பிரதமர் மாநில பிஎன் தலைவர்களைத் தொடர்ந்து சந்தித்து வருகிறார்

பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், மாநில பாரிசான் நேசனல் தலைவர்களையும் அம்னோ தொடர்புக்குழுக்களையும் சந்தித்துப் பேசுவது இன்றும் தொடர்ந்தது. காலை எட்டு மணிக்கே தொடங்கிவிட்ட இச்சந்திப்புகள், எந்த நேரத்திலும் நடக்கலாம் என்று எதிர்பார்க்கப்படும் 13வது பொதுத் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை இறுதிசெய்யும் நோக்கம் கொண்டவை என்று நம்பப்படுகிறது. இன்று…

இண்ட்ராப் பிரதமரைச் சந்தித்ததை எண்ணி பிகேஆர் கலங்கவில்லை

எதிர்வரும் தேர்தலில் பக்காத்தான் ரக்யாட்டுக்கு இண்ட்ராப் ஆதரவு இல்லை என்றாலும்கூட அதற்கு இந்தியர் ஆதரவு குறைந்துவிடாது என பிகேஆர் நம்புகிறது. பிகேஆர் உதவித் தலைவர் என்.சுரேந்திரன், அச்சமூகத்துக்காக பக்காத்தான் குறிப்பாக பிகேஆர்  “என்ன செய்துள்ளது என்பதை” இந்திய வாக்காளர்கள் அறிவார்கள் என்று கூறினார். “நாங்கள் என்ன செய்தோம் என்பதை…

அன்வார் பேராக்கில் போட்டியிடும் சாத்தியமில்லை என்கிறது மாநில பிகேஆர்

எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் வரும் பொதுத் தேர்தலில் பேராக்கில் எந்தத் தொகுதியிலும் போட்டியிடும் சாத்தியம் இல்லை. தமது பெர்மாத்தாங் பாவ் தொகுதிக்குப் பதில் பேராக் அல்லது சிலாங்கூரில் தாம் போட்டியிட எண்ணம் கொண்டுள்ளதாக அன்வாரே அறிவித்துள்ள போதிலும் அவர் பேராக்கை தேர்வு செய்யும் வாய்ப்பு மிகவும் குறைவு என…

சுவா ஜுய் மெங் டிஏபி-யிடமிருந்து பக்ரி, கூலாய் தொகுதிகளை நாடக்…

ஜோகூரில் கேலாங் பாத்தா தொகுதி டிஏபி மூத்த தலைவர் லிம் கிட் சியாங்கிற்கு சென்று விட்டதால் அந்த  மாநில பிகேஆர் தலைவர் சுவா ஜுய் மெங், பக்ரி, கூலாய் நாடாளுமன்றத் தொகுதிகளை நாடக் கூடும். வரும் தேர்தலில் போட்டியிடுவதற்கு சுவா நோக்கம் கொண்டுள்ள மூன்றாவது தேர்வு சிகாமாட் நாடாளுமன்றத்…

‘நாமம் போட்டு விடாதீர்கள்’: சிலாங்கூர் வாக்காளருக்கு மசீச வேண்டுகோள்

சிலாங்கூர் மசீச தலைவர் டோனல்ட் லிம் சியாங் சாய், அம்மாநில வாக்காளர்கள் மசீசவை முற்றாக அழித்துவிடக்கூடாது என்று வேண்டிக்கொண்டிருக்கிறார். 2008-இல் கட்சி மோசமான தோல்வியைக் கண்டிருந்தாலும் கடந்த ஐதாண்டுகளில் கடுமையாகப் பாடுபட்டு மக்களுக்குச் சேவையாற்றியுள்ளது என்றார். “கடந்த தேர்தலில் வாக்காளர்கள் எங்களை (மசீச) ஒதுக்கிவிட்டார்கள் என்றாலும் நாங்கள் எங்கள்…

பிரதமர் வாக்களிப்பு வழிகாட்டியான ‘Jom Bertindak’ கையேட்டை அறிமுகம் செய்துள்ளார்

மலேசியர்கள் 13வது பொதுத் தேர்தலில் தங்களது பொறுப்புக்களை நிறைவேற்றுவதற்கு உதவியாக நஜிப் அப்துல் ரசாக் 'Kit Jom Bertindak' (நாம் செயல்படுவோம் கையேடு) என்னும் கையேட்டை அறிமுகம் செய்துள்ளார். மார்ச் 18ம் தேதி பிரதமரது முகநூல் பக்கம் வழியாக அறிமுகம் செய்யப்பட்ட அந்தக் கையேட்டில் வாக்களிப்புக்கு வழிகாட்டியாக எளிதாக புரிந்து…

