என்எப்சி பாணியிலான அம்பலத்துக்கு தயாராகுங்கள் என பிகேஆர் நஜிப்-பிடம் சொல்கிறது

960 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள அம்பாங் எல்ஆர்டி விரிவுத் திட்டம் மீது தூய்மையாக இருக்க வேண்டும் அல்லது என்எப்சி எனப்படும் தேசிய விலங்குக் கூட நிறுவன பாணியிலான அம்பலத்தை எதிர்கொள்ளத் தயாராக இருக்குமாறு பிகேஆர் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கை எச்சரித்துள்ளது. அந்தத் திட்டம் டெண்டரில் தோல்வி கண்ட…

உரிமைகளை மீட்க கிள்ளானில் அமைதி ஊர்வலம்

இந்நாட்டில் தொடர்ந்து மறுக்கப்பட்டு மறைக்கப்பட்டு வரும் மலேசிய இந்தியர்களின் அடிப்படை உரிமைக்கான கோரிக்கைகளை மத்திய அரசாங்கம் உடனடியாக அமல்படுத்தவேண்டும் எனக் கோரி நேற்று மாலை கிள்ளானில் அமைதி ஊர்வலம் ஒன்று இடம்பெற்றது. (படங்கள்) சிலாங்கூர் மாநில நடவடிக்கை குழு ஏற்பாடு செய்திருந்த இந்த அமைதி ஊர்வலத்தில் சிறுவர்கள் தொடக்கம்…

கிளந்தான் எரிவாயு திரெங்கானு செல்வது ஏன்?

கிளந்தானின் எண்ணெய் உரிமையைப் பாதுகாக்க அமைக்கப்பட்ட அமைப்பு ஒன்று, தேசிய எண்ணெய் நிறுவனமான பெட்ரோனாஸ் கிளந்தானுக்கு அப்பால் கண்டுபிடிக்கப்பட்ட எரிவாயுவைத் திரெங்கானுவுக்குக் கொண்டுசெல்லத் திட்டமிட்டிருப்பதாகவும் இதனால் பாஸ் ஆட்சியில் உள்ள அம்மாநிலத்துக்குக் கிடைக்க வேண்டிய நன்மைகள் கிடைக்காமல் போகும் என்றும் குறைகூறியுள்ளது. Gabungan Profesional Tuntut Royalti, Pendaratan…

300 பிஎன் உறுப்பினர்கள் பிகேஆரில் சேர்கிறார்கள்

கெராக்கான், இந்தியர் முற்போக்கு முன்னணி, மஇகா ஆகிய கட்சிகளின் முன்னாள் உறுப்பினர்கள் 300பேர் பிகேஆரில் சேர விண்ணப்பித்துக் கொண்டிருக்கிறார்கள். நேற்றிரவு பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிம், பல இனங்களையும் சேர்ந்த 5,000பேர் திரண்டிருந்த கூட்டத்தில் சொலிடேரிட்டி அனாக் மூடா மலேசியா தலைவர் பத்ருல் ஹிஷாம் ஷாஹாரினிடமிருந்து(ச்சேகு பார்ட்…

‘ராபிஸி, பாக்கா பிரச்னைகள் சாதாரணமானவை என்கிறார் அன்வார்

பிகேஆர் கட்சியின் காலித் இப்ராஹிம் வழி நடத்தும் சிலாங்கூர் நிர்வாகத்துடன் தொடர்புடைய இரண்டு அண்மையப் பிரச்னைகள் சாதாரணமானவை என எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் கூறுகிறார். சிலாங்கூர் அரசாங்கப் பதவி ஒன்றிலிருந்து பிகேஆர் வியூக இயக்குநர் ராபிஸி இஸ்மாயில் திடீரென விலகிக் கொண்டதும் காலித்-தின் அரசியல் செயலாளர் பரிந்துரைக்…

