மக்கள் சக்தி தலைவர் ஆர்.எஸ். தானேந்திரன், பாரிசான் நேசனலில் (பிஎன்) மஇகாவை மாற்றும் எண்ணம் தனது கட்சிக்கு இல்லை என்று வலியுறுத்தியுள்ளார். மஇகா மற்றும் பாரிசான் இடையே நடந்து வரும் உள் பதட்டங்களை கட்சி பயன்படுத்திக் கொள்ளாது என்றும், இந்திய சமூகத்தின் நலன்களை முன்னேற்றுவதற்காக மஇகாவுடன் இணைந்து பணியாற்ற…
மாணவி பவானியிடம் ஷரிபா பொது மன்னிப்பு கேட்க வேண்டும்
கடந்த மாதம் Universiti Utara Malaysia (UUM)-ல் டிசம்பர் எட்டாம் தேதி நிகழ்ந்த மாணவர் கருத்தரங்கு ஒன்றில் கே.எஸ் பவானி என்ற இந்திய மாணவி ஒருவரை திட்டிய கருத்தரங்குப் பேச்சாளரான ஷாரிபா ஜொஹ்ரா ஜபின் சையட் ஷா மிஸ்கின் - னின் செயல் கண்டிக்கத்தக்கது என கூறினார் கிள்ளான்…
‘அசையாத வாத்து போல’ இருக்க வேண்டாம் என பிரதமருக்கு தீபக்…
கம்பள வியாபாரி தீபக் ஜெய்கிஷன், தமது நம்பகத்தன்மை பற்றி கேள்வி எழுப்பிய நஜிப் ரசாக்கிற்கு பதிலடி கொடுத்துள்ளார். தனிப்பட்ட துப்பறிவாளர் பி பாலசுப்ரமணியத்தின் இரண்டாவது சத்தியப் பிரமாணத்துக்கு பின்னணியில் உள்ள உண்மைகளை பிரதமர் சொல்ல வேண்டும் என அவர் கோரினார். "உங்கள் பதில் தான் நம்ப முடியாமல் இருக்கிறது.…
டாக்டர் மகாதீர்: ஆம், பிலிப்பீனோக்களுக்குக் குடியுரிமை கொடுக்கப்பட்டது உண்மை
முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட், தாம் பிரதமராக இருந்த காலத்தில் பிலிப்பீனோ குடியேற்றக்காரர்களுக்கு குடியுரிமை கொடுக்கப்பட்டது உண்மை எனக் கூறியிருக்கிறார். ஆனால் எல்லாம் சட்டப்பூர்வமானவை என அவர் வலியுறுத்தினார். "அந்நியர்கள் சில நிபந்தனைகளைப் பூர்த்தி செய்தால் அவர்கள் குடிமக்களாவதை மலேசியா ஏற்றுக் கொள்கிறது." "அவர்களில் பலர் சபாவில்…
‘டாட்டாரான் மெர்டேகா பொங்கல் விழாவில் 50 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கலந்துகொள்வர்’
பிப்ரவரி 2-இல், டாட்டாரான் மெர்டேகாவில் நடைபெறும் பொங்கல் ஒற்றுமை விழாவில் 50,000-த்துக்கு மேற்பட்டோர் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக மஇகா உதவித் தலைவர் எம்.சரவணன் கூறினார். அந்நிகழ்வு மாலை 6மணிக்குத் தொடங்கி இரவு மணி 8.30 வரை நடைபெறும் என்றவர் தெரிவித்தார். அவ்விழாவில்,பல்வேறு பாரம்பரிய கலைகள் இடம்பெறும் என்றும் இந்தியக்…
அகதியாக இருந்தால் விரைவாகக் குடியுரிமை பெறலாம்
பிலிப்பினோ அகதி ஒருவர், தாமும் தம்மைப் போன்ற மற்றவர்களும் எந்த முயற்சியுமின்றியே மலேசிய குடிமக்கள் ஆனதாக சாபா குடியேற்றக்காரர்கள்மீதான அரச விசாரணை ஆணையத்திடம் இன்று கூறினர். இஸ்மாயில் பலாகா, தாம் குடியிருந்த கினாருட் பகுதிக்கு ஒரு மர்ம கும்பல் வந்து தங்களைப் பற்றிய விவரங்களை எல்லாம் குறிப்பெடுத்துக் கொண்டதாகத்…