ஹரியான் மெட்ரோ பினாங்கு அரசாங்க விளம்பரங்களை நிராகரித்தது

பக்காத்தான் ராக்யாட் வழி நடத்தும் பினாங்கு மாநில அரசாங்கம் மேற்கொண்டுள்ள வறுமை ஒழிப்புத் திட்டம் தொடர்பான விளம்பரங்களுக்கு இடமளிக்க பிரபலமான மலாய் நாளேடான ஹரியான் மெட்ரோ மறுத்து  விட்டது. அந்த நாளேடு எதிர்க்கட்சிகளுக்கு விளம்பர இடங்களை விற்பதில்லை என பினாங்கு அரசாங்கத்துக்குத் தெரிவிக்கப்பட்டது. "எங்களுடைய வறுமை ஒழிப்புத் திட்டத்தை…

தண்டாபுத்ராவை ஆதரிக்கும் கோவைச் சாடினார் குவான் எங்

மே 13 கலவரத்தை அடிப்படையாகக் கொண்ட தண்டாபுத்ரா படத்தைத் தனிப்பட்ட முறையில் திரையிடுவதில் தப்பில்லை என்று கூறிய பிரதமர்துறை அமைச்சர் கோ சூ கூன்மீது டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் சினம் கொண்டிருக்கிறார். “அமைச்சர் (என்பதால் அப்படித்தான் பேசுவார் என்றாலும்) கோவின் செய்கை ஏமாற்றமளிக்கிறது. “அவர்…

பொதுத் தேர்தலுக்கு முன்னதாக தனியார் பஸ் நிறுவனங்களுக்கு பக்காத்தான் உதவிக்கரம்…

அரசாங்கத்துக்குச் சொந்தமான ராபிட் பஸ் சேவைகள் நாடு முழுவதும் வெகு வேகமாக  விரிவுபடுத்தப்படுவதால் திவால் நிலையை எதிர்நோக்கும் தனியார் பஸ் நிறுவன உரிமையாளர்களுக்கு பக்காத்தான் ராக்யாட் உதவிக் கரம் நீட்டியுள்ளது. "பக்காத்தானில் உள்ள நாங்கள் உங்கள் குரலை செவிமடுக்கிறோம். தேர்தலுக்கு இன்னும் இரண்டு மாதங்களே இருக்கின்றன." "அரசுக்குச் சொந்தமான பஸ்…

டிஏபி கட்சியின் உபா டிவி (UbahTV) முதல் விருந்தினராக நஜிப்பை…

டிஏபி கட்சியின் இணையத் தொலைக்காட்சியான உபா டிவி (UbahTV) முதல் விருந்தினராக நஜிப்பை பேட்டி  காண அவரை அழைக்க விரும்புகிறது. அந்தத் தொலைக்காட்சி தாராளப் போக்குடையது, எல்லாத் தரப்புக்களுக்கும் பதில் அளிக்கும் உரிமையைத் தர  விரும்புகிறது என்பதை நிரூபிப்பது அதன் நோக்கமாகும். "மரியாதை நிமித்தம் அது எதிர்த்தரப்புத் தலைவர்…

ஜோகூரில் பிஆர்எம் மும்முனைப் போட்டிகளைத் தவிர்க்கும்

பிஆர்எம் என்ற Parti Rakyat Malaysia எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஜோகூரில் எந்தத் தொகுதியிலும்  போட்டியிடாது. காரணம் அது பிஎன், பக்காத்தான் ராக்யாட் ஆகியவற்றுடன் மும்முனைப் போட்டிகளைத்  தவிர்க்க விரும்புகிறது. இவ்வாறு அதன் தேசியத் துணைத் தலைவர் எஸ்கே கொங் தெரிவித்துள்ளார். தேர்தலில் எதிர்த்தரப்புக் கூட்டணி வெற்றி பெறுவதற்கான…

பிகேஆர்: இந்துக்களை இழித்துரைத்த பெர்காசா உதவித் தலைவர்மீது நடவடிக்கை தேவை

இந்து சமயத்தவரை ஆத்திரப்பட வைக்கும் விதத்தில் பேசிய மலாய் உரிமைக்காக போராடும் பெர்காசா அமைப்பின் உதவித் தலைவர் சுல்கிப்ளி நூர்டின்மீது குற்றவியல் சட்டத்தின்கீழ் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என பிகேஆர் அறைகூவல் விடுத்துள்ளது. ஐந்து நிமிடத்துக்குமேல் நீளும் ஒரு காணொளியில், சுல்கிப்ளி “இந்துக்களையும் அவர்களின் சமயத்தையும் படுமோசமாக இழித்துரைத்திருக்கிறார்”…