உங்கள் கருத்து: அறிகுறிகளை நோயுடன் இணைத்து குழப்பக் கூடாது

"தாய்மொழிப் பள்ளிகள் மலேசிய சமுதாயத்தை பிரித்து விட்டன எனக் கூறுவது கல்வி முறையில் உள்ள ஏற்றத்தாழ்வை மறைப்பதற்கு ஒப்பாகும்" டாக்டர் மகாதீரின் மோசமான மருந்து அடையாளம் இல்லாதவன்_3f4a: கல்வி முறையில் காணப்படுகின்ற பல்வகைத்தன்மை வலிமையாகும். அது பலவீனமாக இருக்க வேண்டிய அவசியமில்லை. அரசாங்கத்தின் பாகுபாடான கொள்கைகளே நாட்டை பிளவுபடுத்தி…

‘pendatang’ என்ற கருத்துக்களை புறக்கணித்து விடுங்கள் என பிரதமர் சீனர்களிடம்…

சீன சமூகத்தினரை 'pendatang' (குடியேறிகள்) என சிலர் அழைத்ததால் மனம் புண்பட வேண்டாம் என அந்த சமூகத்தை பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கேட்டுக் கொண்டிருக்கிறார். காரணம் அத்தகையை கருத்துக்களை 'கிறுக்கர்களான' சிலரே கூறியுள்ளனர் என்றார் அவர். சீன சமூகத்தினரின் உணர்வுகளைக் காயப்படுத்தும் பொருட்டு வேண்டுமென்றே சிலர் அந்தக்…

உத்துசான் அன்வாரை ‘மர்மப் பெண்’ ஒருவருடன் இணைக்கிறது

எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிமுக்கு மொத்தம் 3 பில்லியன் ரிங்கிட் உள்ள 20 கணக்குகள் இருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடையவர் என சொல்லப்படுகின்ற மாது ஒருவருடைய முகம் அம்பலமாகியுள்ளதாக மிங்குவான் மலேசியா இன்று செய்தி வெளியிட்டுள்ளது. அந்த ஏடு அம்னோவுக்குச் சொந்தமான உத்துசான் மலேசியாவின் ஞாயிற்றுக் கிழமை பதிப்பாகும்.…

பெர்சே ஒட்டக்காரர்கள் டாத்தாரான் மெர்தேக்காவுக்குள் ‘ஊடுருவினர்’

இன்று டாத்தாரான் மெர்தேக்காவுக்குச் செல்லும் எல்லா சாலைகளிலும் தடுப்புக்கள் போடப்பட்டிருந்தன. காரணம் இன்னொரு பெர்சே பேரணி அல்ல. வரலாற்றுச் சிறப்புமிக்க அந்தச் சதுக்கம் ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் கேஎல் நெடுந்தூர ஒட்டத்துக்கு இறுதிக் கோடாக பயன்படுத்தப்பட்டதே அதற்குக் காரணமாகும். இருந்தாலும் அந்த நிகழ்வு பெர்சே ஆதரவாளர்களைக் கவர்ந்தது. அவர்கள் அதனை…

இசா-வின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள பாகிஸ்தானியர் மீது கவனம்

மலேசியாவில் உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்று பாகிஸ்தானிய பிரஜைகளுக்கு உதவி செய்யுமாறு பாகிஸ்தான் அரசாங்கத்தை அந்த நாட்டின் மனித உரிமை ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது. "பாகிஸ்தான் வெளியுறவுச் செயலாளருடன் தொடர்பு கொண்டுள்ள பாகிஸ்தான் மனித உரிமை ஆணையம், அந்த விவாகரம் மீது வெளியுறவு அலுவலகம்…

‘நவீன அடிமை’ முறையிலிருந்து டாக்சி ஒட்டுநர்களை விடுவிக்க பிரதமர் வாக்குறுதி

தனியார் நிறுவனங்கள் டாக்சி அனுமதிகளில் அனுபவித்து வரும் ஏகபோக உரிமையை ரத்துச் செய்யப் போவதாக பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் வாக்குறுதி அளித்துள்ளார். அதற்குப் பதில் டாக்சி ஒட்டுநர்களுக்கு நேரடியாக அனுமதிகளை வழங்க அரசாங்கம் எண்ணியுள்ளதாக அவர் சொன்னார். டாக்சி தொழிலுக்கான புதிய வடிவமைப்பின் ஒரு பகுதியாக "மிக…

