தேவயானி வெளியேற்றம்- இந்தியா பதிலடி

இந்தியாவுக்குத் திரும்பிக் கொண்டிருக்கும் தேவயானி கோபர்கடே -- இந்திய அமெரிக்க உறவுகளில் நெருக்கடி விலகியது ?   இந்தியத் துணைத் தூதர் தேவயானி, அமெரிக்காவை விட்டு வெளியேற்றப்பட்டதற்குப் பதிலடியாக, இந்தியா , டில்லியில் உள்ள அமெரிக்கத் தூதரகத்திலிருந்து ஒரு அதிகாரியை வெளியேற உத்தரவிட்டிருக்கிறது. இது குறித்த மேலும் தகவல்கள்…

அமெரிக்கா- இந்தியா நாடுகளிடையே ராஜதந்திர மோதல்!

இந்திய துணைத் தூதர் தேவயானி கோப்ரகடே மீதான விசா மோசடி வழக்கு விவகாரத்தில் அமெரிக்க அதிகாரிகளுக்கிடையே கருத்து மோதல் நிலவுவதாகத் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக ‘தி வாஷிங்டன் போஸ்ட்’ நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது: “தேவயானி மீதான விசா மோசடி வழக்கு, அமெரிக்கா, இந்தியாவுக்கு இடையேயான உறவை கடுமையாக…

ஊழலுக்கு எதிரான ஹெல்ப்லைன்: 7 மணி நேரத்தில் 4000 அழைப்புகள்

தில்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் அறிவித்துள்ள ஊழலுக்கு எதிரான ஹெல்ப்லைனுக்கு 7 மணி நேரத்தில் 4000 அழைப்புகள் வந்துள்ளதாக அப்பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை 011-273571 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு லஞ்சம் மற்றும் ஊழலுக்கு எதிராக…

சோலார் பம்ப்செட், சோலார் சைக்கிள் கண்டுபிடித்த தமிழர்

தமிழ்நாட்டில் சோலார் பம்ப்செட், சோலார் சைக்கிள் ஆகியவற்றை பொறியியல் மாணவர் ஒருவர் கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளார். திருவண்ணாமலை மாவட்டம் திருவள்ளுவர் பொறியியல் கல்லூரியில் படிக்கும் மாணவர் ராஜேஷ் சுட்டெரிக்கும் சூரியனின் ஒளியைத் தன் விருப்பத்திற்கு மாற்றி இளம் வயதிலேயே சோலார் பம்ப்செட்,சோலார் சைக்கிள் ஆகியவற்றைக் கண்டுப்பிடித்து சாதனைப் புரிந்துள்ளார்.…

இலங்கை – இந்திய மீனவர்களை பரஸ்பரம் பரிமாற்றிக் கொள்ள ஆலோசனை!

இலங்கையுடன் பரஸ்பர இணக்கப்பாட்டின் கீழ், இரண்டு நாடுகளிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ள மீனவர்களை பறிமாற்றிக் கொள்வது தொடர்பில் இந்திய மத்திய அரசாங்கம் ஆலோசித்து வருகிறது. இது தொடர்பில் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு, வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்சித் தெரியப்படுத்தி இருப்பதாக அதன் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார். தமிழகத்தைச் சேர்ந்த…

ஐதராபாத்தில் சோனியாவுக்கு கோயில் ; 500 கிலோ வெள்ளியில் ‘அம்மன்’…

ஐதராபாத்: ஐதராபாத்தில் சோனியாவுக்கு கோயில் அமைக்கவிருப்பதாக இங்குள்ள காங் எம்.எல்.ஏ., ஒருவர் ஏற்பாடுகள் செய்து வருகிறார். தெலுங்கானா அமைப்பதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இவரது சொந்த செலவில் தெலுங்குத்தாய் போன்று அம்மன் உருவில் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. இவருக்கு சொந்தமான 9 ஏக்கர் நிலத்தில் கோயில் கட்டவுள்ளதாகவும் கூறியுள்ளார். 9…

லஞ்சப் புகாருக்கு “ஹெல்ப் லைன்’

அரசுத் துறைகளில் நிலவும் ஊழலை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில், லஞ்சம், ஊழல் தொடர்பான புகார்களுக்கு 011-27357169 என்ற "ஹெல்ப் லைன்' தொலைபேசி எண் தில்லியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதை தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் புதன்கிழமை அறிவித்தார். இது தொடர்பாக தில்லி தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் அவர்…

பட்டினி சாவு கிராமத்திற்கு சென்ற முதல்வர்

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அம்லாசோல் என்ற கிராமத்திற்கு திடீரென்று சென்று பார்வையளித்துள்ளார். முதல்வர் மம்தா பானர்ஜி, மேற்கு மிட்னாபூரில் ஒரு பேரணியில் கலந்து கொள்ள வந்திருந்தார். பேரணி முடிந்து அம்லாசோல் கிராமத்திற்கு திடீரென வருகை புரிந்தார். இக்கிராமத்தில் தான் இடதுசாரிகள் ஆட்சியில் 2004ம் ஆண்டு பட்டினியால்…

இலங்கையின் கரையில் இந்தியா எந்தநேரம் என்றாலும் படைகளை இறக்கலாம்?

