சோனியாகாந்தி பாதுகாப்புக்கு பெண் கமாண்டோ படை

வி.வி.ஐ.பி.க்களின் பாதுகாப்பை சிறப்புப் பாதுகாப்பு படையைச் சேர்ந்த கமாண்டோ வீரர்கள் மேற்கொண்டு வருகிறார்கள். இவர்களில் தற்போது 35 பெண் கமாண்டோக்களே உள்ளனர். இவர்கள் முதல்- அமைச்சர் ஜெயலலிதா, உத்தரபிரதேச முன்னாள் முதல்-மந்திரி மாயாவதி பாதுகாப்பு பணியில் ஈடு படுத்தப்பட்டுள்ளனர். பாராளுமன்றத்துக்கு விரைவில் தேர்தல் நடை பெற உள்ளதால் வி.வி.ஐ.…

இந்திய ரயில்வே அமைச்சர் பதவி விலகினார்

ஊழல் குற்றச்சாட்டுகளை அடுத்து இந்திய ரயில்வே அமைச்சர் ராஜினாமா செய்துள்ளார். ரயில்வே துறையில்இடமாற்றம் செய்ய ஒருவர் கொடுத்த பணத்தை வாங்கிய தனது மருமகன் மத்திய புலனாய்வுத் துறையால் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்திய ரயில்வே அமைச்சர் பவன் குமார் பன்சல் ராஜினாமா செய்துள்ளார். பன்சல் ராஜினாமா செய்ய வேண்டும்…

கூடங்குளம் அணுமின் நிலையம் இயங்க இந்திய உச்சநீதிமன்றம் அனுமதி

கூடங்குளம் அணுமின்நிலையம் செயல்படுவதற்கு அனுமதி அளித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. மேலும் Read More

பாகிஸ்தான் சிறையில் தாக்குதலுக்கு உள்ளான சரப்ஜித் சிங் மரணமானார்

பாகிஸ்தான் சிறையில் கைதிகளால் தாக்கப்பட்ட நிலையில் மரணமான சரப்ஜித் சிங்கின் கொலைக்கு காரணமானவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் அவர்கள் கேட்டுக்கொண்டிருக்கிறார். 1990 ஆம் ஆண்டு தொடர்ச்சியாக நடந்த குண்டுவெடிப்புகளில் 14 பேர் பலியானமை குறித்து பாகிஸ்தானிய நீதிமன்றம் ஒன்றினால்…

இராமதாஸ் கைது எதிரொலியாக தொடரும் வன்முறைகள்

பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் இராமதாஸ் கைது செய்யப்பட்டதன் பின்னணியில் ஆங்காங்கே வன்முறைகள் நிகழ்ந்தவண்ணம் உள்ளன. திண்டிவனத்தில் இருந்து புதுச்சேரி செல்லும் வழியில் உள்ள பாலம் ஒன்றில் புதனிரவு வெடிகுண்டு வெடித்ததில், பாலத்தில் ஒரு மீட்டர் அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. சம்பவம் நடந்த பகுதியில் இருந்து மேலும்…

செங்கல்பட்டு சிறப்பு முகாமில் இலங்கை அகதி தற்கொலை முயற்சி

செங்கல்பட்டு சிறப்பு முகாமிலிருந்து விடுதலை பெற எடுத்துக்கொண்ட முயற்சிகள் தோல்வியுற்ற நிலையில் சசிதரன் (21) என்ற இலங்கைத் தமிழ் அகதி ஒருவர் நஞ்சருந்தி தற்கொலை செய்துகொள்ள முயன்றுள்ளார். அவர் தற்போது செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இதனிடையே, செங்கல்பட்டு முகாமிலுள்ள மூன்றுபேர் தங்களை விடுதலை செய்யக்கோரி கடந்த…

இலங்கைத் தமிழர்கள் குறித்து வைகோவுக்கு பிரதமர் மன்மோகன்சிங் கடிதம்

துபாயில் தவித்த 19 இலங்கை தமிழர்களை இலங்கைக்கு அனுப்பாமல் வேறு நாடுகளுக்கு அனுப்ப, வெளியுறவுத் துறை உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது என, ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோவுக்கு, பிரதமர் மன்மோகன்சிங் கடிதம் மூலம் தெரிவித்துள்ளார். ம.தி.மு.க., வெளியிட்ட அறிக்கையில்,  ‘’ துபாயில் உள்ள 19 இலங்கை தமிழர்களை…

இந்திய பரப்புக்குள் சீனத் துருப்புக்கள்; இந்தியா எச்சரிக்கை

இந்தியாவின் எல்லைகளைப் பாதுகாக்கத் 'தக்க நடவடிக்கை' எடுக்கப்படும் என்று பாதுகாப்பு அமைச்சர் ஏகே அந்தோனி சீனாவை எச்சரித்துள்ளார். இந்திய நிலப்பரப்புக்குள் சீனப் படையினர் முகாம் அமைத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையிலேயே, இந்தியா இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. இந்தியாவின் நலன்களைப் பாதுகாக்கத் தேவையான எல்லா நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று அந்தோனி…

தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு பிடிவாரண்ட்

ஜெயலலிதா குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு பிடிவாரண்ட் பிறப்பிடிக்கப்பட்டுள்ளது. விசாரணைக்கு ஆஜராகாததால் நெல்லை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இன்றைய தினம் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது விஜயகாந்த் ஆஜராகவில்லை. இதனால் நெல்லை 3வது நீதிமன்றத்தின் அடிசனல் செசன்ஸ் நீதிபதி பிடிவாரண்ட்…

பெங்களுரூ பா.ஜ. அலுவலகம் அருகே குண்டு வெடிப்பு: 13 பேர்…

பெங்களூரு : பெங்களூருவில் பா.ஜ. அலுவலகம் அருகே இன்று பைக்கில் வைக்கப்பட்டிருந்த ‌குண்டு வெடித்தது. இதில் 8 போலீசார் உள்பட 13 பேர் காயமடைந்தனர். கடந்த பிப்ரவரி மாதம் ஐதராபாத் நகரில் நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு பின்னர் தற்போது பெங்களுரூவில் குண்டுவெடித்துள்ளது. கர்நாடகா மாநிலம், பெங்களுரூவையடுத்த, மல்லேஸ்வரம்…

“ஆப்பிரிக்கர்களை நாய் போல நடத்துகின்றனர் இந்தியர்கள்”

இந்தியாவின் வர்த்தகத் தலைநகரான மும்பையிலும் சுற்றியுள்ள இடங்களிலும் தங்கியுள்ள ஆப்பிரிக்கர்கள், Read More

சென்னை விமான நிலையத்தில் வெடிகுண்டு பீதி

சென்னை: சென்னை விமான நிலையத்தில் அனாதையாகக் கிடந்த சூட்கேஸால் வெடிகுண்டுப் பீதி ஏற்பட்டது. சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் புதியதாக கட்டப்பட்ட உள்நாட்டு விமான முனையம் சமீபத்தில் தான் செயல்பாட்டுக்கு வந்தது. இங்கு விமான புறப்பாடு பகுதியில் பயணிகள் வாகனங்களில் வந்து இறங்கும் இடத்தில் இன்று காலை 6…

தமிழக அமைச்சரவை தீர்மானம் மூலம் 3 தமிழர்களையும் காப்பாற்ற முடியும்…

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’டெல்லியில் நடந்த குண்டு வெடிப்பு வழக்கில், தூக்கு தண்டனை பெற்ற தேவிந்தர் பால் சிங் புல்லாரின் கருணை மனுவை குடியரசுத் தலைவர் தள்ளுபடி செய்ததை எதிர்த்து தொடர்ந்த வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அத்துடன் அவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை…

ராஜிவ் வழக்கு- 3 தமிழரை ஜெயலலிதாவால் காப்பாற்ற முடியும்: பழ.…

சென்னை: ராஜிவ் வழக்கில் 3 தமிழரின் தூக்கு தண்டனையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனு மீது உச்சநீதிமன்றம் என்ன மாதிரியான தீர்ப்பளித்தாலும் மூவரையும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவால் காப்பாற்ற முடியும் என்று தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட தாம்…

அரசியல் எதிரிகளின் கிண்டலை அலட்சியப்படுத்திய கர்ம வீரர்!

படிக்காத மேதை என்று சும்மாவா சொன்னார்கள். ஆட்சி நிர்வாகத்திலும் அதை நிரூபித்து வந்திருக்கிறார் காமராஜர். இதற்கு எடுத்துக்காட்டாக ஒரு சம்பவம். கனரக கொதிகலன் தொழிற்சாலை என்ற மிகுமின் அழுத்த சக்தி மூலம் செயல்படும் ஒரு மாபெரும் தொழிற்சாலையை இந்தியாவில் நிர்மாணித்து தர ஒரு செக் நாட்டு நிறுவனம் முன்வந்தது.…

இலங்கையில் மாணிக்க விநாயகம் பங்கேற்கவிருந்த நிகழ்ச்சி ரத்து

தமிழுணர்வாளர்களின் போராட்டத்துக்கு மதிப்பளித்து, இலங்கையில் தான் கலந்து கொள்ளவிருந்த இசை நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுவிட்டதாக பின்னணி பாடகர் மாணிக்க விநாயம் தெரிவித்துள்ளார். இலங்கை வவுனியாவில் புதிதாக அம்மன் கோவில் கட்டப்பட்டுள்ளது. இதன் கும்பாபிஷேக விழாவில் இசை கச்சேரி நடத்த சினிமா பின்னணி பாடகர் மாணிக்க விநாயகம் உள்ளிட்ட 25…

