பூமிபுத்ரா நிறுவனங்கள் மீண்டும் அடிப்படை வணிக நடைமுறைகளுக்குத் திரும்ப வேண்டும் என்று அரசாங்க முகமை ஒன்று தெரிவித்துள்ளது. பல நிறுவனங்களில் நிலவும் மோசமான நிர்வாகம், அவை தங்கள் வணிகத்தை விரிவுபடுத்துவதற்காகக் கடன் பெறுவதைத் தடுப்பதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஆண்டுக்கு ஒரு மில்லியன் ரிங்கிட்டிற்கும் அதிகமான விற்பனையை ஈட்டும் சில நிறுவனங்கள்…
மரியா சின்னின் கார் ஜன்னல் உடைக்கப்பட்டது
இன்று தமது காரை ஓட்டிக்கொண்டு வரும்போது அக்காரின் ஜன்னல் கண்ணாடி உடைக்கப்பட்டது பற்றி பெர்சே தலைவர் மரியா சின் அப்துல்லா போலீஸ் புகார் செய்யவிருக்கிறார். பெட்டாலிங் ஜெயாவிலுள்ள அவரது அலுவலகத்திலிருந்து பெடரல் ஹைவேயிக்குள் திரும்பி கார் நகர்ந்து கொண்டிருக்கும் போது யாரோ ஒருவன் ஓட்டுநர் பக்கமுள்ள கண்ணாடியை…
திரேசா கொக்குக்கு ரிம350ஆயிரம் இழப்பீடு: உச்ச நீதிமன்றம் உறுதிப்படுத்தியது
2008-ஆம் ஆண்டில் உள்நாட்டு பாதுகாப்புச் சட்டத்தின் (ஐஎஸ்ஏ) கீழ் தவறாகக் கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டதற்காக டிஏபியின் சிபூத்தே நாடாளுமன்ற உறுப்பினர் திரேசா கொக்குக்கு ரிம350,000 இழப்பீடு கொடுக்கும் தீர்ப்பைக் கூட்டரசு நீதிமன்றம் இன்று நிலைநிறுத்தியது. இழப்பீடு வழங்க முறையீட்டு நீதிமன்றம் ஏற்கெனவே அளித்த தீர்ப்பை எதிர்த்து அரசாங்கம் …
முகைதின்: அம்னோ தலைவர்கள் ‘மலாய் சுனாமி’-யைக் கண்டு ஆட்டங் கண்டிருக்கிறார்கள்
அதன் கோட்டைகளாக விளங்கும் பகுதிகளில் பெருக்கெடுத்து வரும் “மலாய் சுனாமி”யின் தாக்கத்தை அம்னோவால் தாக்குப் பிடிக்க முடியாது என்கிறார் பார்டி பிரிபூமி பெர்சத்து மலேசியா (பெர்சத்து) தலைவர் முகைதின் யாசின். அம்னோ தொகுதிகளின் ஆண்டுக் கூட்டங்களில் அதன் மூத்த தலைவர்கள் தம்மீதும் பெர்சத்து மீதும் தாக்குதல் நடத்துவது வழக்கமாக …
டிஏபி செயலவை தேர்தலைத் தாமதப்படுத்தவில்லை, ஆர்ஓஎஸ் அறிவிக்கை இன்னும் வரவில்லை
டிஏபி அதன் மத்திய செயலவைத் தேர்தலை வேண்டுமென்றே தாமதப்படுத்துவதாக அபாண்டமாக பழி சுமத்துகிறார்கள் என்று கூறும் அக்கட்சியின் தேசிய சட்டப் பிரிவுத் தலைவர் கோபிந்த் சிங் டியோ, சங்கப் பதிவகத்திடமிருந்து அதிகாரப்பூர்வ அறிவிக்கை எதுவும் இன்னும் கிடைக்கப் பெறவில்லை என்றார். “இன்று காலை 10 மணிவரை எதுவும் எங்களுக்கு …
என்எஸ்டி முன்னாள் செய்தி ஆசிரியர் ஒருவரின் அனுபவங்கள்
நியு ஸ்ரேய்ட்ஸ் டைம்ஸின் முன்னாள் செய்தி ஆசிரியர் முஸ்தபா கமில். அவர் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட்டிடமும் அவருக்குப் பின் பிரதமர்களாக வந்தவர்களிடமும் செய்தி சேகரித்த அனுபவங்களை முகநூல் பதிவு ஒன்றில் பகிர்ந்து கொண்டிருக்கிறார். அவர் காலத்திய செய்தியாளர்கள் ‘நல்ல செய்திகளுக்கு’ மகாதிரிடம் செல் என்றுதான் சொல்வார்களாம்.…
