விளம்பரப் பலகையிலிருந்து 60 வினாடிகளில் மகாதிரின் படம் அகற்றப்பட்டது

  ஆயர் ஈத்தாம் நாடாளுமன்ற தொகுதியில் ஒரு பெரிய விளம்பரப் பலகையில் ஒட்டப்படிருந்த பக்கத்தான் ஹரப்பான் தலைவர் மகாதிர் முகமட்டின் படத்தை அமலாக்க அதிகாரிகள் ஒரு நிமிடத்தில் வெட்டி அகற்றினர். எங்களுடைய விளம்பரம் ஒட்டப்படும் பலகையில் மகாதிரின் படம் இருக்கக்கூடாது எங்களுக்கு கூறப்பட்டது. மகாதிரின் படத்தை விளம்பரம் ஒட்டும்…

பத்துவில் ஹரப்பான் ஆதரவாளர்கள் யாருக்கு வாக்களிப்பதென்று குழம்புகின்றனர்

பத்து  எம்பி   தியான்  சுவா   எதிர்வரும்   14வது   பொதுத்   தேர்தலில்     போட்டியிட  முடியாதென்று  நிராகரிக்கப்பட்டிருப்பதை    ஏற்றுக்கொள்ள    முடியாத    அவரின்   ஆதரவாளர்கள்   இனி   எப்படி  வாக்களிப்பது    என்று   புரியாமல்    குழம்பிப்  போயுள்ளனர். மலேசியாகினி   சந்தித்த  வாக்காளர்களில்   சிலர்   தாங்கள்   வாக்களிக்கப்  போவதில்லை   என்றார்கள்.  இன்னும் சிலர்   சுவாவின்   மனு   நிராகரிக்கப்பட்டதற்குக்  …

வேட்புமனு நிராகரிக்கப்பட்டதற்காக இசிமீது தியான் சுவா வழக்கு

பிகேஆர்   உதவித்    தலைவர்   தியான்  சுவா,    பத்து   நாடாளுமன்றத்   தொகுதி   வேட்பாளராக  போட்டியிடுவதைத்   தடுத்த   தேர்தல்    அதிகாரிக்கு    எதிராக    நீதிமன்றத்தில்   வழக்கு    தொடுத்துள்ளார். அரசமைப்பு     பகுதி 48(1)-இன்படி    பத்து   தொகுதியில்   போட்டியிடும்   தகுதி    தமக்குண்டு    என   நீதிமன்றம்  அறிவிக்க    வேண்டும்  என்று  தியான்  தம்  மனுவில்   கேட்டுக்கொண்டிருக்கிறார்   என  …

வேட்பாளர் நியமன மைய விவகாரம்: இசி போலீஸ் விசாரணைக்குக் காத்திருக்கிறது

தேர்தல்    ஆணையம் (இசி) வேட்பாளர்  ஒருவர்   வேட்புமனு   தாக்கல்    செய்ய   அனுமதிக்கப்படாதது  குறித்து   இப்போதைக்குக்    கருத்துத்   தெரிவிக்காது.  அச்சம்பவம்  தொடர்பில்   முழு    அறிக்கை   கிடைக்க  வேண்டும்,  போலீஸ்  விசாரணையும்  நடத்தப்பட   வேண்டும்,    அதன்  பின்னரே   இசி  அறிக்கை   வெளியிடும். இசி  தலைவர்  முகம்மட்  ஹஷிம்,   சில   தரப்புகள்   போலீஸ் …

பொய்ச் செய்தித் தடுப்புச் சட்டம் முதன்முதலாகப் பாய்ந்தது ஒரு வெளிநாட்டவர்மீது

பொய்ச்  செய்தித்   தடுப்புச்   சட்டத்தின்கீழ்   குற்றம்  சாட்டப்படும்   முதல்   ஆள்  டென்மார்க்   நாட்டைச்   சேர்ந்தவர்.  போலீஸ்  குறித்து   தவறான   செய்தியைக்  கூறியதாக   அவர்மீது  குற்றம்  சாட்டப்பட்டுள்ளது. ஹமாஸ்   உறுப்பினர்   ஃபாதி முகம்மட்   அல்-பட்ஷ்   இம்மாதத்   தொடக்கத்தில்   கோலாலும்பூரில்   கொலை    செய்யப்பட்டபோது   போலீசார்   சம்பவம்   நடந்த   இடத்துக்குத்   தாமதமாக   வந்ததாக …

