இடதுசாரி அரசியலே மக்களின் தேர்வு : பி.எஸ்.எம். தேசிய மாநாடு

மலேசிய சோசலிசக் கட்சியின் (பி.எஸ்.எம்.) 19-வது தேசிய மாநாடு, ‘இடதுசாரி அரசியலே மக்களின் தேர்வு’ எனும் கருப்பொருளோடு இன்று தொடங்கியது. இவ்வாண்டு மாநாடு ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட ஒன்று. 14-வது பொதுத் தேர்தலில் போட்டியிடப்போகும் தொகுதிகள் மற்றும் வேட்பாளர்கள் யார் யாரெனக் கலந்துபேசி, முடிவெடுக்கப்படும் எனக் கட்சியின் தலைமைச் செயலாளர்…

நஜிப் : மலேசிய இந்தியர் பெருந்திட்டம் மாயை அல்ல, நிஜம்

மலேசிய இந்தியர் பெருந்திட்டம் (எம்.ஐ.பி.) வெறும் மாயையோ அர்த்தமற்றதோ அல்ல; மாறாக, இந்திய சமூக மேம்பாட்டுக்கான ஓர் உண்மையான திட்டம் அது என நஜிப் கூறுகிறார். வடிவமைக்கப்பட்ட அத்திட்டம் இந்திய சமூகத்திற்கு முழுமையான பலனைக் கொடுப்பதோடு, அரசாங்கத்தின் மீதான அவர்களின் நம்பிக்கையை வலுப்பெற செய்வதையும் அரசாங்கம் உறுதிபடுத்தும். “இத்திட்டம்…

நஜிப் : அந்த இந்திய வம்சாவளி பிரதமரைவிட, நான் அதிகம்…

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முன்னாள் பிரதமரைவிட, மலேசிய இந்தியர்கள் முன்னேற்றத்திற்கு  தாம் அதிகம் பங்காற்றியுள்ளதாக பிரதமர் நஜிப் கூறினார். அந்த முன்னாள் பிரதமரின் பெயரைக் குறிப்பிடாமலேயே, அவரின் சேவை காலத்தோடு, நஜிப் தம்மை ஒப்பிட்டுப் பேசினார். “நான் பிரதமரான பிறகு, கிட்டத்தட்ட 900 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீட்டைத்…

ஊழலை எதிர்த்துப் போராட உங்களோடு நாங்கள் இருக்கிறோம், ஜொகூர் இளவரசருக்கு…

நாட்டில் ஊழல்களைத் துடைத்தொழிக்க, ஜொகூர் பட்டத்து இளவரசருக்கு ஆதரவாக இருப்போம் என அமானா கட்சி உறுதியளித்துள்ளது. துங்கு இஸ்மாயில் வெளியிட்ட அந்த அறிக்கை துணிச்சலான ஒன்று என்றும்; நாட்டில் ஊழலையும் அதிகார துஸ்பிரயோகத்தையும் துடைத்தொழிக்க விரும்பும் அவரின் முயற்சிக்கு மக்கள் ஆதரவாக இருக்க வேண்டுமென்றும் அமானா கட்சியின் துணைத்…

ரபிசி : பக்காத்தான் ஹராப்பான் 50 நாடாளுமன்ற இருக்கைகளை வெல்லும்…

14-வது பொதுத் தேர்தலில், தங்களால் வெல்லக்கூடிய  50 நாடாளுமன்ற இடங்களைப் பக்காத்தான் ஹராப்பான் அடையாளங்கண்டுள்ளது. மக்கள் நீதி கட்சியின் (பிகேஆர்) துணைத் தலைவர் ரபிஷி ரம்லி, அவற்றுள் ஜொகூர் மாநிலத்தின் ஜொகூர் பாரு, பாசீர் கூடாங், தெப்ராவ், செம்புரோங், தஞ்ஞோங் பியாய், லாபிஸ், சிகாமாட், செகிஞ்சாங், பூலாய் மற்றும்…

கல்வி அமைச்சர் : சிலாங்கூர் முதலில் யூனிசெல்லில் இலவசக் கல்வியைச்…

இலவசக் கல்வியை அமல்படுத்துவதில் தீவிரமாக இருக்கும் சிலாங்கூர் மாநில அரசு, முதலில் அதன் கட்டுப்பாட்டில் இருக்கும் சிலாங்கூர் பல்கலைக்கழகத்தில் (யூனிசெல்) அதனை அமல்படுத்தட்டும் எனக் கல்வி அமைச்சர் டத்தோ ஶ்ரீ மாஹ்ட்ஷீர் காலிட் கேட்டுக்கொண்டார். மக்கள் நீதிக் கட்சியின் தலைமைத்துவத்தில் இருக்கும் சிலாங்கூர் அரசாங்கம், யூனிசெல்லில் இதனை நடைமுறைபடுத்தி,…

