அன்வார்: நான் பேராக்கில் போட்டியிடப் போகிறேன்

எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம், தமது பெர்மாத்தாங் தொகுதி மக்கள் ஆட்சேபம் தெரிவித்த போதிலும் சொந்த ஊர் என்னும் உணர்வுகள் இருந்த போதிலும் வரும் தேர்தலில் பேராக்கில் போட்டியிடுவதில் உறுதியாக இருக்கிறார். "பேராக்கில் களம் இறங்குவதற்கான என்னுடைய நோக்கத்தை நான் வெளிப்படுத்தியுள்ளேன்," என அவர் பெட்டாலிங் ஜெயாவில் நிருபர்களிடம் கூறினார்.…

அன்வாருடைய தோற்றத்தைக் கெடுப்பதற்காக ஜோகூர் பாருவில் பதாதைகள்

முத்தமிட்டுக் கொள்ளும் ஆடவர்களைக் காட்டும் இரண்டு பதாதைகள் ஜோகூர் பாரு குடியிருப்புப் பகுதி  ஒன்றில் திடீரென தொங்க விடப்பட்டுள்ளது. அந்தப் பகுதியில் மூன்று நாட்களுக்கு முன்பு பிகேஆர் மூத்த  தலைவர் அன்வார் இப்ராஹிம் கலந்து கொண்ட செராமா நிகழ்வு ஆயிரக்கணக்கான மக்களைக் கவர்ந்தது  என்பது குறிப்பிடத்தக்கதாகும். தாமான் மெகா…

சைபுலின் தந்தை அன்வாரிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறார்

சைபுல் புஹாரி-யின் தந்தை பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிமிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டதுடன் குதப்புணர்ச்சி வழக்கு ll-ல் அன்வார் மீது அவதூறு சொல்வதற்குப் பிரதமரது அதிகாரி ஒருவர் உட்பட பொறுப்பற்ற தரப்புக்களினால் தமது புதல்வர் பயன்படுத்தப்பட்டாகவும் கூறிக் கொண்டுள்ளார். "அன்வார் நிரபராதி அவதூறுக்கு இலக்கானவர்... ஆகவே நான்…

அன்வார்: இந்தியர் பிரச்னைகள் பக்காத்தான் தேர்தல் கொள்கை அறிக்கையில் பட்டியலிடப்படும்…

பக்காத்தான் ராக்யாட் கொள்கை அறிக்கை மீதான இந்திய சமூகத்தின் கருத்துக்களைத் தாம் செவிமடுத்துள்ளதாகவும் அந்த சமூகத்தின் தேவைகள் மீதான சிறப்பு விவரங்கள் பக்காத்தான் கொள்கை அறிக்கையில் சேர்க்கப்படும் என்றும் எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் அறிவித்துள்ளார். "இந்திய சமூகத் தலைவர்களுடைய எண்ணங்களை அறிந்து கொள்வதற்காக நான் கடந்த வாரத்திருந்து…

அன்வார்: லஹாட் டத்து-வுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை

சுலு துப்பக்கிக்காரர்களுடைய ஊடுருவலுக்கும் தமக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படுவதை எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் வன்மையாக மறுத்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை அந்த ஊடுருவல்காரர்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் நிகழ்ந்த துப்பாக்கிச் சண்டையில் 14 பேர் கொல்லப்பட்டனர். அவர்களில் இருவர் போலீஸ் அதிகாரிகள். அந்தக் குற்றச்சாட்டுக்களினால் அவர் பெரிதும் வருத்தமடைந்துள்ளது தெளிவாகத்…

‘லாஹாட் டத்து ஊடுருவலுக்கும் அன்வாருக்கும் தொடர்புண்டாம்’

மையநீரோட்ட ஊடகங்களின் செய்தியறிக்கைகள், மாற்றரசுக் கட்சியை அதுவும் குறிப்பாக அன்வார் இப்ராகிமை பிலிப்பினோ கும்பலின் ஊடுருவலுடன் தொடர்புப்படுத்துகின்றன. அம்னோவுக்குச் சொந்தமான உத்துசான் மலேசியா நாளேடு, பிலிப்பினோ ஊடகமான   Inquirer News-சை மேற்கோள்காட்டி எம்பிபி வலைத்தளத்தில் இடம்பெற்ற ஒரு செய்தியை வெளியிட்டிருந்தது. “பிலிப்பின்ஸ் செய்தித்தளமான  Inquirer News அன்வாருடன் நெருங்கிய…

