பூமிபுத்ரா நிறுவனங்கள் மீண்டும் அடிப்படை வணிக நடைமுறைகளுக்குத் திரும்ப வேண்டும் என்று அரசாங்க முகமை ஒன்று தெரிவித்துள்ளது. பல நிறுவனங்களில் நிலவும் மோசமான நிர்வாகம், அவை தங்கள் வணிகத்தை விரிவுபடுத்துவதற்காகக் கடன் பெறுவதைத் தடுப்பதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஆண்டுக்கு ஒரு மில்லியன் ரிங்கிட்டிற்கும் அதிகமான விற்பனையை ஈட்டும் சில நிறுவனங்கள்…
பெங் ஹோக் மற்றும் எம்ஒ1 விசாரணைகளில் ஏன் இரட்டைத் தரம்,…
மலேசிய ஊழல் எதிர்ப்பு ஆணையம் "மலேசியன் அதிகாரி1" (எம்ஒ1) விவகாரத்தில் விசாரணை மேற்கொண்ட முறையிலும், தியோ பெங் ஹோக் விவகாரத்தில் பின்பற்றிய துளைத்தெடுக்கும் வகையான விசாரணை முறையிலும் இரட்டைத் தரம் பின்பற்றப்பட்டுள்ளதிற்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்று தியோ பெங் ஹோக் ஜனநாயகத்திற்கான அறக்கட்டளை எம்எசிசிக்கு அழைப்பு…
இன்னொரு கட்சி தேர்தல் நடத்தும்படி டிஎபிக்கு உத்தரவு
டிஎபி அதன் மத்திய செயல் குழுவுக்கு ஒரு புதிய தேர்தல் நடத்த வேண்டும் என்று மன்றங்கள் பதிவகம் (ரோஸ்) அக்கட்சிக்கு உத்தரவிட்டுள்ளது. டிஎபி செப்டெம்பர் 29, 2013 இல் நடத்திய மறுதேர்தல் சட்டத்திற்கேற்ப நடத்தப்படவில்லை என்பது கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து இம்முடிவு எடுக்கப்பட்டதாக ரோஸ் தலைமை இயக்குனர் முகம்மட்…
சாலே சைட் கெருவாக் : மலேசியா தோல்வி கண்ட நாடு…
மலேசியாவைத் தோல்வி கண்ட அரசு எனவும், பொருளாதாரத்தில் சரிவு கண்டுவரும், திவாலாகப் போகும் அரசாங்கம் எனவும் ஒருசில தரப்பினர் கூறுவது, தனக்கு வியப்பாக உள்ளது எனத் தகவல், தொழில்நுட்ப, ஊடகத்துறை அமைச்சர் சாலே சைட் கெருவாக் கூறியுள்ளார். “அரசியலில் வெளியிடப்படும் கருத்துகள் உண்மையாகவும் துல்லியமாகவும் இருக்க வேண்டும். நாட்டின்…
கட்சியின் போராட்டங்களுக்கு அரணாக இருங்கள், நஜிப் அம்னோ ‘வீரர்’களைக் கேட்டுக்கொள்கிறார்
கட்சியின் நோக்கங்களை அடைய அதன் போராட்டங்களுக்கு உறுதுணையாக இருக்குமாறு அம்னோ தலைவர் நஜிப் ரசாக் , அம்னோ டிவிஷன் பிரதிநிதிகள் கூட்டத்தில் பங்கேற்கும் அனைத்து உறுப்பினர்களையும் கேட்டுக்கொண்டார். 14-வது பொதுத் தேர்தலை எதிர்கொள்ள, கட்சியின் தேர்தல் இயந்திரங்களை விரிவாக்கவும், யுக்திகளை அடையாளங்காணவும் இக்கூட்டத்தின் போது கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்தி…
ஷெட்டி : ஊடகங்களுக்கு இனி பேட்டியளிப்பது இல்லை
