விஸ்மா புத்ரா (Wisma Putra), நாட்டில் வசிக்கும் அல்லது அந்த நாட்டின் வழியாகப் பயணம் செய்யும் குடிமக்கள், e-Konsular இணையதளம் மூலம் தங்களது தொடர்பு விவரங்களைப் பதிவு செய்து, அவற்றைத் தொடர்ந்து புதுப்பித்து வைத்திருக்குமாறு அறிவுறுத்துகிறது. நேபாளத்தின் வடக்கு ராசுவா மாவட்டத்தில் உள்ள போதே கோசி(Bhote Koshi) ஆற்றுப்…
‘கறை படிந்த’ வேட்பாளர்களை கைவிடுமாறு நஜிப்புக்குச் சவால்
ஊழலுக்காக விசாரிக்கப்படும் கட்சி உயர் அதிகாரிகளை பிஎன் வேட்பாளர் பட்டியலிலிருந்து அகற்றுமாறு பிகேஆர் பிஎன் தலைவர் நஜிப் அப்துல் ரசாக்கிற்குச் சவால் விடுத்துள்ளது. அம்னோ மகளிர் தலைவி ஷாரிஸாட் அப்துல் ஜலில், சபா முதலமைச்சர் மூசா அமான், சட்டத்துறைக்குப் பொறுப்பான அமைச்சர் முகமட் நஸ்ரி அப்துல் அஜிஸ், நெகிரி…
சூலு பயங்கரவாதிகளுடன் நிகழ்ந்த மோதலில் படை வீரர் ஒருவர் கொல்லப்பட்டார்
இன்று காலை லாஹாட் டத்துவில் சுங்கை ஞாமோக்கில் பாதுகாப்புப் படைகளுக்கும் ‘சூலு அரச இராணுவம்’ எனச் சுய-பிரகடனம் செய்துகொண்டிருக்கும் ஆயுதம்தாங்கிய கும்பலுக்குமிடையில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் ஆயுதப்படை வீரர் ஒருவர் பலியானார். பாதுகாப்புப் படையினர், தஞ்சோங் பத்து-க்கு அருகில் சுங்கை ஞாமோக்கைச் சுற்றிலும் துடைத்தொழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது…
செம்பூர்னாவில் ஆறு சந்தேகப் பேர்வழிகள் கைது
செம்பூர்னா, கம்போங் பங்காவ்-பங்காவ்-இல் போலீஸ் மேற்கொண்ட ஒரு நடவடிக்கையில், தென் பிலிப்பீன்ஸைச் சேர்ந்த சூலு பயங்கரவாதிகளுடன் தொடர்புள்ளவர்கள் என்ற சந்தேகத்தின்பேரில் அறுவர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் போலீசாரால் மிகவும் தேடப்படும் ஒரு நபராவார். வாட் 69 மின்னல் படையினரும் பொது நடவடிக்கை படையினரும் சந்தேகப் பேர்வழிகள்…
போலீஸின் இரட்டை நியாயத்தைச் சாடுகிறார் ரபிஸி
பிகேஆர், போலீஸ் இரட்டை நியாயத்தைக் கடைப்பிடிப்பதாகக் குறைகூறியுள்ளது. நேற்று, அதன் தலைமையகத்துக்குமுன் ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் முட்டைகள், குச்சிகள் முதலிவற்றை வீசி எறிந்ததை போலீசார் வேடிக்கை பார்த்தனரே தவிர நடவடிக்கை எடுக்கவில்லை என்றது கூறியது. அப்படிச் செய்தவர்களில் சிலர் அம்னோ, பிஎன் உறுப்பினர்கள் என்று பிகேஆர் வியூக இயக்குனர் ரபிஸி…
பிகேஆர்: சம்பள உயர்வு கொடுக்கும் அதிகாரம் அரசாங்கத்துக்கு இல்லை
அரசாங்க ஊழியர்களுக்கு நேற்று சம்பள உயர்வை அரசாங்கம் அறிவித்தது. ஆனால் அது அறிவிக்கப்பட்ட நேரம் குறித்து பிகேஆர் வியூக இயக்குநர் ராபிஸி இஸ்மாயில் கேள்வி எழுப்பியுள்ளார். பிஎன் கூட்டரசு அரசாங்கத்துக்கு வழங்கப்பட்ட ஐந்து ஆண்டு தவணைக் காலம் மார்ச் 8ம் தேதி முடிந்து விட்டதாக அவர் சொன்னார். உண்மையில்…
இரத்தக்குழாய் அடைப்பால் பரப்புரை செய்வதிலிருந்து ஒதுங்கி இருப்பார் பாலா
