இலக்கு நிர்ணயிக்கப்பட்ட மானியங்களிலிருந்து சேமிப்பை மக்களுக்கு அனுப்பும் முயற்சிகளுக்கு ஏற்ப நாடு முழுவதும் கிரேடு ஏ, பி மற்றும் சி முட்டைகளின் சில்லறை விலையைத் தலா மூன்று சென்களால் குறைக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. கிரேடு ஏ, பி மற்றும் சி முட்டைகளுக்கான புதிய சில்லறை விலைகள் முறையே…
எஸ்ஆர்சி புலனாய்வில் சம்பந்தப்பட்ட ஆறு எம்ஏசிசி அதிகாரிகள் இடமாற்றம்
மலேசிய ஊழல்தடுப்பு ஆணையத்தின் சிறப்பு நடவடிக்கைப் பிரிவு (Bahagian Operasi Khas) அதிகாரிகள் அறுவர் அப்பிரிவிலிருந்து மாற்றப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் அனைவருமே எஸ்ஆர்சி இண்டர்நேசனல் புலனாய்வில் நேரிடையாக ஈடுபட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த அறுவரில் அப்பிரிவின் துணைத் தலைவர் டான் காங் சாயும் ஒருவர் என்று அறியப்படுகிறது. சிறப்புப் பிரிவு …
அமெரிக்காவில் அடைக்கலம் நாடும் சிங்கப்பூரர், சொந்த நாட்டில் இட்ட இடுகைகளுக்காக…
அமெரிக்காவில் அரசியல் அடைக்கலம் நாடும் சிங்கப்பூரர் ஒருவர் சொந்த நாட்டில் வெளியிட்ட இடுகைகளை நினைத்து இப்போது வருந்துகிறார். மக்களிடையே கொதிப்பை உண்டாக்கும் அவ்விடுகைகளை வெளியிட்டதற்காக இரண்டு முறை சிங்கையில் சிறை வாசம் அனுபவித்திருக்கிறார் அவர். தற்போது அமெரிக்காவின் இல்லினோய்சில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அமோஸ் ஈ, 18, சிங்கப்பூரின் காலஞ்சென்ற …
மகாதிர்: நான் ஏன் பிரிம் இலஞ்சம் என்று வலியுறுத்துகிறேன்
பிரிம் ஒரு வகையான இலஞ்சம் என்று நான் கண்டனம் தெரிவித்திருப்பது சிலருக்கு குழப்பத்தையும் சினத்தையும் ஏற்படுத்தியிருப்பதாகத் தெரிகிறது. நான் இன்னும் அதை ஒரு வகையான இலஞ்சம் என்று வற்புறுத்துகிறேன். இதைப் பெற்றுக்கொண்ட ஒரு கம்பத்து நபர் கூறிய கருத்து இதைத் தெளிவாக்குகிறது. அவர் கூறினார்: "நான் நஜிப்பை…
ரோன்95 விலை ரிம2.20 ஐ எட்டும், ரஃபிஸி மீண்டும் எச்சரிக்கிறார்
ரோன்95 பெட்ரோலின் விலை ஜனவரி 1 ஆம் தேதியிலிருந்து ஒரு லீட்டருக்கு ரிம2.20க்கு உயரக்கூடும் என்று பிகேஆர் உதவித் தலைவர் ரஃபிஸி ரமலி அவரது எச்சரிக்கையை மீண்டும் விடுத்துள்ளார். ஒரு லீட்டருக்கு 25 சென் விலை உயர்வு கீழ் மற்றும் நடுத்தர வருமான வட்டத்திலுள்ள குடும்பங்களுக்கு மிகப்…
கிணற்றுத் தவளையாக இருக்காதீர், எதிரணியைச் சாடினார் நஜிப்
தாம் பதவி ஏற்றகாலத்திலிருந்து இன்று வரையில் ஆற்றியுள்ள பங்களிப்புகளை அலட்சியப்படுத்தி விட்டு தமது ஆட்சியில் நாட்டின் மேம்பாட்டிற்கு எதுவுமே செய்யவில்லை என்று கூறிவரும் எதிரணியினரை பிரதமர் நஜிப் கிணற்றுத் தவளைகள் என்று சாடினார். அவர்களின் விவாதங்கள் எல்லாம் வெறும் பொருள்ளற்ற வார்த்தைகள் மட்டுமே. அவர்கள் எதையும் காணாதது…
சிரியாவில் இன்று நள்ளிரவிலிருந்து போர் நிறுத்தம், ரஷ்யா அறிவிப்பு