ஊடக நேர்காணல்களைத் தவிர்க்கப்போவதாக, தேசியப் பொருளகத்தின் முன்னாள் கவர்னர் ஷெட்டி அக்தார் அசிஸ் முடிவெடுத்துள்ளார். “இனி நான் பேட்டி எதுவும் கொடுக்கப்போவதில்லை. ஊடக நேர்காணல்கள் எனக்கு நல்ல பாடம் கற்றுக்கொடுத்துள்ளன,” என்று கோலாலம்பூரில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர் கூறினார். இருப்பினும், அதற்கான காரணத்தை அவர் தெரிவிக்கவில்லை. நேர்காணல்களைத்…
அன்வார் பிரதமர் ஆவதில் மகாதீருக்கு ஆட்சேபனை இல்லை, த கார்டியன்…
பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிம் பிரதமராவதற்கு முன்னாள் பிரதமர் முகமட் மகாதிர் ஆதரவு தெரிவித்துள்ளனர். ஆனால், அதற்கு அன்வார் மாமன்னரின் மன்னிப்பைப் பெற வேண்டும். துணைப் பிரதமர் பதவியிலிருந்து நீக்கி அன்வாரின் அரசியல் வளர்ச்சிக்கு தடையாக இருந்த மகாதிர், சமீபத்தில் லண்டனுக்குச் சென்றிருந்த போது த கார்டியனுக்கு…
அஸ்மின்: யார் சொன்னது அம்பாங் என்று, பெக்கானில் போட்டியிடத்தான் எனக்கு…
பிகேஆர் துணைத் தலைவர் முகம்மட் அஸ்மின் அலி, எதிர்வரும் பொதுத் தேர்தலில் அம்பாங்கில் களமிறக்கப்படுவார் என்று கூறப்படுவதை நிராகரித்தார். “முன்பே சொல்லி விட்டேன், அம்பாங்கில் போட்டியிட விரும்பவில்லை. நான் வேறு எங்காவது போட்டியிட வேண்டும் என்று கட்சி விருப்பப்பட்டால் பெக்கானில் போட்டியிட விரும்புகிறேன்”, என்று அஸ்மின் கூறியதாக சினார் …
கிட் சியாங்: அன்னிய தலையீடு பற்றிப் பேசும் ஹாடி அவர்களே,…
பேச்சுக்குப் பேச்சு அன்னிய தலையீடு என்று வாதமிடும் பாஸ் தலைவர் அப்துல் ஹாடி ஆவாங்கிடம் டிஏபி பெருந் தலைவர் லிம் கிட் சியாங் ஒரு கேல்வி கேட்க விரும்புகிறார். 1எம்டிபியில் சுருட்டப்பட்ட பணத்தில் வாங்கப்பட்டதாகக் கூறப்படும் சொத்துக்களைப் பறிமுதல் செய்ய அமெரிக்க நீதித்துறை வழக்கு தொடுத்தை மலேசிய விவகாரங்களில் …
போலீஸ் அதிகாரிகளின் இடமாற்றம், தேர்தலை ஒட்டிச் செய்யப்பட்டது- ஐஜிபி
அடுத்து வரும் பொதுத் தேர்தலைக் கருத்தில் கொண்டு போலீஸ் படையில் பெரிய அளவில் மாற்றங்கள் செய்யப்பட்டிருப்பதாக இன்ஸ்பெக்டர்-அப் போலீஸ்(ஐஜிபி) காலிட் அபு பக்கார் கூறினார். இரண்டு நாள்களுக்குமுன் போதைப்பொருள் குற்றப்புலனாய்வுத் துறையில் நிகழ்ந்துள்ள மிகப் பெரிய மாற்றங்கள் குறித்து வினவியதற்கு அவர் இவ்வாறு பதிலளித்தார். “பொதுத் தேர்தலையும் தென்கிழக்காசிய …
சுற்றுலா வரி தாக்கத்தைச் சமாளிக்க சலுகைகள்: நஸ்ரி வாக்குறுதி
