அம்னோ பேராளர், பாஸ் கட்சி மீது குற்றச்சாட்டுக்களை அடுக்கினார்

கடந்த மூன்று ஆண்டுகளாக நாட்டில் அதிக எண்ணிக்கையிலான எச்ஐவி/ஏய்ட்ஸ் நோயாளிகளைக் கொண்டுள்ள மாநிலமாக கிளந்தான் விளங்குகிறது. அந்தப் புள்ளிவிவரம் பாஸ் தலைமையிலான கிளந்தான் மாநில அரசாங்கம் பின்பற்றுகிற சமூக நல நாடு என்னும் கோட்பாட்டைக் கீழறுப்புச் செய்வதாக அம்னோ ஆண்டுப் பொதுப் பேரவையில் கலந்து கொண்டுள்ள கிளந்தான் பேராளர்…

பாடகியை மணந்தேனா? மறுக்கிறார் முன்னாள் ஐஜிபி

முன்னாள் இன்ஸ்பெக்டர்-ஜெனரல் அப் போலீஸ் (ஐஜிபி) மூசா ஹசன், தாம்  பாடகி ஷீலா கமருடினை மணம் செய்து கொண்டிருப்பதாகக் கூறப்படுவதை மறுத்தார். தம்மை அவமானப்படுத்தவே அப்படியொரு கதை கட்டி விடப்பட்டிருக்கிறது என்று மூசா கூறியதாக உத்துசான் மலேசியா செய்தியொன்று கூறுகிறது. “அது நானல்ல. அந்தத் திருமணத்துக்கும் எனக்கும் சம்பந்தமில்லை.…

ஷாரிஸாட் பதவி துறக்க வேண்டும் என பாங் மொக்தார் மீண்டும்…

அம்னோ மகளிர் பிரிவினர் தங்கள் தலைவி ஷாரிஸாட் அப்துல் ஜலிலுக்கு மகத்தான ஆதரவு வழங்கிய போதிலும் என்எப்சி என்ற தேசிய விலங்குக் கூட நிறுவன ஊழல் தொடர்பில் பதவி விலக வேண்டும் என அம்னோ உச்ச மன்ற உறுப்பினரான பாங் மொக்தார் ராடின் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். 2011ம் ஆண்டுக்கான…

அழியா மை “பாத்வா” என்பது வெறும் தந்திரமே

"எகிப்தியர்கள் நேற்று தேர்தலில் வாக்களித்தனர். எத்தகைய எதிர்ப்புமின்றி அங்கு அழியா மை பயன்படுத்தப்பட்டுள்ளது. 90 விழுக்காடு எகிப்தியர்கள் முஸ்லிம்கள் ஆவர்." அழியா மையைப் பயன்படுத்த இசி தயார் குவினி: அழியா மையைப் பயன்படுத்துவது "ஹராம்" என தேசிய பாத்வா மன்றம் பிரகடனப்படுத்தும் என என் உள்ளுணர்வு கூறுகிறது. அப்புறம்…

KR1M பொருட்களில் பிரச்னைகள் இருப்பதை சுகாதார அமைச்சு ஒப்புக்கொள்கிறது

கெடாய் ராக்யாட் சத்து மலேசியா கடைகளில் விற்கப்படும் பல பொருட்களில் பிரச்னைகள் இருப்பதை சுகாதார அமைச்சு அதிகாரிகள் இன்று ஒப்புக் கொண்டுள்ளனர். சுகாதார அமைச்சர் லியாவ் தியோங் லாய் அளித்த வாக்குறுதிக்கு மாறாக அது அமைந்துள்ளது. ஒரே மலேசியா கிளிஞ்சல் ( oyster ) சாற்றில் மட்டும் குறைவான…

உதவிப் பதிவதிகாரி மீது 15 மில்லியன் ரிங்கிட் நம்பிக்கை மோசடிக்…

நில, சுரங்க அலுவலகத்தைச் சேர்ந்த உதவிப் பதிவதிகாரி ஒருவர் மீது இன்று கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் 15 மில்லியன் ரிங்கிட் நம்பிக்கை மோசடிக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. 35 வயதான முகமட் இர்வான் அட்னான் என்ற அந்த உதவிப் பதிவதிகாரி குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினார். கோலாலம்பூரில் உள்ள கூட்டரசு…