சுமத்ராவில் நில நடுக்கம்: சிலாங்கூரில் நில அதிர்வு உணரப்பட்டது
இன்று, வட சுமத்ராவை ரிக்டர் கருவியில் 5.9 என்று பதிவான மிதமான நில நடுக்கம் ஒன்று தாக்கியதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. காலை மணி 9.24க்கு அந்நிலநடுக்கம் நிகழ்ந்தது. அதன் விளைவாக சிலாங்கூரின் சில பகுதிகளில் நில அதிர்வுகளை உணர முடிந்ததாக அது ஓர் அறிக்கையில் குறிப்பிட்டது. …
நீதிபதிகள் நியமனத்தை எதிர்ப்போர் வழக்கு தொடுக்கலாம்- அஸலினா
தலைமை நீதிபதி முகம்மட் ரவுஸ் ஷரிப்பும் முறையீட்டு நீதிமன்ற நீதிபதி சுல்கிப்ளி அஹமட் மகினுடினும் கூடுதல் நீதிபதிகளாக நியமனம் செய்யப்பட்டது அரசமைப்புக்கு முரணானது என்று நினைப்போர் அதை எதிர்த்து வழக்கு தொடுக்கலாமே என்கிறார் பிரதமர் துறை அமைச்சர் அஸலினா ஒத்மான். “நடப்புச் சட்டங்கள் அதற்கு இடமளிக்கின்றன”, என்றாரவர். அந்நியமனம் …
அன்வார் கேட்கிறார்: தலைமை நீதிபதியின் பதவி நீட்டிப்பில் ஷாபி சம்பந்தப்பட்டுள்ளாரா?,
தலைமை நீதிபதி முகமட் ராவுஸ் ஷரிப் மற்றும் மேல்முறையீட்டு நீதிமன்ற தலைவர் நீதிபதி சுல்கெப்லி அஹமட் மாகினுடின் ஆகியோரின் பதவி காலம் நீட்டிக்கப்பட்ட விவகாரத்தில் பிரபல்ய வழக்குரைஞர் முகம்மட் ஷாபி சம்பந்தப்பட்டுள்ளாரா என்று பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிம் கேள்வி எழுப்பியுள்ளார். பிரதமர் நஜிப் இதற்கு…
ஊழலை எதிர்த்துப் போராட உங்களோடு நாங்கள் இருக்கிறோம், ஜொகூர் இளவரசருக்கு…
நாட்டில் ஊழல்களைத் துடைத்தொழிக்க, ஜொகூர் பட்டத்து இளவரசருக்கு ஆதரவாக இருப்போம் என அமானா கட்சி உறுதியளித்துள்ளது. துங்கு இஸ்மாயில் வெளியிட்ட அந்த அறிக்கை துணிச்சலான ஒன்று என்றும்; நாட்டில் ஊழலையும் அதிகார துஸ்பிரயோகத்தையும் துடைத்தொழிக்க விரும்பும் அவரின் முயற்சிக்கு மக்கள் ஆதரவாக இருக்க வேண்டுமென்றும் அமானா கட்சியின் துணைத்…
முன்னவர் செய்த வினைகள் எம்ஏஎஸ்-ஸின் இன்னல்களுக்குக் காரணம் : நஜிப்…
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், தேசிய விமான நிறுவனம் எதிர்நோக்கும் பல தொல்லைகளுக்கும் தமக்கு முன் இருந்த ஒருவரின் “விபரீத முடிவுகள்தாம்” காரணம் என்று குற்றஞ்சாட்டினார். செப்பாங்கில் நடைபெற்ற மலேசிய விமான நிறுவனத்தின் ஹரி ராயா கொண்டாட்டத்தில் உரையாற்றிய பிரதமர் அந்த விமான நிறுவனம் பல “சிரமமான காலக்கட்டங்களை”க் …
தாராளமாக கைது செய்யுங்கள்: நஜிப்புக்கு மகாதிர் அறைகூவல்
டாக்டர் மகாதிர் முகம்மட் அன்னிய செலாவணி(ஃபோரெக்ஸ்) ஊழல் விவகாரத்தை விசாரிக்க அரச விசாரணை ஆணையம் (ஆர்சிஐ) அமைக்கப்படுவது குறித்து தாம் அஞ்சுவதாக பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கூறியிருப்பதை எள்ளி நகையாடினார். “நோன்புப் பெருநாளின்போது நஜிப்புக்கு செலாமாட் ஹரி ராயா வாழ்த்துச் சொன்னேன். ஆனால், அவர் என்னைக் கைது …
