தவறானத் தகவலை இந்தியர்களிடம் பரப்பும் நாடாளுமன்ற மேலவைத் தலைவர்  விக்னேஸ்வரன்…

  ம.இ.காவின் புதிய தேசியத் தலைவராகப் பொறுப்பேற்றிருக்கும் நாடாளுமன்ற மேலவை தலைவர் எஸ். விக்னேஸ்வரன் தனது கட்சியைக் காப்பாற்ற எடுத்துக் கொள்ளும் முயற்சிக்குப் பாராட்டு. ஆனால் அதனை நியாயமாக, நேர்மையாக, புத்திசாலித்தனமாக மேற்கொண்டாலே அவர் கட்சிக்கும் அவர் வகிக்கும் நாடாளுமன்ற மேலவைத் தலைவர் பதவிக்கும் கௌரவமாகும் என்கிறார் கெஅடிலான்…

ஜாஹிட்: முகம்மட் ஹசான் ரந்தாவ் தொகுதியில் மீண்டும் போட்டியிடுவார்

முன்னாள் நெகிரி செம்பிலான் மந்திரி புசார் முகம்மட் ஹசான் ரந்தாவ் சட்டமன்றத் தொகுதியில் மீண்டும் போட்டியிடுவார் என அம்னோ தலைவர் அஹமட் ஜாஹிட் ஹமிடி கூறினார். அங்கு புதிதாக தேர்தலை நடத்தும் தேர்தல் நீதிமன்றத்தின் முடிவு எதிர்பார்க்கப்பட்டதுதான் என்றவர் டிவிட்டரில் பதிவிட்டிருந்தார்.. “அம்னோ முகம்மட்டையே வேட்பாளராக நியமிக்கும். பிஎன்…

பிகேஆர் இளைஞர் தலைவர் தேர்தலில் அக்மால் வெற்றிபெற்று விட்டாராம்: உறுப்பினர்கள்…

இன்று காலை ஷா ஆலமில் பிகேஆர் இளைஞர் காங்கிரசில் உறுப்பினர்கள் ஜோகூர் பாரு எம்பி அக்மால் நாசிருக்குப் பாராட்டுத் தெரிவித்ததைக் காண முடிந்தது. அவர் இளைஞர் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்று விட்டாராம். அதிகாரப்பூர்வ முடிவு இன்று மாலை மணி 5.25க்குத்தான் அறிவிக்கப்படும். ஆனாலும் அஃபிப் பாஹார்டினை 50…

பிடிபிடிஎன் கடனைத் திருப்பிச் செலுத்தும் வழிமுறை அடுத்த மாதம் அறிவிக்கப்படும்

தேசிய உயர்க் கல்விக் கடன் (பிடிபிடிஎன்) நிதியில் கடன் பெற்றவர்கள் அதைத் திருப்பிச் செலுத்தும் முறைகள் அடுத்த மாதம் அறிவிக்கப்படும் என பிடிபிடிஎன் தலைவர் வான் சைபுல் வான் ஜான் கூறினார். 2019 பட்ஜெட்டைத் தாக்கல் செய்த நிதி அமைச்சர் லிம் குவான் எங் பிடிபிடிஎன்-னுக்குச் செய்யப்படும் ஒதுக்கீடு…

ரந்தாவில் முகம்மட் ஹசான் வெற்றி செல்லாது: மறுதேர்தலுக்கு உத்தரவு

தேர்தல் நீதிமன்றம் நெகிரி செம்பிலான், ரந்தாவ் தொகுதி காலியானதாக அறிவித்தது. அங்கு 14வது பொதுத் தேர்தலில் முன்னாள் மந்திரி புசார் முகம்மட் ஹசான் வெற்றி பெற்றது செல்லாது என்று முடிவு செய்த நீதிமன்றம் புதுத் தேர்தல் நடத்தவும் உத்தரவிட்டது. ஒரு வேட்பாளரோ அவரை முன்மொழிபவரோ அல்லது வழிமொழிபவரோ வேட்புமனு…