இந்திய விமானப்படைக்காக புதிதாக வாங்கப்பட்ட போயிங்கின் ராட்சத சைஸ் விமானம் C- 17, தஞ்சாவூர் விமானப்படை தளத்துக்கு வந்திறங்கியுள்ளது. அதிக எடை கொண்டு செல்லக்கூடிய இந்த C- 17 விமானத்தை, ராணுவ வட்டாரங்களில் குளோப்மாஸ்டர் III என்று அழைப்பார்கள். இந்திய விமானப்படையின் புது வரவான இந்த ரக விமானம்,…

மீனவர் பிரச்சினையை சுய அரசியலுக்காக பயன்படுத்தும் ஜெயலலிதா: இந்தியா டுடே…

இலங்கை கடற்படையால், அத்துமீறி நுழையும் மீனவர்கள் கைது செய்யப்படுதலையும், மீனவர் பிரச்சினையையும் தமிழக முதல்வர் ஜெயலலிதா தமது சுய அரசியலுக்காக பயன்படுத்துவதாக இந்தியா டுடே சஞ்சிகை குற்றம் சுமத்தியுள்ளது. தமிழக மீனவர்களின் பிரச்சினையை அடுத்த கட்ட தேர்தல் நடவடிக்கையாக, வாக்குகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் ஜெயலலிதா பயன்படுத்துகிறார். ஆனால், பிரச்சினைகளை…

வருமான வரியை ரத்துசெய்வது முட்டாள்தனமானது

வருமான வரியை ரத்து செய்வதால் கேடுதான் ஏற்படும் என்று இந்திய அரசின் ஒய்வுபெற்ற வருவாய்த் துறைச் செயலர் எம் ஆர் சிவராமன் தெரிவித்துள்ளார். பொருட்களை வாங்கி-விற்கும் வர்த்தக செயற்பாடுகளின்போது பரிவர்த்தனை வரி விதிக்கும் நடைமுறையை கொண்டு வந்தால், பலர் பொருட்களின் விலையை குறைத்து மதிப்பிட்டோ அல்லது வரி விதிப்பில்…

டில்லியில் ஆம் ஆத்மி படு சுறு, சுறு ; ஒரே…

புதுடில்லி: டில்லியில் புதிய அரசு பொறுப்பேற்றது முதல் படு வேகமான செயல்பாடுகளில் இறங்கியுள்ளது. முதல்வராக பொறுப்பேற்றுள்ள அரவிந்த் கெஜ்ரிவால் ஊழலை ஒழிக்க கடுமையாக பாடுபடுவேன் என உறுதியுடன் களம் இறங்கியிருக்கிறார். இதன் முதல் கட்டமாக குடிநீர் விநியோக துறையில் ஒரே நாளில் 800 ஊழியர்களை இட மாற்றம் செய்து…

கெஜ்ரிவாலிடம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்: திக்விஜய்சிங் திடீர் வேண்டுகோள்

பெங்களூரூ: அரசியல்கட்சிகளும் அதன் தலைவர்களும் ஆம் ஆத்மி கட்சியியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் டில்லி முதல்வரிடம் இருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என காங்.,மூத்த தலைவர் திக்விஜய்சிங் திடீர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.மேலும் அரவிந்த் கெஜ்ரிவாலையும் பாராட்டியுள்ளார். மேலும் வீடுகளில் உட்கார்ந்து கொண்டு விமர்சித்துவருபவர்களும் அரசியலுக்கு வரவேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள்…

தாய்மொழி பேசுபவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் தமிழுக்கு 18வது இடம்

உலக அளவில் தாய்மொழி பேசுபவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் தமிழுக்கு 18வது இடம் கிடைத்துள்ளது என்று தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அரசுச் செயலாளர் முனைவர் மூ.இராசாராம் கூறினார். மதுரை  உலகத் தமிழ்ச் சங்கமும், மைசூர் இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனமும் இணைந்து தமிழ் இணையத் தேசியக் கருத்தரங்கத்தை சென்னை,…

காஷ்மீர் பண்டிட்கள்: அரசு நடவடிக்கை வெற்றி பெறவில்லை: ஒமர் அப்துல்லா…

ஜம்மு: காஷ்மீரில் இருந்து வெளியேறிய பண்டிட் குடும்பங்கள் மீண்டும் அவரவர் வீடு திரும்புவதற்கு அரசு எடுத்த நடவடிக்கை வெற்றி பெறவில்லை என்று ஜம்மு காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா வேதனை தெரிவித்தார். ஜம்முவில் உள்ள பட்டா போரியில் நடந்த அகில இந்திய இளைஞர் காஷ்மீரி சமாஜ் மாநாட்டில் கலந்து…