மலாய் நாளேடுகள் அதிர்ச்சி தரும் சபா ஆர்சிஐ சாட்சியங்களை வெளியிடவில்லை
"வாக்குகளுக்காக குடியுரிமை" திட்டம் பற்றி நேற்று சபா குடியேற்றக்காரர்கள் மீதான ஆர்சிஐ என்ற அரச விசாரணை ஆணையத்தில் தெரிவிக்கப்பட்ட அதிர்ச்சியூட்டும் சாட்சியங்கள் வெளியிடப்படுவதற்குத் தகுதியற்றவை என முக்கிய மலாய் மொழி நாளேடுகள் கருதுவதாகத் தெரிகின்றது. பெரித்தா ஹரியான், உத்துசான் மலேசியா, சினார் ஹாரியான் ஆகிய மூன்று முக்கிய மலாய்…
ஷாரிபா: “நான் விரைவில் பதில் சொல்வேன்…”
இப்போது 'Kak Listen' என அழைக்கப்படும் ஷாரிபா ஜொஹ்ரா ஜபின் சையட் ஷா மிஸ்கின் University Utara Malaysia (UUM) சட்டக் கல்வி மாணவி கேஎஸ் பவானியை திட்டுவதைக் காட்டும் வீடியோ இணையத்தில் அண்மையில் வேகமாகப் பரவியது. அந்த விவகாரம் மீது தாம் விரைவில் பதில் அளிக்கப் போவதாக…
அஸ்மின்: சாபா ஆர்சிஐ சாட்சியங்கள் டாக்டர் எம் ஒரு துரோகி…
சாபா குடியேற்றக்காரர்கள்மீதான அரச விசாரணை ஆணையத்தில் ‘வாக்குகளுக்காக- குடியுரிமை’ திட்டம் ஒன்று இருந்ததாகக் கூறப்பட்டிருப்பது முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் ஒரு தேச துரோகி என்பதைக் காண்பிக்கிறது என்று பிகேஆர் கூறியுள்ளது. “விசாரணையையும் சாட்சிகளின் சாட்சியங்களையும் அணுக்கமாகக் கவனித்து வருகிறோம். அதிர்ச்சிதரும் விசயங்கள் வெளியாகியுள்ளன, பல பெயர்கள்…
பவானி இந்தியாவிற்கு போகவேண்டுமாம்; கூறுகிறார் அம்னோ இனவாதி!
"பவானி உனக்கு இலவசக் கல்வி வேண்டும் என்றால், உன் தாய் நாடான இந்தியாவுக்குப் போ, அங்கு இலவசமாக கிடைக்கும்" என்று இனவாத கட்சியான அம்னோ மகளிர் பிரிவைச் சேர்ந்த நோர் ஹயாத்தி சைடின் தன்னுடைய முகநூலில் குறிப்பிட்டுள்ளார். தோட்டப்புறங்களில் வாழும்போது கழிப்பறை பற்றிகூட அறிந்திராத இந்தியர்கள், இப்போது எல்லாம்…
இசி தலைவர்: சாபா ஆர்சிஐ விசாரணை குறித்து இப்போதைக்குக் கருத்துச்…
தேர்தல் ஆணையம் (இசி), சாபா குடியேற்றக்காரர்கள்மீது அரச விசாரணை ஆணையம் நடத்தும் விசாரணை முடிவடைவதற்குமுன் அது குறித்து கருத்துத் தெரிவிக்காது. அவ்வாறு கருத்துரைப்பது ஆர்சிஐ விசாரணையை அவமதிப்பாகும் என்று தமக்குச் சட்ட ஆலோசனை கூறப்பட்டிருப்பதாக இசி தலைவர் அப்துல் அசீஸ் முகம்மட் யூசுப் கூறினார். “பிப்ரவரியில் இசி விசாரணைக்கு…
ஆர்சிஐ-யில் தெரிவிக்கப்பட்ட விஷயங்கள் ஐஜிபி புலனாய்வைத் தொடங்கப் போதுமானது
Ops Durian Burukல் காலஞ்சென்ற மெகாட் ஜுனிட் மெகாட் அயூப்-பும் அப்துல் அஜிஸ் சம்சுதீனும் சம்பந்தப்பட்டுள்ளதாக கூறப்படுவது தொடர்பில் சபா குடியேற்றக்காரர்கள் மீதான ஆர்சிஐ என்ற அரச விசாரணை ஆணையத்தில் நேற்று தெரிவிக்கப்பட்ட விஷயங்களைக் கொண்டு போலீசார் புலனாய்வைத் தொடங்க முடியும். இவ்வாறு கோலாலம்பூர் முன்னாள் குற்றப்புலனாய்வுத் துறைத்…