கேஜே : ‘ஃபன் மை ஹோம்’ திட்டத்தால் இலாபமடையப் போவது…

2019 வரவு செலவுத் திட்டத்தில், நிதியமைச்சர் லிம் குவான் எங் அறிவித்துள்ள ‘ஃபன் மை ஹோம்’ (FundMyHome - என் வீட்டிற்கு நிதியளி) வீட்டு உரிமையாளர் திட்டம், முதலீட்டாளர்களுக்கும் மேம்பாட்டாளர்களுக்கும் மட்டுமே பயனளிக்கும் என்று ரெம்பாவ் நாடாளுமன்ற உறுப்பினர் கைய்ரி ஜமாலுடின் (கேஜே) தெரிவித்தார். வீடு வாங்க விரும்பும்…

காதிர் : சட்டத்தை மீறாத வரை, நஜிப் எந்த அறிக்கையையும்…

சட்டத்திற்கு முரணாக இல்லாத வரை, சமூக ஊடகத்தில் எந்தவொரு அறிக்கையையும் வெளியிடுவதற்கு, நஜிப் துன் இரசாகிற்குச் சுதந்திரம் உண்டு என்று ஏ காதிர் ஜாசின் கூறினார். அவருக்குத் தெரிந்தவரை, குற்றஞ்சாட்டப்பட்ட நபர், தனக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை தவிர்த்து, நீதிமன்றத்திற்கு வெளியில் வேறு அறிக்கைகளை வெளியிடும் உரிமை…

ஊழல் : ரொஸ்மா மற்றும் ரிஸாலுக்குத் தலா RM1 மில்லியன்…

சரவாக் கிராமப்புறப் பள்ளிகளில், சூரிய சக்தியை விநியோகித்தல் மற்றும் நிறுவுதல் பணி திட்டத்தில், RM1.5 மில்லியன் இலஞ்சம் கேட்டது மற்றும் பெற்றது தொடர்பிலான 2 குற்றச்சாட்டுகளில், தான் குற்றவாளி அல்ல என்று முன்னாள் பிரதமரின் மனைவி, ரொஸ்மா மன்சோர் கூறியதைத் தொடர்ந்து, கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றம் அவரை ஒருவரின்…

கோபிந்த்: புதிய ஃபினாஸ் வாரியம் நியமனம்

தொடர்பு, பல்லூடக அமைச்சர் கோபிந்த் சிங் டியோ, தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழக(ஃபினாஸ்)துக்குப் புதிய இயக்குனர் வாரியம் அமைக்கப்பட்டிருப்பதாக இன்று தெரிவித்தார். வாரிய உறுப்பினர்கள் அடுத்த வாரம் பொதுமக்களுக்கு அறிமுகம் செய்து வைக்கப்படுவார்கள். இயக்குனர் வாரியத்துக்கு நிதி மற்றும் நிறுவனத் துறைகளில் அனுபவம் வாய்ந்தவர்கள் நியமிக்கப்பட்டிருப்பதாக அமைச்சர் கூறினார்.…

நெடுஞ்சாலை கட்டும் செலவைக் காட்டிலும் டோல் வசூலிப்பு இரு மடங்கு…

நெடுஞ்சாலை பராமரிப்பாளர்கள் சாலைக் கட்டுவதற்குச் செலவான பணத்தைவிட இருமடங்கு அதிகமான தொகையைச் சாலைக்கட்டணமாக வசூலித்திருப்பதாக பொதுப் பணித்துறை அமைச்சர் பாரு பியான் கூறினார். இப்போது 29 நெடுஞ்சாலைகளில் சாலைக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த 29 நெடுஞ்சாலைகள் கட்டுவதற்கு ஆன செலவு ரிம35.14 பில்லியன். அவை செயல்படத் தொடங்கி 2017வரை…

வெட்டுமர ஏற்றுமதி வருமானம் குறையும்- அமைச்சர்

2017-இல் ரிம23.21பில்லியனாக இருந்த மலேசிய வெட்டுமரப் பொருள்களின் ஏற்றுமதி வருமானம் சரிவு காணும் என எதிர்பார்க்கப்படுகிறது. உலகப் பொருளாதாரம் பலவீனமாக இருப்பதே காரணம் என்று மூலத் தொழில் அமைச்சர் தெரேசா கொக் கூறினார அமெரிக்காவுக்கும் சீனாவுக்குமிடையிலான வர்த்தகச் சர்ச்சையால் உலக வணிகம் ஆட்டம் கண்டு வெட்டுமரம் உள்பட மூலப்…