முன்னாள் தனியார் துப்பறிவாளரான பி.பாலசுப்ரமணியத்துக்கு இருதய இரத்தக்குழாய்களில் மூன்று இடங்களில் அடைப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து அவர் பக்காத்தான் ரக்யாட்டின் தேர்தல் பரப்புரைகளில் தொடர்ந்து பங்கேற்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. மார்ச் முதல் நாள், கோத்தா பாருவில் பரப்புரையில் ஈடுபட்டிருந்தபோது முதன்முதலாக அவருக்கு நெஞ்சில் வலி ஏற்பட்டது. அதைத்…
தடுப்புக் காவல் மரணம்: சடலத்தை குடும்பத்தினர் சோதனை செய்வதற்கு அனுமதிக்கப்படவில்லை
கம்பார் மாவட்ட போலீஸ் நிலையத்தில் தடுப்புக் காவலில் இருந்த போது மரணமடைந்த எம் ரகு-வின் சடலத்தை தாங்கள் சோதனை செய்யவும் தங்கள் கண்டுபிடிப்புக்களை கேமிராவில் பதிவு செய்யவும் அனுமதிக்கப்படாததால் ஏதோ தவறு நிகழ்வதாக அவரது குடும்பத்தினர் கருதுகின்றனர். சடலத்தை சோதனை செய்வதற்கு கம்பார் மருத்துவமனை சவக் கிடங்கிற்கு தாம்…
முன்னாள் MNLF தளபதி சுட்டுக் கொல்லப்பட்டதை போலீஸ் உறுதிப்படுத்துகிறது
கடந்த வாரம் பாதுகாப்புப் படைகள் கொன்ற சுலு 'ஜெனரல்' மோரோ தேசிய விடுதலை முன்னணியின் (MNLF) முன்னாள் தளபதி ஹாஜி மூசா என்பதை சபா போலீஸ் தலைவர் ஹம்சா தாயிப் இன்று உறுதிப்படுத்தியுள்ளார். "தஞ்சோங் பத்துவில் பாதுகாப்புப் படைகள் ஹாஜி மூசா எனப் பெயருடைய 'ஜெனரல்' ஒருவரை சுட்டுக்…
சபாவில் போலீஸ் நடவடிக்கையைத் தொடர்ந்து அங்கிருந்து பிலிப்பினோக்கள் வெளியேறுகின்றனர்
சபா செம்போர்ணாவிலிருந்து பிள்ளைகள் உட்பட 57 பிலிப்பினோக்கள் சிறிய படகுகள் மூலம் நேற்று பிலிப்பின்ஸில் உள்ள தாவி தாவி தீவுகளைச் சென்றடைந்தனர். மலேசியப் பாதுகாப்புப் படைகள் தங்களை விரட்டியதாக அவர்கள் கூறிக் கொண்டனர். ஞாயிற்றுக் கிழமை இரவு எட்டு மணி வாக்கில் தாங்கள் செம்போர்ணாவிலிருந்து புறப்பட்டதாகவும் ஒர் இரவு…
உள்துறை அமைச்சர் அவர்களே, அவர்கள் இப்போது பயங்கரவாதிகளா ?
'உண்மையில் பெரிய நேர்மாற்றம்- முஸ்லிம் சகோதரர்கள் என்ற நிலையிலிருந்து பயங்கரவாதிகள் என்ற நிலைக்கு. இப்போது யாரை நம்புவது உள்துறை அமைச்சரையா அல்லது சபா முதலமைச்சரையா ? ஊடுருவல்காரர்கள் பயங்கரவாதிகள் என அழைக்கப்படுவதை புத்ராஜெயா ஏற்றுக் கொள்கிறது சின்ன அரக்கன்: லஹாட் டத்து 'ஊடுருவல்காரர்களை' 'பயங்கரவாதிகள்' என அதிகாரப்பூர்வமாக அழைப்பதற்கு…
ஒப்ஸ் டவுலாட்டின் ஏழாம் நாள்: இன்றுவரை 97பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்
சாபாவில் ஒப்ஸ் டவுலாட் தொடங்கி இன்று ஏழாவது நாள். இந்நடவடிக்கையின்கீழ் இதுவரை 97 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களுக்கு ‘அரச சூலு இராணுவம்’ என்று சுயமாக பிரகடனம் செய்து கொண்டிருப்போருடன் தொடர்பிருக்கலாம் என நம்பப்படுவதாக சாபா போலீஸ் கமிஷனர் ஹம்சா தாயிப் (இடம்) கூறினார். “தேசிய…
சுலு ஊடுருவல்காரர்கள் “விலகிக் கொள்வது” பற்றி சிந்திக்கின்றனர்