சஞ்சய் காந்தியைக் கொல்ல 3 முறை முயற்சி நடந்தது –…

டெல்லி: சஞ்சய் காந்தியைக் கொலை செய்வதற்கு மூன்று முறை முயற்சி நடந்தது என்று விக்கிலீக்ஸ் தகவல் கூறுகிறது. அமெரிக்க தூதரக தகவலை மேற்கோள் காட்டி விக்கிலீக்ஸ் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. உ.பி.க்கு ஒருமுறை அவர் வந்தபோது மிகவும் சக்தி வாய்ந்த துப்பாக்கியால் அவரை சுட்டுக் கொல்ல முயற்சிக்கப்பட்டது என்றும்…

தமிழ்நாடு தனி நாடாவதை ஆதரிப்பீர்களா…? அமெரிக்காவிடம் கேட்ட திமுக!

சென்னை: இந்தியாவிலிருந்து பிரிந்து தனி நாடாக வேண்டும் என்று தமிழ்நாடு முடிவு செய்தால் அதை அமெரிக்கா ஆதரிக்குமா என்று அப்போதைய அமெரிக்கத் தூதரிடம், அப்போது திமுக அமைச்சரவையில் தொழிலாளர் மற்றும் வீட்டு வசதித்துறை அமைச்சராக இருந்த கே.ராஜாராம் கேட்டதாக விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள அமெரிக்க தூதரக கடிதத் தகவல் பரிமாற்றத்தில்…

பாலியல் குற்றம் புரிந்தவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

சென்னை நொசப்பாக்கத்தில் வசிப்பவர்கள் சாரதா - சந்திரன் தம்பதியர் (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளது) இவர்களுக்கு 6 வயதில் ஒரு மகனும், 3 வயதில் பெண் குழந்தை ஒன்றும் உள்ளது. சாரதா அழகு நிலையம் ஒன்றில் வேலை பார்க்கிறார். இவர்கள் வசிக்கும் வீட்டின் மாடியில் சாஜி என்பவர் வாடகைக்கு குடியிருந்து வந்தார்.…

‘மிசா’ காலத்தில் இந்திரா வீட்டில் புகுந்த அமெரிக்க உளவாளி: விக்கிலீக்ஸ்

டெல்லி : இந்தியாவில் அவசர நிலை பிரகனடப்படுத்தப்பட்ட பின்னர் இந்திரா காந்தியின் அரசியல் நடவடிக்கைகளை புரிந்து கொள்ள முடியாமல் ஒருபக்கம் அமெரிக்கா கடுமையாக திணறியபோதும், இந்திராவின் வீட்டுக்குள்ளேயே கிட்டத்தட்ட 2 ஆண்டு காலத்திற்கு தனது உளவாளியை வைத்திருந்தது என்ற அதிர்ச்சித் தகவலை விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது. 1975ம் ஆண்டு முதல்…

இலங்கை பொருட்களை புறக்கணிக்குமாறு தமிழகத்தில் பிரசாரம்

தமிழகத்தில் இலங்கை பொருட்களை புறக்கணிக்க வலியுறுத்தி சென்னை மெரீனா கடற்கரையில் தமிழர் பண்பாட்டு நடுவம் சார்பில் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழர்களைப் படுகொலை செய்த இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்பது தமிழகத்தின் ஒட்டுமொத்த கோரிக்கையாகும். ஆனால், மத்திய அரசோ இதை கண்டுக்கொள்ளவில்லை. இதற்கு எதிராக இலங்கையுடனான…

இடிந்தகரையில் அடுத்த கட்டப் போராட்டம் பற்றி ஆலோசனை

மக்களவைத் தேர்தலில் கூடங்குளம் அணுஉலை பிரச்னையை முன்வைத்து பிரசாரம் செய்வது குறித்து இடிந்தகரையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் ஆலோசனை செய்யப்பட்டது. கூடங்குளம் அணுஉலைக்கெதிரான மக்கள் இயக்கத்தினர் கடந்த 600 நாள்களுக்கு  மேலாக தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், அடுத்த கட்டப் போராட்டம் குறித்து இடிந்தகரையில் ஞாயிற்றுக்கிழமை ஆலோசனை…

கூடங்குளத்தில் இம்மாதம் மின் உற்பத்தி துவங்கும்: நாராயணசாமி

கூடங்குளம் அணுமின் நிலையம் இந்த மாதமே செயல்படத் துவங்கும் என மத்திய அமைச்சர் நாராயணம்சாமி தெரிவித்துள்ளார். கூடங்குளம் அணுமின் நிலையத்தில் பரிசோதனை வெள்ளோட்டங்கள் நடந்துவருகின்றன என்றும், ஏப்ரலிலேயே அங்கு மின் உற்பத்தி ஆரம்பமாகும் என்றும் அவர் தெரிவித்தார். ரஷ்ய விஞ்ஞானிகள் உட்பட நிபுணர்கள் அணுமின் நிலையத்தின் பல்வேறு கட்டமைப்புகளையும்…