அகோங்கின் பிறந்த நாளை ஒட்டிய இரண்டு அதிகாரப்பூர்வ நிகழ்ச்சிகள் இரத்து…

எதிர்வரும் செப்டம்பர் 9-ம் தேதி, யாங் டி-பெர்த்துவான் அகோங் சுல்தான் முஹம்மத் V -இன் பிறந்த நாள் கொண்டாட்டத்தை முன்னிட்ட ,  அதிகாரப்பூர்வ பிறந்தநாள் விழா மற்றும் அரச தேநீர் விருந்து ஆகிய இரண்டு நிகழ்ச்சிகளும் இரத்து செய்யப்படுவதாக இஸ்தான் நெகாரா அறிவித்துள்ளது. அரண்மனை நிர்வாக இயக்குநர், வான்…

அரசாங்கத்திற்குப் பெட்ரோல் மற்றும் டீசலை, பெட்ரோன் மட்டும் வழங்கவில்லை

பெட்ரோன் நிறுவனத்தை, அரசாங்க வாகனங்களுக்கான எண்ணெய் வழங்குநர்களில் ஒருவராக நியமித்தது, ஓர் ஆரோக்கியமான போட்டியை உருவாக்குவதற்காக என நிதியமைச்சர் விளக்கினார். இன்று மாலை, அந்நிறுவனம் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையின்படி, அரசாங்க வாகனங்களுக்கு எண்ணெய் வழங்கும் நிறுவனங்களில் பெட்ரோன் ஒரே நிறுவனம் அல்ல எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 1997 ஆம் ஆண்டு…

முன்னாள் ஒற்றர்கள் யுஎஸ்12 மில்லியனை மத்தியக் கிழக்கு வட்டாரத்திலிருந்து பெற்றிருக்கலாம்

  மலேசிய ஊழல் எதிர்ப்பு ஆணையத்தால் (எம்எசிசி) விசாரிக்கப்பட்டு வரும் ஒற்றர் துறையின் முன்னாள் உயர்மட்ட அதிகாரிகள் மொத்தம் யுஎஸ்$12 மில்லியனை மத்தியக் கிழக்கு வட்டாரத்திலிருந்து பெற்றிருக்க வேண்டும். இப்பணம் மலேசியாவுக்கு மே 9 பொதுத் தேர்தலுக்கு முன்னதாகக் கொண்டு வரப்பட்டது என்று பெயர் குறிப்பிட விரும்பாத மூத்த…

பாஸ் – மஇகா உறவு: ஒரு தற்கொலை முயற்சியா அல்லது…

  ஸ்ரீ செத்தியா இந்திய வாக்காளர்கள் அரசியல் முதிர்ச்சியடைந்தவர்கள், உரிமைக்கும், உண்மைக்கும் குரல் கொடுப்பதில் வல்லவர்கள். களவாணிகளின் கூட்டு அங்குள்ள இந்திய வாக்காளர்களைக் கவராது என்கிறார் கெஅடிலான் கட்சியின் தேசிய உதவித் தலைவரும், கோலலங்காட் நாடாளுமன்ற உறுப்பினரும், நீர், நிலம் இயற்கை வள அமைச்சருமான டாக்டர் சேவியர் ஜெயக்குமார்.…

பதவி விலகப் போகிறேன் என்ற ஊகம் முட்டாள்தனமானது, குவான் எங்…

  அமைச்சரவையிலிருந்து விலகப் போகிறேன் என்ற ஊகம் முட்டாள்தனமானது என்று நிதி அமைச்சர் லிம் குவான் எங் கூறினார். ஊடகங்களுக்கு விற்பனைகள் மற்றும் சேவைகள் வரி (எஸ்எஸ்டி) பற்றி செய்தியாளர்களுக்கு விளக்கம் அளித்துக் கொண்டிருக்கையில், தாபுங் ஹாப்பான் நடவடிக்கைகள் செப்டெம்பர் 30-இல் முடிவுக்கு வருமா என்று கேட்ட போது,…

எச்எஸ்ஆர் திட்டம்: சிங்கப்பூரும் மலேசியாவும் ஒப்பந்தத்தை நெருங்கிக் கொண்டிருக்கின்றன