‘அமெரிக்காவில் அன்வார் எதிர்ப்புப் பிரச்சாரத்துக்கு பிஎன் நிதி அளித்தது

முக்கிய அமெரிக்க வெளியீடுகளில் பிரச்சார கட்டுரைகளை எழுதுவதற்காக பல எழுத்தாளர்களுக்கு பிஎன் பணம் கொடுத்ததாக கூறப்பட்டுள்ளது. அந்தக் கட்டுரைகளில் பெரும்பாலானவை பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிம் மீது கவனம் செலுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்நிய ஏஜண்டுகள் தங்களைக் கட்டாயம் பதிந்து கொள்ள வேண்டும் என்ற அமெரிக்கச் சட்டத்தின் கீழ்…

அன்வார்: பக்காத்தான் கொள்கைவிளக்க அறிக்கையில் இந்தியர்கள் விடுபடவில்லை

பக்காத்தான் கொள்கைவிளக்க அறிக்கை, இனங்களையெல்லாம் கடந்து செல்கிறது. அதில், இந்தியர்கள் உள்பட எந்தச் சமூகமும் புறக்கணிக்கப்படவில்லை என்கிறார் அன்வார் இப்ராகிம். பள்ளிகளை எடுதுக்காட்டாகக் குறிப்பிட்ட அன்வார், சீன, தமிழ்ப் பள்ளிகளுக்கும் மிஷனரி பள்ளிகளுக்கும் உதவி அளிக்கப்படும் என்றார். “குறிப்பிட்ட ஒரு சமூகத்தை மட்டுமே அது குறியாகக் கொள்ளவில்லை. இதுவே-…

அன்வார்: பிரதமர் தேர்வு ஒரு பிரச்னையே அல்ல

பக்காத்தான் ரக்யாட் ஆட்சி அமைத்தால் யார் பிரதமர் என்பது ஒரு பிரச்னையே இல்லை என்கிறார் மாற்றரசுக்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம். நேற்று பக்காத்தான் மாநாட்டிலேயே இதைப் பற்றி யாரும் கேள்வி எழுப்பவில்லை என்கிறபோது மற்றவர்கள் ஏன் இதை “ஒரு பிரச்னையாக” நினைக்கிறார்கள் என்றவர் வினவினார். “பிஎன் கொள்கைவிளக்க அறிக்கையிலும்கூட…

அன்வார்: செனட்டர் தடுத்து வைக்கப்பட்டுள்ளது அப்பட்டமான அதிகார அத்துமீறல்

ஆஸ்திரேலிய செனட்டர் நிக் செனபோன் தடுத்து வைக்கப்பட்டுள்ளதும்  திருப்பி அனுப்பப்படுவதும் 'அப்பட்டமான அதிகார அத்துமீறல்' என்றும் 'அனைத்துலக உபசரணை நடைமுறைகள் மீறப்பட்டுள்ளன' என்றும் எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் வருணித்துள்ளார். "குறைந்த கட்டண விமான முனையத்தில் (LCCT) செனபோன் 'நாட்டின் எதிரி' எனவும் பாதுகாப்புக்கு மருட்டல் எனவும் கூறப்பட்டு…

அன்வார்: பாக்கத்தான் ஆட்சியில் அனைத்து பிரச்னைகளும் தேசியப் பிரச்னைகளாக கருதப்படும்

பாக்கதான் ரக்யாட் மக்கள் சார்புடைய ஜனநாயகத்தை நீதியை அடிப்படையாகக் கொண்ட கொள்கைகள் மூலம் உருவாக்கும் என்று பாக்கத்தான் தலைவர் அன்வார் இப்ராகிம் நேற்று இரவு கூறினார். செம்பருத்தி இணையத்தள ஏற்பாட்டில் நடைபெற்ற தமிழ் நாளிதழ்களுடான கேள்வி பதில் நிகழ்ச்சியில் பேசிய அன்வார் இப்ராகிம் இனங்களுக்கிடையிலான பிளவுகள் அகற்றப்படுவதோடு எந்த…

