பிஎஸ்எம் : ஐசெர்ட்டை மறந்துவிட்டு, தொழிலாளர் வர்க்கப் பிரச்சனைகளைக் கையாளுங்கள்

அனைத்து வகையான இனப் பாகுபாடுகளையும் (ஐசெர்ட்) அகற்றுவதை உறுதிப்படுத்துவதற்கு முன்னர், நாட்டில் தொழிலாளர் வர்க்கத்தின் கவலைகளைத் தீர்க்க அரசாங்கம் ஆவண செய்ய வேண்டுமென, மலேசிய சோசலிசக் கட்சி (பி.எஸ்.எம்.) தலைவர் டாக்டர் நாசிர் ஹசிம் கூறியிருக்கிறார். "பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கத்திற்கு, உண்மையிலேயே மிகப்பெரிய சவாலாக இருப்பது, ஐசெர்ட் கையெழுத்திடப்பட்டால்,…

நஜிப்: ஹரப்பான் எம்பிகளை வளைத்துப் போடுமாறு அம்னோவுக்கு உத்தரவிடவில்லை

முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், மே 9 பொதுத் தேர்தலுக்குப் பின்னர் பக்கத்தான் ஹரப்பான் எம்பிகளுடன் சேர்ந்து அம்னோ கூட்டணி அமைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டதாகக் கூறப்படுவதில் தமக்குச் சம்பந்தமில்லை என்றார். “மற்றவர்கள் அதைச் செய்தார்களா என்பது எனக்குத் தெரியாது. ஆனால், அன்றிரவு அப்படி எதையும் செய்ய நான்…

லங்காவியில் பைபள் கையேடுகளை விநியோகித்த பின்லாந்து நாட்டவர் நால்வர் கைது

நேற்று லங்காவி தங்கு விடுதியில் பின்லாந்து நாட்டவர் நால்வரைப் போலீசார் கைது செய்தார்கள். அவர்கள் பொது இடங்களில் சமயப் பிரச்சார கையேடுகளையும் அறிக்கைகளையும் விநியோகம் செய்தார்களாம். அவர்களுக்கு எதிராக போலீஸ் புகார்கள் செய்யப்பட்டதை அடுத்து வயது 27-க்கும் 60-க்கும் இடைப்பட்ட அந்நால்வரும் கைது செய்யப்பட்டதாக லங்காவி போலீஸ் தலைவர்…

நஜிப்: ஐசெர்ட்டை இரண்டு தடவை ஆராய்ந்தோம், அது நமக்கு ஒத்துவராது…

முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், முந்தைய பிஎன் அரசாங்கம் எல்லாவகை இனப்பாடுபாடுகளையும் ஒழிக்கும் அனைத்துலக ஒப்பந்த(ஐசெர்ட்)த்தில் கையெழுத்திடுவது குறித்து இரண்டு தடவை ஆராய்ந்து பார்த்தது என்றார். ஆனால், பிரதமர்துறையில் இருந்த தேசிய ஒற்றுமை, ஒருங்கிணைப்புத் துறை 2011-இல் அமைத்த ஐசெர்ட் நுட்பக் குழு, ஐசெர்ட் மலேசிய சமுதாய…

வேதமூர்த்திக்கு எதிராகக் கத்திக் கூச்சலிட்டது ‘மிகவும் வெட்கக்கேடான விசயம்’- லிம்

திங்கள்கிழமை மக்களவையில் பிரதமர் துறை அமைச்சர் பி.வேதமூர்த்தி பேசிக் கொண்டிருந்தபோது கத்திக் கூச்சலிட்ட எதிரணி எம்பிகளை நாடாளுமன்ற உரிமை மற்றும் சலுகைக் குழுவின் விசாரணைக்கு அனுப்ப வேண்டும் என்று டிஏபி பெருந் தலைவர் லிட் சியாங் கூறினார். “ அதுபோன்ற வெட்கக்கேடான சம்பவம் மீண்டும் நடக்கக் கூடாது. “எம்பியோ…

ஐசெர்ட்டை அங்கீகரிக்க அரசமைப்புச் சட்டத்தைத் திருத்த வேண்டியதில்லை, சுரேந்திரன் கூறுகிறார்