“வாழ்வின் எல்லை, தவறுகளை சரிசெய்ய முயல்வேன்”- கண்ணீர் மல்கும் காணொளியில்…

ஒரு குறுகிய காணொளியில், இரண்டு குழந்தைகளுக்கு விளக்கம் தரும் வகையில் கண்கள் கலங்க, உரையாடும் முன்னாள் பிரதமர் மகாதீர், தான் எதற்காக இந்த அரசியல் மாற்றதிற்காக முன்வந்தார் என்பதை உணர்வுடன் காட்டுகிறது. அய்சா என்ற சிறுமியும் அவளின் அண்ணன் அடாம் என்றவனும் மகாதீருடன் உரையாடும் வகையில் காட்சி அமைந்துள்ளது.…

கிளேருக்கு எதிரான ஹாடியின் வழக்கு திங்கள்கிழமை தொடங்குகிறது

  சரவாக் ரிப்போர்ட் ஆசிரியர் கிளேர் ரியுகாஸலுக்கு எதிராக பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் லண்டனில் தொடர்ந்துள்ள அவதூறு வழக்கு லண்டனில் நாளை (திங்கள்கிழமை) தொடங்குகிறது. வழக்கில் வெற்றி பெரும் என்பதில் பாஸுக்கு 80 விழுக்காடு நம்பிக்கை இருக்கிறது என்று ஹாடி கூறுகிறார். வழக்கு திங்கள்கிழமை தொடங்குகிறது.…

விமானத்தில் சதிவேலை உண்மையே: மீண்டும் வலியுறுத்துகிறார் மகாதிர்

பக்கத்தான்  ஹரப்பான்   தலைவர்    டாக்டர்   மகாதிர்    முகம்மட்,      லங்காவிக்குச்  செல்ல  ஏற்பாடு   செய்திருந்த   தனியார்   ஜெட்  விமானத்தில்   நாச  வேலைகள்   நடந்திருப்பதாக  தாம்   கூறுவது   உண்மைதான்   என்பதை   மறுபடியும்   வலியுறுத்தியுள்ளார். நேற்றிரவு   லங்காவியில்   ஒரு   செராமாவில்    பேசிய     அவர்,   மலேசிய   சிவில்   விமானப்  போக்குவரத்து    வாரியம்(சிஏஏஎம்)கூட   விமானத்தின்  முன் …

தன்னுடைய தொகுதியில் பாஸ் போட்டியிடாதது குறித்து மலாக்கா சிஎம் -முக்கே…

மலாக்காவில்,  மலாய்  வாக்காளர்கள்  உள்ள   இடங்களில்   எல்லாம்    போட்டியிடும்  கங்கணத்துடன்   களமிறங்கியுள்ளது   பாஸ். ஆனால்,  அக்கட்சி  இட்ரிஸ்  ஹருன்  தொகுதியான  சுங்கை   ஊடாங்கில்   தனது   வேட்பாளரை  நிறுத்தவில்லை.  80விழுக்காடு   மலாய்  வாக்காளர்களைக்   கொண்ட    அத்தொகுதியில்   அது  போட்டியிடாதது  மலாக்கா   பராமரிப்பு   முதலமைச்சருக்கே    வியப்பளித்தது. அது  குறித்து   அவரிடம்  வினவியதற்கு   …

ஜெயக்குமார் : சுங்கை சிப்புட் நாடாளுமன்றம் பாரிசானுக்கு பிகேஆரின் பரிசு

புதிய அரசாங்கத்தை உருவாக்க, ஹராப்பான் கூட்டணிக்கு ஆதரவை வெளிப்படுத்திய போதிலும், சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் அக்கூட்டணியின் போக்கு, ஏமாற்றமளிப்பதாக டாக்டர் மைக்கேல் ஜெயக்குமார் தெரிவித்தார். பக்காத்தான் ஹராப்பான் சார்பில் வேட்பாளரை நிறுத்த வேண்டாமென ஜெயக்குமார் வேண்டுகோள் விடுத்த போதிலும், பிகேஆர் ஒரு வேட்பாளரை இன்று நியமனம்…

தேர்தல் ஆணையம்: வேட்பாளர் நியமனம் பற்றிய முடிவுகள் மீது அதிருப்தி…

  நியமனத் தினத்தன்று எடுக்கப்பட்ட முடிவுகள் மீது அதிருப்தி அடைந்தவர்கள் அந்த விவகாரம் குறித்து நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வரவற்கப்படுகிறார்கள் என்று தேர்தல் ஆணையத்தின் தலைவர் முகமட் ஹசிம் அப்துல்லா கூறினார். பிகேஆர் உதவித் தலைவர் தியன் சுவாவின் நியமனப் பத்திரங்கள் இன்று நியமன மையத்தில் நிராகரிக்கப்பட்டது பற்றி…