அன்வார்: பிஎஸ்எம் அடையாளச் சின்னம் மக்களுக்குக் குழப்பம் தரலாம்

பார்டி சோசலிஸ் மலேசியா(பிஎஸ்எம்)-வின் கைமுட்டிச் சின்னம், மாற்றரசுக் கட்சியின் தேர்தல் பரப்புரையின்போது பயன்படுத்தப்படுவதற்கு அவ்வளவு பொருத்தமானதாக இராது என்று எண்ணுகிறார் பக்காத்தான் ரக்யாட் பெருந்தலைவர் அன்வார் இப்ராகிம். “கடந்த மாதம் சுங்கை சிப்புட் சென்றிருந்தேன். அதன்(சின்னம்) தொடர்பில் அங்கு குழப்பம் நிலவுவதைக் கண்டேன். அதைப் பார்த்து பலமாதிரியாக நினைத்துக்கொள்கிறார்கள்.…

அன்வாருக்கு ‘ஹுகுவான் சியோவ்’ பட்டம் வழங்கப்பட்டதற்கு எதிர்ப்பு

மாற்றரசுக் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிமுக்கு கடாசான்டுசுன் சமூகத்தின் ‘ஹுகுவான் சியோவ்(பிரதான தலைவர்) பட்டம் வழங்கப்பட்டதற்கு சாபாவில் பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அப்பட்டம், நடப்பு பிபிஎஸ் தலைவர் ஜோசப் பைரின் கிட்டிங்கானுக்கு 28 ஆண்டுகளுக்குமுன் கொடுக்கப்பட்டு பின்னர் அவரே ஆயுளுக்கும் அச்சமூகத்தின் தலைவர் என்றும் அறிவிக்கப்பட்டார். அப்பட்டம் அன்வாருக்கு…

அன்வார்: கல்விக்கான நிதி ஒதுக்கீட்டில் 20விழுக்காட்டைக் குறைத்தார் நஜிப்

கல்விக்கான நிதி ஒதுக்கீட்டில் பிரதமர் நஜிப் அப்துல் நசாக் 20 விழுக்காட்டைக் குறைத்து விட்டதாகக் குற்றம் சாட்டிய மாற்றரசுக் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம், இது கல்வியின் பங்களிப்புக்கு பிஎன் அரசாங்கம் குழி பறிப்பதைக் காண்பிக்கிறது என்றார். யுனிவர்சிடி இண்டஸ்ட்ரி சிலாங்கூரில் இலவசக் கல்வி என்னும் தலைப்பில் முக்கிய…

அன்வார்: என் எதிரிகள் மூலை முடுக்குகளிலிருந்து வெளியில் வந்து கொண்டிருக்கின்றனர்

பக்காத்தான் ராக்யாட்டின் தலைமைப் பரப்புரையாளரான அன்வார் இப்ராஹிம், தமக்கு எதிராக இப்போது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களைப் பார்க்கும் போது தமது எதிரிகள் மூலை முடுக்குகளிலிருந்தும் வெளியாகிக் கொண்டிருப்பதாகத் தோன்றுகிறது எனக் கூறுகிறார். என்றாலும் தாம் உறுதியாகவும் பொறுமையாகவும் இருக்கப் போவதாக அவர் நேற்றிரவு செபாராங் பிராயில் மகளிர் எழுச்சிக் (…

உத்துசான் அன்வார் மீது அவதூறு கூறியுள்ளது என நீதிமன்றம் முடிவு

எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிமுக்கு எதிராக அவதூறு கூறியதற்கு உத்துசான் மிலாயு (எம்) சென் பெர்ஹாட்டும் அதன் தலைமை ஆசிரியர் அப்துல் அஜிஸ் இஷாக்கும் பொறுப்பேற்க வேண்டும் என கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் இன்று முடிவு செய்துள்ளது. அம்னோவுக்குச் சொந்தமான உத்துசான் மலேசியா கடந்த ஆண்டு ஜுன் 17ம்…

அன்வாரும் கைரியும் அவதூறு வழக்கைத் தீர்த்துக் கொண்டனர்

எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் அம்னோ இளைஞர் தலைவர் கைரி ஜமாலுதின் அபு பாக்காருக்கு எதிராக தொடுத்த அவதூறு வழக்கை இன்று முடிவுக்குக் கொண்டு வந்துள்ளார். இரு தரப்பும் அந்த வழக்கைத் தீர்த்துக் கொள்வதற்கு இணக்கம் கண்டதே அதற்குக் காரணமாகும். அந்த இணக்கத் தீர்வை கோலாலம்பூர் உயர் நீதிமன்றம்…