ஆட்சேபக்காரர்கள் போலீசாரைத் தாண்டிச் சென்று கெபெங்கில் குந்தியிருப்பு மறியலை நடத்தினர்

ஆயிரத்துக்கு மேற்பட்ட ஆட்சேபக்காரர்கள் போலீஸ் சாலைத் தடுப்புக்களத் தாண்டிச் சென்று கெபெங் தொழில் பேட்டைக்கு அருகில் ஒன்று திரண்டு லினாஸ் அரிய மண் தொழில் கூடத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். கடந்த ஞாயிற்றுக் கிழமை தொடக்கம் அருகில் உள்ள பாலோக் கடற்கரையில் கூடியுள்ள ஆட்சேபக்காரர்களின் வரவை எதிர்பார்த்து போலீசார் இன்று…

ஹிண்ட்ராப் தமிழ்ப் பள்ளிக்கூடம் தொடர்பான புதிய வழக்கில் பெற்றோர்களையும் இணைக்கிறது

ஹிண்ட்ராப் அரசாங்கத்திற்கு எதிரான தனது வழக்கை மீண்டும் தாக்கல் செய்யும் முயற்சியின் கீழ் அதில் தமிழ்ப் பள்ளிக்கூட மாணவர்களுடைய பெற்றோர்களையும் சேர்த்துக் கொள்ளவிருக்கிறது. அந்த வழக்கில் மற்ற பல கோரிக்கைகளுடன் இந்த நாட்டில் உள்ள 523 தமிழ்ப் பள்ளிகளும் முழு உதவி வழங்கப்பட வேண்டும் என்பதும் அடங்கும். "பாதிக்கப்பட்ட…

விவாதங்கள் மீது தடை உத்தரவு ஏதுமில்லை என்கிறார் சைபுதின்

அம்னோ உறுப்பினர்கள் எதிர்க்கட்சி அரசியல்வாதிகளுடன் விவாதம் நடத்துவதற்கு அம்னோ எந்தத் தடை உத்தரவையும் பிறப்பிக்கவில்லை என உயர் கல்வித் துணை அமைச்சர் சைபுதின் அப்துல்லா இன்று கூறியிருக்கிறார். நாட்டின் முழுமையான அரசியல் முறையில் விவாதங்கள், பண்பாட்டில் ஒரு பகுதி அல்ல என பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் அறிக்கை…

தொழிலாளர் வீடமைப்புத் திட்டத்தின் கீழ் 2 மில்லியன் ரிங்கிட் மட்டுமே…

தீவகற்ப மலேசியாவில் தோட்டத் தொழிலாளர் குறைந்த விலை வீடமைப்புத் திட்டத்துக்காக ஒதுக்கப்பட்ட 50 மில்லியன் ரிங்கிட்டில் இரண்டு மில்லியன் ரிங்கிட் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளதாக மனித வள அமைச்சர் டாக்டர் எஸ் சுப்ரமணியம் இன்று தகவல் வெளியிட்டுள்ளார். பாங்க் சிம்பானான் நேசனல் கீழ் கடந்த ஆண்டு அமலாக்கப்பட்ட அந்தத் திட்டம்,…

Opps 2020 கூட்டக் குறிப்புக்கள் உண்மையானவை என மாணவர்கள் வலியுறுத்துகின்றனர்

மாணவர் தேர்தல்களில் தில்லுமுல்லு செய்வதற்கு அம்னோ தலைவர்களும் அரசாங்க நிறுவனங்களும் போலீசாரும் சதித் திட்டத்தை வகுப்பதற்காக நடத்தப்பட்டது எனக் கூறப்படும் கூட்டக் குறிப்புக்கள் உண்மையானவை என பிஎம்என் என்ற Pro-Mahasiswa Nasional அமைப்பு நம்புகின்றது. அதற்கான ஆவணம் தங்களிடம் இருப்பதாக பிஎம்என் பேச்சாளர் எடிக்குப் லாக்கிப் செடியாந்தோ கூறினார்…

