பக்காத்தான்: நெடுஞ்சாலை பராமரிப்பு நிறுவனங்களின் சலுகைகளை மறுஆய்வு செய்ய வேண்டும்

2014-இல் நெடுஞ்சாலை  கட்டண  உயர்வை  முடக்கிப்  போடுவது  ஒரு  தற்காலிக  நடவடிக்கைதான்.  அரசாங்கம்  சாலைப் பராமரிப்பு  நிறுவனங்களுக்குத்  தொடர்ந்து  இழப்பீடு  கொடுத்துக்  கொண்டிருக்க  முடியாது  என  பக்காத்தான்  ரக்யாட்  கூறியது. அதற்குப்  பதிலாக  அரசாங்கம்  அந்நிறுவனங்களுடன்  செய்துகொள்ளப்பட்ட  ஒப்பந்தங்களை  மறு ஆய்வு  செய்ய  வேண்டும்  என   அக்கூட்டணி …

தெரேசாவின் வீடியோவைப் பார்ப்பதைவிடவும் உருப்படியான வேலை இருக்கிறது

சிபூத்தே  எம்பி  தெரேசா  கொக்,  அவரது  சர்ச்சைக்குரிய  சீனப்  புத்தாண்டு  நையாண்டி  காணொளியைக்  காண  வருமாறு  விடுத்த  அழைப்பை   ஏற்க  மறுத்த  புறநகர்,  வட்டார  மேம்பாட்டு  அமைச்சர்  ஷாபி  அப்டால் “அதைவிடவும்  உருப்படியான  வேலை”  தமக்கு  உண்டு என்றார். ஷாபி,  தெரேசா கொக்கின்  காணொளி  லாஹாட்  டத்து-வில் பாதுகாப்புப் …

அழியா மை குறித்து புகார் செய்த விமானிமீது வழக்கு

கடந்த  ஆண்டு  13வது  பொதுத்  தேர்தலில்  பயன்படுத்தப்பட்ட  அழியா  மை  குறித்து  புகார்  செய்ததற்காக அரச மலேசிய  ஆகாயப்  படையின்  விமானி  ஒருவர்  நாளை  இராணுவ  நீதிமன்றத்தில்  விசாரணையை  எதிர்நோக்கியுள்ளார். அவர்மீது  ஏழு  குற்றச்சாட்டுகள்  சுமத்தப்பட்டுள்ளன. நாளை  விசாரணைக்கு  வரவேண்டும்  என்று  நேற்று  இராணுவ  நீதிமன்றத்திடமிருந்து  உத்தரவு  வந்ததாக …

பக்காத்தான் தேசிய நிலையில் இணக்கம்காண விரும்புவது ஒற்றுமை அரசாங்கம் அமைப்பதற்கு…

தேசிய  விவகாரங்கள்  பற்றி  இரு--தரப்பு  கலந்துரையாடல் நடத்த  பக்காத்தான்  ரக்யாட்  திரும்பத்  திரும்ப  அறைகூவல்  விடுப்பதை  வைத்து  அது  ஒற்றுமை  அரசாங்கத்துக்கு  அடிபோடுவதாக  நினைக்கக்  கூடாது  என  பிகேஆர்  நடப்பில்  தலைவர்  அன்வார்  இப்ராகிம்  வலியுறுத்தியுள்ளார்.  “பிஎன்  இதற்கு ஒத்துக்கொள்ளாது  என்பதையும்  சில (அம்னோ)  தரப்புகள்  இதை  எதிர்க்கும் …

கீர் தோயோவின் மேல்முறையீடு காலவரையின்றி ஒத்திவைப்பு

இன்று  கூட்டரசு  நீதிமன்றத்தில்  விசாரிக்கப்படவிருந்த  முன்னாள்  சிலாங்கூரின்  முன்னாள்  மந்திரி  புசார்  டாக்டர்  முகம்மட்  கீர்   தோயோவின்  மேல்முறையீடு  காலவரையின்றி  ஒத்தி  வைக்கப்பட்டது.  2011-இல்,  பதவியில்  இருந்தபோது  அவர்  இரண்டு  துண்டு  நிலங்களையும்  ஒரு  பங்களாவையும்  வாங்கியதில்   ஊழல்  நிகழ்ந்திருப்பதாக  ஷா ஆலம் உயர் நீதிமன்றம்  வழங்கிய  தீர்ப்பை …