சபாவிலிருந்து வெளியேறும் பிலிப்பினோக்கள் எண்ணிக்கை 4,771ஐ எட்டியது

சபாவில் மலேசியப் பாதுகாப்புப் படைகளுக்கும் சுல் சுல்தான் ஆதரவாளர்களுக்கும் இடையில் இந்த மாதத்   தொடக்கத்தில் மோதல்கள் தொடங்கிய பின்னர் அங்கிருந்து வெளியேறியுள்ள பிலிப்பினோக்கள் எண்ணிக்கை   4,771-ஐ எட்டியுள்ளது. பிலிப்பின்ஸ் தேசியப் பேரிடர் நிர்வாக மன்றம் அந்தத் தகவலை வெளியிட்டுள்ளது. மார்ச் 28ம் தேதி வரையில் மொத்தம் 944 குடும்பங்கள்…

முதியவரான மகாதீர் தாம் இன்னும் பிரதமர் என நினைத்துக் கொண்டு…

"அவரது வயதில் ஒருவர் திருந்துவதுடன் தமது பாவங்களுக்கு மன்னிப்புக் கேட்டுக் கொண்டு தாம் தீங்கிழைத்த  மக்களுடன் சமாதானம் செய்து கொண்டு கௌவரமாக வெளியேற வேண்டும்" பிஎன் அடைவு நிலை மோசமாக இருந்தால் நஜிப் பதவி விலக வேண்டியிருக்கும் கைரோஸ்: அந்த முதியவருக்கு இன்னும் ஆதரவாளர்கள் இருப்பதும் அதிகார வர்க்கத்தில்…

லீமா 2013ல் 4.2 பில்லியன் ரிங்கிட் பெறும் 24 ஒப்பந்தங்கள்…

மொத்தம் 4.2 பில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள தற்காப்புத் தளவாடங்கள், சேவைகள் சம்பந்தப்பட்ட 24  ஒப்பந்தங்கள் லீமா 2013 என அழைக்கப்படும் லங்காவி அனைத்துலக கடல் ஆகாயக் கண்காட்சியில்  கையெழுத்திடப்பட்டுள்ளதாகத் தற்காப்பு அமைச்சர் அகமட் ஸாஹிட் ஹமிடி இன்று தகவல் வெளியிட்டுள்ளார். அந்த ஒப்பந்தங்கள் தற்காப்பு அமைச்சு , உள்நாட்டு…

பபாகோமோ இப்போது அஞ்சல் வாக்காளர் அல்ல: போலீஸ் உறுதிப்படுத்தியது

பபாகோமோ என்ற புனைபெயரில் பிரபலமாக விளங்கும் வலைப்பதிவர் வான் முகம்மட் அஸ்ரி வான் டெரிஸ், போலீஸ் படையிலிருந்து நீக்கப்பட்டதை அடுத்து அஞ்சல் வாக்காளர் என்ற தகுதியை இழந்து விட்டார் என்பதை போலீஸ் தெளிவுபடுத்தியுள்ளது. வான் முகம்மட் அஸ்ரி 2005, அக்டோபர் 31-இல் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டதாக…

மெகா திட்டத்தை அமலாக்க அவசரப்பட வேண்டாம் என பினாங்கு அரசுக்கு…

மக்கள் நலன் சம்பந்தப்பட்டுள்ளதால் 6.3 பில்லியன் ரிங்கிட் சம்பந்தப்பட்ட மெகா திட்டத்தில் பினாங்கு  அரசாங்கம் அவசரப்படக் கூடாது என பினாங்கு மலாய் காங்கிரஸ் கூறியுள்ளது. மாநில அரசாங்கம் அந்தத் திட்டத்தை அறிவிப்பதற்கு முன்னர் பொறியியலாளர்கள், மண்ணியல் நிபுணர்கள், ஆகியோரது கருத்துக்களைச் செவிமடுப்பதோடு சுற்றுச்சூழல் தாக்கம் மீதான மதிப்பீடையும் பெற…