அஸ்மின் அணி மிகப் பெரிய வெற்றி பெறலாம், ரபிசி அணியில்…

பிகேஆர் தேர்தலில் துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் அஸ்மின் அலியும் அவரது அணியும் மிகப் பெரிய வெற்றி பெறக் கூடும். அதே வேளை அவரை எதிர்த்துக் களமிறங்கிய ரபிசி ரம்லி அணி பிகேஆர் இளைஞர் பகுதியைக் கைப்பற்றும் சாத்தியம் உள்ளது. இரு அணிகளிலிருந்தும் கிடைக்கும் தகவல்களைப் பார்க்கையில் இளைஞர்…

பிகேஆர் : அன்வாருக்குப் பெரிய பணி காத்திருக்கிறது

பிகேஆர் கட்சியின் தலைவர் பொறுப்பை ஏற்கவுள்ள அன்வார் இப்ராஹிமுக்கு, பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியின் பெரிய உறுப்புக்கட்சிக்குத் தலைமை ஏற்கும் பொறுப்பு மட்டுமின்றி; கட்சிக்குள் இருக்கும் 'அரசியல் முகாம்' கலாச்சாரத்தைச் சமாளிக்க வேண்டியப் பெரிய பணியும் காத்திருக்கிறது. பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கத்தின் நிலைப்பாட்டைப் பாதிக்கக்கூடிய, பிகேஆர் தேர்தல் உட்பூசலினால் ஏற்பட்ட…

பேராக், துரோனோ விவசாயிகளின் மேல் முறையீட்டு மனு வெற்றி

பேராக் மந்திரி பெசார் வாரியத்திற்கு எதிராக, துரோனோ விவசாயிகள் 8 பேர் செய்த முறையீட்டு மனுவை, புத்ரா ஜெயா மேல்முறையீட்டு நீதிமன்றம் ஏற்றுகொண்டது. அதுமட்டுமின்றி, ஈப்போ உயர்நீதிமன்றத்தின் கட்டாய வெளியேற்றத் தீர்ப்பையும் செலவுத் தொகையுடன் தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தது. அவ்விவசாய நிலத்தின் உரிமையாளராக இருக்கும் பேராக் மந்திரி பெசார்…

அமைச்சின் முன்னாள் தலைமைச் செயலாளருக்கும் அவரது மகனுக்கும் சிறைத் தண்டனையும்…

  நாட்டுப்புற மற்றும் வட்டார மேம்பாட்டு அமைச்சின் முன்னாள் தலைமைச் செயலாளர் முகமட் அரிப் அப்டுல் ரஹ்மான் மற்றும் அவரது மகன் அஹமட் ஸுகைரி ஆகியோருக்கு கோலாலம்பூர் செசன்ஸ் நீதிமன்றம் சிறைத் தண்டனை விதித்தது. செசன்ஸ் நீதிபதி அஸுரா அல்வி அவ்விருவரும் மொத்தம் ரிம12.6 மில்லியன் அபராதம் கட்டும்படியும்…

கு நான் கைது செய்யப்பட்டார், நாளை குற்றம் சாட்டப்படலாம்

  செய்தி அறிக்கைகளின்படி, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்எசிசி) முன்னாள் கூட்டரசுப் பிரதேச அமைச்சர் தெங்கு அட்னான் தெங்கு மன்சூரை கைது செய்துள்ளது. கு நான் என்றும் அழைக்கப்படும் தெங்கு அட்னான் கோலாலம்பூர் மாநகர் மன்றம் (டிபிகேஎல்) சம்பந்தப்பட்ட நில விற்பனை குறித்த விசாரணைக்கு உதவுவதற்காக எம்எசிசி…

பிடிபிடிஎன்னுக்குச் சம்பளத்தில் பிடித்தம் செய்வதை எதிர்த்து மாணவ ஆர்வலர்கள் கண்டன…

மாணவ ஆர்வலர்கள் சிலர், தேசிய உயர்க் கல்விக் கடன் நிதி(பிடிபிடிஎன்) தொடர்பில் அரசாங்கம் அண்மையில் எடுத்துள்ள முடிவுக்கு நாடாளுமன்றம்வரை சுமார் 8கிலோ மீட்டர் நடந்தே சென்று எதிர்ப்பைக் காட்டினர். பத்துப் பேர் இன்று காலை மணி 11க்குப் பட்டதாரி உடை அணிந்து மலாயாப் பல்கலைக்கழகத்தில் ஒன்று திரண்டனர். அங்கிருந்து…

