பினாங்கு டிஎபி தேர்தல்: இராமசாமி, ஸைரில் தோற்கடிக்கப்பட்டனர்

பினாங்கு மாநில டிஎபி தேர்தலில் மாநில துணை முதலமைச்சர்  பி. இராமசாமியும் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் ஸைரில் கிர் ஜோஹாரியும் தோற்கடிக்கப்பட்டனர். ஆயினும், அவர்கள் இருவரும் பினாங்கு டிஎபியின் புதிய தலைமைத்துவத்தின் உறுப்பினர்களாக மீண்டும் சேர்த்துக்கொள்ளப்பட்டனர். அவர்கள் இருவருக்கும் இது ஒரு கடுமையான பின்னடைவாகும். 2015 ஆம் ஆண்டு…

நஜிப் : ‘கல்வி அமைச்சர் இளையர்களுக்குப் பொய் சொல்லக் கற்றுதருகிறாரா?’

முன்னாள் பிரதமர் நஜிப் துன் இராசாக், 1மலேசியா பால் திட்டத்தில் (பிஎஸ்1எம்), 2017-ஆம் ஆண்டிற்கு வழங்கப்பட்ட அனைத்து பானங்களும், வெற்றிகரமாக 7,000 பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுவிட்டதாக விசாரணையின் முடிவுகள் தெரிவிக்கின்றன என்று கூறியுள்ளார். முன்னதாக, பிஎஸ்1எம், பிஎன் ஆட்சியின் போது காணாமல் போனது என்று கல்வி அமைச்சர் மஸ்லி மாலிக்…

அஸ்மின் : துணைத் தலைவர் பதவிக்கு நான் சுலபமாக வரவில்லை

பிகேஆர் மாநாடு | பிகேஆர் துணைத் தலைவர் பதவி, தனக்குப் பெரும் சவாலாக இருந்தது இது முதல் தடவை அல்ல என்று அஸ்மின் அலி கூறியுள்ளார். முந்தையத் தேர்தல்களை நினைவுகூர்ந்த அவர், சவால்களை அமைதியாக எதிர்கொண்டதே, இன்று மீண்டும் அப்பதவியைத் தற்காத்து கொள்வதற்குக் காரணமாக அமைந்தது என்றார். “எனக்கு…

பிகேஆரின் அதிகாரப்பூர்வத் தலைவராக அன்வார்

துணைப் பிரதமர், டாக்டர் வான் அஸிஸா வான் இஸ்மாயிலுக்குப் பதிலாக, பிகேஆர் கட்சியின் தேசியத் தலைவராக, அன்வார் இப்ராஹிம் இன்று போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். பிகேஆர் மத்தியத் தேர்தல் ஆணையத் (ஜேபிபி) தலைவர், ரஷிட் டின், இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். கோம்பாக் நாடாளுமன்ற உறுப்பினரும் பொருளாதார விவகாரத் துறை அமைச்சருமான,…

பாஸ், அம்னோ இணைப்புக்கு ஜாஹிட் அறைகூவல்

பாஸும் அம்னோவும் ஒன்றிணைய வேண்டும். அவ்விரு கட்சிகளும் கூட்டாக ஏற்பாடு செய்திருந்த பேரணி ஒன்றில் உரையாற்றிய அம்னோ தலைவர் அஹமட் ஜாஹிட் ஹமிடி இவ்வாறு கேட்டுக்கொண்டார். “அன்புள்ள (பாஸ் தலைவர்) அப்துல் ஹாடி ஆவாங் அவர்களே, என்னுடைய தலைமைத்துவத்தில், வாருங்கள் ஒன்றிணைவோம். “நம் கருத்து வேறுபாடுகளை ஒதுக்கி வைத்து…

ஃபூஸி : காவல்துறையினர் மத்தியில், ‘முன்கூட்டிய பணி ஓய்வு’ அதிகரிப்பு

காவல்துறையினர் மத்தியில், ‘முன்கூட்டிய பணி ஓய்வு’ போக்கு, கவலை அளிக்கும் வகையில் அதிகரித்து வருவதாக தலைமை காவல்துறை அதிகாரி முகமட் ஃபூஸி ஹருண் கூறினார். இவ்வாண்டு அக்டோபர் வரையில், 5,000-க்கும் அதிகமானோர், முன்னதாக பணி ஓய்வு பெற்றுவிட்டனர் என்று அவர் தெரிவித்தார். “அவர்களில், 2,446 போலிஸ்காரர்கள் சொந்தத் தேர்வாக…

