பூமிபுத்ரா நிறுவனங்கள் மீண்டும் அடிப்படை வணிக நடைமுறைகளுக்குத் திரும்ப வேண்டும் என்று அரசாங்க முகமை ஒன்று தெரிவித்துள்ளது. பல நிறுவனங்களில் நிலவும் மோசமான நிர்வாகம், அவை தங்கள் வணிகத்தை விரிவுபடுத்துவதற்காகக் கடன் பெறுவதைத் தடுப்பதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஆண்டுக்கு ஒரு மில்லியன் ரிங்கிட்டிற்கும் அதிகமான விற்பனையை ஈட்டும் சில நிறுவனங்கள்…
இடதுசாரி அரசியலே மக்களின் தேர்வு : பி.எஸ்.எம். தேசிய மாநாடு
மலேசிய சோசலிசக் கட்சியின் (பி.எஸ்.எம்.) 19-வது தேசிய மாநாடு, ‘இடதுசாரி அரசியலே மக்களின் தேர்வு’ எனும் கருப்பொருளோடு இன்று தொடங்கியது. இவ்வாண்டு மாநாடு ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட ஒன்று. 14-வது பொதுத் தேர்தலில் போட்டியிடப்போகும் தொகுதிகள் மற்றும் வேட்பாளர்கள் யார் யாரெனக் கலந்துபேசி, முடிவெடுக்கப்படும் எனக் கட்சியின் தலைமைச் செயலாளர்…
மலேசியரான பிரபாகரனுக்கு சிங்கப்பூரில் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டது
போதைப் பொருள் கடத்தலுக்காக மரண தண்டனை விதிக்கப்பட்ட மலேசியரான எஸ்.பிரபாகரன் இன்று காலை சிங்கப்பூரில் தூக்கிலிடப்பட்டார். ஜோகூர் பாருவைச் சேர்ந்த 29-வயது பிரபாகர் காலை 6மணிக்கு சாங்கி சிறையில் தூக்கிலிடப்பட்டார். காலை மணி 10க்கு அவருடைய உடலை அவரின் குடும்பத்தார் பெற்றுக்கொண்டதாக மலேசியன் இன்சைட் கூறியது. தண்டனையை நிறுத்திவைக்க …
1எம்டிபி: சிங்கப்பூரில் ஒருவர் சிறையிடப்பட்டார், மலேசியாவில் எந்த நடவடிக்கையும் இல்லை;…
மலேசியாவில் 1எம்டிபி விசாரணைகளில் இதுவரை எந்தவொரு முடிவும் தெரியவில்லை. ஆனால், சிங்கப்பூரில் ஒருவர் சிறையிடப்பட்டிருக்கிறார். இது ஏன் என்று சட்டத்துறைத் தலைவர் (ஏஜி) விளக்க வேண்டும். “மற்ற நாடுகளில் புலன் விசாரணை முடிந்து வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. “குற்றவாளிகள் என்று கண்டுபிடிக்கப்பட்டவர்கள் தண்டனை அனுபவிக்கிறார்கள். ஆனால், இங்கு எதுவுமே தொடங்கவில்லை.…
அம்னோ “திருடர்கள் கட்சி”, சாட்சிக் கூண்டிலிருந்து மகாதிர் தாக்குகிறார்
முன்னாள் பிரதமர் மகாதிர் இன்று பின்னேரத்தில் கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சாட்சியமளித்த போது பிரதமர் நஜிப் மீது பீரங்கித் தாக்குதல் நடத்தினார். மகாதிரின் கருத்துப்படி, தற்போதைய தலைவரின் கீழ் அம்னோ ஒரு "கொள்ளைக்காரர்கள் மற்றும் திருடர்கள்" கட்சி ஆகியுள்ளது. இதன் காரணமாக, நஜிப்பை அதிகாரத்திலிருந்து நீக்க விரும்புவதை மகாதிர்…
அரசாங்கம் கொடூரமானதா? எதிர்க்கட்சிகளைச் சாடினார் பிரதமர்