  கோலாலம்பூர்-சிங்கப்பூர் வெகு-விரைவு இரயில் (எச்எஸ்ஆர்) திட்டத்தில் இரு தரப்பினருக்கும் பலன் அளிக்கக்கூடிய தீர்வுக்கு மலேசியாவும் சிங்கப்பூரும் நெருங்கிக் கொண்டிருக்கின்றன என்று பொருளாதார விவாகார அமைச்சர் அஸ்மின் அலி கூறுகிறார். இந்த எச்எஸ்ஆர் திட்டம் மறுஆய்வு செய்யப்பட வேண்டும் என்ற நோக்கத்தை பக்கத்தான் ஹரப்பான் அரசாங்கம் அறிவித்ததிலிருந்து இரு…

கைப்பற்றப்பட்ட மில்லியன் கணக்கிலான அமெரிக்க டாலர்களை எம்எசிசி வெளிப்படுத்தும் என்று…

  இரகசியத் துப்பறிவு அதிகாரிகள் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அந்தப் பிரிவின் முன்னாள் தலைவர் ஹஸ்னா அப்துல் ஹமிட் உட்பட, கைப்பற்றப்பட்ட மில்லியன் கணக்கிலான அமெரிக்க டாலர்களை மலேசிய ஊழல் எதிர்ப்பு ஆணையம் (எம்எசிசி) பகிரங்கமாகக் காட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்று மதியம் நடத்தப்படும் செய்தியாளர் கூட்டத்தில் இது…

போலீஸ் நஜிப்பை மீண்டும் நாளை விசாரிக்கிறது

  போலீஸ் மீண்டும் நஜிப் ரசாக்கின் வாக்குமூலத்தை பதிவு செய்யவிருக்கிறது. அவர் நாளை மினாரா 238 ஜாலான் துன் ரசாக்கிற்குச் செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அங்கு அவர் பணச் சலவை எதிர்ப்பு மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதித் தடுப்புச் சட்டத்தின் (அம்லா 2001) கீழ் விசாரிக்கப்படுவார் என்று கூறப்படுகிறது. கடந்த…

அன்வாரிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கோர உத்துசான் ஒப்புக்கொண்டுள்ளது, வழக்கு தீர்க்கப்பட்டது

  பிகேஆரின் தலைவராக தேர்வு செய்யப்பட்டிருக்கும் அன்வார் இப்ராகிம் சட்டத்துறை தலைவர் அலுவலகம் மற்றும் நீதித்துறை ஆகியவற்றுக்கு இலஞ்சம் கொடுத்தார் என்று மறைமுகமாகக் கூறும் கட்டுரைக்காக அம்னோவுக்குச் சொந்தமான உத்துசான் மலேசியா அன்வாரிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கோர இன்று ஒப்புக்கொண்டது. உத்துசானுக்கான வழக்குரைஞர் அஸ்ஹார் அர்மான் அலி அந்த…

பலாக்கோங்கில் தோற்றால் மசீச பிஎன்னை விட்டு விலகி ஹரப்பானில் சேர…

  செப்டெம்பர் 8 இல் நடைபெறும் பலாக்கோங் இடைத் தேர்தலில் மசீச தோற்றால் அது பிஎன்னில்ருந்து விலகிக் கொள்ள வேண்டும் என்று டிஎபி தலைவர் டான் கோக் வை இன்று மசீசவுக்கு சவால் விட்டார். அவர்கள் இடைத் தேர்தலில் தோற்றால் அவர்கள் எங்களுடன் ஹரப்பானில் சேர்ந்து கொள்ள வேண்டும்.…

முன்னாள் நெகிரி எம்பி-இன் ஆட்சேபனை மனு நிராகரிப்பு: ஸ்ரீராம் மனு…

சிரம்பான் உயர் நீதிமன்றம், பிகேஆர் கட்சியைச் சேர்ந்த டாக்டர் எஸ்.ஸ்ரீராமின் தேர்தல் மனுவுக்கு எதிராக அம்னோ துணைத் தலைவரும் நெகிரி செம்பிலான் முன்னாள் மந்திரி புசாருமான முகம்மட் ஹசான் தாக்கல் செய்த ஆட்சேபனை மனுவை நிராகரித்து டாக்டர் ஸ்ரீராமின் மனு மீது செப்டம்பர் 12-இல் விசாரணை தொடங்க வேண்டும்…