தேர்தலோ தேர்தல், இறுதிச் சுற்று:  தியன் சுவா, நம்பிக்கை இழக்காதீர்

  பத்து நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட தகுயற்றவராக அறிவிக்கப்பட்ட பிகேஆர் உதவித் தலைவர் தியன் சுவா ஏமாற்றமடைந்திருக்கும் தமது ஆதரவாளர்களை நம்பிக்கை இழந்துவிட வேண்டாம் என்று டிவிட்டர் வழியாகக் கேட்டுக் கொண்டார். நமது தேர்தலைத் திருடுவதற்கு பிஎன் கொள்ளைக்காரவாதிகளை நாம் அனுமதிக்கக்கூடாது. பிஎன்-னுக்கு எதிரான நமது எழுச்சிமிக்க போராட்டத்தைத்…

தேர்தலோ தேர்தல் 111: களம் காண்பதற்கு முன்பே தகுதியிழந்த ஹரப்பான்…

பக்கத்தான்  ஹரப்பான்   வேட்பாளர்களில்    குறைந்தது  நால்வர்   போட்டியில்   குதிப்பதற்கு  முன்பே     தகுதி   இழந்து  விட்டார்கள். அவர்களில்   குறிப்பிடத்தக்கவர்  பத்து    தொகுதியில்     போட்டியிடவிருந்த    பிகேஆர்   உதவித்    தலைவர்   தியான்   சுவா.  10   ஆண்டுகள்   அத்தொகுதியில்  நாடாளுமன்ற  உறுப்பினராக    இருந்து   வந்துள்ளவர். கடந்த   மாதம்   ஒரு   வழக்கில்       ரிம2,000   தண்டம்   விதிக்கப்பட்டதுதான்    …

தேர்தலோ தேர்தல்-11: பாபாகோமோ போட்டிபோடவில்லை

14வது   பொதுத்   தேர்தலில்   போட்டியிடப்  போவதில்லை   என்று   அதிகாரப்பூர்வமாகவே    அறிவித்துள்ளார்  வலைப்பதிவர்   பாபாகோமோ. இன்று  காலை  மலேசியாகினிக்கு    அனுப்பிவைத்த    செய்தியில்   பாபாகோமோ    என்ற   பெயரில்   பிரபலமாக   விளங்கும்   வான்   முகம்மட்  அஸ்ரி,  மசீச   வேட்பாளர்   லியோங்   கொக்  வீ-க்கு  இடம்விட்டு    ஒதுங்கிக்  கொள்வதாகக்  கூறினார். இதற்குமுன்  அவர்,  பிகேஆர்  …

தேர்தலோ தேர்தல்: தியான் சுவா தேர்தலில் போட்டியிட முடியாது

இன்று  14வது   பொதுத்   தேர்தலுக்கு   வேட்பாளர்கள்    வேட்பு   மனு   தாக்கல்   செய்யும்     நாள். காலை   தொடங்கி   நாடெங்கிலும்    வேட்புமனு   தாக்கல்   செய்யும்   பணி  சுறுசுறுப்பாக    நடந்தது. அதேவேளை   ஆச்சரியப்பட   வைக்கும்   நிகழ்வுகளும்   நடந்தேறியுள்ளன. பிகேஆர்   உதவித்   தலைவர்   தியான்   சுவா   பத்து   நாடாளுமன்றத்   தொகுதியில்   போட்டிபோட  தகுதியில்லை  என …

அச்சமில்லை, அச்சமில்லை என்கிறார் நஜிப்பை எதிர்த்து போட்டியிடும் ஸாகிட்

  பெக்கான் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பெர்சத்து வேட்பாளர் ஸாகிட் முகமட் அரிப் கடும் விளைவுகளை எதிர்நோக்கக்கூடும் என்று அவரது நண்பர்களால் எச்சரிக்கப்பட்டிருந்தும் அவர் அதை பொருட்படுத்தவில்லை. இந்த எச்சரிக்கைகள் நஜிப்புக்கு எதிராக தம்மை போட்டியிட கட்சி தமக்கு இட்ட உத்தரவுகளை ஏற்றுக்கொள்வதலிருந்து தம்மை மாற்றவில்லை என்று ஸாகிட்…

நஜிப் : புதிய அரசாங்கத்தில் சீனப் பிரதிநிதித்துவம் இல்லை என்றால்,…

“அமைச்சரவை அல்லது அரசாங்கத்தில், சீனர்களின் பிரதிநிதித்துவம் இல்லாமல் போனால் அல்லது மிகச் சிறிய அளவில் இருந்தால், அது ஒரு சோக நாளாக அமையும்”. 14-வது பொதுத் தேர்தலில், பாரிசான் நேஷனலின் பிரதிநிதிகளான சீன வேட்பாளர்களைப் புறக்கணிக்கும் சீன வாக்காளர்களுக்கு நஜிப் ரசாக்கின் செய்தி இதுவாகும். சீன வேட்பாளர்களைப் புறக்கணித்து,…

மகாதிர் பயன்படுத்தவிருந்த ஜெட் விமானத்தின் டயர்களில் கோளாறு, சதி வேலையா?