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், அரசாங்கத்தை ஈவிரக்கமற்றது என்று சித்தரிக்கும் எதிரணியினரைக் கடிந்து கொண்டார். அரசாங்கம் எதிர்க்கட்சிகளின் ஆட்சியில் உள்ள மாநிலங்களைப் புறக்கணிப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கு எதிர்வினையாற்றிய பிரதமர், எதிரணி உண்மையைச் சொல்வதில்லை என்றார். “ஒவ்வோர் ஆண்டும் அரசாங்கம் எதிரணி வசமுள்ள மாநிலங்கள் உள்பட எல்லா மாநிலங்களுக்கும் நிதி …
குற்றங்களிலிருந்து விலகி இருக்க வேண்டும் என்பதை உணர்த்தவே பொது இடத்தில்…
சமுதாயத்துக்கு அது ஒரு பாடமாக அமைய வேண்டும் என்பதற்காகவே கிளந்தானில் பொதுமக்கள் முன்னிலை பிரம்படி தண்டனை கொடுக்கப்படுகிறது என பாஸ் தகவல் லைவர் நஸ்ருடின் ஹசான் கூறினார். கிளந்தானில் பாஸ் அரசு, ஷியாரியா குற்றங்களுக்குப் பொது இடத்தில் பிரம்படி கொடுக்க ஷியாரியா சட்டத்தில் திருத்தத்தைக் கொண்டு வந்துள்ளது. இஸ்லாத்தில் …
கைதியைத் தப்பவிட்ட வழக்கில் போலீசார் எண்மரும் பிணையில் விடுதலை
போலீஸ் காவலிலிருந்த கைதி தப்பியோடிய வழக்கில் விசாரணைக்கு உதவியாக தடுத்து வைக்கப்பட்டிருந்த எட்டுப் போலீசாரும் அவர்களின் தடுப்புக் காலம் முடிவுக்கு வந்ததை அடுத்து பிணையில் விடுவிக்கப்பட்டனர். 27க்கும் 59 வயதுக்குமிடைப்பட்ட அவ்வெண்மரும் வழக்கு தொடர்பான விசாரணை முடியும்வரை பணி இடைநீக்கம் செய்யப்பட்டிருப்பதாக பினாங்கு போலீஸ் தலைவர் சுவா கீ …
ஆட்சியைப் பிடித்த 100 நாள்களுக்குள் ஜிஎஸ்டி அகற்றப்படும், ஹரப்பான் சூளுரைக்கிறது
புத்ரா ஜெயாவைக் கைப்பற்றிய முதல் 100 நாள்களுக்குள் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் பட்டியலை ஹரப்பான் இன்று வெளியிட்டது. ஹரப்பான் கூட்டணியின் கூட்டறிக்கையை புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அதன் அவைத்தலைவர் மகாதிர் முகமட் வாசித்தார். அத்திட்டத்தில் இடம்பெற்றுள்ளவற்றில் பொருள்கள் மற்றும் சேவைகள் வரி (ஜிஎஸ்டி) அமலாக்கம் இரத்து செய்யப்படுவது ஒன்றாகும். ஹரப்பான்…
அன்வாருக்கு பயந்து அல்ல, நஜிப்பை அழிப்பதற்காகப் பல்டி அடித்தேன், மகாதிர்…
முன்னாள் பிரதமர் மகாதிர் கட்சி மாறியதைத் தொடர்ந்து அவரது எதிரிகள் அவர் பல 180 பாகை பல்டிகளை அடித்து வருகிறார் என்று அவரை சாடுகின்றனர். மிக அண்மையக் குற்றச்சாட்டு, பக்கத்தான் ஹரப்பான் பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றால் அன்வாருக்கு அரச மன்னிப்பு பெற்று அவரை பிரதமர் வேட்பாளராக்குவதற்கு…
பிரபாகரன் நாளை தூக்கிலிடப்படுவார்
சிங்கப்பூரில் மரண தண்டனை வித்திக்கப்பட்டிருக்கும் எஸ். பிரபாகரன், 29, நாளை காலையில் தூக்கிலிடப்படுவார். தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரும் அவரது மனுவை சிங்கப்பூர் மேல்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்து இன்று மாலை மணி 5 அளவில் தீர்ப்பளித்தது என்று பிரபாகரனின் வழக்குரைஞர் என். சுரேந்திரன் கூறினார். பிரபாகரன் வழக்கு…
கிட் சியாங்: நாடாளுமன்றத்தில் 1எம்டிபி சிறப்பு விவாதத்தை நஜிப் நடத்த…