தேர்தல் முறையையும் இசி–யையும் மாற்றி அமைக்க ஆலோசனை

மலேசியாவில் மே 9 பொதுத் தேர்தலே ‘first past the post (எப்பிடிபி) முறைப்படி நடந்த கடைசித் தேர்தலாக இருக்கலாம். அதேபோல் தேர்தல் ஆணையம் ஒரு பொதுத் தேர்தலை நடத்தியது அதுவே கடைசி முறையாகவும் இருக்கலாம். அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட தேர்தல் சீரமைப்புக்குழு (இஆர்சி) எப்பிடிபி-க்குப் பதிலாக விகிதாசாரப் பிரதிநிதித்துவத்…

வெளிவிவகார உளவுத்துறை உளவுத்துறைத் தலைவருக்கு ஐந்துநாள் தடுப்புக் காவல்

புத்ராஜெயா மெஜிஸ்ட்ரேட் நீதிமன்றம், மலேசிய வெளிவிவகார உளவுத்துறை (எம்இஐஓ) முன்னாள் தலைவரான ஹசானா அப்துல் ஹமிட்டை ஐந்து நாள்களுக்கு விசாரணைக்காக தடுத்து வைக்க உத்தரவிட்டார். மலேசிய ஊழல் தடுப்பு ஆணைய வழக்குரைஞர் அஹமட் அக்ரில் காரிப், ஒரு வாரத் தடுப்புக் காவல் கொடுக்குமாறு கேட்டுக்கொண்டிருந்தார். ஆனால், மெஜிஸ்ட்ரேட் ஷா…

நோயால் பாதிக்கப்பட்ட செய்தியாளருக்குப் பண உதவி தேவை

தமிழ் நேசன் முன்னாள் செய்தியாளர் வி.பி. தவசேகரன்,66, புற்றுநோயால் பாதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வருகிறார். சிகிச்சைக்கு நிறைய பணம் தேவைப்படுகிறது. அதை அவரால் சமாளிக்க முடியாததால் நல்லுள்ளங்களின் ஆதரவைத் நாடுகிறார். 2009-இலிருந்து இரைப்பைப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கும் தவசேகரனுக்கு வாய்வழியாக உணவு உண்ண முடிவதில்லை. எல்லாம் பாலுணவுதான். அதுவும் சிறப்புக்…

வாக்குறுதி அளித்தபடி டாக்டர் எம் அதிகாரத்தை வழங்குவார், அன்வார் நம்புகிறார்

முன்னர் வாக்குறுதி அளித்தபடி, பிரதமர் பதவியைத் துன் டாக்டர் மகாதிர் முகமட் தன்னிடம் வழங்குவார் என அன்வார் இப்ராஹிம் நம்பிக்கை தெரிவித்ததாக ‘நிக்கேய் ஆசியான் ரிவியூ’ செய்தி வெளியிட்டுள்ளது. "நான் அவரை நம்புகிறேன், அவரிடம் கேள்வி கேட்க எனக்கு எந்தக் காரணமும் கிடையாது," என அவர் குறிப்பிட்டுள்ளார். “எனக்கும்…

பிரதமர் அலுவலகம்: அந்நியர்கள் சொத்துக்கள் வாங்கலாம், ஆனால் நிபந்தனைகள் உண்டு

  மலேசியா எனது இரண்டாவது இல்லம் என்ற திட்டத்தின் அந்நியர்கள் மலேசியாவை தங்களுடைய நிரந்தர குடியிருப்பிடமாக்கிக் கொள்ள அனுமதிக்கப்படுவார்கள் என்று பிரதமர் அலுவலகம் விளக்கம் அளித்துள்ளது. ஆர்வமுள்ளவர்களுக்கு அதற்கான நிபந்தனைகள் தெளிவாகக் கூறப்பட்டுள்ளன மற்றும் இந்தத் திட்டத்திற்கான தகவல் பகிரங்கமாகக் கிடைக்கும் என்று பிரதமர் அலுவலகம் ஓர் அறிக்கையில்…

அலி ஹம்சா விலகிக் கொண்டார், இஸ்மாயில் பாகார் புதிய தலைமைச்…

  அலி ஹம்சாவிற்கு பதிலாக கருவூலத்தின் தலைமைச் செயலாளர் இஸ்மாயில் பாகார் அரசாங்கத்தின் தலைமைச் செயலாளராகப் பதவி ஏற்கிறார். 2012 ஆன்டிலிருந்து அரசாங்கத் தலைமைச் செயலாளராகப் பதவி வகித்த அலி தமது பதவியை இஸ்மாயிலிடம் ஒப்படைப்பதாக இன்று மதியம் டிவிட்டரில் பதவு செய்துள்ளார். இஸ்மாயில் 14 ஆவது அரசாங்கத்…