கேஎல்ஐஏ2 பாதுகாப்புச் சோதனையில் தேறாதது என்? அமைச்சு விளக்க வேண்டும்

கேஎல்ஐஏ 2 பாதுகாப்புச்  சோதனைகளில்  தேறாமல்  போனதால்  அது  திறக்கப்படுவது  மேலும்  தாமதமடைந்துள்ளது.  இதற்கான  காரணத்தை  இடைக்காலப்  போக்குவரத்து  அமைச்சர்  ஹிஷாமுடின்  உசேன்  உடனடியாக  விளக்க  வேண்டும்  என  பிகேஆர்  லெம்பா  பந்தாய்  எம்பி  நுருல்  இஸ்ஸா  அன்வார்  வலியுறுத்தினார். அந்த  விமான  முனையம்  ஜனவரி  31-க்குள்  தகுதிச் …

பிகேஎன்எஸ்: பணியாளர்கள் அதிகப்படியாக இருந்ததால் ஒப்பந்தப் பணியாளர்கள் நிறுத்தப்பட்டனர்

20 ஒப்பந்தப்  பணியாளர்கள்  நீக்கப்பட்டதில்  வேலை  ஒப்பந்தமீறல்  எதுவும்  இல்லை  என பிகேஎன்எஸ் ஹோல்டிங்  கூறியுள்ளது. பணியாளர்கள்  எண்ணிக்கை  மிகையாக  இருந்ததால்  அதைத்  “திருத்தி  அமைக்கும்  நடவடிக்கையாக”  அவர்களின்  ஒப்ந்தங்கள் முடிவுக்குக்  கொண்டுவரப்பட்டன  என  பிகேஎன்எஸ்  ஓர்  அறிக்கையில் விளக்கமளித்துள்ளது. “அவர்களிடமுள்ள  அதே  திறமையும்  அனுபவமும்  பிகேஎன்எஸ்  நிரந்தரப் …

இது ஒன்றும் குந்தா கிந்தே நாடல்ல: பிகேஎன்எஸ்-ஸைச் சாடியது எம்டியுசி

பிகேஎன்எஸ்  ஒப்பந்தப்  பணியாளர்கள்  24-நேர  அறிவிக்கை  கொடுத்து  பணிநீக்கம்  செய்யப்பட்டது  ‘ரூட்ஸ் (வேர்கள்)’ நாவலில்     அடிமைகளுக்கு   இழைக்கப்படும்   கொடூரங்களை  நினைவுபடுத்துகிறது. பிகேஎன்எஸ்  செய்கை   குறித்துக்  கருத்துரைத்த   மலேசிய  தொழிற்சங்க  காங்கிரஸின்  துணைத்  தலைவர்  அப்துல்லா  சானி  அப்துல்  இவ்வாறு  கூறினார். “இது  குந்தா  கிந்தே (அந்நாவலின்  முக்கிய  கதாபாத்திரத்தின் …

அல்லாஹ்’ விவகாரம் தொடர்பில் செய்திகள் போடுவதை நிறுத்துமாறு ஹெரால்ட் கேட்டுக்கொள்ளப்பட்டது

அரசாங்கம்  ‘அல்லாஹ்’  என்னும்  சொல்லைப்  பயன்படுத்துவது  மீதான  நிதிமன்ற  வழக்கு  பற்றியும்  முஸ்லிம்-அல்லாதார்  அச்சொல்லைப்  பயன்படுத்துவதின்  தொடர்பில்  எழுந்துள்ள  சர்ச்சை  பற்றியும்  செய்திகள்  வெளியிடுவதை  நிறுத்திக்கொள்ளுமாறு  கத்தோலிக்க  வார  இதழான  த  ஹெரால்டைக்  “கேட்டுக்கொண்டிருக்கிறது”. ஹெரால்ட்,  மற்ற  இடங்களில்  மலேசியாகினி   போன்ற  இணையச்  செய்தித்தளங்களில்  இடம்பெறும்  கட்டுரைகளைத்  தனது …

