இன்று காலை ஜலான் கென்யாலங்கில் (Jalan Kenyalang) உள்ள இரண்டு அடுக்கு அரை-தனித்த வீட்டில் (two-storey semi-detached house) தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் தகவல் கிடைத்த 11 நிமிடங்களில் சம்பவ இடத்திற்கு வந்தடைந்தனர், அங்கு மேல் தளத்தின் முன் வராந்தாவில் மயங்கிய நிலையில் இருந்த ஒருவரை…
கீர் ஒரு கண்ணியவான் ஆனால், நோ ஒமார் நல்லவரல்ல
சிலாங்கூர் மந்திரி புசாராகக் காத்திருக்கும் விவசாய அமைச்சர் நோ ஒமாருடன் ஒப்பிடும்போது முன்னாள் சிலாங்கூர் மந்திரி புசார், டாக்டர் முகம்மட் கீர் தோயோ ஒரு ‘கண்ணியவான்’ என்று செகிஞ்சான் சட்டமன்ற உறுப்பினர் இங் சுவி லிம் கூறினார். “ஒரு விசயத்தில் இருவருக்கும் ஒற்றுமை உண்டு.இருவருமே சிலாங்கூர் அம்னோ தலைவர்கள்”,…
பிகேஆர்: மலிவான கார் கொள்கை புரோட்டோனைக் கொன்று விடாது
கார் விலைகளைக் குறைக்கும் தனது திட்டம் கார் தயாரிப்பு நிறுவனமான புரோட்டோனையும் உள்நாட்டு வாகனத் தொழிலில் ஈடுபட்டுள்ள பூமிபுத்ரா வர்த்தக சமூகத்தையும் பாதிக்காது என பிகேஆர் இன்று கூறியுள்ளது. பிகேஆர் திட்டம் புரோட்டோனையும் பூமிபுத்ரா வர்த்தக சமூகத்தையும் பாதிக்கும் என அம்னோவும் பிஎன் -னும் கூறிக் கொள்வது தவறு…
மான்சோர்: வலைப்பதிவு பிகேஆர்-டிஏபி உறவுகளை சீர்குலைக்கும் நோக்கம் கொண்டது
பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங் கர்வம் பிடித்தவர் என அழைக்கப்பட்டதாக கூறப்படும் பிகேஆர் கூட்டம் பற்றிய வலைப்பதிவு பிகேஆர்-க்கும் டிஏபி-க்கும் இடையில் உறவுகள் மோசமான நிலையில் உள்ளன என சித்தரிப்பதற்காக வேண்டுமென்றே ஜோடிக்கப்பட்டது என பினாங்கு பிகேஆர் தலைவர் மான்சோர் ஒஸ்மான் கூறியிருக்கிறார். பிரபலம் இல்லாத வலைப்பதிவு…
பினாங்கின் ‘கட்சித் தாவல் தடுப்பு’ சட்டத்தை நஸ்ரி சாடியிருக்கிறார்
பினாங்கு மாநில அரசாங்கம் யோசனை தெரிவித்துள்ள 'கட்சித் தாவல் தடுப்பு' சட்டத்தை பிரதமர் துறை அமைச்சர் நஸ்ரி அப்துல் அஜிஸ் நிராகரித்துள்ளார். கூட்டரசு அரசமைப்பு வழங்கியுள்ள கூட்டு சேருவதற்கான சுதந்திரத்தை அது மீறுவதாக அவர் சொன்னார். எந்த ஒரு கட்சியுடனும் தங்களைப் பிணைத்துக் கொள்வதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சுதந்திரம்…
மக்கள் குறைவாக வருவர் என்பது ஒரு விஷயமே அல்ல என்கிறது…
Janji Demokrasi என்ற கூட்டத்துக்கு குறைந்த எண்ணிக்கையிலான மக்கள் வருவர் என உள்துறை அமைச்சர் ஆரூடம் கூறியுள்ளது ஒரு விஷயமே அல்ல என அதன் ஏற்பாட்டுக் குழுப் பேச்சாளர் ஹிஷாமுடின் ராயிஸ் கூறியிருக்கிறார். "உள்துறை அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசேன், எதிர்காலத்தை கணிக்கும் bomoh-வாக அல்லது Pak Nujum-ஆகக் (எதிர்காலத்தை…
பிஎஸ்எம் மாதாந்திர செய்திமடல் வெளியிட அனுமதி