ஊழல் விஷயத்தில் சமரசத்துக்கு இடமில்லை : கெஜ்ரிவால்

புதுடெல்லி: ‘‘ஊழல் விஷயத்தில் சமரசத்துக்கு இடமில்லை. யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார். டெல்லியில் முதல்வர் கெஜ்ரிவால் தலைமையில் நடந்த ஆம் ஆத்மி கட்சியின் 2 நாள் தேசிய செயற்குழு கூட்டம் நேற்று நிறைவடைந்தது. அதன்பின் அவர் அளித்த பேட்டி: டெல்லி…

தமிழகத்தில் “ஆம் ஆத்மி’ போட்டி

வரும் மக்களவைத் பொதுத் தேர்தலில் தமிழகத்தில் குறிப்பிட்ட சில தொகுதிகளில் போட்டியிட ஆம் ஆத்மி கட்சி முடிவு செய்துள்ளது. இத் தகவலை அக் கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் யோகேந்திர யாதவ் தெரிவித்தார். மக்களவைத் தேர்தல், தற்போதைய அரசியல் சூழ்நிலை ஆகியவை குறித்து விவாதிக்க ஆம் ஆத்மி கட்சியின்…

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ஜி.எஸ்.எல்.வி.-டி5

ஜி.எஸ்.எல்.வி-டி5 ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவண் விண்வெளி மையத்திலிருந்து ஞாயிற்றுக்கிழமை மாலை 4.18 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட கிரையோஜெனிக் என்ஜின் தொழில்நுட்பம் மூலம் இந்த ராக்கெட் ஏவப்பட்டதால் இது இந்திய விண்வெளி வரலாற்றில் புதிய சாதனையாக கருதப்படுகிறது. இருபது ஆண்டுகள் உழைப்புக்குப் பிறகு…

பொறுமை காக்க மாட்டோம் என்று இலங்கை அரசை மத்திய அரசு…

இன்னொரு முறை தமிழக மீனவர்களைத் தொட்டால் பொறுமை காக்க மாட்டோம் என்று இலங்கை அரசை மத்திய அரசு உடனே எச்சரிக்க வேண்டும் என்று கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக அக் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– இலங்கைத் தமிழர்கள்…

பெரிய வீட்டை நிராகரித்த கேஜ்ரிவால்

சர்ச்சை எழுத்ததை அடுத்து 800 சதுர மீட்டர்களுக்கும் அதிகமான பரப்பில் பெரிய 5 அறைகளைக் கொண்ட, இருமாடி அதிகாரபூர்வ இல்லத்தில் குடிபுகும் திட்டத்தை இந்திய தலைநகர் டில்லியின் புதிய முதலமைச்சர் கைவிட்டுள்ளார். தனக்காக நிர்வாகம் ஒதுக்கிய பெரிய ஆடம்பர அதிகாரபூர்வ வதிவிடத்தை தனது ஆதரவாளர்கள் எதிர்த்ததாக அரவிந்த் கேஜ்ரிவால்…

இந்திய கற்சூளைகள் தரும் ”இரத்தக் கற்கள்”

இந்தியாவின் செங்கற்சூளை தொழிற்துறையில் நிலவும் மனித அவலத்தை ஒழிக்க நிறையச் செய்ய வேண்டியுள்ளதாக செயற்பாட்டாளர்கள் கூறுகிறார்கள். இந்தியாவின் எழுச்சி கண்டுவருகின்ற நிர்மாணத்துறைக்கு கற்களை விநியோகிக்கின்ற இந்த தொழிற்துறையை பிரிட்டன் மற்றும் ஏனைய பல்தேசியக் கம்பனிகளும் பயன்படுத்துகின்றன. வேகமாக வளருகின்ற இந்தியப் பொருளாதாரத்தின் மிகவும் முக்கிய பகுதியாகவும் இந்தத் தொழிற்துறை…

வாழை விளைச்சலில் உலக சாதனை படைத்த தேனி விவசாயிகள்

வாழை சாகுபடியில் தேனி மாவட்ட விவசாயிகள் உலக சாதனை படைத்துள்ளனர். தேனி மாவட்டத்தில் தற்போது 8 ஆயிரம் ஹெக்டேரில் வாழை சாகுபடி நடக்கிறது. ஜி 9, நேந்திரன் ரகங்களில் திசு வாழைகள் சாகுபடி அதிகளவில் நடக்கிறது. சராசரியாக 1 ஹெக்டேருக்கு 120 டன் வாழை விளைச்சல் எடுத்துள்ளனர். மிகவும்…

மகிந்த ராஜபக்சவின் உருவ பொம்மையை தீவைத்து கொளுத்தி சென்னையில் ஆர்ப்பாட்டம்!

இலங்கை கடற்படையால் தொடர்ந்து தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை கண்டித்தும் தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் இன்று வெள்ளிக்கிழமை சென்னையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதன்போது, இலங்கை அதிபர் ராஜபக்சவின் உருவ பொம்மையை தீவைத்து கொளுத்தினார்கள். இலங்கை கடற்படையால் தொடர்ந்து தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை கண்டித்தும் இலங்கை சிறையில் உள்ள தமிழக…