நேற்று லாங் லேலாங் (Long Lellang) அருகே நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ஊழியர்களின் குடும்பங்களுக்கு தலா ரிம 100,000 வழங்கப்படும் என்று சரவாக் அரசு அறிவித்துள்ளது. மேலும், உயிரிழந்தவர்களின் பள்ளிச் செல்லும் குழந்தைகளின் கல்விச் செலவை 'யாயாசான் சரவாக்' (Yayasan Sarawak) மூலம் மாநில அரசே முழுமையாக…
தியோ: ஏராளமான எம்பிக்கள் சொத்துக்களை அறிவித்துள்ளனர், ஆனால் எம்எசிசி வலைதளத்தில்…
துணைக் கல்வி அமைச்சர் தியோ நீ சிங் தம்முடைய பெயர் எம்எசிசியின் அதிகாரப்பூர்வமான சொத்து பிரகடன வலைத்தளத்தில் விடுபட்டுள்ளது குறித்து திகைப்படைந்துள்ளதாக கூறினார். தம்முடைய சொத்து பிரகடனத்தை அக்டோபர் 16-இல் தாக்கல் செய்ததாக கூறிய தியோ, ஏன் தம்முடைய பெயர் விடுபட்டுள்ளது பற்றி கண்டறியும்படு தமது அலுவலகத்தைக்…
பெர்சே: மலேசியர்கள் ஏன் பிஎன்னைத் தோற்கடித்தார்கள் என்பதை மகாதிரும் ஹரப்பானும்…
கடந்த பொதுத் தேர்தலில் மலேசியர்கள் பிஎன்னை ஆட்சியிலிருந்து வெளியேற்றியது பரவலான கட்சித் தாவலைப் பார்ப்பதற்காக அல்ல என்று பெர்சே கூறுகிறது. கட்சித் தாவல் பதவிக்காகவும் சுயநலத்துக்காகவும்தான் என்பது தெளிவு. சட்ட நடவடிக்கையிலிருந்து தப்பிப்பதற்காகக்கூட கட்சித் தாவக் கூடும். இன்று பிற்பகல் விடுத்த அறிக்கையில் பெர்சே, அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்கள்…
ஸ்பான் புதிய தலைவர் சார்லஸ் சந்தியாகு
கிள்ளான் எம்பி சார்லஸ் சந்தியாகு தேசிய நீர் சேவை ஆணைய(ஸ்பான்)த்தின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இதனை அறிவித்த நீர், நில, இயற்கை வள அமைச்சர் சேவியர் ஜெயகுமார், 2020 அக்டோபர் 31வரை ஈராண்டுக் காலத்துக்கு அவர் அப்பதவி வகிப்பார் என்றார். “முன்பிருந்த தலைவர் 14வது பொதுத் தேர்தலுக்குப் பின்னர்…
சொத்து விவர பட்டியல்: முதலிடத்தில் குவான் எங், இரண்டாமிடத்தில் மகாதிர்
எம்ஏசிசி- இடம் தங்களின் வருமான விவரத்தை அறிவித்த பக்கத்தான் ஹரப்பான் மற்றும் பார்டி வாரிசான் சாபா நாடாளுமன்ற உறுப்பினர்களின் பட்டியல் அந்த ஆணையத்தின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இப்போதைய நிலையில் பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர் நிதி அமைச்சர் லிம் குவான் எங். அவருடைய மாத வருமானம் ரிம86, 464. 92.…
அல்டான்துயா கொலை: அதில் நஜிப்புக்கும் ரோஸ்மாவுக்கும் உள்ள தொடர்பு குறித்து…
மங்கோலியரான அல்டான்துயா கொலையில் முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்குக்கும் அவரின் துணைவியார் ரோஸ்மா மான்சூருக்கும் தொடர்புள்ளதாகக் கூறப்படுவது குறித்து போலீசார் விசாரணை செய்து வருவதாக இன்ஸ்பெக்டர்-ஜெனரல் அப் போலீஸ் பூஸி ஹருன் கூறினார். இன்று காலை செய்தியாளர்களிடம் பேசிய பூஸி, அவர்களுக்குத் தொடர்புள்ளதாக அண்மையில் அல்-ஜசிரா தொலைக்காட்சி…
மரியா சின்னுக்கு ரிம300,000 இழப்பீடு அளிக்க ஜமாலுக்கு நீதிமன்றம் உத்தரவு
