மஇகாவை தொடர்ந்து தாக்கினால் முகத்தில் எசிட் தெளிக்கப்படுமென எச்சரிக்கை

பிகேஆர் உதவித் தலைவர் என்.சுரேந்தரன் எசிட் தாக்குதலுக்கு ஆளாக நேரிடும் என்று எஸ்எம்எஸ் செய்தி மூலம் மருட்டல் விடப்பட்டுள்ளது. தாம் மஇகாவை குறைகூறுவதற்கும் இதற்கும் தொடர்பு இருக்கலாம் என்று அவர் நம்புகிறார். சுரேந்தரன் செய்துள்ள போலீஸ் புகாரின்படி, இழிவான சொற்களடங்கிய அச்செய்தியில் மஇகாவை குறைகூறுவதை அவர் நிறுத்திக்கொள்ள வேண்டும்;…

அரசியல் ஆய்வாளர் வீட்டில் காலிகள் தாக்குதல்

காலிகளின் கும்பல் ஒன்று அரசியல் ஆய்வாளர் ஒங் கியான் மிங்கின் வீட்டை இன்று பிற்பகல் தாக்கினர். முன்வாயில் கதவை  உடைத்தாலும் வீட்டுக்குள் அவர்கள் புகவில்லை. “மூன்று காலிகள் என் வீட்டுக்குள் கதவை உடைத்துக்கொண்டு நுழைய பார்த்தார்கள். முன்வாயில் கதவுகளை உடைத்தார்கள். அச்சுறுத்தும் செயல்களில் ஈடுபட்டார்கள். பிறகு புறப்பட்டுச் சென்றனர்”,…

கோலா சிலாங்கூர் முஸ்லிம்கள் ஜோடியாக அமர்ந்து சினிமா பார்க்கத் தடை

கோலா சிலாங்கூர் திரை அரங்குகளில்  திருமணம் ஆகாத முஸ்லிம் ஜோடிகள் தனித்தனியே அமர்ந்துதான் படம் பார்க்க வேண்டும் என்ற புதிய விதியொன்றை ஊராட்சி மன்றத்தின் பாஸ் கவுன்சிலர்கள் கொண்டு வந்துள்ளனர். இந்தப் புதிய விதியை நினைவுறுத்தும் அறிவிப்புகள் திரை அரங்கில் வைக்கப்பட வேண்டும் என்று கோலா  சிலாங்கூர் மாவட்ட…

பேராக்கை பிஎன் கைப்பற்றுவதில் முக்கிய பங்காற்றிய அரசு ஊழியர் பாஸ்…

2009ம் ஆண்டு பேராக் மாநில அரசாங்கத்தை பிஎன் கைப்பற்றுவதில் முக்கியப் பங்காற்றிய முன்னாள் பேராக் மாநிலச் சட்டமன்ற செயலாளர் அப்துல்லா அந்தோங் சாப்ரி அரசு சேவையிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் பாஸ் கட்சியில் சேருவதற்கு முடிவு செய்துள்ளார். ஈப்போவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை புதிய பாஸ் உறுப்பினர்களை வரவேற்பதற்காக நடத்தப்பட்ட…

பினாங்கு முதலமைச்சரும் அவரது மனைவியும் பொய் சொல்வதைக் கண்டு பிடிக்கும்…

பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங்-கும் அவரது துணைவியார் பெட்டி சியூ ஜெக் செங்-கும் லிம்-மின் முன்னாள் ஊழியரான இங் பெய்க் கெங்-கும் தங்களைச் சூழ்ந்துள்ள சர்ச்சைக்கு முடிவு கட்ட பொய் சொல்வதைக் கண்டு பிடிக்கும் கருவியின் சோதனைக்கு உட்பட வேண்டும் என மஇகா தலைவர் ஒருவர் யோசனை…

அன்வார் விடுவிக்கப்பட்டதற்கு எதிராக ஏஜி முறையீடு

குதப்புணர்ச்சி குற்றச்சாட்டிலிருந்து அன்வார் இப்ராஹிமை விடுவித்த கோலாலம்பூர் உயர் நீதிமன்ற முடிவை எதிர்த்து சட்டத் துறைத் தலைவர்(ஏஜி)அலுவலகம் மேல் முறையீட்டை சமர்பித்துள்ளது. முறையீட்டுக்கான மனு நேற்று தாக்கல் செய்யப்பட்டதை ஏஜி அலுவலகத்தில் வழக்கு விசாரணை, முறையீட்டுப் பீரிவின் தலைவர் கமாலுதின் முகமட் சைட் இன்று உறுதிப்படுத்தினார். "அது சமர்பிக்கப்பட்டுள்ளது.…