பெய்ரூட் நிறுவன நகைகள்தாம் என்பதை உறுதிப்படுத்த போலீசுக்குக் கூடுதல்அவகாசம் தேவை

முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்குடன் தொடர்புள்ளதாக கருதப்படும் வீடுகளிலிருந்து கைப்பற்றப்பட்ட 12,000 பொருள்களில் தன்னுடையவை என்று லெபனானிய நிறுவனம் உரிமை கொண்டாடும் யுஎஸ்$14.79 மில்லியன் மதிப்புள்ள நகைகளை உறுதிப்படுத்திக்கொள்ள அரசாங்கத்துக்குக் கூடுதல் அவகாசம் தேவைப்படுகிறது. இது இன்று உயர் நீதிமன்ற நீதி ஆணையர் வொங் சீ லின்னிடம்…

மருத்துவப் பரிசோதனைக்காக ஐஜேஎன் -னில் ஈசா சமட்

அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியதாகக் குற்றஞ்சாட்டப்படலாம் என்று எதிர்பார்க்கப்படும் முன்னாள் அம்னோ தலைவர் ஈசா சமட் தேசிய இருதயக் கழகத்தில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். 69 வயதான முன்னாள் பெல்டா தலைவரின் உடல் நிலை “நன்றாகவே உள்ளது” என்று தெரிவித்த அவரின் துணைவியார் ஷர்லிசா முகம்மட் காலிட், அது வழக்கமான மருத்துவப் பரிசோதனைதான்…

எம்ஏசிசி ரோஸ்மா, கூ நான், ரிஸால் மன்சூர் ஆகியோரை விசாரணைக்கு…

எம்ஏசிசி சரவாக் கிராமப்புறப் பள்ளிகளுக்கான சூரிய சக்தித் திட்டம் தொடர்பாக முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் துணைவியார் ரோஸ்மா மன்சூரையும் அவரின் உதவியாளர் ரிஸால் மன்சூரையும் விசாரிக்க விருப்பதாக ஒரு வட்டாரம் தெரிவித்தது. மேலும், கோலாலும்பூர் மாநகராட்சி மன்றம் சம்பந்தப்பட்ட நில விற்பனை தொடர்பாக முன்னாள் கூட்டரசுப்…

இயோ : விவாகரத்துக்கான காரணங்களைச் சொல்ல சங்கடமாக இருக்கிறது

குடும்பம், மகளிர் மற்றும் சமூக மேம்பாடு அமைச்சின், துணை அமைச்சர் ஹன்னா இயோ, விவாகரத்துக்கான காரணங்களைச்  சொல்ல வெட்கமாக இருக்கிறது என்று இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். முன்னதாக, மனைவிமார்கள் இரவில் துணி துவைத்தல், குழுவாக வெளியில் செல்ல விரும்புதல், மனைவி காரில் உண்பதை விரும்பாத கணவர், கணவர் குறைந்த…

சொஸ்மா, பொடா, பொக்கா சட்டங்களை இரு குழுக்கள் ஆராய்கின்றன- உள்துறை…

அரசாங்கம் பாதுகாப்புக் குற்றங்கள் (சிறப்பு நடவடிக்கை) சட்டம் 2012 (சொஸ்மா) , பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் 2015(பொடா), குற்றச் செயல் தடுப்புச் சட்டம் 1959 (பொக்கா) ஆகியவற்றை விரிவாக ஆராய இரண்டு குழுக்களை அமைத்திருப்பதாக இன்று நாடாளுமன்றத்தில் கூறப்பட்டது. அக்குழுக்கள் தடுப்புக் காலம் மிகவும் நீண்டிருப்பதாகவும் கைது செய்வதற்கு…

மஸ்லீ: ஐஐயுஎம் தலைவர் பதவிக்குப் பலர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்

மலேசிய அனைத்துலக இஸ்மாமியப் பல்கலைக்கழகத் தலைவர் பதவியிலிருந்து தாம் விலகியதும் அப்பதவிக்கு நியமனம் செய்யப்படுவதற்குப் பலர் அடையாளம் காணப்பட்டிருப்பதாக மஸ்லீ மாலிக் இன்று கூறினார். அவர்கள் அனைவரும் உலகப் புகழ்ப் பெற்றவர்கள் என்றும் அரசியல் பதவி வகிக்காதவர்கள் என்றும் கல்வி அமைச்சர் கூறினார். மஸ்லீ ஐஐயும் தலைவர் பதவியிலிருந்து…