நான் என் உயிருக்கு அஞ்சுகிறேன் என்கிறார் தனிப்பட்ட துப்பறிவாளர் பாலா

தனிப்பட்ட துப்பறிவாளர் பி பாலசுப்ரமணியம் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு நாட்டை விட்டு வெளியேறிய பின்னர் மலேசியாவுக்கு அவ்வப்போது வந்த போதிலும் தமது உயிருக்கு இன்னும் அஞ்சுகிறார். "நான் திரும்ப வருகிறேன். ஆனால் குறுகிய காலத்துக்கு மட்டுமே வருகிறேன். எனக்கு இங்கு பாதுகாப்பு இல்லை. இங்கு மலேசியாவில் எனக்குப் பாதுகாப்பு…

அமைச்சர்: அணைகளில் நீர் நிரம்பியுள்ளது தண்ணீர் நெருக்கடியைத் தீர்க்காது

சிலாங்கூர் அணைகளில் நீர் நிரம்பியிருப்பது மாநிலத்தில் தண்ணீர் நெருக்கடி ஏதுமில்லை எனபதைக் காட்டுவதாக சிலாங்கூர் ஆட்சி மன்ற உறுப்பினர்களான ரோனி லியூவும் டாக்டர் சேவியர் ஜெயகுமாரும் கூறியுள்ளதை எரிசக்தி, பசுமைத் தொழில்நுட்ப, நீர் வள அமைச்சர் பீட்டர் சின் நிராகரித்துள்ளார். அந்த இருவரையும் பெயர் குறிப்பிடாமல் நீர் விநியோகம்…

‘பினாங்குத் துறைமுக தனியார் மயம் மீது பிஎன் போடும் இரட்டை…

பினாங்குத் துறைமுக தனியார் மயம் மீது பிஎன் "நேர்மையற்ற முறையில் நடந்து கொள்வதாகவும் அரசியல் ஏமாற்று வேலையில் ஈடுபடுவதாகவும்" குறை கூறப்பட்டுள்ளது. அந்தத் துறைமுகத்தை நிர்வாகம் செய்வதற்கான டெண்டரில் அம்னோவுடன் தொடர்புடைய செல்வந்தர் ஒருவர் வெற்றி பெற்றுள்ளதாக கூறப்பட்ட பின்னர் அந்த விஷயம் பினாங்கில் மிகவும் சூடாக விவாதிக்கப்பட்டு…

தேசத் துரோக விசாரணை: மகாதீருக்கு நீதிமன்ற அழைப்பாணை அனுப்பப்பட வேண்டும்,கர்பால்…

மலாய் ஆட்சியாளர்களுக்கு வழங்கப்பட்டிருந்த சட்ட விதிவிலக்கை அகற்றிய 1993ம் ஆண்டு அரசமைப்புச் சட்டத் திருத்தம் மீதான நாடாளுமன்ற விவாதத்தின் போது முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட்-டும் மேலும் நால்வரும் பேசிய விஷயங்களுக்காக ஏன் அவர்கள் மீது தேசத் துரோகக் குற்றச்சாட்டு சுமத்தப்படவில்லை என்பதை விளக்குவதற்காக அந்த ஐவருக்கும்…

ஹிண்ட்ராப் அரசியல் கட்சியாக மாறாது; போராட்டம் தொடரும் என்கிறார் வேதா…

ஹிண்ட்ராப் மக்கள் சக்தி இயக்கம் அரசியல் களத்தில் ஓர் அரசியல் கட்சியாக உருவெடுக்காது என்று நாடு திரும்பியுள்ள ஹிண்ட்ராப் இயக்கத் தலைவர் பி. வேதமூர்த்தி கூறினார். நாட்டில் உள்ள 20 இலட்சம் இந்தியர்களில் 5 இலட்சம் பேர் மட்டுமே ஓரளவு சுமாரான வாழ்க்கை நிலையில் உள்ளனர். மீதமுள்ள 15…

அம்னோ, கிளந்தான் எண்ணெய் உரிமப் பண விவகாரத்தை 13வது பொதுத்…

கிளந்தான் எண்ணெய் உரிமப் பண விவகாரத்தை தீர்ப்பதற்கு மாநில அம்னோ வாக்குறுதி அளித்துள்ளது. அடுத்த பொதுத் தேர்தலில் அந்த விஷயத்தை பாஸ் தலைமையிலான மாநில அரசாங்கம் ஒர் ஆயுதமாகப் பயன்படுத்துவதை தடுப்பதே அதன் நோக்கமாகும். இவ்வாறு கிளந்தான் அம்னோ தொடர்புக் குழுத் தலைவர் முஸ்தாபா முகமட் கூறியதாக இன்று…