ரஃபிசி : ஹராப்பான் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் கவனம் செலுத்த…

பக்காத்தான் ஹராப்பான் தலைமை மன்றத்திற்கு, பிகேஆர் உள்விவகாரங்கள் பற்றி விவாதிப்பதை விட, முக்கியமான வேறு பல விஷயங்கள் இருக்கின்றன என்று, பிகேஆர் துணைத் தலைவர் போட்டியில் தோல்வி கண்ட ரஃபிசி ரம்லி கூறியுள்ளார். “நாங்கள் ஒருவருக்கொருவர் மீது மரியாதை வைத்துள்ளோம், ஆனால் மற்ற கட்சி விவகாரங்களில் தலையிட மாட்டோம்,”…

‘என் மகள் எங்கே?’, ஹராப்பானிடமும் ஐஜிபி-இடமும் இந்திராகாந்தி கேள்வி

எம் இந்திரா காந்தி, ஒன்பது ஆண்டுகளுக்கு முன்னர், தனது முன்னாள் கணவரால் கடத்திச் செல்லப்பட்ட மகள் பிரசன்னா டிக்ஸாவைத் தேடும் பணிகளின் தற்போதைய நிலை என்னவென்று, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமிருந்து விளக்கம் கேட்டுள்ளார். தனது இளைய மகளை இன்றுவரைக் காண முடியவில்லை என்ற இந்திரா காந்தி, பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கம்…

ரபிசி ரந்தாவ் வேட்பாளர்?

ரந்தாவ் சட்டமன்ற இடைத் தேர்தலில் ரபிசி ரம்லியை வேட்பாளராகக் களமிறக்குவது பற்றி பரிசீலிக்கப்படுவதை கேஆர் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அன்வார் இப்ராகிம் உறுதிப்படுத்தினார். “ஆம், ரபிசியின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது”, என அன்வார் 13வது பிகேஆர் காங்கிரஸ் நடைபெறும் ஷா ஆலம் ஐடீல் மாநாட்டு மண்டபத்தில் செய்தியாளர்களிடம் கூறினார். இடைத் தேர்தலுக்கு…

1எம்டிபி மீதான போலீஸ் விசாரணை ‘ஒன்றிரண்டு மாதங்களில்’ முடிவுறும்

1எம்டிபி மீது நாடைபெற்றுவரும் விசாரணைகள் அடுத்த ஒன்றிரண்டு மாதங்களில் முடிவுக்கு வரும் என்கிறார் துணை இன்ஸ்பெக்டர்- ஜெனரல் அப் போலீஸ் நூர் ரஷிட் இப்ராகிம். முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், அவரின் துணைவியார் ரோஸ்மா மன்சூர் உள்பட பலரிடமும் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளையெல்லாம் தொகுத்து ஒரு விசாரணைக் கோப்பு…

எஸ்பிஎம் தேர்வுத் தாள்கள் கசிவா? மறுக்கிறது கல்வி அமைச்சு

இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் சிஜில் பெலாஜாரான் மலேசியா(எஸ்பிஎம்) தேர்வில் பகாசா மலேசியா, கணிதம், சீனமொழித் தாள்கள் கசிந்து விட்டதாகக் கூறப்படுவதைக் கல்வி அமைச்சு மறுக்கிறது. அது தொடர்பாக புகார்கள் பெற்றதை அடுத்து விசாரணைகள் நடத்தப்பட்டதாகக் கூறிய கல்வி அமைச்சின் தேர்வு வாரியம், மாணவர்கள் மீண்டும் தேர்வு எழுத வேண்டிய…

ரஃபிசி: கட்சி நலனுக்காக நான் விட்டுக்கொடுக்கிறேன்

விமர்சனம் | நாளை தொடங்கவுள்ள பிகேஆர் கட்சியின் தேசிய மாநாடு, கட்சித் தேர்தல்களுக்கு ஒரு நிறைவைக் கொடுத்துள்ளது. மத்திய நிர்வாகக் குழுவின் முடிவுகள் பின்னர் அறிவிக்கப்படலாம். அஸ்மின் அலிக்கும் எனக்கும் இடையேயான வாக்கெடுப்பில், அஸ்மின் அலி ஏறக்குறைய 2,500 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருப்பதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவித்துள்ளன.…

