செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் இல்லாமல் அயல் நாட்டவர்களுக்கு தங்கள் வாகனங்களை குத்தகைக்கு வழங்கும் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் குறித்து சாலைப் போக்குவரத்துத் துறை (ஜேபிஜே) விசாரணை நடத்தும் என தெரிவித்துள்ள்ளது. ஜேபிஜே அமலாக்க இயக்குனர் கிஃப்லி மா ஹாசன் கூறுகையில், நேற்றிரவு ஒரு ஒருங்கிணைந்த நடவடிக்கையின் போது செல்லுபடியாகும்…
சீபீல்ட் கோவில் நிலத்தை வாங்குவதற்கு நிதி திரட்டுகிறார் வின்சென்ட் டான்
சீபீல்ட் மாகா மாரியம்மன் கோவில் அமைந்திருக்கும் நிலத்தைப் பொதுமக்கள் வாங்குவதைச் சாத்தியமாக்க பிரபல வணிகர் வின்சென்ட் டான் நிதி திரட்ட முனைந்துள்ளார். இதன் மூலம் அந்தக் கோவில் இப்போது இருக்கும் நிலத்திலேயே இருக்க முடியும் என்று அவர் கூறினார். மேலும், த ஸ்டார் ஒன்லைன் செய்திப்படி, பெர்ஜெயா…
கோவில் கலவரம்: 42 பேர் கைது
கடந்த திங்கள்கிழமை நடந்த கலவரத்திற்குப் பின்னர், சுபாங் ஜெயா, சீபீல்ட் ஶ்ரீ மகா மாரியம்மன் கோவில் கிட்டத்தட்ட வழக்கமான நிலைக்குத் திரும்பியுள்ளது என்று போலீஸ் படைத் தலைவர் முகம்மட் பூஸி ஹருண் கூறுகிறார். நேற்று, சில கும்பல்கள் அங்கே கூடின என்றாலும், அசாம்பாவிதங்கள் ஏதும் நடக்கவில்லை என்றாரவர்.…
கேமரன் மலை நாடாளுமன்ற இருக்கை காலி, நீதிமன்றம் தீர்ப்பு
கோலாலம்பூர் தேர்தல் நீதிமன்றம் கேமரன் மலை நாடாளுமன்ற இருக்கையைக் காலி செய்து இன்று தீர்ப்பளித்தது. இத்தீர்ப்பு மறு தேர்தலுக்கு வழிவகுத்துள்ளது. அத்தொகுதி தேர்தலில் ஊழல் நடவடிக்கைகள் இருந்தன. அது பிஎன் வேட்பாளர், மஇகா உதவித் தலைவர் சி. சிவராஜா, மே 9 பொதுத் தேர்தலில் வெற்றிபெறச் செய்தது…
கோவில் கலவரம் – இனவெறி மற்றும் அடுத்தவரைச் சாடும் மனப்பான்மையை…
கருத்து | சுபாங் ஜெயா, சீஃபீல்ட் கோவில் கலவரம் பற்றி பல கருத்துகள் வெளியாகியுள்ளன. ஒவ்வொருவரும் ஒரு சொந்தக் கதையைக் கூறிவருகின்றனர். இக்கலவரத்திற்குக் காரணம் அம்னோ மற்றும் பாஸ் எனச் சொல்லி, மலாய்க்காரர் அல்லாதவர்கள் சமூக வலைத் தளங்களில் பரப்பிவரும் செய்திகளையும் சாபங்களையும் நான் படித்தேன். அதேசமயம், புதிய…
அமெரிக்கா, ஐரோப்பா, ஆசியர்களின் ஆர்வத்தை ஈர்த்த இக்குவானிமிட்டி ஏலம்
1எம்டிபி நிதியைத் தவறாகப் பயன்படுத்தி வாங்கப்பட்டது என்ற காரணத்திற்காக, மலேசிய அரசாங்கம் கையகப்படுத்திய இக்குவானிமிட்டி ஆடம்பரக் கப்பலின் ஏலம் அமெரிக்கா, ஐரோப்பியா மற்றும் ஆசிய நாடுகளின் பணக்காரர்களை அதிகம் ஈர்த்துள்ளது. கடந்த ஒரு மாதக் காலமாக விற்பனையில் இருந்த அக்கப்பலின் ஏலம், நேற்று மாலை 5 மணியளவில் நிறைவடைந்தது.…
மஹ்ட்சிர் காலிட்டிடம் எம்ஏசிசி 8 மணி நேரம் விசாரணை
சரவாக்கின் உட்புறப் பள்ளிகளில், RM2.5 பில்லியன் மதிப்புள்ள சூரிய ஆற்றல் திட்டம் தொடர்பாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி), முன்னாள் கல்வி அமைச்சர் மஹ்ட்சிர் காலிட்டிடம், சுமார் 8 மணி நேரம் விசாரணை செய்துள்ளது. நேற்று காலை, சுமார் 10 மணியளவில் புத்ராஜெயா, எம்ஏசிசி அலுவலகம் வந்த…