பேரணி பற்றிய செய்தியைப் பரப்புங்கள் என அன்வார் வேண்டுகோள்

மக்கள் எழுச்சிப் பேரணிக்காக ஆயிரக்கணக்கான மக்கள் மெர்தேக்கா அரங்கத்தில் கூடிய வேளையில் அந்த நிகழ்வு பற்றிய தகவலைப் பரப்புமாறு வெளிநாடுகளில் வசிக்கும் மலேசியர்களுக்கும் ஆதரவாளர்களுக்கும் எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் வேண்டுகோள் விடுக்கும் அறிக்கையை வெளியிட்டுள்ளார். "வரும் தேர்தலில் வாக்களிக்கும் வெளிநாட்டு மலேசியர் என்ற முறையில் மலேசியாவில் நிகழ்கின்ற…

‘அந்த 207 பில்லியன் ரிங்கிட் இழப்பீடு பற்றி விளக்குங்கள்’

இரண்டாம் உலகப் போரின் போது சயாமுக்கும் பர்மாவுக்கும் இடையில் அமைக்கப்பட்ட மரண ரயில்வே என அழைக்கப்பட்ட ரயில் தண்டாவளத்தைப் போடுவதற்குக் கட்டாயத் தொழிலாளர்களாகப் பயன்படுத்தப்பட்ட 30,000 மலாயா மக்களில் உயிர் பிழைத்தவர்களுக்கும் அவர்களுடைய வாரிசுகளுக்கும் ஜப்பானிய அரசாங்கம் இழப்பீடாகக் கொடுக்கப்பட்டதாகக் கூறப்படும் 207 பில்லியன் ரிங்கிட் இழப்பீடு பற்றி…

அன்வார்: டாக்டர் மகாதீர் என்னால் தூக்கத்தைத் தொலைத்து விட்டார்

பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிம் பிரதமராகப் பொறுப்பேற்பதே முன்னைய பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் இப்போது  காணுகின்ற ' மிகப் பெரிய பயங்கரக் கனவு' என அன்வார் இப்ராஹிம் கூறுகிறார். பெட்ரோலிய நிறுவனங்களுடன் தமது புதல்வர் செய்து கொண்டுள்ள ஒப்பந்தங்கள் பாதிக்கப்படும் என்பதே மகாதீருடைய முக்கியமான கவலை…

நாட்டின் சொத்துக்களையும் பொருளாதாரத்தையும் பாதுகாப்பதாக அன்வார் வாக்குறுதி

பக்காத்தான் ராக்யாட் ஆட்சிக்கு வந்தால் நாட்டின் சொத்துக்களும்  பொருளாதாரமும் நல்ல முறையில் நிர்வாகம் செய்யப்படும் என்றும் எந்த ஒரு தலைவரும் தங்களை வளப்படுத்திக் கொள்ள அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும்  எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் வாக்குறுதி அளித்துள்ளார். அந்த வாக்குறுதி பெரிதாகத் தோன்றவில்லை என்றாலும் தாம் கொடுக்கும் உறுதிமொழி…

“நஜிப் டாக்டர் மகாதீரைச் சாந்தப்படுத்த வேண்டும் என எண்ணுகிறார்”

"பிரதமரும் அம்னோ தலைவருமான நஜிப் அப்துல் ரசாக்கிற்கு தமது சொந்தக் கருத்துக்களை அமலாக்குவதற்கான 'வலிமை இல்லாததால்' அம்னோ ஆண்டுப் பொதுக் கூட்டத்தில் டாக்டர் மகாதீர் முகமட்டின் பெயரைப் பயன்படுத்தியுள்ளார்." இவ்வாறு கூறும் எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் அந்த முன்னாள் பிரதமர் மகாதீர் "இன்னும் கட்சித் தலைவர்களை அழைத்து…

அம்னோ பொதுக் கூட்டம் மக்களிடமிருந்து விடுபட்டுள்ளது என்கிறார் அன்வார்

கடந்த வாரம் அம்னோ ஆண்டுப் பொதுக் கூட்டத்தில் பேராளர்கள் ஆற்றிய ஆவேசமான போர்க்கால பேச்சுக்கள் பற்றிப் பக்காத்தான் ராக்யாட் கவலைப்படவில்லை . அவ்வாறு தெரிவித்த பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிம் , மக்களைப் பாதிக்கின்ற விஷயங்களை விவாதிக்கத் தவறியதின் மூலம் மக்களிடமிருந்து தான் விடுபட்டுள்ளதை அது காட்டியதே…