“வெற்றிபெற முடியாத இடங்களை அம்னோவிடம் திருப்பிக் கொடுங்கள்”

பிஎன் உறுப்புக் கட்சிகள் தங்களால் வெற்றிபெற முடியாத இடங்களை அம்னோவிடமே திருப்பிக் கொடுத்துவிட வேண்டும். பினங்கு பேராளர் ஒருவரின் விருப்பம் இது. கட்சித் தலைவரின் தலைமையுரைமீது நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்ட மூசா ஷேக் பாட்சிர், 2008-பொதுத் தேர்தலில் நின்று தோற்றவர்கள் தாங்கள் போட்டியிட்ட இடங்களைத் திரும்ப வெல்ல முடியாது…

பொதுக்கூட்ட மசோதாவை ஆட்சேபிக்கும் கூட்டத்துக்கு பாக் சாமாட் தலைமை தாங்குவார்

நாடாளுமன்ற மக்களவை ஏற்றுக் கொண்டு மேலவை ஒப்புதலுக்காக காத்திருக்கும் பொதுக்கூட்ட மசோதாவுக்கு ஆட்சேபம் தெரிவிக்கும் இரண்டாவது சுற்றுக் கூட்டத்துக்கு தேசிய இலக்கியவாதியான ஏ சாமாட் சைட் தலைமை தாங்குவார். நாளை கோலாலம்பூரில் உள்ள கேஎல்சிசி பூங்காவில் அந்தக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த சனிக்கிழமையன்று அதே பூங்காவில் பெர்சே இயக்கத்திற்கு ஆதரவாக…

உங்கள் கருத்து: “யார் தீவிரமான பேரினவாதி என்பதில் போட்டி”

"முஹைடினைப் பொறுத்த வரையில் 'நான் இனவாதியே ஆனால் மற்றவர்கள் என்னை விட தீவிரமான பேரினவாதிகள்' எனச் சொல்வது துணைப் பிரதமர் ஒருவருக்கு அழகல்ல." மற்றவர்கள் 100 மடங்கு கூடுதலான இனவாதிகள் என்கிறார் முஹைடின் மாற்றத்திற்கான வாக்காளர்:  முஹைடின் யாசின் அவர்களே, அம்னோ, மலாய் உரிமைகள் பற்றியே எப்போதும் பேசிக்…

பிஎஸ்சியின் பரிந்துரைகளை நாடாளுமன்றம் ஏற்றுக்கொண்டது

தேர்தல் சீர்திருத்தங்கள் மீதான நாடாளுமன்ற சிறப்புக்குழு (பிஎஸ்சி) அதன் இடைக்கால அறிக்கையில் முன்மொழிந்துள்ள 10 பரிந்துரைகளை அமல்படுத்துமாறு சம்பந்தப்பட்ட பல்வேறு அரசாங்க அமைப்புகள் கேட்டுக்கொள்ளப்படும். இன்று நாடாளுமன்றத்தில் பிஎஸ்சியின் அறிக்கை விவாதிக்கப்பட்டதுடன் அதில் கூறப்பட்டுள்ள பரிந்துரைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டதென்றும் அக்குழுவின் தலைவர் மேக்சிமஸ் ஜோனிட்டி ஓங்கீலி செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.…

முக்ரிஸ்: பக்காத்தான் புது ஏகாதிபத்தியவாதிகளின் கருவி

அடுத்த கூட்டரசு அரசாங்கத்தை பக்காத்தான் ராக்யாட் அமைக்குமானால் அந்நிய வல்லரசுகள் நாட்டைத் தங்கள் கட்டுக்குள் எடுத்துக் கொள்ளும் என அனைத்துலக வாணிக தொழிலியல் துணை அமைச்சர் முக்ரிஸ் மகாதீர் கூறுகிறார். அவர் அம்னோ பொதுப் பேரவையில் தலைவர் உரை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு பேசினார். விரிவான நோக்கத்தைக்…

அம்னோ உறுப்பினர் எண்ணிக்கை 3,297,358ஐ எட்டுகிறது

நேற்று வரையில் அம்னோ உறுப்பினர் எண்ணிக்கை  3,297,358 ஆகும். சபா மாநிலத்தில் தான் அதிக எண்ணிக்கையிலான உறுப்பினர்கள் அதாவது 487,447 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். அந்த விவரங்களை அம்னோ தலைமைச் செயலாளர்  தெங்கு அட்னான் தெங்கு மான்சோர் இன்று அம்னோ பொதுப் பேரவையில் தெரிவித்தார். சபாவில் உள்ள சிலாம்…