சட்டமன்றம் இயல்பாகக் கலைவது பிஎன் -னைப் பாதிக்காது என்கிறார் டாக்டர்…

நெகிரி செம்பிலான் மாநிலச் சட்டமன்றம் நேற்றிரவு இயல்பாக கலைந்து விட்டது, 13வது பொதுத் தேர்தலில்  பாரிசான் நேசனல் (பிஎன்) அடைவு நிலை மீது எந்தத் தாக்கத்தையும் கொண்டிருக்காது என முன்னாள்  பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் உறுதியாக நம்புகிறார். "பல விஷயங்களுக்கு 'முதலாவது' நிச்சயம் இருக்க வேண்டும். நாம்…

கோ : தண்டா புத்ராவைத் தனிப்பட்ட முறையில் திரையிடுவதில் தப்பில்லை

1969 மே 13 இனக் கலவரத்தை அடிப்படையாக வைத்துத் தயாரிக்கப்பட்ட தண்டாபுத்ராவைத் தனிப்பட்ட முறையில் திரையிடலாம். தப்பில்லை. ஏனென்றால், அமைச்சரவை முன்பு அதைப் பொதுவில் திரையிடுவதற்கு அனுமதி வழங்குவதைத்தான் தள்ளிவைத்திருந்தது. “தனிப்பட்ட முறையில் சில இடங்களில் அது திரையிடப்பட்டிருக்கிறது. அதைப் பொதுவில் திரையிடாதவரை சரிதான். பொதுவில் திரையிடக்கூடாது என்பதுதான்…

இசி: பராமரிப்பு அரசாங்கத்துக்கான வழிகாட்டிகள் தேவை இல்லை

பராமரிப்பு அரசாங்கத்துக்கான வழிகாட்டிகள் தேவை இல்லை என தேர்தல் ஆணைய (இசி) தலைவர் அப்துல்  அஜிஸ் முகமட் யூசோப் சொல்கிறார். ஏனெனில் சட்ட அடிப்படை இல்லாமல் அவற்றை அமலாக்க முடியாது  என்றார் அவர். தேர்தல் சீர்திருத்தம் மீதான நாடாளுமன்ற தேர்வுக் குழுவின் பரிந்துரைகளில் ஒன்றன அந்த வழிகாட்டிகளை சட்டத்துறைத்…

வீடியோவில் சம்பந்தப்பட்ட சரவாக் வழக்குரைஞர் அலுவலகத்தை எம்ஏசிசி சோதனை செய்தது

Global Witness எனப்படும் அனைத்துலக அரசு சாரா அமைப்பு வெளியிட்ட ஊழல் வீடியோவில்  சம்பந்தப்பட்ட வழக்குரைஞர் அல்வின் சொங் அலுவலகத்தை எம்ஏசிசி என்ற மலேசிய ஊழல் தடுப்பு   ஆணைய அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை காலை சோதனையிட்டனர். கூச்சிங்கில் உள்ள சொங் அலுவலகத்தைப் புத்ராஜெயாவைச் சேர்ந்த எம்ஏசிசி அதிகாரிகள் சோதனை செய்ததாக…

‘பாடாங் கோத்தாவில் களமிறங்குவோம், வாரீர்’: தெங்குக்கு குவான் எங்-கின் மறுமொழி

பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங், பாடாங்  கோத்தாவில் பினாங்கு பிஎன் தலைவர் தெங் சாங் இயோவை எதிர்த்துப் போட்டியிட தமக்கு சம்மதமே என்று கூறியுள்ளார்.  பாடாங் கோத்தா மூன்று தவணைக்காலம் தெங் வசமிருந்த ஒரு தொகுதியாகும். ஆனால், 2008-இல் அங்கு அவர் தோற்றுப்போனார். “தெங்-கை எதிர்த்து கோத்தா…

நெகிரி செம்பிலான் சட்டமன்றம் இயல்பாக (automatically) கலைந்துள்ளது

நெகிரி செம்பிலான் சட்டமன்றம் இன்று இயல்பாக (automatically) கலைந்துள்ளது. அந்த மாநில  வரலாற்றிலும் இந்த நாட்டு வரலாற்றிலும் முதன் முறையாக இயல்பாகவே கலைந்து  விட்ட முதல் சட்டமன்றம்  அதுவாகும். நெகிரி செம்பிலான் மாநில அரசமைப்பு இணங்க சட்டமன்றம் இயல்பாக கலைந்துள்ளது. 36 உறுப்பினர்களைக் கொண்ட அந்த மாநிலச் சட்டமன்றம் 2008…