காஜாங் தேர்தலால் இசியின் தொகுதிகள் திருத்தி அமைக்கும் வேலை தடைப்பட்டது

தேர்தல்  தேர்தல்  ஆணையம் (இசி)  தொகுதிகளைத்  திருத்தி  அமைக்கும்  பணியில்  ஈடுபட்டிருக்கும்  வேளையில்  காஜாங்  இடைத்  தேர்தல்  நடப்பது  அதன்  பணிக்கு  இடையூறாக  அமைந்துள்ளது. பிகேஆரின்  லீ  சின்  சே  ஜனவரி  27-இல்  சட்டமன்ற  உறுப்பினர்  பதவியிலிருந்து  விலகியது  எதிர்பாராத  ஒன்று  என்று  கூறிய  இசி  தலைவர்   அப்துல் …

மார்ச் 23-இல் காஜாங் இடைத் தேர்தல்

காஜாங்  இடைத்  தேர்தல்  மார்ச்  23-இல்  நடைபெறும்  எனத்  தேர்தல்  ஆணையம் இன்று  அறிவித்தது. அதற்கான  வேட்பாளர்  நியமன  நாள்  மார்ச்  11. எனவே,  தேர்தல்  பரப்புரை  செய்வதற்கு  12 நாள்  அவகாசம்  கிடைக்கும்.     இதுவே  இவ்வாண்டில்  நடைபெறும்  முதலாவது  இடைத் தேர்தல்  ஆகும். இதில்  சிலாங்கூர்  சட்டமன்றத்தில் …

ஓய்வு பெறப் போகிறாரா தயிப் முகம்மட்?

33 ஆண்டுகளாக  சரவாக்  முதலமைச்சராக  இருந்துவரும்  அப்துல்  தயிப்  முகம்மட்  பதவி  விலகுவது  பற்றியும்  அரசியலிலிருந்து  ஓய்வு  பெறப்போவதையும்  வரும்  சனிக்கிழமை  பிபிபி  கட்சிக்  கூட்டத்தில்  அறிவிப்பார்  என  எதிர்பார்க்கப்படுகிறது.  ஞாயிற்றுக்கிழமை  பிஎன்  எம்பி- களுடனும்  சட்டமன்ற  உறுப்பினர்களுடனும்  சந்திப்பு  நடத்தியதை  அடுத்து  இம்முடிவு  எடுக்கப்பட்டது  எனப்  பெயர்…

சிலாங்கூரைப் பாதுகாக்க அன்வார் தேவை

சிலாங்கூரில்  கடந்த  சில  மாதங்களாக  பிஎன்  கடுமையான  அரசியல்  தாக்குதல்களை  நடத்தி  வருவதால்  அதைக்  காப்பதற்கு  பிகேஆர்  நடப்பில்  தலைவர் அன்வார்  இப்ராகிமின்  சேவை  மிகவும்  தேவைப்படுகிறது  என  சிலாங்கூர்  சட்டமன்றத்  துணைத்  தலைவர்  நிக்  நஸ்மி  நிக்  அஹ்மட்  கூறினார். சிலாங்கூரின்  பொருளாதார  ஆலோசகராக  உள்ள  அன்வார், …

லீ குவான் இயு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்

தொற்று நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள சிங்கப்பூர் முன்னாள் பிரதமர் லீ குவான் இயு தற்போது குணமடைந்து வருகிறார். காய்ச்சல் மற்றும் கடுமையான இருமலால் பாதிக்கப்பட்டுள்ள 90 வயதான லீ குவான் இயு கடந்த ஞாயிற்றுக்கிழமையிலிருந்து சிங்கப்பூர் பொதுமருத்துவமனையில் இருந்து வருவதாக உள்ளூர் சிங்கப்பூர் டெலிவிசன் சேனல் நியுஏசியா…