ஐசெர்ட் எதிர்ப்புப் பேரணியைத் தொடர வேண்டாம், கிளாந்தான் முஃப்தி வலியுறுத்து
எதிர்வரும் டிசம்பர் 8-ம் தேதி, ஐசெர்ட் மாநாட்டிற்கு எதிர்ப்புத் தெரிவிக்க ஏற்பாடாகியுள்ள பேரணியைத் தொடர வேண்டாம் எனக் கிளாந்தான் முஃப்தி, முகமட் சுக்ரி மொகமட் கேட்டுக்கொண்டுள்ளார். நாட்டில் தற்போதைய பதட்டமான நிலையைக் கருத்தில் கொண்டு, அப்பேரணியைத் தொடர வேண்டாம் என அவர் கூறியுள்ளார். அப்பேரணியை நடத்தினால், ‘தேவையற்ற சம்பவங்கள்’தான்…
அன்வார் : பிகேஆர் தலைமைச் செயலாளர், உதவித் தலைவர் நியமனம்,…
கட்சியின் தலைமைச் செயலாளர், உதவித் தலைவர் போன்ற பதவிகளுக்குத் தலைவர்களைத் தேர்ந்தெடுப்பதில் தான் அவசரப்படவில்லை என அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார். அனைத்துத் தரப்பினருடனான பேச்சுவார்த்தை மற்றும் கலந்துரையாடல்களின் மூலம் பெறப்படும் கருத்துக்களும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என்று அந்தப் பிகேஆர் தலைவர் கூறினார். “பேச்சுவார்த்தைகளின் போது அவசரப்படத் தேவையில்லை,…
அகோங் திருமணம் செய்து கொண்டாரா?: தெரியாதே, மகாதிர்
யாங் டி-பெர்துவான் அகோங் சுல்தான் முகம்மட் V திருமணம் செய்து கொண்டுள்ளார் என்று சமூக ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியை உறுதிப்படுத்தும் அதிகாரப்பூர்வமான தகவல் தம்மிடம் இல்லை என்று பிரதமர் மகாதிர் இன்று கூறினார். "எனக்குத் தெரியாது. அதிகாரப்பூர்வமான உறுதிப்படுத்துதல் ஏதும் என்னிடம் இல்லை, ஆகவே நான் எதுவும்…
கோவில் வழக்கை, அட்டர்னி ஜெனரல் தலைமையகம் கையாளும்
சிலாங்கூர், சுபாங் ஜெயாவில் உள்ள ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயப் பிரச்சினை தொடர்பான வழக்கு, சட்டத்துறைத் தலைவர் தலைமையகத்தின் கண்காணிப்பில் கையாளப்படும் என்று சட்டத்துறைத் தலைவர், டோமி தோமஸ் கூறியுள்ளார். “இந்த வழக்கு சம்பந்தப்பட்ட முக்கியப் பிரச்சினைகளின் விசாரணையை, இலாகாவின் துணைத் தலைவர் மேற்பார்வையிடுவார், வழக்கின் அபிவிருத்தியை அவ்வப்போது…
தாக்கப்பட்டதன் காரணமாகவே அடிப் காயமடைந்தார், போலிசார் உறுதிப்படுத்தினர்
புத்ரா ஹைட்ஸ், சுபாங் ஜெயாவில் நடந்த ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயக் கலவரத்தில், தீயணைப்பு வண்டி மோதியதன் காரணமாகவே தீயணைப்பு வீரர், முஹம்மட் அடிப் முகமது காசிம் காயமடைந்தார், மாறாக அவர் தாக்கப்படவில்லை என்று கூறப்படுவதில் உண்மையில்லை என்று காவல்துறை தலைவர் புஸி ஹரூன் கூறியுள்ளார். கிடைக்கப்பட்ட தகவல்களின்…
சீபீல்ட் ஆலயத்தில் நிகழ்ந்தது என்ன?நாடாளுமன்றத்தில் முகைதின் காலவரிசையில் விளக்கம்