இன்று வியாழக்கிழமை நள்ளிரவிலிருந்து(சிரியா நேரப்படி) சிரியாவுக்கும் அந்நாட்டின் கிளர்ச்சிக்காரர்களுக்கும் இடையில் செய்துகொள்ளப்பட்டிருக்கும் ஒப்பந்தப்படி நாடுதழுவிய அளவிலான போர் நிறுத்தம் அமலுக்கு வருகிறது. இந்த ஒப்பந்தத்திற்கு ரஷ்யா, துருக்கி மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் உத்தரவாதம் அளிக்கின்றன. இதனை ரஷ்ய அதிபர் விலாடிமிர் புட்டின் அறிவித்தார். சிரியா அரசாங்கமும்…
பிரிம் ஒருவகையான இலஞ்சம்தான், மகாதிரின் கருத்தை ஏற்றுக்கொள்கிறார் அஸ்மின்
மத்திய அரசு அமல்படுத்தும் பந்துவான் ரக்யாட் 1 மலேசியா (பிரிம்) ஒரு வகையான இலஞ்சம் என்று முன்னாள் பிரதமர் மகாதிர் முகம்மட் கூறியிருந்த கருத்தை பிகேஆர் துணைத் தலைவர் முகம்மட் அஸ்மின் அலி ஏற்றுக்கொள்கிறார். என்னைப் பொறுத்தவரையில் பிரிம் ஒரு வகையான இலஞ்சம். இதனை தாம் பல…
ஜனநாயகத்தில் ஏகப்பட்ட குறைகள் : வருத்தப்படுகிறார் மகாதிர்
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கைப் பதவி இறக்குவதற்கான எல்லா வழிகளும் அடைபட்டுக் கிடப்பதாக அடிக்கடி குறைபட்டுக்கொள்ளும் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட், இப்போது ஜனநாயகமே உள்ளார்ந்த குறைகளைக் கொண்டிருப்பதாக அங்கலாய்க்கிறார். மக்கள் நல்ல தலைவர்களைத் தேர்ந்தெடுப்பார்கள் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் அமைந்ததுதான் ஜனநாயகம் என்றாரவர். “ஆனால், பலர் …
சாபா குடிநீர்துறை ஊழல்: குற்றச்சாட்டுகளை மறுத்த மூவர்
சாபா குடிநீர்துறை முன்னாள் இயக்குனரும் அவரின் துணைவியாரும், மாநில நிதி அமைச்சின் தொழில்நுட்ப, பொறியியல் ஆலோசகரும் இன்று கோத்தா கினாபாலு செசன்ஸ் நீதிமன்றத்தில் ரிம61.48 மில்லியனைக் கையாடியதாகவும் ஆடம்பரப் பொருள்களைச் சட்டவிரோதமாக வைத்திருந்ததாகவும் அவர்களுக்கு எதிராக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை மறுத்தனர். 54 வயது நிரம்பிய முன்னாள் இயக்குனர் முகம்மட் …
விரைவு பேருந்து ஓட்டுனர்கள் மீதான புகார்களை வரவேற்கிறது ஸ்பாட்
விரைவு பேருந்து பயணிகள் ஓட்டுனர் தவறு செய்வதைக் கண்டால் நேரடியாக தன்னைத் தொடர்பு கொண்டு முறையிடுவதை நிலப் போக்குவரத்து ஆணையம் (ஸ்பாட்) ஊக்குவிக்கிறது. ஸ்பாட்டின் தொலைபேசி எண் எல்லா விரைவு பேருந்துகளிலும் இருக்கும். 24-மணி நேரமும் தொடர்புகொண்டு புகார்களைத் தெரிவிக்கலாம் என ஸ்பாட் பொது நிர்வாகி (அமலாக்கப் பிரிவு) …
டெப்பி ரெய்னோல்ட்ஸ், 84, மகள் கேரி ஃபிஷருக்கு அடுத்த நாள்…
ஹாலிவூட்டில் ஒரு காலத்தில் கொடிகட்டி பறந்த நடிகை டெப்பி ரெய்னோல்ட்ஸ் நேற்று காலமானார். அவருக்கு வயது 84. லோஸ் ஏஞ்சலிஸ் நகரில் திடீரென்று முடக்கு வாதத்தால் தாக்கப்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட ரெய்னோல்ட்ஸ் சில மணி நேரத்தில் இறந்தார் என அவரின் மகன் டோட் ஃபிஷர் தெரிவித்தார். ‘Singin’…
பெர்சத்து தலைவர்: பிரதமராவதற்கு முழுத் தகுதி பெற்றவர் முகைதின்