முக்ரிஸ் ‘இடைக்கால பிரதமர்’ஆக மகாதீர் விரும்புகிறார் போலும், அம்னோ உறுப்பினர்…

பக்காத்தான் ஹராப்பானுக்கு ஓர்   ‘இடைக்கால பிரதமர்’ தேவை எனும் டாக்டர் மகாதீரின் ஆலோசனை, முக்ரிஸை அந்தப் பதவியில் அமர வைக்க, அவர் செய்யும் ஒரு ‘சதி’யாக இருக்கலாம் என அம்னோ உச்சமன்ற உறுப்பினர் அப்துல் அஸிஸ் கப்ராவி கூறியுள்ளார். அன்வார் இப்ராஹிமை விடுதலை செய்து, பிரதமர் பதவியில்…

1எம்டிபி வட்டமேசை கலந்துரையாடல், ஜசெகாவுக்கு பாஸ் அழைப்புவிடுக்கும்

பாஸ் ஏற்பாடு செய்யவிருக்கும், 1எம்டிபி வட்டமேசை கலந்துரையாடலுக்கு, ஜனநாயகச் செயற்கட்சியின் கெப்போங் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் தான் செங் கியாவ்-ஐ அழைக்கவிருப்பதாக, பாஸ் கட்சியின் துணைத் தலைவர் துவான் இப்ராஹிம் துவான் மான் அறிவித்துள்ளார். தான் செங் கியாவ், 1எம்டிபி விவகாரங்களைக் கவனித்து வரும் ஏஜென்சிகளில் ஒன்றான, பொது…

உங்கள் பேச்சு மற்றும் செயல்களில் கவனமாக இருங்கள், மகாதீருக்கு துணைப்பிரதமர்…

“டாக்டர் மகாதீர் தனது பேச்சு மற்றும் செயல்களில் கவனமாக இருக்க வேண்டும்”, என அந்த முன்னாள் பிரதமரைத் துணைப் பிரதமர் கேட்டுக்கொண்டார். பிரதமர் நஜிப்பின் தலைமைத்துவத்தை எப்போதும் பழித்துப் பேசுவது குறித்து ஸாகிட் கருத்துரைத்தார். அம்னோ மற்றும் பாரிசானின் துணைத் தலைவரான ஸாகிட், “ஓர் அரசியல்வாதி எனும் முறையில்…

சாலே சைட் கெருவாக் : மலேசியா தோல்வி கண்ட நாடு…

மலேசியாவைத் தோல்வி கண்ட அரசு எனவும், பொருளாதாரத்தில் சரிவு கண்டுவரும், திவாலாகப் போகும் அரசாங்கம் எனவும் ஒருசில தரப்பினர் கூறுவது, தனக்கு வியப்பாக உள்ளது எனத் தகவல், தொழில்நுட்ப, ஊடகத்துறை அமைச்சர் சாலே சைட் கெருவாக் கூறியுள்ளார். “அரசியலில் வெளியிடப்படும் கருத்துகள் உண்மையாகவும் துல்லியமாகவும் இருக்க வேண்டும். நாட்டின்…

கட்சியின் போராட்டங்களுக்கு அரணாக இருங்கள், நஜிப் அம்னோ ‘வீரர்’களைக் கேட்டுக்கொள்கிறார்

கட்சியின் நோக்கங்களை அடைய அதன் போராட்டங்களுக்கு உறுதுணையாக இருக்குமாறு அம்னோ தலைவர் நஜிப் ரசாக் , அம்னோ டிவிஷன் பிரதிநிதிகள் கூட்டத்தில் பங்கேற்கும் அனைத்து உறுப்பினர்களையும் கேட்டுக்கொண்டார். 14-வது பொதுத் தேர்தலை எதிர்கொள்ள,  கட்சியின் தேர்தல் இயந்திரங்களை விரிவாக்கவும், யுக்திகளை அடையாளங்காணவும் இக்கூட்டத்தின் போது கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்தி…

ஷெட்டி : ஊடகங்களுக்கு இனி பேட்டியளிப்பது இல்லை

ஊடக நேர்காணல்களைத் தவிர்க்கப்போவதாக, தேசியப் பொருளகத்தின் முன்னாள் கவர்னர் ஷெட்டி அக்தார் அசிஸ் முடிவெடுத்துள்ளார். “இனி நான் பேட்டி எதுவும் கொடுக்கப்போவதில்லை. ஊடக நேர்காணல்கள் எனக்கு நல்ல பாடம் கற்றுக்கொடுத்துள்ளன,” என்று கோலாலம்பூரில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர் கூறினார். இருப்பினும், அதற்கான  காரணத்தை அவர் தெரிவிக்கவில்லை. நேர்காணல்களைத்…