இராமசாமி: பிறை ஆர்ப்பாட்டம் பிஎன் கையாள்களின் வேலை
சில கும்பல்கள் பினாங்கு துணை முதலமைச்சர் II பி.இராமசாமிக்குக் குழிபறிக்கும் வேலையில் ஈடுபட்டிருப்பதுபோல் தெரிகிறது. செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களுக்கு வந்த குறுஞ்செய்தி நிபோங் திபால், பிறை, பாகான் டாலாம் ஆகியவற்றைச் சேர்ந்த டிஏபி உறுப்பினர்கள் உள்பட சுமார் 150 பேர் கட்சித் தேர்தலில் வாக்குகள் தப்பாகக் கணக்கெடுக்கப்பட்டதற்கு எதிராக ஆர்ப்பாட்டம்…
‘வாக்குகளுக்காக குடியுரிமை’ – இசி விளக்க வேண்டும் என்கிறார் அம்பிகா
சபாவில் 'வாக்குகளுக்காக குடியுரிமை' கொடுக்கப்பட்டதாக கூறப்படுவதை குடியேற்றக்காரர்கள் மீதான ஆர்சிஐ என்ற அரச விசாரணை ஆணையத்துக்கு முன்பு சாட்சியமளித்தவர்கள் உறுதிப்படுத்தியதை இசி என்ற தேர்தல் ஆணையம் விளக்க வேண்டும் என பெர்சே இணைத் தலைவர் அம்பிகா ஸ்ரீனிவாசன் கேட்டுக் கொண்டுள்ளார். "அந்த ஆர்சிஐ விசாரணை தொடரும் விஷயமாகும். எல்லா…
அரசாங்கம் இரண்டு நிபந்தனைகளுடன் UEC சான்றிதழை அங்கீகரிக்கக் கூடும்
அரசாங்கம் சுயேச்சை சீன இடைநிலைப் பள்ளிகள் வழங்கும் ஐக்கிய தேர்வுச் சான்றிதழை (UEC) அங்கீகரிப்பது பற்றிப் பரிசீலிக்கக் கூடும் என ஹுவா ஜோங் என்னும் மலேசிய சீனர் சங்கங்கள் சம்மேளனத் தலைவர் பெங் இங் ஹுவான் கூறியிருக்கிறார். மாணவர்கள் எஸ்பிஎம் தேர்வில் குறைந்த பட்சம் கிரடிட் தேர்ச்சி பெற்றிருக்க…
UUM: ஷாரிபா கருத்தரங்குடன் எங்களுக்கு தொடர்பு இல்லை
Suara Wanita 1Malaysia (SW1M) என்ற அரசு சாரா அமைப்பு மாணவர் கருத்தரங்கு ஒன்றை நடத்துவதற்கு மண்டபத்தை மட்டுமே UUM என்ற Universiti Utara Malaysia வழங்கியது. அந்தக் கருத்தரங்கில் அந்த அமைப்பின் தலைவர் ஷாரிபா ஜொஹ்ரா ஜபின் சையட் ஷா மிஸ்கின் சட்டக் கல்வி மாணவியான கேஎஸ்…
கருத்தரங்குப் பேச்சாளரைக் கண்டிப்பதில் மசீச-வும் கெராக்கானும் சேர்ந்து கொண்டன
கடந்த மாதம் நிகழ்ந்த மாணவர் கருத்தரங்கு ஒன்றில் Universiti Utara Malaysia (UUM) மாணவி ஒருவரை திட்டிய கருத்தரங்குப் பேச்சாளரான ஷாரிபா ஜொஹ்ரா ஜபின் சையட் ஷா மிஸ்கின் -னைக் கண்டிப்பதில் மேலும் இரண்டு பிஎன் உறுப்புக் கட்சிகள் சேர்ந்து கொண்டுள்ளன. UUMல் டிசம்பர் எட்டாம் தேதி நடைபெற்ற…
நிக் நஸாமி செராமாவை நடத்த முடியவில்லை
ஜோகூர் பாருவில் நேற்றிரவு பிகேஆர், பிஎன் ஆதரவாளர்களுக்கு இடையில் மோதல் ஏற்பட்டது. அதனால் பிகேஆர் தொடர்புப் பிரிவு இயக்குநர் நிக் நஸாமி நிக் அகமட் செராமா நிகழ்வை நடத்த முடியவில்லை. தாமான் ஸ்ரீ ஸ்துலாங்கில் இரவு எட்டு மணி வாக்கில் செராமா மண்டபத்துக்குள் தம்மை நுழைய விடாமல் பிஎன்,…