ஐசெர்ட் எனப்படும் அனைத்து வகையான இனப் பாகுபாடுகளையும் அழிக்க வகை செய்யும் ஐநாவின் அனைத்துலக ஒப்பந்தத்தை அங்கீகரிக்க மலேசிய அரசமைப்புச் சட்டத்தைத் திருத்த வேண்டியதில்லை, ஏனென்றால் அவற்றில் ஒன்றுக்கொன்று முரண்பாடான எதுவும் இல்லை என்று இரண்டு சட்ட வல்லுநர்கள் கூறுகின்றனர். ஐசெர்ட்டை அமல்படுத்துவது "கிட்டத்தட்ட சாத்தியமில்லை", ஏனென்றால் அதற்கு…

ஐசெர்ட்-டுக்கு கண்டனம் தெரிவிக்கலாம், ஆனால் இன, சமய உணர்ச்சிகளுக்கு மதிப்பளியுங்கள்,…

இனப் பாகுபாட்டை ஒழிப்பதற்கு வகை செய்யும் ஐசெர்ட் எனப்படும் அனைத்துலக ஐக்கிய நாட்டு ஒப்பந்தத்திற்கு எதிராக நடத்தப்படவிருக்கும் கூட்டத்தில் கலந்துகொள்ளவிருப்பவர்கள் இன மற்றும் சமய நெருக்கடி நிலையைத் தூண்டுவதைத் தவிர்க்க வேண்டும் என்று இஸ்லாமிய விவகாரங்களுக்கான அமைச்சர் முஜாஹிட் யூசுப் ராவா வலியுறுத்தியுள்ளார். "இது ஒரு ஜனநாயக நாடு,…

கிட் சியாங்: அம்னோவும் பாஸும் 1எம்டிபி-யைக் கண்டிக்க ஒன்றுசேராதது ஏன்?

பல கூட்டுப் பேரணிகளை நடத்தும் அம்னோவும் பாஸும் 1எம்டிபி ஊழலுக்கும் முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்குக்கும் கண்டனம் தெரிவிப்பதிலும் ஒன்றுசேருமா என்று டிஏபி பெருந் தலைவர் லிம் கிட் சியாங் கேட்கிறார். இனப் பாகுபாட்டை ஒழிக்கும் அனைத்துலக ஒப்பந்த(ஐசெர்ட்)த்தைக் எதிர்க்க அவை கூட்டணி சேர்ந்திருப்பதை அடுத்து அவர்…

ஹாடி : முஸ்லிம்கள் ஐசெர்டை எதிர்ப்பது ‘கட்டாயமாகும்’

பாஸ் தலைவர் அப்துல் ஹாடி ஆவாங், முஸ்லிம்கள் அனைவரும் இனப் பாகுபாட்டை ஒழிக்கும் அனைத்துலக ஒப்பந்த(ஐசெர்ட்) த்தை   அவசியம் எதிர்க்க வேண்டும் என வலியுறுத்தினார். ஐசெர்ட் ஒப்பந்தத்தை ஏற்பது இஸ்லாத்தை மற்ற சமயங்களுக்கு “இணையாக” வைக்கும் என்று கூறிய அவர், அந்த ஒப்பந்தத்தை ஆதரிக்கும் முஸ்லிம்களையும் சாடினார். “அவப்பேறாக,…

ஸ்கோர்ப்பீன் விசாரணை : நஜிப் அழைக்கப்பட்டார், அடுத்து இரசாக் அழைக்கப்படலாம்

மலேசிய ஊழல் எதிர்ப்பு ஆணையம் (எம்ஏசிசி), நஜிப் பாதுகாப்பு அமைச்சராக இருந்தபோது வாங்கப்பட்ட இரண்டு ஸ்கோர்ப்பீன் நீர்மூழ்கிக் கப்பல்கள் தொடர்பான விசாரணைகளை மீண்டும் தொடங்கியுள்ளது. இன்று காலை, புத்ராஜெயாவில் உள்ள எம்ஏசிசி தலைமையகத்திற்கு, நஜிப் அழைக்கப்பட்டதற்கு அதுதான் காரணம் என்று மலேசியாகினியிடம் தெரிவிக்கப்பட்டது. “அந்த வழக்கு மீண்டும் தொடங்கப்பட்டுவிட்டது,”…

என்மீதான கண்டனம் நியாயமற்றது! – வேதமூர்த்தி

"பத்து ஆண்டுகளுக்கு முன் டச்சு தொலைக்காட்சிக்கு நான் அளித்த நேர்காணல் தொடர்பான காணொலி தற்பொழுது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. மலேசிய இந்தியர்கள் தங்களின் நியாயமான உரிமைக்காகவும் கோரிக்கைக்காகவும்  2007 நவம்பரில் தலைநகரையே குலுங்கச் செய்த மக்கள் எழுச்சிப் பேரணியை அமைதியாக நடத்தியதன் தொடர்பில் நூற்றுக் கணக்கானோர் கைது…

