பிகேஆர் பிரதிநிதி: சிலாங்கூர் வர்த்தக உரிமக் கட்டணத்தை மறுஆய்வு செய்ய…

சிலாங்கூரில் ஊராட்சி மன்றங்கள் வர்த்தக உரிமக் கட்டணங்களை 400 விழுக்காடு உயர்த்தி இருப்பதை மாநில அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என ஸ்ரீசித்தியா சட்டமன்ற உறுப்பினர் நிக் நஸ்மி நிக் அஹ்மட் கேட்டுக்கொண்டிருக்கிறார். கட்டணத்தை உயர்த்தியுள்ள ஊராட்சி மன்றங்களில் பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி மன்றம், சுபாங் ஜெயா முனிசிபல்…

அன்வார்: பிரதமர், கொடுத்த வாக்குறுதியிலிருந்து பின்வாங்குகிறார்

ஜனநாயகச் சீரமைப்புக்கு இடமளிப்பதாகக் கூறிய  பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்  வாக்குறுதியைக் காப்பாற்றத் தவறிவிட்டார் என மாற்றரசுக் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் குற்றம் சாட்டினார். த ஹீட் வார இதழுக்குத் தற்காலிகத் தடை விதிக்கப்பட்டிருப்பது அதற்குத் தக்க சான்று. “அது, முரண்படும் கருத்துக்களும் குறைகூறல்களும் சகித்துக்கொள்ளப்படுவதில்லை என்பதைதான்…

மாறுங்கள்; இல்லையேல் மறக்கப்படுவீர்: மசீச-வுக்கு எச்சரிக்கை

பதவி விலகிச் செல்லும் மசீச மகளிர் பகுதித் தலைவர் இயு சொக் தவ், தட்டுத்தடுமாறிக் கொண்டிருக்கும் கட்சியைச் சீரமைப்பது அவசியம் என அறைகூவல் விடுத்தார். சீரமைப்புக்கு இதுவே கடைசி வாய்ப்பு, இதைத் தவறவிட்டால் அழிவுதான் என்றவர் எச்சரித்தார். 2008 தேர்தல் தோல்விக்குப் பின்னரே சீரமைக்கப்பட்டிருக்க வேண்டும். அதைச் செய்யாததால்…

வார செய்தி இதழ் த ஹீட் காலவரையின்றி தள்ளி வைக்கப்பட்டுள்ளது

  உள்துறை அமைச்சு த ஹீட் என்ற வார செய்தி இதழ் வெளியிடப்படுவதிலிருந்து காலவரையின்றி தள்ளி வைத்துள்ளது. பிரதமர் நஜிப் மற்றும் அவரது துணைவியார் ரோஸ்மா ஆகியோர் குறித்து அது கடந்த நவம்பரில் வெளியிட்டிருந்த கட்டுரை அதற்கான காரணமாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. இந்த உத்தரவு உள்துறை அமைச்சிடமிருந்து…

அரசாங்க ஆதரவு எம்பிகளே சாலைக்கட்டணத்துக்கு எதிர்ப்பு

அடுத்த ஆண்டு டோல் கட்டணத்தை உயர்த்தும் அரசாங்கத்தின் முடிவைக் குறைகூறுவோர் எண்ணிக்கை பெருகிக் கொண்டே வருகிறது. அந்த வரிசையில் பிஎன் ஆதரவு எம்பிகள் (பிஎன்பிபிசி) மன்றமும் சேர்ந்து கொண்டிருக்கிறது. அது அரசாங்கம் அதன் தேர்தல் அறிக்கையில் டோல் கட்டணம் குறைக்கப்படும் என்று அளித்த வாக்குறுதியைக் காப்பாற்ற வேண்டும் என…

விலை உயர்வை எதிர்த்து ஆர்ப்பாட்டம் வேண்டாம்: இப்ராகிம் அலி

மக்கள் வாழ்க்கைச் செலவு உயர்வதைக் காரணம் காட்டி தெரு ஆர்ப்பாட்டத்தில் இறங்கக்கூடாது என மலாய் உரிமைக்காக போராடும் பெர்காசாவின் தலைவர் இப்ராகிம் அலி கேட்டுக்கொண்டிருக்கிறார். “அப்படிப்பட்ட செயல்களால் நிலைமை மேலும் மோசமாகும்”, என இப்ராகிம் செய்தியாளர் கூட்டமொன்றில் தெரிவித்தார். “என்னைப் பொறுத்தவரை, பெர்காசா போன்ற என்ஜிஓ-கள் அரசாங்கத்துக்கு மகஜர்…