பார்டி பிரிபூமி பெர்சத்து மலேசியா (பெர்சத்து)வின் உயர் தலைவர்களில் ஒருவர், அடுத்த பொதுத் தேர்தலில் எதிரணி புத்ரா ஜெயாவைக் கைப்பற்றினால் அக்கட்சித் தலைவர் முகைதின் யாசினே பிரதமராவதற்கு மிகவும் பொருத்தமானவர் என்கிறார். “எனக்கு முகைதினை நன்றாகத் தெரியும். பிரதமராவதற்கு முழுத் தகுதி அவருக்கு உண்டு”, என்றவர் மலேசியாகினியிடம் தெரிவித்தார். …
சகோதரனின் சூதாட்டக் கடன்களால் குடும்பமே தொல்லைப்படுகிறது
செராஸ், லோரோங் ஈக்கான் மாஸில் உள்ள ஒரு வீட்டில் உள்ளவர்களுக்குக் கடன் முதலைகளால் தீராத தொல்லை. அக்குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் ஆ லோங்குகள் எனப்படும் கடன் முதலைகளிடம் நிறைய கடன் பெற்றிருப்பதுதான் அதற்குக் காரணம். சம்பந்தப்பட்ட நபர் பல கடன் முதலைகளிடம் சுமார் ரிம300,000 கடன் பட்டிருக்கிறார். கடன் …
பாஸ்: அமனாவின் சாயம் வெளுத்து விட்டது, அது பிகேஆரின் தொகுதிகளைக்…
அமனா நெகரா(அமானா) வின் சாயம் வெளுத்து விட்டது என்று கூறும் பாஸ் அது பிகேஆரின் தொகுதிகளை எடுத்துக்கொள்ளப் பார்ப்பதிலிருந்தே இதைத் தெரிந்து கொள்ளலாம் என்கிறது. “அவர்கள்(அமனா) இப்போது பிகேஆரின் தொகுதிகளை அபகரிக்க நினைக்கிறார்கள். இது நாங்கள் அமனா குறித்து சொல்லியதெல்லாம் உண்மை என்பதை நிரூபிக்கிறது”, என பாஸ் உதவித் …
ஐவர் கைது, ரிம100,000 மதிப்புள்ள போதைப் பொருள் பறிமுதல்
கடந்த சனிக்கிழமை, ஸ்ரீபெட்டாலிங்கில் இரண்டு கொண்டோமினியம்களில் நடத்திய அதிரடிச் சோதனையில் ஐவரைக் கைது செய்து இரண்டு கிலோகிராம் போதைப்பொருளைக் கைப்பற்றியதன்வழி போதைப்பொருள் விநியோகக் கும்பல் ஒன்றை போலீசார் முறியடித்துள்ளனர். அக்கும்பல் கூட்டரசுத் தலைநகரிலும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலுமுள்ள கேளிக்கை மையங்களில் போதைப்பொருள்களை விற்று வந்ததாக நம்பப்படுகிறது என கோலாலும்பூர் …
அர்ஜெண்டினாவின் முன்னாள் அதிபர்மீது ஊழல் குற்றச்சாட்டு
அர்ஜெண்டினா முன்னாள் அதிபர் சிறிஸ்டினா பெர்னாண்டஸ் டெ கிர்ச்சனர், அரசாங்கக் குத்தகைகள் வழங்கியதில் ஊழல் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். அவர்மீதும் அவரிடம் நீண்ட காலம் திட்ட அமைச்சராகப் பணிபுரிந்த ஜூலியோ டெ விடோமீதும் வழக்கு தொடர கூட்டரசு நீதிபதி ஜூலியன் எர்கோலினி உத்தரவிட்டார். 10பில்லியன் பெசோக்களுக்குமேல்(யுஎஸ்$643 மில்லியன்) பெறுமதியுள்ள …
பேருந்து விபத்துகளைத் தடுக்க யூனியன் ஆலோசனை
பேருந்து, லாரி போக்குவரத்து நிறுவனங்கள் ஓட்டுனர்களின் வேலை முறையை மாற்றி அமைக்க வேண்டும், லாரி, பேருந்து விபத்துகளைத் தவிர்க்க அதுதான் வழி என தீவகற்ப மலேசியா போக்குவரத்து தொழிலாளர் சங்கம் (TWU) கூறியது. TWU பல தடவை இந்த ஆலோசனையை முன்வைத்தது என்றும் ஆனால், சம்பந்தப்பட்ட தரப்புகள் அதைக் …
ஸுனார்மீதான குற்றச்சாட்டுகளைக் கைவிடுவீர்: அரசாங்கத்துக்கு ஆர்எஸ்எப் கோரிக்கை