பார்டி சோசியலிஸ் மலேசியா(பிஎஸ்எம்) மாதாந்திர செய்திமடல் வெளியிட உரிமம் (பெர்மிட்) வழங்கப் Read More
“அஸ்தி பறித்துச் செல்லப்பட்ட” சம்பவத்தில் தகனம் செய்யப்பட்ட மாது முஸ்லிம்…
ஆகஸ்ட் 14ம் தேதி தென் செபெராங் பிராய் சமயத் துறை தகனம் செய்யப்பட்ட இந்திய மாது ஒருவரின் அஸ்தியைக் கைப்பற்றியது. அந்த மாது இஸ்லாத்துக்கு மதம் மாறியிருப்பதால் இந்து சமயப்படி அவருக்கு ஈமச் சடங்குகளை அவரது குடும்பத்தினர் செய்ய முடியாமல் போகலாம். 64 வயதான எம் நாகம்மா என்ற…
‘நாம் ஒரே பிசாசுடன் தொடர்ந்து வாழ்வது கஷ்டம்’
"நாம் ஒரே பிசாசுடன் தொடர்ந்து வாழ்ந்தால் நாம் அதை விட குறைந்த இயல்புகளைக் கொண்ட பிசாசுகளுடன் அல்லது ஒரு தேவதையுடன் வாழ்வதற்கு வாய்ப்பு கிடைக்காமலேயே போய் விடும்." மகாதீர்: அன்வாரும் ஒபாமாவைப் போன்று கெட்டவரே மலேசிய இனம்: அன்புள்ள டாக்டர் மகாதீர் முகமட் அவர்களே, எங்களுக்குத் தெரிந்த பேயைப்…
போலீஸ் முரட்டுத்தனத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பெர்சே 250 ஆயிரம் ரிங்கிட் திரட்டுகிறது
பெர்சே என அழைக்கப்படும் தூய்மையான நியாயமான தேர்தல்களுக்கான கூட்டணி '1 ரிங்கிட்-டுடன் மாற்றத்தைக் கொண்டு வருவோம்' என்னும் தனது இயக்கத்திற்குப் பொது மக்களிடமிருந்து நன்கொடைகளைக் கோரியுள்ளது. ஏப்ரல் 28 பெர்சே 3.0 பேரணியின் போது போலீஸ் முரட்டுத்தனத்தால் பாதிக்கப்பட்டவர்களுடைய மருத்துவ, சட்ட செலவுகளுக்கு அந்தப் பணம் பயன்படுத்தப்படும். போலீஸ்…
லிட்டில் இந்தியா நடவடிக்கைக் குழுத் தலைவருக்கு ‘சுடுகாட்டிடமிருந்து’ கொலை மருட்டல்
கடந்த வியாழக்கிழமை தொடக்கம் சுடுகாட்டு ரவி என தம்மை அழைத்துக் கொள்ளும் ஒரு மனிதரிடமிருந்து லிட்டில் இந்தியா நடவடிக்கைக் குழுத் தலைவர் எஸ் பக்தவத்சலத்துக்கும் அவரது குடும்பத்துக்கும் கொலை மருட்டல்கள் வந்து கொண்டிருக்கின்றன. ஆகஸ்ட் மாதம் 16ம் தேதி பிற்பகல் மணி 12.30 வாக்கில் தமது கைத்தொலைபேசியில் அந்தச்…
கசிந்த கூட்டக் குறிப்புக்கள்: டிஏபி பிகேஆரிடமிருந்து பதில் கோருகிறது
வெளியில் கசிந்து விட்ட பிகேஆர் கட்சியின் கூட்டக் குறிப்புக்களில் காணப்படும் விவரங்கள் மீது டிஏபி, பிகேஆர்-இடம் விளக்கம் கோரியுள்ளது. அந்தக் குறிப்புக்களில் டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங்-கை இழிவுபடுத்தும் கருத்துக்களும் அடங்கியுள்ளன. லிம்-மை மாநில பிகேஆர் தலைவர் மான்சோர் ஒஸ்மான் 'கர்வம் பிடித்த' தலைவர் என…
நஸ்ரி: பகுதி 114ஏ-இல் எந்த மாற்றமும் செய்யப்படாது
சமூக அமைப்புகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ள போதிலும் ஆதாரச் சட்டத்துக்குக் கொண்டுவரப்பட்ட பகுதி114ஏ திருத்தம் அப்படியே இருக்கும், அதில் மாற்றம் இராது என்கிறார் பிரதமர்துறை அமைச்சர் நஸ்ரி அப்துல் அசீஸ். கோலா கங்சாரில் செய்தியாளர்களிடம் பேசியபோது நஸ்ரி இவ்வாறு கூறினார். “அச்சட்டம் அப்படியே இருக்கும்.மாற்றரசுக் கட்சியும் அதை எதிர்ப்பதில் அவ்வளவாக…