ஒப்பந்த மருத்துவ அதிகாரிகள் அனைவரும் எஸ்.பி.எம். மலாய் தேர்வில் தேர்ச்சி…

புதிய  ‘கிரேட் யுடி41’ ஒப்பந்த மருத்துவ அதிகாரிகள் அனைவரும் எஸ்.பி.எம். மலாய் மொழியில், குறைந்தபட்ச ‘தேர்ச்சி’யைப் பெற்றிருக்க வேண்டும் என சுகாதார அமைச்சு முடிவு செய்துள்ளது. ஒப்பந்த மருத்துவ அதிகாரிகளின் நியமனங்களை ஒரே தரநிலையாக்க இம்முடிவு எடுக்கப்பட்டதாக சுகாதார அமைச்சர்  டாக்டர் எஸ்.சுப்ரமணியம் தெரிவித்தார். எஸ்.பி.எம். தேர்வில் மற்றப்…

வழக்குரைஞர் சிவனேசனுக்கு எதிராக டாக்டர் ஜெயக்குமார் அவதூறு வழக்கு

தமிழ் மலர் பத்திரிக்கையில் வெளிவந்த செய்தியால் தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளதாகக் கூறி, சுங்கை சிப்புட் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஜெயக்குமார் தேவராஜ், சுங்கை சட்டமன்ற உறுப்பினர் வழக்குரைஞர் அ.சிவநேசன் மீது அவதூறு வழக்கு பதிவு செய்துள்ளார். கடந்த மே 21-ன்றில், அப்பத்திரிக்கையின் முதல் பக்கத்தில் பிரசுரமான செய்தியில்,…

காணாமற்போன ‘ராடார்’ குறித்து சுங்கத்துறை ஊழியர்களிடம் விசாரணை

தஞ்ஜோங் பெலெபாஸ் துறைமுகத்தில் (பி.தி.பி.) காணாமல் போன இராணுவ ராடார் குறித்து, மலேசிய இலஞ்ச ஒழிப்பு ஆணையம் (எம்.ஏ.சி.சி) 6 நபர்களிடம் விசாரணை நடத்தி, வாக்குமூலம் பதிவு செய்தது. 37 முதல் 48 வயதுக்குட்பட்ட 6 ஆண்களை, ஜொகூர் இலஞ்ச ஒழிப்பு ஆணய அலுவலகத்தில் விசாரித்ததாக, அதன் துணை…

மலாய் மொழியில் சிறப்பு விலக்கு – 2 அமைச்சர்களும் விளக்கமளிக்க…

மருத்துவத் துறை மாணவர்களுக்கு, எஸ்.பி.எம். தேர்வில் மலாய் மொழி  தேர்ச்சிக்குச்   சிறப்பு விலக்கு அளிக்க வேண்டுமென்ற சுகாதார அமைச்சின் முடிவிற்கு, அதன் அமைச்சர் டாக்டர் எஸ்.சுப்ரமணியம் மற்றும் பிரதமர் துறை அமைச்சர் ஜோசப் எந்துலு பெலாவ்ன் இருவரும் அமைச்சரவைக்கு விளக்கமளிக்க வேண்டுமெனப் பணிக்கப்பட்டுள்ளனர். டாக்டர் சுப்ரமணியம் இந்தச் சர்ச்சைக்…

அரசாங்க விமானத்தில் நஜிப் குடும்பத்தோடு உல்லாசப் பயணம்

பிரதமர் நஜிப் ரசாக் குடும்பத்துடன் தனது விடுமுறையைக் கழிக்க, அரசாங்கத்துக்குச் சொந்தமான வானூர்தியை மீண்டும் பயன்படுத்தியுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. ஜாவாபோஸ்ட்.கோம் வெளியிட்ட செய்தியின்படி, பிரதமரும் அவர்தம் குழுவினரும் ஜூன் 26-ல், 9எம்-என்.ஏ.ஏ. பதிவு எண் கொண்ட விமானத்தில் பாலியை வந்தடைந்ததாக தெரிகிறது. மலேசிய அரசாங்கத்துக்குச் சொந்தமான இவ்விமானம், முக்கியப்…

மகாதீரிசம்: புத்ராஜெயாவைக் கைப்பற்றுமா?