த ஹீட் வார இதழுக்குத் தற்காலிக தடை

வார இதழான த ஹீட் செய்தித்தாளுக்குக் காலவரையின்றி தடை விதிக்கப்பட்டிருக்கிறது. உள்துறை அமைச்சிடமிருந்து  தடை உத்தரவு வந்திருப்பதைத் தகவலறிந்த வட்டாரங்கள் மலேசியாகினியிடம் உறுதிப்படுத்தின. ஆனால், எதற்காக தடைவிதிப்பு என்பது துல்லியமாக தெரியவில்லை. பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் மற்றும் அவரின் துணைவியார் ரோஸ்மா மன்சூர் பற்றி நவம்பர் மாத…

பிரபாகரன் பிறந்தநாளை கொண்டாடியவர் கைது – குலா கண்டனம்

  கடந்த சனிக்கிழமை, கெடா, கூலிம் நகரில் விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரனின் பிறந்த நாளை கொண்டாடுவதற்கு ஒரு கூட்டம் நடத்தப்பட்டது. அது சம்பந்தமாக ஒரு நபரை போலீசார் திங்கள்கிழமை கைது செய்துள்ளனர். இன்னும் பலர் விசாரணைக்காக தேசநிந்தனைச் சட்டம் செக்சன் 4(1) இன் கீழ் கைது செய்யப்படவிருக்கின்றனர்…

அட்னான்: பிஎன் கட்சிக் கூட்டங்களில் இனவாதப் பேச்சு சகஜமானதுதான்

மசீச இளைஞர் பேரவையில் அம்னோ பற்றிக் குறைகூறப்பட்டதை பிஎன் தலைமைச் செயலாளர் தெங்கு அட்னான் தெங்கு மன்சூர் பெரிதுபடுத்த விரும்பவில்லை. மலேசியாவில் இப்படிப்பட்ட இனவாதப் பேச்சு வழக்கமான ஒன்றுதான், அது ஒரு பெரிய விவகாரமல்ல என்றாரவர்.   அம்னோ பேரவையில்கூட மலாய்க்காரர் நலன் தொடர்பில் பல விவகாரங்கள் விவாதிக்கப்பட்டன..…

அரசாங்கம்: விலை உயர்வும் உதவித்தொகை குறைப்பும் நல்லதுக்குத்தான்

அண்மையில் கட்டணங்கள் உயர்த்தப்பட்டதும் உதவித் தொகை குறைக்கப்பட்டதும் மக்களிடம் வரவேற்பைப் பெறாதிருக்கலாம் , ஆனால், அவை பொருளாதாரத்துக்கு நல்லவை அதனால் “மக்களுக்கும் அவை நல்லவைதான்” என அரசாங்கம் கூறுகிறது. “மலேசியப் பொருளாதாரத்தை வலுவாக வைத்திருக்க அரசாங்கச் செலவைக் கட்டுப்படுப்படுத்த வேண்டும். அதற்கு வரிகளை உயர்த்த வேண்டியிருக்கிறது உதவித் தொகையைக் குறைக்க…

மசீச கட்சித் தேர்தல் இன்று தொடங்கியது

மசீச தேசிய இளைஞர் ஆண்டுக்கூட்டமும் கட்சித் தேர்தல்களும் இன்று தொடங்கின. இளைஞர் பகுதியில் 34 பதவிகளுக்கு 69 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இளைஞர் தலைவர் பதவியைப் பிடிப்பதற்கு மசீச கல்விப் பிரிவுத் தலைவர் சொங் சின் வூனும் பத்து தொகுதி இளைஞர் தலைவர் கோ கய்க் மெங்கும் களமிறங்கியுள்ளனர். நாளை…

மாட் சாபு: ஜாஹிட்டுடன் தனிப்பட்ட முறையில் பகை ஏதுமில்லை

உள்துறை அமைச்சர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி,  தம்மை ஷியா கொள்கைகளைப் பின்பற்றுபவர் என்று குற்றம்சாட்டி அதற்கு “10 சான்றாதாரங்களை” முன்வைத்திருந்தாலும்கூட அவருக்கும் தமக்கும் தனிப்பட்ட விரோதம் எதுவும் கிடையாது என பாஸ் துணைத் தலைவர் முகம்மட் சாபு கூறினார். மாட் சாபு  என்ற பெயரில் பிரபலமாக விளங்கும் அவர்,…