கூட்டக் குறிப்புகள் இணையத்தில் கசிந்தது எப்படி என்பதை ஆராய்கிறது பிகேஆர்
பினாங்கு பிகேஆர் தலைவர் மன்சூர் ஒத்மான், கட்சியின் முக்கிய வியூகக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட விசயங்கள் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டிருப்பது கண்டு ஆத்திரம் அடைந்துள்ளார். கூட்ட நடவடிக்கைக் குறிப்புகள் இணையத்தளத்தில் பிரபலமில்லாத ஒரு வலைப்பதிவில் வரிக்கு வரி சரியாக வெளியிடப்பட்டிருப்பதைக் கண்டு “ஏமாற்றமடைவதாக” முதலாவது துணை முதலமைச்சருமான மன்சூர் கூறினார். “அதை…
வேறு விதமாக நிரூபிக்கப்படும் வரையில் அது மனித அஸ்தியைத் திருடிய…
"இது மனித, சமய உரிமைகளைப் பயங்கரமாக மீறியதாகும். அத்தகையை விவகாரங்களைத் தீர்ப்பதற்கு நடைமுறைகளும் ஆவணங்களும் இருக்க வேண்டும்." "அஸ்தியை பறித்துச் சென்றதாக" JAIPP மீது போலீஸ் புகார் முன்னேற்றம்: பக்காத்தான் ராக்யாட் ஆட்சி செய்யும் பினாங்கில் 'அஸ்தியை பறித்துச் சென்ற' சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதில் மாநில அரசாங்கத்தின் நிலை…
டிவிட்டர்ஜெயாவில் ஹிஷாம்மீது ஆத்திரம் பொங்கி வழிகிறது
உள்துறை அமைச்சர் ஹிஷாமுடின் உசேன் கடந்த வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் பேசுகையில் அரசாங்கம் அண்மைக்காலம்வரை குற்றத்தடுப்புமீது கவனம் செலுத்துதலைத் “அவசியமெனக் கருதவில்லை” என்று கூறினார். இச்செய்தி தப்பாக அறிவிக்கப்பட்டுவிட்டதாக யாரும் கருத வேண்டாம். “இப்போது (குற்றத்தை எதிர்க்கும்) அரசியல் உறுதிப்பாடு உயர்மட்டத்திலும் நிலவுகிறது. மெர்டேகா காலம் தொடங்கி இப்படியொரு நிலை…
அம்பிகா, நல்ல போராட்டத்தைத் தொடர்ந்து நடத்துங்கள்
"கௌரவமில்லாத சுயநலவாதிகள் சிலர் உங்களை மருட்டியிருக்கலாம். வில்லனாகவும் சித்தரித்திருக்கலாம். ஆனால் பெரும்பான்மை மலேசியர்கள் உங்களுக்கு எப்போதும் நன்றி கூறுவர்." அம்பிகா 13வது பொதுத் தேர்தலுக்குப் பின்னர் பெர்சே இணைத் தலைவர் பொறுப்பிலிருந்து விலகுவார் லம்போர்கினி: பெர்சே துணைத் தலைவர் எஸ் அம்பிகா அவர்களே, சாதாரண மலேசியருடைய உரிமைகளுக்காக விருப்பு…
நான்கு மாதங்களாகியும் தேர்தல் சீரமைப்பு இல்லை
தேர்தல் சீரமைப்பு மீதான நாடாளுமன்ற தேர்வுக்குழு(பிஎஸ்சி)வின் பரிந்துரைகளைக் குறிப்பிட்ட காலவரையறைக்குள் செயல்படுத்தத் தவறிய தேர்தல் ஆணைய (இசி) த்தை டிஏபி கட்சியின் ராசா எம்பி அந்தோனி லோக் சாடியுள்ளார். அப்பரிந்துரைகளைச் செயல்படுத்தாமலிருப்பதற்கு கடந்த நான்கு மாதங்களாக இசி பல்வேறு சாக்குபோக்குகளைக் கூறிக்கொண்டிருப்பதாக அவர் குறைப்பட்டுக்கொண்டார். ஒன்பது பேரடங்கிய பிஎஸ்சி-இல்…