மற்றவர்கள் 100 மடங்கு கூடுதலான இனவாதிகள் என்கிறார் முஹைடின்

அம்னோ துணைத் தலைவர் முஹைடின் யாசின், டிஏபி, மலாய் எதிர்ப்பு, இஸ்லாம் எதிர்ப்புப் போக்கைக் கொண்டது எனத் தாம் ஏற்கனவே கூறிய குற்றச்சாட்டை தற்காத்துப் பேசியிருக்கிறார். அந்தக் கட்சி இனவாதத் தன்மையைக் கொண்டது  எனக் குறிப்பிட்ட அவர், தம்மை குறை கூறுகின்றவர்கள் "100 மடங்கு கூடுதலான இனவாதிகள்" என…

கிட் சியாங்: பிஎஸ்சி அறிக்கையைத் திருத்தி எழுத வேண்டும்

இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட தேர்தல் சீரமைப்புமீதான நாடாளுமன்ற  சிறப்புக்  குழுவின் இடைக்கால அறிக்கையில் இடம்பெற்றுள்ள பரிந்துரைகளை எல்லாத் தரப்பினரும்  பின்பற்றுவதைக் கட்டாயமாக்க வேண்டும் என்றும் அதற்கு ஏதுவாக அந்த அறிக்கையைத் திருத்தி எழுத வேண்டும் என்றும் டிஏபி நாடாளுமன்றத் தலைவர் லிம் கிட் சியாங் கூறியுள்ளார். “இல்லையேல்,…

உதவித் தலைவர்கள் மற்றவர்களுக்கு இடம்விட்டு ஒதுங்கிக்கொள்ள தயார்

தேர்தலில் வெற்றி பெறும் வாய்ப்பில்லாதவர்கள் என்று கருதப்படும் அம்னோ தலைவர்கள் தாங்களாகவே ஒதுங்கிக்கொள்ள வேண்டும். இதனைத் தெரிவித்த அம்னோ உதவித் தலைவர்கள் மூவரும், தங்கள் சேவை இனியும் தேவையில்லை என்று உறுப்பினர்களும் மக்களும் நினைத்தால் மற்றவர்களுக்கு முன்மாதிரியாக தாங்கள் ஒதுங்கிக்கொள்ளத் தாயாராக இருப்பதாகவும் கூறினர்.  உதவித் தலைவர்களில் ஒருவரான…

ஹிண்ட்ராப் மக்கள் சக்தியின் இரண்டாம் தேசிய பேராளர் மாநாடு

நாடு முழுவதிலும் இருந்து தேர்ந்தெடுக்கபட்ட சுமார் 350 பேராளர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொள்வார்கள். டிசம்பர் 4-ம் தேதி காலை மணி 9.00 முதல் மதியம் 2.00 மணி வரை கோலாலம்பூர் சீன அசம்பெளி மண்டபத்தில் இந்நிகழ்வு நடைபெறும். லண்டனிலிருந்து ஹிண்ட்ராப் இயக்கத் தலைவர் பொ.வேதமூர்த்தி அவர்களின் இணையம்…

நஜிப்: அம்னோ “புதிய ஆட்டக்காரர்களை” எதிர்கொள்ள வேண்டும்.

புதிய ஊடகங்கள் உட்பட அரசியல் வடிவமைப்பில் நுழைந்துள்ள புதிய ஆட்டக்காரர்களை அம்னோ உறுப்பினர்கள் எதிர்கொள்ள வேண்டும். இல்லை என்றால் கட்சிக்கு துயரம் காத்திருக்கிறது என அம்னோ தலைவரும் பிரதமருமான நஜிப் அப்துல் ரசாக் எச்சரித்துள்ளார். அம்னோ வரலாற்றில் மிகவும் கடுமையான பொதுத் தேர்தலை அந்தக் கட்சி எதிர்நோக்கியுள்ள வேளையில்…

தொடக்கநிலை ஆய்வுகள்: என்எப்சி-யில் சிபிடி குற்றம் எதுவும் நிகழவில்லை

நேசனல் ஃபீட்லோட் கார்ப்பரேசன்(என்எப்சி) விவகாரத்தில் நம்பிக்கை மோசடி குற்றம் நிகழ்ந்திருப்பதற்கான தடயம் எதனையும் போலீசார் இதுவரை கண்டுபிடிக்கவில்லை. அரசாங்கத்திடமிருந்து ரிம250மில்லியன் கடன் பெற்ற அமைச்சர் ஒருவரின் குடும்பத்தாருக்குச் சொந்தமான அந்த நிறுவனம், குற்றச் செயலில் ஈடுபட்டதற்கான சான்றுகள் தொடக்கநிலை விசாரணைகளில் தெரிய வரவில்லை என்று போலீஸ் படை துணைத்…