லினாஸ் எதிர்ப்பு பாலோக்- கெபெங் ஆக்கிரமிப்பு பேரணியின் தொடக்கத்தில் 300…

குவாந்தானில் 24 மணி நேர பாலோக்- கெபெங் ஆக்கிரமிப்பு பேரணியை இன்று 300க்கும் மேற்பட்ட லினாஸ் எதிர்ப்பு போராளிகள் தொடக்கி வைத்தனர்.  பாலோக் கடற்கைரையில் தோரணங்களை முதலில் ஒரு குழு நடத் தொடங்கியது. பிற்பகலில் காற்று வேகமாக வீசிய போது 50 பேர் லினாஸ் எதிர்ப்பு சுலோகங்களைக் கொண்ட…

‘ஆர்டிஎம் முன்கூட்டியே ஒலிபரப்பை பதிவு செய்வது தில்லுமுல்லுகளுக்கு வழி வகுக்கும்’

ஆர்டிஎம் எனப்படும் மலேசிய வானொலி தொலைக்காட்சி முன்கூட்டியே பதிவு செய்யப்பட்ட கட்சி கொள்கையறிக்கைகளை மட்டுமே ஒலிபரப்புச் செய்யும் என கட்டுப்படுத்துவது அந்த கொள்கையறிக்கைகள் கத்திரிக்கப்படுவதற்கும் செய்யப்படுவதற்கும் திருத்தப்படுவதற்கு வழி வகுத்து விடும் எனப் பாஸ் குற்றம் சாட்டியுள்ளது. "இப்போது கூட அரசியல் தலைவர்கள் ஏதாவது சொல்லும் போது அவர்களுடைய…

எம்பி-க்கு விலைபேசும் வீடியோமீது எம்ஏசிசி நடவடிக்கை எடுக்க ஜிங்கா13 வலியுறுத்து

மாற்றரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சிதாவ கையூட்டுக் கொடுக்கும் முயற்சிகள் அம்பலப்படுத்தப்பட்டுள்ள போதிலும் மலேசிய ஊழல்தடுப்பு ஆணையம் அதன்மீது நடவடிக்கை எடுக்காதிருப்பதை பிகேஆர் தொடர்புள்ள ஊழல் கண்காணிப்பு அமைப்பான ஜிங்கா 13 கண்டித்துள்ளது. ஷா ஆலம் பாஸ் எம்பி காலிட் சமட் “வெறுக்கத்தக்க ஒரு செயலைக்” காண்பிக்கும் வீடியோ…

ஐஎஸ்ஏ கைதிகள் இருவர் உண்ணாவிரதம் தொடங்கினர்

பொறுத்துப் பொறுத்துப் பார்த்தார்கள்.விடுதலை செய்யப்படுவதாகத் தெரியவில்லை. அவ்விருவரும் வியாழக்கிழமை  இரண்டாம் தடவையாக உண்ணாவிரதத்தைத் தொடங்கினர்.பேராக், கமுந்திங் தடுப்புமுகாமில் உள்ள கைதிகள் இருவர்தான் இப்படி உண்ணாநிலை போராட்டத்தைத் தொடங்கியிருப்பவர்கள். மலேசியர்களான அவ்விரு கைதிகளும் மனித உரிமை ஆணையம்(சுஹாகாம்) தங்கள் விடுதலைக்கு ஏற்பாடு செய்யும்வரை காத்திருக்க விரும்பவில்லை என சுதந்திரத்துக்குப் போராடும்…

கையூட்டுக் கொடுப்போர் கறுப்புப்பட்டியலிடுவதை டிஐ-எம் ஆதரிக்கிறது

கையூட்டுக் கொடுத்ததாகக் கண்டுபிடிக்கப்பட்டும் நிறுவனங்களின் பெயர்களைக் கறுப்புப் பட்டியலில் சேர்ப்பதென்ற மலேசிய ஊழல்தடுப்பு ஆணைய(எம்ஏசிசி)த்தின் முடிவை ட்ரேன்பேரன்சி இண்டர்நேசனல் மலேசியா(டிஐ-எம்) வரவேற்கிறது. ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபடுவோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுப்பது அவசியம் என்பதை டிஐ-எம் தலைவர் பால் லோ நேற்று ஓர் அறிக்கையில் வலியுறுத்தி இருந்தார். ஊழல்கள்மீதான…