சபாவுக்குள் ஆயுதங்களுடன் ஊடுருவிய தமது ஆதரவாளர்கள் சண்டையிலிருந்து 'விலகிக் கொள்வது' மீது பிலிப்பின்ஸ் அரசாங்கத்துடன் பேச்சு நடத்த சுலு சுல்தான் எனத் தம்மைப் பிரகடனம் செய்து கொண்டுள்ள மூன்றாவது ஜமாலுல் கிராம் தமது பேராளர்களை அனுப்பியுள்ளார். ஜமாலுல் கிராமின் இளைய சகோதரர் இரண்டாவது சுல்தான் பாந்திலான் எஸ்மாயில் கிராமும்…
லிம் குவான் எங் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் சட்டவிரோதமானது
'அல்லாஹ்' விவகாரம் மீது பல அரசு சாரா அமைப்புக்கள் வெள்ளிக் கிழமை நடத்திய ஆர்ப்பாட்டம் சட்ட விரோதமானது எனப் போலீசார் அறிவித்துள்ளனர். அந்த ஆர்ப்பாட்டம் குறித்து மாநில அரசாங்கப் பேராளர்களும் பட்டாணி போலீஸ் நிலையத்தைச் சேர்ந்த ஒரு போலீஸ்காரரும் புகார் செய்துள்ளதை ஜார்ஜ் டவுன் ஒசொபிடி கான் கொங்…
வேதமூர்த்தி உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினார்
ஒரங்கட்டப்பட்ட இந்திய சமூகத்தின் பிரச்னைகளைத் தீர்ப்பதற்கு ஹிண்ட்ராப் வழங்கிய ஐந்தாண்டுப் பெருந்திட்டத்தை அங்கீகரிக்குமாறு பிஎன் -னுக்கும் பக்காத்தான் ராக்யாட்டுக்கும் அழுத்தம் கொடுக்கும் பொருட்டு தனி மனிதராக உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளார். "மலேசிய இந்தியர்களுடைய மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளன என்பதை அவை (பக்காத்தானும் பிஎன் -னும்) அங்கீகரிக்குமாறு செய்வதே உண்ணாவிரதப்…
‘ஊடகங்கள் ஊடுருவல்காரர்களைப் ‘பயங்கரவாதிகள்’ என்றுதான் குறிப்பிட வேண்டும்’
சாபா, லாஹாட் டத்துவில் ஒப்ஸ் டவுலாட் குறித்து செய்தி சேகரிக்கும் செய்தியாளர்கள் சூலு ஊடுருவல்காரர்களைப் ‘பயங்கரவாதிகள்’ என்றுதான் இனி குறிப்பிட வேண்டும். அத்துடன் சூலு சுல்தான் என்றும் கூறக்கூடாது. சாபா முதலமைச்சர் மூசா அமான் (இடம்) தலைமையில் செயல்படும் சாபா பாதுகாப்புக் குழு, இன்று காலை இந்த உத்தரவை…
சைபுலின் தந்தை பிகேஆரில் சேர்கிறார்
சைபுல் புகாரி அஸ்லானின் தந்தை மாற்றரசுக்கட்சியான பிகேஆரில் சேர முடிவுசெய்து பெட்டாலிங் ஜெயாவில் உள்ள கட்சி செயலகத்தில் அவரின் விண்ணப்பப் பாரத்தை இன்று சமர்பித்தார். அன்வார் இப்ராகிம் தம்முடன் குதப்புணர்ச்சியில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டியவர் சைபுல். அக்குற்றச்சாட்டு மீது வழக்கு நடந்து இவ்வாண்டு ஜனவரியில் அன்வார் குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டார். “நான்…
பயத்தின் காரணமாக மாணவர்களில் பாதிப்பேர்தான் பள்ளி செல்கிறார்கள்
சாபாவில் சூலு இராணுவம் என்று கூறிக்கொள்வோரின் ஊடுருவலை அடுத்து தேசா கெஞ்சானா பெல்டாவில் ஒரு வாரமாக மூடிக்கிடந்த பள்ளிக்கூடங்கள் இன்று மீண்டும் திறக்கப்பட்டபோது மாணவர்களில் பாதிப்பேர்தான் வகுப்புகளுக்கு வந்திருந்தனர். எஸ்எம்கே தேசா கெஞ்சானாவில், எல்லா வகுப்புகளும் பாதித்தான் நிரம்பி இருந்தன. ஊடுருவலை எண்ணிப் பெற்றோரும் மாணவரும் அச்சம் கொண்டிருப்பதுதான்…