  மகாதிர் பயன்படுத்தவிருந்த தனியார் ஜெட் விமானத்தில் நாசவேலை நடந்திருக்கலாம் என்று அவர் கூறிக்கொண்டார். மகாதிரும் அவரது துணைவியார் சித்தி ஹாஸ்மாவும் பெட்டாலிங் ஜெயா சுபாங் விமானநிலையத்திலிருந்து லங்காவிக்குச் செல்லவிருந்தனர். ஆனால் அவர் பயன்படுத்தவிருந்த ஜெட் விமானத்தின் டயர்களில் ஏதோ பிரச்சனைகள் இருப்பதாக அவருக்குத் தெரிவிக்கப்பட்டது என்று மகாதிர்…

சுஹாகாம் தேர்தலைக் கண்காணிப்பது தவறானதும் தேவையற்றதும் ஆகும், தேர்தல் ஆணையம்…

  14 ஆவது பொதுத் தேர்தலைக் கண்காணிக்க மலேசிய மனித உரிமைகள் ஆணையத்தை அனுமதிப்பது தவறு என்பதோடு அது தேவையற்றது என்று தேர்தல் ஆணையம் கூறுகிறது. பொதுத் தேர்தலைக் கண்காணிக்க சுஹாகாமை அனுமதிக்க மறுத்து விட்டதால் தேர்தல் ஆணையம் கடும் விமர்சனத்திற்கு உட்படுத்தப்பட்டது. அவற்றுக்கு பதில் அளித்த ஆணையத்தின்…

பொய்ச் செய்தி எதிர்ப்புச் சட்டம் அரசமைப்புச் சட்டத்திற்கு முரணானது, மலேசியாகினி…

  சமீபத்தில் இயற்றப்பட்ட பொய்ச் செய்தி எதிர்ப்புச் சட்டம் 2018 அரசமைப்புச் சட்டத்திற்கு முரணானது என்றும் அச்சட்டத்தை நீக்கக் கோரும் ஒரு நீதிபரிபாலன மறுஆய்வுக்கு அனுமதி கோரும் மனுவை இன்று மலேசியாகினி நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. இச்சட்டம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் இதர அரசு சார்பற்ற அமைப்புகளால் கடுமையாக…

கட்சியைக் கலைக்கும் 16 அம்னோ உறுப்பினர்களின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது

  கட்சியிருந்து நீக்கப்பட்ட 16 அம்னோ உறுப்பினர்களின் மன்றங்கள் பதிவாளருக்கு (ரோஸ்) எதிரான நீதிபரிபாலன மறுஆய்வுக்காக அனுமதி கோரும் மனுவை கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது. மன்றங்கள் சட்டம் 1966, செக்சன் 18சி கட்சியின் உறுப்பினர்கள் கட்சித் தகராறை நீதிமன்றத்திற்கு கொண்டு செல்ல முடியாது என்று கூறுகிறது…

மலேசியாகினி இரண்டு வாரங்களுக்கு இலவச செய்தி வழங்கும்

  கடந்த பொதுத் தேர்தல்கள் போல, இன்றிலிருந்து அடுத்த இரண்டு வாரங்களுக்கு மலேசியாகினி செய்திகள் இலவசமாக வழங்கப்படும். மலேசியாகினி சந்தாதாராக இல்லாதவர்கள் அதன் செய்திகள் மற்றும் கருத்துப் பதிவுகளைத் தெரிந்துகொள்வதற்கு தங்களுடைய இ-மெயில் முகவரியைப் பதிவு செய்து கொண்டால் போதுமானது. மலேசியாகினி சந்தாதார்களுக்கு அவர்களின் தற்போதைய சந்தா இரண்டு…

தேர்தலைக் கண்காணிக்க சுஹாகாம் விடுத்த வேண்டுகோளை தேர்தல் ஆணையம் நிராகரித்தது

  14 ஆவது பொதுத் தேர்தலை கண்காணிப்பதற்கான "தேர்தல் கண்காணிப்பாளர்" அங்கீகாரத்தைப் பெறுவதற்காக மலேசிய மனித உரிமைகள் கழகம் (சுஹாகாம்) மேற்கொண்ட முயற்சியில் தோல்வியுற்றது. இந்த அனுமதி மறுப்பினால் சுஹாகாம் உறுப்பினர்கள் வாக்களிப்பு நிலையங்களுக்குள் செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள். இதை தங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை, ஏனென்றால் தேர்தலின்…