நஜிப்: எ, பி, சி கட்சிகளை விட அம்னோ அதிக…

2011ம் ஆண்டுக்கான அம்னோ பொதுப் பேரவையில் உரையாற்றிய அதன் தலைவர் நஜிப் அப்துல் ரசாக், நாட்டு வரலாற்றிலும் அம்னோ வரலாற்றிலும் பல முக்கியமான அம்சங்களை எடுத்துக் காட்டியதுடன் எதிர்க் கட்சிகள் ஜனநாயாக ரீதியில் செயல்படவில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளார். அம்னோ தனது தலைவர்களை நேரடியாகத் தேர்வு செய்வதற்கு பெரும்…

பக்காத்தான் வெளிநடப்புச் செய்தது சரியா?

உங்கள் கருத்து: “ஒரு தரப்பினர், இறுதிவரை இருந்து எதிர்த்துப் போராடி இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள், இன்னொரு தரப்பினர் வெளிநடப்புத்தான் சரி, அதன்வழி பேரணி மசோதாவுக்கு ஒரு அங்கீகாரம் கொடுக்காமல் மறுக்கப்பட்டிருகிறது என்று நினைக்கிறார்கள்.”     பக்காத்தான் ஏமாற்றி விட்டது என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள் சூசாகேஸ்: இங்கு…

டிஎபி இவ்வாண்டு அம்னோவுக்கான “சுவையூட்டி”

"அம்னோ அதிகாரத்தை இழந்தால் மலாய்க்காரர்கள் அதிகாரத்தை இழப்பர் எனத் துணைப் பிரதமர் சொல்வது மிக மிக பொறுப்பற்றதாகும். அது அப்பட்டமான பொய்." முஹைடின்: 13வது பொதுத் தேர்தல் மலாய்க்காரர்களுக்கு மிக முக்கியமான தேர்தல் பார்வையாளன்: அம்னோ பொதுப் பேரவையில் முஹைடின் யாசின் ஆற்றிய உரையில் சில பகுதிகள்: 13வது…

பிகேஆர்: என்எஃப்சி புத்ரா ஜெயாவில் நிலம் வாங்கியது

தேசிய ஃபீட்லோட் கர்ப்பரேசன்(என்எப்சி), அரசாங்கம் கொடுத்த ரிம250மில்லியன் கடனைக்கொண்டு ஆடம்பர கொண்டோ வாங்கியதை அம்பலப்படுத்திய பிகேஆர், இன்று இன்னொரு திடுக்கிட வைக்கும் தகவலையும் வெளியிட்டது. அந்தக் கடனில் ஒரு பகுதி  நிலம், ஆடம்பர கார்கள், வெளிநாட்டுப் பயணங்கள் போன்றவற்றுக்கும் செலவிடப்பட்டிருக்கிறது. என்எப்சியின் நிதி ஆவணங்கள், அதன் துணை நிறுவனமான…

கைரி: உளவுத்துறை அறிக்கை எல்லாம் தேர்தலில் வேட்பாளராக உதவாது

அம்னோ இளைஞர் தலைவர் கைரி ஜமாலுடின்,உறுப்பினர்கள் தேர்தலில் வேட்பாளர்களாக தேர்ந்தெடுக்கப்படுவதற்காக அரசாங்க அமைப்புகளின் சாதகமான அறிக்கைகளைக் காண்பிப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார். இன்று   கோலாலம்பூரில், புத்ரா உலக வாணிக மையத்தில், அம்னோ இளைஞர் பகுதிக் கூட்டத்தை முடித்து வைத்து உரையாற்றிய  கைரி, தம்மை அணுகிய சிலர் அவர்களுக்குச் சாதகமான…

ஏர் ஏசியாவின் அனைத்துலகப் பயணங்களுக்கான பயணிகள் சேவைக் கட்டணம் உயருகிறது

அதிகரிக்கப்பட்ட விமான நிலைய வரி எனப் பொதுவாக அழைக்கப்படும் பயணிகள் சேவைக் கட்டணம், நாளை டிசம்பர் முதல் தேதி தொடக்கம் தனது அனைத்து அனைத்துலக விமானப் பயணங்களுக்கும் அமலுக்கு வருவதாக ஏர் ஏசியா பெர்ஹாட் அறிவித்துள்ளது. லங்காவி, கூச்சிங், பினாங்கு அனைத்துலக விமான நிலையங்களிலிருந்து புறப்படும் எல்லாப் பயணங்களுக்கும்…

புவா: “குறைந்த கட்டணம்” என்றால் என்ன என்பது எம்ஏஎச்பி புரிகிறதா?