சுங்கை பெசார் அம்னோ தலைவர் ஜமால் யூனுஸ் பெர்சே முன்னாள் தலைவர் மரியா சின் அப்துல்லாவுக்கு எதிராக அவதூறு குற்றம் புரிந்தது நிருபிக்கப்பட்டுள்ளது என்று தீர்ப்பளித்த கோலாலம்பூர் உயர்நீதிமன்றம், மரியாவுக்கு இழப்பீடாக ரிம300,000 கொடுக்க வேண்டும் என்று ஜமாலுக்கு உத்தரவிட்டது. மேலும், ஜமால் செலவுத் தொகையாக ரிம40,000…
கமலநாதன்: நஜிப் தமிழ்ப்பள்ளிகளுக்கு ரிம36 மில்லியன் நிதி ஒதுக்கீட்டிற்கு ஒப்புதல்…
பிஎன் அரசாங்கம் அமைச்சரவையின் ஒப்புதல் இல்லாமல் 13 தமிழ்ப்பள்ளிகளுக்கு "மர்மமான" ரிம39.7 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்திருந்ததாக கூறப்படும் பிரச்சனை குறித்து முன்னாள் துணைக் கல்வி அமைச்சர் பி. கமலநாதன் இன்று எதிர்வினையாற்றினார். ஒதுக்கீடு செய்யப்பட்ட சரியான தொகை ரிம36 மில்லியன். இந்த ஒதுக்கீட்டை பிஎன்-னிடமிருந்து நிருவாகத்தை ஏற்றுக்கொண்ட…
நாடாளுமன்றத்தில் சவப் பெட்டியுடன் Icerd-எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்
மலாய்- முஸ்லிம் என்ஜிஓகளைச் சேர்ந்த சுமார் 100 பேர், மலேசியா அனைத்துலக இனப் பாகுபாடு ஒழிப்பு ஒப்பந்த( Icerd)த்தில் கையொப்பமிடுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டம் செய்தனர். நாடாளுமன்றத்தின் தலைவாயிலுக்கு ஒரு கிலோ மீட்டர் தொலைவில் கூடிய அவர்கள், இன, சமய இறையாண்மைக்கு மிரட்டலாக அமையும் முயற்சிகளை எதிர்க்க முஸ்லிம்களும்…
மகாதிர்: Icerd-இல் கையொப்பமிடுவதற்குமுன் எல்லா இனங்களுடனும் விவாதிக்கப்படும்
அரசாங்கம் அனைத்துலக இனப் பாகுபாடு ஒழிப்பு ஒப்பந்த(Icerd)த்தில் கையொப்பமிடுவதற்குமுன் அது குறித்து நாட்டில் உள்ள எல்லா இனங்களுடனும் விவாதிக்கும் எனப் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் கூறினார். மலேசியா பல்லினங்கள் வாழும் நாடு என்பதால் அந்த ஒப்பந்தத்தை ஏற்பது அவ்வளவு எளிதல்ல என்று முன்பே தாம் குறிப்பிட்டிருப்பதாக அவர்…
தோக் பா ஹரப்பான் பிரதிநிதியாக கிளந்தான் சட்டமன்றக் கூட்டத்தில் கலந்து…
கிளந்தான் சட்டமன்றக் கூட்டத்தில் இரண்டு நாள் கலந்துகொள்ளாத முஸ்தபா முகம்மட் இன்று அதில் கலந்து கொண்டார், அதுவும் பக்கத்தான் ஹரப்பான் பிரதிநிதியாக. கிளந்தான் சட்டமன்றத்தில் உள்ள ஒரே ஹரப்பான் பிரதிநிதி அவர் மட்டுமே. அம்னோ உச்சமன்ற உறுப்பினராக இருந்த ஆயர் லானாஸ் சட்டமன்ற உறுப்பினர் செப்டம்பரில் அக்கட்சியிலிருந்து விலகி…
பொதுப் பல்கலைக்கழகங்களில் அரசியல் கட்சிகள் கிளைகளை அமைக்கலாம்
பல்கலைக்கழக, பல்கலைக்கழகக் கல்லூரிகள் சட்டம் (யுயுசிஏ) திருத்தம் செய்யப்பட்டதும் அரசியல் கட்சிகள் பொதுப் பல்கலைக்கழகங்களில் கிளைகளை அமைக்க முடியும் எனக் கல்வி அமைச்சர் மஸ்லி மாலிக் கூறினார். வாக்களிப்பு வயதை 18க்குக் குறைக்க உத்தேசிக்கப்பட்டிருப்பதால் அதற்கேற்ப யுயுசிஏ-இலும் திருத்தம் செய்யப்பட விருப்பதாக அவர் சொன்னார். “யுயுசிஏ-இல் திருத்தங்கள் செய்யப்படுவதால்…
