இலங்கைப் படைகள் போர்க் குற்றம் புரிந்தன: கனடா நீதிமன்றம் அதிரடி!

இலங்கை கடற்படையில் கமோடார் பதவி வகித்த தமிழர் ஒருவர் கனடாவில் தஞ்சம் கோரி சமர்ப்பித்த மனு ஒன்று கனடா நாட்டின் குடிவரவு மற்றும் அகதிகள் ஆணையத்தால் நிராகரிக்கபட்ட்தை எதிர்த்து அவர் செய்த மேல் முறையீட்டு மனுவை கனடாவின் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இலங்கை கடற்படையில் உயர்பதவியில் நீண்ட…

சிறையில் தமிழ்க் கைதி அடித்துக்கொலை; பலரின் நிலை பரிதாபம்!

இலங்கையின் வடக்கே, வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையிலிருந்து அனுராதபுரம் மற்றும் அதன்பின்னர் மகர சிறைக்கு மாற்றப்பட்ட நிலையில் அரசியல் கைதி நிமலரூபன் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அங்கு தமிழ் அரசியல் தலைவர்களிடையே ஆத்திரத்தையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியிருக்கிறது. நிமலரூபன் சிறைச்சாலை மருத்துவமனையில் உயிரிழந்த பின்னரே அவரது உடல் றாகமை மருத்துவமனைக்கு கொண்டு…

இலங்கையில் காணாமல் போனவர்கள் குறித்து ICRC கவலை

இலங்கையில் போர் முடிந்து மூன்று ஆண்டுகளுக்கு மேலாகியும் காணாமல் போனவர்களின் நிலமை குறித்து சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் கவலை வெளியிட்டுள்ளது. விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் 2009 ஆம் ஆண்டு மே மாதம் முடிவடைந்ததாக இலங்கை அரசு தெரிவித்த பிறகும் கூட, இன்னும் 15,000-க்கும் அதிகமானவர்கள் எங்கிருக்கிறார்கள் என்று…

தமிழர் மண்ணில் கால்பதித்த சிங்கள அமைச்சருக்கு இயற்கை கொடுத்த அடி!

தென்தமிழீழமான மட்டக்களப்பு பகுதிக்கு பயணம் மேற்கொண்ட இலங்கை உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போது திடீரென அப்பகுதியில் வீசிய பலத்த புயல், அமைச்சர் உரையாற்றிக்கொண்டிருந்த மேடையை பிய்த்துக்கொண்டு சென்றுள்ளது. இதன் காரணமாக அந்நிகழ்வுக்கு மேடை ஏறி பேச வருகை தந்திருந்த உயர் கல்வி அமைச்சர் உட்பட…

வவுனியா சிறைச்சாலையினுள் புலிகளின் மாவீரர் நினைவுத் தூபி!

வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள புலிகள் இயக்கத்துடன் தொடர்புடையவர்கள் எனக் கருதப்படுவோர், போரின் போது கொல்லப்பட்ட புலிகளின் மாவீரர்களை நினைவுகூறுவதற்காக சிறைச்சாலைக்குள் நினைவு தூபி ஒன்றை அமைத்திருந்த நிலையில் சிறீலங்கா பாதுகாப்பு படையினர் அதனை கண்டுபிடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சிறைக் கூண்டுக்குள் பதுங்கு குழி போல் அமைத்து அதில் வீரச்சாவடைந்த…

இலங்கை அகதிகளுக்காக கொக்கோஸ் தீவின் வசதிகள் அதிகரிப்பு

இலங்கையில் இருந்தும் தென்னிந்தியாவில் இருந்தும் வரும் அகதிகளை தங்க வைக்கப்பதற்காக, ஆஸ்திரேலியாவின் பின்தங்கிய தீவான கொக்கோஸ் தீவின் வசதிகளை அதிகரிக்கும் பணிகளில் அவுஸ்திரேலிய அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். தற்போது ஆஸ்திரேலியாவுக்கு வரும் அகதிகள், கிறிஸ்மஸ் தீவுகளுக்கு பதிலாக கொக்கோஸ் தீவை நோக்கியே தமது பயணத்தை மேற்கொள்கின்றனர். இந்நிலையில், சலவை இயந்திரங்கள்…