எதிரிகளுடைய சுரங்கப் பாதைகள் ஏதும் கண்டு பிடிக்கப்படவில்லை
தெற்கு பிலிப்பின்ஸிலிருந்து ஊடுருவல்காரர்கள் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் நிர்மாணிக்கப்பட சுரங்கப் பாதை ஒன்றின் வழியாக கம்போங் தண்டுவோ-வுக்குள் நுழைந்ததாக அந்தக் கிராம மக்கள் சொல்வதை சபா போலீஸ் ஆணையாளர் ஹம்சா தாயிப் மறுத்துள்ளார். "அத்தகைய சுரங்கப் பாதை ஏதும் இருப்பதாக எங்களுக்கு இது வரை தகவல்…
மகாதீர்: பிஎன் சிலாங்கூரை மீண்டும்எடுத்துக் கொள்ளாவிட்டால் மலாய் உரிமைகள் பறிபோகும்
சிலாங்கூர் மாநிலத்தில் மலாய்க்காரர்கள், பூமிபுத்ராக்கள் ஆகியோருடைய உரிமைகளும் நிலையும் நிலைத்திருப்பதற்கு அந்த மாநிலம் எதிர்க்கட்சிகளிடமிருந்து காப்பாற்றப்பட வேண்டும் என முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் கூறிக் கொண்டுள்ளார். சிலாங்கூரில் பொருளாதாரத்தை தங்கள் கட்டுக்குள் எடுத்துக் கொண்ட எதிர்த்தரப்புக் கூட்டணி அந்த மாநிலத்தில் அரசியலையும் தன் கட்டுக்குள் வைத்திருக்கும்…
பராமரிப்பு அரசாங்கப் பிரதமர் நஜிப் இப்போது காய நேரம் (injury…
"13வது பொதுத் தேர்தலுக்குக் காத்திருப்பது காய நேரத்துக்குள் (injury time) சென்று விட்ட காற்பந்து போட்டியைப் போன்றதாகும். ஒவ்வொருவரும் நடுவர் விசிலை ஊதி ஆட்டத்தை நிறைவு செய்வதற்கு அவரை பார்த்துக் கொண்டிருக்கின்றனர்" லிம் கிட் சியாங்: இப்போது மார்ச் 9, நஜிப் தவணைக் காலம் முடிந்து விட்டது ஸ்டார்ர்:…
பிரதமர்: கிள்ளான் பள்ளத்தாக்கில் தாங்கக் கூடிய விலையில் 80,000 வீடுகள்…
கிள்ளான் பள்ளத்தாக்கிலும் கூட்டரசுப் பிரதேசத்திலும் நடுத்தர வருமானத்தை கொண்ட மக்களுக்கு தாங்கக் கூடிய விலையில் 80,000 வீடுகள் கட்டப்படும் என பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் இன்று அறிவித்தார். ஒரே மலேசியா மக்கள் வீடமைப்புத் திட்டத்தின் ( PR1MA )கீழ் கிள்ளான் பள்ளத்தாக்கில் 50,000 வீடுகள் கட்டப்படும் என்றும்…
தியான் சுவா கட்டுரை மீது போலீசார் பிகேஆர் ஏட்டிடம் விசாரித்தனர்
லஹாட் டத்து பூசல் மீது பிகேஆர் உதவித் தலைவர் தியான் சுவா தெரிவித்த கருத்துக்கள் சம்பந்தப்பட்ட கட்டுரை ஒன்றின் மீது போலீசார் இன்று பிகேஆர் ஏடான Keadilan Daily-யின் ஆசிரியரையும் நிருபரையும் விசாரித்தனர். பெட்டாலிங் ஜெயா போலீஸ் தலைமையகத்தில் அந்த ஏட்டின் ஆசிரியர் பாஸால்லா பிட்-டும் நிருபரான ஆயிஷா…
‘சிவப்பு பகுதியில்’ நிருபர்கள் துப்பாக்கிக்காரனைக் கண்டனர்
பாதுகாப்புப் படையினர் ஆயுதமேந்திய ஊடுருவல்காரர்களை வேட்டையாடி வரும் 'சிவப்பு பகுதியில்' உள்ள தஞ்சோங் லாபியான் கிராமத்துக்குள் இன்று காலை நுழைந்த நிருபர்கள் துப்பாக்கிக்காரன் ஒருவனைக் கண்டார்கள் அந்தக் கிராமத்திலிருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவில் அமைக்கப்பட்டிருந்த போலீஸ் சாலைத் தடுப்பில் யாரும் இல்லாததால் அந்தப் பகுதி பாதுகாப்பாக உள்ளது என…