நிஜார் உத்துசான், டிவி3 மீது அவதூறு வழக்குத் தொடர்ந்துள்ளார்

உத்துசான் மலேசியாவும் டிவி3-வும் WWW1 கார் எண் தகடு தொடர்பில் அவதூறான செய்திகளை வெளியிட்டதாக கூறப்படுவது மீது அவற்றுக்கு எதிராக முன்னாள் பேராக் மந்திரி புசார் முகமட் நிஜார் ஜமாலுதின் 50 மில்லியன் ரிங்கிட் வழக்கைத் தொடுத்துள்ளார். கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் அந்த வழக்கு சமர்பிக்கப்பட்டுள்ளது. அந்த இரண்டு…

எல்ஆர்டி குத்தகை வழங்கப்பட்டதில் பிரதமருக்கு சம்பந்தம் உண்டு;ஆவணம் நிரூபிக்கிறது

பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் தலைமையில் உயர்-நிலைக்குழு ஒன்று ரிம1.18பில்லியன் மதிப்புள்ள Read More

ஹாடி: பக்காத்தானில் மிகவும் வலுவானது பாஸ் கட்சியே, டிஏபி அல்ல

அடுத்த பொதுத் தேர்தலில் டிஏபி அதிகமான நாடாளுமன்றத் தொகுதிகளில் போட்டியிடும் எனச் சொல்லப்படுவதை பாஸ் கட்சி தலைவர் அப்துல் ஹாடி அவாங் நிராகரித்துள்ளார். பக்காத்தான் ராக்யாட் கூட்டணியில் அந்த இஸ்லாமியக் கட்சியே வலிமை வாய்ந்தது என அவர் சொன்னார். டிஏபி-யைக் காட்டிலும் கூடுதலான இடங்களில் பாஸ் போட்டியிடும் என்றும்…

கைரி: ஒன்றுமில்லா விவகாரத்திற்கு ஏன் இத்தனை ஆரவாரம்?

ஹூடுட் சட்டத்தை அமல்படுத்த ஜோகூர் அம்னோ சட்டமன்ற உறுப்பினர் முன்மொழிந்ததை ஒதுக்கித் தள்ளிய அம்னோ இளைஞர் தலைவர் கைரி ஜமாலுடின் ஒன்றுமில்லா ஒரு விசயம் மிகைப் படுத்தப்பட்டிருக்கிறது என்றார். அது கெமெலா சட்டமன்ற உறுப்பினர் ஆயுப் ரஹ்மாட்டின் “தனிப்பட்ட கருத்து”, கட்சியின் கருத்தல்ல. கைரி, நேற்று வங்சா மாஜுவில்…

ஒரே மலேசியா கொள்கை இந்தியர்களின் ஏழ்மையை ஒழிக்குமா?

மரகதம்: என்ன கோமாளி நலமா! எங்கும் எதிலும் ஒரே மலேசியாதான். இந்த சத்து மலேசியா கொள்கை வழி இந்தியர்களின் ஏழ்மை ஒழியுமா? கோமாளி: அம்மண தேசத்தில் கோவணம் கட்டியவன் பைத்தியக்காரன் என்பார்கள். சொன்னால் நம்ப மாட்டாய் மரகதம் உலகமே இன்று அம்மணமாய்தான் உள்ளது. அதனால்தான் யாராவது ஏழ்மையை ஒழிக்க…

கோலாலம்பூர் பேரணியில் அரசதந்திரிகள் பங்கு கொள்ளவில்லை என்கிறது சிங்கப்பூர்

தேர்தல் சீர்திருத்தங்களைக் கோரி ஏப்ரல் மாதம் கோலாலம்பூரில் நடத்தப்பட்ட மாபெரும் பேரணியில் சிங்கப்பூர் அரசதந்திரிகள் கலந்து கொண்டதாக மலேசியா பழி சுமத்துவதை அந்த நகர நாடு நிராகரித்துள்ளது. அதன் வெளியுறவு அமைச்சர் கே சண்முகம் நாடாளுமன்றத்தில் இன்று அதனைத் தெரிவித்தார். அந்த ஏப்ரல் பேரணியில் "பாரபட்சமற்ற பார்வையாளர்களாக" மற்ற…