செல்லாத சட்டத்தின் கீழ் ஊடகவியலாளர்களை கைதுசெய்த இலங்கை அரசு

இலங்கையில் கைது செய்யப்பட்ட  சந்தேகநபர்களுக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று சனிக்கிழமை பிணை வழங்கியது. நேற்று வெள்ளிக்கிழமை கைதுசெய்யப்பட்ட கைது செய்யப்பட்ட இவர்கள் இன்று பகல் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இலங்கை அரசாங்கத்துக்கு அபகீர்த்தி ஏற்படுத்தக்கூடிய விதத்தில் செய்திகளை வெளியிட்டதாக கூறி லங்காமிரர் செய்தி இணையதள ஊடகவியலாளர்கள்…

தங்களுக்காக கைதான போராட்டவாதிகளை விடுவிக்கும்வரை போராடிய ஈழத்தமிழர்கள்!

தமிழகம்: செங்கல்பட்டு முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ள ஈழத் தமிழர்களை விடுதலை செய்ய, தமிழக அமைப்புகள் மற்றும் கட்சிகள் இன்று செங்கல்பட்டு முகாமை சுற்றி முற்றுகை போராட்டம் நடத்தினர். அதன்போது முற்றுகை போராட்டம் செய்த தோழர்களை காவல் துறை கைது செய்து மண்டபத்தில் அடைத்தது. இந்த தகவலை அறிந்த முகாமில்…

ஒன்றுபட்ட இலங்கைக்கு இந்தியா ஆதரவு: சிவசங்கர் மேனன்

கொழும்பு: ஒன்றுபட்ட இலங்கைக்கு, இந்தியா என்றும் உறுதுணையாக இருக்கும் என,இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் தெரிவித்துள்ளார். இலங்கையில், விடுதலைப் புலிகளுடனான போர் முடிந்த பிறகு, மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்கு இந்தியா, 4,000 கோடி ரூபாய் அளவுக்கு கடனுதவி அளித்து வருகிறது. மேலும், 2,000 கோடி ரூபாய் உதவித்…

இலங்கையில் இணையத்தள செய்தியாளர்கள் கைது

'சிறீ லங்கா மிர்ரர்' மற்றும் 'சிறீ லங்கா எக்ஸ் நியூஸ்' ஆகிய இரு இணையத் தளங்களின் பணிமனைகளில் காவல்துறையினர் சோதனையிட்டு அவ்விணையத் தளங்களின் ஊடகவியலாளர்கள் உட்பட மொத்தம் ஒன்பது பேரை கைது செய்தனர். சோதனை நடத்திய காவல்துறையினர், கணினிகள் மற்றும் தொலைபேசிகளைக் கைப்பற்றினர் என இந்த சோதனைகளை நேரில்…

வவுனியாவில் கைதிகளால் சிறைகாவலர்கள் சிறைபிடிப்பு

இலங்கையின் வடக்கே வவுனியா சிறைசாலையில், சிறைக் காவலர்கள் மூவரை அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் பணயமாகப் பிடித்து வைத்திருப்பதாக வவுனியா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். வவுனியா சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அரசியல் கைதிகளில் மூன்று பேர் கடந்த செவ்வாய்க்கிழமை பூஸாவில் உள்ள பயங்கரவாதத் தடுப்புப் பிரிவுக்குக் கொண்டு செல்லப்பட்டதையடுத்து,…

இலங்கையின் வடக்கே மக்கள் தொகை குறைந்துள்ளது

இலங்கையின் வட மாகாணத்திலேயே நாட்டில் குறைந்த அளவிலான மக்கள் வசிக்கிறார்கள் என்று நேற்று வெளியான இலங்கை அரசின் மக்கள் தொகை கணக்கெடுப்பு புள்ளி விபரத் தகவல்கள் அடங்கிய ஆரம்பகட்ட அறிக்கை கூறுகிறது. முப்பது ஆண்டுகளுக்கு பிறகு நாட்டின் அனைத்துப் பகுதிகளையும் உள்ளடக்கி நடத்தப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பில் வட…

மனிக்பாம் முகாமுக்கு திருப்பி அனுப்பப்பட்ட முல்லைத்தீவு மக்கள்

இலங்கையின் வடக்கே முல்லைத்தீவு மாவட்டம் திருமுறிகண்டி பிரதேசத்தில் மீள்குடியேற்றுவதற்காக மனிக்பாம் இடைத்தங்கல் முகாமில் இருந்து அழைத்து வரப்பட்ட 49 குடும்பங்களில் ஒரு தொகுதியினரை மீண்டும் மனிக்பாம் முகாமுக்கே கொண்டு செல்வத்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக முல்லைத்தீவு அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்திருக்கின்றார். கடந்த சனிக்கிழமை அழைத்து வரப்பட்டு முறிகண்டி…

மகிந்தவிடம் மன்னிப்பா: மறுக்கிறது பிரித்தானியா !