சீனமொழியில் சாலை வழிகாட்டி பலகையா?, உடனே அகற்ற சிலாங்கூர் சுல்தான்…

  சிலாங்கூர், ஷா அலாமிலுள்ள சாலைகளில் இரு மொழிகளில் எழுதப்பாட்டிருக்கும் சாலை வழிகாட்டி பலகைகளை மாற்றி தேசிய மொழியில் எழுதப்பட்டவை வைக்கப்பட வேண்டும் என்று சிலாங்கூர் சுல்தான் உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவு சிலாங்கூர் மாநில அரசுக்கு சிலாங்கூர் சுல்தானின் தனிப்பட்ட செயலாளர் முகம்மட் முனிர் பானி அனுப்பிய கடிதத்தில்…

வேதமூர்த்தியை, இணைந்து ‘தாக்கிய’ பாஸ் மற்றும் அம்னோ

நாடாளுமன்றம் | இன்று, பாஸ் மற்றும் அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்து, ‘அனைத்துத் தரப்பு இனவாதப் பாகுபாடுகளையும் அகற்றுவதற்கான சர்வதேச ஒப்பந்தம் (ஐ.சி.இ.ஆர்.டி.) தொடர்பில், பிரதமர் துறை அமைச்சர் பி வேதமூர்த்தியின் நிலைப்பாட்டைத் தாக்கிப் பேசினர். 2019 சட்ட வரைவு விவாதத்தின் போது, ச்சே அப்துல்லா மாட் நாவி…

‘சிலிப்பர் அணிந்த’ டயிமுக்கு எதிராக நடவடிக்கை எடுங்கள் பார்க்கலாம்- லோக்குக்கு…

கோலாலும்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் பிரமுகர்களுக்கான(விஐபி) பாதையைப் பயன்படுத்திய டயிம் சைனுடினுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் துணிச்சல் உண்டா என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லொக்குக்கு மஇகா தலைவர் ஒருவர் சவால் விடுத்துள்ளார். “டயிமின் குற்றம் (விதிமுறைகளை மீறியது) பெரிது. பிரதமரின் பிரதிநிதியாக செயல்பட்டபோது அவர் காலில் சிலிப்பர்…

பிகேஆர் ஆண்டுக் கூட்டத்தைப் புறக்கணிக்கவில்லை- பாரு பியான்

பொதுப் பணித்துறை அமைச்சர் பாரு பியான், கடந்த வாரம் பிகேஆர் ஆண்டுக் கூட்டத்தைப் புறக்கணித்ததாகக் கூறப்படுவதை மறுத்தார். அமைச்சின் அதிகாரத்துவ பணி இருந்ததால் அக்கூட்டத்தில் கலந்துகொள்ள இயலவில்லை என்றார். தகவல் தெரிவிக்கவில்லை. ஆண்டுக் கூட்டத்திலும் கலந்துக்கொள்ளவில்லை என்பதால் பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் அவரைக் கடிந்து கொண்டதை அடுத்து…

விக்னேஸ்வரன்மீது போலீஸ் புலன் விசாரணை: விமான நிலைய பாதுகாப்பு விதிகளை…

செனட் தலைவர் எஸ்.விக்னேஸ்வரன் கோலாலும்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் முக்கிய பிரமுகர்களுக்கான அறையைப் பயன்படுத்தியபோது பாதுகாப்பு விதிமுறைகளை மீறியதாகக் கூறப்படுவது குறித்து போலீஸ் விசாரணையைத் தொடங்கியுள்ளது. பாதுகாக்கப்பட்ட பகுதிகள் சட்டம் 1959-இன்கீழ் விசாரணை நடப்பதாக சிலாங்கூர் போலீஸ் தலைவர் மஸ்லான் மன்சூர் ஹரியான் மெட்ரோவிடம் தெரிவித்தார். கடந்த சனிக்கிழமை…

எம்எசிசி தலைமையகத்தில் மீண்டும் நஜிப்

  முன்னாள் பிரதமர் நஜிப் இன்று மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமையகத்திற்கு மீண்டும் வந்துள்ளார். சரவாக் பள்ளிகளுக்கு சூரிய ஒளி மின் தட்டுகள் பொருத்துவது பற்றிய புலன்விசாரணைகளுக்கு உதவுவதற்காக நஜிப் அங்கு வந்திருப்பதாக நம்பப்படுகிறது. அவர் பயனித்த கார் காலை மணி 9.23 அளவில் போலீஸ் வண்டி…

