் இப்போது சூளுரைக்கிறார்
சீனப்பள்ளிகளுக்கு உதவமாட்டேன். சீனர்கள் பாரிசானை ஆதரிக்கிறார்கள் என்பதை அவர்கள் நிரூபிக்க வேண்டும் என்றெல்லாம் சீன சமூகத்திற்கு சவால் விட்ட கெடா மந்திரி புசார் முக்ரீஸ் மகாதிர் இப்போது வேறொரு தொனியில் அவர் அச்சமூகத்திற்கு உதவப் போவதாக உறுதியளித்தார். சுங்கை லிமாவ் டாலம், மசீச இடைத்தேர்தல் நடவடிக்கை மையத்தில் நடைபெற்ற…
என்ஆர்டி: போலி ஐசி வைத்துள்ள வெளிநாட்டவர் பாதுகாப்பு நிறுவனங்களில் வேலை…
பல பாதுகாப்பு நிறுவனங்கள் போலி அடையாள அட்டை(ஐசி) வைத்துள்ள வெளிநாட்டவர்களை வேலைக்கு வைத்திருப்பதைத் தேசிய பதிவுத்துறை (என்ஆர்டி) அடையாளம் கண்டிருக்கிறது. எனவே, போலி ஐசி வைத்துள்ள வெளிநாட்டவர், வங்கிகளின் பாதுகாப்புப் பிரிவுகளில் வேலை செய்வது தமக்கு ஆச்சரியமளிக்கவில்லை என என்ஆர்டி விசாரணை, அமலாக்க இயக்குனர் வான் சக்கரியா வான்…