தவறானத் தகவலை இந்தியர்களிடம் பரப்பும் நாடாளுமன்ற மேலவைத் தலைவர்  விக்னேஸ்வரன்…

  ம.இ.காவின் புதிய தேசியத் தலைவராகப் பொறுப்பேற்றிருக்கும் நாடாளுமன்ற மேலவை தலைவர் எஸ். விக்னேஸ்வரன் தனது கட்சியைக் காப்பாற்ற எடுத்துக் கொள்ளும் முயற்சிக்குப் பாராட்டு. ஆனால் அதனை நியாயமாக, நேர்மையாக, புத்திசாலித்தனமாக மேற்கொண்டாலே அவர் கட்சிக்கும் அவர் வகிக்கும் நாடாளுமன்ற மேலவைத் தலைவர் பதவிக்கும் கௌரவமாகும் என்கிறார் கெஅடிலான்…

ஜாஹிட்: முகம்மட் ஹசான் ரந்தாவ் தொகுதியில் மீண்டும் போட்டியிடுவார்

முன்னாள் நெகிரி செம்பிலான் மந்திரி புசார் முகம்மட் ஹசான் ரந்தாவ் சட்டமன்றத் தொகுதியில் மீண்டும் போட்டியிடுவார் என அம்னோ தலைவர் அஹமட் ஜாஹிட் ஹமிடி கூறினார். அங்கு புதிதாக தேர்தலை நடத்தும் தேர்தல் நீதிமன்றத்தின் முடிவு எதிர்பார்க்கப்பட்டதுதான் என்றவர் டிவிட்டரில் பதிவிட்டிருந்தார்.. “அம்னோ முகம்மட்டையே வேட்பாளராக நியமிக்கும். பிஎன்…

பிகேஆர் இளைஞர் தலைவர் தேர்தலில் அக்மால் வெற்றிபெற்று விட்டாராம்: உறுப்பினர்கள்…

இன்று காலை ஷா ஆலமில் பிகேஆர் இளைஞர் காங்கிரசில் உறுப்பினர்கள் ஜோகூர் பாரு எம்பி அக்மால் நாசிருக்குப் பாராட்டுத் தெரிவித்ததைக் காண முடிந்தது. அவர் இளைஞர் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்று விட்டாராம். அதிகாரப்பூர்வ முடிவு இன்று மாலை மணி 5.25க்குத்தான் அறிவிக்கப்படும். ஆனாலும் அஃபிப் பாஹார்டினை 50…

பிடிபிடிஎன் கடனைத் திருப்பிச் செலுத்தும் வழிமுறை அடுத்த மாதம் அறிவிக்கப்படும்

தேசிய உயர்க் கல்விக் கடன் (பிடிபிடிஎன்) நிதியில் கடன் பெற்றவர்கள் அதைத் திருப்பிச் செலுத்தும் முறைகள் அடுத்த மாதம் அறிவிக்கப்படும் என பிடிபிடிஎன் தலைவர் வான் சைபுல் வான் ஜான் கூறினார். 2019 பட்ஜெட்டைத் தாக்கல் செய்த நிதி அமைச்சர் லிம் குவான் எங் பிடிபிடிஎன்-னுக்குச் செய்யப்படும் ஒதுக்கீடு…

ரந்தாவில் முகம்மட் ஹசான் வெற்றி செல்லாது: மறுதேர்தலுக்கு உத்தரவு

தேர்தல் நீதிமன்றம் நெகிரி செம்பிலான், ரந்தாவ் தொகுதி காலியானதாக அறிவித்தது. அங்கு 14வது பொதுத் தேர்தலில் முன்னாள் மந்திரி புசார் முகம்மட் ஹசான் வெற்றி பெற்றது செல்லாது என்று முடிவு செய்த நீதிமன்றம் புதுத் தேர்தல் நடத்தவும் உத்தரவிட்டது. ஒரு வேட்பாளரோ அவரை முன்மொழிபவரோ அல்லது வழிமொழிபவரோ வேட்புமனு…