அரசு மருத்துவமனைகளில் துப்புரவுத் தொழிலாளர்களுக்குத் தொழிற்சங்கம், இரகசிய வாக்களிப்பில் வெற்றி
அரசாங்க மருத்துவமனைகளில், துப்புரவுத் தொழிலாளர்களுக்குத் தேசியத் தொழிற்சங்க அமைவிற்கான இரகசிய வாக்களிப்பு வெற்றி பெற்றுள்ளதாக, அதன் நிர்வாகப் பொதுச் செயலாளர் மு.சரஸ்வதி தெரிவித்தார். நாடு தழுவிய நிலையில் அரசு மருத்துவமனை மற்றும் கிளினிக்குகளில் பணிபுரியும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட துப்புரவுத் தொழிலாளர்களின் நலனைப் பாதுகாக்க, தேசியத் தொழிற்சங்கத்தை அங்கீகரிப்பதற்காக நடைபெற்ற இரகசிய…
முகைதின்: அல்தான்துயா கொலையில் நஜிப், ரோஸ்மா சம்பந்தப்பட்டிருந்தால் போலீஸ் நடவடிக்கை…
மங்கோலியப் பெண் அல்தான்துயா கொலையில் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் மற்றும் அவரது துணவியார் ரோஸ்மா மன்சோர் சம்பந்தப்பட்டிருந்தால் போலீஸ் தக்க நடவடிக்கை எடுக்கும் என்று உள்துறை அமைச்சர் முகைதின் யாசின் இன்று நாடாளுமன்றத்தில் உறுதியளித்தார். ராம்கர்பால் சிங் நேற்று போலீஸ் நஜிப்பையும் ரோஸ்மாவையும் விசாரணைக்கு உட்படுத்த…
ஹிஷாமுட்டின் : ‘ஜோ லோ-வைக் கண்டுபிடிக்க நினைத்தது, எம்ஏசிசி-யிடமிருந்து தப்பிக்க…
சீனாவில் இருக்கும் சர்ச்சைக்குரிய தொழிலதிபர் லோ தைக் ஜோ அல்லது ஜோ லோவைக் கண்டுபிடிப்பதில் அரசாங்கத்திற்கு உதவுவதுதான் தனது நோக்கம், மாறாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) விசாரணைகளிலிருந்து தப்பிக்க அல்ல என ஹிஷாமுட்டின் ஹுசேன் வலியுறுத்தினார். முன்னாள் பாதுகாப்பு அமைச்சரான அவர், ஒருசிலர் கூறுவதுபோல், எம்ஏசிசி…
ஹரப்பான் அரசில் ஊழல் இருந்தால் புகார் செய்வீர்: மகாதிர் வலியுறுத்து
பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் பக்கத்தான் ஹரப்பான் அரசாங்கத்தில் ஊழல் இருந்தால் பொதுமக்கள் அது குறித்து புகார் செய்வதை ஊக்குவிக்கிறார். ஊழல் குறித்து தகவல் அளிப்போருக்குப் பாதுகாப்பு வழங்கப்படும். “இப்போது முந்தைய அரசாங்கத்தின் ஊழல்கள்மீதுதான் கவனம் செலுத்தப்படுகிறது. ஆனால், புதிய அரசில் ஊழல் நடப்பது தெரிந்தால் மக்கள் தெரிவிப்பதற்கு…
‘பிஜான், ஹெர்மெஸ் போன்றவற்றை வாங்கவில்லை என்றால் – இலவசக் கல்வியைக்…
முன்னாள் பிரதமர் நஜிப் இரசாக் மற்றும் கல்வி அமைச்சர் டாக்டர் மஸ்லீ மாலிக் இருவரும், நாட்டில் இலவசக் கல்விப் பிரச்சினையைப் பற்றி தொடர்ந்து கேலியாக வாதிட்டு வருகின்றனர். "பிஜான், ஹெர்மஸ் போன்ற கைப்பைகளையும் வைர மோதிரங்களையும் நம் மனைவிகளுக்கும் குடும்பத்தாருக்கும் வாங்க, மக்கள் பணத்தை நாம் செலவிடாமல் இருந்திருந்தால்,…
கேள்வி நேரத்தின்போது அமைச்சர் அல்லது துணை அமைச்சர் அவையில் இருந்தாக…
மக்களவை கேள்வி-பதில் நேரத்தின்போது அமைச்சர் அல்லது துணை அமைச்சர் அவையில் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்று அவைத்தலைவர் முகம்மட் அரிப் முகம்மட் யூசுப் புதிய விதி செய்தார். “அவை நிலை ஆணைகளின்படி ஒரு கேள்விக்கு அதனுடன் சம்பந்தப்பட்ட அமைச்சரோ அல்லது துணை அமைச்சரோதான் பதிலளிக்க வேண்டும்”, என்றாரவர். வீ…