அம்னோ பேராளர்: ஜிஎல்சி நிறுவனங்கள் அம்னோ உறுப்பினர்களை நியமிக்க வேண்டும்

அரசாங்கத்துடன் தொடர்புடைய நிறுவனங்கள் (ஜிஎல்சி) உயர் பதவிகளுக்கு அம்னோ உறுப்பினர்களை நியமிப்பதற்குக் கூட்டரசு அரசாங்கம் ஊக்கமளிக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. ஜிஎல்சி நிறுவனங்கள் மலாய் சமூகத்துக்கு உதவி செய்வதற்குப் பயன்படுத்தப்பட வேண்டும் என பொருளாதாரம் மீதான தீர்மானம் குறித்து நடைபெற்ற விவாதத்தில் பேசிய பேராக் பேராளர் இட்ரிஸ்…

ஷாரிசாட் விளக்கமளிக்க வேண்டும்,பேராளர்கள் வலியுறுத்து

அம்னோ மகளிர் தலைவி ஷாரிசாட் அப்துல் ஜலில், சர்ச்சைக்குரிய நேசனல் ஃபீட்லோட் கார்ப்பரேசன் விவகாரத்தில் இரண்டு நாள்களுக்குமுன் பேராளர்களின் ஆதரவைப் பெறுவதில் வெற்றி பெற்றார் என்ற போதிலும் பேராளர்கள் சிலர், அமைச்சரைத் தற்காத்துப் பேசுவது சிரமமாக உள்ளது என்றும் அவ்விவகாரம் தொடர்பில் அமைச்சரிடமிருந்து விரிவான விளக்கம் தேவை என்றும்…

இசி அழியா மையைப் பயன்படுத்தத் தயார்

தேர்தல் ஆணையம் (இசி) வாக்களிப்பின்போது அழியா மையைப் பயன்படுத்த ஆயத்தமாக உள்ளது. அதற்குமுன் தேசிய ஃபாட்வா மன்றத்தின் ஒப்புதலுக்காகக் காத்திருக்கிறது. “இசி செயலாளர் கமருடின் அஹ்மட் பாரியா, அவர்கள் தயாராக இருப்பதாகவும் தேசிய ஃபாட்வா மன்றத்தின் இறுதி ஒப்புதலுக்காகக் காத்திருப்பதாகவும் கூறினார். மன்றம் மையில் பயன்படுத்தப்படும் பொருள்கள் ஷியாரியா…

“பிஎஸ்சி அறிக்கையில் ஐந்து முக்கிய பெர்சே கோரிக்கைகள் இல்லை”

தேர்தல் சீர்திருத்தம் தொடர்பில் தான் விடுத்த எட்டுக் கோரிக்கைகளில் ஐந்து, பிஎஸ்சி என்ற நாடாளுமன்றத் தேர்வுக் குழு அறிக்கையில் காணப்படவில்லை என்று பெர்சே 2.0 கூறுகிறது அத்துடன் அழியா மை தவிர மற்ற கோரிக்கைகளில் ஒரு பகுதி மட்டுமே ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக அது தெரிவித்தது. "13வது பொதுத் தேர்தல்…

பொதுக்கூட்ட சட்டம் தொடர்பில் பாஸ் கட்சி அரசு மீது வழக்கு

2011ம் ஆண்டுக்கான அமைதியான பொதுக்கூட்ட மசோதாவை சமர்பித்ததின் மூலம் பிரதமரும் கூட்டரசு அரசாங்கமும் தங்களது அதிகாரங்களைத் தவறாகப் பயன்படுத்தியுள்ளனர் எனப் பிரகடனம் செய்யுமாறு கேட்டுக் கொள்ளும் நீதித் துறை மறு ஆய்வு விண்ணப்பம் ஒன்றைச் சமர்பித்துள்ளது. அந்த மசோதா  அரசமைப்புக்கு முரணானது எனக் கூறுகிறது. பாஸ் துணைத் தலைவர்…

“வெற்றிபெற முடியாத இடங்களை அம்னோவிடம் திருப்பிக் கொடுங்கள்”

பிஎன் உறுப்புக் கட்சிகள் தங்களால் வெற்றிபெற முடியாத இடங்களை அம்னோவிடமே திருப்பிக் கொடுத்துவிட வேண்டும். பினங்கு பேராளர் ஒருவரின் விருப்பம் இது. கட்சித் தலைவரின் தலைமையுரைமீது நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்ட மூசா ஷேக் பாட்சிர், 2008-பொதுத் தேர்தலில் நின்று தோற்றவர்கள் தாங்கள் போட்டியிட்ட இடங்களைத் திரும்ப வெல்ல முடியாது…