எம்ஏசிசி-க்கு வழக்கு தொடரும் அதிகாரம் தேவை

முன்னாள்  அமைச்சர்  ஒருவரின்  முன்னாள்  உதவியாளர்கள்  இருவர்மீது  1Azam திட்டம்  தொடர்பில்   வழக்குத்  தொடராமல்  சட்டத்துறைத்  தலைவர்  தாமதப்படுத்தி  வருவது  மலேசிய  ஊழல்-தடுப்பு  ஆணையத்துக்கு(எம்ஏசிசி)  வழக்கு  தொடரும்  அதிகாரம்  தேவை  என்பதை  உறுதிப்படுத்துகிறது. அவ்விருவரும்  நீதிமன்றத்தில்  நிறுத்தப்படுவர்  என்று  எம்ஏசிசி  கடந்த  வாரம்  நம்பிக்கையுடன்  அறிவித்திருந்தது,  ஆனால்,  சட்டத்துறைத் …

கேசவனின் கட்சி விலகல் கடிதம் போலியானது

ஹுத்தான்  மெலிந்தாங்  சட்டமன்ற  உறுப்பினர்  எஸ்.கேசவன்  கட்சியைவிட்டு   விலகினார்  என்று  கூறப்படுவதை   பிகேஆர்  மறுத்துள்ளது. “கேசவனின்  விளக்கத்தைக்  கேட்ட  பின்னர்,  அவர்  அக்கடிதத்தை  அனுப்பவில்லை  என்பது  உறுதியாகி  விட்டது.  அவர்  கட்சியிலிருந்து  விலகவில்லை”, என  தொடர்பு  இயக்குனர்  பாஃமி  பாட்சில்  இன்று  ஓர்  அறிக்கையில்  கூறினார். அது  ஒரு …

காஜாங் வேட்பாளரை பிஎன் இன்னும் முடிவு செய்யவில்லை

காஜாங்  இடைத்  தேர்தலில்  போட்டியிடப்போவது  மசீசா-வா,  அம்னோ-வா?  இக்  கேள்வியை  பிஎன்  துணைத்  தலைவர்  முகைதின்  யாசினிடம்  கேட்டதற்கு  அவர்  அதற்குப்  பதிலளிப்பதைத்  தவிர்த்தார். “அது  மசீசா-வுக்குரிய  தொகுதிதான். பல்வேறு  கருத்துக்கள்  தெரிவிக்கப்பட்டிருந்தாலும்   மசீச  தலைவருடனும்  மற்ற  , பிஎன்  பங்காளிக்  கட்சிகளுடனும்  கலந்து  பேசிய  பின்னரே  முடிவு …

சீனப் புத்தாண்டு காணொளியால் எரிச்சலடைந்திருக்கிறார் ஷபரி சிக்

எதிரணி  எம்பி  தெரேசா  கொக்  நையாண்டி  செய்யும்  நோக்கத்தில்  இணையத்தில்;  பதிவேற்றம்  செய்திருந்த  சீனப்புத்தாண்டு  காணொளி  “எரிச்சலுண்டாகுவதாக”க்  கூறிய  தொடர்பு, பல்லூடக  அமைச்சர்  ஷபரி  சிக்,  அது  பொறுப்பான  தலைவர்  செய்யும்  வேலை  அல்ல  என்றார். அதைக்  கண்டு  பல  தரப்பினர்  ஆத்திரமடைந்துள்ளனர்  என்றாரவர். “அதைப்  பார்த்தால் எரிச்சல் …

பாஸ் இளைஞர் பகுதி காஜாங்கில் அன்வாரை ஆதரிக்கும் ஆனால்……..