சுற்றுலா வரியால் பாதிப்புறும் சுற்றுலா சங்கங்கள் பாதிப்புகளைத் தாங்கிக்கொள்வதற்கு உதவியாக ஊக்குவிப்புகளும் தனிக் கவனமும் வழங்கப்படும் எனச் சுற்றுலா, பண்பாட்டு அமைச்சர் முகம்மட் நஸ்ரி அப்துல் அசீஸ் உறுதியளித்துள்ளார். மலேசிய உள்ளூர் சுற்றுலா சங்க (மிடா)த் தலைவர் உஸைடி உடானிஸ், தாங்களும் மலேசிய சுற்றுலா மன்றம் (எம்டிசி), மலேசிய …
ஒப்பந்த மருத்துவ அதிகாரிகள் அனைவரும் எஸ்.பி.எம். மலாய் தேர்வில் தேர்ச்சி…
புதிய ‘கிரேட் யுடி41’ ஒப்பந்த மருத்துவ அதிகாரிகள் அனைவரும் எஸ்.பி.எம். மலாய் மொழியில், குறைந்தபட்ச ‘தேர்ச்சி’யைப் பெற்றிருக்க வேண்டும் என சுகாதார அமைச்சு முடிவு செய்துள்ளது. ஒப்பந்த மருத்துவ அதிகாரிகளின் நியமனங்களை ஒரே தரநிலையாக்க இம்முடிவு எடுக்கப்பட்டதாக சுகாதார அமைச்சர் டாக்டர் எஸ்.சுப்ரமணியம் தெரிவித்தார். எஸ்.பி.எம். தேர்வில் மற்றப்…
ஐந்து வாரங்களுக்குப் பின்னர் எரிபொருள் விலை மீண்டும் ஏற்றம் காண்கிறது
இன்று நள்ளிரவிலிருந்து, எரிபொருள் விலை ஏற்றம் காண்கிறது. ரோன்95 மற்றும் ரோன்97 ஒரு லீட்டருக்கு நான்கு சென் ஏற்றம் காண்கிறது முறையே. இதன்படி, ரோன்95 ஒரு லீட்டர் ரிம1.93 க்கும், ரோன்97 ஒரு லீட்டர் ரிம2.19 க்கும் எரிபொருள் நிலையங்களில் விற்கப்படும். டீசல் விலை ஒரு லீட்டருக்கு…
வழக்குரைஞர் சிவனேசனுக்கு எதிராக டாக்டர் ஜெயக்குமார் அவதூறு வழக்கு
தமிழ் மலர் பத்திரிக்கையில் வெளிவந்த செய்தியால் தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளதாகக் கூறி, சுங்கை சிப்புட் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஜெயக்குமார் தேவராஜ், சுங்கை சட்டமன்ற உறுப்பினர் வழக்குரைஞர் அ.சிவநேசன் மீது அவதூறு வழக்கு பதிவு செய்துள்ளார். கடந்த மே 21-ன்றில், அப்பத்திரிக்கையின் முதல் பக்கத்தில் பிரசுரமான செய்தியில்,…
காணாமற்போன ‘ராடார்’ குறித்து சுங்கத்துறை ஊழியர்களிடம் விசாரணை
தஞ்ஜோங் பெலெபாஸ் துறைமுகத்தில் (பி.தி.பி.) காணாமல் போன இராணுவ ராடார் குறித்து, மலேசிய இலஞ்ச ஒழிப்பு ஆணையம் (எம்.ஏ.சி.சி) 6 நபர்களிடம் விசாரணை நடத்தி, வாக்குமூலம் பதிவு செய்தது. 37 முதல் 48 வயதுக்குட்பட்ட 6 ஆண்களை, ஜொகூர் இலஞ்ச ஒழிப்பு ஆணய அலுவலகத்தில் விசாரித்ததாக, அதன் துணை…
ரஃபிஸி: நையாண்டி பண்ணுங்கள், ஆனால் எனது எச்சரிக்கை உண்மையானது
கடந்த சில வாரங்களாக வீழ்ச்சி கண்டு வரும் எரிபொருள் விலை காரணமாக சிலர் பிகேஆர் உதவித் தலைவர் ரஃபிஸி ரமலியை நையாண்டி செய்யத் தொடங்கியுள்ளனர். ஆனால் அவர் தமது எச்சரிக்கை மிக உண்மையானது என்று கூறுகிறார். எரிபொருள் விலைக்கு உச்ச வரம்பு கிடையாது. உலக எரிபொருள் வி.லையை…
பினாங்கில் வாக்காளர்களின் முகவரிகள் மாற்றப்படுகின்றனவா?