வாய்ச்சொற்களால் சீன வாக்காளர்களை விரட்டி அடிக்காதீர்: அம்னோவுக்கு வீ எச்சரிக்கை

அம்னோ தலைவர்கள் என்ன பேசுகிறோம் என்பதை உணர்ந்து பேச வேண்டும். தீவிரவாத கருத்துகளைச் சொல்லி வாக்காளர்களை விரட்டி அடித்து விடக்கூடாது என மசீச இளைஞர் தலைவர் வீ கா சியோங் கூறினார். சீன மலேசிய வாக்காளர்கள் பிஎன்னை ஆதரிக்கவில்லை என்பதால் அதிருப்தி அடையும் அம்னோ தலைவர்கள், மலேசியர்களின் மொத்த…

விலை உயர்வின் விளைவு,பிரதமரின் மதிப்பு 10 புள்ளிகள் குறைந்தது

உதவித் தொகை குறைக்கப்பட்டதால் வாழ்க்கைச் செலவு உயர்ந்ததை அடுத்து பிரதமர் நஜிப்பின் அங்கீகார மதிப்பீட்டளவு 52 விழுக்காடாக வீழ்ச்சி கண்டது. மெர்டேகா மையத்தின் கருத்துக்கணிப்பின்படி, நஜிப்பின் மதிப்பு 2009 செப்டம்பருக்கு(59 விழுக்காடு) பிறகு இப்போதுதான் இந்த அளவுக்கு வீழ்ச்சி கண்டிருக்கிறது. பெட்ரோல் விலை உயர்வு, சீனிக்கான உதவித்தொகை இரத்து…

பூஜாங் பள்ளத்தாக்கை அடுத்து அபாயத்தில் உள்ள இடம் மலாக்கா கம்போங்…

பூஜாங் பள்ளத்தாக்கில் பெரும் சர்ச்சையை உண்டாக்கிய 11-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட சண்டி ஒன்று உடைக்கப்பட்ட சம்பவத்தை அடுத்து இப்போது இன்னொரு பாரம்பரிய இடமும் உடைபடும் அபாயத்துக்கு உள்ளாகி இருப்பதாகக் கூறுகிறார் மலேசிய இண்ட்ராப் தலைவர் பி.வேதமூர்த்தி. மலாக்காவில் உள்ள கம்போங் செட்டிதான் அது. கம்போங் செட்டியும் அதன் அருகே…

டிசம்பர் 31-இல் விலை உயர்வுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் பேரணி

மாணவ ஆர்வலர்களும் இளைஞர் அமைப்புக்களும் சேர்ந்து இன்றியமையாப் பொருள்கள், சேவைகள் ஆகியவற்றின் விலை உயர்வுக்கு எதிராக புத்தாண்டுக்கு முதல் நாள் பேரணி ஒன்றை நடத்தத் திட்டமிட்டுள்ளனர். ‘துருன்’ என்ற இயக்கத்தின்கீழ் டாட்டாரான் மெர்டேகாவில் அப்பேரணி நடைபெறும். பேரணி நடத்த சொலிடேரிடி அனாக் மூடா மலேசியா (எஸ்ஏஎம்எம்), சொலிடேரிடி மஹாசிஸ்வா…

அம்னோ எம்பி, டோல் குறைப்புப் பற்றிய தேர்தல் வாக்குறுதியை அரசுக்கு…

அரசாங்கம் அதன் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற கடமைப்பட்டிருக்கிறது என்பதை பிஎன் கப்பாளா பத்தாஸ் எம்பி ரீசல் மரைக்கான் இன்று நினைவுப்படுத்தினார். பிஎன் அதன் தேர்தல் அறிக்கையில் டோல் கட்டணத்தைக் குறைப்பதாக வாக்குறுதி அளித்திருப்பதை அவர் சுட்டிக்காட்டினார். “நகரங்களுகிடையிலான டோல் கட்டணத்தைக் கட்டம் கட்டமாகக் குறைக்க பிஎன் வாக்குறுதி அளித்தது”,…

விலைகளை உயர்த்துவதைத் தவிர வேறு வழி இல்லையா? அன்வார் ஒப்புக்கொள்ளவில்லை

பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிம்,  பற்றாக்குறை நிலையைச் சரிசெய்ய உதவித் தொகைகளைக் குறைத்து விலைகளை உயர்த்துவதைத் தவிர வேறு வழி இல்லை என்று அரசாங்கம் கூறுவதை நொண்டிச்சாக்கு என வருணித்தார். சுமையை மக்களின்மீது ஏற்றிவைத்துவிட்டு அரசாங்கம் அதன் ஊதாரித்தனமான செலவுகளைத் தொடர்கிறது என்றந்த முன்னாள் நிதி அமைச்சர்…