உள்துறை அமைச்சர் முகைதின் யாசின் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த அமைச்சர்நிலை அறிக்கை ஒன்றில் சீபீல்ட் ஸ்ரீ மகாமாரியம் ஆலயத்தில் திங்கள்கிழமையும் செவ்வாய்க்கிழமையும் நடந்த நிகழ்வுகளை விவரமாக விளக்கினார். முதல் நாள் மேம்பாட்டாளர் ஆலயத்தை இடமாற்றம் செய்யயும் நடவடிக்கையைச் செயல்படுத்த முனைந்தார். ஆலயத்தையும் ஆது அமைந்துள்ள இடத்தையும் வசப்படுத்த…
ஜனநாயகத்திற்கு வரம்பு இருப்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும், சீபீல்ட் கலவரம்…
நாடாளுமன்றம் | ஜனநாயகத்திற்கு அதற்குரிய வரம்பு இருக்கிறது. மக்கள் அதன் எல்லைக்கோடுகளைத் தெரிந்துகொள்ள வேண்டிய அவசியம் இருக்கிறது என்று பிரதமர் மகாதிர் இன்று நாடாளுமன்றத்தில் கூறினார். அனைத்துத் தரப்பினரும் மற்ற தரப்பினருக்கு மனவருத்தம் அளிக்கக்கூடிய சினமூட்டும் அறிக்கைகள் வெளியிடுவதை நிறுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். கண்மூடித்தனமாகத்…
ஆலயம் அமைந்துள்ள இடத்தை மேம்பாட்டாளர் எடுத்துக்கொள்வதைத் தள்ளி வைக்கக் கோரும்…
இன்று ஷா ஆலம் உயர் நீதிமன்றம் சீபீல்ட் மகாமாரியம்மன் ஆலய இடமாற்றம் தொடர்பில் வாதிகளுக்கிடையில் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் வழங்கப்பட்ட தீர்ப்ப்புக்கு எதிராகவும் ஆலயத்தின் இடமாற்றத்தைத் தள்ளிவைக்குமாறும் கேட்டுக்கொள்ளு,ம் மனுவை நிராகரித்தது. உயர் நீதிமன்ற நீதிபதி குணாளன் முனியாண்டி, ஆலய பக்தர்கள் சங்கத்தின் உறுப்பினர்களான எஸ்.தங்கராஜ், எம்.எம்.மோகனகிருஷ்ணன், எஸ்.…
கோவில் நிலம் மீதான கடும்சச்சரவுக்கு தீர்வு நாளை அறிவிக்கப்படும், சிலாங்கூர்…
சிலாங்கூர் மாநில அரசுடன் விவாதித்த பின்னர், சீபீல்ட் ஶ்ரீ மகா மாரியம்மன் கோவில் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு ஒரு தீர்வு ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. அதை அறிவிப்பதற்கு ஷா அலாமில் நாளை தேவான் எனக்ஸ் நெகிரி சிலாங்கூரில் ஒரு செய்தியாளர் கூட்டம் நடத்தப்படும். கோவில் வளாகத்தில் இரண்டு நாள்கள் நடந்த கலவரம்…
கோவில் குழப்பத்திற்கு ‘முஸ்லிம் கும்பல்’ மீது பழி சுமத்தியதிற்கு கணபதிராவ்…
திங்கள்கிழமை அதிகாலையில் சீபீல்ட் ஶ்ரீ மகா மாரியம்மன் கோவிலில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஒரு 'முஸ்லிம் கும்பல்' மீது பழி சுமத்தியதற்காக சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் வி. கணபதிராவ் மன்னிப்பு கேட்டுக் கொண்டார். "இந்த வன்முறை ஒரு கும்பலிருந்து தோன்றியது என்பதை நாம் ஒப்புக்கொள்ள வேண்டும்.…
ரோஸ்மா மூன்றாவது முறையாக நாணயச் சலவைத் தடுப்புப் பிரிவுக்குச் சென்றார்
முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கின் வீடுகளிலிருந்து கைப்பற்றப்பட்ட விலைமதிப்பற்ற பொருள்கள் பற்றி மேலும் விசாரிக்கப்படுவதற்காக ரோஸ்மா மன்சோர் மூன்றாவது முறையாக நேற்று மினாரா கேபிஜே, போலீஸ் நாணயச் சலவைத் தடுப்புப் பிரிவுக்குச் சென்றார். ரோஸ்மா அங்கு மூன்று மணி நேரம் இருந்தார். அங்கு அவரது வாக்குமூலம் பதிவு…
முகைதின்: சீபீல்ட் ஆலயத்தை வசப்படுத்திக்கொள்ள மேம்பாட்டாளரின் வழக்குரைஞர்கள் கூலிக்கு ஆள்களை…