முன்னாள் எம்ஏசிசி தலைவர்: 2015-இல் ரிம2.6 பி. மீதான விசாரணை…
நிர்வாகம், நேர்மை, ஊழல்தடுப்பு மீதான தேசிய மையத்தின் தலைவர் அபு காசிம் முகம்மட், 2015=இல் ரிம2.6 பில்லியன் “நன்கொடை” மீது எம்ஏசிசி விடுத்த அறிக்கை அவசரம் அவசரமாக விடுக்கப்பட்ட ஒன்று என்றார். அப்போது எம்ஏசிசி தலைவராக இருந்த அபு காசிம், அறிக்கை விடுக்கப்பட்ட வேளை விசாரணை முழுமை அடையாதிருந்தது…
தஞ்சோங் காராங் பிகேஆர் தேர்தலில் குழப்பம்: எழுவர் கைது
கடந்த ஞாயிற்றுக்கிழமை தஞ்சோங் காராங் பிகேஆர் கிளைத் தேர்தல்களில் குழப்பம் விளைவித்ததன் தொடர்பில் போலீஸ் எழுவரை தடுத்து வைத்துள்ளது. குழப்பம் விளைவித்ததாக சந்தேகிக்கப்படும் அவ் வெழுவரும் அதே நாளில் கைது செய்யப்பட்டதாக கோலா சிலாங்கூர் மாவட்ட போலீஸ் தலைவர் முகம்மட் அஸ்ரி அப்துல் வகாப்பை மேற்கோள்காட்டி த ஸ்டார்…
ஷாபியின் அரசதந்திர கடப்பிதழ் இரத்து செய்யப்பட்டது
வழக்குரைஞர் முகம்மட் ஷாபி அப்துல்லாவின் அரசதந்திர கடப்பிதழை வெளியுறவு அமைச்சு கடந்த செப்டெம்பர் 19 இல் இரத்து விட்டது. எழுத்து மூலமான நாடாளுமன்ற பதிலின்படி, ஷாபிக்கு இரு முறை, 2009 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில், அரசதந்திர கடப்பிதழ் கொடுக்கப்பட்டிருந்தது. 2009 ஆம் ஆண்டில், ஆசியான் மனித…
பண அரசியல் விசயத்தில் பிகேஆர், பிஎன் போன்றா நடந்து கொள்வது-…
அம்பாங் பிகேஆர் தொகுதித் தலைவர் ஜுரைடா கமருடின் நடப்பு பிகேஆர் தேர்தலில் பண அரசியல் பரவியிருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கு எதிராகக் கட்சித் தலைவர்கள் முனைப்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இன்று நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஜுரைடா, முறையான புகார்கள் செய்யப்பட்டாலொழிய நடவடிக்கை எடுக்க இயலாது…
வைரமென்று நினைத்தது கண்ணாடிக் கல்லானதே- முஸ்தபா குறித்து அம்னோ சட்டமன்ற…
ஜெலி எம்பி முஸ்தபா முகம்மட் பெர்சத்துவில் சேர்ந்தது பற்றிக் குறிப்பிட்ட கிளந்தான் சட்டமன்ற எதிரணித் தலைவர் முகம்மட் அல்வி சே அஹமட், “kusangka kau permata, rupanya kaca (வைரமென்று நினைத்தேனே கண்ணாடிக் கல்லானதே) என்று அங்கலாய்த்தார். இன்று கோட்டா பாருவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முஸ்தபா ஏற்கனவே…
இந்தோனேசியாவில் விமானம் கடலில் விழுந்தது: 188 பயணிகள் இறந்திருக்கலாம் என…
இந்தோனேசிய தலைநகர் ஜாகார்த்தாவிலிருந்து 188 பயணிகளுடன் பயணப்பட்ட லயன் விமான நிறுவனத்துக்குச் சொந்தமான விமானமொன்று புறப்பட்ட சிறிது நேரத்தில் ஜாவாவுக்கு அப்பால் கடலில் விழுந்து நொறுங்கியதாக அதிகாரிகள் அறிவித்தனர். புறப்பட்ட 13 நிமிடங்களில் விமானத்துடனான தொடர்புகள் அறுந்து போனதாகவும் இழுவைப் படகு ஒன்று விமானம் கடலில் விழுவதைக் கண்டதாகவும்…
