சிங்கப்பூர் பிரதமர் லீ ஹிசியான் லூங்கைப் பாருங்கள். அவரைப் போல் மலேசிய நாடாளுமன்றத்தில் 1எம்டிபி மீது ஒரு விவாதத்தை மூன்று நாள்களுக்கு நடத்த ஏற்பாடு செய்யும்படியும், அதில் கலந்துகொள்ள தொழில் அதிபர் ஜோ லோவை அழைக்கும்படியும் பிரதமர் நஜிப்பை டிஎபியின் மூத்த தலைவர் லிம் கிட் சியாங்…
மதம் மாறுவோருக்கு ஜாக்கிம் உதவிச் சம்பளத் திட்டம்
மலேசிய இஸ்லாமிய மேம்பாட்டுத் துறை (ஜாக்கிம்), முஸ்லிம்களாக மதம் மாறியவர்கள் கல்வியைத் தொடர்வதற்கு பெர்லிஸ் இஸ்லாமிய சமய, மலாய் பழக்கவழக்க மன்றம் (மைப்ஸ்) அளிக்கும் உதவிகளை மேலும் விரிவுபடுத்த விரும்புகிறது. ஜாக்கிம் தலைமை இயக்குனர் ஒத்மான் முஸ்தபா, மதம் மாறியவர்கள் கல்வியைத் தொடர உதவும் மைப்ஸின் மேலான முயற்சிகளை …
பொதுப் பிரம்படி: நஸ்ரி விளம்பரப்படுத்த ஒரு ‘புதுக் கவர்ச்சி அம்சம்’…
கிளந்தான் சட்டமன்றத்தில், பகிரங்க பிரம்படித் தண்டனை வழங்க அனுமதியளிக்கும் ஷியாரியா சட்டவரைவு நிறைவேற்றப்பட்டிருப்பது குறித்து கருத்துரைத்த முன்னாள் தகவல் அமைச்சர் சைனுடின் மைடின், அதை ஒரு “புதுச் சுற்றாலாக் கவர்ச்சி அம்சமாக” சுற்றுலா, பண்பாட்டு அமைச்சர் முகம்மட் நஸ்ரி அப்துல் அசீஸ் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றார். சவூதி அராபியாவிலும் …
மஇகா முஸ்லிம்களிடம் பாகுபாடு காட்டுகிறதா? அப்படி எதுவும் இல்லை என்கிறார்…
தொகுதி இளைஞர் தலைவர் ஒருவர் மஇகாவில் முஸ்லிம்களிடம் பாகுபாடு காட்டப்படுவதாகக் கூறியிருப்பதை அபத்தமான பேச்சு என்று மஇகா தலைவர் சி.சிவராஜ் நிராகரித்துள்ளார். “அது உண்மை அல்ல. கட்சியில் 10 விழுக்காட்டுக்குமேல் முஸ்லிம்கள் உள்ளனர்.......அப்படி எதுவும் நடந்ததில்லை”, என சிவராஜ் மலேசியாகினியிடம் தெரிவித்தார். தெப்ராவ் மஇகா இளைஞர் தலைவர் முகம்மட் …
“கட்டாயப்படுத்தப்பட்டால்” டிஎபி கட்சி தேர்தலை நடத்தும்
மன்றங்கள் பதிவகம் (ரோஸ்) கட்டாயப்படுத்தினால், டிஎபி கட்சி தேர்தலை புதிதாக நடத்தும் சாத்தியத்தை இரு மூத்த டிஎபி தலைவர்கள் ஒப்புக்கொண்டனர். டிஎபி தேசிய உதவித் தலைவர் தெரசா கோ, "நாங்கள் மறு தேர்தல் நடத்த மாட்டோம் என்று சொல்லவில்லையே. 'நாங்கள் கத்தியின் முனையில் நிற்கிறோம். நாங்கள் அரசாங்கம்…
செரியானில் வெறிநாய்க்கடி நோய்க்குப் பலியானவர்களின் தந்தையிடம் ரிம60,000 நன்கொடை: துணைப்…
துணைப் பிரதமர் அஹமட் ஜாஹிட் ஹமிடி, தம் சொந்த நன்கொடையாக 60ஆயிரம் ரிங்கிட்டைக் கடந்த வாரம் வெறிநாய்க்கடி நோய்க்குப் பலியான இரு சிறுவர்களின் தந்தையான மஸ்லான் பூஜானிடம் இன்று வழங்கினார். அஹமட் ஜாஹிட் தேசிய பேரிடர் நிவாரண அமைப்பின் (நட்மா) தலைவர். அவருக்கு செரியான் மாவட்டத்தில் வெறிநாய்க்கடி நோய்ப் …
கிளந்தானில் ஷரியா சட்டம் நிறைவேற்றம்: அது அரசமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டதா?