ஆர்ஓஎஸ் விளக்கமளிக்க வேண்டும், இல்லையேல் சட்ட நடவடிக்கை: டிஏபி எச்சரிக்கை

தலைமைத்துவ தேர்தல்மீதான சர்ச்சை முடிவில்லாமல் தொடர்வதால் வெறுத்துப்போன டிஏபி, சங்கப் பதிவதிகாரிக்கு (ஆர்ஓஎஸ்) எதிராக நடவடிக்கை எடுக்க தயாராகி வருகிறது. செப்டம்பர் 29-இல் நடந்த டிஏபி மத்திய நிர்வாகக் குழுத் தேர்தலைத் தான் அங்கீகரிக்கவில்லை என ஆர்ஓஎஸ் டிஏபி-க்குக் கடிதம் அனுப்பி வைத்திருந்தது. அது சட்டத்தைமீறிய ஒரு செயல்…

டோல் கட்டண உயர்வுக்கு இஸ்லாமிய அமைப்புகள் எதிர்ப்பு

அங்காத்தான் பிலியா இஸ்லாம் மலேசியா (அபிம்), கெராக்கான் மஹாசிஸ்வா செ-இஸ்லாம் மலேசியா (காமிஸ்) ஆகிய அமைப்புகள் நெடுஞ்சாலைக் கட்டண உயர்வை எதிர்க்கப்போவதாக அறிவித்துள்ளன. தேசிய மாணவர் அமைப்பான காமிஸ், “ஹிம்புனான் அமானா ரக்யாட்” என்ற பெயரில் ஏற்கனவே எதிர்ப்பியக்கத்தைத் தொடங்கி விட்டதாகக் கூறியது. அபிம் விரைவில் எதிர்ப்பு இயக்கத்தைத்…

மருத்துவமனை கூரை இடிந்து விழுந்தது பற்றி ரென்ஹில் நிறுவனம் வாயைத்…

ரிம690 மில்லியன் செலவில் கட்டப்பட்ட ஸ்ரீசெர்டாங் மருத்துவமனையில் உள்கூரை பல தடவை இடிந்து விழுந்திருந்தாலும் அது பற்றி அந்த மருத்துவமனையைக் கட்டிய குத்தகை நிறுவனமான ரென்ஹில் இதுவரை கருத்துரைக்கவில்லை. அந்நிறுவனத்தைத் தொடர்புகொண்டபோது, அவ்விவகாரம்  பொதுப்பணித் துறை விசாரணையில் இருப்பதால்  கருத்துரைப்பதற்கில்லை என்று கூறி விட்டது. ஏழாவது தடவை உள்கூரை…

‘விலை உயர்வைத் தடுக்க முடியாவிட்டால் கைரி பதவி விலகத் தயரா?’

இளைஞர், விளையாட்டு அமைச்சர் கைரி ஜமாலுடின்,   போக்குவரத்துக் கட்டண உயர்வு, நெடுஞ்சாலைக் கட்டண உயர்வு ஆகியவற்றைத்  தடுக்க முடியாவிட்டால் பதவி விலக வேண்டும் என்று எதிரணி தலைவர் ஒருவர் குறிப்பிட்டார். பிகேஆரின் ஸ்ரீசித்தியா சட்டமன்ற உறுப்பினர் நிக் நஸ்மி நிக் அஹ்மட் (இடம்), இதற்குமுன்னர்கூட கைரி தலைமையில் செயல்படும்…

நஜிப்: மக்களை வசப்படுத்தும் அணுகுமுறையை நான் கடைப்பிடிப்பதில்லை

தம் அரசாங்கம் மக்களை வசப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் செயல்படுவதில்லை என்பதை வலியுறுத்திய  பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், தேசியப் பொருளாதாரத்தை விரிவுபடுத்தும் நோக்கத்துடனேயே அது எப்போதும் பாடுபட்டு வந்துள்ளது  என்றார். மக்களுக்கு ‘இனிப்பான வாக்குறுதிகளை’க் கொடுப்பதற்கு முன்னர் நாட்டின் வருமானம் தொடர்ந்து பெருகுவதை உறுதிப்படுத்திக் கொள்வது அவசியமாகும்.…