கேஜே : ‘ஃபன் மை ஹோம்’ திட்டத்தால் இலாபமடையப் போவது…

2019 வரவு செலவுத் திட்டத்தில், நிதியமைச்சர் லிம் குவான் எங் அறிவித்துள்ள ‘ஃபன் மை ஹோம்’ (FundMyHome - என் வீட்டிற்கு நிதியளி) வீட்டு உரிமையாளர் திட்டம், முதலீட்டாளர்களுக்கும் மேம்பாட்டாளர்களுக்கும் மட்டுமே பயனளிக்கும் என்று ரெம்பாவ் நாடாளுமன்ற உறுப்பினர் கைய்ரி ஜமாலுடின் (கேஜே) தெரிவித்தார். வீடு வாங்க விரும்பும்…

காதிர் : சட்டத்தை மீறாத வரை, நஜிப் எந்த அறிக்கையையும்…

சட்டத்திற்கு முரணாக இல்லாத வரை, சமூக ஊடகத்தில் எந்தவொரு அறிக்கையையும் வெளியிடுவதற்கு, நஜிப் துன் இரசாகிற்குச் சுதந்திரம் உண்டு என்று ஏ காதிர் ஜாசின் கூறினார். அவருக்குத் தெரிந்தவரை, குற்றஞ்சாட்டப்பட்ட நபர், தனக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை தவிர்த்து, நீதிமன்றத்திற்கு வெளியில் வேறு அறிக்கைகளை வெளியிடும் உரிமை…

ஊழல் : ரொஸ்மா மற்றும் ரிஸாலுக்குத் தலா RM1 மில்லியன்…

சரவாக் கிராமப்புறப் பள்ளிகளில், சூரிய சக்தியை விநியோகித்தல் மற்றும் நிறுவுதல் பணி திட்டத்தில், RM1.5 மில்லியன் இலஞ்சம் கேட்டது மற்றும் பெற்றது தொடர்பிலான 2 குற்றச்சாட்டுகளில், தான் குற்றவாளி அல்ல என்று முன்னாள் பிரதமரின் மனைவி, ரொஸ்மா மன்சோர் கூறியதைத் தொடர்ந்து, கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றம் அவரை ஒருவரின்…

கோபிந்த்: புதிய ஃபினாஸ் வாரியம் நியமனம்

தொடர்பு, பல்லூடக அமைச்சர் கோபிந்த் சிங் டியோ, தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழக(ஃபினாஸ்)துக்குப் புதிய இயக்குனர் வாரியம் அமைக்கப்பட்டிருப்பதாக இன்று தெரிவித்தார். வாரிய உறுப்பினர்கள் அடுத்த வாரம் பொதுமக்களுக்கு அறிமுகம் செய்து வைக்கப்படுவார்கள். இயக்குனர் வாரியத்துக்கு நிதி மற்றும் நிறுவனத் துறைகளில் அனுபவம் வாய்ந்தவர்கள் நியமிக்கப்பட்டிருப்பதாக அமைச்சர் கூறினார்.…

நெடுஞ்சாலை கட்டும் செலவைக் காட்டிலும் டோல் வசூலிப்பு இரு மடங்கு…

நெடுஞ்சாலை பராமரிப்பாளர்கள் சாலைக் கட்டுவதற்குச் செலவான பணத்தைவிட இருமடங்கு அதிகமான தொகையைச் சாலைக்கட்டணமாக வசூலித்திருப்பதாக பொதுப் பணித்துறை அமைச்சர் பாரு பியான் கூறினார். இப்போது 29 நெடுஞ்சாலைகளில் சாலைக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த 29 நெடுஞ்சாலைகள் கட்டுவதற்கு ஆன செலவு ரிம35.14 பில்லியன். அவை செயல்படத் தொடங்கி 2017வரை…

வெட்டுமர ஏற்றுமதி வருமானம் குறையும்- அமைச்சர்

2017-இல் ரிம23.21பில்லியனாக இருந்த மலேசிய வெட்டுமரப் பொருள்களின் ஏற்றுமதி வருமானம் சரிவு காணும் என எதிர்பார்க்கப்படுகிறது. உலகப் பொருளாதாரம் பலவீனமாக இருப்பதே காரணம் என்று மூலத் தொழில் அமைச்சர் தெரேசா கொக் கூறினார அமெரிக்காவுக்கும் சீனாவுக்குமிடையிலான வர்த்தகச் சர்ச்சையால் உலக வணிகம் ஆட்டம் கண்டு வெட்டுமரம் உள்பட மூலப்…