'குறைந்த கட்டணம்' என்னும் கோட்பாட்டை எம்ஏஎச்பி என்னும் மலேசியா ஏர்போர்ட்ஸ் பெர்ஹாட் புரிந்து கொண்டுள்ளதா என பெட்டாலிங் ஜெயா உத்தாரா எம்பி டோனி புவா கேள்வி எழுப்பியுள்ளார். நடப்பு குறைந்த கட்டண விமான முனையத்துக்கு பதிலாகக் கட்டப்படும் கேஎல்ஐஏ2-ன் கட்டுமானச் செலவுகள் இரண்டு பில்லியன் ரிங்கிட்டிலிருந்து இரண்டு மடங்கு…

பொதுக் கூட்ட மசோதா பிரதமரது தோற்றத்துக்கு “இன்னொரு களங்கம்”

அமைதியான பொதுக் கூட்ட மசோதா பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் தோற்றத்தை களங்கப்படுத்தியுள்ளதாக பல முக்கியமான பிஎன் பிரமுகர்கள் இடம் பெற்றுள்ள அமானா என்கிற நெருக்குதல் அமைப்பு கூறுகிறது. "உருமாற்றத்துக்கான பிரதமர் என்னும் நஜிப்பின் தோற்றத்துக்கு களங்கத்தை ஏற்படுத்தியுள்ள இன்னொரு தவறைக் காணும் போது வருத்தமாக இருக்கிறது," என…

அம்னோ தகவல் பிரிவுத் தலைவர் கூறிய கருத்தைக் கத்தோலிக்க ஆயர்…

அம்னோ தகவல் பிரிவுத் தலைவர் அகமட் மஸ்லான், ஒர் எதிர்க்கட்சியை "கிறிஸ்துவ மயத்துக்கான ஏஜண்டுகள்" என கூறியுள்ள குற்றச்சாட்டு "அச்சத்தை அதிகரிக்கும் நோக்கத்தை" கொண்டுள்ளதாக கத்தோலிக்க ஆயர் டாக்டர் பால் தான் சீ இங் வருணித்துள்ளார். "அம்னோ ஆண்டுப் பொதுப் பேரவையில் கலந்து கொள்ளும் பேராளர்கள் உணர்வுகளைத் தூண்டும்…

அடையாளக் கார்டு திட்டம் மீது ஆர்சிஐ அமைக்க தேர்தல் குழு…

சபாவில் அந்நியர்களுக்குக் குடியுரிமை வழங்கப்பட்டு வாக்களிப்பதற்கான உரிமை கொடுக்கப்பட்டதாக கூறப்படுவதை விசாரிக்க ஆர்சிஐ என்ற அரச விசாரணை ஆணையம் அமைக்கப்பட வேண்டும் என தேர்தல் சீர்திருத்தங்கள் மீதான பிஎஸ்சி என்னும் நாடாளுமன்றத் தேர்வுக் குழு பரிந்துரைத்துள்ளது. பிஎஸ்சி சமர்பித்துள்ள இடைக்கால அறிக்கையில் அந்தத் தகவல் காணப்படுகிறது. கடந்த வாரம்…

வெளிநாட்டில் உள்ள குடிமக்கள் அனைவருக்கும் வாக்களிக்கும் உரிமை

வெளிநாடுகளில் வசிக்கும் மலேசியர்கள் அனைவருமே தலத்தில் இல்லா வாக்காளர்கள் என்ற முறையில் வாக்களிக்க அனுமதிக்க வேண்டும்.தேர்தல் சீரமைப்பு மீதான நாடாளுமன்றத் தேர்வுக்குழு(பிஎஸ்சி) இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யும் அதன் பூர்வாங்க அறிக்கையில் இவ்வாறு கேட்டுக்கொண்டுள்ளது. இதற்கான நடவடிக்கையை தேர்தல் ஆணையம் மேற்கொள்ள வேண்டும் என்று அக்குழு பரிந்துரைத்தது.  இப்போதைக்கு,…