பினாங்கு, செபராங் பிறையில் குடியிருப்பாளர்கள் சுமார் 100 பேரின் முகவரிகள் அவர்களின் இணக்கமின்றியே மாற்றப்பட்டிருக்கிறதாம். கடந்த வாரம் பல குடியிருப்புப் பகுதிகளுக்குச் சென்றபோது இது தெரிய வந்ததாக செப்ராங் பிறை முனிசிபல் மன்ற உறுப்பினர்கள் சதீஷ் முனியாண்டி, டேவிட் மார்ஷல், பிகேஆர் தேர்தல் ஒருங்கிணைப்பாளர் ஒங் இயு லியோங் …
ஹாடி: மலாய்க்காரர்கள் 1எம்டிபி-யை மட்டுமல்ல மற்ற ஊழல்களையும் எளிதாக மறந்து…
மலேசிய வரலாற்றில் மறக்கப்பட்ட எத்தனையோ ஊழல்களில் ஒன்றுதான் 1எம்டிபி ஊழல் என்று பாஸ் தலைவர் அப்துல் ஹாடி ஆவாங் கூறினார். அப்படியே, பாஸைக் குறைகூறும் டாக்டர் மகாதிர் முகம்மட்டையும் இடிப்பதுபோல், அன்னிய செலாவணி வணிகம், பிஎம்எப், பெர்வாஜா எஃகு ஆலை முதலியவையும் இதில் அடங்கும் என்றார். அவை மகாதிர் …
முகநூலில் பேரரசரை அவமானப்படுத்திய வலைமகன் கைது
யாங் டி பெர்துவான் ஆகோங்கை அவமானப்படுத்திய வலைமகன் ஒருவனை போலீசார் கைது செய்திருப்பதாக போலீஸ் படைத் தலைவர் காலிட் அபு பக்கார் இன்று கூறினார். “பேரரசரை அவமானப்படுத்திய 'Catt Ginger'-ரை வெற்றிகரமாகக் கைது செய்த குற்றவியல் புலனாய்வுப் பிரிவுக்குப் பாராட்டுகள்”, என்றவர் டிவிட் செய்திருந்தார். ஆனால், அந்த வலைமகன் …
கடப்பிதழ் வெளிநாடு செல்லும் உரிமையை கொடுத்து விடாது
ஒரு குடிமகன் செல்லத்தக்க கடப்பிதழ் வைத்திருக்கலாம் ஆனால், அது வெளிநாடு செல்லும் உரிமையை அவருக்குக் கொடுத்து விடாது என்று முறையீட்டு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. பெட்டாலிங் ஜெயா உத்தாரா எம்பி டோனி புவா-வின் மேல்முறையீட்டை த் தள்ளுபடி செய்த நீதிபதி முகம்மட் ஸவாவி முகம்மட் சாலே தலைமையிலான மூவரடங்கிய …
மகாதிர்: டிஓஜே-இல் எனக்குச் செல்வாக்கு உண்டு என்பதை அடிமுட்டாள்தான் நம்புவான்
முன்னாள் பிரதமர் டாக்டார் மகாதிர் முகம்மட், தம் சொல்லைக் கேட்டுதான் அமெரிக்க நீதித்துறை(டிஓஜே) 1எம்டிபிக்கு எதிராக சொத்துப் பறிமுதல் வழக்குகள் தொடுத்தது என்று கூறப்படுவதை நம்புபவன் ஒரு அடிமுட்டாளாகத்தான் இருப்பான் என்றார். அதிகாரமற்றிருக்கும் தம் உத்தரவின்படிதான் டிஓஜே நடந்து கொள்கிறது என்பதைக் கேட்கப் பெருமையாக இருக்கிறது என்று மகாதிர் …
அமைச்சரின் “போலி வரலாற்று” புலமையால் அதிரிந்து போன கிட் சியாங்,…
மலேசிய எதிரணியினர் இரண்டு சர்வாதிகாரிகளால் வழிநடத்தப்படுகிறது என்று தொடர்புத்துறை மற்றும் பல்லூடக அமைச்சர் சாலே சைட் கெருவாக் கூறியதோடு அதற்கான வரலாற்றுச் சான்றுகளை எடுத்துரைத்தது இறுதியில் அவரது வரலாற்று அறிவு எவ்வளவு மட்டரகமானது என்றும் அவர் மீண்டும் பள்ளிக்குப் போகவேண்டும் என்றும் டிஎபி மூத்த தலைவர் கிட்…
தலைமை நீதிபதியின் பதவிக் காலத்தை மேலும் நீட்டிப்பது அரசமைப்புச் சட்டத்திற்கு…
தற்போதைய தலைமை நீதிபதி முகமட் ராவுஸ் ஷரிப் 66 வருடம் 6 மாத வயதை எட்டிய பின்னர் அவருடைய பதவி காலத்தை மேலும் நீட்டிப்பது அரசமைப்புச் சட்டத்திற்கு முரணானது என்று முன்னாள் தலைமை நீதிபதி அப்துல் ஹமிட் முகமட் கூறுகிறார். தாம் இதனைக் கூறுவதற்கு தமக்கு நீதிபதி…
டிஏபி பதிவு இரத்துச் செய்யப்படலாம் என்று ஊகங்கள் பரவுவதற்குக் காரணம்…
சங்கப் பதிவகம் தன் பதிவை இரத்துச் செய்யக்கூடும் என்று ஊகத்துக்குக் காரணம் தானல்ல என்று மறுக்கும் டிஏபி, பிரதமரின் செயலாளர் தெங்கு ஸரிஃபுடின் தெங்கு அஹமட்தான் முதன்முதலில் அப்படியொரு ஊகத்தை வெளியிட்டார் என்று கூறுகிறது. டிஏபி குளுவாங் எம்பி லியு சின் தொங்கின் கட்டுரை ஒன்றுக்கு ஸரிஃபுடின் எதிர்வினை …