சிறீலங்கா குடியரசுத் தலைவர் மகிந்த ராஜபக்சே லண்டன் சென்றபோது அங்கு காமன்வெல்த் பொருளாதார மன்றத்தில் அவர் நிகழ்த்தவிருந்த உரை நிறுத்தப்பட்டதற்காக பிரித்தானிய தலைமையமைச்சர் டேவிட் கமரூன் மன்னிப்புக் கோரவில்லை என்று கொழும்பிலுள்ள பிரித்தானியத் தூதரகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். சிறீலங்கா குடியரசுத் தலைவர் மகிந்த ராஜபக்சேவின் உரை நிறுத்தப்பட்டதற்காக டேவிட்…

மன்மோகன் சிங்கைச் சந்தித்தார் மகிந்த ராஜபக்சே!

இந்தியப் தலைமையமைச்சர் மன்மோகன் சிங்கை, இலங்கை குடியரசுத் தலைவரும் போர்க்குற்றவாளியுமான மகிந்த ராஜபக்சே நேற்றுச் சந்தித்துப் பேசியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மெக்சிகோவின் லொஸ் காபோஸ் நகரில் நடைபெறும் 'ஜி 20' மாநாட்டின் பக்க நிகழ்வாகவே இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இந்தச் சந்திப்பில் இந்தியப் பிரதமரின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்…

புலிகள் இருந்திருந்தால் நடக்குமா இப்படி? மகளைத் தொலைத்த தந்தையின் குமுறல்!

கடந்த 3 மாதங்களுக்கு முன் யாழ்ப்பாணத்தில் காணாமல் போன தனது 18 வயது இளம் பெண்ணைத் தேடிக் களைத்து சோர்வடைந்த நிலையில் தந்தை ஒருவர் ஊடகங்களுக்குத் தனது உள்ளக் குமுறலைத் தெரிவித்துள்ளார். இறுதிப் போரில் தனது மனைவியையும் மூத்த மகளையும் இழந்த நிலையில் தனது இரண்டாவது மகளான யோகேஸ்வரன்…

சரணடைந்து காணாமல் போனோர் தொடர்பாக ஆராய ஐ.நா திட்டம்

இலங்கை அரசால் அமைக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக் குழுவின் முன்பாக சாட்சியமளித்த பாதிக்கப்பட்ட பொதுமக்களுடன் கலந்துரையாடுவதற்கு ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகம் திட்டமிட்டுள்ளதாக தெரியவருகிறது. ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் இலங்கைப் பயணத்துக்கு முன்பதாக உண்மை கண்டறியும் குழுவொன்றை அனுப்புவதற்கு ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகம்…

தமிழீழத்தை உருவாக்கியே தீருவோம்; அடித்துக் கூறுகிறார் சிறிதரன் எம்.பி !

"உலக தமிழர்களுடன் இணைந்து தனித் தமிழீழத்தை விரைவில் உருவாக்குவோம், ஈழமே எங்களின் இறுதி நோக்கம்" என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சிறிதரன் எம்.பி மேலும் கூறியதாவது; "நாட்டில் தற்போதைய நிலையில், முள்ளிவாய்க்காலில் சிங்கள அரசினால் படுகொலைசெய்யப்பட்ட ஈழ மக்களுக்கான துக்கநாளைக்ககூட…

கோத்தபய வேண்டுகோளை ஏற்று இலங்கை கடற்படைக்கு இந்தியா அதிநவீன பயிற்சி

சிங்கப்பூரில், ஆசிய பாதுகாப்பு உச்சி மாநாடு நடைபெற்றது. அதில், இலங்கை வெளியுறவுத்துறை மந்திரி ஜி.எல்.பெரீஸ் தலைமையிலான இலங்கை பிரதிநிதிகள் குழு கலந்து கொண்டது. அக்குழுவில் இடம்பெற்றுள்ள இலங்கை பாதுகாப்பு செயலாளரும், ஜனாதிபதி ராஜபக்சேவின் சகோதரருமான கோத்தபய ராஜபக்சேவும், ஜி.எல்.பெரீசும் இணைந்து மாநாட்டில் கலந்து கொண்ட இந்திய இராணுவ மந்திரி…