அரசாங்கம் அரசியல் கேலிச்சித்திர ஓவியரான சுல்கிப்ளி அன்வார் அல்ஹாஹ் மீதான எல்லாக் குற்றச்சாட்டுகளையும் கைவிட வேண்டும் என எல்லைகளற்ற செய்தியாளர்கள் அமைப்பு (ஆர்எஸ்எப்) விரும்புகிறது. பாரிசில் அமைந்துள்ள அந்த என்ஜிஓ, அரசாங்கம் தேச நிந்தனைச் சட்டத்தைக் காண்பித்து ஸுனார் என்ற பெயரில் பிரபலமாக விளங்கும் சுல்கிப்ளியை மிரட்டவோ அச்சுறுத்தவோ …
இபிஎப் அதன் சந்தாதாரர்கள் அவர்களின் சேமிப்பை விரைவில் கரைத்து விடுவார்களோ…
ஊழியர் சேமநிதி (இபிஎப்) அதன் சந்தாதார்ளை எண்ணிக் கவலையடைந்துள்ளது. அவர்களின் செலவளிக்கும் பழக்கம்தான் அதற்கு கவலை தந்துள்ளது. மலேசியர்களின் வாழ்நாள் இப்போது 75ஆண்டுகளாகக் கூடியுள்ளது ஆனால், சந்தாதாரர்கள் பலர் பணியிலிருந்து ஓய்வுபெற்ற மூன்றிலிருந்து ஐந்து ஆண்டுகளுக்குள் இபிஎப் சேமிப்பை முடித்து விடுகிறார்கள் எனக் கோலாலும்பூர் இபிஎப் கிளையின் பணிஓய்வு …
அனினா எல்லாவற்றுக்கும் விரைவில் விளக்கம் அளிப்பார்
பார்ட்டி பெரிபூமி பெர்சத்து மலேசியாவின் (பெர்சத்து) நிறுவன உறுப்பினரான அனினா சாஅடுடின் அவருக்கு எதிராக கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கும் கட்சியின் ஶ்ரீகண்டி தலைமைப் பதவியிலிருந்து அகற்றப்பட்டிருப்பதாக கூறப்படுவதற்கும் விரைவில் எதிர்வினையா/ற்றுவார் என்று சினார் ஹரியான் கூறுகிறது. இந்த விவகாரத்தில் எழுந்துள்ள அனைத்துக் கேள்விகளுக்கும் பதில் அளிக்க அனைவரும் அனினாவுக்கு…
சாக்லைட்டைத் திருடிய தாய்க்கு 14 நாள் சிறைத் தண்டனை
கிறிஸ்துமஸ் தினத்தன்று பத்து சாக்லைடைத் திருடிய நான்கு குழந்தைகளின் தாயாருக்கு இன்று கோலாலம்பூர் மஜிஸ்டிரேட் நீதிமன்றம் 14 நாள் சிறைத் தண்டனையும் ரிம200 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது. அபராத்தொகையைக் கட்டத் தவறினால் கூடுதல் நாங்கு நாள் சிறைத் தண்டனைக்கும் உத்தரவிட்டது. இத்தீர்ப்பை அளித்த மஜிஸ்டிரேட் உம்ஸாருல் அந்-நுர்…
வெளிநாடுகளில் வேலை செய்யும் மலேசியரும் இபிஎப்-பில் சேரலாம்
வெளிநாடுகளில் வேலை செய்யும் மலேசியர்கள் 1மலேசியா பணிஓய்வுச் சேமிப்புத் திட்ட(எஸ்பி1எம்)த்தின்வழி ஊழியர் சேமநிதிக்குச் சந்தா செலுத்திச் சேமிக்க முடியும். 55வயதுக்குக் கீழ்ப்பட்டவர்கள் இபிஎப் சந்தாதாரராக தங்களைப் பதிவு செய்து கொண்டு பணிஓய்வு பெறும் வரையில் சந்தா செலுத்தி வரலாம் என ஜோகூர் இபிஎப் கிளை பணி ஓய்வு ஆலோசக …
கட்டண உயர்வால் விபத்துகள் குறையாது: ஸ்பாட்டுக்குப் பயனீட்டாளர் சங்கம் அறிவுறுத்தல்
பேருந்து கட்டணத்தை உயர்த்துவது பேருந்து விபத்துகளைக் குறைக்கும் என நிலப் போக்குவரத்து ஆணையம் (ஸ்பாட்) கூறியிருப்பதற்கு மலேசிய பயனீட்டாளர் சங்கம் (மாகோனாஸ்) எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. “அன்றாடத் தேவைகளை நிறைவேற்ற முடியாமல் மக்கள் அல்லல் பட்டுக்கொண்டும் விலைவாசி உயர்ந்து கொண்டும் போகும் நடப்புப் பொருளாதாரச் சூழலில் பேருந்து கட்டணத்தை உயர்த்துவது …