அதிசய ஆட்சியாளர் டிஎம்ஜே: சரவாக் டிசிஎம் பகழாரம்
நாட்டு நடப்பில் ஏமாற்றமும் வெறுப்பும் கொள்வதாகக் கூறும் ஜோகூர் பட்டத்திளவரசர் துங்கு இஸ்மாயில் சுல்தான் இப்ராகிமின் அறிக்கை சரவாக்கில் வரவேற்பைப் பெற்றுள்ளது. “துங்கு மக்கோத்தா ஜோகூர் (டிஎம்ஜே) சரியான காரியத்தைத்தான் செய்துள்ளார், உண்மை என்று தாம் நினைப்பதை எடுத்துரைத்திருக்கிறார். தேசிய நலன் சம்பந்தப்பட்ட விவகாரங்களில் தம் மனத்துக்குப் பட்டதை …
‘அரசியல்மேதை என்று அழைக்கப்படும் தகுதி மகாதிருக்கு இல்லை’
நடப்பு அரசாங்கத்தை மக்கள் வெறுக்க வேண்டும் என்பதற்காகவே பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை அள்ளி வீசுகிறார் பார்டி பிரிபூமி பெர்சத்து மலேசியா (பெர்சத்து) நிர்வாகத் தலைவர் டாக்டர் மகாதிர் முகம்மட். அதை ஒரு வெட்கக்கேடான செயல் என்று சாடிய அம்னோ இளைஞர் உதவித் தலைவர் கைருல் …
ரபிசி : பக்காத்தான் ஹராப்பான் 50 நாடாளுமன்ற இருக்கைகளை வெல்லும்…
14-வது பொதுத் தேர்தலில், தங்களால் வெல்லக்கூடிய 50 நாடாளுமன்ற இடங்களைப் பக்காத்தான் ஹராப்பான் அடையாளங்கண்டுள்ளது. மக்கள் நீதி கட்சியின் (பிகேஆர்) துணைத் தலைவர் ரபிஷி ரம்லி, அவற்றுள் ஜொகூர் மாநிலத்தின் ஜொகூர் பாரு, பாசீர் கூடாங், தெப்ராவ், செம்புரோங், தஞ்ஞோங் பியாய், லாபிஸ், சிகாமாட், செகிஞ்சாங், பூலாய் மற்றும்…
கல்வி அமைச்சர் : சிலாங்கூர் முதலில் யூனிசெல்லில் இலவசக் கல்வியைச்…
இலவசக் கல்வியை அமல்படுத்துவதில் தீவிரமாக இருக்கும் சிலாங்கூர் மாநில அரசு, முதலில் அதன் கட்டுப்பாட்டில் இருக்கும் சிலாங்கூர் பல்கலைக்கழகத்தில் (யூனிசெல்) அதனை அமல்படுத்தட்டும் எனக் கல்வி அமைச்சர் டத்தோ ஶ்ரீ மாஹ்ட்ஷீர் காலிட் கேட்டுக்கொண்டார். மக்கள் நீதிக் கட்சியின் தலைமைத்துவத்தில் இருக்கும் சிலாங்கூர் அரசாங்கம், யூனிசெல்லில் இதனை நடைமுறைபடுத்தி,…
மகாதிர், அன்வார், கிட் சியாங் ஓய்வு பெற வேண்டும், கேட்கிறார்…
மகாதிர், அன்வார் மற்றும் கிட் சியாங் ஆகிய மூவரும் அரசியலிருந்து ஓய்வு பெற வேண்டும், ஏனென்றால் அவர்கள் அவ்வாறு செய்யாவிட்டால் மக்களைத் தொடர்ந்து பிளவுபடுத்திக் கொண்டே இருப்பார்கள் என்று அம்னோ இளைஞர் தலைவர் கைரி ஜமாலுடின் கூறுகிறார். மக்கள் ஒன்றுபட வேண்டும் என்று நாங்கள் கூறினால், அவர்கள்…
முக்ரிஸ் ‘இடைக்கால பிரதமர்’ஆக மகாதீர் விரும்புகிறார் போலும், அம்னோ உறுப்பினர்…
பக்காத்தான் ஹராப்பானுக்கு ஓர் ‘இடைக்கால பிரதமர்’ தேவை எனும் டாக்டர் மகாதீரின் ஆலோசனை, முக்ரிஸை அந்தப் பதவியில் அமர வைக்க, அவர் செய்யும் ஒரு ‘சதி’யாக இருக்கலாம் என அம்னோ உச்சமன்ற உறுப்பினர் அப்துல் அஸிஸ் கப்ராவி கூறியுள்ளார். அன்வார் இப்ராஹிமை விடுதலை செய்து, பிரதமர் பதவியில்…