பொதுக்கூட்ட மசோதாவை ஆட்சேபிக்கும் கூட்டத்துக்கு பாக் சாமாட் தலைமை தாங்குவார்

நாடாளுமன்ற மக்களவை ஏற்றுக் கொண்டு மேலவை ஒப்புதலுக்காக காத்திருக்கும் பொதுக்கூட்ட மசோதாவுக்கு ஆட்சேபம் தெரிவிக்கும் இரண்டாவது சுற்றுக் கூட்டத்துக்கு தேசிய இலக்கியவாதியான ஏ சாமாட் சைட் தலைமை தாங்குவார். நாளை கோலாலம்பூரில் உள்ள கேஎல்சிசி பூங்காவில் அந்தக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த சனிக்கிழமையன்று அதே பூங்காவில் பெர்சே இயக்கத்திற்கு ஆதரவாக…

உங்கள் கருத்து: “யார் தீவிரமான பேரினவாதி என்பதில் போட்டி”

"முஹைடினைப் பொறுத்த வரையில் 'நான் இனவாதியே ஆனால் மற்றவர்கள் என்னை விட தீவிரமான பேரினவாதிகள்' எனச் சொல்வது துணைப் பிரதமர் ஒருவருக்கு அழகல்ல." மற்றவர்கள் 100 மடங்கு கூடுதலான இனவாதிகள் என்கிறார் முஹைடின் மாற்றத்திற்கான வாக்காளர்:  முஹைடின் யாசின் அவர்களே, அம்னோ, மலாய் உரிமைகள் பற்றியே எப்போதும் பேசிக்…

பிஎஸ்சியின் பரிந்துரைகளை நாடாளுமன்றம் ஏற்றுக்கொண்டது

தேர்தல் சீர்திருத்தங்கள் மீதான நாடாளுமன்ற சிறப்புக்குழு (பிஎஸ்சி) அதன் இடைக்கால அறிக்கையில் முன்மொழிந்துள்ள 10 பரிந்துரைகளை அமல்படுத்துமாறு சம்பந்தப்பட்ட பல்வேறு அரசாங்க அமைப்புகள் கேட்டுக்கொள்ளப்படும். இன்று நாடாளுமன்றத்தில் பிஎஸ்சியின் அறிக்கை விவாதிக்கப்பட்டதுடன் அதில் கூறப்பட்டுள்ள பரிந்துரைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டதென்றும் அக்குழுவின் தலைவர் மேக்சிமஸ் ஜோனிட்டி ஓங்கீலி செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.…

முக்ரிஸ்: பக்காத்தான் புது ஏகாதிபத்தியவாதிகளின் கருவி

அடுத்த கூட்டரசு அரசாங்கத்தை பக்காத்தான் ராக்யாட் அமைக்குமானால் அந்நிய வல்லரசுகள் நாட்டைத் தங்கள் கட்டுக்குள் எடுத்துக் கொள்ளும் என அனைத்துலக வாணிக தொழிலியல் துணை அமைச்சர் முக்ரிஸ் மகாதீர் கூறுகிறார். அவர் அம்னோ பொதுப் பேரவையில் தலைவர் உரை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு பேசினார். விரிவான நோக்கத்தைக்…

அம்னோ உறுப்பினர் எண்ணிக்கை 3,297,358ஐ எட்டுகிறது

நேற்று வரையில் அம்னோ உறுப்பினர் எண்ணிக்கை  3,297,358 ஆகும். சபா மாநிலத்தில் தான் அதிக எண்ணிக்கையிலான உறுப்பினர்கள் அதாவது 487,447 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். அந்த விவரங்களை அம்னோ தலைமைச் செயலாளர்  தெங்கு அட்னான் தெங்கு மான்சோர் இன்று அம்னோ பொதுப் பேரவையில் தெரிவித்தார். சபாவில் உள்ள சிலாம்…

மற்றவர்கள் 100 மடங்கு கூடுதலான இனவாதிகள் என்கிறார் முஹைடின்

அம்னோ துணைத் தலைவர் முஹைடின் யாசின், டிஏபி, மலாய் எதிர்ப்பு, இஸ்லாம் எதிர்ப்புப் போக்கைக் கொண்டது எனத் தாம் ஏற்கனவே கூறிய குற்றச்சாட்டை தற்காத்துப் பேசியிருக்கிறார். அந்தக் கட்சி இனவாதத் தன்மையைக் கொண்டது  எனக் குறிப்பிட்ட அவர், தம்மை குறை கூறுகின்றவர்கள் "100 மடங்கு கூடுதலான இனவாதிகள்" என…