தேசிய நாள் பாடல் திருடப்பட்டதாகக் கூறப்படுவதை அமைச்சு ஆராயும்

இவ்வாண்டு தேசிய நாள் பாடலான 'Janji Ditepati'  இந்தோனேசியாவின் சுவிசேஷ துதிப்பாடல் ஒன்றிலிருந்து திருடப்பட்டது என்று கூறப்பட்டிருப்பதை ஆராய ஒரு குழு அமைக்கப்பட்டிருப்பதாக தகவல், தொடர்பு, பண்பாட்டு அமைச்சர் ரயிஸ் அறிவித்துள்ளார். “மெர்டேகா பாடலான 'Janji Ditepati' திருடப்பட்டதாக சொல்லப்படுவது உண்மையா என்பதைக் கண்டறிய ஒரு தனிக் குழு…

ராபிஸி: ஜார்ஜ் கெண்ட் பொய் சொல்கிறது

அம்பாங் எல்ஆர்டி விரிவுத் திட்டத்துக்கான திறன் சோதனையில் லயன் பசிபிக்-உடனான அதன் கூட்டுத் தொழில் திட்டத்தில் தோல்வி காணவில்லை எனக் கட்டுமான நிறுவனமான ஜார்ஜ் கெண்ட் கூறிக் கொள்வதை பிகேஆர் வியூக இயக்குநர் ராபிஸி இஸ்மாயில் நிராகரித்துள்ளார். அம்பாங் எல்ஆர்டி விரிவுத் திட்ட உரிமையாளரான Syarikat Prasarana Bhd-ன்…

ஜயிஸ் 38 பள்ளிவாசல்களைக் கண்காணித்து வருகிறது

சிலாங்கூர் இஸ்லாமிய சமயத் துறை (Jais), சிலாங்கூரில் ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியின் தளங்களாக மாறியுள்ளதாக வகைப்படுத்தப்பட்டுள்ள 38 பள்ளிவாசல்களைக் கண்காணித்து வருகிறது. “முன்பு 36 பள்ளிவாசல்கள்தாம் எங்கள் பட்டியலில் இருந்தன. இப்போது மேலும் இரண்டு சேர்த்துக்கொள்ளப்பட்டிருக்கின்றன”, என்று ஜயிஸ் தலைவர் மர்சுகி உசேன் கூறியதாக இன்றைய சினார்…

முக்ரிஸ்: என் தந்தையை இரண்டாவது முறையாக சங்கடப்படுத்த வேண்டாம்

கெடாவில் பிஎன் மீண்டும் அதிகாரத்துக்குத் திரும்புவதற்கு வாக்களிப்பதின் மூலம் கெடா மக்கள் தமது தந்தையார் டாக்டர் மகாதீர் முகமட் மீது கொண்டுள்ள பாசத்தை மெய்பிக்க வேண்டும் என ஜெர்லுன் நாடாளுமன்ற உறுப்பினர் முக்ரிஸ் மகாதீர் வேண்டுகோள் விடுத்துள்ளார். கடந்த தேர்தலில் கெடாவில் பிஎன் தோல்வி கண்டது மகாதீருக்கு பேரிடியாகும்.…

தகவல்களை அம்பலப்படுத்துகின்றவர்கள் வேட்டையாடப்படுகின்றனர், குற்றம் புரிந்தவர்கள் சுதந்திரமாக நடமாடுகின்றனர்

"தகவல்களை அம்பலப் படுத்துகின்றவர்களுக்கு கைவிலங்குகள் மாட்டப்படுகின்றன. ஆனால் 250 Read More

பாலா விவகாரத்தைத் ‘தீர்க்க’ துணை அமைச்சர் முன் வந்தார்

தற்போது இந்தியாவில் நாடு கடந்து வாழும் தனிப்பட்ட துப்பறிவாளர் பி பாலசுப்ரமணியம், குற்றம் சாட்டப்படுவதற்கு தயாராக இருந்து தமது முதலாவது சத்தியப் பிரமாணத்தை ஜோடித்த குற்றச்சாட்டை ஒப்புக் கொண்டால் அவர் தொடர்பான விவகாரத்தை முடிவுக்குக் கொண்டு வர தற்போது துணை அமைச்சராகப் பணியாற்றும் ஒருவர் முன் வந்தார். அந்தத்…

‘நச்சுத்தன்மை’ கொண்ட தங்கச் சுரங்கத்துக்கு எதிராக ரவூப் மக்கள் பேரணி

ரவூப் புக்கிட் கோமான் மக்கள், RAGM என்ற ரவூப் ஆஸ்திரேலிய தங்கச் சுரங்க நிறுவனம், தங்கச் சுரங்க நடவடிக்கைகளுக்காக சைனாய்டை பயன்படுத்துவதை ஆட்சேபித்து பேரணி ஒன்றை நடத்த ஏற்பாடு செய்துள்ளனர். தனது நடவடிக்கைகளை நிறுத்திக் கொள்ளுமாறு அந்த சுரங்க நிறுவனத்தைக் கூட்டரசு அரசாங்கம் கட்டாயப்படுத்த வேண்டும் என 'சைனாய்டை…