அன்வார்   இப்ராகிம்  சிலாங்கூர்  மந்திரி  புசார்  ஆவதை  பக்காத்தான்  ரக்யாட்டில்  எல்லோருமே   ஆதரிப்பதாகக்  கூறுவதற்கில்லை. குறிப்பாக  பாஸ்  இளைஞர்  பகுதிக்கு  அதில்  உடன்பாடு  இருப்பதாகத்  தெரியவில்லை.   காஜாங்  இடைத் தேர்தலில்  பிகேஆர்  தலைவரை  ஆதரிப்பதை  வைத்து  அவர்   மந்திரி  புசார்  ஆவதையும்  தாங்கள்  ஆதரிப்பதாக  யாரும்  நினைத்துவிடக்கூடாது  என …

தூருன் தலைவரை ‘வில்லனாக’ சித்திரித்துக் காட்டுகிறது சிலாங்கூர் பிடிஎன்

அதிருப்தியை   வெளிப்படையாகக்  காட்டியதற்காக  சமூக  ஆர்வலரான  முகம்மட்  அஸான்  சபாரை  தேசிய  குடிமைப்  பிரிவு (பிடிஎன்) “நன்றி  கெட்டவராக” கருதுகிறது.  சிலாங்கூர்  பிடிஎன்  அதிகாரிகள்  மாரா  உதவிச்  சம்பளம்  பெற்ற  மாணவர்களுக்காக  நடத்தும்  விளக்கக்  கூட்டங்களில்  தம்  நிழல்படத்தைக்  காண்பித்து   உதவிச்  சம்பளம்  பெறும்  மாணவர்கள்  அரசாங்கத்தை  எதிர்க்கக் …

அன்வார்: சொங் வேயை எதிர்க்க என்னால் முடியாது

எதிரணித்  தலைவர்  அன்வார்  இப்ராகிம்,  காஜாங்  இடைத் தேர்தலில்  லீ  சொங்  வே  போட்டியிட்டால்  தமக்குத்  தோல்வி  உறுதி  என்று  குறிப்பிட்டார். பெட்மிண்டன்  ஆட்டத்தில்  உலகின்  முதல்தர  ஆட்டக்காரரான  அவருக்குள்ள  செல்வாக்கு  என்ன,  புகழ்  என்ன,  அவரை  எதிர்த்துத்  தாக்குப்  பிடிக்க  முடியுமா  என்றவர்  வேடிக்கையாககக்  குறிப்பிட்டார். “லீ …

அன்வார்: காலிட்-அஸ்மின் “பேரம்” எதுவுமே கிடையாது

  சர்சைக்குள்ளாகியிருக்கும் "காஜாங் நகர்வு" திட்டத்தை சிலாங்கூர் மந்திரி புசார் காலிட் இப்ராகிம் ஏற்றுக்கொண்ட போது அவர் நிபந்தனை எதுவும் விதிக்கவில்லை என்று பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிம் கூறினார். ஆகவே, சிலாங்கூர் பிகேஆர் தலைவர் அஸ்மின் அலி அவரது சிலாங்கூர் மாநில சட்டமன்ற புக்கிட் அந்தாராபங்சா…

இசி: அவதூறு கூறும் பரப்புரைகளைத் தடுக்க நடப்பு விதிகளே போதுமானவை

பரப்புரைகள்  எப்படி  இருக்க  வேண்டும்  என்பதை  நடப்பு விதிகள்  தெளிவாகவே  எடுத்துரைக்கின்றன.  “செக்ஸ்  விவகாரங்களைச் சொல்லிக்  களங்கப்படுத்தும்” பரப்புரையில் அம்னோ  ஈடுபடுவதைத்  தடுக்க  அவை  போதுமானவை. தேர்தலின்போது  கடைப்பிடிக்க  வேண்டிய  ஒழுக்கக்  கோட்பாடுகள்  பற்றி  அரசியல்  கட்சிகளுக்கு  மீண்டும்  மீண்டும்  தெரிவிக்கப்பட்டு  வந்திருப்பதாக  தேர்தல்  ஆணைய(இசி)த்  தலைவர்  அப்துல் …