கிட் சியாங்: பிஎஸ்சி அறிக்கையைத் திருத்தி எழுத வேண்டும்

இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட தேர்தல் சீரமைப்புமீதான நாடாளுமன்ற  சிறப்புக்  குழுவின் இடைக்கால அறிக்கையில் இடம்பெற்றுள்ள பரிந்துரைகளை எல்லாத் தரப்பினரும்  பின்பற்றுவதைக் கட்டாயமாக்க வேண்டும் என்றும் அதற்கு ஏதுவாக அந்த அறிக்கையைத் திருத்தி எழுத வேண்டும் என்றும் டிஏபி நாடாளுமன்றத் தலைவர் லிம் கிட் சியாங் கூறியுள்ளார். “இல்லையேல்,…

உதவித் தலைவர்கள் மற்றவர்களுக்கு இடம்விட்டு ஒதுங்கிக்கொள்ள தயார்

தேர்தலில் வெற்றி பெறும் வாய்ப்பில்லாதவர்கள் என்று கருதப்படும் அம்னோ தலைவர்கள் தாங்களாகவே ஒதுங்கிக்கொள்ள வேண்டும். இதனைத் தெரிவித்த அம்னோ உதவித் தலைவர்கள் மூவரும், தங்கள் சேவை இனியும் தேவையில்லை என்று உறுப்பினர்களும் மக்களும் நினைத்தால் மற்றவர்களுக்கு முன்மாதிரியாக தாங்கள் ஒதுங்கிக்கொள்ளத் தாயாராக இருப்பதாகவும் கூறினர்.  உதவித் தலைவர்களில் ஒருவரான…

ஹிண்ட்ராப் மக்கள் சக்தியின் இரண்டாம் தேசிய பேராளர் மாநாடு

நாடு முழுவதிலும் இருந்து தேர்ந்தெடுக்கபட்ட சுமார் 350 பேராளர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொள்வார்கள். டிசம்பர் 4-ம் தேதி காலை மணி 9.00 முதல் மதியம் 2.00 மணி வரை கோலாலம்பூர் சீன அசம்பெளி மண்டபத்தில் இந்நிகழ்வு நடைபெறும். லண்டனிலிருந்து ஹிண்ட்ராப் இயக்கத் தலைவர் பொ.வேதமூர்த்தி அவர்களின் இணையம்…

நஜிப்: அம்னோ “புதிய ஆட்டக்காரர்களை” எதிர்கொள்ள வேண்டும்.

புதிய ஊடகங்கள் உட்பட அரசியல் வடிவமைப்பில் நுழைந்துள்ள புதிய ஆட்டக்காரர்களை அம்னோ உறுப்பினர்கள் எதிர்கொள்ள வேண்டும். இல்லை என்றால் கட்சிக்கு துயரம் காத்திருக்கிறது என அம்னோ தலைவரும் பிரதமருமான நஜிப் அப்துல் ரசாக் எச்சரித்துள்ளார். அம்னோ வரலாற்றில் மிகவும் கடுமையான பொதுத் தேர்தலை அந்தக் கட்சி எதிர்நோக்கியுள்ள வேளையில்…

தொடக்கநிலை ஆய்வுகள்: என்எப்சி-யில் சிபிடி குற்றம் எதுவும் நிகழவில்லை

நேசனல் ஃபீட்லோட் கார்ப்பரேசன்(என்எப்சி) விவகாரத்தில் நம்பிக்கை மோசடி குற்றம் நிகழ்ந்திருப்பதற்கான தடயம் எதனையும் போலீசார் இதுவரை கண்டுபிடிக்கவில்லை. அரசாங்கத்திடமிருந்து ரிம250மில்லியன் கடன் பெற்ற அமைச்சர் ஒருவரின் குடும்பத்தாருக்குச் சொந்தமான அந்த நிறுவனம், குற்றச் செயலில் ஈடுபட்டதற்கான சான்றுகள் தொடக்கநிலை விசாரணைகளில் தெரிய வரவில்லை என்று போலீஸ் படை துணைத்…