டிஎபிக்கு நல்ல மற்றும் கெட்ட செய்திகளைத் தரும் ஹமிடி
டிஎபியின் பதிவு குறித்து தம்மிடம் நல்ல செய்தியும் கெட்ட செய்தியும் இருக்கின்றன என்று துணைப் பிரதமர் அஹமட் ஸாகிட் ஹமிடி கூறுகிறார். நல்ல செய்தி: மன்றங்களின் பதிவாளர் (ரோஸ்) டிஎபியின் பதிவை இரத்து செய்யமாட்டார். கெட்ட செய்தி: ரோஸ் உத்தரவுப்படி, டிஎபி அதன் மத்திய செயற்குழுவுக்கு தேர்தல் நடத்தாவிட்டால்.…
1எம்டிபி வட்டமேசை கலந்துரையாடல், ஜசெகாவுக்கு பாஸ் அழைப்புவிடுக்கும்
பாஸ் ஏற்பாடு செய்யவிருக்கும், 1எம்டிபி வட்டமேசை கலந்துரையாடலுக்கு, ஜனநாயகச் செயற்கட்சியின் கெப்போங் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் தான் செங் கியாவ்-ஐ அழைக்கவிருப்பதாக, பாஸ் கட்சியின் துணைத் தலைவர் துவான் இப்ராஹிம் துவான் மான் அறிவித்துள்ளார். தான் செங் கியாவ், 1எம்டிபி விவகாரங்களைக் கவனித்து வரும் ஏஜென்சிகளில் ஒன்றான, பொது…
உங்கள் பேச்சு மற்றும் செயல்களில் கவனமாக இருங்கள், மகாதீருக்கு துணைப்பிரதமர்…
“டாக்டர் மகாதீர் தனது பேச்சு மற்றும் செயல்களில் கவனமாக இருக்க வேண்டும்”, என அந்த முன்னாள் பிரதமரைத் துணைப் பிரதமர் கேட்டுக்கொண்டார். பிரதமர் நஜிப்பின் தலைமைத்துவத்தை எப்போதும் பழித்துப் பேசுவது குறித்து ஸாகிட் கருத்துரைத்தார். அம்னோ மற்றும் பாரிசானின் துணைத் தலைவரான ஸாகிட், “ஓர் அரசியல்வாதி எனும் முறையில்…
14 ஆவது பொதுத்தேர்தலுக்கு முன்பு டிஎபியை முடமாக்கப் பார்க்கிறது ரோஸ்
டிஎபி அதன் மத்திய செயற்குழுவைத் தேர்ந்தெடுக்க மீண்டும் கட்சித் தேர்தல் நடத்த வேண்டும் என்று மன்றங்கள் பதிவக அதிகாரி உத்தரவிட்டிருப்பது அக்கட்சி 14 ஆவது பொதுத்தேர்தலில் போட்டியிடுவதற்காக தயார்படுத்திக்கொள்வதை கீழறுக்கும் நடவடிக்கையாகும் என்று டிஎபி தலைவர்கள் இன்று கூறினர். நான்கு ஆண்டுகளுக்குப் பின்னர் இந்த அறிக்கையை வெளியிடுவதின்…
சட்டவிரோதமான நீதிபதிகள் நியமனம்: வழக்குரைஞர்கள் மன்றம் சிறப்புப் பொதுக்கூட்டத்தை கூட்டுகிறது
தலைமை நீதிபதி முகமட் ராவுஸ் ஷரிப் மற்றும் மேல்முறையீட்டு நீதிமன்ற தலைவர் சுல்கிப்ளி அஹமட் மக்கினுடின் ஆகியோரின் நியமனம் அப்பட்டமாக சட்டத்திற்கு முரணானது என்று வர்ணித்த மலேசியன் வழக்குரைஞகள் மன்றம், அது குறித்து விவாதிக்க ஒரு சிறப்புக் கூட்டத்தை நடத்துவதற்கு இன்று நடந்த அம்மன்றத்தின் மாதாந்திர கூட்டம்…
ஆர்ஓஎஸ்ஸில் எங்கள் தலையீடு இல்லை: அம்னோ மறுப்பு
அம்னோ தலைவர் ஒருவர், அக்கட்சி சங்கப் பதிவக(ஆர்ஓஎஸ்) விவகாரங்களில் தலையிடுவதாகக் கூறப்படுவதை மறுக்கிறார். தங்களுக்கே ஆர்ஓஎஸ் ஒரு முறை நெருக்கடி கொடுத்தது உண்டு என்றாரவர். “அம்னோ எதற்காக ஆர்ஓஎஸ் விவகாரங்களில் தலையிட வேண்டும். ஒரு முறை அம்னோவின் பதிவையே (ஆர்ஓஎஸ்) இரத்துச் செய்து விட்டது. திரும்பவும் உருவாக்க வேண்டியதாயிற்று.…