சிலாங்கூர் 120 மில்லியன் ரிங்கிட் துணை வரவு செலவுத் திட்டத்தை…

சிலாங்கூர் மாநில அரசாங்கம் இன்று 120.1 மில்லியன் ரிங்கிட் பெறும் துணை வரவு செலவுத் திட்டத்தை இன்று மாநிலச் சட்டமன்றத்தில் தாக்கல் செய்தது. அதில் பாதிக்கும் மேற்பட்ட தொகை அதன் 24 துறைகளில் நிறுவனங்களிலும் வேலை செய்யும் அரசாங்க ஊழியர்களுக்கான 13 விழுக்காடு சம்பள உயர்வுக்கு செலவு செய்யப்படும்.…

ஹசானுடன் “விவாதம் நடத்த தயார்” என காலித் அறிவிப்பு

பிரபலமான புத்தக வெளியீட்டாளரான KarangKraf, சிலாங்கூர் பாஸ் துணை ஆணையர் III காலித் சமாட்டு-டன் விவாதம் நடத்த முன் வருமாறு முன்னாள் சிலாங்கூர் பாஸ் தலைவர் ஹசான் அலியைக் கேட்டுக் கொண்டதை ஏற்றுக் கொள்ளுமாறு காலித், ஹசானுக்குச் சவால் விடுத்துள்ளார். "பிப்ரவரி மாதம் தொடக்கம் என்னுடன் விவாதம் நடத்துமாறு…

டிஏபி ‘இட ஒதுக்கீட்டில்’ ஆதிக்கம் செலுத்துவதாக கூறும் உத்துசான் செய்தியை…

டிஏபி அடுத்த பொதுத் தேர்தலில் மொத்தமுள்ள 222 நாடாளுமன்றத் தொகுதிகளில் 90ல் போட்டியிட்டு புத்ராஜெயாவை பக்காத்தான் ராக்யாட் கைப்பற்றுமானால் தனது தலைவர் பிரதமராக நியமிக்கப்படுவதற்கு வகை செய்துள்ளதாக உத்துசான் மலேசியா இன்று முதல் பக்கத்தில் வெளியிட்ட தலைப்புச் செய்தியை டிஏபி நிராகரித்துள்ளது. அந்தச் செய்தி "குப்பை,குப்பை, குப்பை" என…

“கதிரியக்கக் கழிவை நாட்டைவிட்டு வெளியேற்ற வேண்டும் இல்லையேல்….”

பாகாங்,கெபெங் அரிய மண் சுத்திகரிப்பு ஆலையின் கழிவுகள் மலேசியாவுக்கு வெளியில் கொண்டு செல்லப்பட வேண்டும் என்பதை கெராக்கான் தலைவர் கோ சூ கூன் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். அல்லது, அந்த ஆஸ்திரேலிய நிறுவனம் பொதுமக்களின் ஆரோக்கியம் பாதிக்கப்படாமலிருப்பதை உறுதிப்படுத்த கழிவுப்பொருளைப் பக்குவப்படுத்த பொருத்தமான திட்டம் ஒன்றைக் கொண்டிருக்க வேண்டும். லினாஸ்,…

வேதா-வின் பாஸ்போர்ட்டை திருப்பிக் கொடுங்கள் என மலேசிய அரசுக்கு வேண்டுகோள்

தற்போது பிரிட்டனில் நாடு கடந்து வாழும் ஹிண்ட்ராப் எனப்படும் இந்து உரிமை நடவடிக்கைக் குழுத் தலைவர் பி வேதமூர்த்தி நாடு திரும்புவதற்கு உதவியாக அவரது பாஸ்போர்ட்டை திருப்பிக் கொடுக்குமாறு அந்த அமைப்பு மலேசிய அரசாங்கத்தை கேட்டுக் கொண்டுள்ளது. பாஸ்போர்ட் "இருந்தாலும் இல்லாவிட்டாலும்" ஆகஸ்ட் முதல் தேதி மலேசிய மண்ணை…