கேமரன் மலை தேர்தல் வழக்கில் 52 சாட்சிகள் சாட்சியம் அளிப்பார்கள்

கேமரன் மலை தேர்தல் வழக்கில் எம்.மனோகரனுக்காக 36 பேரும், சி.சிவராஜாவுக்காக 16 பேரும் சாட்சியம் அளிப்பார்கள். வழக்கு செப்டம்பர் 3 தொடங்கி 14 நாள்களுக்கு நடக்கும். அதே வேளை மனோகரனின் மனுவைத் தள்ளுபடி செய்யக் கோரி சிவராஜா தாக்கல் செய்துள்ள எதிர்மனுவை நீதிபதி அசிசா நவாவி ஏற்றுக்கொண்டால் வழக்கே…

குலா: குறைந்தபட்ச சம்பளம் இந்த வாரம் அல்லது அடுத்த வாரம்…

அமைச்சரவை இவ்வாரம் அல்லது அடுத்த வாரம் அதன் வாராந்திரக் கூட்டத்தில் , தொழிலாளர்களுக்கான குறைந்தபட்சச் சம்பளத்தை முடிவு செய்யும் என மனித வள அமைச்சர் எம்.குலசேகரன் இன்று கூறினார். தீவகற்ப மலேசியாவிலும் சாபா, சரவாக்கிலும் தனியார் துறையின் தொடக்கநிலைச் சம்பளம் ஒரே மாதிரியாக இருக்கும் என்றும் அவர் சொன்னார்.…

கிள்ளான் அமலாக்க அதிகாரிகள் மீது மாட்டுச் சாணம் வீசப்பட்டது, ஐவர்…

  ஒரு மாட்டுப் பண்ணை மற்றும் இரு இந்து கோயில்களை தகர்ப்பதில் ஈடுபட்டிருந்த கிள்ளான் நகராண்மைக் கழகப் (எம்பிகே) பணியாளர்களுடன் நடந்த நேரடி மோதல் சம்பந்தமாக கிள்ளான், பண்டார் பொட்டானிக்கில் போலீசார் ஐவரை கைது செய்துள்ளனர் என்று ஊடகச் செய்திகள் கூறுகின்றன. கைது செய்யப்பட்ட ஐவரில் பண்ணையின் சொந்தக்காரர்,…

நாடற்ற இந்தியர்களின் எண்ணிக்கை குறித்து ஹரப்பான் தலைவர்கள் மன்னிப்பு கோருவார்களா?,…

  நாடற்ற இந்தியர்களின் எண்ணிக்கை குறித்து தாம் பொய் உரைப்பதாக முன்பு கூறி வந்த ஹரப்பான் தலைவர்கள் இப்போது உள்துறை அமைச்சு உண்மையான எண்ணிகையை வெளியிட்டிருப்பததைத் தொடர்ந்து அவர்கள் தம்மிடம் மன்னிப்பு கேட்பாளர்களா என்று முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் கேள்வி எழுப்பியுள்ளார். நஜிப் அவரது முகநூல் பக்கத்தில்,…

கட்சித் தேர்தலில் ரபிசி போட்டியிட முடியுமா? குழுதான் தீர்மானிக்க வேண்டும்

இரண்டு நீதிமன்ற வழக்குகளில் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்ட முன்னாள் பாண்டான் எம்பி ரபிசி ரம்லி, கட்சித் தேர்தலில் கலந்துகொள்ள முடியுமா, முடியாதா என்பதை பிகேஆர் தேர்தல் குழுதான் முடிவு செய்ய வேண்டும். இன்று நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்கள் கேட்ட கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்தபோது வான் அசிசா இவ்வாறு கூறினார்.…

சிஇபி அறிக்கை இரகசியமாக வைக்கப்படலாம்- பிரதமர்

பெருமக்கள் மன்ற (சிஇபி)த்தின் அறிக்கை பொதுவில் வெளியிடப்படாமல் இரகசியமாக வைக்கப்படலாம் என்று பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் கூறினார். “அவர்களின் வேலை புலனாய்வு செய்து எனக்கு அறிக்கை தாக்கல் செய்வதுதான். அறிக்கையை ஏற்கிறேனா இல்லையா என்பது என்னைப் பொறுத்தது. முக்கியமாக நான் முடிவுகள் எடுப்பதற்குத் தேவையான தகவல்களைக் கொடுக்கிறார்கள்.…