சுபாங் ஜெயா சீபீல்ட் ஆலயத்துக்குள் புகுந்து பக்தர்களைத் தாக்கியவர்கள் நில மேம்பாட்டு நிறுவன வழக்குரைஞர்களின் கைக்கூலிகள் என்று போலீஸ் முடிவு செய்திருப்பதாக உள்துறை அமைச்சர் முகைதின் யாசின் கூறினார். “நில மேம்பாட்டு நிறுவனத்துடன் தொடர்புள்ளவர்கள் ஆலயம் அமைந்துள்ள நிலத்தை எடுத்துக்கொள்ளும் விஷயத்தில் சட்டப்படி நடந்துகொள்வதில்லை. “நவம்பர் 26-இல் நிலமிருக்கும்…
ஆலய வன்முறைக்குக் காரணம் வெளியிலிருந்து வந்தவர்கள்- பிரதமர்
பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் சுபாங் ஜெயா ஸ்ரீமகாமாரியம்மன் ஆலயக் கலவரத்துக்கு வெளியிலிருந்து வந்தவர்களே காரணம் என்றார். தொடக்கநிலையில் கிடைத்த தகவல்களைப் பார்க்கையில் வன்முறையைத் தொடங்கியவர்கள் அப்பகுதிவாழ் மக்கள் அல்லவென்பது தெரிய வருவதாக அவர் சொன்னார். “இது மலாய்க்காரர்களுக்கும் இந்தியர்களுக்குமிடையிலான மோதல் அல்ல. வெளியிலிருது வந்தவர்களால் உருவான பிரச்னை…
கோவில் விவகாரத்தில் கலவரம் செய்தவர்கள், சூத்ரதாரிகள் ஆகியோருக்கு எதிராகக் கடும்…
சுபாங் ஜெயா ஶ்ரீ மகா மாரியம்மன் கோவில் விவகாரத்தில் கலவரம் செய்தவர்கள் மற்றும் அவர்களுக்கு சூத்ரதாரிகளாக இருப்பவர்களுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர் மகாதிர் சூளுரைத்தார். "கலவரம் செய்த மற்றும் நமது பாதுகாப்பு படையினர், ஆபத்துகளிலிருந்து காப்பாற்றும் பணியாளர்களுக்கு காயம் விளைவித்ததில் சம்பந்தப்பட்டவர்கள் மற்றும்…
இறுதித் தீர்வு காணும் வரையில் கோவில் அங்கேயே இருக்கும், பிரதமரைச்…
சுபாங் ஜெயாவிலிருக்கும் ஶ்ரீ மகா மாரியம்மன் கோவில் இறுதித் தீர்வு காணப்படும் வரையில் உடைக்கப்படமாட்டாது என்று பிரதமர் துறை அமைச்சர் பி. வேதமூர்த்தி உறுதி அளித்துள்ளார். இந்த விவகாரம் பிரதமர் டாக்டர் மகாதிரின் கவனத்திற்கும்கூட கொண்டுவரப்பட்டுள்ளது என்று அவர் கூறினார். "இன்று காலை கோவில் பிரச்சனை குறித்து பிரதமரைச்…
நாட்டு நிலைமைக்கு ஏற்ப மக்கள் செயல் பட்டாலே நமக்கு வெற்றி…
நாட்டில் இப்பொழுது ஒரு பதற்றமான சூழ்நிலை உருவெடுத்துள்ளது, அதனைத் தனிக்கும் பொறுப்பு குடிமக்களாகிய நம் அனைவருக்கும் உண்டு என்பதால் நாம் அமைதியாக மிகப் பொறுப்புடன் சீபீல்ட் தோட்ட ஆலய இடம்மாற்று விவகாரத்தை அணுக வேண்டும் என்று கேட்டுக்கொண்டோம். ஆனால் சில இளைஞர்களின் செயல்பாடுகள் எல்லை மீறிச் சென்றுள்ளது…
ஆலயக் கலவரம் தொடர்பில் சிலாங்கூர் எம்பி பாதுகாப்பு மன்றக் கூட்டத்தைக்…
சிலாங்கூர் மந்திரி புசார் அமிருடின் ஷாரி, சுபாங் ஜெயா ஸ்ரீமகாமாரியம்மன் ஆலயக் கலவரம் பற்றி விவாதிக்க மாநிலத்தின் தேசிய பாதுகாப்பு மன்ற(என்எஸ்சி)க் கூட்டத்தைக் கூட்டுவார். “பாதுகாப்பையும் ஒழுங்கையும் நிலைநிறுத்துவது முக்கியம். அதற்குத்தான் முன்னுரிமை. அதற்காகத்தான் என்எஸ்சி கூட்டம்”, என சுபாங் ஜெயாவில் தனியார் மருத்துவமனை ஒன்றுக்கு வெளியில் செய்தியாளர்களிடம்…