– சாந்தலட்சுமி பெருமாள் , ஜூலை 2, 2017. 60 ஆண்டுகால பாரிசான் ஆட்சியைக் கவிழ்க்க முட்டிமோதி முயற்சித்த எதிர்க்கட்சிகள் இறுதியாக கையிலெடுத்த பிரம்மாஸ்திரம் ‘மகாதீர்’. ஊழல் நிறைந்த இந்தப் பாரிசான் ஆட்சியை ஒரு நிறைவுக்குக் கொண்டுவர மகாதீர் ஒருவரின் துணை அதிமுக்கியம் என எதிர்க்கட்சிகள் நம்புகின்றன. பாரிசான்…

ஒத்திவைக்கப்பட்ட திருமண சீர்திருத்த சட்ட மசோதா மீண்டும் தாக்கல் செய்யப்பட…

ஈப்போ-  கடந்த மார்ச் மாதம்,  நாடாளுமன்ற கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படாமல், திடீரென ஒத்திவைக்கப்பட்ட சிவில் திருமண சீர்திருத்த சட்ட மசோதாவினை மீண்டும் இம்மாதம் தொடங்கவிருக்கின்ற நாடாளுமன்ற கூட்டத்தொடரில் தாக்கல் செய்து சட்டமாக்க வேண்டுமென  மலேசிய சோசலிசக் கட்சியின் (பி.எஸ்.எம்.) தேசியத் துணைத் தலைவர் மு.சரஸ்வதி மத்திய அரசைக் கேட்டுக்கொண்டார்.…

பிரதமர் வேட்பாளர் : மகாதீர் தவிர யார் வேண்டுமானாலும்! –…

14-வது பொதுத் தேர்தலில் ஆட்சியைக் கைப்பற்றினால், டாக்டர் மகாதீர் முகமட்டை தவிர்த்து , எதிர்க்கட்சியினர் யாரை வேண்டுமானாலும் பிரதமராகத் தேர்ந்தெடுக்கலாம் என மலேசிய சோசலிசக் கட்சியின் (பி.எஸ்.எம்.) தேசியத் தலைவர் டாக்டர் முகமது நசீர் ஹசிம் தெரிவித்தார். எதிர்க்கட்சியுடன் கைக்கோர்த்ததிலிருந்து, அந்த 91 வயது முன்னாள் பிரதமர் மாறுபட்ட…

சுங்கத்துறை : ராடார் தொலையவில்லை, நெதர்லாந்தில் உள்ளது

புத்ராஜெயா -  காணாமல் போன மில்லியன் ரிங்கிட் பெருமானமுள்ள ராடார் கருவி, நெதர்லாந்தில் உள்ளதைச் சுங்கத்துறை கண்டுபிடித்துள்ளது. “காணாமல் போனதாகக் கூறப்பட்ட அந்த உயர் தொழில்நுட்ப இராணுவ உபகரணம், அதன் இலக்கான நெதர்லாந்து, ரோட்டடாம் துறைமுகத்தைச் சென்றடைந்துவிட்டதால், முந்தையச் செய்திகளைச் சுங்கத்துறை மறுக்க விரும்புகிறது,” எனச் சுங்கத்துறையின் இயக்குநர்…

ராடார் கருவி ஒன்று ஜொகூர்பாரு துறைமுகத்தில் காணாமல் போனது

புத்ராஜெயா - நெதர்லாந்துக்குச் சொந்தமான, மில்லியன் ரிங்கிட் பெருமானமுள்ள ராடார் கருவி ஒன்று, ஜொகூர் பாரு, தஞ்சோங் பெலெபாஸ் துறைமுகத்தில் காணாமல் போனது. ‘தி ஸ்டார்’ நாளிதழின் தகவல்படி, ஜொகூர் வழியாக நெதர்லாந்து செல்ல, ஆஸ்திரேலியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட அக்கருவி, அனைத்துலக வாணிபம் மற்றும் தொழிற்துறை அமைச்சின் (மித்தி) போக்குவரத்து…

பினாங்கு போலிடெக்னிக் உணவக விவகாரம்: இனவாதம் ஆக்காதீர்கள், பி.கமலநாதன் கோரிக்கை

கோலாலம்பூர்- செப்ராங் பிராய் போலிடெக்னிக் கல்லூரியில் அமைந்துள்ள இந்திய உணவகத்தை மூட பணித்ததன் தொடர்பாக, சமூக வலைத்தளங்களில் பரவலாக வந்த செய்தியை இனவாதம் ஆக்கவேண்டாம் என, துணைக் கல்வி அமைச்சர் டத்தோ பி.கமலநாதன் ஓர் அறிக்கையின் வாயிலாகக் கேட்டுக்கொண்டார். அக்கல்லூரி இயக்குநரைத் தொடர்புகொண்டு பேசியபோது, ஒப்பந்த விதிகளை மீறியதால்,…