முஹைடின் இரண்டாவது தண்ணீர் குழுக் கூட்டத்துக்குத் தலைமை தாங்கினார்

சிலாங்கூர் தண்ணீர் விவகாரம் குறித்த அமைச்சரவைக் குழுவின் இரண்டாவது கூட்டத்துக்கு துணைப் பிரதமர் முஹைன் யாசின் இன்று தலைமை தாங்கினார். அந்தக் கூட்டம் எரிசக்தி, பசுமைத் தொழில் நுட்ப, நீர்வள அமைச்சில் நடைபெற்றது. சிலாங்கூர், கோலாலம்பூர், புத்ராஜெயா ஆகியவற்றில் நீர் விநியோகச் சேவை தொடர்பான பிரச்னைகளை ஆய்வு செய்து…

ஏஜி, பிஎன்-னுக்கு பெரிய தடைக்கல் என்கிறார் பாங்

அப்துல் கனி பட்டெய்லை ஏஜி என்ற சட்டத்துறைத் தலைவர் பதவியிலிருந்து பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் நீக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. காரணம் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியதாக ஏஜி மீது பல குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன என்று மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (எம்ஏசிசி) ஆலோசனைக் குழு உறுப்பினர்…

பெர்சே 3.0 குழப்பத்துக்கு அன்வார், அஸ்மின் காரணம் என்கிறது கலகத்…

பெர்சே 3.0 பேரணி, அஸ்மின் அலி, அன்வார் இப்ராஹிம் போன்ற எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டத்தினரிடையே உரையாற்றும் வரையில், அமைதியாக இருந்ததாக FRU என்ற கலகத் தடுப்புப் போலீஸ் படைப் பிரிவின் அதிகாரி ஒருவர் சுஹாக்காம் என்ற மலேசிய மனித உரிமை ஆணையம் நடத்தும் பொது விசாரணையில் கூறியுள்ளார். நண்பகல்…

இரண்டு மெர்டேகா கருப்பொருள்களைக் கொண்டிருப்பதில் பிளவுபடுத்தும் நோக்கமில்லை

பக்காத்தான் ரக்யாட் மாநிலங்களில் தேசிய நாள் கொண்டாட்டத்துக்கு வேறு கருப்பொருளைப் பயன்படுத்துவது மக்களைப் பிளவுபடுத்தும் முயற்சி அல்ல என்று கூறிய பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிம், நடப்புக் கருப்பொருள்தான் “குறுகிய கட்சி மனப்பான்மை கொண்டது” என்றார். “ஒன்றே நாடு ஒன்றே மூச்சு என்பது எப்படிப் பிளவுபடுத்தும் முயற்சியாகும்?”,…

தகவல்களை வெளியிடுவோரைப் பாதுகாக்கவும் தயார் செய்யவும் ஒரு மய்யம் அமைக்கப்படும்

NFC என்ற தேசிய விலங்குக் கூட நிறுவனம் பற்றிய தகவல்களை அம்பலப்படுத்திய விவகாரத்தில் வங்கிச் சட்டங்களை மீறியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள ராபிஸி இஸ்மாயில், தகவல்களை அம்பலப்படுத்துகின்றவர்களுக்குப் பயிற்சி அளிக்கவும் பாதுகாப்பு வழங்கவும் மய்யம் ஒன்று அமைக்கப்படுவதாக இன்று அறிவித்துள்ளார். தமது நிலையைப் போன்ற சூழலில் இருக்கின்றவர்களுக்கு உதவியாக அந்த…

அரசாங்கம் முறையீட்டை கை விடுகிறது, ராம்லி-க்கு 753,000 ரிங்கிட் ஒய்வுக்…

முன்னாள் வர்த்தகக் குற்றப் புலனாய்வுத் துறைத் தலைவர் ராம்லி யூசோப்-புக்கு எதிராக அழைப்பாணைக் குற்றச்சாட்டு மீது முறையீட்டு நீதிமன்றத்தில் சமர்பித்த முறையீட்டை அரசு தரப்பு  மீட்டுக் கொண்டுள்ளது. அதனைத் தொடர்ந்து ராம்லி-க்கு ஒய்வூதியமும் ஒய்வுக் கொடையுமாக மொத்தம் 753,000 ரிங்கிட் கொடுப்பதற்கு அரசாங்கம் இணங்கியுள்ளது. அவர் 2007ம் ஆண்டு…

சாபாவிலிருந்து மேலும் ‘நல்ல செய்திகள்’: கோடி காட்டினார் அன்வார்

செப்டம்பர் 16 நிகழ்வுகளை நினைவுபடுத்துவதுபோல் பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிம், சாபாவிலிருந்து மேலும் பல “நல்ல செய்திகள்” வரும் என்கிறார். வார இறுதியில், பிஎன்னிலிருந்து துவாரான் எம்பி வில்ப்ரட் பும்புரிங்கும் பியுஃபோர்ட் எம்பி லாஜிம் உக்கினும் வெளியேறியதை அடுத்து அன்வார் இவ்வாறு கூறியுள்ளார். “ஆகஸ்ட் 12-இல் சாபா…