பினாங்கு டிஎபி தேர்தல்: இராமசாமி, ஸைரில் தோற்கடிக்கப்பட்டனர்

பினாங்கு மாநில டிஎபி தேர்தலில் மாநில துணை முதலமைச்சர்  பி. இராமசாமியும் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் ஸைரில் கிர் ஜோஹாரியும் தோற்கடிக்கப்பட்டனர். ஆயினும், அவர்கள் இருவரும் பினாங்கு டிஎபியின் புதிய தலைமைத்துவத்தின் உறுப்பினர்களாக மீண்டும் சேர்த்துக்கொள்ளப்பட்டனர். அவர்கள் இருவருக்கும் இது ஒரு கடுமையான பின்னடைவாகும். 2015 ஆம் ஆண்டு…

நஜிப் : ‘கல்வி அமைச்சர் இளையர்களுக்குப் பொய் சொல்லக் கற்றுதருகிறாரா?’

முன்னாள் பிரதமர் நஜிப் துன் இராசாக், 1மலேசியா பால் திட்டத்தில் (பிஎஸ்1எம்), 2017-ஆம் ஆண்டிற்கு வழங்கப்பட்ட அனைத்து பானங்களும், வெற்றிகரமாக 7,000 பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுவிட்டதாக விசாரணையின் முடிவுகள் தெரிவிக்கின்றன என்று கூறியுள்ளார். முன்னதாக, பிஎஸ்1எம், பிஎன் ஆட்சியின் போது காணாமல் போனது என்று கல்வி அமைச்சர் மஸ்லி மாலிக்…

அஸ்மின் : துணைத் தலைவர் பதவிக்கு நான் சுலபமாக வரவில்லை

பிகேஆர் மாநாடு | பிகேஆர் துணைத் தலைவர் பதவி, தனக்குப் பெரும் சவாலாக இருந்தது இது முதல் தடவை அல்ல என்று அஸ்மின் அலி கூறியுள்ளார். முந்தையத் தேர்தல்களை நினைவுகூர்ந்த அவர், சவால்களை அமைதியாக எதிர்கொண்டதே, இன்று மீண்டும் அப்பதவியைத் தற்காத்து கொள்வதற்குக் காரணமாக அமைந்தது என்றார். “எனக்கு…

பிகேஆரின் அதிகாரப்பூர்வத் தலைவராக அன்வார்

துணைப் பிரதமர், டாக்டர் வான் அஸிஸா வான் இஸ்மாயிலுக்குப் பதிலாக, பிகேஆர் கட்சியின் தேசியத் தலைவராக, அன்வார் இப்ராஹிம் இன்று போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். பிகேஆர் மத்தியத் தேர்தல் ஆணையத் (ஜேபிபி) தலைவர், ரஷிட் டின், இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். கோம்பாக் நாடாளுமன்ற உறுப்பினரும் பொருளாதார விவகாரத் துறை அமைச்சருமான,…

பாஸ், அம்னோ இணைப்புக்கு ஜாஹிட் அறைகூவல்

பாஸும் அம்னோவும் ஒன்றிணைய வேண்டும். அவ்விரு கட்சிகளும் கூட்டாக ஏற்பாடு செய்திருந்த பேரணி ஒன்றில் உரையாற்றிய அம்னோ தலைவர் அஹமட் ஜாஹிட் ஹமிடி இவ்வாறு கேட்டுக்கொண்டார். “அன்புள்ள (பாஸ் தலைவர்) அப்துல் ஹாடி ஆவாங் அவர்களே, என்னுடைய தலைமைத்துவத்தில், வாருங்கள் ஒன்றிணைவோம். “நம் கருத்து வேறுபாடுகளை ஒதுக்கி வைத்து…

ஃபூஸி : காவல்துறையினர் மத்தியில், ‘முன்கூட்டிய பணி ஓய்வு’ அதிகரிப்பு

காவல்துறையினர் மத்தியில், ‘முன்கூட்டிய பணி ஓய்வு’ போக்கு, கவலை அளிக்கும் வகையில் அதிகரித்து வருவதாக தலைமை காவல்துறை அதிகாரி முகமட் ஃபூஸி ஹருண் கூறினார். இவ்வாண்டு அக்டோபர் வரையில், 5,000-க்கும் அதிகமானோர், முன்னதாக பணி ஓய்வு பெற்றுவிட்டனர் என்று அவர் தெரிவித்தார். “அவர்களில், 2,446 போலிஸ்காரர்கள் சொந்தத் தேர்வாக…