அம்பிகா 13வது பொதுத் தேர்தலுக்குப் பின்னர் பெர்சே இணைத் தலைவர்…
அடுத்த பொதுத் தேர்தலுக்குப் பின்னர் பெர்சே எனப்படும் தேர்தல் சீர்திருத்த இயக்கத்தில் தாம் வகிக்கும் பொறுப்பிலிருந்து விலகிக் கொள்ள எண்ணியுள்ளதாக பெர்சே இணைத் தலைவர் அம்பிகா ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார். நிதித் துறைச் செய்திகளை வெளியிடும் பூளும்பர்க் துணைக்கோளத் தொலைக்காட்சி அலைவரிசைக்கு அளித்த பேட்டியில் அவர் அதனைக் கூறியுள்ளார். வர்த்தக,…
கர்பால் கடைப்பிடிக்கும் ஹுடுட் எதிர்ப்புப் போக்கு மலாய் வாக்குகளை இழக்கச்…
ஹுடுட் சட்டத்தை அமலாக்குவது தொடர்பில் டிஏபி தேசியத் தலைவர் கர்பால் சிங் தெரிவித்து வரும் கருத்துக்கள் அடுத்த பொதுத் தேர்தலில் மலாய் வாக்குகளை பாஸ் இழக்கச் செய்து விடும் என பாஸ் இளைஞர் பிரிவுத் துணைத் தலைவர் நிக் முகமட் அப்து நிக் அப்துல் அஜிஸ் கூறுகிறார். அந்த…
‘ஹுடுட்’ செய்தி மீது நாளேடு மன்னிப்பு கேட்க வேண்டும் என…
'MCA Kedah sokong hudud' (கெடா மசீச ஹுடுட்டை ஆதரிக்கிறது) என்னும் தலைப்பில் நேற்று தான் வெளியிட்ட செய்திக்காக மலாய் நாளேடான சினார் ஹரியான் மன்னிப்புக் கேட்க வேண்டும் என அந்த மாநில மசீச தலைவர் சொங் இட் சியூ இன்று கோரியுள்ளார். இரண்டு நாட்களுக்கு முன்பு தொலைபேசி…
‘அம்னோ முகநூல்’ புலனாய்வு 114ஏ பிரிவின் கீழ் அல்ல
சமய உணர்வுகளைத் தூண்டக் கூடிய பதிவு மீது 'Pemuda Umno Malaysia' முக நூல் பக்கத்தை புலனாய்வு செய்வதற்கு போலீசார் ஆதாரச் சட்டத்தின் 114ஏ பிரிவைப் பயன்படுத்தாது. அந்தப் பதிவுக்கு தான் பொறுப்பல்ல என அம்னோ இளைஞர் பிரிவு கூறியுள்ளது. 114ஏ பிரிவு குற்றத்தைக் குறிப்பிடாமல் நீதிமன்றத்தில் ஒரு…
மகாதிர்: ஒபாமாபோல் அன்வாரும் கெட்டவரே
முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட், பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிமை அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவுடன் ஒப்பிட்டுள்ளார்.இருவரும் பெரிய மாற்றங்கள் செய்யப்போவதாகச் சொன்னார்கள் ஆனால், செய்யவில்லை என்றாரவர். ஒபாமா(வலம்)வைப் போலவே அன்வாரும் தேர்தல் பரப்புரையில் வாக்குறுதிகளை அள்ளி வீசுகிறார்.ஆனால், அவை நிறைவேற்றப்படும் என்பதற்கு எந்த உத்தரவாதமும்…
“அஸ்தியைப் பறித்துச் சென்றதாக” JAIPP மீது போலீஸ் புகார்
நோன்புப் பெருநாளின் முதல் நாளன்று சரியான ஆவணங்கள் ஏதுமில்லாமல் முஸ்லிம் என நம்பப்படும் மாது ஒருவருடைய அஸ்தியைப் பறித்துச் சென்றதாக JAIPP என்ற பினாங்கு இஸ்லாமிய விவகாரத்துறை மீது இந்துக்கள் குழு ஒன்று 18 போலீஸ் புகார்களைச் செய்துள்ளது. அந்தப் புகார்களை நிபோங் திபால் போலீஸ் நிலையத்தில் அந்த…