கிளந்தான் மாநில சட்டமன்றம் நேற்று திருத்தப்பட்ட ஷரியா சட்ட மசோதாவை ஏற்றுக்கொண்டது. அச்சட்டம் குற்றவாளிகளுக்கு பொது இடத்தில் பகிரங்கமாக சவுக்கடி கொடுப்பதற்கு வகைசெய்கிறது. ஷரியா கிரிமினல் செயல்முறை சட்டம் 2002 (திருத்தம் 2017) நீதிமன்ற விசாரனையின் போது குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்களை அமலாக்க அதிகாரிகள் கைவிலங்கிடுவதற்கும் வீடியோ பதிவுகளை சாட்சியமாக…
ஒலிம்பிக் போட்டிக்கு மலேசியாவை தயார் செய்தவர் பீட்டர் வேலப்பன்!
‘ஞாயிறு’ நக்கீரன் - 13.7.2017 - மலேசியத் தமிழிலக்கியப் பூங்காவில் மணம் பரப்ப இன்னுமொரு மலர் நேற்று தலைநகரில் மலர்ந்தது. மலேசியக் கால்பந்துத் துறையில் சாதனை புரிந்த பீட்டர் வேலப்பன் பழனியப்பனின் வாழ்க்கை வரலாற்றை பாங்குற சித்திரிக்கும் இந்த நூலின் மூலம் ஆங்கிலத்தில் பீட்டர் வேலப்பனால் இயற்றப்பட்டது. அதை தமிழில்…
நீதிபதிகள் நியமனத்தைத் தற்காக்கிறார் முன்னாள் தலைமை நீதிபதி அரிப்பின்
தலைமை நீதிபதி முகமட் ராவுஸ் ஷரிப் மற்றும் மேல்முறையீட்டு தலைவர் சுல்கிப்ளி அஹமட் மாக்கினுடின் ஆகியோர் கூடுதல் நீதிபதிகளாக நியமிக்கப்பட்ட நீதித்துறை நியமன நடைமுறை பெடரல் அரசமைப்புச் சட்டத்திற்கேற்ப செய்யப்பட்டதாகும் என்று முன்னாள் தலைமை நீதிபதி அரிப்பின் ஸக்காரியா இன்று கூறினார். பேரரசரிடம் அவர்களின் நியமனத்திற்கான பரிந்துரையை…
எரிபொருள் விலை மீண்டும் விலை ஏற்றம் காண்கிறது
இன்று நள்ளிரவிலிருந்து தொடர்ந்து இரண்டாவது முறையாக எரிபொருள் சில்லரை விலை ஏற்றம் காண்கிறது. ரோன்95 விலை 4 சென் உயர்ந்து ஒரு லீட்டர் ரிம1.97 க்கு விற்கப்படும். ரோன் 97 3 சென் உயர்ந்து ஒரு லீட்டர் ரிம2.22 க்கு விற்கப்படும். டீசல் விலை 5 சென்…
மலேசிய சோசலிசக் கட்சி 19 ஆவது மாநாடு, திரண்டு வருக
மலேசிய சோசலிசக் கட்சியின் 19 ஆவது மாநாடு 14 - 16 ஜூலை, 2017 இல் நெகிரி செம்பிலான், சிரம்பானில் நடைபெறும், பொதுமக்கள் அனைவரும் திரண்டு வந்து பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்
அமைச்சர்: தடுப்புச் சட்டங்கள் பயன்படுத்துவதில் வேறுபாடு உண்டு
நாட்டின் தடுப்புச் சட்டங்கள் எல்லாக் காலங்களிலும் ஒரே மாதிரியாக பயன்படுத்தப்படவில்லை என்பதை அம்னோ அமைச்சர் ஒருவர் கவனப்படுத்தினார். வெவ்வேறு பிரதமர்களின் ஆட்சியில் வெவ்வேறு விதமாக அவை பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன. 1980-களிலும் 1990-களிலும் அரசாங்கத்தின் அதிகாரத்தை நிலைநிறுத்திக்கொள்ளவே உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டம் (ஐஎஸ்ஏ) பயன்படுத்தப்ப்பட்டது என சாலே சைட் கெருவாக் …
முழுமை பெறும் தருவாயில் பக்கத்தான் ஹராபானின் கட்டமைப்பு
பிகேஆர், பார்டி பிரிபூமி பெர்சத்து மலேசியா, டிஏபி, பார்டி அமனா நெகரா ஆகிய எதிர்க்கட்சிகளின் முக்கிய தலைவர்களைக் கொண்ட பக்கத்தான் ஹராபான் ஒரு அமைப்பாக உருப்பெறுவது, தலைவர்களின் இறுதிக்கட்ட பேச்சுக்களை அடுத்து முழுமை பெறும் நிலையில் உள்ளது. முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் கூட்டணியில் முக்கிய பங்காற்றுவார் …