மாஹ்புஸ்: வங்கி அதிகாரி இடைநீக்கம் செய்யப்பட்டதற்குப் பின்னணியில் பிஎன்
பாங்க் இஸ்லாம் தலைமைப் பொருளாதார நிபுணர் அஸ்ருல் அஸ்வார் அகமட் தாஜுதினை ரை இடைநீக்கம் செய்யுமாறு அந்த வங்கிக்கு பிஎன் அரசாங்கம் அரசியல் நெருக்குதல் கொடுத்திருக்க வேண்டும் என பாஸ் உதவித் தலைவர் மாஹ்புஸ் ஒமார் கருதுகிறார். அந்த வங்கிக்கு முக்கியமான தொழில் ரீதியிலான அறிக்கையை வழங்கியதற்காக தனது…
ஜெயகுமார் “எம்பி நிதிகள்” மீதான முறையீட்டில் தோல்வி
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான சிறப்பு தொகுதி ஒதுக்கீடுகள் விநியோகம் மீதான அரசாங்க முடிவை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடுப்பதற்கு அனுமதி கோரி சுங்கை சிப்புட் எம்பி டாக்டர் மைக்கல் ஜெயகுமார் செய்து கொண்ட முறையீட்டை கூட்டரசு நீதிமன்றம் நிராகரித்துள்ளது. அந்த முடிவைத் தொடர்ந்து விசாரணையைத் தொடங்குவதற்கான விண்ணப்பத்தை ஏற்றுக் கொண்ட…
13வது பொதுத் தேர்தலில் அரசாங்கத்தை ‘வீழ்த்துவதற்காக’ பேரணி நிகழ்ந்தது
The Himpunan Kebangkitan Rakyat என்னும் மக்கள் எழுச்சிப் பேரணியின் நோக்கம் ஆளும் அரசாங்கத்தை 'வீழ்த்துவதாகும்'. ஆனால் அது வரும் பொதுத் தேர்தலில் என அந்தப் பேரணி ஏற்பாட்டுக் குழுத் தலைவர் முகமட் சாபு கூறுகிறார். "நாங்கள் உண்மையில் வரும் பொதுத் தேர்தலில் அரசாங்கத்தை 'வீழ்த்த' விரும்புகிறோம்," என…
பவானிக்கு புகழாரம் ஷாரிபாவுக்கு கண்டனம்
Suara Wanita 1Malaysia (SW1M) எனப்படும் அமைப்பு ஒன்றின் தலைவி ஷாரிபா ஜொஹ்ரா ஜபின் சையட் ஷா மிஸ்கின் -உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு திட்டு வாங்கிய Universiti Utara Malaysia (UUM) சட்டக் கல்வி மாணவி கேஎஸ் பவானிக்கு தொடர்ந்து பாராட்டுக்கள் கிடைத்து வருகின்றன. அதே வேளையில் ஷாரிபாவை…
அன்வாரும் கைரியும் அவதூறு வழக்கைத் தீர்த்துக் கொண்டனர்
எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் அம்னோ இளைஞர் தலைவர் கைரி ஜமாலுதின் அபு பாக்காருக்கு எதிராக தொடுத்த அவதூறு வழக்கை இன்று முடிவுக்குக் கொண்டு வந்துள்ளார். இரு தரப்பும் அந்த வழக்கைத் தீர்த்துக் கொள்வதற்கு இணக்கம் கண்டதே அதற்குக் காரணமாகும். அந்த இணக்கத் தீர்வை கோலாலம்பூர் உயர் நீதிமன்றம்…
கௌரவமில்லாத பேச்சாளர் அம்னோவுடன் தொடர்புடைய கட்சியில் இருந்தவர்
அண்மையில் Universiti Utara Malaysia (UUM)ல் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் அந்தப் பல்கலைக்கழகத்தின் மாணவி ஒருவரை திட்டிய ஷாரிபா ஜொஹ்ரா ஜபின் சையட் ஷா மிஸ்கின்-னிடமிருந்து அம்னோ தலைவர்கள் ஒதுங்கியுள்ள போதிலும் அவர் அம்னோ வட்டாரங்களில் தீவிர ஈடுபாடு கொண்டிருந்தது தெரிய வந்துள்ளது. அவர் கிம்மா எனப்படும் மலேசிய…


